Tag: கவிஞர் காவிரி மைந்தன்

  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்

    சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்

     

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்… கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன

    ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார்.

    வல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம்

    எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது.

    ( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )

    Share
  • வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம்

    காவிரிமைந்தன் வணக்கமுடன் வரையும் மடல். நலம்.. நலமே நாடுகிறேன்!

    வல்லமை இணைய தளத்தோடு இணைந்து நான் நடத்திய போட்டிகள் மூன்று..

    1. என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று நூறு கட்டுரைகள் ஆக.. அவை ஒவ்வொன்றுக்கும் எனது பின்னூட்டம் சேர்த்து.. இந்தப் புத்தகத்தை..

    01.07.2017ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.


    01.07.2018ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.

    2. மனதில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியை கமலம் ஷங்கர் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் சில பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று ஐம்பது கட்டுரைகள் ஆக.. எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு உருவான இந்த நூல் துபாயில் 12.01.2018 அன்று வெளியிடப்பட்டது.

    3. கர்மவீரர் காமராஜர் – கட்டுரைகள் பெறப்பட்டு தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் சில கட்டுரைகள் பெற்று 45 கட்டுரைகள் ஆக.. உருவான இந்த நூல் துபாயில் 13.07.2018 அன்று வெளியிடப்பட இருக்கிறது.

    வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நமது வல்லமை இணையதள நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    மூன்று புத்தகங்களும் இணைப்பில் உண்டு..

    உங்கள் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றி உடையவனாக ஆவேன்.

    கூடிய விரைவில் உங்களோடு இணைந்து மீண்டும் வல்லமையில் வலம் வருவேன்…

    https://drive.google.com/file/d/1NwDBJXrFXeJ6DUT03MMPQYUSdqZZ9Xsg/view

    https://drive.google.com/file/d/1ALNzy9SvabIpSNkqlh2EpaoIM-sJNTFJ/view

     

    அன்புடன்…
    காவிரிமைந்தன்
    துபாய்

    Share
  • கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி முடிவுகள்

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம் . நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டியின்  நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தீர்ப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

    kamarajar

    தமிழருவி மணியன்

    வணக்கம். வளர்க நலம்.

    பெருந்தலைவர் குறித்த கட்டுரைகளின் முடிவுகளை அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்…

    முதல் பரிசு :

    1. ச. சசிகுமார் – பார்க்கட்டும்… ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!
    2. ஸ்வேதா மீரா கோபால் – கர்மவீரர் காமராசர்!
    3. ஞா. கலையரசிகர்ம வீரர் காமராசர்!

    இரண்டாம் பரிசு :

    1. இன்னம்பூரான் – “பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!
    2. வில்லவன் கோதை – “தமிழர்தம் கம்பீரம்” – கர்மவீரர் காமராசர்!
    3. கீதா மதிவாணன்- பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

    மூன்றாம் பரிசு :

    1. தஞ்சை வெ.கோபாலன் – கர்மவீரர் காமராஜர்
    2. ஜெயஸ்ரீ ஷங்கர் – “வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்” – கர்மவீரர் காமராசர்!
    3. சரஸ்வதி ராசேந்திரன் – ”கர்மவீரர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை நெஞ்சில் நிறுத்தி கட்டுரைப் போட்டிகள் நடத்திச் சிறப்பிக்கும் “வல்லமை” இணைய இதழுக்கும் அதற்குத் துணை நின்ற  கவிஞர் திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    அன்புடன்,
    தமிழருவி மணியன்

     

    போட்டியை சிறப்பாக நடத்திக்கொடுத்திருக்கும் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கும், கவிஞர் திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து இணைந்திருப்போம். பரிசு பெற்றவர்கள் தங்களுடைய உள்நாட்டு முகவரியை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்து பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! – புலவர் புலமைப்பித்தன்

    கவிஞர் காவிரிமைந்தன்

    நாளை உலகை ஆளவேண்டும்

    akav

    கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில்!!

    எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது!

    உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்..

    நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே!

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
    புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

    கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
    கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
    வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    உழைக்கும் கரங்களே

    தன்னானே தானேனானான நானானானா
    தானேனானே னனானே

    ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
    ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
    போராடும் காலம் எல்லாம் போனதம்மா
    எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
    நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
    விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
    ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    உழைக்கும் கரங்களே

    ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா

    கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
    நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
    தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
    நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
    சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
    சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
    வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
    புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

    ஏருழவன் சேற்றில் கை வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள்!

    அவர்தம் ஏழ்மைநிலை நீங்கி.. உருவாக வேண்டிய சமத்துவ சமுதாயம் புலவரின் பொதுவுடைமை நோக்கம் எல்லாம் பாடலின் வரிகளாய்!!

    புரட்சிக்கு வித்திடும் போராட்டங்கள்! அப் போராட்டங்கள் உருவாகக் காரணம் ஏற்றத்தாழ்வுகள்!!
    கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் கூட்டுறவு சங்கங்கள்!!

    நாளைய விடியல் நம்பிக்கையின் வெளிச்சத்தோடு வெளிவரட்டும்!!

    https://www.youtube.com/watch?v=_h8lvYbu880

    Share
  • இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

    கவிஞர் காவிரிமைந்தன்

    abdul
    இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!
    இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே!
    வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா?
    ”சொல்’ எனும் சொல்லே உருதுமொழியில் ‘கலாம்’ ஆனதைச் சொல்லவா?
    காலம் நமக்குத் தந்த கொடைதான் ‘அப்துல் கலாம்’ அல்லவா?
    வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய் உழைத்தவரல்லவா?
    உலகம் போற்றும் உன்னதத் தலைவர்கள் எவரும் போற்றும் புகழ்மனிதர்!
    மாணவ மாணவியர் மத்தியில் மட்டுமே – தன் வாழ்நாளைக் கழித்தவர்!
    நாளைய இந்தியா வல்லரசாக நமக்கெல்லாம் கனவினைக் கொடுத்தவர்!
    ஏழையும்கூட வாழ்வில் உயர்ந்திட முடியும் என்று வாழ்ந்துகாட்டியவர்!
    எளிமை பணிவு இரண்டையும் கொண்டே ஏற்ற பதவியை அலங்கரித்தார்!
    ஏவுகணையின் நாயகன் இவரென்று இந்தியா புகழ்ந்துரைக்கும்!
    பொக்ரைன் குண்டுகள் வெடித்தபோது புத்தரே சிரித்தாரன்றோ?
    போலியோ குழந்தைகள் அணியும்வண்ணம் குறையெடைஉலோகம் கண்டார்!
    அடைந்திட்ட மகிழ்ச்சியின் உச்சமிதுவென உள்ளம் நெகிழ்ந்து சொன்னார்!
    ‘நம்பிக்கை’ என்கிற வார்த்தைக்கே நங்கூரமிட்டுக் கொடுத்தார்!
    ஒட்டுமொத்த இந்தியாவும் வணங்கும் ‘தலைமகன்’!
    ஒருவர்கூட புறம்கூறாத உத்தமமான மனிதன்!
    அறிவுச்செல்வம் பெற்றுவிட்டால் அகிலம் நமதென்றார்!
    ஆற்றல் பலவும் இளைஞரிடம் அதையே தினம் வளர்த்தார்!
    போற்றுதலுக்குரிய ஆசிரியப் பணிக்கு மீண்டும் திரும்பிவந்தார்!
    புகழ்வதற்கு புதிதாய் என்னிடம் வார்த்தைகளில்லை!
    மண்ணில் தோன்றிய மனிதர்கள் மடிந்துதான் தீரவேண்டும்!
    மக்கள் மனதில் ‘கலாம்’ என்பதற்கு மரணம் என்றுமில்லை!!
    கண்ணீருடன்..
    காவிரிமைந்தன்.. அபுதாபி..

    Share
  • கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி!

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி

    kamarajar

    வணக்கம். அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும்.

    நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்…. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்! தன்னிகரில்லாப் பெருந்தலைவர்! ஈடில்லா உழைப்பாளி! மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே தியாக வாழ்வேற்று மறைந்த மா மனிதர் இவர் என்பதை இவரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் சாட்சி சொன்னது!

    அந்த நன்றிப் பெருக்கோடு உளம் கனிந்து அத்திருமகனாரை நினைவில் நிறுத்தும் பொருட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கர்மவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும்.

    இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்.

    15.07.2015, காமராசர் பிறந்த இந்த நன்னாளில் இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, பரிசுகளை வெல்ல அழைக்கிறோம்.

    உங்கள் கட்டுரையை யூனிகோடில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, 15.08.2015க்குள் vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

    பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்

    இரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்! (மொத்தப் பரிசுகள் – ரூ.6 ஆயிரம்)

    மேற்கண்ட பரிசுகளைத் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலித்து, தகுதியுள்ள படைப்புகள் நூல் வடிவம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்!

    ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம்; எந்தத் தடையும் இல்லை..

    கட்டுரைப் போட்டி முடிவுகளைப் பொறுத்தவரை, நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    போட்டியில் அனைவரும் பங்கேற்று, பரிசுகளை வெல்லுமாறு அன்போடு அழைக்கிறோம். வாழ்த்துகள் நண்பர்களே.

    Share
  • மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

    கவிஞர் காவிரிமைந்தன்

    ams

    ஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்தி வந்த கலைமகளும்
    எம்.எஸ்.வி. எனும் மகனை இத்தரணிக்குத் தந்ததனால்
    எங்களைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி. என்பதுவும்..
    இனியதொரு தமிழ்ச் சொல்லே..

    உலகில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள்.. இருப்பினும் amas
    ஒரு மாபெரும் கவிஞனுக்கு சிலை அமைத்த பெருமை
    எங்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களையே சாரும்.

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் – பம்மல் – 1993 முதல் இன்று அதிகாலை வரை
    எங்கள் அமைப்போடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடிய அன்பிற்கினியவர்..
    கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவிட முழுமையாய் தன்னை அர்ப்பணித்தவர்..

    பணிவு என்பதற்கு இலக்கணம் வகுத்து சங்கீதத்துடன் எனக்கு கொஞ்சம் இங்கிதமும் தெரியும்
    என்று பழகும் அனைவரையும் பண்போடு அரவணைத்து பாசம் பொழிந்து உபசரித்து
    உள்ளம் திறந்து உரையாடி மகிழ்ந்த அந்த குழந்தைக்கு வயது 87ஆம்…

    மண்ணிலே வந்து மக்கள் மனம் விரும்பும் இசையை தன் வாழ்நாள் எல்லாம் வழங்கி
    நம் நெஞ்சில் நிறைந்த அற்புத கானங்கள் பலவற்றிற்கும் ஜீவன் தந்து..
    இசையால் நம்மை ஆளும் மன்னர் இவராகி.. இன்று இம் மண்ணைவிட்டுப் பிரிந்தாரே..
    எங்கள் எம்.எஸ்.வி. பக்தி.. தாய் பற்று.. உழைப்பு, எனப் பல உயர் குணங்கள்
    ஒன்றெனத் திகழ்ந்த எம்.எஸ்.வி. கிருஷ்ண கானம் முதல் கேட்கும் கானங்கள்
    பெரும்பாலும் உம் பெயர் சொல்லுமே.. உலகம் உள்ளவரை காற்றில் தவழ்ந்திருக்கும்
    உன் பாட்டு மண்டலத்தில் இவ்வுலகம் கேட்டு மகிழ்ந்து துயில் கொள்ளுமே

    வாழ் நாளெல்லாம் கவியரசர் மீது அளவிலாப் பற்று வைத்து .. ams1
    இன்று அவர் இருக்கும் இடம்தேடிச் செல்கிறீரே..
    தமிழ்த் திரையின் ராஜ சிம்மாசனம் உமதென்பது
    காலம் எழுதி வைத்திருக்கும் கணக்கு..

    எங்கள் பிறவியில் உம்மோடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடினோம் என்பது
    நீங்கள் எமக்களித்த பெரும் பேறு.. உயிருள்ளவரை நன்றியுடன் உங்கள் புகழ் சொல்லுவோம்..

    கண்ணீருடன்….

     

     

     

    Share
  • அன்னையர் தின வாழ்த்துகள்…

    கவிஞர் காவிரி மைந்தன்

    amma

    அன்னைக்கு நிகரான சொல்கூட அகிலத்தில் இல்லை…

    அவள் அன்புக்கு ஈடாக பூமிதனில் பொருளொன்றுமில்லை

    கண்ணுக்கு நிகராக நம்மைக் காப்பதற்கு – கடவுள்

    அன்னையை நமக்களித்தான் உண்மைதானே!

    என்றைக்கும் அவளிருப்பாள் தாயாக… நாம்

    அவள் மடிதனிலே கண்ணுறங்கும் சேயாக..

    உண்ணவும் உறங்கவும் வைத்து நிதம்.. தன்

    ஒருகோடி கனவுகளை தான் சுமப்பாள்!

    சிறுதுன்பம் நமக்கென்றால் பொறுக்கமாட்டாள்

    வரும்துயரம் யாவையும் தான் ஏற்பாள்

    பசியென்று நாம் உணரா வைத்திருப்பாள்…

    பகலிரவு அறியாமல் உழைத்திருப்பாள்

    உயிருக்குள் உயிர் சுமந்த கோவிலவள்

    ஒளியூட்டும் தீபம் நம் வாழ்வில் அவள்…annai

    அன்னையைப் போற்றி நிதம் வழிபடுங்கள்…

    அவள் பொற்பாதம் தொட்டு வணங்கிடுங்கள்..

    உன்னை நான் ஈன்றெடுக்க என்ன தவம் செய்தேன்

    என்று அவள் உள்ளம் தினம் பூரிக்கட்டும்!

    அம்மா.. அம்மா.. அழைக்கின்றேன்… உன்

    ஆசை முகம் பார்க்கத் துடிக்கின்றேன்…

    கண்ணெதிரே இருந்தவரை காத்திருந்தேன்…

    விண்ணுலகம் சென்று விட்டாய் என் செய்ய?

    தாயென்னும் தெய்வத்தைத் தரணியிலே..

    தந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்!!

    அன்னையர் தின வாழ்த்துகள்…
    (மு. இரவிச்சந்திரன்)
    — என்னும்
    கவிஞர் காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
    பம்மல், சென்னை 600 075
    தற்போது – அபுதாபி – அமீரகம்
    00971 50 2519693
    00971 50 4497052
    kaviri2015@gmail.com
    www.thamizhnadhi.com

    Share
  • உலகம் பிறந்தது எனக்காக

    கவிஞர் காவிரிமைந்தன்

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் மகாகவி பாரதி. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் கணியன் பூங்குன்றனார். மானுடக்கவிஞன் கண்ணதாசன் பார்வையின் விசாலத்தைப் பாருங்கள்! உலகம் பிறந்தது எனக்காக என்கிறார்.

    akaviri

    1997ல் அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் சென்னை ராணி சீதை மன்றத்தில் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கிய மையம் (பம்மல்) சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் இனியதோர் பட்டிமன்றம் முனைவர் சரசுவதி ராமனாதன் தலைமையில். இலக்கியச்சுடர் த. ராமலிங்கம் கண்ணதாசன் பாடல்களின் நிலைத்தப் புகழுக்குப் பெரிதும் காரணம் சோக ராகங்களே என்கிற அணியின் தலைவராக பங்கேற்றார். அவர்தம் உரையில் .. பாசம் திரைப்படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும்போது பாடிடும் பாடலாக..

    உலகம் பிறந்தது எனக்காக..
    ஓடும் நதிகளும் எனக்காக..
    மலர்கள் மலர்வதும் எனக்காக.. அன்னை
    மடியை விரித்தாள் எனக்காக..
    இந்த வரிகளின் ஆழத்தைக் குறிப்பாக வழக்கறிஞரான இராமலிங்கம் அவர்கள் அழுத்தம் திருத்தமாய்க் குறிப்பிட்டபோது அரங்கமே அதிர்ந்தது.
    எல்லாம் எனக்குள் இருந்தாலும்
    என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோவில்
    அவளே என்றும் என் தெய்வம்

    akavi1
    என தாயின் தரிசனம் தருகின்றார். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் சலிப்புற்று எனக்கென்று என்ன உள்ளது? நான் யாருக்காக வாழ்கிறேன் என்றெல்லாம் மனம் பேதலிப்பதுண்டு. கவிஞரின் பாடல் வரிகளை நோக்குங்கள்.. Positive Approach என்பார்களே.. முழுக்க முழுக்க.. நம்பிக்கை ஊட்டும் உற்சாக வரிகள்.. மானிட வர்க்கத்திற்கு சாசனம் வரைந்தளித்தவனே.. காலத்தை வென்ற உன் காவிய வரிகளில் களிப்படைகிறோம். கவலைகளை நாங்கள் மறக்கிறோம்..

    பாடல்: உலகம் பிறந்தது எனக்காக
    திரைப்படம்: பாசம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி
    ஆண்டு: 1961

    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
    இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
    குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
    குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    https://www.youtube.com/watch?v=Wu_2npFoJWg

    Share
  • பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..

    கவிஞர் காவிரி மைந்தன்

    akv
    akv1உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று பணிக்க.. மெல்லிசை மன்னரும் தன் திறம் முழுக்கச் செலுத்தி ஒவ்வொரு பாடலாக உருவாக்கித் தருகிறார். காலை முதல் மாலைவரை நடந்திடும் அப்பணியை மாலையிலே வந்து கேட்டு கருத்து வழங்கிய மக்கள் திலகம்.. ஒவ்வொரு பாடலையும்.. எதிர்பார்த்த அளவு சரியாக வரவில்லை.. என்று சொல்ல, மெல்லிசை மன்னரோ.. சரி.. அப்படியென்றால் நாளைக்கு இதே பாடலுக்கு வேறு மெட்டுக்கள் அமைத்துக் காட்டுகிறேன் என்பாராம். எம்.ஜி.ஆரோ.. சரி.. விடுங்க.. அடுத்த பாடலையாவது இன்னும் நல்லா பண்ணுங்க என்று விடைபெறுவாராம்.

    அப்படியே படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் தினசரி கருத்தின்படி பரவாயில்லைakv2 ரகமாகவே அமைந்திட மெல்லிசை மன்னருக்கு.. மனம் திருப்தியாக இல்லை.. எனவே கடைசிப் பாடலை இசையமைத்துவிட்டு.. இதோ பாருங்க.. இந்தப் பாடலும் உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால்.. நான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் வேறொரு இசையமைப்பாளரை வைத்து இசை அமைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல.. கடைசிப்பாடலையும் கேட்டபின் பொன்மனச் செம்மல் புகன்றிட்ட பாராட்டுகள் எத்தனை தெரியுமா? எம்.எஸ்.வி.. உங்கள் இசையை வேறு எவரும் குறை சொல்லக் கூடாது.. நான் மட்டும்தான் அந்த உரிமை பெற்றவன்.. மேலும் ஒவ்வொரு பாடலையும் நீங்கள் வித்தியாசமான முயற்சி செய்து புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என்றார். அது தவிர.. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பாடல்கள் அனைத்தும் காலங்களை வென்று நிற்கும் கானங்களாகும் என்றே அன்றே உறுதிபட தெரிவித்து உள்ளத்து மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்கு மேலே பல மடங்கு மெல்லிசை மன்னருக்கு வழங்கிய வள்ளலின் இசை ரசனை என்றைக்காவது சோடை போனதுண்டா?

    வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என்கிற முதல் பாடல் முதல் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் தமிழ்பேசும் மக்கள் அனைவரின் விருப்பப் பாடல்களானதை மறுக்க முடியுமா? இதோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ .. வாலிபக் கவிஞர் வாலியின் கைவண்ணம்.. மக்கள் திலகத்தோடு தாய்லாந்து நாட்டு கதாநாயகி இணைசேர.. கற்பனை வானம் திறக்கிறது.. கன்னித்தமிழ் மணக்கிறது.. இன்பத்தேன் வழிகிறது.. இதயம்வரை நனைகிறது.. அதற்கு முன்னரோ.. பின்னரோ.. வந்த எந்த இசையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னரே என்று நிரூபிக்கும் தரமான இசை.. மேலைநாட்டு சங்கீதத்தை தன் கற்பனையாலே கேள்வி ஞானத்தாலே மீட்டெடுத்துத் தருகின்ற வித்தைக்காரர்.. இதைவிட சிறந்ததொரு இசை உலகம் சுற்றும் வாலிபனுக்கு கிடைத்திடுமா?

    டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் அமைந்த இன்னிசை ஸ்வரமாலை..
    இதோ.. மெல்லப் பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ……………

    திரைப்படம்:உலகம் சுற்றும் வாலிபன்.
    பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    வரிகள்: கவிஞர் வாலி

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ
    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?
    பொன்னின் நிறம் பிள்ளை மனம்
    வள்ளல் குணம் யாரோ
    மன்னன் எனும் பேரில் வரும்
    தேவன் மகன் நீயோ (பொன்னின்)

    தத்தை போலத் தாவும் பாவை
    பாதம் நோகும் என்று
    மெத்தை போல பூவைத் தூவும்
    வாடைக் காற்றும் உண்டு
    வண்ணச்சோலை வானம் பூமி
    யாவும் இன்பம் இங்கு
    இந்தக் கோலம் நாளும் காண
    நானும் நீயும் பங்கு
    கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
    நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ (பச்சை)

    பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
    நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
    சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
    கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
    பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
    கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா (பச்சை)
    பல்லவி முதல் சரணங்கள் வரை பாடலில் இனிமை..இளமை.. புதுமை!!


    கவிஞர் காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
    பம்மல், சென்னை 600 075
    தற்போது – அபுதாபி – அமீரகம்
    00971 50 2519693
    00971 50 4497052
    kaviri2015@gmail.com
    www.thamizhnadhi.com

    Share
  • ’மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டி முடிவுகள்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களே!

    வணக்கம். நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டியின் முடிவுகளை திருமதி கமலம் சங்கர் வெளியிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று பரிசுகள் என்ற வகையில் மட்டும் தம் முடிவை அறிவிக்காமல், தாம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்ததன் காரணங்களோடு, போட்டியில் பங்கு பெற்ற அனைவரின் கட்டுரைகளையும், ஆழ்ந்து வாசித்து, அதற்கான தம் கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு படைப்பாளியின் மன நிலையை உணர்ந்து அவர்தம் முடிவுகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். அவருக்கும், போட்டியை நல்ல முறையில் நடத்துவதற்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன் மற்றும் திரு சசிகுமார் அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள். நன்றி நண்பர்களே. இணைந்திருங்கள்! தொடர்ந்து பல வெற்றிகளைக் காண்போம்!

    போட்டிக்கான படைப்புகள் அனைத்தையும் இங்கு காணலாம்.

    mgr-comp

    முனைவர் கமலம் சங்கர்

    வல்லமை மின்னிதழ் நடத்திய ‘‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்” தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் வருமாறு:

    முதற் பரிசுகள் :
    1. சுடர்மதி மலர்வேந்தன்
    2. ஞா.கலையரசி
    3. ஜியாவுத்தீன்

    இரண்டாம் பரிசுகள்:
    1. வில்லவன் கோதை
    2. எஸ்.சசிகலா
    மூன்றாம் பரிசுகள்:
    1. ஜெயஸ்ரீ சங்கர்
    2. அதிரை இளைய சாகுல்
    3. ஷேக் சிந்தா மதார்

    சிறப்புக் குறிப்பு:
    முதலாம் பரிசுகள் வரிசையில்..

    1. சுடர்மதி மலர்வேந்தன் :
    ‘தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப்பற்றியதோர் கட்டுரை! கையின் கட்டை விரலாய்ச் சிறப்புப் பெற்றார்!

    கல்லுக்குள் உளி செலுத்திச் சிற்பத்தைப் பெறவேண்டும். ஆனால் இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது என்பன போன்ற சித்திர வரிகள் மக்கள் திலகம் பற்றிய செய்திகளாகக் கோர்க்கப்பட்ட நேர்த்தி சிறப்பானது.

    விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்.. இப்படி முதல்தரமான தலைப்புகள் பொருத்தம் நிறைந்த கருத்துச் செறிவுகளுடன் கட்டுரையை முதலிடத்தில் வைத்துள்ளார்.

    2. ஞா.கலையரசி

    காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் – துவக்கம் இப்படி!

    சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1972, 1977,1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது போன்ற ரசமான வெளிப்பாட்டுடன் தொடர்கிறது கட்டுரை!

    மிகுதியான கருத்துக்கள், பொருத்தமான ஆதாரங்கள் வரிசைக்கிரமமாக, எளிய தமிழில் உயிரோட்டத்துடன கூடிய படைப்பு.. முதலிடத்தில் ஒன்றாக!!

    3. ஜியாவுத்தீன்..

    திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது என வசீகரமான தொடங்கும் கட்டுரை,

    ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம் என ஆணித்தரமான, நயமான வரிகளுடன் தொடர்கிறது!

    எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என முடிகின்ற கட்டுரை தொடரோட்டத்தில் முதலாம் இடத்தில்!!

    இரண்டாம் பரிசுகள் வரிசையில்:

    1. வில்லவன் கோதை :

    எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை என.. அழகான வெளிப்பாடு!

    தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்! என்பன போல் பல சத்தான வரிகள் சுமந்தபடி, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவர் பேசப்படுவதான முத்துப் போன்ற முடிவுடன் அமையும் கட்டுரை, எளிய ஆழமான நடைத்தெளிவுடன் மக்கள் திலகத்தை ஓவியமாக்கி இரண்டாம் இடத்தில்!

