Tag: ரா. பார்த்தசாரதி

  • பெண்ணடிமை

     

     

    தலையாட்டி பொம்மைகளா நினைக்கும் நிலைமையா ?

    தாய்க்குலத்தின் வாய் பேசா வனிதையா ?

    சாவி கொடுத்தால் சலங்கை ஒலி தாலமிடத்

    தாவி ஓடும் பாவைகளா!

     

    தன் ஆசைகளை, புதைத்து வைத்து வெளியிடமுடியாத ஊமை

    பணம் இருந்தும், அதனை செலவு செய்ய முடியாத நிலைமை

    திரைப்படங்களில் வரும் தேனிலவு ,

    வானிலவுத் தேவதைகளா !

     

    தொப்புள் கொடி அறுந்ததும் அப்பனுக்கு அடிமை,

    தாலிக்கொடி யேறியதும் கணவனுக்கு அடிமை,

    வேலைக்கு போன ஊழியத்தில் மேலதிரிகாரிக்கு அடிமை,

    முதுமையடைந்ததும், பிள்ளைகளுக்கு அடிமை !

     

    வாழ்க்கையில் உனக்கு இல்லாத பட்டமா !

    விதவை, மலடி, உடன்கட்டை ஏறுடி,

    வரதட்சணை வர்த்தகி !

     

    வரதட்சணை கொடுக்காதவளை கண்டாலே காஸ் அடுப்பு வெடிக்கும்

    தட்டிக் கேட்க யார் வந்தாலும் பணத்தினால் மூடி மறைக்கும்!

     

    புகுந்த வீட்டில் மாமியாருக்கு அடிமை,

    ஆணைப் பெற்றவளும் நீதான்

    பெண்ணைப் பெற்றவளும் நீதான்

    ஆயினும், வீடும்,நாடும் உனக்கு பொல்லாத சிறைதான் !

     

    தலையாட்டம் நின்று, தலை நிமிர்ந்து

    என்று வீதியை எதிர்க்கின்றாயோ

    அன்றுதான் உனக்கு விடுதலை பெண்ணே !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • சுமைகளும், சுகங்களும்

     

     

    மனிதா, வாழ்க்கையை சுமையானதாய் எண்ணிவிடாதே

    சுகங்களும் தேடி வரும் என்பதை நீ மறந்துவிடாதே

    குடும்பத்தலைவனுக்கோ என்றும் வாழ்வில் சுமைதான்

    சுமைகளையும், சுகங்களாக கருதுபவனே சிறந்தவன் !

    நெஞ்சினில் உரம் கொண்டு சுமைகளை தாங்கிடுவாய்

    சுகமான சுமைகளும் உண்டு என்பதை அறிந்திடுவாய்

    மயிலிறகு அதிகமாய் ஏற்றினாலும், அச்சு முறியும் ,

    மனதில் சுமைகள் அதிகமானாலும் மனம் இறுகும் !

    வீட்டிற்கு முதல்வனே என்றும் ஓர் சுமைதாங்கி

    எல்லா இன்ப, துன்பங்களுக்கும் அவன் ஒரு இடிதாங்கி,

    எல்லாவற்றையும், பொறுமையோடு எதிர் கொள்ளவேண்டும்

    எத்துயர் வரினும் எதிர்த்து திறம்பட செயலாற்ற வேண்டும் !

    மனித வாழ்க்கையில் காதலும் சுகமாய் பூக்குதே

    அதுவே சிற்சில சமயத்தில் சுமையாய் தாக்குதே

    சுமைகளும், சுகமும் கலந்ததே மானிட வாழ்க்கை

    இதனை அறியாமல் ஏன் மாற்றுகிறாய் உன் போக்கை !

    ரா.பார்த்தசாரதி

     

    Share
  • அம்மாவும் மகனும்

        ரா.பார்த்தசாரதி

     

     

    வாசலில் காகம் கரைந்தால் உன் வரவை

    என் கண்கள் வாசலை எட்டிப் பார்கின்றதே,

    நான் கண்ணாடியை பார்க்கும்போது உன் முகம்தான்

    எனக்கு தெரிகின்றது, ஏன் எனில் நீ என் சாயல்தான்

    என் பழைய சேலையில் உன் வாசம்தான் வாழ்கிறது

    அருமை மகனே அதனுடனே  என் பொழுதும் போகிறது !

    உன்னை விழிமேல் வழி வைத்து உன் வரவுக்காக  ஏங்குகிறேன்

    காலம் தாமதித்து வந்தாலும் மனதால்  பேதலிக்கின்றேன்!

     

     

    அழைப்பு மணி அடித்ததும் என் கால் வாசல் நோக்கி விரையுமே

    உன்முகம்  கண்டதும்  தாயின் கண்கள் மலர்ந்து வரவேற்குமே !

    பணம் பக்கத்தில் நிற்கும், பாசம் உயிரோடு கொல்லும்

    உனக்காக சேர்த்து சாப்பிட்டாலும், என் மனப்பசி அடங்கா

    நீ உப்பில்லாமல் சாப்பிட்டதால் நாக்கு செத்துப்போய்விட்டதா

    உன் அம்மாவின் ஞாபகம் வராமல் போனதா!

    உனக்கு பிடித்ததை நான் சாப்பிடும்போது மனம் ஒப்பவில்லை

    என்  மனப்பசி  சாப்பிடாமல் என்னை தடுப்பதை உணராமலில்லை!

     

     

    வேர், இலைகள், கிளைகள் இருந்தால்தான் விழுது  விழும்

    தாய் ஆணிவேராக இருந்தாலும் பாசம் மிகுந்து  வரும்!

    தொப்புள் கொடி  உறவு  என்றும்  நிரந்தர உறவாகும்

    பாசமும், பந்தமும் என்றும்  நிலை பெற்றதாகும் !

    வீட்டினில்  விளக்கு எரிந்தாலும் இருளில் மூழ்கிறது மனசு

    பெத்த மனம் பித்து , பிள்ளை மனம் கல் என்பது பழமொழி !

    வாரம் ஒரு முறை ஸ்கைப்பில் காட்சி தருவாயா

    அது காணும் பேற்றை மகனே எனக்கு  அளிப்பாயா!

     

     

     

     

    Share
  • உலக புத்தக தின விழா

     

     
    காகிதத்திற்கு இரு பெருமை உண்டு

    ஒன்று பணமாகவும், பு த்தகமாவும் மாறுவதுண்டு ,

    புத்தகத்தை கொண்டு ஆசிரியர் பாடம் நடத்துவதுண்டு

    அதன் வாயிலாக மாணவர்கள் அறிவை பெருக்குவதுண்டு!

     

     

    புத்தகம் படிப்பினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு

    படிக்காத மேதைகளும் இவ்வுலகில் உண்டு

    அறிவை விரிவாக்கும் கருவியே புத்தகம்

    மனிதனை தனிமை படுத்தாத நண்பனே புத்தகம்!

     

     

    சமுதாயத்தில் மக்கள் வாழ்க்கையை உயர்த்துவதும் புத்தகமே

    அதிக புத்தகம் படிப்போரை அறிவாளியாக உலகம் கருதுமே

    நமது கலாசாரத்தின் தொன்மையை பறைசாற்றியது புத்தகமே ,

    புத்தகதினால் சிந்தையின் வெளிப்பாடும், அறிவும் விரிவாக்குமே !

     

     

    நம் அறிவின் ஆன்மா புத்தகத்தில்தான் ஒளிந்திருக்கு

    மனிதனின் அறியாமையை அழிக்கும் ஒளிவிளக்கு

    நல்ல புத்தகங்களுக்கு என்றும் மதிப்புண்டு

    ஏப்ரல் இருபத்திமூன்றாம் தேதி உலக புத்தக தின மாக கருதுவதுண்டு !

     

     

    ரா.பார்த்தசாரதி

    Share
  • அம்மா

     

    ரா.பார்த்தசாரதி

     

     

    அ  என்பது  உயிரெழுத்து 

    ம்   என்பது  மெய்எழுத்து 

    மா  என்பது  உயிர்மெய் எழுத்து 

     

    உனக்கு உயிரும், உடலும் தந்தவள் அம்மா 

    உனக்கு முகவரி அளித்தவளும்  அம்மா

    உலகை எனக்கு நீ  காட்டினாய் 

    உனக்கு என்ன நான் தருவேனோ !

     

    உனக்கு ஆயிரம் கவலைகள் இருப்பதாக தெரியும்

    இதுவெல்லாம்  என் புன் சிரிப்பாலே  மறையும் 

    தொப்புள் கொடி  உறவானதே 

    தொட்டிலில்  ஆரம்பமானதே 

     

    அம்மா என் ஆசை  அம்மா 

    நான் கேட்காமலே முத்தம் கொடுப்பாய் அம்மா 

    தோளை  தூளியாக்கி உன் இனிய குரலால் தாலாட்டுவாய் 

    உன் மடியினை தொட்டிலாக்கி என்னை தூங்க வைப்பாய் !

     

    அம்மா  என்றும்  அன்பின்  உருவமானாய் 

    எனக்கு நிழல் தரும்  குடையானாய் 

    எனது கண்கண்ட  தெய்வமானாய் 

    தியாகத்தின்  உருவமானாய் !

     

    அம்மா  என்றாலே கருணையின் வடிவம் 

    அம்மா இல்லாத  அனாதைகளுக்கு ஆண்டவனே அம்மா !

     

     

     

    Share
  • தமிழ் புத்தாண்டே வருக

     

    101

    தமிழ் ஆண்டுகளின் எண்ணிக்கை அறுபதே

    ஹேமவிளம்பி ஆண்டும் இன்று பிறந்ததே

    விரும்பியதை பெற தமிழ்ப்புத்தாண்டு மலரட்டும்

    தீயவை அழிந்து நல்லவை பெருகட்டும் !

    நாட்டிலும், மாநிலத்திலும், புதிய திட்டம் உண்டாகட்டும்

    அரசியல் தலைவர்கள் நன்மனங்கொண்டு நடக்கட்டும்

    மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடட்டும்

    தமிழ்ப் புத்தாண்டால் தமிழகம் நன்மை அடையட்டும் !

    ஆறுகள் இணைந்து தண்ணீர் பிரச்சனை தீரட்டும்

    மாநிலங்கள் கைகோர்த்து மக்களுக்கு நன்மை செய்யட்டும்

    நாட்டுக்கு நாடு சமாதானம் தானமாய் கிடைக்கட்டும்

    வேற்றுமையில் ஒற்றுமை நம்மிடையே ஓங்கட்டும் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • இளமையின் கேள்வி

    ரா.பார்த்தசாரதி

     

    என் இளமையின் கேள்விக்கு  என்ன பதில்

    அழகிய காதல் தேவதையே நீயோ என் எதிரில்,

    என் தேவைகள் குறைவாய்  இருந்திடுமே

    நின் அழகே  என் மனத்தைக் கவர்ந்திடுமே !

     

    நீ ஆயிரத்தில் ஒருத்தி  என்பதை நானறிவேன்

    என் ஒவ்வொரு அணுவின் உணர்வும் சொல்லிடுதே

    உன் எழிலை என் மனம்  சொல்லிடாதா

    காலம் கடந்தாலும், நம்மை வாழ வைத்திடாதா !

     

    காதலிக்கும் போது  அவசரம் ஆகுமா

    பூத்து குலுங்கும் விழிகள் காத்திருக்குமா,

    காதல்  என்பது இரு விழிகளின்  நேசமா

    அதுவே அவர்கள் கண்ட காதல் தேசமா !

     

    காதலுக்கு பொருள் விளங்காமல் தவித்தேனே

    பூமழை மேனியில்  பொழிவதைக் கண்டேனே

    காதலின் பார்வை  புதிரா !  புதினமா !

    என் நெஞ்சை சுற்றிவரும் ராட்டினமா !

     

    தாமரை இதழ் போன்ற உன்  வதனமே

    உன் முகம் நீரில் தெரியும் சந்திர பிம்பமே

    காதலில்  தாமதம் செய்து என் பொறுமையை சோதிப்பாயா

    தாமதம் செய்யாமல் என்னை  என்றும் மகிழ்விப்பாயா !

    Share
  • பண்பாட்டு மயக்கம்

    ரா பார்த்தசாரதி

     

        மேலை நாட்டு   பிசாவும், பெர்கரும்   நாகரிக உணவானதே 

         நம் சாப்பாட்டு  மேசைக்கு இறங்கியது,  விரும்பியசிற்றுண்டியானதே 

         உடல்நலம்  கெடுவதை நாம் அறியாமல் இருக்கின்றோமே 

        இயற்கை உணவு சிறந்தது என அறிந்தும், தவிர்க்கின்றோமே !

       

        ஆணும்,பெண்ணும்,   அறிமுகத்தில்  கைகுலுக்கினர் 

        பயமின்றி இரவு நேரங்களில் கூடிப் பேசுகின்றனர் 

        நகரின் மது கடையில் சேர்ந்து கும்மாளமிடுகின்றனர் 

       இரவு நேர பணிகளில் ஆபாச பேச்சுக்கள் மிளிர்கின்றன !

      

       ஒருவர்க்கொருவர்  மரியாதையின்றி  டா  போடுதல் 

        கேட்டால், தெரிந்தவர்,  சிநேகம்  என சொல்லி மழுப்புதல் 

       பணத்திற்காக, பகடைக்காயாய்  ஆணை ஆட்டிவித்தல்,

       நட்பா, காதலா ! என்ற நிலையிலே  தடுமாறுதல் !

      

       ஆணுக்கு நிகர் பெண் என்று நினைக்கும் பெண் 

       பேதமின்றி ஆணுடையில் நடமாடும் கோலம் ,

        கண்டதே காட்சி, கவர்ச்சியான, ஆடை அலங்காரம் 

        எங்கு முடியுமோ  இந்த பண்பாட்டு  மயக்கம் !

    Share
  • அன்றும், இன்றும்

     

     

                      ரா.பார்த்தசாரதி

     

    பெற்றோர்களே  பிள்ளைகளின் திருமணம்  தீர்மானிக்கப்பட்டதே

    மகன் , மகளின் வாழ்க்கையும் சிறப்பாக  அமைந்ததே

    நிலைமையறிந்து, குலமறிந்து, திருமணம் நிச்சயக்கப்பட்டதே

    இன்றோ ஆணும், பெண்ணும்,பேசி திருமணம் முடிவடைந்ததே !

     

    திருமணம்    என்பது  ஆயிரம்  காலத்துப்  பயிரா,

    பழமை மாறாமல் காத்தவர்களின்  தவறா,

    அக்கால திருமணம் பந்தத்தினால் ஏற்பட்டதே

    இக்கால  திருமணம்  பணத்தினால் தீர்மானிக்கப்பட்டதே !

     

    அன்பு, பாசம், தியாகம் இவற்றிற்கு  அர்த்தம்முண்டு

    இன்று இவற்றிற்கு எல்லாம் ஓர்  அளவுண்டு

    சேர்ந்து  வாழ்ந்தால்  கோடி நன்மை என சொல்வதுண்டு

    இன்றோ   பிரிந்து   வாழ நினைப்பதுண்டு !

     

    வாழ்வின் காலச்சக்கரம்  அன்று  உறுதியாயிருந்ததே

    வாழ்க்கை  வாழ்வதற்கே என சொல்லப்பட்டதே

    வாழ்க்கை அன்று  சொர்க்கமாய்  அமைந்ததே

    இன்றோ வாழ்க்கை  நரகமாய்  மாறியதே !

     

    பழமைப்பேசி  இளந்தலைமுறையினரை திருத்தமுடியுமா

    புத்திமதி கூறினாலும், அவர்களால்  ஏற்றுக்கொள்ளமுடியுமா

    நானே ராஜா என்று நினைப்பவர்களை  திருத்தமுடியுமா

    அழிவு  பாதையில் செல்பவர்களை தடுக்கமுடியுமா !

     

    உலகத்தோடு ஒட்டி வாழ்வதே  வாழ்வு

    காலத்திற்கு ஏற்ப வாழ்வதே  இதற்கு தீர்வு

    விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் என்றும் நன்மை

    இதனை மறந்து வாழ்ந்தால் வாழ்வே தனிமை !

     

     

     

     

    Share
  • காதலெனும்  சோலை 

     -ரா.பார்த்தசாரதி

    காதலெனும்  சோலையிலே  கண்டடெடுத்த  ரோஜாவே
    காதலனிடம்  காதலை  வெளிப்படுத்திய  ரோஜாவே
    காதலெனும்  போதையிலே  கண் மயங்கும் ராஜாவே
    என் மனதை கவர்ந்திடும்   இனிய  ராஜாவே!

    காதலெனும் சோலையில்  கானக்குயில் பாடுதே
    ஆதியும் அந்தமுமில்லாமல்  அமரகீதம் பாடிடுதே
    வண்ணமலர்கள் மனதை தென்றல் வாரி வீசிடுதே
    கடலாகிய  அலைதன்னில் கவிதை பாடி ஓடிடுதே!

    உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்  போதினிலே
    கொள்ளும் இன்பமே  சொர்க்கம் வாழ்வினிலே
    கொஞ்சும்  சோலைக்குருவி  சொந்தம் பேசுமே
    குறைவில்லாமலே  எல்லா இன்பமும் தருமே!

    இரு இதயங்கள்  இவ்வுலகில்  ஒன்றாகி
    என்றும் அழியாமல்   காதலாகிக்  கசிந்துருகி
    கண் மூடும் வேளையிலே கலை என்ன கலையோ
    கண்ணே உன் பேரழகிற்கு உலகம் தரும் விலையோ !

    உன்னை நினைத்தாலே என் மனம் காதல்கீதம் பாடிடுமே
    உன் மதிமுகம் இரவினிலே நன்கு தெரிந்திடுமே
    உன்னிடத்தில் என் இதயத்தை தந்துவிட்டேனே
    காதலியே
    என் இதயத்தைப் பாவை நீயும் எடுத்துச்
    சென்றுவிட்டாயே!

     

     

     

    Share
  • காதல் ஓவியமே! 

    -ரா.பார்த்தசாரதி

    பூத்த விழிகள்  கதை  பேச, பூங்காற்று மெல்லசைந்து,
    உன் வேல்  விழிகள் என் இதயத்தைத் துளைத்து
    என் ஜீவனைப் பறித்து, தேகம் எரிக்கும் காதல்ஓவியமே
    என் சேவை உனக்கு, நாணம் உனக்கு  எதற்கு?

    எங்கோ படித்தது  நினைவிற்கு  வருகிறது
    மனம் துடித்தது  தெளிவாய்   தெரிகிறது
    என்னைக் கொடுக்க வந்தேன் பேரரசியே
    பொய்யான எதிர்ப்பைக் காட்டாதே எழிலரசியே!

    காதல் வசப்படும் வரையில் வாட்டமில்லை
    வந்தபின்  ஏனோ நம்மிடையே  ஊடல் இல்லை
    கண்களால்  பேசி விழிகளால் என்னை அளக்கின்றாயே
    என் நெஞ்சினில் களிப்பினை மிதக்கச் செய்கின்றாயே!

    உன்னையும் காதல் உணர்வு  தீண்டுமே
    உன் கண்களில் அந்த ஏக்கம் தெரியுமே
    காதலிக்கும் போது  பசி  இருக்காது
    நேரம் கழிவதும்  உனக்குத் தெரியாது!

    காதல் என்பது ஜாதி, மதம் பார்ப்பதில்லை
    இரு உள்ளங்கள் சந்தித்து பேசாமல் இருந்ததில்லை
    காதல் என்பது சத்தியமே,  துணிந்து  நிற்போம்
    காதல் தினத்தை மகிழ்வுடன்  போற்றிடுவோம்!

     

     

     

    Share
  • குடியரசு தினம்

     

     

    ரா.பார்த்தசாரதி

     

    சட்டங்களையும், மனித உரிமைகளையும் ஒரு குடைக்கீழ் வந்த தினம்

    நாட்டின் ஒருமை பாட்டிற்காக,சட்டங்கள் பிரகடன படுத்திய தினம்

    எல்லா மாநிலத்திற்கும் பொதுவான சட்ட திட்டங்கள் உண்டான தினம்

    ஜனநாயக நாடு ஒரு குடியரசு நாடாய் அமல்படுத்திய தினம்.!

     

    எங்கு சட்டம் முடிகிறதோ, அங்கே கொடுங்கோல் ஆரம்பமாகும்

    இன்றைய சட்ட திட்டங்கள் தேவைக்கேற்ப வலைப்பதாகும்

    அரசியல் சாசனங்களும், அரசியல் வாதிகளும் காரணமாகும்

    கொலைக்கும், கொடுங்கோன்மைக்கும் துணை நிற்பதாகும் !

     

    தீவிர வாதத்தையும், கருப்பு பணத்தையும், அறவே ஒழிக்கமுடிந்ததா

    நாட்டின் சட்ட திட்டங்களால் இவைகளை முழுதும் அழிக்க முடிந்ததா

    ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், இதற்கு துணைநிற்பதா

    அறுபத்து ஏழு ஆண்டுகள் ஆயினும் தீர்வு இல்லாமல் இருப்பதா !

     

    குடியரசு நாடே ! இன்று பணக்காரர்கள் ஆட்டி வைக்கும் பொம்மையா

    ஏழைகளுக்கு இன்று சட்ட திட்டங்கள் ஓர் எட்டா கனியா

    நிதி கிடைத்தால் போதும் என்றெண்ணி நீதியை புறக்கணிக்கலாமா

    நடுநிலை கொண்டு நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டாமா !

     

    Share
  • பொங்கலோ பொங்கல்

    ரா.பார்த்தசாரதி 

     

    செங்கதிரோன்  எழுந்திட்டான் செவ்வானம்  வெடித்து 

    செந்தமிழன்  எழுந்திட்டான் செங்கரும்பு ஒடித்து 

    மங்கையரும்,மழலைகளும் புத்தாடை உடுத்து 

    மாக்கோலம் போட்டிடுவார் மணிகரத்தால் தொடுத்து,

     

    உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.

    தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !

    உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் விழா

     பசுவிற்கும், எருதுக்கும் மக்கள் எடுக்கும்  விழா !

     

    உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு

    நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு 

    பசுவும் , எருதும் விவசாயியின்  முதலீடு, என அறிந்ததே 

    வான் பொய்த்தாலும், வாயில்லா ஜீவன் காப்பாற்றுதே !

     

    பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,

    பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,

    கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,

    உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

     

    தைத்திங்கள் வரட்டும், விவசாயிக்கு தன்னம்பிக்கை தரட்டும்,

    விவசாயி தற்கொலை முயற்சியிலிருந்து விடுபட அரசு உதவட்டும்

    கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே ,

    குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 

    Share
  • எதிர்காலம்   

    -ரா. பார்த்தசாரதி

    படிக்கும்  மாணவன்  எதிர்பார்ப்பதோ  நல்ல  மார்க்!
    அறிவை விட மார்க்கை வைத்து எதிர்காலம்
    கணிக்கப்படுகிறதே!

    இளம் பெண்களின் கல்வியே  எதிர்காலத்தைத்
    தீர்மானிக்கிறதே!
    நல்ல ஊதியமும், நற்கணவனும் அமைந்தால்  சிறப்படைகின்றதே!

    மாத  வருமானத்தில்  சேமிக்க வேண்டிய  நிலைமை!
    அதுவே,  பிரச்சனைகளை எதிர்காலத்தில்  சமாளிக்கும்
    திறமை!

    அரசியல்வாதிகளும், அரசு ஊழியரும் எதிர்பார்க்கும்
    பதவி உயர்வு!
    தன் முயற்சியின்றி, பணபலத்தால் அடையும்  இறுமாப்பு!

