கவிஞர் காவிரி மைந்தன்

amma

அன்னைக்கு நிகரான சொல்கூட அகிலத்தில் இல்லை…

அவள் அன்புக்கு ஈடாக பூமிதனில் பொருளொன்றுமில்லை

கண்ணுக்கு நிகராக நம்மைக் காப்பதற்கு – கடவுள்

அன்னையை நமக்களித்தான் உண்மைதானே!

என்றைக்கும் அவளிருப்பாள் தாயாக… நாம்

அவள் மடிதனிலே கண்ணுறங்கும் சேயாக..

உண்ணவும் உறங்கவும் வைத்து நிதம்.. தன்

ஒருகோடி கனவுகளை தான் சுமப்பாள்!

சிறுதுன்பம் நமக்கென்றால் பொறுக்கமாட்டாள்

வரும்துயரம் யாவையும் தான் ஏற்பாள்

பசியென்று நாம் உணரா வைத்திருப்பாள்…

பகலிரவு அறியாமல் உழைத்திருப்பாள்

உயிருக்குள் உயிர் சுமந்த கோவிலவள்

ஒளியூட்டும் தீபம் நம் வாழ்வில் அவள்…annai

அன்னையைப் போற்றி நிதம் வழிபடுங்கள்…

அவள் பொற்பாதம் தொட்டு வணங்கிடுங்கள்..

உன்னை நான் ஈன்றெடுக்க என்ன தவம் செய்தேன்

என்று அவள் உள்ளம் தினம் பூரிக்கட்டும்!

அம்மா.. அம்மா.. அழைக்கின்றேன்… உன்

ஆசை முகம் பார்க்கத் துடிக்கின்றேன்…

கண்ணெதிரே இருந்தவரை காத்திருந்தேன்…

விண்ணுலகம் சென்று விட்டாய் என் செய்ய?

தாயென்னும் தெய்வத்தைத் தரணியிலே..

தந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்!!

அன்னையர் தின வாழ்த்துகள்…
(மு. இரவிச்சந்திரன்)
— என்னும்
கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052
kaviri2015@gmail.com
www.thamizhnadhi.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *