கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி -இசைஞானி இளையராஜா-கே. ஜே.யேசுதாசுடன்.. பி. சுசீலா
கண்ணன்ஒருகைக்குழந்தை..
ராணி சந்திரா என்னும் கதாநாயகியுடன் மார்கண்டேயர் சிவகுமார் கதாநாயகனாக தோன்றி நடித்த படம் பத்ரகாளி. இப்படம் வெளியாகும் முன்னதாக இக்கதாநாயகி அகால மரணமடைந்தார் என்பது மக்கிளிடம் ஒரு இரக்கத்தைத் தோற்றுவித்ததுடன் படத்தின் வெற்றிக்கும் வழி வகுத்தது.
கண்ணன் என்கிற பெயர்ச் சொல்லை.. கடவுளின் திருப்பெயரை பல்லவியில் வைத்து உருவாக்கியிருக்கும் பெரும்பாலான திரைப்பாடல்கள் அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதோ.. ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ ..
இசைஞானி இளையராஜா இன்னிசையில் விளைந்த அருமையான கீதம்.. காவியக் கவிஞர் வாலியின் கை வண்ணம்..
கே. ஜே. யேசுதாசுடன்.. பி. சுசீலா இணைந்து பாடிய பாடல். கணவன் – மனைவி உறவிற்கும் தாம்பதியத்திற்கும் சாமரம் வீசும் வரிகள்!!
இசைஞானி இளையராஜா தன் திரையுலகப் பிரவேசத்திற்கு முன்னதாக நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது அமைக்கப்பட்ட வர்ணமெட்டினை இப்படத்தில் பயன்படுத்த அதற்கேற்ற வரிகளை திரைக்காக கவிஞர் வாலி அவர்கள் வரைந்துதர .. இனிய வடிவில் உருவான இதமான பாடல்! ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில்.
நீங்காத கீதமாய் காதில் விழுந்து நெஞ்சில் நிறையும் மெலோடியஸ் பாடல் வரிசையில் .. தோ.. ‘கண்ணன் ஒருகைக் குழந்தை’ ..
காலத்தை வென்று இன்றும் கேட்கப்படுகிறது அதே ஜீவனுடன்!!
திரையுலகம் எத்தனையோ கவிஞர்களைக் கண்டிருக்கிறது. கண்டுகொண்டிருக்கிறது. காணப்போகிறது. இந்த வரிசையில் நாத்திகக் கருத்துக்களில் நாட்டமும் அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களில் ஈடுபாடும் கொண்ட ஒரு கவிஞர் தன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்றதெல்லாம் பக்திப் பாடல்களில்தான் என்கிற செய்தி புருவங்களை விரியவைக்கும்!
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் –
வேல் போல் இருக்குதடி என்கிற சிந்தனையைப் பதித்தவர்!
பக்தியில் உருகிநிற்கும் உள்ளத்திலும்கூட தோன்றாத சிந்தனைகள் இவர் உள்ளத்தில் உற்பத்தியானதை என்னவென்று சொல்வது?
காலத்தின் கருணை என்று சொல்வதா? கந்தனின் கருணை என்று சொல்வதா?
ஆம்! கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலும் அதன் பின்னணியும் இவரை முன்னுக்கு கொண்டுவந்தன என்றே சொல்லலாம்!
கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் கந்தன் கருணை திரைப்பாடல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது..குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக் காட்சிக்கு கவிஞர் பாடல் எழுத முற்பட்டபோது, பக்திப் பாடல்கள் வரிசையில் வெளியாகியிருந்த ஒலிநாடாவில் தான் கேட்ட ஒரு பாடல் இந்தக் காட்சிக்கு முற்றிலும் பொருத்தமாய் இருக்கும் என்று கண்ணதாசன் எண்ணம் கொள்ள, அதை இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல.. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் உருவாகியிருந்த அப்பாடலை.. எழுதிய இளைஞர் பூவை செங்குட்டுவன் என்றறிந்து அவருக்கு வாகனம் அனுப்பி வரவழைக்க.. அவரின் பாடலை இப்படத்தில் இடம்பெறச் செய்தார் கண்ணதாசன்!
பழநியிலேஇருக்கும்கந்தப்பழம் – நீ பார்வையிலேகொடுக்கும்அன்புப்பழம் பழமுதிர்ச்சோலையில்முதிர்ந்தபழம் – பக்திப்பசியோடுவருவோர்க்குஞானப்பழம் (திருப்பரங்குன்றத்தில்)
சென்னையிலும்கந்தகோட்டம்உண்டு – உன் சிங்காரமயிலாடத்தோட்டம்உண்டு உனக்கானமனக்கோயில்கொஞ்சமில்லை – அங்கு உருவாகும்அன்புக்கோர்பஞ்சமில்லை! (திருப்பரங்குன்றத்தில்)
இளம்கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியூட்டிய இந்நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமானது. மேலும் பாடலில் ஒரே ஒரு வார்த்தையை கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொள்ளலாமா என்று பூவை செங்குட்டுவனிடம் அனுமதி கேட்டார். என்ன தெரியுமா? சென்னையிலே கந்த கோட்டமுண்டு .. என்கிற வரியை சிறப்புடனே கந்த கோட்டமுண்டு என்று மாற்றியமைத்தார். கவிஞர் பூவை செங்குட்டுவன் இதுபற்றி நினைவுகூரும்போதெல்லாம் கவியரசர் தனது பாடலுக்கு சிறப்பு சேர்த்தார் என்பார்.
சிறப்புடனேகந்தகோட்டம்உண்டு– உன்
சிங்காரமயிலாடத்தோட்டம்உண்டு
ஒரு கவிஞர் தான் எழுதவேண்டிய பாடலை மற்றொரு கவிஞருக்கு தந்திட எத்தகைய பெருந்தன்மை வேண்டும்? அதனால் தான்
இன்றைய கவிஞர்களுக்கெல்லாம் அரசராக – கவியரசாக.. இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
http://www.youtube.com/watch?v=d9mhH4naphg
சினிமாப் பாடல்களில் என்ன இருக்கு? அதற்கெதற்கு இத்தனை முக்கியத்துவம்? சினிமாங்கிறதே வெறும் பொழுது போக்கிற்காகத்தான்! அதைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிற முணுமுணுப்புகள் சில சமயம் நம்மை யோசிக்க வைக்கும்! ஆனா.. நடைமுறையில் சினிமாவும் சரி.. சினிமாப்பாடல்களும் சரி.. மனித வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.. அதுவும் நாம் சுட்டிக்காட்டும் பொற்காலப் பாடல்களில் இடம்பெற்ற பல்வேறு பாடல்கள்.. பகுத்தறிவை ஊட்டுவனவாக, தன்னம்பிக்கை தருவதாக, ஆறுதலை அளிப்பதாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! மேலும் அவை வெறும் பாடல்வரிகளாக மட்டும் பவனிவராமல் இசையோடு இணைந்து வருகின்றபோது பாடல்கள் பதியாத இதயங்கள் ஏது? இதோ ஒரு எடுத்துக்காட்டு!
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..
வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்.. உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..
கோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!
இப்ப சொல்லுங்க.. திரைப்படப் பாடல்கள்தானேன்னு விட்டுவிட முடியுமா? நல்லது எங்கே இருந்தாலும் அது நமக்குத்தானே!!
திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: ஆர். சுதர்சனம் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1965
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம் வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம் உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? – அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை – இதைப் புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம் கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம் நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் – நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்
1965ல் வெளிவந்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றி ஆர். சுதர்சனம் இசையமைத்து டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல். எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டு.. பிறகு சிவாஜிக்கு பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள் போல் தோன்றுகிற பாடல். மனதை தொடுகிற வரி..
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
ஒரு பெரிய தத்துவத்தை இதைவிட எளிமையாய் எப்படி சொல்ல முடியும்?
சில சமயங்களில் வாலி .. கண்ணதாசனைவிட எதார்த்தமாக தெரிகிறார் என்கிறார் திரைப்பாடல் ஆர்வலர் ராகப்ரவாகம் சுந்தர் அவர்கள்.
வாலி அவர்கள் மறைந்தபோது .. தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை..
“எனக்கு வசதியான குடும்பம் இருந்தும் சினிமாவிலே ஜெயிக்கணும்னு ‘இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்’ ‘வெய்யில்லே சுத்தினா தலை வலி வரும்.. மழயிலே நனைஞ்சா ஜலதோஷம் வரும்.. இதுதான் கர்மா.. ” – வாலி ..
“கர்மா என்பதை இதைவிட எளிமையாக யாரும் சொல்லமுடியாது தி ஹிந்து நாளிதழில் மாலதி ரெங்கராஜன் எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
தமிழ்த்திரைச் சரித்திரத்தில் ஒரு பாட்டாளியின் குரல் – ஒடுக்கப்பட்டவர்களின் ஓசை – உழைப்பவர்களின் வியர்வை – நெசவாளர்களின் குமுறல் – சாலைவண்டி இழுப்பவர்களின் சுமை – சாமான்ய மக்களின் பிரதிநிதித்துவம் – சமத்துவ சமுதாயப் பார்வை – அவலங்களைத் தட்டிக்கேட்கும் உறுதி – மானிட குணங்களின் கசடுகளை களையத் துடிக்கும் கூர்மை! பாமரர்களும் புரிந்துகொள்ளும் பகுத்தறிவுச் சிந்தனை – ஆயிரமாயிரம் கவிஞர் பெருமக்கள் வந்து எழுதி வைக்க வேண்டியவற்றை தன் 29 வயதில் மரணத்தைத் தொட்ட மக்கள் கவிஞன் ஒட்டுமொத்தமாய் ஓங்கி ஒலித்தான் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களையே குறிக்கும்!
ஏழைகளின் தோழனாய்.. பாட்டாளிகளின் கூட்டாளியாய்.. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாய்.. முத்து முத்தாய் இவன் எழுதி வைத்தப் பாட்டு! தஞ்சை மண்ணிலிருந்து தவழ்ந்து வந்த தமிழ்!! அர்த்தபுஷ்டிகளோடு இவன் படைத்த வரிகள் சமுதாய அவலங்களின்மீது எப்போதும் விழுகின்ற சவுக்கடிகள்!!
சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளில் வலியோர் கை ஓங்கி நிற்பதும் மெலியோர் கை தாழ்ந்திருப்பதும் இல்லான் எனும் நிலை மாற்றிடவும் மக்கள் புரட்சியால் கைகூடும் என்கிற திடநம்பிக்கையோடு சத்திய வரிகளைத் தந்தவன் இவன் என்பது மறக்க முடியாதது.
பொற்காலப் பாடல்கள் இவைதான் என்று வருங்காலச் சந்ததியினருக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் பட்டுக்கோட்டையின் பாடல்கள் அங்கே நிச்சயமாய் பரிணமிக்கும்! ஏட்டிலே இவன் பாடல்கள் பதிந்திருப்பதைக் காட்டிலும் மக்கள் இதயங்களில் பதிந்திருப்பதே அதிகம்!! நூற்றுக்கணக்கில் விளைந்த இவர்தம் முத்துக்குவியலில் நான் முதல் முத்தாகக் கருதும் பாடலிது.
அரசிளங்குமரி என்னும் திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில்.. மக்கள் திலகம் பாடுவதாய் அமைந்த பாட்டு! எளிய வரிகள் இனிய இசை இவைகளின் கலவைதான் என்பதுடன் தன் இனிய குரலால் வருடங்களைத் தாண்டி வாழுகின்ற பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார் டி.எம்.செளந்திரராஜன்.
சின்னப்பயலேசின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப்போற வார்த்தையை நன்றாய் எண்ணிப்பாரடா – நீ எண்ணிப்பாரடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
ஆளும்வளரணும் அறிவும்வளரணும் அதுதாண்டாவளர்ச்சி – உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்காலம் தரும்பயிற்சி – உன் நரம்போடுதான் பின்னிவளரணும் தன்மான உணர்ச்சி (சின்னப்பயலே)
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ வலது கையடா தனியுடைமைக் கொடுமைகள்தீர தொண்டு செய்யடா – நீ தொண்டு செய்யடா தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம்பழைய பொய்யடா (சின்னப்பயலே)
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க – உன்தன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே – நீ வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே – நீ வெம்பிவிடாதே (சின்னப்பயலே)
இது எழுதிவைத்த பாடல் மட்டுமல்ல! வளரும் மழலைக்கு சொல்லப்படும் கருத்துக்களாய்
நிறைந்திருந்தாலும் வளர்ந்தவர்களுக்கும் தேவைப்படும் பொக்கிஷமாகவே கருதப்படுகிறது.
பட்டுக்கோட்டையார் பாடல் என்றால் அதில் பட்டுத்தெறிக்கும் முத்துக்கள் கொட்டிக்கிடக்குமோ? என்றைக்கும் மனதை விட்டு அகலாத ஒரு திரைப்பாடலாய் இப்பாடல் உலா வருவதை எவர் இங்கே மறுக்க முடியும்?
வீரம், விவேகம், தன்மானம், பகுத்தறிவு என்றெல்லாம் மனித உணர்வுகளை மீட்டியெடுக்கும் உன்னதமான பாடல் உண்டென்றால் அது இப்பாடல் அன்றி வேறு எது??
சுருக்கமாய் சொல்ல விழைகிறேன்.. இது தன்மானமுள்ள தலைமுறைகளுக்காக அன்றைக்கே பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!
அண்மையில் இன்றைய பிரபலமான கவிஞர் ஒருவரோடு உரையாடும்போது.. கண்ணதாசனைப் பற்றி பேச்சு வந்தது. அவரும்தன் பங்கிற்கு.. கண்ணதாசன் கூட மெட்டுக்காக சில நேரங்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொடுத்திருக்கிறார் என்றார். நானும் அதை மறுப்பதற்கு ஆதாரமின்றி அமைதியாக இருந்தேன்.
ஆம்.. அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை’
சமீபத்தில் சென்னையைச் சார்ந்த திரு.பரசுராமன் அவர்கள் எழுதிய கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் என்கிற நூலைப் படித்த போது, இந்தப் பாடலுக்கு முழுமையான விளக்கம் கண்டேன்.. ஆனந்தம் கொண்டேன்.
‘பூமாலையும் பாமாலையும் தந்த ஆண்டாள், கோ எனப்படும் பசுக்களைக் மேய்த்த கோபாலன் எனும்கண்ணன் அன்றி வேறுயாரையும் திருமணம் வேண்டேன் என்றவள். அவளைப்போல் நீயும் யாரையாவது விரும்புகிறாயா சொல், உன்னுடைய அந்த அன்புத்துணையை நான் சீக்கிரமாய் அமைத்துத் தருகிறேன்’ என்று சூசகமாய் கேட்கிறான்,அன்பு அண்ணன் தன் தங்கையிடம்.
தமிழை ஆண்டாள் என கோதைக்குப் பெயர் கொடுத்த கண்ணதாசன் எதற்கு அப்படிக் கூறினார் எனப்பார்த்தால் …..
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களில் தமிழுக்கே உரிதான ழ என்பதை அதிக அளவில் உபயோகப்படுத்தியது
ஆண்டாள்தான். திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணா எனும் பாடலில் ‘ழ’கரம் அதிகம் .11தடவை ‘ழ’ உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
“கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்கிற சொற்ப்ரயோகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால்.. கவிஞரின் தமிழ் ஆளுமை.. அறிவு.. எத்தனை ஆழங்கால் பட்டது என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?
சொக்கேசன் துணையோடு ஊர்கோலம்போனாள் என்பது, திக்விஜய யாத்திரையின் போது சிவபெருமான் கூடவந்தது,திருமணம் நடந்தது, அம்பிகையின் அரசாட்சி இவைகளைக் கூறுகிறார். மதுரை என்றதும் சங்கம் வளர்ந்ததமிழ்,மீனாட்சி என்றதும் மாணிக்க மூக்குத்தி இவை யாவும் இடம்பெற்றுள்ளன.
அம்பிகை திக்விஜய யாத்திரையின்போது பரமேஸ்வரனும் உடன் போனார் என்ற தகவல் திருவிளையாடல்புராணத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களுக்கு) மட்டுமே தெரியும். இத்தகவலை ‘சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்’ என அமைத்து பாமர மக்களிடமும் கொண்டு சென்ற கண்ணதாசனின் கவித்துவம் நம்மை வியக்க வைக்கிறது!
மாப்பிள்ளை தேடக்கிளம்பிய அண்ணன்,மீனாட்சி கல்யாணத்தையும் ஆண்டாள் கல்யாணத்தையும் சொல்வதாக கண்ணதாசன் அமைத்திருப்பதில் மற்றொரு காரணமும் உண்டு.
மீனாட்சிகல்யாணத்தில் மாப்பிளையான பரமேஸ்வரன் மீனாட்சியுடன் மதுரையிலேயே தங்கிவிட்டார் (அதாவது மாமனார் வீட்டோடு)
ஆண்டாளோ புகுந்தவீடு போய் விட்டாள் (திருவரங்கம்)
‘அம்மா உனக்கு வீட்டுமாப்பிள்ளையாக பார்க்கட்டுமா அல்லது நீ மாப்பிளைவீட்டுக்குப் போகிறமாதிரியா, எப்படிப் பார்க்கட்டும்?’ என்று உள் அர்த்தமுடன் கேட்பதான கருத்துகொண்டது.
எப்படி இருந்தாலும் சரி கல்யாணம் நல்லபடியாக நடக்கவேண்டும்; அதுமட்டுமல்ல கல்யாணத்துக்குப் பிறகு
தன் தங்கை எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறான் அண்ணன்.
ராமரும் சீதையும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்குவருகிறது.
ராமரும் சீதையும் திருமணம்முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தந்தை சொல்லைக் காப்பதற்காக ராமன்
வனவாசம்போக வேண்டியதாகிவிட்டது. சீதை கொஞ்சமும் வருத்தப்படாமல் கணவனுடன் காட்டிற்குப் போனாள். ராவணன் தூக்கிச்சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது உடல்கள் பிரிந்தனவே தவிர உள்ளங்கள்பிரியவில்லை. ராவணவதம் முடிந்து ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. லவன் குசன் என்று இரு குழந்தைகள்பிறந்தார்கள்.
இவ்வளவு நிகழ்ச்சிகளும் அண்ணன் மனதில் ஓடுகின்றன. தன்மனத்து எண்ணங்களை தங்கையிடம் சொல்கிறான் அவளும் அப்படி வாழவேண்டுமென்று..
மாலை சூடி வாழ்ந்த வேளை
வனவாசம் போனாலும்
பிரியாத சீதை
ராமநாமம் தந்த ராகம்
லவனாக குசனாக
உருவான கீதம்
கண்ணதாசனின் இந்த வரிகளில் வேறு அற்புதமான தகவல்களும் அடங்கி உள்ளன. நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல கல்யாணம் முடிந்ததும் ராமரும் சீதையும் வனவாசம் போகவில்லை. 12 ஆண்டுகள் சேர்ந்திருந்தனர். அதன்பிறகுதான் வனவாசம் .
மாலை சூடிவாழ்ந்த வேளை என்கிறார் கண்ணதாசன்,
இனி அந்த வரிகளில் ராமரைப்பற்றி ஏதும் சொல்லவில்லையே என்பவர்களுக்கு கன்ணதாசன் பதில் சொல்கிறார்.
‘வேளை’ என்ற வார்த்தைக்கு மன்மதன் என்ற பொருளும் உண்டு; வேளை காலத்தையும் குறிக்கும்.
மன்மதன் போன்ற அழகு வாய்ந்த ராமனை வனவாசம் போனாலும் பிரியாத சீதை எனும் அர்த்தமும் வருகிறது.
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவைகளை உறுதியுடன் சமாளித்து வாழ்ந்து வழிகாட்டிய அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் குழந்தைகளான் லவனும் குசனும் ராமாயணம் என்ற பெயரில் கீதம் இசைத்தது (ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே) நாம் அறிந்ததே இத்தகவல்!
ராம நாமம் தந்தராகம்
லவனாக குசனாக
உருவான கீதம்
என்றுதெரிவிக்கப படுகிறது.
அற்புதத்திலும் அற்புதமான வரிகள் இவை .சாதாரண தகவலை ஒருபாமரனின் மனதிலும் ஆழப்பதியுமாறுசெய்த கண்ணதாசனின்
ஆன்மீக அனுபவத்தை எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக.. ஆம்.. காதல் திருமணம், வீட்டோடு மாப்பிள்ளை, சுயம்வரம் .. இதில் எந்தவிதம் உனக்கு கணவன் வேண்டும் என்கிற கேள்வியை உள்வைத்து, முத்தாய்ப்பாக கண்ணதாசன் முத்திரை பதிக்கிறார்…
மீனாட்சி ஆண்டாள் சீதை மூவருக்கும் அண்ணன்கள் கிடையாது. ஆனால் உனக்கோ நான் இருக்கிறேன், உன்குழந்தைகள் என்னை மாமன் என அழைக்க, அவர்களுக்கு நான் எல்லாவற்றையும் வாரி வழங்குவேன் என்று அண்ணன் சொல்லிமுடிக்கிறான்.
கண்ணதாசனின் அற்புதமான பாடல்களில் ஒன்று இது!
வயிற்றுக்காக இட்டு நிரப்பி கண்ணதாசன் எழுதிய பாடல் என்று குறிப்பிட்ட இந்தப் பாடலில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறதென்றால்.. அவ்வாறு குறிப்பிட்ட இன்றைய கவிஞரின் அறியாமையைத்தான் எண்ண வேண்டியுள்ளது. உலக அளவில் தேடினாலும் உவமை சொல்ல முடியாத ஒரே கவிஞர் அல்லவா கண்ணதாசன்!!
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி நல் அன்புத்துணை தேடி நான் தருவேன் மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள் சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் கன்னித்தமிழ் தேவி மைகண்ணண் அவள் ஆவி தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள்
தோகை மீனாள் பூவையானாள் சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள் மாலை கண்டாள் கோவில் கொண்டாள் மாணிக்க மூக்குத்தி ஒளிவீச நின்றாள் தென்றல் தொட்டு ஆட கண் சங்கத்தமிழ் பாட தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள் மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
மாலை சூடி வாழ்ந்த வேளை வனவாசம் போனாலும் பிரியாத சீதை ராமநாமம் தந்த ராகம் லவனாக குசனாக உருவான கீதம் மாமன் என்று சொல்ல ஒர் அண்ணண் இல்லை அங்கே அந்த அண்ணண் உண்டு இங்கே அள்ளி வழங்க
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி நல் அன்புத்துணை தேடி நான் தருவேன் மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிகை சுமித்ராவும் இப்பாடலில் முழுவதுமாய் வியாபிக்க .. ஒளிப்பதிவும்… மெல்லிசை மன்னரின் இன்னிசையும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன பாருங்கள்.. கேளுங்கள்..
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணன் ஒரு கோயில் .. இது
உலகம் சுற்றும் வாலிபன் என்கிற வெற்றிச் சித்திரத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் படு சூப்பர்! கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னும் பாடல்கள் தாராளம்! மெல்லிசை மன்னரின் ஈடிலா இசையில் அன்றும் இன்றும் என்றும் கேட்டு மகிழத் தக்க ரகம்! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய வண்ணப்படம் இதன் வெற்றிக்குப் பாடல்களே பெரிதும் காரணமாய் விளங்கின. கவியரசு கண்ணதாசன் அவர்களும் – கவிஞர் வாலி அவர்களும் எழுதியிருக்கும் சொல்லோவியங்கள் சுகமானவை!
காதல் பாடல்களில் இரண்டு விதங்கள். ஒன்று காதலனும் காதலியும் இணைந்து பாடுபவை. மற்றொன்று காதலனோ அல்லது காதலியோ தனித்துப் பாடுபவை. இவ்வகையில் இரண்டாம் ரகத்தில் பாடல் தேவைப்பட இரண்டு கவிஞர்களும் அள்ளி வழங்கிய முத்துச் சரங்கள் – மோகனப் புன்னகைகள் – மக்கள் திலகத்திற்கு பிடித்துப் போக இதற்காகவே இரண்டு பாடல்களையும் திரையில் இடம் பெறச் செய்தார்.
அவளொரு நவரச நாடகம் – கவியரசு கண்ணதாசன்
நிலவு ஒரு பெண்ணாகி – கவிஞர் வாலி
ஒவ்வொரு முறை எழுதப்படும்போதும் கவிஞனுக்குள்ளே ஒரு கருத்துப் பிரசவம் நடைபெறுகிறது. அவனது கவியாற்றல், கற்பனை வளம், இயற்கையில் பெய்யும் மழையாய் முதலில் இதயத்தில் உருவாகி சொற்களின் வடிவில் வெளிப்படுகிற விந்தை – கவிதை.இந்த சுகானுபவம் கவிஞர்களுக்கே சொந்தம்!!
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில் தேன் சுவையை தான் குழைத்து கொடுத்ததெல்லாம் இவள் தானோ
பவளமென விரல் நகமும் பசும் தளிர் போல் வளைகரமும் தேன் கனிகள் இரு புறமும் தாங்கி வரும் பூங்கொடியோ ஆழ்கடலின் சங்காக நீழ்க்கழுத்து அமைந்தவளோ யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து பொன்பதத்தில் வார்த்துவைத்த பெண்ணுடலை என்னவென்பேன் மடல்வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகி என்பேன்
மனதை வருடும் இன்பத் தேன் பாடலா? ஆண்டுகள் பல ஓடிவிட்டபோதும் – நம்நெஞ்சில் பதிந்திருக்கும் பாடல் அல்லவா? எழுதப்பட்ட இப்பாடல் வரிகளை வாசிப்பதுகூட சுகம்தானே இனிய குரலெடுத்து குழைந்து தரும் டி.எம்.சௌந்தரராஜன்!! வடிவம் மாறாத கவிதை தவழ்ந்து வருகின்ற அழகில் – இதுவரைஇப்பாடலில் மயங்காத நெஞ்சங்கள் எங்கே?வாலி எழுதிய பாடல்களில் – இது ஒரு அழகியலின் பால் பதிவு!!
பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் எனும் தலைப்பில் வெள்ளி தோறும் வருகின்ற இந்தத் தொடரில் … பல்வேறு பாடலாசிரியர்களின் பாடல்கள் இடம் பெறவிருக்கின்றன. சென்ற வாரம் புலவர் புலமைப்பித்தன். இந்த வாரம் கவிஞர் ஆலங்குடி சோமு.
தாயின் காலடியில் உள்ளதடா சொர்க்கம் என்று நபிகள் நாயகம் கூறுகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது நன்னெறி! தாய் எந்த உயிருக்கும் ஆதாரமானவள்! தாயை வணங்குதல் தரணியில் சிறந்ததென சான்றோர் முதலாய் சரித்திரம் சொல்லும்! தாய்க்கு ஈடாக இவ்வுலகில் ஏதும் கிடையாது என்பதும் யாவரும் அறிந்ததே!
அன்பு, கருணை, பரிவு, பாசம் இவைகளின் மொத்தப்படைப்பு தாய்மை! ‘அவள் அன்னை மட்டுமல்ல! வாழ்வின் ஆதாரம்! கடவுள் ஒவ்வொரு உயிருடனும் இணைந்திருக்க இயலாத காரணத்தால் ‘தாயை’ படைத்தான் இறைவன் என்பார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாயன்பு மிக்கவராய் வாழ்ந்தார் என்பது மட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ‘தாய்’ என்கிற உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து தனது கோடான கோடி ரசிகர்களின் இதயங்களிலெல்லாம் தாய் மீது பாசம் மேலிட காரணமானார் என்பதுவும் மிகையில்லை!
எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அடிமைப் பெண், கே. சங்கர் இயக்கத்தில் வெற்றிப் படைப்பாக வரலாற்றுப் பின்னணியில் வரையப்பட்ட கதை, திரைக்கதையில் முதல் பாடல் தாயைப் பற்றி அமைய வேண்டுமென எண்ணி பல்வேறு பாடலாசிரியர்களை வரவழைத்து எழுதிப்பெற்றார். வரையப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கம்போலவே அதற்கான பணத்தை அள்ளித்தந்தார். ஆனாலும் தான் திருப்தியடைகிற அளவு பாடல் வரப்பெறாமல் மேலும் மேலும் கவிஞர்களை எழுத வைத்தார். 40 பாடல்கள் எழுதப்பெற்ற பின் 41வது பாடலாக கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய இப்பாடல் வரிகளில் ஒரு தெய்வ தரிசனம் கண்டார். அதையே படத்தில் இடம் பெறச் செய்தார்.
தாயில்லாமல் நான் இல்லை தானேஎவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)
ஆதிஅந்தமும் அவள்தான் நம்மை ஆளும் நீதியும் அவள்தான் அகந்தையை அழிப்பாள் ஆற்றலைகொடுப்பாள் அவள்தான் அன்னை மகாசக்தி(தாயில்லாமல்)
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் தாயில்லாமல் நான்இல்லை
திரைக்கதையின்படி, தன்னைப் பெற்ற தாயை முதன் முறையாகப் பார்க்கச் செல்லும் காட்சி! அத் தாயின் காலில் அடிமை விலங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது! அதை அகற்றும்முயற்சியில் தனயன் ஈடுபட, தாயோ.. இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் கால்களில் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது.. அவைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடைசியாக உன் அன்னையின் விலங்கை அகற்ற வா மகனே.. என்று ஆணையிடுகிறார்.
அம்மாவின் காலடியில் ஆசிபெற்று மகன் தன் கடமையாற்றப் புறப்படுகிற உணர்ச்சிகரமான கட்டம்! உயிரூட்டும் பாடல் வரிகள் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஓங்கார நாதத்துடன் பாடிட டி.எம்.செளந்திரராஜன்!
திரையில் ஐந்து வடிவங்களாய் தோன்றும் எங்கள் எம்.ஜி.ஆர்.. அங்கே அன்னையின் முகம் விண்ணில் தோன்றி வாழ்த்துச் சொல்ல.. தாயைப் போற்றி.. அவள் சக்தியை எடுத்துரைக்க.. இந்த ஒற்றைப்பாடலுக்கு சக்தி உண்டு என்று எந்த சபையிலும் என்னால் கூற முடியும்!
எம்.ஜி.ஆர் பாடல்களில் இந்தப்பாடல்.. தாய்க்காக தனயன் முழக்கும் ராஜபாட்டை!
எம்.ஜி.ஆர் –தாய் பற்றி எடுத்துக்கூறிய எத்தனையோ சிகரங்களில் இப்பாடல் நிச்சயம் ஒரு இமயம்!
மண்ணில் பிறந்த மனிதருக்கு இயல்பான ஆசைகள் மூன்று.. மண், பெண், பொன் என்பார்கள். இந்த மூன்றிலிருந்தும் விடுபட்டு வாழ்பவர்கள் ஞானியாகிறார்கள். எனினும் அஃது அத்தனை எளிதன்று!
ஆசைகள் சிறகடிக்க.. சிறகடிக்க.. நாமும் கற்பனை வானத்தில் பறக்கிறோம். கைகூடவில்லையெனும்போது கதறியழுகிறோம். அளவான ஆசையை வைத்து வாழ்பவனே வளமாக வாழ்கிறான். எல்லாம் மனதின் பாகுபாட்டின் விளைவுகளே!
காலையும் மாலையும் அந்திவானம் சிவப்பதும் அழகுதானே! செக்கர் வானம் சிவப்பது உழைப்பாளிகளின் இரத்தத்துளிகளாய் ஒரு கவிஞனுக்குப் படுகிறது! அந்த வானம் சிவப்பது தன் காதலியின் கன்னமென இன்னொரு கவிஞனுக்குப் படுகிறது. பொருள் ஒன்றுதான். எடுத்து ஆளும்விதம்தான் மாறுபடுகிறது! இதயம் இடம் மாறும் அதிசயம் காதலில் நடப்பதுண்டு என்றாலும் இடம் பார்த்தே காதல் வருகிறது என்பதே உண்மை. இப்படிப் பலபேர் இருந்துவிட்டுப் போகட்டும்! என்னை விரும்புவது நீயல்லவா? நீ பொன்னுக்காகவோ.. பொருளுக்காகவோ.. என்னை விரும்பவில்லையே! என்னை எனக்காகவே நீ விரும்புகிறாய்! அன்பு மலரே.. என் ஆனந்த மலரே.. இன்பம் நீயே.. என்று காதலன் தன் காதலியைக் கொண்டாடும் இன்பம் இருக்கிறதே கேளுங்கள்..
ஆலயமணியில் உருவான திரைப்பாடல்.. நடிகர் திலகத்துடன் அபிநய சரஸ்வதி – இணைய கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி வெற்றிக் கூட்டணியில் விளைந்த முத்தமிழ்ப் பாடலிது! தென்றலோடு நடந்துபோகும் சுகம் காணுங்கள்!
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே(2) தாய்மை எனக்கே தந்தவள் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே (பொன்னை விரும்பும் பூமியிலே)
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2) அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் என்னிடம் உன்னை இந்த மனமும் இந்த குணமும் என்றும் வேண்டும் என்னுயிரே (பொன்னை விரும்பும் பூமியிலே)
ஆலமரத்தின் விழுதினைப் போலே அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2) வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழவைத்தாயே உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி திரைப்படம்: ஆலயமணி
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
காவிரிமைந்தன்
இருபெரும் கவிஞர்களென்று இதயம் திறந்து பாராட்ட வேண்டுமென்றால் கவியரசு கண்ணதாசன் அவர்களையும் காவியக்கவிஞர் வாலி அவர்களையுமே சேரும்! திரைப்பாடல்கள் வரிசையிலே எளிய இனிய தமிழை ஏந்தி வந்த இவ்விருவரும் பல நேரங்களில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பலருக்கு உண்டு. இதுபற்றி மேடையிலே கவிஞர் வாலி அவர்கள் “எனது பாடலை தங்கத்தோடுதான் ஒப்பிடுகிறார்களே தவிர, தகரத்தோடு அல்ல” என்று பெருமை பொங்க குறிப்பிட்டார்.
இருமலர்கள் என்னும் திரைச்சித்திரத்தில் ஒரு பாடல் காட்சி! சித்திரம்போல் இருவர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழா ஒன்றில் – காதலன் காதலியாக நடிக்க வேண்டம். பாத்திரப்படைப்புகளாக.. பொறுப்பேற்றவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் ஆவர். இக்காட்சியில் இடம்பெற்ற பாடல் .. மாதவிப் பொன்மயிலாள்.. தோகை விரித்தாள்.. கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னுகிறது பாருங்கள்..
ஆம்.. சங்ககாலப் புலவர்களின் சமகால வாரிசோ என்று எண்ண வைக்கும் இனிய வரிகள்.. இலக்கியத்தரம் மிகுந்த அற்புதப் பாடலாய் அமைந்திருந்த இப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் நம்மை ஒரு இலக்கிய காலத்திற்குள் கடத்திச் சென்றுவிடுகிறது. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த அனைத்து கீதங்களும் இன்ப நாதங்கள்!!
குறிப்பாக கதையின் நாயகி பத்மினி அவர்களின் முகபாவனைகள், நாட்டியம் என மனக் கண்ணில் இன்றும் நீங்காத பாடலாய் நிலைபெறுகிறது. திரைப்பாடலிலும் இத்தனை இலக்கிய ரசம் பொங்கி வழிய முடியுமென இதோ வாலியின் வரிகள் வரிந்துகட்டிக் கொண்டு வருகின்றன பாருங்கள்!
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்.. இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்.. கூனல் பிறைநெற்றியில் நிலவாட.. அந்த நிலவொளியில் நிழலாட.. அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட.. மாதவிப் பொன்மயிலாள் தோகைவிரித்தாள்.. வண்ண மையிட்ட ..
முதலில் குறிப்பிட்டதைப் போல திரைப்படம் வெளியானபோது, அமோக வெற்றி பெற்றது மாதவிப் பொன்மயிலாள் பாடல்! இப்பாடல் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்றே கவிஞர் கண்ணதாசன் இல்லத்திற்கு ரசிகர்கள் கடிதங்கள் வந்து குவிந்தன. கடிதங்களைப் படித்த கண்ணதாசன் இந்தப் பாடல் நான் எழுதவில்லையே.. தம்பி வாலி எழுதியது! அவற்றையெல்லாம் ஒரு மூட்டைகட்டி வாலியின் வீட்டில் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி தனது உதவியாளரிடம் உத்தரவிட்டதுடன் கவிஞர் வாலிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து இந்தப் பாடலைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார் என்பதும் அத்துடன் தனது பரிசாக ‘ரம்’ எனப்படும் மதுவகை பானம் ஒன்றையும் அனுப்பியதும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மேதாவிலாசத்திற்கு ஒரு சான்று!
பாடல்: மாதவிப் பொன் மயிலாள் திரைப்படம்: இரு மலர்கள் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் ஆண்டு: 1967
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார்முகிலாய் காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய் காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள் வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள் கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட – கலை மானின் இனம் கொடுத்த விழியாட ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ மானின் இனம் கொடுத்த விழியாட – அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட – நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் – நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள் கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள் ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள் தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம் பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம் பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம் பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம் பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம் ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும் ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம் ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம் ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை!கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசைஎன்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!
மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர்சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார்.அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள்.பாடல்கள் அனைத்தும்கவியரசு கண்ணதாசன் அவர்களே!!
தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும், சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்க, தேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை.இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் – இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன.திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் ‘பார்முலா’ ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.
தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. ‘த’ வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும், தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!
இவ்வரிசையில் அமைந்த ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!
ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்..அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..
கட்டித்தங்கம்வெட்டியெடுத்து.. கட்டித்தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்! சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான் கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)
காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..
குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..
ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்? இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
கட்டித்தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்! சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான் கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன். அன்புடன் காவிரிமைந்தன்
அன்றுதொட்டு இன்றுவரை அர்த்தமுள்ள பாடல்கள் மக்கள் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கின்றன.அப்பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் பதிவாகியிருக்கின்றன.கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் கவிஞானி வாலி அவர்களுக்கும் தனித்தனியே நூல்வடிவம் தந்தபின்னர், ஏனைய பல கவிஞர்கள்-திரைப்பாடலாசிரியர்கள் நெஞ்சில் உலா வந்த வண்ணம் உள்ளனர்.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை முதல் புலவர் புலமைப்பித்தன் என நெஞ்சில் குடிகொண்ட பாடல்களை வடித்தெடுத்த படைப்பாளர்களை – கால நிமித்தமாய் அவர்களின் மறக்கவொண்ணாப் பாடல்களைப் பற்றிய பகிர்வுகளை உங்களுடன் பரிமாற விழைகின்றேன்!
இந்த நூலுக்கு பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்று பெயரிட்டுள்ளேன்.இதிலே விடுபட்டுப் போகாத வண்ணம்,தமிழ்கூறும் நல்லுலகம் தந்த சீர்மீகு பாடலாசிரியர்களை பட்டியலிட்டுத்தான் இப்படைப்பைத் துவங்குகிறேன். மேலும் இவர்களால் எழுதப்பெற்று மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பாடல்கள் நாளைய தலைமுறைக்கு சேர்த்தாக வேண்டம் என்கிற வேட்கையும் இந்நூல் வடிவம் பெறக் காரணமாகும்.
உண்மையைச் சொல்வதென்றால், இப்பாடல்கள் எழுதப்பெற்ற திரைப்படங்களைத்தாண்டி, மக்கள் வாழ்வியலோடு கைகோர்த்து கால இடைவெளி வென்று வாழுகின்றன என்பதற்கு சத்திய சாட்சியாக மக்கள் பல்லாயிரம், பல இலட்சம், பல கோடி என பரப்பளவு விரியும்.
சொல்லாட்சி, பொருள், கருத்து, உணர்ச்சி, வாழ்க்கை தத்துவம், என எண்ணிலாத் தளங்களில் இப்பாடல்கள் மேலோங்கி நிற்பதும் அதற்கேற்ற இசை வடிவம் நம்மை இன்னும் நெருங்கச்செய்யவும் பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற பெயருக்கு கட்டியங்கூறும்!
வார்த்தைப் பூக்களாகவும், சில நேரம் புரட்சிக்கு வித்திடவும், வார்த்துத் தந்த கவிஞர் பெருமக்களை ஒருசேரப் போற்றி பாராட்டவும் வணங்கிடவும் கடமைப்பட்டுள்ளேன்! இந்நூல் கவிஞர் பெருமக்கள் பலரையும் உள்ளடக்கமாய் வடிவம் பெறுவதால், அனைத்துப்பாடல்களும் இடம்பெற வழிகளில்லை!
எனினும் இடம்பெற்றுள்ள பாடல்கள் அக்கவிஞர்களின் மேன்மையினை பறைசாற்ற ஏதுவாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குத் திடமாக உண்டு. வெறும் கற்பனைகளைக் காற்றில்பிடித்து பட்டம் விடுபவர்களாக நில்லாமல், தங்கள் தமிழ் ஆற்றலை – இந்தச் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் தந்துவிட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு ஆற்றிய பணிகளால் விளைந்த முத்துக்களிவை என்பதனை முன்மொழிவது என் கடமையாகிறது!
புலவர் புலமைப்பித்தன்
· இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..
திரைப்பாடல் என்றாலும் எல்லோரையும் திரும்ப வைத்த பாடல்! கருத்துப் பெட்டகத்தைத் தன் கவி வண்ணத்தால் புலவர் புலமைப்பித்தன் புனைந்து தந்த பாடல்! மக்கள் திலகத்திற்காக மலர்ந்த பாடலிது – மக்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாடல்! திரையில் இரு வேறு கட்டங்களில் இரு வேறு குரல்களில் இடம்பெற்ற பாடல்! மறைந்த எஸ்.வரலட்சுமி அவர்களின் கம்பீரக்குரலில் தவழ்ந்திடும் தாலாட்டாகவும் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் குழைந்திடும் அன்பின் நீலாம்பரியாய் நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் பிறந்து இந்த பூமியில் என்றும் தவழும் பாட்டு!
பாட்டுடைத்தலைவன் கதாநாயகனாக.. வளர்ந்த பின்னரும் அடம்பிடிப்பதும். அன்னைக் காட்டும் பரிவில்.. மலர்ந்த முகம் காட்டி..கண்ணுறங்கும் காட்சியில்.. புலவர் புலமைப்பித்தனின் கனிந்த வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய ஸ்வரங்களில் இறக்குமதியாக.. தங்கள் குரலால் அதைப் பரிமாறியிருக்கிறார்கள். இதில் கவி விருந்தும் உண்டு! நல்லிசையால் செவி விருந்தும் உண்டு!
தாய் பாடும் பாட்டல்லவா தாலாட்டு! தங்கக் கிண்ணம், வெள்ளித்தட்டு, இவைகளைக் காட்டிலும் மதிப்பிடமுடியாத தாயின் பாசம் பரிணமிக்க.. தன் பிள்ளையின் கொள்ளை அழகை.. கொட்டி அளக்கிறார் பாடலில்..
“நின்றுநிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்..
எழில் நீந்தும் உடலினை காணும்பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும்!”
பொன்மனச் செம்மலுக்கு புகழாரமாய் அமைந்த பாட்டு! பலகோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவனுக்கு –தாயை முதல் கடவுள் என்று வாழ்ந்து காட்டிய தலைமகனுக்கு – அந்த தாயே பாடிய அன்பின் நீராட்டு!
மற்றுமொரு முறை தன் தாய் பாடிய பல்லவியைக் கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கு நீதிகளையும் நெறிகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லிவந்த எம்.ஜி.ஆர். பாடும் பாடலாய்..
இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில் தொட்டிலைக்கட்டிவைத்தேன் அதில் பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை மெல்லெனஇட்டுவைத்தேன் நான்ஆராரோஎன்றுதாலாட்ட இன்னும்ஆராரோவந்துபாராட்ட ம்…ம்…ம்…ம்..
பொதுவாக பெண்மைதான் தாலாட்டுப் பாடும்! பொன்மனச் செம்மலின் இதயம் எவ்வளவு மென்மை வாய்ந்தது என்பதற்கு இந்தப் பாடலில் அவர் முகம் காட்டும் அத்தனை நளினங்களும்.. பாவங்களும்.. கதையின் நாயகியை மட்டும் கண்ணுறங்கச் செய்யவில்லை! நம்மையும்தான்!!
எத்தனையோ ஆசிரியர்கள் எத்தனையோ நாட்களாய் நடத்தினாலும்கூட இத்தனை அருமையாய்.. இத்தனை அழுத்தமாய் நம் இதயங்களில் இடம் பெற வைத்துவிட முடியுமா?
வாழ்க்கைக்கு விளக்கம்! பயணத்திற்கு பாதை! உள்ளத்தில் ஏந்த வேண்டிய இலட்சியம்! சராசரி மனிதர்களுக்காகவே சமைக்கப்பட்ட பாடல்! சரித்திரம் படைக்கவும் நம்மை உசுப்பிவிடும் வரிகள்! எளிய சொற்களால் புரியும் விதத்தினில் கற்பனை கலக்காத கருத்துப் புதையலிது!
கேட்கும் நேரம் கண்ணுறங்கலாம்! கேட்கும்போதே உள்ளம் விழிக்கலாம்! உலகம் முழுவதும் உயர்ந்த பாடல் வரிசயைிலே நிச்சயமாய் இடம் பெற்ற பாடல்! இதன் படைப்பாளர்களை .. கூட்டணியை நாம் போற்றியே பாராட்டுவோம்!
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.