    நல்ல வேலை கிடைத்தால், நல்ல குடும்பம்
    அமைவதில்லை!
    நல்ல குடும்பம்  அமைந்தால், நல்ல ஊதியம் கிடைப்பதில்லை!

    சோம்பேறியாய்த் திரிபவனுக்கு எதிர்காலம் ஓர்
    இருட்டறைதான்!
    கடின முயற்சியுடன் உழைப்பவனுக்கு எதிர்காலம் ஓர்
    பொற்காலம்!

    எங்கே  சென்றிடும் காலம், அது நம்மையும்  வாழ
    வைக்கும்!
    கடமை, கண்ணியம், கட்டுப்பாடுபோன்றவை  நம்மை
    உயர வைக்கும்!

    எதிர்காலத்தை  நினைந்து  என்றும்  கனவு  காணாதே!
    வருவது  வரட்டும் என்று எண்ணி உழைக்கத் தவறிடாதே!

    நாட்டின் எதிர்காலம் இளைஞர்  கையில்தான்!
    திறம்படச்  செயலாற்றினால் நன்மை நமக்குத்தான்!

    எதிர்காலத்தை நினைந்து வாழ்க்கையில் சேமிக்கக்
    கற்றுக்கொள்!
    உன் குடும்பத்தைத் தாங்கும் தூண் என  ஓத்துக்கொள்!

     

     

    Share
  • சில்லறை

     

     

    ரா.பார்த்தசாரதி

     

     

     

    பணம் கிடைத்தும்,  சில்லறைப் பணம்  கிடைக்கவில்லை

    மக்களின் அன்றாட  வாழ்க்கைக்கு கையில் சில்லறை இல்லை

    ஏனோ, நமக்கு  ஒவ்வொரு நாளும் பொருள் வாங்க தடுமாற்றம்

    இதனை அறிந்த அரசு, மக்களுக்கு கொடுப்பதோ ஏமாற்றம் !

     

    மாற்றம் ஒன்றே உலகில் என்றும்  மாறக்கூடியது

    மாற்றமில்லாமல் எதையும் முடிக்க முடியாது

    மக்களின் கஷ்டங்களைப் போக்க வழி தெரியாத

    அரசும், அரசியலும் இதற்கு வழி வகுக்காது !

     

    சில்லறைக்காக மக்கள் பொன்னான நேரத்தை கழிக்கின்றனரே

    பணம் இருந்தும், பொருள் வாங்க சில்லறைக்கு அலைகின்றனரே

    இன்றோ கடன் கார்ட்   மூலம் பணம் செலுத்துவதே கட்டாய வழி.

    பாமர மக்கள் கார்ட்  இல்லாமல் பிதுங்குதே அவர்கள்  விழி !

     

    மக்கள் படும் துன்பத்திற்கு  வழி  காண  வேண்டாமா !

    எதற்கெடுத்தாலும், பணமில்லா பரிவர்த்தனையை நீட்டிக்கலாமா

    இன்று நாட்டில் படிப்பறிவு இல்லாதவர்களே மிகவும் அதிகம்

    கணினி  முறையினை  அமல்படுத்துவது மிகவும் சிரமம் !

     

    வங்கி  கணக்கு  இல்லாமல்  இன்று பல கோடி பாமர மக்கள்

    கணினி மூலம் பணம்செலுத்துவதும்,பெறுவதும் கற்றார்களா !

    இன்று  பல கோடி மக்கள் கையெழுத்து போடத் தெரியாத நிலைமை

    மக்களுக்கு கணினி செயல்பாட்டை  அறிவுறுத்துவது அரசின் கடமை !

     

    இன்று கறிவேப்பிலை,கொத்தமல்லி வாங்கவும் கடன் அட்டைகள்

    கடன் அட்டைகள் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் கருவிகள்

    புலியைப்  பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா ! ஒரு முடிவு வேண்டாமா

    அயல் நாட்டை பார்த்து எல்லாவற்றினையும் நிலைநாட்டமுடியுமா !

     

     

     

     

     

     

    Share