    2. எஸ்.சசிகலா:

    “இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!

    ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!

    ‘நாடகக் காட்சி’ போன்ற விளக்கத்துடனும் தெளிவடனும் உள்ள கட்டுரை, இரண்டாம் இடத்தில்!

    மூன்றாம் பரிசுகள்:

    1. ஜெயஸ்ரீ சங்கர் :

    மதுரையில் மக்கள் திலகத்தைக் கண்ட அனுபவம் பரவசத்துடன், ஆரம்பமாகிறது கட்டுரை.

    தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், அரசியல் சூழ்ச்சி வலையிலிருந்து வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும், நல்ல மனமும் மட்டுமே துணையாக இருந்தன. தமிழ் நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள் என்பன போல் உண்மைகளின் வெளிப்பாடு, அழகு ததும்ப!

    அந்தக் கீர்த்தியை ‘சத்திய உலகின் பிரதிநிதி’ என்றே சொல்ல வேண்டும் என உறுதி கூறும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

    2. அதிரை இளைய சாகுல்:

    நடமாடும் ஒரு மனிதாபிமானம். வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர்! கருணைக் கல்வெட்டு! இரக்க இதிகாசம்! தவறுகளைச் சரியாக்க இறைவன் எய்நத பிரம்மாஸ்திரம். சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு! அட்டசய பாத்திரம்!

    தென்னகத்து ராஜதந்திரி! மனிதநேய மாமன்றம்.. இப்படியான தொடக்கத்தில் அநேகமாக கட்டுரையாக்கிய சாரம்சம் அத்தனையும்!

    தனித்தன்மைகள் பல – தனிப்பட்டவர் அனுபவம் பல கோர்த்து, தமிழ் அழகு, முந்தி நிற்கும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

    3. ஷேக் சிந்தா மதார்:

    சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும். தாய்க்குலத்தின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்திரங்கள் என்பன போல பல உண்மை வாசகங்கள்!

    திரைப்படங்களின் பெயர்கள் பக்கத்தலைப்புக்களாக அமைய, மிகப் பொருந்தும் வகையில் கருத்துக்கள் என இருப்பது ரசிக்கத்தக்க வெளிப்பாட்டு முறையிலான கட்டுரை மூன்றாம் இடத்தில்!!

    கமலம் சங்கர்
    சென்னை
    12.04.2015

    பரிசு ஒன்று மட்டும் தகுதியைத் தீர்மானிப்பதல்ல.. பாராட்டி ரசிப்பதற்குரிய பல அம்சங்கள் எல்லாக் கட்டுரைகளிலும்! சுவைக்கலாமே!!

    1. சுரேஜுமீ – தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர் – அழகான வெளிப்பாடு.. சுய அனுபவமே உயிர்நாடியாக மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கின்ற உண்மை பகர்கின்ற படைப்புக்குப் பாராட்டுக்கள்!

    2. ஆகிரா – அவர் பெயரைக் கேட்டால் மயங்காத மனம் யாவும் மயங்கும். பொழுதுபோக்கு அம்சத்துடன் அறிவுரை கூறிய திரைப்படங்கள்! மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க அடிப்படை ரகசியம் எனக்கூறுவதெல்லாம் சிறப்பு! பட்டியல்களைத் தவிர்த்திருக்கலாம்! முயற்சிக்குப் பாராட்டு!

    3. சி.எஸ்.குமார் – மக்கள் தந்த விருது மக்கள் திலகம்! எம்.ஜி.ஆர் – ஒரு சகாப்தம்! சாதனையின் சிகரம்! திரை உலகின் சரித்திரம் என்பன போல் வலிமை பொருந்திய வார்த்தைகள் இருந்தாலும் 168 வார்த்தைகள் மட்டுமே.. போதாமல் போன கட்டுரை! முயற்சி தொடர்க!

    4. சக்தி சக்திதாசன் – 9, 16 வயது அனுபவங்கள் பேச – பாடல்களை வரிசைப்படுத்திய கவிதையுடன் – மாட்டுக்கார வேலனாம் மக்கள் மனங்களை உழுதாயே! என்பது போல – நம் நாடு என் இதயவீணை பாடிய உள்ளமே உன் மக்கள் எப்போதும் குடியிருந்த கோயில் என எத்தனை அழகுகள்! 587 வார்த்தைகளாகக் குறைந்திருக்க வேண்டாடம்! தொடரட்டும் முயற்சி!

    5. சித்தார் கோட்டை நூர் மணாளன் : ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சாந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது. மாநிலத்தில் மானிடராய்ப் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால் .. மறைந்த பின்னும் மக்கள் மனத்தைவிட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர் என்பன போன்ற வரிகள் பாராட்டுக்கு உரியவை! 566 வார்த்தைகள் மட்டும் ஏனோ?

    6. ஆர்.எஸ்.கலா – கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடையாக உடுத்திய கொடை வள்ளல்! இறந்தும் இறவா வரம் பெற்றவர்! நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர் முன் அதில்வரும் பலகாட்சிகளுக்கு நிஜத்தில் உயிர்கொடுத்துவிட்டார் பலர் வியக்கும் வண்ணம்! என்பன போல் பல வலிமையான வரிகள். 181 வார்த்தைகள் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

    7. வெ.சந்திரமணி – மக்கள் திலகத்தின் குடும்ப வரலாறும் அரசியல் வரலாறும் காட்டும் சுருக்கமான கட்டுரை, 355 வார்த்தைகளில்.. முயற்சி தொடர்ந்திருக்கலாம்.

    8. நர்கீஸ் ஜியா: எவரெவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்துகாட்டிய நேர்த்தி! படிப்பதைவிடப் பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து.. அதிலும்படிப்பறிவில்லாத பாமர மக்களையும் மனதில் கொண்டு.. என்பன போல்பல உறுதியான வரிகள் கட்டுரையில்.. பாராட்டுக்கள்!

    9. திருக்குவளை மீ.லதா: பூமிதனில் ஒளிரும் தீபங்களாய் இருப்பவர். ஆங்கிலப் பத்திரிக்கைக் குறிப்பு இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமான்களாக இருவரைச் சுட்டிக்காட்டியது. ஒருவர் ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பன போல உண்மை வரிகள் இடம்பெற்றுள்ள கட்டுரை. 480 வார்த்தைகள் எனச் சுருக்கியிருக்க வேண்டாமே. முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

    10. எஸ்.பழனிச்சாமி – பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். பாடல் சொல்லும் அர்த்தத்திற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார். கதாபாத்திரங்கள் தத்தம் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது! இப்படிப் பல ஆணிவேர் வரிகள். கட்டுரையின் அளவு 877 வார்த்தைகளுக்குள் 367 மக்கள் திலகத்தின் பேட்டியாகவே அமைந்துவிட்டதே! முயற்சிக்குப் பாராட்டு!

