நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! – புலவர் புலமைப்பித்தன்

0

கவிஞர் காவிரிமைந்தன்

நாளை உலகை ஆளவேண்டும்

akav

கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில்!!

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது!

உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்..

நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே!

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே

ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா

கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

ஏருழவன் சேற்றில் கை வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள்!

அவர்தம் ஏழ்மைநிலை நீங்கி.. உருவாக வேண்டிய சமத்துவ சமுதாயம் புலவரின் பொதுவுடைமை நோக்கம் எல்லாம் பாடலின் வரிகளாய்!!

புரட்சிக்கு வித்திடும் போராட்டங்கள்! அப் போராட்டங்கள் உருவாகக் காரணம் ஏற்றத்தாழ்வுகள்!!
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் கூட்டுறவு சங்கங்கள்!!

நாளைய விடியல் நம்பிக்கையின் வெளிச்சத்தோடு வெளிவரட்டும்!!

https://www.youtube.com/watch?v=_h8lvYbu880

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *