சக்தி சக்திதாசன்

 

epickels immig1

 

 

 

 

 

 

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

ஒரு நாட்டின் மக்கள் இன்னொரு நாட்டிற்கு பல்வேறு காரணக்களினால் இடம் பெயர்கிறார்கள்.

நானும் இத்தகிய ஒரு இடப்பெயற்சிக்கு உள்லானவன் எனும் காரணத்தினால் இப்பக்கத்தின் இன்னல்களை உணர்ந்தவன்.

தாய், தந்தை , சுற்றம், சூழல் என நாம் வாழ்ந்த பாதுகாப்பான வலயத்தை விட்டு வெளியேறுவது என்பது சுலபமான செயல் அல்ல.

புத்தம் ப்துச்சூழல், புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறைகள் எவர்ரின் மத்தியில் வந்து விழும்போது தொட்டி மீன் ஆழிக்குள் விழுந்த கதை தான்.

ஆனால் அதேசம்யம் என்ன காரணக்களுக்காக இவ்விடப்பெயர்வு நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே இவ்விடப் பெயர்விற்கு உள்ளானவர்களின் மனதின் உணர்வுகளும் அமைகிறது.

உதாரணமாக ஈழத்து போர்ச்சூழலினால் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் மனநிலையில் அவர்கள் பாதுகாப்பான சூழலன்றி பாதுகாப்பின்மையை விட்டு வெளியேறியதால் அவர்களின் மனம் ஓரளவு ஆறுதலான உணர்வை வெளிப்படுத்தலாம்..

ஆயினும் தாம் பிறந்து வழளர்ந்த தாய்மண்ணை விட்டு வெளியேறும் வேதனை மனதினை வாட்டுவதையும் சகிக்க முடியாது.

அதேசமயம் தமது நாட்டில் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழியின்றி வசதி மிக்க நாடொன்றிற்கு இடம்பெயர்ந்து அதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும் வழியைச் தேடிக் கொள்பவர்கள் மனதில் இவ்விடப்பெயர்ச்சி நிச்சயம் ஓரளவு மகிழ்ச்சியத் தோற்றுவிக்கத்தான் செய்யும்.

ஆனால் அதேசமயம் இவ்விடப்பெயர்ச்சிக்குள்ளாகும் மக்களைத் தாங்கிக் கொள்ளும் அந்த மாற்ராந்தாய்மண்னைச் சார்ந்தவர்களை இவ்வெளிநாட்டு மக்களின் வருகை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் ஆழ்ந்து கவனிக்கும் தேவையுள்ளது.

நான் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த காலம் ஒரு மூன்று தாசாப்தங்களுக்கு மேலானது ஆனால் எனக்கு முன்னால் இங்கே வந்து கால்பதித்தவர்களில் ஏராளம்.

நான் வந்த காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமான இடைவெளியில் இங்கிலாந்து பலவிதமான சமூக மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது.

இம்மாற்றங்க|ள் கொடுத்த தாக்கம் இந்நாட்டின் மக்களின் மனக்களில் வெளிநாட்டவரின் குடியேற்றங்களை நோக்கிய பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே !

ஆனால் இவ்வாறு இந்நாட்டு மக்கள் வெளிநாட்டவரின் குடியேற்றத்தை நோக்கிக் கொண்டுள்ள கருத்து ஓரளவு இக்குடியேற்றங்களுக்கு எதிராகத் திரும்புவது சரியா ?

இக்கேள்விக்கு விடை நாம் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் வகையிலேயே உள்ளது.

நான் வாழும் ஊரில் அடுத்தடுத்து பேரூந்துகளில் அடுத்த ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து இறங்கும் போது எம் மனநிலை எப்படியிருக்கும் ?

ஜயையோ ! இத்தனை பேர் எம்மூரில் வந்து தங்கி விட்டால் எனது வசதிகள் அனைத்தையும் இவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்து விடுமே ! என்று எண்ணுவதுதான் அடிப்படை மனித இயல்பு. இதற்கு நானும் விதிவிலக்கானவல்ல.

இப்படி ஒரே நாட்டிற்குள் இருந்தும் வேற்றூர் மக்களின் மீது நாம் வேறுபட்ட பார்வை கொண்டுள்ளோம் . பின் எப்படி வேறிரு நாட்டிலிருந்து தம் நாட்டிற்குள் இலட்சக் கணக்கில் வந்திறங்கும் வெளிநாட்டவர் மீது இந்நாட்டு மக்கள் அபிமானமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் ?

சரி இது ஒருபுறமிருக்க இங்கே வந்து இறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இனிவரும் மக்களின் வருகைக்கு இந்நாட்டு மக்கள் ஆதரவளிக்கும் வகையில் நடந்து கொள்கிறோமா?

இல்லை என்பதே பொதுப்படையான வாதம்.

அதற்காக அனைவருமே அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்று கூற நான் விளையவில்லை.

குறிப்பாக நாம் வாழும் சமுதாயத்துடன் எம்மை இணைத்துக் கொள்வதற்கான வழிமுறையில் மிகவும் அடிப்படையான மொழியையே நாம் கடைப்பிடிப்பதில்லை.

இங்கு வந்திறங்கும் பல வேற்ரு நாட்டவர்கள் ஆங்கிலம் அறவே பேசத் தெரியாத்வர்களாக வந்திறங்குகிறார்கள் அதில் தவறொன்றுமில்லை ஆனால் இங்கு வாழத் தொடங்கியதும் இம்மொழியக் கர்ருக் கொள்வதர்கான முயற்சிகளில் இறங்குகிறார்களா?

இல்லையானல் ஆங்கில மக்களுடன் சக நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசிப்பழகி தமது ஆங்கில மொழித்திறனை விரிவாக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறார்களா ?

பொதுவாக தமது சமூகத்தினிடையே தம்மைப் புதைத்துக் கொள்ளும் பலரைத்தான் காண்கிறோம்.

இன்றைய காலத்தில் இங்கிலாந்தில் வேற்ரு நாட்டினர் பலர் வியாபார ஸ்தலங்களை நடத்தி வருகிறார்கள் அதனால் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் அமைப்புகளுக்குள் தம்மை முடக்கி விஉவதனால் தாம் ஆங்கிலம் தெரியாமலும் பிழைப்பை நடத்தி விடக்கூடிய ஒரு நிலையில் தம்மைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

இது அவர்களின் வாழ்வின் காலத்தை ஓட்டுவதர்கு ஏதுவாகலாம் ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறையின் வாழ்வைச் சிக்கலுக்குள் தள்ளத்தான் செய்கிறார்கள்.

அதற்காக தமது சமூகத்தைச் சார்ந்த காலாச்சாரங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்பதல்ல எனது கருத்து. அக்காலாச்சார அடையாளங்களை தமது முகவரிகளாக வைத்துக் கொள்ள வேண்டுமேயல்லாது அவற்ரை தமது முன்னேற்றத்தைத் தடுக்கும் கால் விலங்காக மாற்றிக் கொள்ளக்கூடாது.

இத்தகைய ஒரு முடக்கமே இந்நாட்டு மக்களின் அவர்கள் மீதான பார்வையில் ஒரு வித்தியாசத்தைத் தோற்றுவிக்கிறது.

எரிக் பிக்கில்ஸ் எனும் சமூகங்களுக்கான மைச்சர் சமீபத்தில் ஒரு கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். .

இங்கிலாந்தில் இயங்க்கும் பல்வேறு சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்ப்பொருள் அங்காடிகளுக்கு அரசாங்கம் நிதியளிப்பதன் மூலம் அந்நிலையங்களில் வேற்ரு நாட்டவர் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வதர்கான பயிற்றுனர்களின் சேவையை அந்நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அளிப்பது எனபதே இக்கொள்கை.

இதன் பிரதிகூலங்கள் அனுகூலங்க:ளைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களில் எழுந்துள்ளன.

இக்கொள்கை பயனுள்ளதா ? இல்லையா ? என்பதல்ல எனது கருத்து. ஒரு அடிப்படை உண்மையின் மீதான வாதத்தை சமூகத்தின் மத்த்கியில் அமைச்சரின் இந்த கொள்கைப்பிரகடனம் ஏற்படுத்தியுள்ளது ஒரு பயனுள்ள விடயமே !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.