    11. சுமதி ரவிச்சந்திரன்: மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவர், தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என மூன்றெழுத்தில் ஆரம்பமாகும் கட்டுரை. 22 பட்டங்கள்.. யார் யார் வழங்கியது என்னும் செய்திகளோடு சிறப்புப் பெறுகிறது! அரசியல் பாதையும் உண்டு! பாராட்டுக்கள்!

    12. கலைவாணன் – தாயன்பு, வில்லனையும் திருந்தவைக்கும் பண்பு.. குடித்தலும் புகைத்தலும் தவறு என அழுத்தந்திருத்தமாய் போதித்து, நிஜவாழ்விலும் முன்னுதாரணம்.. ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு வழங்கியது எனச் சொல்லும்போது மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா எனக் கேட்டுக்கேட்டு வெளிப்பாட்டுநிலையில் கட்டுரை அழகு ததும்ப படைக்கப்பட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையையும் நன்கு விளக்கியிருக்கலாம்! முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

    13. மீனாட்சி நாகப்பன்: திரையிசைப்பாடல்களும் அதற்குப் பொருந்திய மக்கள்திலகத்தின் நிலைவிளக்கமும் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சொல்லப்பட வேண்டியவை சொல்லப்படாமலேயே 487 சொற்களில் சுருக்கப்பட்ட கட்டுரை.. முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

    14. ஜெயராம சர்மா: “இரக்கம் அவருள் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம் கெண்டார்” என்று காரணங்கள் தொடர்கின்றன! அவர்கள் படங்களில் சமூகத் தளைகளை மீறித் தனிமனித மேல் நிலைப்பாட்டைப் பெறமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகவே பதிய வைக்கப் பெற்றது! என்பன போல் உறுதியான கருத்துக்கள் பல! பாராட்டுக்கள்!

    15. தஞ்சை வெ.கோபாலன் – பள்ளி மாணவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் தோளைத்தொட்டுப் பேசியதும் – வளர்ந்தபின் எளிமை என்னும் அவரது உண்மை முகம் உணர்ந்ததும் எனச் சுய அனுபவங்கள் சுவையாக எளிய தமிழில்! பாராட்டுக்கள்!

    16. சரஸ்வதி ராஜேந்திரன் – பகைவனுக்குக் கூட அவர் கருணை காட்டியவர். உடலல் நிலை குறித்து .. கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும்! ‘மூன்றெழுத்து முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே’ அதுதான் அவர்தம் வெற்றி! வெகு பொருத்தமான முத்தாய்ப்பு! 405 வார்த்தைகள் மட்டுமே எழுதாமல் இன்னும் விரித்திருக்கலாம்! நல்ல முயற்சி!

    17. முனைவர் இதயகீதம் இராமானுஜம் – மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனிதநேயத்தையும் மங்கலப் பண்புகளையும் மக்கள் மனதில் விதைத்தார். பொருந்திய கருத்துக்கள் உணர்ச்சியோட்டத்துடன் சேர்ந்திருந்தால் சிறப்பு மிகுந்திருக்கும்! பாராட்டுக்கள் முயற்சிக்கு!

    18. புவனா – மும்பை: எம்.ஜி.ஆர் என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் உயிர்கள் ஏராளம். சிந்தனையே சொல்லானது. சொல்லே செயலானது. அந்தச்செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார். இப்படிப் பல வரிகள் உள்ளம் பதிக்கத் தக்கவை. பாராட்டுக்கள்!

    19. செள.செல்வகுமார் – மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி (இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும்) அவரது படங்களைக் காண்பதிலும் பாடல்களைக் கேட்பதிலும் உள்ளது. வலிய ஓடோடிச் சென்று உதவிகள் புரிந்தது.. அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தில் தனிப்பாணி எனப் பல அனுபவ வரிகள்! பலரின் அனுபவ வரிகளாகின்றன! பாராட்டுக்கள்!

    20. கொ.அரங்கநாதன் : வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம்! எண்ணற்ற உதவிகள்..அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செய்யப்பட்டதே எம்.ஜி.ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு! பாராட்டத்தக்க தொடர்கள் பலப்பல!

    21. மணிமுத்து – பிராசாரத்திற்கே வராமல் முதல்வர் ஆன மாமனிதர்.. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், முடிந்த பின்னும் என் பேச்சிருக்கும்” என்று உலகிற்கு வாழும்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார் என்ற உறுதியான வரிகள் கட்டுரைக்குப் பொலிவு! ஈனதர’ 353 வார்த்தைகள் மட்டும் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

    கமலம் சங்கர்
    சென்னை
    12.04.2015

    கவிஞர் காவிரி மைந்தன்

    amgதனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!

    இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

    எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த எம்.சி.ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மனிதரைப் பற்றி ..அன்பு உள்ளங்களே.. உங்கள் பதிவுகளை கட்டுரை வடிவில் வரவேற்றோம்.

    எமது வேண்டுகோளை இனிதே ஏற்று வழக்கம்போல் வல்லமை மின்னிதழ் நேர்த்தியாக கட்டுரைப் போட்டி நடத்திட ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவினர்க்கு நன்றிகளும், ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை அனுப்பி வைத்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    நன்றிகளுடன்
    காவிரிமைந்தன்

    இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

    தங்களின் எழுதுகோல்களை சாய்த்து தங்களின் எழுத்துக்களையும், மக்கள் திலகத்தின் பெரும் புகழையும் மேலும் தலை நிமிர்த்தி, போட்டியில் வெற்றி கண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    நடுவர்களுக்கும், இப்போட்டியை சிறப்பாக நடத்தித் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

    இந்த போட்டியை நடத்துதற்கான அத்தனை முயற்சிகளையும், வெகு நேர்த்தியாக செய்து, சிறப்புற நிகழ்த்திய சகோதரர், திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கு, என் கைப்பற்றி மற்றுமொரு முறை MGR எனும் பேராளுமையை தரிசிக்க அழைத்து சென்றதற்கு எனது பிரத்தியேக நன்றி…

    என்றும் அன்புடன்
    உங்கள்
    ச.சசிகுமார்
    துபாய்

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு

    மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்ற தலைப்பில் தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டியை அவரது பிறந்த நாளில் அறிவித்திருந்தோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வருகிறீர்கள்.

