Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களைத் தாங்கி வருகிறது எந்தன் அடுத்த மடல்உள்ளத்தின் கதவுகளைத் திறந்து வெள்ளமாய் இருக்கும் எண்ணங்களின் சிலதுகள்களை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தமடைகிறேன்.

    கடுகதி வேகத்தில் காற்றைப்போல் பறந்து செல்கிறது காலம்இந்தக் காலக் காற்றினுள் அகப்பட்ட சருகுகளாக அடித்துச் செலப்பட்டுக் கொண்டிருக்கிறோம்ஆனால் அத்தகைய சூறாவளிக்குள் சிக்கப்பட்ட நிலையிலும், வசதியான ஒரு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் ஒரு பக்க மக்களும்அன்றாடத் தேவைகளையே தீர்க்க முடியாமல் அல்லலுறும் உலகின் மற்றொரு பகுதி மக்களும் வாழ்கின்ற நிலை.

    இந்நிலையில் இவ்விரு வகையான மக்களின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்ற பொறுப்புகளில் அந்நதந்தப் பகுதிகளில் அரசியல் நடத்தும் தலைவர்களும் அவர்கள் வழி வந்தவர்களும் தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் தம்பக்க பிரச்சாரங்களுக்குள் மக்களை மூழ்கடிக்கும் நோக்கத்தோடு செயலாற்றும் நிலை.

    பசிபஞ்சம்பட்டினிமரணம் என்பன எப்படி ஜாதிமதஇனநிற வேறுபாடு காட்டுவதில்லையோ அதேபோல செல்வம் மகிழ்ச்சி,வாழ்வுஆடம்பரம் என்பனவும் இவ்வேறுபாடுகளைக் காட்டுவதில்லைஇருப்பினும் இன்றைய உலகில் இப்படிபஞ்சம்பட்டினி அகால மரணங்கள்தேவையற்ற யுத்தங்கள் என்பன வசதி குறைந்தபொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த Developing countries அதாவது முன்னேற்றமடைந்து வரும் நாடுகள் என்று அழகாகக் குறிப்பிடப்படும் நாடுகளிலேயே நிகழ்கின்றன.

    முன்னேற்றமடைந்துவரும் நாடுகளின் முன்னேற்றத்துக்கு உதவுகிறோம் என்று அதற்கொரு கொள்கையையும்,அக்கொள்கையைச் செயற்படுத்துவதற்கென்று அமைச்சர்களையும்வாரியத்தையும் நியமித்து செயற்படுகிறது தம்மை முன்னேற்றமடைந்து விட்ட நாடுகள் கூறும் மேற்குலக வல்லரசு நாடுகள்ஆயினும் இவர்களின் முன்னேற்றமடையாத நாடுகளுக்கான உதவிகளின் அடிப்படையில் தான் இவர்களது பொருளாதர வீரியம் தங்கியுள்ளது என்பது உண்மையேஎந்தநாடும் தமது நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டுதான் எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்அதுவே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும்யதார்த்தமும் கூடஆனால் அனைத்துக்கும் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல் லாபங்களின் உண்மை வடிவங்கள் சாதாரண மக்களுக்கு காட்டப்படுவதில்லை.

    வசதி குறைந்த நாடுகளுக்கு உதவுவது மனித தர்மமே ஆனால் உதவி எனும் பெயரில் தமது ஆதிக்கத்தைதாம் எவ்வழியில் அந்நாடு போகவேண்டும் என்று எண்ணும் வழியில் அந்நாடு நடக்கவேண்டும் என்று எண்ணி அந்நாட்டிற்கு ஏற்புடையதல்லாத வழியில் போகவைக்க எத்தனிப்பது உண்மையான உதவியாகுமாஎன்பது இன்றைய உலகின் ஒரு முக்கியமான கேள்வியாகிறது.

    இத்தகைய வழியில் ஒரு வல்லமை கூடிய நாடு உதவி எனும் பெயரில் மற்றொரு நாட்டினை மறைமுக ஆதிக்கத்துக்கு உள்ளாக்குவதற்கு அவ்வல்லமை மிக்க நாடு மட்டும்தான் காரணமாஇல்லை அவர்களிடம் உதவியை ஏற்றுக் கொள்ளும் அவ்வசதி குறைந்த நாட்டினை வழி நடத்துகிறோம் என்றுகூறி அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலமைகளின் சுயநலமான மனப்போக்கே காரணமாகிறதுமுன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளை முன்னேற்றமடையவிடாத நிலையில் வைத்திருப்பதனால் தமக்கு இலாபம் எனும் கணக்கீட்டினால் அரசியல் வியாபாரகி விட்ட ஒரு சூழலே இதற்கு மூலகாரணமாகிறது.

    இத்தகைய மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் நடத்துவோரால்தான் இன்று இனவிரோத மனப்பான்மையை நியாயப்படுத்தி அதனைப் பாப்பியூலசிம் எனும் உணர்ச்சி மிக்க தீவிரவாத அரசியல் நிலைப்பாடாகக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கான ஆதரவு மேற்குலக நாடுகளில் பெருகி வருவதைக் காண்கிறோம்சோசலிஸம்கப்பிட்டிலஸம்கம்யூனிசம் எனும் வகை அரசியல் முறைகளைப் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வந்தனஅவற்றில் பல அவ்வகை அரசியலினால் தமது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொண்டனசுற்றிவரும் ராட்டினத்தில் மேலிருக்கும் பகுதி கீழே வருவதும்கீழிருக்கும் பகுதி மேலே போவதும் சகஜம்அதேபோல் இப்பொருளாதார மேம்பாடு கண்டவர்களின் வாழ்வாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதும் அதற்குக் காரணமாக இலகுவாக கண்முன்னே தோன்றுவது வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவவர்களேஅதுவும் அவர்கள் வேற்றினத்து,வேறு நிறத்துடையவரானால் அது இன்னும் வெளிப்படையாகத் தோன்றும்இப்பொருளாதார வீழ்ச்சிக்கு இனவாதத் துவேஷங்களை விளக்கமாக்கும் யுக்தியைக் கையாளுவதே பல அரசியல்வாதிகளுக்கு இலகுவான காரியமாகத் தென்பட்டது.

    விளைவு !

    இன்றைய மேற்குலக நாடுகளில்அதாவது வெள்ளை இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில்வேற்றினத்து குறிப்பாகக் கறுப்பின மக்களின் மீதான வெறுப்புணர்வின் பலத்தில் தமது அரசியல்கோட்டைகளைக் கட்டிக்கொள்ளப் பலர் முனைவதைக் காண்கிறோம்இதற்கு பற்பல காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நடவடிக்கைகளும் துணை போகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையே நாம் புலம்பெயர்ந்து வந்தபோது எம்மை அரவணைத்துஎமக்கான வாழ்வொன்றை ஏற்படுத்திக் கொடுத்த நாட்டை வாடகை வீடு போன்றும்எந்தநாட்டில் வாழமுடியாமல் விட்டு ஓடி வந்தோமோ அந்நாட்டினைச் சொந்த வீடு போன்றும் கருதும் மனப்பான்மையினால் கூறப்படும் கருத்துக்கள்செயற்படுத்தும் நடவடிக்கைகள் எமக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவது சகஜமே !

    புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புகளில் அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு அதன் அங்கங்களாகச் செயற்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை அவர் இனத்தினைச் சேர்ந்தவர்களே எதோ தமது இனத்துக்கு துரோகம் செய்வோர்கள் என்பது போன்ற மனப்பான்மையில் பார்ப்பது கூட சில இடங்களில் நடப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.இங்கேதான் தாய்நாடு” , “தாய்மொழி” என்பதன் அர்த்தங்களின் புரிதல்களின் வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் புலனாகின்றனஅந்நியமொழியைக் கற்று அதனில் புலமை பெறுவதென்பது தாய்மொழி“யை மறப்பதன்று எனும் உண்மை பலருக்குக் கசப்பாக இருக்கிறது என்பது வியப்புக்குரியதொன்றாக இருக்கிறதுஅவ்வகையில் தாம் அந்நியமொழியில் பெற்ற புலமையின் பலத்தால் தன்னை ஈன்றெடுத்த தாய் பேசும் மொழியின் சிறப்பான இலக்கியங்களை மொழிமாற்றம் செய்து தமதுதாய்மொழியின் சிறப்பினை அந்நியமொழி பேசுவோருக்கும் புலப்படுத்துவது கூட ஒரு சிறப்பான தாய்மொழிப் பற்று என்பதனை மறந்து விடுக்கிறோம்.

    மதம் என்பது ஒரு மனிதனின் அணிகலனே அன்றி ஆடையாகாதுஅம்மதத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்ட நல்வாழ்வுக்குரிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது தவறாகாதுஆனால் மதத்தின் மீது கொண்ட பற்று எனும் காரணம் நாம் மனிதனாக வாழ்வில் முன்னேறும் படிகளில் தடைக்கற்களாக்கிக் கொள்வது தவறுஇன்றைய பிரிட்டன்  பல்லினமக்களைக் கொண்ட  பலகலாச்சார நாடாகும்மத வேறுபாடுகளைக் கடந்துநிற வேறுபாடுகளைக் கடந்து மனிதரென்னும் அடிப்படையில் அடுத்தவரின் உரிமைகளை மதிப்பது ஒன்றே இந்நாட்டின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகும்.

    இன்றைய பிரிட்டன் அமைச்சரவையில் கிறீஸ்தவர்யூதர்இந்துஇஸ்லாம் என பல்வேறு மதப்பின்னணிகளைக் கொண்டவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்இவர்களில் முக்கிய அமைச்சர்கள் இருவர் ஆசியப் பின்னணியைக் கொண்டவர்கள்இவர்கள் வெறும் ஆசியர்கள் எனும் காரணத்தினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக இன்றைய பிரதமரையும்அரசினையும் எதிர்க்கும் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல பல ஆசியர்களுமே ஆங்காங்கே முனகுவதைக் காண்கிறேன்.

    மக்களே உங்கள் முன்னால் வைக்கப்பட வேண்டிய முக்கிய கேள்வி இதுதான்இவைகள் எல்லாவற்றையும் கடந்து ஏன் அவர்கள்,அவர்களின் திறமையின் அடிப்படியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாதுபுலம் பெயர்ந்து வந்து இம்மண்ணிலே தமது திறமையை நிலைநாட்டியவர்கள்அவர்கள் என்பதில்நாமும் புலம் பெயர்ந்தவர்கள் எனும் அடிப்படியில் நாம் பெருமை கொள்ளக்கூடாதா?பதவியலமர்த்தப்பட்டு சில தினங்களே ஆகிறது அதுக்குள்ளாகவே நாம் அவர்களின் செயற்பாடுகளின் நீதிபதிகளாவது முறையாகுமா?

    ஒரே கேள்வி ஒரே கேள்வி என் நெஞ்சிலே

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த மடலில் உங்களோடு உளக் கருத்தை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

    ஐக்கிய இராச்சியம், அதாவது இங்கிலாந்து, இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது.

    எமது அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி அனைத்து மக்களின் மனங்களிலேயும் தொங்கிக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை, பெரிதான ஒரு புதிராக ஒன்றும் இல்லை.

    பொதுவாகப் பொதுத்தேர்தல் நடைபெறும் போதுதான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில், கொஞ்சம் புதிராக இருக்கும். இப்போது இது ஒன்றும் புதிர் இல்லையே!

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றம், சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் ஊர்ஜிதமாக்கப்பட்டதும் அதனோடு சம்பந்தப்பட்டு, பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன.

    அப்போதைய பிரதமர் டேவிட் கமரன், பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல, அரசியலிலிருந்தே ஒதுங்கி விட்டார்.

    அவரோடு இணைந்து அரசமைத்த மிதவாத கன்சர்வேடிவ் கட்சிகள் பலவற்றின் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டோ அன்றித் தாமாகவோ ஒதுங்கிக்கொண்டார்கள்.

    இதோ மக்களே! உங்களில் பெரும்பான்மையினரின் அபிலாஷையை நிறைவேற்றுகிறேன் என்று கங்கணங் கட்டிப் பிரதமராகிய அம்மையார் தெரேசா மே அவர்கள், இன்று தீவிரவாதப் போக்குக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் அழுங்குப் பிடியினால் ஒதுக்கப்பட்டுவிட்டார்.

    இன்றைய நிலையில் இரண்டு கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைச் சுமார் 1,60,000 கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் முழு நாட்டிற்குமே பிரதமராகத் தெரிவு செய்யப் போகிறார்கள்.

    இந்த வெறும் 1,60,000 மக்களின் முக்கிய பிரச்சினையாக ப்ரெக்ஸிட் எனும் ஐக்கிய இராச்சியத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வே திகழ்கிறது.

    ஆனால் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் பிரச்சினை இது ஒன்றுதானா? இல்லை நாட்டை முன்நோக்கியிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பல இருக்கின்றன.

    இந்த ப்ரெக்ஸிட் பிரச்சினை, கடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தின் முழு நேரத்தையும் தனதாக்கிக் கொண்டது. இப்பிரச்சினையைத் தீர்த்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனும் வகையில் அரசாங்கச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டன.

    முழு நாடுமே இரண்டாகப் பிளவுபட்டு, மூர்க்கத்தனமான விவாதங்களுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருக்கிறது.

    இன்றைய மேற்குலக அரசியல் ஒரு பெரும் மாற்றத்துக்குள்ளாகி வருவது போன்றே தெரிகிறது. ஜனநாயக அடிப்படையில் இயங்கும் நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் காலகாலமாக இருந்து வந்த அரசியல் தலைவர்களின் தெரிவுமுறைகளிலும், மக்களின் அதை நோக்கிய பார்வைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

    அரசியல்களத்திலே அனுபவம் பெற்றவர்களே நாட்டின் தலைவர்களாக பரிணமித்து வந்த முறைகள் மாறி, அரசியலிலேயே என்றுமே ஈடுபடாத, மக்களிடையே பிரபலமானவர்கள் அரசியலில் குதிப்பதை மக்கள் பெரிதும் வரவேற்கும் ஒரு சூழல் உருவாவதைக் காண்கிறோம்.

    மிகவும் சர்ச்சைக்குரிய, மக்களின் மனங்களிலே துவேஷங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளைப் பேச்சுரிமைச் சுதந்திரம் எனும் பெயரில் தெரிவிப்பதோடு அதைப் பற்றிய கேள்விகள் ஊடகங்களில் எழும்போது அதனை முற்றாக மறுத்துப் பேதலிப்போர் ஜனநாயகத்தின் உச்ச நாடுகளின் தலைவர்களாவதைக் காண்கிறோம்.

    இத்தலைவர்களின், நாட்டு அதிபர்களின் நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக அவரும் சாதாரண மனிதர் தானே எனும் நியாயத்தை முன்வைத்து ஏற்றுக்கொள்ளும் பொது மக்களிடையே வாழும் ஒரு நிலையில் இருக்கிறோம்.

    இத்தகைய ஒரு பின்னணியில்தான் இன்றைய ஐக்கிய இராச்சியப் பிரதமரின் தெரிவும் இடம்பெறுகிறது. தன்னைப் பிரதமராகத் தெரிவு செய்யப்போகும் மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ, அது யதார்த்தத்துக்குப் புறம்பாக இருப்பினும் அதனைத் தனது முக்கிய கொள்கைகளாகப் பேசி தருணத்திற்கேற்ற அரசியல் நடத்தும் ஒருவர் பிரதமராக வரக்கூடிய சந்தர்ப்பம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

    தற்போதைய ஊடகக் கணிப்புகளின் படி பிரதமராகப் போட்டியிடும் போரிஸ் ஜான்சன், ஜெர்மி ஹண்ட் எனும் இருவரில் போரிஸ் ஜான்சனே வெற்றியடையும் வாய்ப்புகளிருப்பதாகத் தெரிகிறது.

    யாரிந்த போரிஸ் ஜான்சன் ?

    நியூயார்க் நகரில் 1964ஆம் ஆண்டு ஒரு நடுத்தர மேல்வகுப்பு குடும்பத்தில் முதலாவது குழந்தையாகப் பிறந்தார். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை பிரெஸ்ஸல்ஸ் நகரில் உள்ள யூரோப்பியன் பிஸினஸ் ஸ்கூல் எனும் பள்ளியிலும் பின்பு இங்கிலாந்தின் ஆஷ்டவுண் கல்லூரியிலும், பின்பு புகழ்பெற்ற ஈட்டன் கல்லூரியிலும் பயின்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், அக்கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

    ஊடகத் துறையில் பணியாற்றத் தொடங்கிய இவர், இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த “தி டைம்ஸ்” பத்திரிகையில் நிருபராகப் பணிபிரிந்தார். அப்பணியிலிருந்து தவறான செய்தியொன்றை குறிப்பிட்டமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.(ஆதாரம் – விக்கிப்பீடியா).

    தொடர்ந்து “தி டெய்லி டெலிகிராப்” பத்திரிகையில் பிரெஸ்ஸல்ஸ் நகர நிருபராகப் பணியாற்றினார். அப்போது இவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பல தொகுப்புகளை வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துகள் கூட கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் மத்தியில் ஏற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பலைகளை ஊக்குவிப்பதற்குத் துணை நின்றன என்பதும் உண்மையே.

    “தி டெய்லி டெலிகிராப்” பத்திரிகையின் உதவி ஆசிரியராக 1994-1999 வரையும் பின்பு “தி ஸ்பெக்டெட்டர்” எனும் இதழின் ஆசிரியராக 1999-2005 வரையும் கடமையாற்றினார். 2001ஆம் ஆண்டு அப்போதைய எம்.பி மைக்கல் ஹெசில்டைன் அரசியலிலிருந்து ஒதுங்கவும் , ஹென்லி எனும் தொகுதியின் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    2008ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தடவைகள் லண்டன் நகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இக்காலக்கட்டத்தில் ரூட் மாஸ்டர் எனப்படும் மாடலிலான லண்டன் பேருந்துகளை மீள ஓடவிட்டது, லண்டன் சைக்கிள் சேவை மற்றும் தேம்ஸ் கேபிள் கார் எனப்படும் திட்டங்கள் தன்னால் கொண்டு வரப்பட்டன என்று பிரச்சாரம் செய்துகொள்கிறார்.

    2015இல் மீண்டும் எம்.பி. ஆகப் பதவியேற்றதன் பின்னால் 2016ஆம் ஆண்டு தனது மேயர் பதவியை இராஜினாமா செய்தார். 2016 ப்ரெக்ஸிட் சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்த அணியின் முன்னணி பிரச்சாரகராகச் செயல்பட்டார்.

    டேவிட் கமரன் விலகிய பின்பு, தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டு அமைச்சராகப் பதவி வகித்தார். தெரேசா மே அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை எதிர்த்துத் தனது பதவியை போரிஸ் ஜான்சன் இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு தடவைகள் திருமணம் செய்து விவாகரத்து செய்த இவர், தற்போது தன் காதலியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இவரது இரண்டாவது மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர, திருமணத்திற்கு அயலில் ஒரு தொடர்பூடாக மற்றொரு பெண்குழந்தையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது தந்தைவழியான ஒரு பூட்டனார் துருக்கி தேசத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஊடகவியலாளர் எனவும் மற்றொரு வழியான பூட்டனார் இங்கிலாந்தின் இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் வழி வந்தவர் எனவும், தாய்வழிப் பூட்டனார் ஒரு ரஷ்ய யூத இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.

    இவரது அரசியல் கருத்துகள், காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்திருக்கின்றன. இவரது ஊடகத் துறைக் காலங்களில் இவரது கட்டுரைகளில் சிலவற்றில் உபயோகித்த வார்த்தைகள், வேற்று இனத்தவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெளிநாட்டவரின் குடியேற்றத்தில் இவரது கொள்கைகள் புரியாதவையாகவே இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

    இவர்தான் ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமர் என்பது துல்லியமாகத் தெரிகிறது என்கின்றன ஊடகங்கள்.

    ப்ரெக்ஸிட் எனும் இப்பாரிய பிரச்சினை, இங்கிலாந்து மக்களின் மனங்களிலே கசிந்துகொண்டிருந்த இனத் துவேஷம் எனும் உணர்விற்குத் தீனியாகி, கொஞ்சம், கொஞ்சமாகப் புகையைக் கக்கத் தொடங்கியுள்ளது. 4% அளவில் மட்டுமே பெரும்பான்மை பெற்றிருந்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் தீர்மானம், அதற்கு எதிரான மக்களை விசனத்தின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

    இந்நிலையில்தான் புதிய பிரதமர், 2019 ஜூலை 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார். ஊடகக் கணிப்புகளின் படி அவர் போரிஸ் ஜான்சனாக இருந்தால், நாட்டினை ஒன்றுபடுத்தி, மக்களின் மனங்களில் பரவியிருக்கும் இனத்துவேஷ உணர்வுகளைப் போக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே!

    தன்னிடமிருந்து வெளிவரும் கருத்துகள், இருக்கும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி விடுமோ எனும் அச்சம் சிறிதுமின்றி, நான் வெளிப்படையாக எனது மனத்தில் பட்டதைக் கூறுவேன் என்று சொல்லும் இவர், பல சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சார நாடான இங்கிலாந்தைச் சரியான வழியில் கொண்டு செல்வாரா?

    இதே நேரம் எதிர்க்கட்சியான இங்கிலாந்தின் லேபர் கட்சி ஒரு இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டது. தொழிலாளரின் நலனை முன்வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. வட இங்கிலாந்து, பல தொழில் ஆலைகளைக் கொண்டது. அங்கு வாழும் மக்கள், அவ்வாலைகளின் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். முன்னைய காலத்து நிலக்கரிச் சுரங்கங்களும் இந்தப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. கால காலமாக இப்பகுதிகளின் ஆதரவு, தொழிற்கட்சிக்கே இருந்து வந்திருக்கின்றது.

    சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றியத்தில், பல முன்னைய சோவியத் யூனியனின் அங்கங்களாக இணைந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்ததும் அந்நாட்டுப் பிரஜைகள் பலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இடநகர்வுச் சட்டங்களின் வழி இங்கிலாந்துக்குள் இலகுவாக குடியேறி வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.

    தொழிலதிபர்கள் பலர், தமது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக, குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்தக்கூடிய இந்தக் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதால் உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு குறைவதோடு அவர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. இது இப்பகுதிகளில் வாழும் மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இக்காரணத்தால் இப்பகுதிகளில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான வகையிலே வாக்குகள் விழுந்திருக்கின்றன. பாரம்பரியமாகத் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பவர்களின் இத்தகைய மனப் போக்குக்குத் தொழிற்கட்சி முகம் கொடுக்காத பட்சத்தில் அவர்களின் செல்வாக்கு இப்பகுதிகளில் மறைந்துவிடப் போகிறது எனும் அச்சம், இக்கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் இக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    அதே நேரம் தொழிற்கட்சியின் உத்தியோகப்பூர்வமான கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினாலும், அதனுடனான உறவுகள் மிகவும் நெருக்கமாகப் பேணப்பட வேண்டும் என்பதுவே. இது இன்றைய இக்கட்சியின் நிலையைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

    அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களத்தில் மிதவாதப் போக்குக் கொண்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பலவீனமடையப் போகிறது போலவும், பாப்புலிசம் (populism) என்கிற பிரபலமான, மக்களின் தீவிர உணர்வுகளுக்குத் தீனி போடும் நபர்களின் அரசியல் தலைவிரித்தாடப் போகிறது போலவும் போன்றதொரு நிலையே தென்படுகிறது.

    ஓ! ஹிட்லர் கூட முதன் முதலில் ஜனநாயக அரசியலின் மூலம் தான் பதவிக்கு வந்தவரோ?

    எத்திசையில்? எப்பயணம்?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (297)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (297)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வுலகில் மனிதராகப் பிறக்கும் எவரும் எத்தகைய சூழலில் , எங்கே, எப்படி பிறக்கப் போகிறோம் என்று தாமே கணித்துக் கொண்டு பிறப்பதில்லை. எமது கட்டுப்பாடில்லாமல் எங்கோ ஓரிடத்தில் விழுகிறோம். விழுவது பச்சைவளமா? இல்லை பாலைவனமா? என்பதும் எமது கையில் இல்லை.

    வறுமையின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறும் சமூகத்திலும், நீரின்றி வாடும் வறண்ட நாடுகளிலும், போரில் சிக்குண்டு சிதறியோடும் சமூகங்களிலும் வாழும் பலரின் நிலைகளை அன்றாடம் செய்திகளாகக் கேட்டும், காணொளிகளாகத் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அறிந்துகொண்டிருக்கிறோம். தமது உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்நிய நாடுகளில் புகலிடம் தேடியோடும் பயணத்தில் எந்த உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடுகிறார்களோ அந்த உயிரை இழந்து விடுவதையும் பார்க்கிறோம்.

    இத்தகையதோர் அகிலத்தில் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு நாட்டில் வாழும் ஒருவரின் வாழ்க்கை, ஓப்பிட்டு முறையில் எத்தனையோ வகைகளில் மேலானதாக இருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவையிருப்பினும் ஒவ்வொரு மனிதரினதும் அடிப்படை வாழ்வாதரத் தேவைகளுக்காக அவர்கள் தவிக்க வேண்டியதொரு நிலை ஐக்கிய இராச்சியத்தில் அரிது என்றே கூற வேண்டும்.

    இத்தகைய ஒரு காலகட்டத்திலே தான் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் லண்டன் ஒரு பாரிய பிரச்சனையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அது என்ன என்கிறீர்களா? பல இளம் உயிர்களைக் காவுகொள்ளும் வன்முறைச் சம்பவங்களே அவை. கடந்து போன இந்த வார விடுமுறைக்குள் மட்டும் கத்திக்குத்துச் சம்பவத்தில் நான்கு உயிர்கள், லண்டனைச் சுற்றிய பகுதிகளில் பலியாகியுள்ளன. இவற்றில் எட்டுமாத கர்ப்பவதியாக இருந்த 27 வயதுப் பெண்மணியும் அடங்குகிறார். அப்பெண்ணின் உயிர் போனநிலையில் அங்கு வந்த அவசர மருத்துவ நிபுணர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவைக் காப்பாற்றியுள்ள போதும் அதன் நிலமை இன்றும் கவலைக்கிடமாக உள்ளது என்றே தெரிய வருகிறது.

    அப்படியே அக்குழந்தை உயிர் பிழைத்து நலமடைந்தாலும் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தனது தாயை வன்முறைக்கு பலிகொடுத்த அக்குழந்தை எத்தகைய ஓர் மனநிலையுடன் வாழும் என்பது கேள்விக்குறியே!

    வரலாற்றுக் குறிப்புகள் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை 2018ம் ஆண்டில் வன்முறையோடு சம்பந்தப்பட்ட கொலைகள் கடந்த பத்து வருடங்களில் அதியுயர்ந்த எண்ணிக்கையை அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஒன்பது வயதுச் சிறுவர்கள் கூட தமது பதுகாப்புக்காக என்று கத்திகளை தம் வசம் வைத்திருக்கும் ஒரு நிலையை இன்றைய இங்கிலாந்து கண்டு கொண்டிருக்கிறது.

    எங்கே? எதற்காக? எவர் மத்தியில் இவ்வன்முறைச் சம்பவங்கள் தலை விரித்தாடுகிறது என்பது பல புத்திஜீவிகள் மத்தியில் அலசப்பட்டு வருகிறது. பதின்ம வயதுகளில் இருக்கும் இளைய சமூகத்தினரிடம் அதுவும் பெரும்பான்மையாக கறுப்பின சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கிடையிலே நடக்கும் ஒரு குழுநிலை மோதல் போன்றும் தோற்றமளிக்கிறது. போதை வஸ்து வியாபாரத்தினைக் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல குழுக்களுக்கிடையே நடக்கும் அதிகாரப் போரோ? என்று கூட இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன.

    இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் லண்டன் மேயர் திரு சாடிக் கான் உட்பட பலரும் தவிப்பது போலத் தெரிகிறது. இதற்கான பலமான குற்றச்சாட்டு, இங்கிலாந்து அரசின் மீது சாட்டப்படுகிறது. இங்கிலாந்து அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து இலாக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இதனால் அதிகமான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது இங்கிலாந்தின் போலிஸ் இலாகா என்பது உண்மையே. இதன் காரணமாக இங்கிலாந்து மெட்ரோபோலிட்டன் போலிஸ் படையில் சுமார் 20,000 போலிஸ் உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டனர். வன்முறைச் சம்பவங்களைக் குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

    போலிஸ் உத்தியோகத்தர்களின் ஆட்குறைப்பு இதற்குக் காரணமல்ல; இருக்கும் போலிஸ் உத்தியோகத்தினர்களின் நடவடிக்கைகளைச் சரியான வகையில் வழிநடத்த இலண்டன் மேயர் தவறிவிட்டார். இதன் முழுப் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் என்று அரசாங்கமும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் வாதிடுகிறார்கள். இங்கேதான் மக்களின் பொது நன்மையைக் கருத்திலெடுக்காமல் அரசியல் மோதல் நிகழ்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்கிலாந்தின் அரசோ கன்சர்வேடிவ் கட்சியினால் நடத்தப்படுகிறது, லண்டன் மேயரோ லேபர் கட்சியைச் சேர்ந்தவர் அவர்களுக்கிடையில் இருக்கும் அரசியல் வேறுபாடுகள் தலைதூக்குவது யதார்த்தமே!

    அடுத்தொரு காரணமாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, அதுவும் குறிப்பாக, கறுப்பினத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளதால் அவர்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டு இத்தகைய வன்முறைக்குத் தள்ளப்படுகிறார்கள் எனும் வாதம் ஒருபுறமிருக்கிறது. இத்தகைய இளைய தலைமுறையை வழிநடத்தக்கூடிய பொதுநல அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் பல பொதுநல அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் தமது செயற்பாடுகளைக் குறைத்தும், நிறுத்தியும் விட்டதும் ஒரு காரணம் எனும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

    லண்டன் மேயரான சாடிக் கான் மீது பல விமர்சனங்கள் எதிர்மறையாக வைக்கப்படுகின்றன. இவர் ஒரு இஸ்லாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பலரின் விமர்சனத்துக்கு இவர் உள்ளாகி வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கும் இவருக்கும் இடையிலான பிரச்சனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடன் அறிவித்த சில இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்களின் மீதான தடையின் போது எழுந்தது. அதேநேரம் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டன் நகர மேயராக இருப்பதை மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாத,  இனத்துவேஷம் கொண்ட சிலர், இப்பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக்குக்கிறார்களோ எனும் கருத்தும் சிலர் மத்தியில் நிலவுகிறது.

    தற்போது பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கும் திரு பொரிஸ் ஜான்சன் அவர்கள் இருமுறைகள் லண்டன் நகர மேயராகப் பணியாற்றியிருக்கிறார். கருத்துக் கணிப்புகளின் படி இவரது பதவிக் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் லண்டனில் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இக்காலகட்டத்தில் போலிஸாருக்கு யாரையும் தடுத்து நிறுத்திச் சோதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவ்வதிகாரம் இனத்துவேஷம் கொண்ட காவல் படையினரால் கறுப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் தற்போதைய பிரதமர் தெரேசா மே அவர்களால் தடை செய்யப்பட்டது. இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட சமூகத்தினரிடையில் தான் நடைபெறுகிறது எனும் போது அச்சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தானே போலிஸார் தமது நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும் அதனை இனத்துவேஷம் என்று குற்றம் சாட்டினால் குற்றங்களை எவ்வகையில் தடுக்க முடியும் எனும் வாதம் நியாயமானதே!

    அரசியல், தனிப்பட்ட கருத்து மோதல்கள், இனத்துவேஷம் எனும் கூப்பாடுகள் இவையெல்லாம் பலியாகிக் கொண்டிருக்கும் இளையோரின் உயிருக்கு பதில் கூறிவிட முடியுமா? ஐக்கிய இராச்சியம் போன்றதொரு முன்னேற்றமடைந்த நாடு என்று தன்னை விமர்சித்துக் கொண்டிருக்கும் நாட்டில் மனித உயிரின் மகத்துவத்தின் நிலைதான் என்ன எனும் கேள்வி எழுகிறது. இயற்கையும், மூட நம்பிக்கையும், தேவையற்ற போர்களும் உயிர்களைப் பலி கொள்வது ஒருபுறமிருக்க ஏனிந்த கண்மூடித்தனமான கொலைவெறி ஐக்கிய இராச்சிய சில இளையோர் மத்தியில் எழுகிறது எனும் கேள்விக்கு விடை காண வேண்டியது அவசியம். முளையிலே கிள்ளியெறிவதே அறிவான செயல் என்பதன் அடிப்படையில் பாலகர்கள் மத்தியில் இத்தகைய வன்செயல்களின் விளைவுகளை மனதினில் புகுத்தும் வகையிலான கல்விமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா? எனும் கேள்வியும் எழுகிறது.

    “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடிய அவ்வை இன்று இருந்திருந்தால் அழுதிருப்பாளோ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துகின்றன. அத்தகு தாக்கங்களின் எதிரொலிகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் அனைத்துமே என் வாசக உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆயிரம் எண்ணங்களை மலர்விக்கின்றன. ஆனால் இன்றைய இங்கிலாந்தின் உடனடி அரசியல் நிகழ்வுகள் கொடுக்கும் நாளாந்த மாற்றங்களின் தாக்கங்கள் அரசியல் களத்திலேயே நடமாட வைக்கின்றன. நடக்கும் அரசியல் மாற்றங்கள் எம் தனிப்பட்ட வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையாக இருக்கப் போகிறது எனும் ஆதங்கம் ஒருபுறம், புலம்பெயர் வாழ்வினில் இந்நாட்டு பிரஜைகளாகி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவராகிய எமக்கும், எமது தலைமுறைக்கும் இவ்வரசியல் மாற்றங்கள் எத்தகைய மாற்றங்களை அல்லது எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கப் போகின்றன எனது ஆதங்கம் மறுபுறம்.

    நாம் பிறந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடியேறி அந்நாட்டிலேயே வாழத் தொடங்கும் நாம் படிப்படியாக நமக்கு வாழ்வளித்த இந்நாட்டை நமது சொந்த நாடாகக் கருதும் நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்கள், கலாச்சார விழுமியங்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வாழும் நாட்டிற்கு உளசுத்தியுள்ள ஒரு பிரஜையாக வாழ நமை மாற்றிக் கொள்கிறோம். அத்தகைய மாற்றத்தின்போது நாம் பிறந்த மண் நமக்குக் கொடுத்த மொழியின் மீதான காதலையும், கலாச்சார அடிப்படையையும் தொலைத்து விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளே ஒரு போராட்டம்தான். இப்படியாக வாழ்ந்து நமது அடுத்த தலைமுறைகளை இங்கே உருவாக்கி அவர்கள் முற்றுமுழுதாக இந்நாட்டு மண்ணின் குழந்தைகளாகி, இந்நாட்டுச் சூழலிலே தமது வாழ்வாதாரத்துக்கான வழிகளைத் தேடி வாழும் வாழ்க்கையின்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்களும், இந்நாட்டின் தொன்மை மக்களின் மனத்தில் ஏற்படும் கசப்பான புரிந்துணர்வுகளினாலும் எமைச் சுற்றி ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை பயத்தைத் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.

    பதினெட்டிலிருந்து அறுபத்திரண்டு வரை ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கைப் பயணத்தின் தண்டவாளங்களின் திசை இந்தச் சந்தியில் இத்தகையதோர் திருப்பத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கிறது. பல வருடங்களாக இங்கிலாந்தின் பழம்பெரும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவுகளின் மீதான அபிப்பிராய பேதங்களும், கருத்து மோதல்களும் கூர்மையடைந்து வரும் வேளையில், அது அக்கட்சியின் தலைவர் பலரைக் காலம் காலமாகக் காவு கொண்டு வந்துள்ளது. இந்தக் கருத்து மோதல்களின் அதியுச்சகட்டமாகவே இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் அரசியல் பூதம் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் கூஜாவிலிருந்து வெளிப்பட்டு, அரசியல் களத்தினில் ஆட்டம் போட்டு, இன்றைய பிரதமர் தெரேசா மே அவர்களையும் பலிகொண்டு நிற்கிறது.

    தெரேசா மே அவர்களுக்குப் பதிலாக, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரையும், இந்நாட்டின் அடுத்த பிரதமரையும் தெரிவு செய்யும் பொறுப்பு, 313 கன்சர்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் விடப்பட்டு அவர்களின் வடிகட்டலில் மிஞ்சும் இரண்டு உறுப்பினர்கள், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 1,60,000 பேர்களின் வாக்கெடுப்பினால் அடுத்த தலைவரும், எமது நாட்டின் பிரதமரும் தெரிவு செய்யும் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. 11 பேர் வாக்களிக்க, இந்தத் தலைவர் தேர்தலில் இன்று இருவர் மிஞ்சி நிற்கிறார்கள். யார் இவர்கள்? முன்னாள் லண்டன் நகர மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் இவர்களிலொருவர் இவரே சக பாராளுமன்ற அங்கத்தவரிடையே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர். இவர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சர் பதவியிலிருந்தவர். தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கையோடு ஒத்துப் போகாமல் தனது பதவியை இராஜினாமா செய்தவர்.

    அடுத்தவர் ஜெர்மி ஹண்ட். இவர் இங்கிலாந்தின் தற்போதைய வெளிநாட்டமைச்சர், முன்னாள் தேசிய சுகாதார அமைச்சர். இவர்களில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து காலக் கெடுவான அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையுடனோ, அன்றி உடன்படிக்கை இல்லாமலோ விலகுவது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். ஜெர்மி ஹண்ட் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உடன்படிக்கையை எட்டக்கூடிய பட்சத்தில், ஒரு சிறிய கால தாமதம் ஏற்பட்டாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றே என்று கூறுகிறார். ஆனால் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடான தெரேசா மே அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதன் அடிப்படையில் இவர்கள் இருவரினதும் நிலை திரிசங்கு சொர்க்கமே!

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கை இல்லாமல் விலகுவதே சட்டத்திலுள்ளது. ஆனால் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு வழக்கின் தீர்ப்பாக உள்ளது. பாராளுமன்றத்தில் இங்கிலாந்து எதுவித உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது என்பது பெரும்பான்மை உறுப்பினர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் தெரிவு செய்யப்படும் புதிய பிரதமர், எவ்வகையில் இந்த பிரெக்ஸிட் எனும் பூதத்தைத் திரும்ப ஜாடிக்குள் அடைக்கப் போகிறார் எனது ஒருவராலேயும் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கிறது.

    சரி! தெரிவு செய்யப்படும் பிரதமர் யாராக இருப்பினும் அவர்கள் முன்னால் இருக்கும் பிரெக்ஸிட் எனும் பிரச்சனை ஒரு பிரச்சனையே! அதன் பின்னால் நாட்டின் பல பிரச்சனைகள் இன்னும் முகம் கொடுக்கப்படாமல் இருக்கின்றதே! அதனை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள். பிரெக்ஸிட் எனும் இப்பூதம் நாட்டினை இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றது. வெளிநாட்டவர் குடியேற்றம் அல்லது இமிகிரேஷன் எனும் பிரச்சனை

    வெள்ளை இனத்தவர் மத்தியில் பலரின் மனங்களிலே சிறிது இனத்துவேஷ விதைகளைத் தூவியிருக்கிறது. இனத் துவேஷத்தையே கொள்கையாகக் கொண்ட சில கட்சிகள், இந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள். மனத்தில் பட்டதை அப்படியே பேசும் உண்மையான அரசியல்வாதிகளின் மீது தான் நமது அபிமானம் எனும் மக்கள் கூட்டம் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பெற்ற வெற்றிக்குப்பின் இங்கிலாந்திலும் தலைவிரித்தாடுகின்றது. வெளிநாட்டவரின் வருகை, இந்நாட்டின் மக்களுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பகிரங்கமாக விவாதிப்பது ஜனநாயகமே எனும் வாதம் ஒரு சரியான வாதமாகப் பட்டாலும் இந்தப் போர்வையின் கீழ் பல இனத்துவேஷம் கொண்டவர்கள் தமது இனவெறிக்கு நியாயம் கற்பிக்கும் நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.

    இத்தகைய நிலையைச் சரி செய்து, வீழ்ந்துகொண்டிருக்கும் தமது கட்சிகளின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்துக் கொள்வதற்காக வழமையாக மிதவாதப் போக்குக் கொண்ட இங்கிலாந்தில் பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது போக்கினை வெளிநாட்டவருக்கு எதிரான வகையில் கொஞ்சம் கடுமையாக்கிக் கொள்வார்களோ எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய எமது கேள்வியான இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி எனைப் போன்ற புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்து நாட்டுப் பிரஜைகளின் மனத்தில் ஆதங்கம் மிக்க கேள்வியாக மேலோங்கி நிற்கிறது. பல சமயங்களில் கட்டுப்பாடின்றி மனத்தில் தோன்றுவதை அப்படியே பேசி பல பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் போரிஸ் ஜான்சன் அவர்களே பிரதமராவர் எனும் எதிர்பார்ப்பு, அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகிறது. தனது பூட்டனார் துருக்கி நாட்டிலிருந்து அகதியாகக் இங்கிலாந்துக்கு தஞ்சம் தேடி வந்தவர். அந்த வழியில் வந்த நான் எப்படி இனத்துவேஷம் கொண்டவராக இருக்கலாம் எனும் வாதத்தை இவர் முன்வைக்கிறார். அதேபோல நான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பது ஒரு சீன நாட்டுப் பெண்ணையே, நான் எப்படி வெளிநாட்டவருக்கு எதிராக இயங்குவேன் என்கிறார் ஜெர்மி ஹண்ட்.

    இதற்கான முடிவு ஜூலை மாதம் 22ஆம் திகதியே எமக்குத் தெரிய வரும். அடுத்து வரும் ஒரு 50 வருட காலத்தின் ஐக்கிய இராச்சியத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் பிரதமரை நாட்டில் வெறும் 1,60,000 மக்கள் மட்டும் தெரிவு செய்வதுதான் உலக ஜனநாயகத்துக்கே முன்னோடியாகத் திகழும் ஐக்கிய இராச்சியத்தின் ஜனநாயகமோ எனும் கேள்வி பல முனைகளில் இருந்து கிளம்பாமலில்லை.

    எதிர்காலம் எனும் கண்ணாடிச் சாளரத்தினூடாக என்ன தெரிக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • விடையறியா வினாக்கள்

    விடையறியா வினாக்கள்

    -சக்தி சக்திதாசன்

    நான் இங்கிலாந்துக்குள் நுழைந்து நாற்பத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கிறேன். இந்த 45 வருட காலத்தினுள் நான் கண்ட மாற்றங்கள் பல. இம்மாற்றங்களின் ஊடாக நான் பயணிக்கும்போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் பல. நாட்டினில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கத்தினால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறம், இம்மாற்றங்களைச் சரியான வகையில் உள்வாங்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டதினால் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மறுபுறம். 18 வயது முடிவுற்று பத்தொன்பதாவது ஆண்டில் காலடி வைத்த நிலையில் மாணவனாக உள்நுழைந்த எனக்கும் இன்று 63வது வயதை நோக்கி நடைபோடும் எனக்கும் இடைப்பட்ட இக்காலத்தின் வாழ்க்கை மாற்றங்கள் தந்த அனுபவச் செழிப்புகள் கணக்கிலடங்காதவை.

    மாணவனாக நுழைந்தபோது அன்றைய என் முன்னால் இருந்த இலட்சியம் வேறோர் பார்வையைக் கொண்டிருந்தது. கல்வித் தகமைகளை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்டு தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டும் எனும் முனைப்பு அன்ரைய என் பல சக மாணவர்களுக்கு இருந்தது போல் எனக்கும் ஒரு முக்கிய இலட்சியமாகவே இருந்தது. பின் எப்படி 45 வருடங்கள் ஓடிய பின்பு இன்னமும் இந்த இங்கிலாந்து நாட்டில் ஒரு மாணவனாக அல்லாமல் ஓய்வூதியம் பெறும் ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்? இம்மாற்றத்துக்கு உரிய காரணத்தைத் தேடி பல சமயங்களில் என் உள்ளத்தில் விரிவான சுய அலசல்கள் எழுவதுண்டு.

    அன்றைய மாணவ வாழ்க்கையில் ஜக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்குகள், அரசியல் மாற்றங்கள், நாட்டின் தலைவர்களின் கொள்கைகள் இவற்றைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருந்ததற்குக் காரணம் அதைப்பற்றிய ஆர்வம் இருக்கவில்லை என்பதோடு அது எனக்கு தேவையற்ற ஒன்று எனும் மனப்பான்மையும் இணைந்திருந்தது என்பதுதான் உண்மை. அன்றைய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களின் வகையில் ஏற்படுத்தும் மாற்றங்களின் தாக்கங்களைப் பற்றி காலத்தின் கட்டாயத் தேவையினால் அறிந்து கொள்ள வேண்டிய தேவையிருந்தது.

    எனது வாழ்வின் வாழ்வாதரத்திற்காக படித்துப் பட்டம் பெற வேண்டும் எனும் முனைப்பில் மிகவும் சிரமத்துக்குள்ளான நிலையில் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது அவ்வாழ்க்கையில் தனிப்பட்ட எனக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றிய மனத்தாங்கல் இருந்ததேயொழிய ஒரு வெளிநாட்டு மாணவனாக கல்வி கற்றுக் கொண்டு வாழவும் வழி வகுத்துக் கொடுத்த ஜக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பற்றிய அனுமானத்தை சரியான வகையில் உள்வாங்கியிருக்கவில்லை எனபதுவே உண்மை. பெரிய பிரித்தானிய எனும் பெயரில் எமது தாய்நிலங்களை ஆக்கிரமித்திருந்தவர்கள் இந்நாட்டவர் எனும் அபிப்பிராய பேதத்தோடு இந்நாட்டிற்குள் நுழைந்த எனக்கு அக்கால மனநிலை மாறிய வித்தியாசமான கால கட்டத்தில் விசாலமான பார்வையோடு வாழும் மக்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பது புரியாமல் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.

    45 வருடங்கள் என்பது நாலு தசாப்தங்களை உள்ளடக்கியிருக்கிறது இக்காலத்தினுள் மாணவனாக இருந்த நான் கணவனாக , தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக மார்றம் பெற்றிருக்கிறேன் என்பதுவே கண்முன்னால் கணப்படும் உண்மைகள். இப்பாத்திர மார்றங்கள் எனக்குக் கொடுத்த அனுபவப் பாடங்களோடு எனது நீண்டகால வாழ்க்கையும் பிணைந்திருப்பதினால் அரசியல் மார்ரங்களை கூர்ந்து நோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. நான் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த ஒரு புலம்பெயர் மாணவன் எனும் போது எமை ஒரு தனிக்குழுவாக எம்மோடு ஒத்தவர்களோடு இயங்குவது வழக்கமாகவிருந்தது. அந்த நிலையிலிருந்து ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக இங்கிலாந்து சமுதாய மாற்றங்களின் தாக்கத்துக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக மாறிய போது அக்குழுநிலை மனப்பான்மையை மார்றி சமுதாயத்தோடு , மற்றைய சமூகங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையிருந்தது.

    இக்காலகட்டத்தினுள் எனது கல்விக் காலத்தை முடித்துக் கொண்டு பணியாற்ற வேண்டிய நிலையில் நிலையான ஒரு பணியைப் பெற முன்பு பல இடங்களில் மாறி, மாறி பணிபுரிய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது பல சமூகத்தினரோடும் இணைந்து பணியாற்றத் தேவையிருந்தது. அத்8உவரை பிரிந்து வாழ்ந்த சூழல் மாறி அனைவரும் மனிதர்களே அவர்களின் உணர்வுகளும் எமைப் போன்றதே அவர்களும் என்னைப் போல பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துத்தான் வாழ்கிறார்கள் எனும் உண்மை புலப்பட்டது. எமது மொழி, எமது கலாச்சாரம் என்பன எமக்கு அத்தியாவசியமானவை எனும் உண்மை ஒருபுறம் இருக்க, அவற்றின் முக்கியத்துவத்துக்கு முன்னிலை கொடுத்து அடுத்தவரின் கலை , கலாச்சாரத்தை முற்று முழுதாகப் புறக்கணிக்கும் மன்ப்பன்மையைத் தவிர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் தேவைப்பட்டது.

    நாம் வாழ்ந்த காலம் வேறு எமது குழந்தைகள் இன்றைய சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வேறு. நிற வேற்றுமை, இனத்துவேஷம் என்பன ஆங்காங்கே சில, சில இடங்களில் என்னை எதிர் கொன்டாலும் நான் நிலையான பணிபுரிந்த நேரத்தில் அத்தகைய வேறுபாடுகள் என்றுமே எனது முன்னேற்றத்தை தடுக்கவில்லை. மாறாக இந்நாட்டவர்கள் எனக் கருதப்படும் பெரும்பான்மை இனத்தவர் ஒன்றாகப் பணிபுரியும்போது நேர்மையான, கடுமையான உழைப்பை இனங்கண்டு அதற்குரிய வேளைகளில் அதற்குரிய உயர்வைப் பெற்றுத்தந்தார்கள் என்பதுவே உண்மை. ஆனால் பல சமயங்களில் எம்முள் நாம் கொண்ட தாழ்வு மனப்பான்மையால் எம்மை நாமே ஒதுக்கிக் கொள்ளும்போது அடுத்தவர்கள் எம்மை விலக்குவது போலவே தென்படும் ஒரு சூழலில் பலர் எதிர்மறையான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளேன்.

    இந்த 45 வருட காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறிய பல வெளிநாட்டவர் பல சூழ்நிலைகளின் நிமித்தம் இங்கு வந்திருக்கிறார்கள். வந்த னைவரும் ஏதோ ஒரு வகையில் தமது வாழ்வினை நன்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவே உண்மை. ஆனால் அதிலே எத்தனை பேர் உலசுத்தியுடன் இந்நாட்டினைத் தமது சொந்த நாடாகக் கருதி அதன் முன்னேற்றத்தை மனதில் கொண்டு உழைக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே ! இந்நாடு வாழ்வில் தடுக்கி விழுந்தோருக்கு கைகொடுக்கும் வகையில் கொடுக்கும் உதவிகளை பல முறையர்ற வகையில் பெற்றுக் கொள்ளும் தந்திரோபாயங்களை பலர் மேற்கொள்ளுகிறார்கள் என்பது துயரத்துக்குரிய உண்மையாகும். அத்தோடு பொருளாதாரச் சிக்கல்களினால் எழும் வீட்டு வசதியின்மை, பாடசாலைகளில் குழந்தைகளுக்கு போதிய இடமின்மை, வைத்தியசாலைகளில் வைத்தியத்துக்காக காத்திருக்கும் கால அவகாசத்தின் நீடிப்பு என்பன இந்நாட்டு மக்கள் என்று கருதப்படுவோரின் (இதில் இங்கு குடியுரிமை பெர்று இந்நாட்டு பிரஜைகளாகிய பல வெளிநாட்டவரும் அடங்குவர்) மனதில் வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கை மீதான கண்ணோட்டத்தை மிகவும் எதிர்மறையாக மாற்றியுள்ள நிலையில் இன்றைய அரசியல் சூழல் இந்த 45 வருட காலத்தில் நான் என்றுமே கண்டிராத வகையில் ஒரு முக்கியமான் சந்தியில் நிற்கிறது.

    இனத்துவேஷம் கொண்டவர்கள் குளிர்காய்வதற்காக இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறேன். அமேரிக்காவில் ஆரம்பித்த மாற்றம் இன்று ஜரோப்பிய நாடுகளில் முக்கியமானவைகளையும் தொற்றிக் கொண்டதோ எனும் ஜயம் எழும் வகையில் பலநாடுகளின் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
    இவையனைத்துக்கும் இருக்கும் ஒரேயொரு ஒற்றுமை வெளிநாட்டவரின் வருகைக்கான எதிர்ப்பு ஒன்றே. கட்டுப்பாடின்றி வெளிநாட்டிலிருப்பவர்கள் மற்றைய நாடுகளில் குடியேறுவது என்பது ஆதங்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் இவ்வுணர்வு ஒரு இனத்துவேஷ வெறியாக மாறி இனக்கலவரங்களைத் தூண்டும் அளவிர்குச் செல்ல விடாமல் இன்றைய அரசியல் தலைவர்கள் கட்டுப்படுத்துவார்களா? என்பதுவே கவலைக்குரிய கேள்வியாகும்.

    இங்கிலாந்து நாட்டிலே 45 வருடங்களாகப் புலம்பெயர் வாழ்வினை மேற்கொள்ளும் என் முன்னால் இன்று நிகழும் அரசியல் மாற்றங்கள் மனதில் சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது எனக்குள் இத்தகைய உணர்வை முதர் தடவையாக ஏற்படுத்தியதான்ல் கொஞ்சம் சத்தமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இன்றைய அரசியல் விளையாட்டுத் திடலில் நான் ஒரு சாதாரண பார்வையாளனே ! வினாக்களுக்கு விடை காலத்தின் கைகளிலோ?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (295)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (295)

    -சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். நெடியதோர் இடைவேளை. சில காலம், சில வாரங்கள் மடலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் உங்களுடன் இணைகிறேன். காலம் என்பது ஒரு புத்தகம் போன்றது அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. தன் வேகத்தில் தனது புத்தகப் பக்கங்களை மூடிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. மூடப்படும் அந்தப் பக்கங்களுக்குள் எமக்குத் தெரிந்த, தெரியாத பல நிகழ்வுகளும் புதைபட்டுப் போகின்றன. ஆனல் நிகழ்ந்து விட்ட நிகழ்வுகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் தொடரும் அதன் பக்கங்களில் எழுதப்படும் பல அத்தியாயங்களுக்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது.

    கடந்து சென்ற இந்த சில வாரங்களுக்குள் இங்கிலாந்து அரசியல் புத்தகத்தில் பல புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வின் அதிர்வுகள் இங்கிலாந்தின் இத்தனை கால அரசியல் அமைப்பையே மாற்றி அமைத்து விடுமோ எனும் அச்சத்துடன் கூடிய ஆதங்கம் எழுந்திருக்கிறது. இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் பெரும்பான்மையான காலங்களில் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் தான் கோலோச்சி வந்திருக்கின்றன. வலதுசாரக் கொள்கைகளைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியும், இடது சார்புக் கொள்கைகளைக் கொண்ட லேபர் கட்சிகளுமே இவையாகும் . இவற்றின் நடுவே எழுந்தும் , தாழ்ந்தும் நடமாடிக் கொண்டிருந்தது லிபரல் கட்சி.

    1981ம் ஆண்டு லேபர் கட்சியின் போக்கு அதிதீவிரமான இடதுசார்பை நோக்கிப் போகிறது எனும் குற்றச்சாட்டில் நாலு மிதவாத பராளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறினர். ரோய் ஜென்கின்ஸ், சேர்லி வில்லியம்ஸ், டேவிட் ஓவன், பில் ரொஜேர்ஸ் எனும் நால்வரே அவர்கள் ஆவார்கள். இவர்கள் சோஸல் டெமகிரட்ஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார்கள். இவர்கள் 1983, 1987 பொதுத்தேர்தல்களில் லிபரல் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டுச் செய்து போட்டியிட்டார்கள். பின்பு 1988ம் ஆண்டு இரு கட்சிகளும் இணைந்து சோஸல் அன்ட் லிபரல் டெமகிரட்ஸ் எனும் கட்சியைத் தோற்றுவித்தார்கள். பின்பு சிறிது காலத்தில் இக்கட்சி லிபரல் டெமகிரட்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது.

    இங்கிலாந்து அரசியல் அரங்கில் பல காலமாக இம்மூன்று கட்சிகளே முன்னிலை வகித்து வந்தன. இவை தவிர பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வழமை இருந்தாலும் அவைகள் எதுவுமே அரசியல் அரங்கில் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டுவரும் வல்லமை படைத்தவையாக இருக்கவில்லை.ஈதர கட்சிகளில் சில மிகத்தீவிரவாதமான வலதுசாரப் பிரச்சாரங்களை முன்வைப்பவைகளாக இருந்தன. வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்துக்கு எதிரான பிரச்சாரமே ஓரிரு கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்நிலையில் தான் ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து வகிக்கும் உறுப்பினர் அங்கத்துவத்தின் எதிர்மறையான பாதிப்புகள் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் கன்சர்வேடிவ் கட்சிக்குள் மிகத்தீவிரமாக ஒலித்தது.

    இக்கோஷத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தீவிர வலதுசார இனத்துவேஷம் கொண்ட கட்சிகளும் ஜரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் குதித்து இவ்வங்கத்துவமே இங்கிலாந்தில் வெளிநாட்டவர் சுலபமாக வந்து குடியேற உதவுகிறது எனும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தமை இங்கிலாந்தின் வெள்ளை இனத்தவர்கள் அதுவும் குறிப்பாக மூத்தோர்கள் மத்தியில் இனத்துவேஷ உணர்வுகளையும், தேசியம் என்கிற உணர்வின் பெயரில் தன்னாட்டு ஆர்வத்தையும் முடுக்கி விடத் தொடங்கியது. இத்தகைய உணர்வுகளுக்குத் தூபமிடும் வகையில் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள் தம்மை இங்கிலாந்து வெள்ளைச் சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்தி ஒரு குழுநிலை மனப்பான்மையோடு வாழும்முறை கைகொடுத்தது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.

    எமது வாழ்வினை மேற்கொள்வதற்கு இங்கிலாந்து நாட்டினை தேர்ந்தேடுத்துவிட்டு அங்கு எமது வாழ்க்கைமுறைகளைத் திணிக்கும் முயற்சியில் பல சமூகங்கள் ஈடுபட்டதும் வெள்லை இனத்தவர் மனங்களில் தமது கலாச்சாரம் பறிபோவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்பதும் உண்மையே. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது கலாச்சாரமுறையில் வாழ்வதற்கு இங்கிலாந்து நாட்டு அரசியல் சட்டம் இடமளித்து இருக்கிறது. இத்தகைய ஒரு சகிப்புத் தன்மையை அதன் எல்லைக்கு இட்டுச் செல்லும் வகையில் பல வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மையே. இந்தப் பின்னனியில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அதாவது ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் கோஷத்துக்கு ஆத்ரவு பெருகிக் கொண்டு வந்தது. இந்த ஜரோப்பிய ஒன்றியப் பிரச்சனை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் நாலு தலைவர்களைக் காவுகொண்டதுகீதனிடையே கன்சர்வேடிவ் கட்சியின் போக்கில் அதிருப்தி கொண்ட உறுப்பினரான ஒரு செல்வந்தரான நைஜல் வரா௺ஜ் என்பவர் யூனைட்டட் கிங்டொம் இன்டிப்பென்டன்ஸ் கட்சியத் தோற்றுவித்தார். இக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சியின் வாக்குகளை அபகரிக்கத் தொடங்கியது. தமது கட்சிக்குள் இருக்கும் இம்முரண்பாட்டை தீர்க்கவில்லையானல் நைஜல் வராஜ் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட டேவிட் கமரன் உண்டு இல்லை என்று தீர்மானிப்பதற்காக அடுத்த பொதுத்தேர்தலில் டேவிட் கமரன் தாம் வெற்றி பெற்றால் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா, இல்லையா? எனும் தீர்வுக்கான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவோம் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய கொள்கையாக முன்மொழிந்து தேர்தலில் வெற்றியும் பெற்றார்

    விளைவு!

    2016ம் ஆண்டு நடைபெற்ற ப்றெக்ஸிட்டுக்கான பொதுஜன வாக்கெடுப்பு. சுமார் ஒரு மில்லியனுக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களிக்கப்பட்டது. இதை நைஜல் வராஜ் அவர்கள் தனது வெற்றியாகவே கொண்டாடினார். அதைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரச்சாரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட யூகிப் எனும் நைஜல் வராஜ் அவர்களின் கட்சி தனது செயல்பாட்டை முடக்கி செல்வாக்கிழந்தது. இவ்வெளியேற்றத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த அப்போதைய பிரதமர் டேவிட் கமரன் இந்த வெளியேற்றத்தை முன்னெடுக்கும் தகுதியை இழந்து விட்டேன் என்று கூறி பிரதமர் பதவியிலிருந்து விலகிய டேவிட் கமரன் வர்கள் அரசியலிருந்தே முற்றாக ஒதுங்கி விட அவரது இடத்துக்கு அம்மையர் திரேசா மே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நாட்டு மக்கள் தமக்கு இந்த ப்ரெக்ஸிட் வெளியேற்றத்துக்கான முழு ஆணையைத் தரவேண்டும் என எதிர்பார்த்து தமது கட்சி முன்னனி உறுப்பினர்களின் கருத்துக்கு முரணாக ஒரு பொதுத்தேர்தலை நடத்தி தமது கட்சிக்கு இருந்த பெரும்பான்மை பலத்தைக் குறைத்ததினால், ஜக்கிய இராச்சியத்தின் அங்கமான் வட அயர்லாந்தின் வலதுசார தீவிரவாதக் கட்சியான டெமக்ரட்டிக் யூனியன் கட்சியின் தயவுடன் அரசாங்கம் அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவிதமான உடன்படிக்கையுமின்றி வெளியேற வேண்டும் என்பதுவே கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருந்த சிறுபான்மையான் தீவிரவாத பாராளுமன்ற உறுப்பினர்களின் வாதம். இதையே நைஜல் வராஜ் எனும் வணிகத்திலிருந்து அரசியலுக்குத் தாவிய நைஜல் வராஜ் அவர்களும் முன்மொழிந்தார். ஆனால் இங்கிலாந்தின் பல முன்னனித் தொழில் தலைவர்களும், பல நிதி நிறுவனங்களும் ஜரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து ஒழுங்கான வகையில் வெளியேறுவது ஒன்றே இங்கிலாந்தின் பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்கும் என்று வலியுறுத்தினார்கள். இதையே பிரதமர் தெரேசா மேயும் அவரது மந்திரி சபையின் பெரும்பான்மை அமைச்சர்களும் நம்பினார்கள்.

    விளைவாக எதுவித உடன்படிக்கையுமின்றி வெளியேறுவது எனும் கொ:ள்கையைக் கைவிட்டு தெரேசா மே அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்துடன் மிக நீண்ட பேச்சுவார்த்தைகளின் வழி ஒரு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார்கள். இதுவே ஜக்கிய இராச்சியத்துக்கு தம்மால் அளிக்கக்கூடிய அதிகூடிய சலுகை என்பதில் ஜரோப்பிய ஒன்றியம் உருதியாக இருந்தது. இதற்கு மேல் எமக்குச் சாதகமாகப் எதையும் பெற முடியாது இது எமது அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர்வதற்கு எமக்கு உகந்தது என்று பிரதமர் இவ்வுடன்படிக்கையை ஆதரித்து பாரளுமன்றத்தின் அனுமதிக்காகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டு சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவ்வுடன்படிக்கையை எதிர்க்கட்சிகள் உட்பட பிரதமரின் கட்சியில் இருந்த தீவிரவாத ஜரோப்பிய ஒன்றியத்துக்கெதிரான உறுப்பினரகளோடு அரசாங்கத்தில் இணைந்திருந்த வட அயர்லாந்து பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தமையே இத்தோல்விக்குக் காரணம். அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரதமர் தனது பதவியை இராஜினாமச் செய்ய வேண்டும் எனும் கோஷம். ஆயினும் தனது கொள்கையில் உறுதியாக இருந்த பிரதமர் தனது செயற்பாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டு சிறு சிரு மாற்றங்களுடன் மூன்று முறை இவ்வுடன்படிக்கையை பாரளுமன்றத்தின் முன் வைத்து மூன்று முறையும் தோல்வியுற்றார்.

    இங்கிலாந்துப் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோட்பாடுகளை அதன் எல்லைகள் வரை நகர்த்தி பரிசோதிக்க ஆரம்பித்தது. எதுவித உடன்படிக்கையுமின்றி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் விலகுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைந்தது. இது பிரதமரை மேலும் சிக்கலுக்குள் தள்ளியது. எவ்வகியிலாவது ஜரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கையின் வழிதான் விலகுவது எனும் முடிவுக்கு பிரதமரைத் தள்ளியது. அவரது கட்சிக்குள் இருந்த தீவிரவாத உறுப்பினர்கள் இதனால் கொதிப்படைந்தனர் ஏனெனில் ஜரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்பை அறவே துண்டிக்க வேண்டும் என்பதுவே அவர்களது கொள்கை. இவர்களோடு நைஜல் வராஜ் என்பவரும் சேர்ந்து பிரதமரின் செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். ஜனநாயக மரபின்படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என ஆணையிட்ட மக்களின் தீர்ப்பை ஏறக்குறைய மூன்று வருடங்களாகியும் நிறைவேற்றவில்லை எனும் வாதத்தை முன்வைத்து பிரதமருக்கு எதிரான ப்ரச்சாரத்தை முன்னெடுத்த நைஜல் வராஜ் போன்றவர்களின் வாதம் வலுப்பெற்றது. நைஜல் வராஜ் “பிரெக்ஸிட்” எனும் கட்சியை ஆரம்பித்தார்.

    எதற்காக என்கிறீர்களா?

    2016 சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனும் முடிவை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று கூறி ஜக்கிய இராச்சியம் தாம் 2019 மார்ச் மாதம் 29ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் என்று சட்டப்பிரகாரம் அறிவித்தது. அப்படி வெளியேறியிருந்தால் கடந்த மாதம் நடைபெற்ற ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தல்களில் ஜக்கிய இராச்சியம் பம்குபற்ற வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் நீண்டு கொண்டிருக்கும் பிரச்சனையால் வெளியேற வேண்டிய காலக்கெடுவுக்கு அவகாசம் வேண்டி இத்திகதி 2019 அக்டோபர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நடந்து முடிந்த ஜரோப்பிய தேர்தலில் ஜக்கிய இராச்சியம் பங்கு பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமானது. மக்களின் எதிர்பார்ப்பு ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவித தொடர்புமில்லாமல் வெளியேறுவதே என்பதை தமக்கு அவர்கள் தரும் ஆதரவின் மூலம் நிரூபிக்கப் போவதாக நைஜல் வராஜ் கூறி அதற்காக இப்புதுக்கட்சியை ஆரம்பித்தார்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல் அரங்கின் முன் முக்கியமாக தலைவிரித்தாடும் கேள்வி கரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதா? இல்லை தொடர்ந்து நிலைபெறுவதா? என்பதுவே. இதனை எந்தக் கட்சிக தெள்ளத்தெளிவாக வலியுறுத்துகின்றனவோ அக்கட்சியே மக்களின் ஆதர்வைப் பெறும் எனும் நம்பிக்கை நிலவியது. இங்கு நைஜல் வராஜ் அவர்கள் ஆரம்பித்த கட்சி அனுகூலமான் நிலையிலிருந்து. தெள்ளைத் தெளிவாக எதுவித உடன்படிக்கையுமில்லாமல் அக்டோபர் 31ம் திகதி வெளியேற வேண்டும் என்பது ஒன்றே அவர்களது கொள்கையாகவிருந்தது ஆனால் ஜரோப்பிய ஒன்ரியத்துடனான உறவு சுமுகமான் முறையில் நீடிக்க வேண்டும் எனும் கருத்தை தெளிவாக முன்வைத்த கட்சிகள் இரண்டு , மூன்றெனப் பிளவு பட்டிருந்தன. இதுவரை அரசியல் அரங்கின் முக்கிய கட்சிகளாக இருந்த கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது நிலைப்பாட்டில் தெளிவாக இல்லாததினால் கருத்துக் கணிப்புகளில் மிகவும் ஓரங் கட்டப்பட்டிருந்தார்கள்.

    நடந்து முடிந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதையே ஊர்ஜிதப்படுத்தின;. நைஜல் வராஜ் அவர்களின் பிரெக்ஸிட் கட்சி அதுகூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெர்ற கட்சியாக வலுப்பெற்றது இருப்பினும் ஜரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் எனும் கருத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளைக் கூட்டினால் அதுவே அதிக வாக்குகளைக் கொண்டிருந்தது இருப்பினும் இவை பல கட்சிகளுக்கிடையே பிரிக்கப்பட்டதினால் அவர்களுக்கு கிடைத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    இத்தேர்தல் முடிவு எமது பிர்தமர் தெரேசா மே அவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. அவரது கட்சியின் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கும் சபை அவர் எப்போது பதவி விலகுவார் என்று அறிவிக்கும்படி அவருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தது. இரும்பு மனுசியாக இருந்த பிரதமர் தளர ஆரம்பித்தார். தான் யூன் மாதம் 7ம் திகதி தனது கட்சியின் தலைமைபதவியிலிருந்து விலகுவதாகவும் அடுத்த தலைவரின் தெரிவு வரை பிரதமராக நீடிப்பதாகவும் கண்ணிருடன் அறிவித்தார். இதுவரை சுமார் 11 கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சில அமைச்சர்கள் உட்பட தாம் தலைமப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். யார் புதிய பிரதமர் ஆவார்கள் என்பது யூலை மாத இறுதியில் நிர்ணயிக்கப்படும்.

    இந்த மார்றங்கள் இன்றைய ஜக்கிய இராச்சியத்தின் அரசியல் நிலையை எந்தத் திசையை நோக்கி செலுத்துகிறது? இதுவரை மாறி, மாறி அரசமைத்து வந்த கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது செல்வாக்கினில் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றன. தேசியம், நாட்டுப்பற்று எனும் கோஷங்களை முன்வைத்து தலைதூக்கியிருக்கும் நஜல் வராஜ் அவர்க:ளுடைய பிரெக்சிட் எனும் கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. தாம் எதிர்பார்த்தவகையில் ஜக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய உன்ரியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கை இடன்பெறவில்லையானல் தாம் இங்கிலாந்தின் பொது அரசியலில் ஒரு புது விசையாக இயங்கப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். இவரது இந்த தேசியம், நாட்டுப்பற்று எனும் கோஷம் வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடுப்பதை முக்கியமாக்க முடிவெடுக்குமானல் அதுவே இனத்துவேஷமாக மாறும் வாய்ப்புகள் பல உண்டு.

    இந்தச் சூழலில் ஜக்கிய இராச்சியத்தில் புலம்பெயர் வாழ்க்கையை மேற்கொண்டுவரும் பல சமூகத்தினரின் பங்களிப்புகள் எவ்வகையில் இந்த ரசியலில் இருக்கப் போகிறது என்பதுவே முக்கியம். சமூகங்களுக்கிடையிலான பிரிவினைகளை முதன்மைப் படுத்தும் வகையில் கலாச்சாரப் பாதுகாப்பு எனும் நடவடிக்கையில் ஒதுச் சமுதாயத்திலிருந்து தம்மை அந்நியப்படுத்தும் வகியிலான குழுநிலை மனோபாவங்கள் தலைதூக்கப் போகின்றதா? என்பது முக்கியமான கேள்வியாகிறது. எமது அடையாளங்களைத் தொலைக்காமல் அதேசமயம் எமது நடவடிக்கைகள் சிரிதாக சுவாலை விட்டுக் கொண்டிருக்கும் இனத்துவேஷத்துக்கு எண்ணெய் வார்க்காத வகையில் இருக்குமாறு செய்வதற்கு ஒவ்வொரு சமூகத்திலும் அதன் காவலர்களாகத் தம்மை இனங்காட்டி நடந்து கொள்பவர்கள் எவ்வகையில் பங்க;இப்புச் செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Pic courtesy: https://en.wikipedia.org/wiki/File:Theresa_May_portrait.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (294)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

    தேர்தல் !

    ஜனநாயகக் கோட்பாடுகளின் அடித்தளம் தேர்தல் என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பது அத்தேர்தலின் நடைமுறைப்படுத்தலே. நான் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்த போது எனக்கு வயது 18 இன்றோ 62 எனும் முதுமையின் வாசலில் நுழைந்து விட்டேன். நான் ஈழத்தில் அன்று பார்த்த தேர்தல்களுக்கும், இன்று இங்கிலாந்திலே பார்க்கும் தேர்தல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. அன்றைய எனக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்ற உணர்வையே அளித்தது. அத்தேர்தல்களினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் எவ்வாறு எம்முடைய அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகிறது என்பதன் அர்த்தத்தைச் சரியாக உள்வாங்கியிருக்கவில்லை. ஈழத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் தேர்தல் என்பது அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு ஊடகமாகவே கருதினார்கள். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மை பலத்தை பெறுவது நடைமுறை வழக்கமாகவிருந்தது.

    தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுமையான அர்த்தத்தை உள்வாங்கும் அளவிற்கு பரந்த அளவிலான நோக்கத்தை அப்போது நான் கொண்டிருக்கவில்லை என்பதோடு அரசியல்வாதிகளின் பொதுவான கோஷம் தமிழர்களின் மறுக்கப்படும் உரிமைகளைப் பற்றியதாகவே இருந்தது என்பதுவே உண்மை. நான் புலம் பெயரும் போது வாக்களிக்கும் வயதினை அடையாததினால் ஈழத்தில் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. தேர்தல்களின் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொண்டது நான் புலம்பெயர்ந்து வாழ்ந்த இங்கிலாந்து தேசத்திலே தான். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாள் நான் இங்கிலாந்தில் கால் பதித்தேன். அந்த ஆண்டே இங்கிலாந்தில் ஒரு தேர்தல் வந்தது. அத்தோடு ஒரு சர்வஜன வாக்கெடுப்பும் வந்தது. இங்கிலாந்தில் அப்போதுதான் புதிதாக வந்ததாலும், இங்கிலாந்தின் குளிர்காலச் சூழலுடன் சதிராடுவதோடு கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தியதாலும் அன்று அந்தத் தேர்தலிலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நான் அதிக கவனம் செலுத்தவில்லை. என்னுடைய நாட்டுத் தேர்தலையும் இங்கிலாந்தின் தேர்தலையும் ஒப்பிடக்கூடிய மனநிலையையும், அரசியல் அறிவையும் பெற்றிருக்கவில்லை. அன்றைய சூழலில் மேற்படிப்பை முடித்துக் கொண்டு ஈழம் திரும்புவதே என் நோக்கமாக இருந்ததால் இங்கிலாந்தை இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? எனும் ஒரு மனப்பான்மை என்னை வியாபித்திருந்ததோ என்று இன்று என்னை எண்ணத் தூண்டுகிறது..

    இன்று இங்கிலாந்தில் 44 வருட வாழ்க்கையை முடித்து 45வது வருடத்தில் கால் பாதித்திருக்கும் எனக்கு எத்தனையோ தேர்தல்களை இங்கிலாந்தில் சந்தித்த அனுபவம் உண்டு. பல பிரதமர்களையும், பல கட்சிகள் அரசியல்பீடம் ஏறியதைப் பார்த்த அனுபவங்களும் உண்டு. பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்தை ஆண்ட தலைவர்களையும், ராஜ்ஜியத்திலிருந்து பூஜ்ஜியமான தலைவர்களையும் பார்த்த அனுபவம் உண்டு. இந்த நிலையிலே இங்கிலாந்தின் தேர்தலோடு எமது பின்புலங்களில் நடைபெறும் தேர்தலை குறிப்பாக இந்திய மண்ணில் தற்போது நிகழும் பொதுத்தேர்தலையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கத் தலைப்படுகிறேன். எனது மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் தமிழ் மீதும் அதன் தாயகமான தமிழகத்தின் மீதும் அன்பும், மதிப்பும் கொண்டுள்ளதாலும் இந்திய நாட்டிற்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதை வழமையாகக் கொண்டிருப்பதால் அங்கு அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் ஒரு மூன்றாவது கண்கொண்டு இதைப் பார்க்க விழைகிறேன்.

    இங்கிலாந்தினைப் பொறுத்தவரையில் தேர்தலில் பல வருடங்களாக இரண்டு கட்சிகளே முன்னனியில் இருக்கின்றன. கன்சர்வேடிவ் கட்சி எனும் வலதுசாரக் கொள்கை கொண்ட கட்சியும், லேபர் கட்சி என்று சொல்லப்படும் ஸோசலிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரக் கட்சியுமே அவையாகும். அதைத் தவிர இரண்டுக்கும் இடைப்பட்ட கொள்கையுடைய லிபரல் டெமகிரட்ஸ், தேசியவாதக் கொள்கை கொண்ட தீவிர வலதுசாரக் கட்சியான யூகிப், மற்றும் மிகவும் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரெக்ஸிட் எனும் கட்சி என்பனவும் சில உதிரிக் கட்சிகளும் இயங்குகின்றன. இங்கிலாந்து அரசின் ஆயுட்காலம் ஜந்து வருடங்களாகும். ஆனால் 2010ம் ஆண்டு வரையும் பெரும்பான்மையான சமயங்களில் அரசை நான்கரை ஆண்டுகளிலிருந்து ஜந்து ஆண்டுகளுக்குள் கலைப்பது வழமையாக இருந்தது. ஆனால் 2010ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பெரும்பான்மை மிகவும் குறைவாக இருந்தமையால் முதன்முறையாக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டார்கள். அக்கூட்டரசாங்கத்தில் இயற்றப்பட்ட முதல் சட்டங்களில் ஒன்றாக பாராளுமன்றம் பாராளுமன்ற அங்கத்தினர்களின் பெரும்பான்மை இல்லாமல் ஜந்து ஆண்டுகளுக்கு முன்பாக கலைக்கப்பட முடியாது எனும் சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

    இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் ஜந்து வருடங்களுக்கொருமுறையே நடைபெறுகிறது. இந்தியாவைப் பற்றிய உலகளாவிய கண்ணோட்டம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா என்பதுவே. ஆனால் இந்திய நாட்டில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். முக்கியமான கட்சிகள் சிலவாகவே இருந்தாலும் இந்திய தேர்தல்களைப் பொறுத்தவரையில் அதிக அளவில் கூட்டரசாங்கம் அமைப்பதுவே இடம்பெறுகிறது. ஆச்சரியத்துக்கும், கேள்விக்குரியதுமான விடயம் என்னவெனில் கொள்கையளவில் முற்றுமுழுதாக வேறுபட்டிருக்கும் கட்சிகள் தேர்தல் சமயங்களில் கூட்டணி அமைத்துக் கொள்வதுதான். ஏறத்தாழ அடிப்படைக் கொள்கையில் ஒன்றுபட்ட கட்சிகள் இணைவது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. ஆனால் ஒன்றுக்கொன்று முரணான கட்சிகள் இணைவதில் பல கேள்விகள் மனதில் எழுவது இயற்கையே !

    இங்கிலாந்து, இந்தியத் தேர்தல்களை சிறிது ஒப்பு நோக்குவோம். இரண்டு நாடுகளிலேயும் ஜனநாயக ஆட்சி எனும் பொறிமுறையே கையாளப்படுகிறது. தேர்தல்களில் யார் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் பொதுவாக “first past the post” என்பார்கள். பலநாடுகளில் விகிதாசார வாக்கெடுப்புத் தேர்தல்களே நடைபெறுக்கிறது ஒவ்வொரு கட்சியும் தமது கட்சிக்கான வேட்பாளர்களைத் தொகுதி வாரியாக அறிவித்தாலும் வாக்கு அந்நபர்களுக்கு அல்லாமல் கட்சிக்கே போடப்படுகிறது. அதன் பின்னால் ஒவ்வொரு கட்சிக்கும் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையில் அக்கட்சிக்கு இத்தனை உறுப்பினர்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் எமது இருநாடுகளிலும் வாக்குகள் தேர்தலில் போட்டியிடும் கட்சியோடு போட்டியிடும் வேட்பாளர்களையும் கருத்திற்கொண்டு வாக்களிக்கப்படுகிறது.

    இங்கிலாந்தில் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் தேர்தலின் முன்னால் அக்கட்சிகளின் மாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அத்தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலும் அக்கட்சியின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையிலும் மக்கள் தாம் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கிறார்கள். இங்கிலாந்தின் தேர்தல் முடிவுகளின் தீர்மானத்தில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் முன்னிலை படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதாரண வாக்காளரும் மிகவும் உன்னிப்பாக அப்போது பதவியிலிருக்கும் அரசால் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் தம் வாக்களிப்பைத் தீர்மானிக்கிறார்கள்.

    அதேநேரம் இந்தியத் தேர்தலும் பெயரளவில் ஜனநாயகக் கோட்பாடுகளில் நடைபெற்றாலும் அத்தேர்தல் சமயங்களில் நாம் கேள்வியுறும் செய்திகளின் அடிப்படியில் தேர்தல் முடிவுகளின் தீர்மானம் எந்தக் கட்சிக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறதோ அதன் வழி என்பது போலத் தோன்றுகிறது. தேர்தல் சமயங்களில் ஒவ்வொரு கட்சியினது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா இல்லையா எனும் கேள்வி வாக்களர்களிடையே அலசப்படுக்கிறதா என்பதும் குழப்பமாகவே இருக்கிறது..

    இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் தேர்தல் பிரசாரங்கள் ஓரளவு அரசியல் நாகரீகத்துடனேயே நடைபெறுகிறது. பெரும்பான்மையாக தனிமனித தாக்குதல்கள் தவிர்க்கப்படுகிறது. இரண்டு கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான விவாதம் நாகரீகமான முறையிலேயே பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஆங்காங்கே சில சமயங்களில் விதிவிலக்குகள் இடம்பெறுவதுண்டு. ஆனால் அவை உடனடியாக பிரபல்யப்படுத்தப்பட்ட அதில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான விமர்சனம் சரியான முறையில் ஊடகங்களில் ஆராயப்படுகிறது. ஊடகங்களின் பொதுவான அடிப்படை ஆதரவு வெவ்வேறு கட்சிகளை நோக்கி இருந்தாலும் கூட அவைகளின் செய்திகள் நடுநிலைமை வாய்ந்ததாகவே இருக்கும். குறிப்பாக செய்திகள் வெளியிடப்படும் போது அது ஒருபக்கச் சார்பாக அமைவது குறைவு.

    இந்தியத் தேர்தல் பிரசாரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த அரசியல் நாகரீகம் பேணப்படுவது அரிது. இது எமது கலாச்சாரத்தின் விளைவா? அன்றி அரசியல்வாதிகளின் உணர்வினைக் கட்டுப்படுத்தத் தவறும் இயல்பா? என்பது கேள்விக்குறியே! அத்தோடு ஊடகங்கள் அப்பட்டமாக ஒருபக்கச் சார்பாக செய்திகளை வெளியிடுவதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊடகங்களில் நடுநிலைமை வகிப்பன மிகவும் சொற்பமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தமக்குச் சார்பான ஊடகங்கள் மூலம் மக்கள் மீது திணிக்கும் பிரச்சாரச் செய்திகள் மக்களைத் திக்குமுக்காடச் செய்க்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. சில தொலைக்காட்சி விவாதங்களை கண்ணுற்ற வேளை அவ்வூடக நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சரியான கொள்கைரீதியிலான கேள்விகளை முன்வைத்தாலும் அவற்றிற்கு பதிலளிக்கும் அரசியல்வாதிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தம்மையறியாமலே சிலசமயங்களில் தனிமனித தாக்குதல்களில் இறங்கி விடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

    இங்கிலாந்து தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியும் தமது தேர்தல் பிரசாரங்களுக்காக செலவளிக்கும் பணத்துக்கு இவ்வரம்பினை மீறும் கட்சிகளின் மீதும், அதனுடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. ஒரு வரம்பு நிர்ணயித்திருக்கிறது. இதன் உதாரணமாக கடந்த 2017 பொதுத்தேர்தலின் போது ஒரு தொகுதியில் இவ்வரம்பு மீறப்பட்டதாக குற்றம் சாட்டி அதற்கான வழக்குத் தொடரப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. அத்தோடு 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைபெறுவதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் வெளியேற வேண்டும் எனும் அணி தமது பிரசாரங்களுக்காக அனுமதிக்கப்பட தொகையை மீறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்து அதையோட்டி சர்ச்சைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

    நடந்து முடிந்த இந்திய பொதுத் தேர்தலின் போது பணம் சம்பந்தமான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஒரு சில தொகுதிகளில் தேர்தல் கூட இரத்துச் செய்யப்பட்டுள்ளதைக் கேள்வியுறுகிறோம். சரி இங்கிலாந்திலும் இப்படியான சம்பவம் நடந்துள்ளதாக மேலே குறிப்பிட்டுள்ளாயே என்ன வித்தியாசம் ? எனும் கேள்வி எழலாம். இங்கிலாந்தில் இத்தகைய சம்பவங்களின் செய்தி மக்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணுமளவுக்கு மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் இந்தியாவில்? கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஒரு ஜனநாயக ஆட்சியில் தேர்தலின் முக்கியத்துவம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே! மக்களின் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களுக்காக நாட்டினைச் சரியான பாதையில் செலுத்தும் முக்கிய நோக்கத்திற்காகவே இந்தத் தேர்தல். மக்களின் சேவகர்கள் என மக்களால் நியமிக்கப்பட்டவர்கள் சில சமயங்களில் அம்மக்களால் புரிந்து கொள்ள முடியாத சில விடயங்களில் அம்மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணான வகையில் நடந்து கொள்ளும் தேவையேற்படுக்கிறது. அதுகூட ஜனநாயகத்தின் ஒரு அங்கமே! அப்படி நடந்து கொள்ளும் போது அதற்கு சரியான விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டியது அவர்களது கடமை.

    கட்சித் தாவல் என்பது இரண்டு நாடுகளிலேயும் நிகழத்தான் செய்கிறதி. ஆனால் இங்கிலாந்தில் அதன் எண்ணிக்கை குறைவு. அப்படிக் கட்சி தாவும் போது அவர்கள் மக்கள் தம்மைத் தெரிவு செய்தது தமது மீதான மதிப்பினாலா? அல்லது தாம் அங்கம் வகித்த கட்சிக்காவா? என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். என்னைப் பொறுத்தவரை அரசியல் தர்மம் என்பது அவர்கள் அப்பதவியை இராஜினாமாச் செய்து மீண்டும் தேர்தலில் நிற்பது என்பதே. அப்படி மீண்டும் தேர்தலில் நிற்கும் போது அவர்கள் தமது செய்கைக்கான விளக்கத்தை மக்களுக்கு கொடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தைப் பெறுகிறார்கள்.

    இம்மடலின் நோக்கம் இரண்டு நாடுகளைக் குறிப்பிட்டு ஒன்றினை விட மற்றொன்று குறைந்தது என்று சுட்டிக்காட்டுவதல்ல. ஈழத்திலிருந்து 45 வருடங்களுக்கு முன்னே புலம்பெயர்ந்த என் முன்னே விரிந்த அரசியல் உலகம் இங்கிலாந்திலேயே நிகழ்ந்தது. இங்கிலாந்தை அடுத்து நான் அதிகமாக பயணிப்பது இந்தியா அதுவும் குறிப்பாக தமிழகமே ! அதனால் இந்திய குறிப்பாக தமிழகத் தேர்தல்களை உன்னிப்பாகக் கவனிப்பது அதைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது என்னுடைய ஆர்வம். அதன் அடிப்படையில் இரண்டு தேர்தல்களையும் சிறிது ஒப்பீடு செய்து பார்க்க எண்ணினேன். இது ஒரு ஆராய்ச்சியாளனின் கட்டுரையல்ல ஒரு சாமானிய புலம்பெயர் தமிழனின் பார்வையில் ஒரு கோணத்தில் எழுந்த கருத்துக்களே.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (293)

    சக்தி சக்திதாசன்

    அன்புள்ளம் கொண்டவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைக்கிறேன். இதோ 2019ஆம் ஆண்டு சித்திரைத் திருநாள் வந்துவிட்டது.  தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது என்று குதூகலமாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்பவர்கள் ஒரு புறமும், இது தமிழர்களின் புத்தாண்டேயல்ல. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளே. வேண்டுமானால் இதைச் சித்திரைத் திருநாள் என்று கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களின் புத்தாண்டு அல்ல என்று வாதிடுவோர் ஒருபுறமாகவும் நின்று வாதாடும் ஒரு காலக் கட்டத்தில் நாம் இந்த நாளைக் கடந்து செல்கிறோம்.

    நான் எனது பால்ய பருவத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்போது நான் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த காலம். அன்றைய காலக்கட்டங்களில் இத்தகைய விவாதங்கள் இத்துணை காரசாரமாக விவாதிக்கப்பட்டதா? என்பது பற்றி எனக்குச் சரியான தெளிவில்லை. ஆனால் இத்தனை அளவிற்கு ஓங்கி ஒலிக்கவில்லை என்பது எனது கருத்து. அன்று எனது பால்யப் பருவமாதலால் நிகழ்ந்த அந்த விவாதங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எனது அறிவு வளர்ந்திருக்கவில்லையா?  இல்லையானால் உண்மையாகவே இப்படியான தர்க்கங்களின் அளவு அந்நாட்களில் குறைவாக இருந்தனவா? இது இன்று என்னை நானே கேட்கும் கேள்விகள்.

    விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதனை யாரும் மறுத்து விட முடியாது. ஆனால் அவ்விவாதங்களின் முறை அவற்றின் ஆக்கிரோஷம் எவ்வகையில் இருக்க வேண்டும்? இன்று சில சமூக வலைத்தளங்களின் குழுக்களில் நடக்கும் விவாதங்களைப் பார்க்கும் போது இத்தகைய விவாதங்கள் நடக்கக்கூடிய வகையில் அவற்றில் யாரும் கலந்து கொள்ளக்கூடிய வசதி இருக்கும் நிலையைக் கண்டு ஒருபுறம் உள்ளம் மகிழ்ந்தாலும் அங்கே இடம்பெறும் விவாதங்களின் தன்மை அதன் கருத்தினின்றும் விலகிச் செல்வதைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. கருத்துப் பேதத்தினால் ஆரம்பிக்கும் விவாதம் தனிநபர் தாக்குதல் எனும் அளவுக்கு விரிவாக்கம் பெற்று விடுகிறது. இது ஆரோக்கியமானது அல்ல .

    சமய, கலாச்சாரங்களின் அடிப்படையில் அனுசரிக்கப்படும் சடங்குகள்,  சம்பிரதாயங்கள் என்பன விஞ்ஞான நிரூபணங்களுக்கு அப்பாற்பட்டவை.  அவற்றிற்கான ஆதாரங்களைத் தேட முயல்வது தவறல்ல. ஆனால் ஆதாரத்தைத் தேடுகிறோம் எனும் நோக்கில் செயற்படும்போது தமது வாழ்க்கையின் அடித்தளமாக அச்சமய, கலாச்சார அடையாளங்களை நம்பியிருப்போரின் வாழ்வின் அத்திவாரங்களையே அசைக்க முற்படுகிறோம் என்பதை மறந்து விடலாகாது.  நம்பிக்கை என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட உரிமையாகும். அந்நம்பிக்கை அவர்களைச் சமுதாய ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்துக்குமுரிய பாதையில் இட்டுச் செல்லுமானால் அது அற்புதமானது. ஆனால் அனைத்து வேளைகளிலும் அப்படி நடப்பதல்ல தாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிப்பதோ அன்றி எமக்கு நம்பிக்கையற்ற காரணத்தினால் நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையை உடைக்க முற்படுவதோ சமூக வளர்ச்சிக்கான முன்னேற்றப் பாதையில் நம்மை இட்டுச் செல்லாது. ஆத்திகத்தின் இருப்பை நாத்திகம் எந்த அளவிற்கு உறுதிப் படுத்துகிறதோ நாத்திகத்தின் இருப்பை ஆத்திகமும் அந்த அளவிற்கு உறுதிப்படுத்துகிறது .

    எம்மைப் போலவே அடுத்தவரும் எனும் நினைப்பு உண்மையாக எப்போது எம்முள்ளத்தில் நிலை கொள்ளத் தொடங்குகிறதோ அப்போதுதான் மற்றவர்கள் உரிமையை மதிக்கும் தன்மை உண்மையாக உள்ளத்தில் ஏற்படும். இன்றைய உலகிற்கும் அன்றைய உலகிற்கும் வேறுபாடுகள் அதிகம். எதோ ஒரு நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்வு மற்ற ஒரு நாட்டினைச் சென்றடைவதற்கு எத்தனையோ வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இப்போதோ ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே சமூக வலைத்தளங்களினூடே உடனடியாகச் சர்வதேச அளவில் அந்நிகழ்வு விளம்பரப்படுத்தப் படுகிறது. அன்று வாழ்வின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக முழுமூச்சுடன் உலகனைத்தும் உழைத்துக் கொண்டிருந்தது. இன்று உலகின் ஒரு பாகம் அனைத்து வசதிகளுடனும், மற்றொரு பாகம் வறுமையின் அடித்தளத்திலும் உழன்று கொண்டிருக்கிறது.

    மதம், கலாச்சாரம் என்பன பொழுது போக்கு அம்சங்களாக மக்களை அலங்கரிக்கும் அலங்காரங்களாக ஒருபுறமும், இவற்றின் அடிப்படையின்றி அடுத்தவேளை உணவு கூட இன்றி அல்லல்படும் சமுதாயாமக மற்றொரு புறமும் உலகம் பிரிந்து கிடக்கிறது. இருப்பவர்கள் தம்மிடம் இருப்பவற்றைக் காப்பாற்றிக் கொள்ளும் கவசமாக இச்சமுதாய அடையாளங்களை உபயோகிப்பதையும், இல்லாதவர்கள் தம்மைக் காத்துக் கொள்ளும் ஆயுதங்களாக இவற்றை உபயோகிப்பதையும் காண்கிறோம். இன்றைய உலக அரங்கில் உலகளாவிய பரந்து பட்ட பார்வை குறுகிக் கொண்டே போகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகள் முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளுக்குத் தாம் செய்து வரும் உதவிகளை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கும் காலமாகி விட்டது. உதவி எனும் பெயரில் தமது நாட்டு வளங்கள் சூறையாடப்படுக்கிறது எனும் அரசியல் வாதத்தை முன்வைக்கும் தேசியவாத அரசியல்வாதிகள் பல மேலைத்தேச நாடுகளில் பிரபலமடைந்து வருவதைக் காண்கிறோம்.

    இன்றைய பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடுகள் வெளிநாட்டவரின் வருகையினைக் கட்டுப்படுத்துவதையே தமது முதலாவது அரசியல் கொள்கையாகப் பிரகடனப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள். இந்த வேளையிலே தான் மதம், கலாச்சாரம் என்பவற்றின் மீது தொடுக்கப்படும் தாக்கங்களின் தாத்பரியங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஒரு மனிதனின் அடிப்படை நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவன் வாழ்க்கையின் கட்டமைப்பைச் சமூகக் கோட்பாடுகளின் விதிகளை மீறுவதற்கு முயற்சிப்பது இயற்கை. ஒரு சில மூர்க்கத்தனமானவர்களினால் நிகழ்த்தப்படும் மிலேச்சத் தனங்களை வைத்து ஒரு மொத்த சமூகத்தினரை கேவலப்படுத்துவது என்பது என்றுமே நியாயமாகாது.

    மனிதர்கள் பலவகைப்பட்டவர்கள். மலர்களில் எத்தனையோ நிறங்கள் இருப்பது எப்படி இயற்கையோ அதேபோல மனிதர்களிலும் பலவகையினர், பல குணாம்சங்களோடு இருப்பதும் இயற்கையே . மனிதனை, மனிதன் நிறம், இனம், மதம் எனும் எல்லைகளுக்கப்பால் மனிதனாகப் பார்ப்பது ஒன்றே இன்றைய உலகத்தின் அநியாயமான போர்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கும் என்பது உண்மை. ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவோ, அன்றி எந்த மொழி பேசுபவனாகவோ அன்றி எந்த நிறத்தவனாகவோ இருந்தாலும் மனிதனுக்குரிய அடிப்படி உரிமைகளுடன் வாழ்வதற்கு உரிமையுடையவன். இழக்கும் தமது உரிமை களுக்காகப் போராடுவது என்றுமே தவறாகது. ஆனால் அப்போராட்டம் அடுத்தொருவனின் உரிமையைப் பறிப்பதாக அமைவதே தவறானது .

    தமிழர்களின் புத்தாண்டு தைத்திருநாளா? அன்றி சித்திரைத் திருநாளா? என்று நடக்கும் சர்ச்சைகளைக் கண்ணுற்றதன் விளவே என் மனத்தின் இந்த அலசல். யார் எதை எதற்காகக் கொண்டாடுகிறோம்? கொண்டாட்டம் என்பது உள்ளத்தின் மகிழ்விற்கேயன்றி அக்கொண்டாட்டத்தை உரிமை கோருவதற்கல்ல.  கொண்டாடுவோரின் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வோம் அல்லது ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம். ஒருவர் மனத்தை ஒருவர் நோகடிக்கும் செயல்களைத் தவிர்த்துக்கொள்வோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (292)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே

    அன்பான வணக்கங்கள். இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் இந்நாள் ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் முட்டாள்கள் தினம் அல்லது ஏப்பிரல் பூல்ஸ் டே என்று அழைக்கப்படும் தினம். முட்டாள்களைக் கொண்டாடுவதா? என்ன இது மடமைத்தனம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது அல்லவா? இதில் பெரிய ஆச்சரியமென்று ஒன்றுமில்லை ஒரு வகையில் பார்த்தால் நாம் அனைவருமே சில நேரங்களில் ,சில வேளைகளில் முட்டாள்களாக நடந்திருக்கிறோம் அல்லது முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறோம் இல்லையா?எம்மை யார் முட்டாள்கள் ஆக்கியதாக எண்ணுகிறார்களோ அவர்களும் எதோ ஒரு வகையில் எப்போதாவது முட்டாளாக இருந்திருப்பார்கள் எனும் உண்மையை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தத்தினத்தின் விசேடம் என்ன என்கிறீர்களா?எமக்காக எம்மால் கொண்டாடப்படும் ஒரு தினம். இந்தத்தினத்திலே வாழ்வில் நாம் எமது செய்கைகளை அசைபோட்டு அவற்றில் எவை முட்டாள்தனமானவை என்பதை வடிகட்டித் தெரிந்து கொள்ள உதவும் ஒரு தினமே !

    தேர்தல் வருகிறது அரசியல்வாதிகள் மேடையிலே ஏறி பீரங்கி குண்டுமழையைப் பொழிவது போல பிரசாரப் பேச்சை முழக்கித் தள்ளுகிறார்கள். வாக்குறுதிகளை அடுக்கடுக்காய் அள்ளி வீசுகிறார்கள்.அவ்வாக்குறுதிகளின் மயக்கத்திலே அவர்களுக்கு வாக்களித்து விட்டு பின்பு அவர்கள் அரசுக் கட்டிலேறியதும் அவ்வாக்குறுதிகளை மறந்து தூக்கத்திலாழ்ந்து விடுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படியானால் அவ்வாக்குறுதிகளை நம்பி வக்குகளை அள்ளிக் கொடுத்த எமக்குப் பெயர் ? முட்டாள்கள் தானே ! வேறுசில தேர்தல்களில் அரசியல்வாதிகளில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்கும்போது நாம் அதிமேதாவிகள் என்று எண்ணிக்கொள்கிறோம். ஆனால் அதே அரசியல்வாதிகள் எம்மைப் பார்த்து பாவம் முட்டாள்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

    அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவ்வுலகில் இரண்டே இரண்டுவகை மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.ஒன்று ஏமாற்றுபவர்கள் அடுத்தது ஏமாற்றப்படுபவர்கள்.. ஏமாற்றப்படுபவர்களின் முட்டாள்தனம் ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாய் அதேநேரம் ஏமாற்றுபவர்கள் தாமும் ஒரு நாள் ஏமாற்றப்படுவோம் என்பதை மறந்து போவதும் முட்டாள்தனமே ! அனைத்தையும் அறிந்து விட்டோம் எமக்குத் தெரியாத விடயம் எதுவுமேயில்லை என்னும் எண்ணத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் தாம் அறியாத விடயத்தை அறிந்ததாகக் காட்டிக்கொண்டு வாதம் செய்ய முற்படுவதில் உள்ள முட்டாள்தனம் அவருக்கு புலப்படாது ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குப் புலப்படும்.

    இன்று இங்கிலாந்து அரசியல்களத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த ப்ரெக்ஸிட்எனும் விடயத்தை எடுத்துக் கொண்டால், ப்ரெக்ஸிட்டை ஆதரிப்போர் தமது எண்ணம் ஈடேறாமல் போகும் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த தம்மை அரசு முட்டாளாக்கத் தலைப்படுகிறது என்று ஆத்திரப்படுகிறார்கள். அதேநேரம் இந்த ப்ரெக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்தோர் இதற்கான பிரசாரத்தின் போது ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக பிராசாரம் செய்தோர் பல பொய்களின் அடிப்படையில் பிரசாரம் செய்தது தம்மை முட்டாளாக்கிய செயல் என்று ஆத்திரப்படுகிறார்கள். இங்கிலாந்தின் பிரதமரோ தன்னுடைய கட்சியைச் சார்ந்தவர்கள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டு மக்களுடைய ஆணையை தான் நிறைவேற்ற முடியாமல் செய்து தன்னை முட்டாளாக்குகிறார்கள் என்று வெகுண்டெழுகிறார்.

    இவையனைத்துக்கும் மத்தியில் எந்தவிதமான சமரசத்துக்கும் இணங்காமல் வேற்றுமைகளை ஒதுக்கி தமக்கிடையில் இருக்கும் ஒற்றுமைகளின் அடிப்படையில் இணக்கம் காணத் தவறி கொள்ககளை மட்டும் குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் சிக்குண்டு பொதுமக்களின் பொருளாதார வாழ்வு முட்டாளாகி நிற்கிறது.

    உலகமயமாக்கல் எனும் பொருளாதார வழிமுறையில் நடைபோட்டு தமது பொருளாதார வளத்தை பெருக்கிக்கொண்ட மேலைத்தேச வர்த்தக உலகத்தின் வெற்றியால் பலவித அனுகூலங்களை பெற்றுக்கொண்ட சாதாரண மக்கள், அதன் ஒரு பக்க விளைவாக வெளிநாட்டு , அதாவது வளர்ந்துவரும் நாடுகளில் இருந்து வரும் குடியேற்றவாசிகளின் வரவினைக் கண்டு அதனை எதிர்க்கிறோம் எனும் போர்வையில் மீண்டும் தேசியவாதம் எனும் கோஷத்தினுள் தம்மைப் புதைத்துக் கொள்கிறார்கள். இங்கே அனைத்து மக்களும் ஒரே இனம், அனைத்து மதங்களும் சமமானவையே எனும் பொதுவுடமைக் கருத்துகள் முட்டாளாக்கப்பட்டு புத்தகங்களுக்குள் புதைக்கப்படுகின்றன.

    ஏனின்று ஜனநாயக அரசியல் என்று பேசப்படும் அரசியல் இனவெறியை தமது அடிப்படையாகக் கொண்டு அதற்கு தேசியவாதம் எனும் முலாம் பூசி தம்மை நாகரீக அரசியல்வாதிகளாக்கிக் கொள்பவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஆங்கிலத்தில்far right எனும் தீவிர வலதுசார்பு கொண்ட இனவாத தீவிரவாத அமைப்புகள் அரசியல் மேடையில் இன்றைய மேலைநாடுகளில் வேரூன்றிக் கொண்டு வருகின்றன என்பதை நன்கு அறியக்கூடியதாக உள்ளது.

    நாமும் வாழ வேண்டும் அதேபோல அடுத்தவருக்கும் வாழும் உரிமை இருக்கிறது எனும் உண்மை அப்பட்டமாகத் தெரிந்திருந்தும் தீவிரவாதக் கொள்கைகளினால் அதனை மறுத்துப் பேதலிக்கும் மனப்பான்மை இன்றைய மேலைநாடுகளில் மட்டுமில்லை எமது பின்புல நாடுகளிலும் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவது சுலபம் அப்படித் தூண்டிவிடப்பட்ட உணர்வுகள் பூதாகரமாகத் தலைவிரித்தாடும்போது அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது இயலாத காரியம் எனும் உண்மையை சாதாரணக் குடிமகன் முதல் அரசியல்வாதிகள் வரை உணர்ந்து கொள்ளாததினாலேயே இன்றைய உலகம் நிலைகுலைந்து கொண்டிருக்கிறது.

