-ரா. பார்த்தசாரதி

படிக்கும்  மாணவன்  எதிர்பார்ப்பதோ  நல்ல  மார்க்!
அறிவை விட மார்க்கை வைத்து எதிர்காலம்
கணிக்கப்படுகிறதே!

இளம் பெண்களின் கல்வியே  எதிர்காலத்தைத்
தீர்மானிக்கிறதே!
நல்ல ஊதியமும், நற்கணவனும் அமைந்தால்  சிறப்படைகின்றதே!

மாத  வருமானத்தில்  சேமிக்க வேண்டிய  நிலைமை!
அதுவே,  பிரச்சனைகளை எதிர்காலத்தில்  சமாளிக்கும்
திறமை!

அரசியல்வாதிகளும், அரசு ஊழியரும் எதிர்பார்க்கும்
பதவி உயர்வு!
தன் முயற்சியின்றி, பணபலத்தால் அடையும்  இறுமாப்பு!

நல்ல வேலை கிடைத்தால், நல்ல குடும்பம்
அமைவதில்லை!
நல்ல குடும்பம்  அமைந்தால், நல்ல ஊதியம் கிடைப்பதில்லை!

சோம்பேறியாய்த் திரிபவனுக்கு எதிர்காலம் ஓர்
இருட்டறைதான்!
கடின முயற்சியுடன் உழைப்பவனுக்கு எதிர்காலம் ஓர்
பொற்காலம்!

எங்கே  சென்றிடும் காலம், அது நம்மையும்  வாழ
வைக்கும்!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடுபோன்றவை  நம்மை
உயர வைக்கும்!

எதிர்காலத்தை  நினைந்து  என்றும்  கனவு  காணாதே!
வருவது  வரட்டும் என்று எண்ணி உழைக்கத் தவறிடாதே!

நாட்டின் எதிர்காலம் இளைஞர்  கையில்தான்!
திறம்படச்  செயலாற்றினால் நன்மை நமக்குத்தான்!

எதிர்காலத்தை நினைந்து வாழ்க்கையில் சேமிக்கக்
கற்றுக்கொள்!
உன் குடும்பத்தைத் தாங்கும் தூண் என  ஓத்துக்கொள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.