    MGR_midday_meal

    கையால் எழுதி ஸ்கேன் செய்தும் வெவ்வேறு எழுத்துருவிலும் சிற்சில கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருங்குறியில் தட்டி எழுதப்பெற்ற படைப்புகளை மட்டுமே போட்டிக்கு ஏற்க இயலும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

    சில கட்டுரைகள் மிக நீளமாகவும் அமைந்துள்ளன. கட்டுரைகள், 1000 முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

    கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம்.

    எம்.ஜி.ஆர். அவர்களை அறியாதவர்களைக் காண்பது அரிதே. அவர், உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அனைவரும் அறிந்த, உணர்ந்த, மறக்க முடியாத மனிதர். அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அதை உங்கள் நடையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

    இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்தப் பக்கத்தில் காணுங்கள். http://www.vallamai.com/?p=53863

    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share
  • தங்கப்பதக்கத்தின் மேலே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தங்கப்பதக்கத்தின் மேலே..

    ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல்ரசம் ததும்பும் கனிவான பாடல்! இதயம் தொடுகின்ற இனிய கலை காதலென்பதை இதுபோன்ற பாடல்கள் ஒவ்வொன்றும் நிரூபிக்கின்றன. அட்டியின்றி அவள் அழகை வர்ணிக்கக் காதலன் முற்படும்போது வட்டியும் முதலுமாக அவளும் திருப்பித்தரும் பேரழகு இப்பாடலெங்கும் வியாபித்திருக்கிறது. நாயகனும் நாயகியும் இணைசேர்ந்து இயற்றமிழை உச்சரிக்க நடப்பது அங்கே நாட்டியம் தமிழன்றோ? இவற்றை ஒருங்கிணைக்கும் இனிய பணியை இசைத்தமிழ் இனிதே நிறைவேற்றிட மற்றொரு வெற்றிப்பாடல் மக்களை வந்து சேர்ந்தது.

    amsv

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! இது அவரின் பாணி என்று பாடலைக் கேட்கும்போதே சொல்லிவிடலாம்! அதே போல் இரட்டைக்குரல்கள் இணைந்தே ஒலிக்கும்..டி.எம்.செளந்திரராஜன் மற்றும் பி.சுசீலா.. ஜோடிப் பாடலுக்கு இதுபோல் எங்கே இணையான மற்றுமொரு ஜோடிக்குரல்கள்?

    ‘ீபட்” என்கிற இசை வார்த்தையில் சொல்வதென்றால் தலைமுறைகள் பல தாண்டி இன்றும் மக்கள் விரும்பிக் கேட்கும் பாடலாய் இதோ..

    akav

    தங்கப் பதக்கத்தின் மேலே ….akav1

    தங்க பதக்கத்தின் மேலே
    ஒரு முத்து பதித்தது போலே
    இந்த பட்டு கன்னங்களின் மேலே
    ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
    நீயும் விட்டு கொடுத்திடலாமோ

    முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
    மெல்ல தவழ்வது கண்டு
    ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
    மின்னி மறைவது உண்டு
    அழகு நடையை பழகும் சிலையை
    அணைக்க வந்தேனே
    இதழ்கள் பொழியும் அமுத மழையில்
    மிதக்க வந்தேனே (தங்க)

    பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து
    பக்கம் நடந்தது என்ன ?
    உயிர் காதல் தலைவன் காவல் இருக்க
    தொட்டு இழுத்தது என்ன ?
    பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்கதோ ?

    ஒருவன் மடியில் மயங்கும் பொழுது சுகம் பிறக்கதோ ?

    (தங்க பதக்கத்தின்) மேலே

    கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை
    தொட்டு தொடர்ந்தது என்ன
    அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
    கொட்டி அளப்பது என்ன ?
    அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
    கொட்டி அளப்பது என்ன ?
    ஊரும் உறவும் அறியும் வரையில்
    கண்கள் மட்டோடு
    மண மாலை தோளில் சூடும் நாளில்
    கைகள் தொட்டாடு (தங்க)

    தமிழ்க்குலப் பெண்களோடு கற்பு நெறி மாண்பை இரண்டே வரிகளில் இயம்பிடுதல் என்பது வாலி அவர்களைப் போன்ற அனுபவமிக்க கவிஞர்களால் மட்டுமே இயலும்!

    மக்கள்திலகமும் கலைச்செல்வியும் திரையில் தோன்றிடும் இப்பாடல் காட்சி மக்கள் மனதிலும் இன்றும் பசுமையாக! நெஞ்சத்தை விட்டகலாப் பாடலிது என்பதற்கு காரணங்கள் ஒன்றா? இரண்டா?

    https://www.youtube.com/watch?v=EECTm1VOiL0

    Share
  • அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    அந்த நாள் ஞாபகம் …..

    வழக்கம்போல் இல்லாமல் புதிய யுக்தியில் பாடல்கள் பிறப்பதுண்டு! வாழ்வில் எதார்த்தமாக பேசும் வார்த்தைகளையே பாடலின் உள்ளீடாகத் தரும்போது.. அதையும் சவாலாக எடுத்துக்கொண்டு.. இசையமைத்த விதமும்.. உயர்ந்த மனிதனில் இடம்பெற்ற இப்பாடலை இன்னும் உயரச் செய்திருக்கிறது!

    நடிகர் திலகமும் மேஜர் சுந்தரராஜனும் இணைந்து தங்கள் பால்யகால நட்புமுடல் பள்ளிப் படிப்பு என – இன்றைய வாழ்வு வரை அலசிடும் அழகையெல்லாம் அப்படியே எழுதிக் காட்டிய வாலி அவர்களையும் அதற்கு அப்படியே இசை அமைத்த மெல்லிசை மன்னரையும் மெச்சலாம்! பலவித உணர்வுகளை ஒன்றிணைத்துத் தன் குரலில் வழங்கிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை மறக்க முடியுமா?