    அரசியலை விட்டு விடுவோம் சாதரணக் குடும்பங்களையே எடுத்துக் கொள்ளுவோமே !காதலைத் திரைப்படங்களில் பார்த்து கைதட்டி மகிழ்வோர் அது தமது குடும்பத்தினுள் நிகழும்போது அத்தனை ரசனையோடு ஏற்றுக் கொள்வார்களா ? என்ன. “புரிந்துணர்வுஎன்பதை முற்றாக இழந்து கொண்டு போகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.இன்றைய சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் காழ்ப்புணர்ச்சியுடனோ அன்றி விரசத்துடனோ அன்றி இனவாதவெறியுடனோ பகிரப்படும் விடயங்களைப் பார்க்கும் போது மனித மனங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் வெறுப்புணர்ச்சியை உணரக்கூடியதாக உள்ளது.அதேநேரம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட , விதிவிலக்கான பலர் இருக்கிறார்கள் என்பது உண்மையே ! அவர்கள் சிலர் அரசியலிலும் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே ! ஆனால் அத்தகையோர் எண்ணிக்கையில் பெரும்பான்மையாவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

    இவற்றை எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய மனிதாபிமானமிக்க , பொது அறிவு அடிப்படை கொண்ட தன்னலமில்லாத தலைவர்களை , சமுதாய முன்னோடிகளை உருவாக்க வேண்டிய கடமை யார் கைகளில் உள்ளது ?

    முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    லண்டன் 01.04.2019

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (291)

    அன்பினியவர்களே !

    மிகவும் நீண்ட ஒரு இடைவேளைக்குப் பின்னால் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். காலம் என்பது கண்மூடித் திறப்பதற்குள் கனவேகத்தில் ஓடி மறைகிறது . எதற்காக இந்த நீண்ட இடைவேளை ? எங்கே சக்தி சென்றிருப்பார் ? என்று உங்களில் சிலர் எண்ணியிருக்கலாம் , ஓ ! அதுகூட எனது நப்பாசையோ ? இருந்தாலும் இடைவெளிக்கு ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். பெப்பிரவரி 4ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை எனது வருடாந்த சென்னை விஜயத்திலிருந்தேன். மார்ச் 5ம் தேதி திரும்பியதும் என்னோடு சேர்ந்து விமானத்தில் இலவசமாக பயணம் செய்த வைரஸ் கிருமி ஜலதோஷம், ஜுரம் என ஒரு இரண்டுவார காலம் பாடாய்ப் படுத்தி விட்டது.

    சரி எனது சென்னை விஜயத்தின் அனுபவங்களை உங்களுடன் இரண்டு மூன்று மடல்களில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன் விட்டதா? இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதம். தனது உருவத்தை மிகவும் பூதாகரமாக்கி இங்கிலாந்து அரசியல் மேடையையே ஒரு திகில் நிறைந்த தினம் ஒரு காட்சி அரங்கேறும் ஒரு நிலைக்குத் தள்ளி விட்டது . சுமார் மூன்று வருடங்களின் முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவின் பிரகாரம் ஐக்கிய  இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2019 மார்ச் மாதம் 29ம் தேதி இரவு 11 மணிக்கு வெளியேறும் என முடிவு எடுக்கப்பட்டு அதை பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாகியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்

    சரி நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருப்பது மார்ச் 26ம் தேதி . அப்படிப் பார்த்தால் நாம் அதாவது ஐக்கிய  இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இன்னும் முன்று நாட்களே பாக்கியுள்ளது. அப்படியாயின் வரும் வெள்ளிக்கிழமை அதாவது 29ம் தேதி இரவு 11 மணிக்கு நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி விடுகிறோமா? அதற்கு விடையாக மிகப்பெரிய ” இல்லை ” என்பதுவே ஒலிக்கிறது . அட , இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா ? இத்தகைய ஒரு நிலையில் இன்று ஐக்கிய  இராச்சியம் இருப்பதற்கான பின்னனிக் காரணிகள் தான் என்ன ?

    உண்மைகள்

    • சர்வஜன வாக்கெடுப்பில் 52% வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாகவும் 48% வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டது.
      வாக்கெடுப்பின் பிரகாரம் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் , எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்தன.
    • வெளியேறுவதற்கான வழியான ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட மசோதா “50” ஜ நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று பிரித்தானிய அரசு அறிவிப்பதற்கு ஆதரவான மசோதா இங்கிலாந்து[ பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது.
    • 2017 மார்ச் 29ம் தேதி இம்மசோதவை நடைமுறைப்படுத்தி அதை சட்டமூலமாக்கியதன் மூலம் ஐக்கிய  இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு சட்டப்பிரகாரம் இரண்டு வருட அவகாசம் கொடுத்து வெளியேறும் தேதி 2019 மார்ச் 29 இரவு 11 மணி என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேற்குறிப்பிடப்பட்டவைகளே யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மைகள் (Facts)
    ஆகும் . ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய  இராச்சியம் வெளியேற இரண்டு வழிகளிருந்தன
    ஐரோப்பிய ஒன்றியத்தோடு எதுவித தொடர்பும் இல்லாத வகையில் ஒட்டு மொத்தமாக வெளியேறுவது அதை ஆங்கிலத்தில் ” நோ டீல் ” என்றார்கள்.

    இவ்வகையான வெளியேற்றத்தை பல முன்னனி பொருளாதார நிபுணர்களும் , பல முன்னனி முதலீட்டாளர்களும் பாரளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களும் எதிர்த்தார்கள். காரணம் இது ஐக்கிய  இராச்சியத்தின் பொருளாதாரத்தை மிகவும் தீவிரமாகப் பாதிக்கும் எனும் காரணத்தினால்.
    ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி இரு சாராருக்குமிடையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் விலகுவது.

    இத்தகைய ஒரு விலகலையே பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள் . காரணம் இது ஒரு சீரான படிப்படியான திடீர் மாற்றங்களில்லாத ஒரு விலகல் எனும் காரணத்தினால். இதன் பிரகாரம் விலகிய பின்னால் இரண்டுவருட காலம் ” மாற்றத்துக்குரிய காலம்” அதாவது Transition period என்று அறிவிக்கப்பட்டது . அத்துடன் இந்த இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கிய  இராச்சியத்தின் வர்த்தக, போக்குவரத்து, பாதுகாப்பு என்பது போன்ற முக்கிய விடயங்களில் எத்தகைய நெருங்கிய உறவுகள் பேணப்படும் எனும் வரைமுறைகளையும் தீர்மானிப்பது என்றும் குறிக்கப்பட்டது.

    ஐக்கிய  இராச்சிய அரசாங்கத்தின் நோக்கத்தின் படி இத்தகைய ஒரு உடன்பாடு குறித்து கடந்த இரண்டு வருடங்களாக இரு சாராருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது இதனை “விலகல் உடன்படிக்கை” “widrawal deal” என்று அழைத்தார்கள். இதனைக் கைச்சாத்திட்டது இங்கிலாந்தின் சார்பாக பிரதமர் தெரேசா மே என்பதினால் இதனை இங்கிலாந்தில் சுருக்கமாக “மே டீல்” என்றும் அழைத்தார்கள்.

    இவ்வுடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்

    • இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட் மூலதாரர்களில் ஒன்றாக இருந்த ஐக்கிய  இராச்சியம் இதுவரை திட்டப்பட்ட திட்டங்களுக்காக மாற்றறத்துக்குரிய காலமாகிய இரண்டு வருடங்களும் வருடம் ஒன்றுக்கு 39 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் தனது பங்காகச் செலுத்த வேண்டும்.
    • ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் கொள்கைப் பிரகடனங்கள் இந்த இரண்டு வருடமும் ஐக்கிய  இராச்சியத்தையும் பாதிக்கும்
      ஐரோப்பிய கோர்ட்டின் தீர்ப்புகளுக்கு இங்கிலாந்து இந்த இரண்டு வருட காலமும் கட்டுப்பட வேண்டும்.
    • இந்த இரண்டு வருட காலத்துக்குள் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள எந்த நாட்டுடனும் தனிப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது
    • இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கையும், மற்றைய உடன்பாடுகளும் ஏற்படாத பட்சத்தில் ஐக்கிய  இராச்சியத்தின் ஒரு அங்கமான வட அயர்லாந்துப் பிரதேசம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இதற்கான காரணம் அயர்லாந்துக்கும், வட அயர்லாந்துக்கும் இடையே ஒரு நிரந்தர வர்த்தக எல்லை போடப்படுவதைத் தவிர்ப்பது என்று கூறப்படுகிறது.

    ஆனால் இந்த இரண்டு வருட காலத்தின் பின் அதற்குள் ஒரு வர்த்தக , மற்றும் ஒரியக்க உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் முக்கிய அம்சங்கள்,

    • ஐரோப்பிய ஒன்றிய குடி மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய  இராச்சியத்துக்கு உண்டு.
    • ஐரோப்பிய வழக்கு மன்றத் தீர்ப்புகளுக்கு ஐக்கிய  இராச்சியம் கட்டுப்படத் தேவையில்லை
    • ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைப் பிரகடனங்கள் ஐக்கிய  இராச்சியத்துக்கு எந்தவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.
    • ஐக்கிய  இராச்சியம் எந்த நாட்டுடனும் தனிப்பட்ட ரீதியில் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்

    இரண்டு வருடகால கடும் பேச்சுவார்த்தையின் பின்னால் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கையே எமக்கு ஏற்றது இதிலிருந்து வேறெந்த சலுகைகளையும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றார் எமது பிரதமர்.

    அதன் விளைவாக இந்த உடன்படிக்கையை சிபாரிசு செய்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிக்கு விட்டார் முடிவு இதுவரை சரித்திரத்தில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் எந்தப் பிரதமருமே சந்தித்திராத வகையில் பிரதமரின் இவ்வுடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று 230 பாரளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தோற்கடித்தார்கள். இதற்கான முக்கிய காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்பாடு காணப்படாத பட்சத்தில் வடஅயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் அதனை ஐக்கிய  இராச்சியத்தினின்றும் வேறுபடுத்தும் நடவடிக்கையாகிவிடும் என்பதே கூறப்பட்டது . இன்றைய இங்கிலாந்து அரசினை தக்கவைத்துக் கொண்டிருப்பது வட அயர்லாந்தைதைச் சேர்ந்த ” ஜனநாயக ஐக்கிய அமைப்பு” எனும் கட்சியைச் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களேயாகும். இவர்கள் மேற்கூறிய காரணத்தினால் இவ்வுடன்படிக்கையை முற்று முழுதாக எதிர்த்தார்கள்.

    அது மட்டுமின்றி பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே ” ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழு ” எனும் ஒரு அமைப்பில் ஏறத்தாழ 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முற்று முழுதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானவர்கள். முழுக் கொள்கைவாதிகள். ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உறவுமில்லாமல் வெளியேற விரும்புபவர்கள். இவர்களுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான கொள்கையுடைய ஏனைய அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால் பிரதமரின் இவ்வுடன்படிக்கையை அவரது கட்சியிலேயே சுமார் 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள்.

    சரி எனது உடன்படிக்கையில் இந்த வட அயர்லாந்து சம்பந்தமாகத்தானே அதிக எதிர்ப்பு உள்ளது அதனை நான் சரி பண்ணப் பார்க்கிறேன் என்று மீண்டும் கிளம்பினார் பிரதமர் மே. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி வட அயர்லாந்து சம்பந்தமான சிக்கலுக்கு சட்டரீதியான உறுதி ஏதாவது கொடுக்க முடியுமா என்று அவர் வுடுத்த கோரிக்கைக்கு சில மேலதிக விளக்கங்களை மட்டுமே கொடுக்க முடியும் இவ்வுடன்படிக்கையில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது . மேலதிக சில விளக்கங்களுடன் மட்டும் மீண்டும் தனது உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டார் பிரதமர் மீண்டும் தோ;ல்வி இம்முறை 149 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது . இவ்வுடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் மே 29ம் தேதி சட்டபூர்வமாக இங்கிலாந்து வெளியேறுகையில் பெரும்பான்மை பாராளுமன்ற அங்கத்தினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத எதுவித உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே மேற்கொள்வது சாத்தியமாகவிருந்தது . ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த உறவுமே வேண்டாம் என்போருக்கு இது கற்கண்டாக இனித்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சும்மா விடுவார்களா? இங்கிலாந்து பாராளுமன்ற ஜனநாயகம் மீண்டும் தனது அதிகாரத்தைக் காட்டியது. “நோ டீல் ” எனும் வகையிலான வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தினர்கள் வாக்களித்தனர். இது அரசாங்கத்தின் கைகளை மேலும் இறுகக் கட்டியது.

    இருதலைக் கொள்ளி எறும்பானார் இங்கிலாந்துப் பிரதமர்.

    இங்கிலாந்துப் பிரதமரின் பதவிக்கே உலை வைக்கும் நிலை ஏற்பட்டது. . இங்கிலாந்துப் பிரதமர் இன்னும் சில நாளைக்குத்தான் பிரதமராக இருப்பார் எனும் வகையிலான வதந்திகள் ஊடகங்களில் தலைவிரித்தாடின. ஆனால் யாராலும் அசைக்க முடியாத திடகாத்திரமான இரும்பு மனுஷியாகச் செயல்பட்டார் பிரதமர். என் நாட்டு மக்கள் எனக்குக் கொடுத்த ஆணையை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன் என்று கங்கணங் கட்டிக் கொண்டு இருக்கிறார் . கைகளை பின்னால் கட்டி விட்டு விட்டு அவரை ஐரோப்பிய ஒன்றியப் போராட்டக்களத்துக்கு அனுப்பியது இங்கிலாந்து பாராளுமன்ற ஜனநாயகம் . மார்ச் 29ம் தேதி 11 மணிக்கு நாம் எண்ணியவாறு விலக முடியாது மேலும் கால அவகாசம் வேண்டும் மே மாதம் 22ம் தேதி வரை எமது விலகல் திகதியைத் தள்ளை வைக்க முடியுமா ? என்று கேட்டார் . தாள்ளி வைத்து எதைத்தான் சாதித்து விடுவீர்கள் ? உங்கள் பாராளுமன்றம் தான் ஆளுக்கொரு பக்கமாக சிதறி நிற்கிறார்களே என்று கூறிய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நிபந்தனை போட்டது. உங்களது உடன்படிக்கை வெற்றி பெற்றால் நீங்கள் கேட்ட மே 22ம் தேதி வரையிலான கால அவகாசம் கிடைக்கும் அப்படி வெற்றி பெற வில்லையாயின் ஏப்பிரல் 12ம் தேதி மேற்கொண்டு உங்கள் திட்டம் என்ன என்று கூறவேண்டும் இல்லையானல் எதுவிதம உடன்படிக்கையுமில்லாமல் “நோ டீல்” எனும் வகையில் வெளியேற வேண்டும் என்பதுவே அது.

    நேற்றைய பாராளுமன்றத்தில் பிரதமரின் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் பெரும்பான்மையுள்ள மாற்று உடன்படிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்வார்கள் எனும் உரிமையை வாக்கெடுப்பின் மூலம் இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பெற்றுக் கொண்டனர் . ஜனநாயக அரசியலில் மீண்டும் ஒரு காட்சி அழகாக கண்முன்னே விரிந்திருக்கிறது. நாளை மாற்று உடன்படிக்கைகள் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தினர்கள் தனது திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தை பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொண்டாலும் அது அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது எனும் வாதத்தை முன்வைக்கிறார் பிரதமர் . ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் இத்தகைய வகையில் நடந்து கொள்ளலாமா? என எதிர்கட்சி அங்கத்தினர்கள் மட்டுமல்ல அவரது கட்சி அங்கத்தினர்களே கருத்துத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . அப்படி பிரதமர் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலை வந்தால் அதனை அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பணிப்போம் என்கிறார்கள். அது மட்டுமல்ல மார்ச் மாதம் 29ம் தேதி 11 மணிக்கு விலக வேண்டும் என்பது சட்டமாக இருப்பதால் அதனை மாற்றுவதற்கான சட்ட மசோதவை பாரளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் கடப்பாடு இப்போது பிரதமரின் தலையில் விழுந்திருக்கிறது.

    சரி இன்றைய நிலையில் இங்கிலாந்துப் பிரதமரின் முன்னே இருப்பவை என்ன ?

    “நோ டீல்” எனும் விலகல் முறையை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது

    பிரதமர் மேயின் டீல் மறுபடியும் பாரளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் முன்னால் அது வெற்றியடையத் தேவையான மனமாற்றங்களை வட அயர்லாந்து கட்சியிடமும், அவரது கட்சி பாராளுமன்ற அங்கத்தினர்களிடமும் அவர் ஏற்படுத்த வேண்டும்.
    பாராளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டுவரும் மாற்றுத் திட்டத்தில் எதையாவது தன்னாலும், தனது அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தீர்மானிக்க வேண்டும்.

    மார்ச் 29ம் தேதி விலகுவது எனும் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

    அனைத்தும் தோல்வியடையும் பட்டசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீண்ட அவகாசம் கோர வேண்டும்

    அத்தகைய ஒரு நீண்ட கால அவகாசம் கேட்பதில் ஐக்கிய  இராச்சியத்துக்கு ஒரு சிக்கலுண்டு. மே மாதம் நடக்கவிருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக முடிவு செய்த ஐக்கிய  இராச்சியமும் பங்கு பற்ற வேண்டும் . இது தேவையா ?

