சில்லறை
ரா.பார்த்தசாரதி
பணம் கிடைத்தும், சில்லறைப் பணம் கிடைக்கவில்லை
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு கையில் சில்லறை இல்லை
ஏனோ, நமக்கு ஒவ்வொரு நாளும் பொருள் வாங்க தடுமாற்றம்
இதனை அறிந்த அரசு, மக்களுக்கு கொடுப்பதோ ஏமாற்றம் !
மாற்றம் ஒன்றே உலகில் என்றும் மாறக்கூடியது
மாற்றமில்லாமல் எதையும் முடிக்க முடியாது
மக்களின் கஷ்டங்களைப் போக்க வழி தெரியாத
அரசும், அரசியலும் இதற்கு வழி வகுக்காது !
சில்லறைக்காக மக்கள் பொன்னான நேரத்தை கழிக்கின்றனரே
பணம் இருந்தும், பொருள் வாங்க சில்லறைக்கு அலைகின்றனரே
இன்றோ கடன் கார்ட் மூலம் பணம் செலுத்துவதே கட்டாய வழி.
பாமர மக்கள் கார்ட் இல்லாமல் பிதுங்குதே அவர்கள் விழி !
மக்கள் படும் துன்பத்திற்கு வழி காண வேண்டாமா !
எதற்கெடுத்தாலும், பணமில்லா பரிவர்த்தனையை நீட்டிக்கலாமா
இன்று நாட்டில் படிப்பறிவு இல்லாதவர்களே மிகவும் அதிகம்
கணினி முறையினை அமல்படுத்துவது மிகவும் சிரமம் !
வங்கி கணக்கு இல்லாமல் இன்று பல கோடி பாமர மக்கள்
கணினி மூலம் பணம்செலுத்துவதும்,பெறுவதும் கற்றார்களா !
இன்று பல கோடி மக்கள் கையெழுத்து போடத் தெரியாத நிலைமை
மக்களுக்கு கணினி செயல்பாட்டை அறிவுறுத்துவது அரசின் கடமை !
இன்று கறிவேப்பிலை,கொத்தமல்லி வாங்கவும் கடன் அட்டைகள்
கடன் அட்டைகள் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் கருவிகள்
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா ! ஒரு முடிவு வேண்டாமா
அயல் நாட்டை பார்த்து எல்லாவற்றினையும் நிலைநாட்டமுடியுமா !