    இளமையில் தொடங்கி.. முதுமை வரை ஓடுகின்ற இல்வாழ்க்கையில் எத்தனை எத்தனை விருப்பங்கள்? எத்தனை எத்தனை திருப்பங்கள்? எல்லாம் நடந்தேற இணைபிரியா நண்பர்கள் இருவர் சந்திக்கும்போது அவர்களின் பரிமாற்றம் இப்படித்தான் இருக்குமோ?

    akavi

    அழகிய மறுபதிவாக அல்லாமல் வாழ்க்கையை ஒருமுறை திருப்பிப் பார்த்து பெருமூச்சு விடுதல் அலாதியானது! இது நம் அனைவரின் வாழ்விலும் இடம்பெறக் கூடிய ஒன்றுதான்! அதை நாம் எழுதி வைப்பதில்லை! யாரும் இசை அமைப்பதில்லை! நாமும் அதற்குக் குரல் கொடுப்பதில்லை! என்றாலும் இதோ நமது எதிரொலியாக! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேakavii
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

    பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
    இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

    புத்தகம் பையிலே
    புத்தியோ பாட்டிலே
    பள்ளியைப் பார்த்ததும்
    ஒதுங்குவோம் மழையிலே

    நித்தமும் நாடகம்
    நினைவெல்லாம் காவியம்
    உயர்ந்தவன் தாழ்ந்தவன்
    இல்லையே நம்மிடம்

    பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
    கடமையும் வந்தது கவலையும் வந்தது

    பாசமென்றும் நேசமென்றும்
    வீடு என்றும் மனைவி என்றும்
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    அமைதி எங்கே?

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

    பெரியவன் சிறியவன்
    நல்லவன் கெட்டவன்
    உள்ளவன் போனவன்
    உலகிலே பார்க்கிறோம்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    தவறுகள் செய்தவன் எவனுமே
    தவிக்கிறான் அழுகிறான்

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

     

    படம்: உயர்ந்த மனிதன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: கவிஞர் வாலி
    பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்

    https://www.youtube.com/watch?v=1LavYqp80CA

    Share
  • சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..- கவியரசு கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..

    மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்கள் கொண்ட மனிதன் அவைகளை அடக்கியாளுகின்றானா? அல்லது அவைகளுக்குள் அடங்கிப் போகின்றானா? ஆறறவில் ஆறாம் அறிவாம் பகுத்துணர்வால் இன்னும் பக்குவப்படுகின்றானா? இல்லை.. ஆசையென்னும் தீயால் அவனே அவதிப் படுகின்றானா? இவை அனைத்தும் கலந்த கலவையே மனித வாழ்க்கை என்று இறைவன் எழுதி வைத்தானா?

    தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள்.. மரம், செடி, கொடி என பசுமை நிறம்காட்டி வண்ணவண்ணப் பூக்களுடன் காட்சிதரும் இயற்கை தன் அழகையெல்லாம் இதமாக அள்ளி வழங்க.. சோலைவனங்களும், நிழல்தரும் மரங்களும்.. அவற்றுள் கூடுகட்டி வாழும் பறவைகளும்.. பச்சைக்கிளிகளும்.. குழலோசை போல் குரல்கொடுக்கும் குயில்களும் வசந்தகால வரவல்லவா?

    kav

    விண்ணோக்கிப் பார்க்கும்போது எண்ணிலா இயற்கையின்பம்.. மேகக்கூட்டங்களும் – வானவில் தோற்றங்களும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களும், கவிதை சொல்ல உலா வரும் நிலவும், கட்டுக்கடங்காத கனலைக் கொட்டியபடியே இவ்வுலகம் இயங்கிட கடமையாற்றும் கதிரவனும் – சற்றே விண்ணிலிருந்து மண்ணுலகு நோக்கி வந்துவிழும் மழைத்துளியும் – எல்லாம் இயற்கையின் சீதனமா? நாம் இன்புறவே நலம்பாடும் செல்வங்களா? உயர்ந்துநிற்கும் மலைத்தொடர்கள்.. அவற்றினிடையே கொட்டுகின்ற வெள்ளிநீர்வீழ்ச்சிகள்.. துள்ளிக்குதித்து வரும் நதிமகள்கள்.. பாயும் இடமெல்லாம் பச்சைவயல்களென வரிசை வரிசையாய் அழகு ஒய்யாரமாய் பவனி வரும் – இவ்வுலகை மூன்று மடங்காக விஸ்வரூபம் எடுத்து தாங்கிநிற்கும் கடல் அன்னையும், கடற்கரையோரமெல்லாம் பாடும் அலைகளென நுரை சிந்தும் நூதனமும் எழுதப்படிக்கத் தெரியாதவரையும் ரசித்து மகிழச் செய்துவிடும் இயற்கை வளங்கள் அல்லவா?

    ஒரு கவிஞன் தான் எழுதும் பாடலில் இந்த அழகையெல்லாம் தான் ரசித்ததோடு மட்டுமின்றி கவிதைமொழிபெயர்ப்பும் தந்துவிடுகிறான். அப்படி கண்ணதாசன் காட்டும் திரைப்பாடலிது.. பி.சுசீலாவின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் புதிய பறவைக்காக .. இந்த மந்தகாருசப் பாடல் நம் மனதைத் தடவிக்கொண்டே இருக்கிறது!

    இந்த மண்ணின் மரபுமாறாமல்.. பெண் தன் ஆசைகளை உவமைநயம் காட்டித்தான் உணர்த்துவாள்.. என்னும் உன்னதத்தையும் உள்ளடக்கிய பாடல்!

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..
    கதாநாயகி தான் பாடும் இப்பாடலில் கவிஞரின் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறந்து வழங்கியிருக்கும் சொற்கோலங்களில் கொஞ்சம் சொக்கிப் போகலாமே! அற்புத இசைக்கோர்வையில் பல்லவிமுதல் சரணங்கள் எல்லாம் உற்சாக மழை பொழிகிறது!

    எல்லாம் சரி.. எத்தனையோ பறவைகளிருக்க.. பச்சைக்கிளிகளைக்கூட விட்டுவிட்டு சிட்டுக்குருவியை பல்லவியில் ஏன் தேர்ந்தெடுத்தார் கண்ணதாசன் என்கிற கேள்விக்கு பதில் என்ன? தன் அலகுகளால் ஒன்றையொன்று அழகாய் முத்தமிட்டுக்கொள்ளும் பேரழகை.. அதுவும் தவிர.. அத்தகு எண்ணிக்கையம் மற்ற பறவைகளிலிருந்து சிட்டுக்குருவியை முன்னிலைப்படுகிறது! அட.. சிட்டுக்குருவி லேகியம் என்றுகூட விற்பனை செய்கிறார்களே! கண்ணதாசனே.. உனது பாடலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்?

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
    மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
    என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
    ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
    ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
    இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
    இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    திரைப்படம் – புதிய பறவை..
    பாடல் – கண்ணதாசன்
    இசை – விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் – பி. சுசீலா


    என்றும் அன்புடன்,
    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது – ருவைஸ், அபுதாபி..
    00971 50 2519693

    Share