    அனைத்துக்கும் மேலாக இத்தகைய ஒரு சிக்கலான சூழலில் தான் பதவியில் தொடர்வதா இல்லையா ? அன்றி மற்றுமொரு பொதுத் தேர்தலின் மூலம் மக்களிடம் கையளிப்பதா? இல்லை மீண்டும் மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா இல்லை இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதத்தை அப்படியே சாகடிக்கும் வகையில் ” மசோதா 50 “ ஜை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வாபஸ் வாங்கி விடுவதா ?

    தலை சுழல்கிறது , எனக்கே இப்படி என்றால் பிரதமருக்கு எப்படி இருக்கும் ?

    இந்த மடல் பிரசுரமாகும் வெள்ளிக்கிழமை மார்ச் 29ம் தேதி நிலைமை இன்னும் கொஞ்சம் தெளிவாக வாய்ப்பிருக்கிறது. அடுத்த மடலில் இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கூற முடியும் என்று நம்புகிறேன்.

    இன்றைய பாராளுமன்றத்தில் இந்த ப்றெக்ஸிட் விவகாரத்தில் ஒரு விடமுண்டு. அது என்ன என்கிறீர்களா? பாராளுமன்றத்தில் கட்சி அரசியல் உடைப்பில் போடப்பட்டு விட்டது இது கட்சி எல்லைகளைக் கடந்து பலரை நாட்டின் நலன் கருதி இணைய வைத்திருக்கிறது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றிதானே ! இப்படியான ஒரு கட்சி பேதம் மறந்து இணையும் நிலையை இன்று எத்தனை நாடுகளில் நாம் காண முடிகிறது ?

    எது எப்படியிருப்பினும் ஒரேயொரு விடயம் என் நெஞ்சை நிறைக்கிறது . பாராளுமன்ற அரசியலின் தாயகமான ஐக்கிய  இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் இந்த ஜனநாயக அதிர்வுகளைக் கண்டு அதனை சமகாலப் பதிவுகள் மூலம் பதிவிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது என் பாக்கியமே !

    பெரும்பான்மையான மக்கள் விலக வேண்டும் என்று வாக்களித்திருந்தும் அவர்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற அங்கத்தினர்கள் நாட்டின் எதிர்கால வளத்தினைக் கருத்திற் கொள்வதே தமக்கு மக்கள் இட்ட கட்டளை எனும் வகையில் நடப்பது தான் உண்மையான ஜனநாயகமா ? அன்றி இதுவே இங்கிலாந்தின் ஜனநாயக அரசியலுக்கு சாவுமணி அடித்து விடுமோ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (290)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களிடையே மனந்திறக்கிறேன். நாளொரு மேடை பொழுதொரு வண்ணமாக இங்கிலாந்து அரசியல் மேடையில் பல நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வரசியல் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக மர்ந்திருக்கும் மக்களின் வாழ்வில் இவைகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே! நடைபெறும் நிகழ்வுகள் அதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றுப் புத்தகத்தில் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அத்தியாயமாக எழுதப்படப் போகிறது என்பதுவே உண்மை.

    ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று 17.2 மில்லியன் மக்கள் ஆணையிட்டார்கள். அதுவே பெரும்பான்மை முடிவாக இருந்த போதும் வெளியேறக்கூடாது என்று வாக்களித்த 16 மில்லியன் மக்களை மறந்து விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் பிரச்சனைக்கு முடிவு கட்டியதோ இல்லையோ நாட்டில் புதுவகையான பிரிவினையை உருவாக்கி விட்டது என்பது உண்மை. ஜக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தை விரும்பியவர்களில் பலர் ஜக்கிய இராச்சியம் அன்றொரு காலத்தில் வகித்த உலகின் முக்கியத்துவத்தை மீண்டும் அடையும் எனும் ஒரு கனவில் இருப்பதாகவே தோன்றுகிறது.

    அன்றைய உலகிற்கும் இன்றைய உலகிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. வெளிநாட்டவரின் அளவுக்குமீறிய குடியேற்றம் ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பாரிய பிரச்சனையாக இருப்பது உண்மையே ஆனால் ஜக்கிய இஆராச்சியத்தின் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனும் கருத்து எந்தவகையில் யதார்த்தம் என்று தெரியவில்லை. பொருளாதார நெருக்கடிகள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளினாலும் எதிர்கொள்ளப்பட்ட நிகழ்வு அதன் தாக்கமாக நாட்டில் மக்களின் சேவைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு ஒரே காரணம் வெளிநாட்டவர் ஜக்கிய இராச்சியத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்வது எனும் வாதம் முற்றிலும் உண்மையாகாது.

    இத்தகைய வாதங்களே இங்கிலாந்தை இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலை நோக்கி இழுத்துச் சென்றது என்பதுவே உண்மை. சர்வஜன வாக்கெடுப்பின் போது தமது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் செய்த வன்மையான பிரச்சாரங்களினால் அவர்கள் அந்த ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைந்திருந்தாலும் அதனால் சமுதாயத்தில் மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினைகளின் தாக்கங்கள் பலருக்கு வாழ்வில் பல அச்சங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து அவர்களுடன் எதுவிதமான உடன்பாடும் இல்லாமல் வெளியேறுவதை பெரும்பான்மையான இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை. பிரதமர் தேரேசா மே கடந்த இரண்டரை வருடங்களாக ஜரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். நேற்று அதாவது ஜனவரி 15ம் திகதி அவ்வுடன்படிக்கை இங்கிலாந்து பாராளுமன்றத்தினால் 202 க்கு 432 எனும் வாக்கு வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. முன்னைய பாராளுமன்ற ச்ட்டப்பிரகாரம் இங்கிலாந்து மார்ச் மாதம் 29ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும். இந்நிலையில் எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமா? எனும் அச்சம் பலரின் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் இன்று அதாவது 16ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை இங்கிலாந்துப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்தார். அதற்கான வாக்கெடுப்பு இன்று இரவு 7 மணிக்கு நடந்தேறியது. இந்நம்பிக்கையில்லாத்தீர்மானம் அரசுக்கு ஆத்ரவாக 325 வாக்குகள் எதிராக 306 வாக்குகள் எனும் வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தெரேசா மே இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியேறுவதற்காக தான் பாராளுமன்றத்திலிருக்கும் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களைத் தனித்தனியாக சந்தித்து உரையாடி எவ்விதமான் உடன்படிக்கையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தின் பொருளாதார நிபுணர்கள், வியாபார முகவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி வெளியேறுவதின் எதிர்மறையான தாக்கங்களை மிகவும் விளக்கமாக எடுத்துக்கூறுகிறார்கள். ஆனால் இஅக்கிய இராச்சியத்தின் பண்டைய பெருமைகளின் வகை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷமெழுப்புவர்களின் செவிகளில் அவை விழுந்ததாகத் தெரியவில்லை.

    சரி அடுத்த கட்டத் தெரிவுகள் பிரதமரின் முன்னால் இருப்பவை எவை?

    தோல்வியடைந்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் வாக்கெடுப்புக்கு விடுவது

    எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறுவது

    மக்களின் தீர்ப்புக்காக இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவது

    இதில் எந்த முடிவை பிரதமர் எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இன்றைய பிரதமரின் மற்றைய கட்சிகளைக் கலந்தாலோசிப்பது எனும் முடிவை இரண்டரை வருடங்களின் முன்னரே எடுத்திருந்தால் . . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

    அன்பினியவர்களே !

    இந்தப் புத்தம் புதிய 2019ம் வருடத்தில் உங்களுடன் கலந்துரையாட விழையும் முதலாவது மடலிது. 2018 அவசரமாக ஓடி தன்னை சரித்திரப் புத்தகத்தில் மூடப்பட்ட அத்தியாயம் ஆக்கிக் கொண்டது. 2019 புதிதாகப் பிறந்ததோர் குழந்தை போன்று எம்மிடையே தவழத் தொடங்கியுள்ளது. 2018 தன்னோடு முடிக்காமல் மூடிக் கொண்ட பல விடுகதைகளுக்கான விடைகளை இந்த 2019ல் கண்டெடுக்கும் ஆவலுடன் நாம் பலரும் மிகவும் முனைப்புடன் இயங்க ஆரம்பித்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள் எம் முன்னோர்கள். இந்த வழிதான் என்ன ? இதுவரை அப்படிக் கண்டுபிடிக்க முடியாத வழி ஒன்று எமக்குக் கிடைத்து விடுமா? எனும் எண்ணம் எம்மை நோக்கிப் பரிகசிப்பது போலத் தோன்றுகிறது. உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன? மிகவும் இலகுவாக நம்பிக்கை என்பது புரிகிறது. ஆம் நம்பிக்கையே ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய திருப்புமுனையாக அமைக்கிறது என்பதனையே எமது முன்னோர்கள் எமக்கு உணர்த்த முயன்றுள்ளார்கள்.

    இதேபோலத்தான் 2018கூட ஒரு புது நம்பிக்கையுடன் தான் எம்மை அதனுள் அழைத்துச் சென்றது ஆனால் அந்த நம்பிக்கை எத்தனைதூரம் வெற்றியளித்துள்ளது என்பது ஒவ்வொருவரைப் பொறுத்தவரையும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. நாம் எதிர்பார்த்தவைகளில் எத்தனை நிறைவேறியதோ அன்றி எத்தனை ஏமாற்றமாக முடிந்தனவோ என்பது ஒருபுறமிருக்க நாமனைவரும் நம்பிக்கையோடு அடுத்த ஆண்டில் நுழையக்கூடிய வகையில் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தையளித்துள்ளது என்பதே உண்மையாகிறது. வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றதே! நாம் எந்த நிலையத்தில் ஏறுகிறோம் என்பதோ அன்றி இறங்குகிறோம் என்பதே எம்மால் நிர்ணயிக்கப்படமுடியாத விடயமாகிறது. எம்மோடு எத்தனை பேர் பயணம் செய்வார்கள் என்பதோ அன்றி எவ்வளவு தூரம் பயணிப்பார்கள் என்பதும் எமது கைக்களில் இல்லை. எம்முடன் பயணிக்கும் சிலரை மட்டும் தெரிவு செய்யக்கூடிய வல்லமையே எமக்கு உண்டு. இதுதான் வாழ்வின் யதார்த்தம். இந்த வகையில் எம்மோடு பயணித்த சிலரை காலம் இறக்கி விட்டிருக்கலாம், வேரு சிலருடன் பயணிக்கப் பிடிக்காமல் நாமாக இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம், வேறு சிலரை நாமாகத் தேடி எமது பயணத்தில் இணைத்திருக்கலாம் இல்லையானல் அவர்களது பயணத்தில் இணைந்திருக்கலாம். இத்தகைய ஒரு சூழலில் தான் எமது வாழ்க்கைப்பயணத்தின் கூட்டல் கழித்தல்களை நாம் எண்ணிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

    நாம் எப்படியான ஒரு உலகில் வாழ வேண்டும் என்று எண்ணுக்கிறோமோ அப்படியான ஒரு உலகத்தை நோக்கியோ அன்ரி அப்பசியான உலகத்தைன் பாதையிலிருந்து விலகியோ செல்லும் வகையிலான நிகழ்வுகளை கடந்த 2018ம் ஆண்டு நிகழ்த்தி விட்டு இலகுவாக தன்னை எம்மிடமிருந்து மறைத்து விட்டது. ஆனால் அவ்வாண்டில் நிகழ்ந்த தாக்கங்களின் விளைவுகளில் இருந்து நாம் எம்மை இலகுவாக விலக்கிக் கொள்ள முடியாது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் நம்பிக்கையைத் தாங்கியவாறே நாம் இவ்வாண்டினுள் நுழைந்துள்ளோம்.

    சர்வதேச அரங்கில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் தாக்கங்கள் உலகை ஒரு சமாதான பூமியாக மாற்றும் வகையில் அல்லாது உலக மக்களிடையே பிரிவினைகளையும், நம்பிக்கையற்ற ஒரு நிலையைத் தோற்றும் வகையிலுமான விளைவுகளைநோக்கியதாக அமைந்துள்ளனவோ எனும் அச்சத்தை பலர் மனங்களிலும் தோற்ருவித்திருக்கிறது என்பது உண்மையே. திடமான ஜனநாயகப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகளின் அரசியல் அரங்குகளில் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் ஒரு தீவிரவாத போக்கினை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனவோ எனும் மனக்கிலேசம் அனைவர் மனங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது என்பது கசப்பான உண்மை. தம் நாட்டின் மீது கொண்ட தீவிரமான பற்று எனும் போர்வையில் தீவிர வலதுசாரப் போக்குக்கொண்ட அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் இனத்துவேஷத்துக்கு வழிகோலுக்கின்றதோ எனும் எண்ணம் மேலோங்குகிறது. வெளிநாட்டிலிருந்து மேர்குலகநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கைக்குக் எதிரான கோஷம் என்பது இனவாத, இனத்துவேஷ வடிவெடுப்பதைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய தேவை எப்போதுமில்லாத வகையில் இப்போது அவசியமாகிறது.

    இத்தகையதோர் பின்னனியில் நாம் 2019 தமிழர் தைத்திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை நோக்கி நடைபயில்கிறோம். சேற்றிலே கால் பதித்து உலகோரெல்லோருக்கும் சோறளிக்கும் உழவுத் தோழர்களின் உன்னத சேவையை உணர்த்திடும் வகையில் இத்திருநாளை அனைவரும் சிறப்பிக்க வேண்டும்.கைகளிலே ரும், கண்களில்லே நீருமாக வாழ்வோர் விவசாயிகள் எனும் நிலை மாறி உழைப்போர் கைகள் உயர்ந்தோங்கும் நிலை வரவேண்டுமெனும் சீரிய எண்ணம் கொண்டு தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம். அனைவரும் எனது தைத்திங்கள் ம்திருநாள் வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். இங்கிலாந்தின் அரசியல் மேடையில் தினமொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் இவ்வாரத்தில் உங்களுடன் கருத்தாட விழைகிறேன். கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக பலதடவைகள் உங்களுடன் ப்றெக்ஸிட் எனும் நிகழ்வைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறேன். இந்நிகழ்வு மெதுவாக உருண்டு. உருண்டு இன்று இங்கிலாந்தின் அரசியல் சதுரங்கப்பலகையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றது. இங்கிலாந்தின் எதிர்கால சுபீட்சத்தையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கேந்திர நிலையை வந்தடைந்திருக்கின்றது. இங்கிலாந்துப் பிரதமரான தெரேசா மே அவர்களின் ரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுமோ எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோரிக்கை பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியிருந்தது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தாம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்புவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் 50வது ஷரத்தை நடைமுறைபடுத்தினார்கள். அதன் பிரகாரம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டமூலமாக்கினார்கள் அதன் பிரகாரம் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தானிருக்கிறது. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது எதுவிதமான வர்த்தக மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்துடனான தொடரப் போகும் உறவு முறையை நிர்ணயிக்காது வெளியேறுவது இங்கிலாந்தின் பொருளாதாரப் பின்னடைவுக்கு காரணமாகும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

    இதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்காக கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்தும், ஜரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. அப்பேச்சுக்களின் நிமித்தம் இருசாராருக்கும் ஒப்புதலான ஒரு விலகும் விதிகளமைந்த இணக்கப்பாட்டை எட்டுமிடத்து மார்ச் 29 2019 ஜ அடுத்த இரண்டு வருடங்கள் ஒரு பொதுவான காலப்பகுதியில் இருவருக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதென்று முடிவாகியது. இவ்விணக்கப்பாட்டை நடைமுறைபடுத்துவதற்கு இங்கிலாந்துக்கும், ஜாரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு விலகல் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அவசியமானது. அங்கேதான் ஒரு சிக்கல் ஏற்பட்டது அயர்லாந்து இங்கிலாந்ஹை அண்டிய ஒரு தீவாகும் அது இரண்டாகப் பிரிந்து தென் அயர்லாந்து ஒரு தனி நாடாகவும், வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமாகவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும் ஆனால் வட அயர்லாந்தோ ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் போது அதனோடு சேர்ந்து விலகும் ஒரு பகுதியாகிறது

    கடந்த இரு அயர்லாந்துகளுக்குமிடையில் நடந்து வந்த ரசியல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர டோனி பிளேயரின் பதவிக்காலத்தில் சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வொப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக வரையப்பட்டது. அதன் நிமித்தம் இரண்சு அயர்லாந்துகளுக்குமிடையில் ஒரு எல்லைக்கோடு வரையப்படமாட்டாது என்பது ஒரு நிலந்தனையாக்கப்பட்டது. இப்போது தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்க நாடாகவும். வட அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியேயும் இருந்தால் அங்கு எல்லைக்கோடு அமைக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்நிலையைச் சமாளிப்பதற்காக தெரேசா மே அவர்கள் ஏற்படுத்துய ஒப்பந்தத்தில் ஒரு தீர்மானம் திணிக்கப்பட்டது. 2019 மார்ச் 29 ஜ அடுத்து வரும் இரண்டு வருட காலப்பகுதியில் இங்கிலாந்துக்கும், ஜரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு வர்த்தக உடன்படிக்கை ஏற்படாத பட்சத்தில் இங்கிலாந்தும் அதனோடு சேர்ந்த வட அயர்லாந்தும் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்குள் வர்த்தக உடன்படிக்கை ஏற்படும் வரை உட்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுவது ஒருதலைப்பட்சமான முடிவினால் நிகழ முடியாது என்பதே அத்தீர்மானம்.

    ஏற்பட்டது ஒரு பெரிய பிரளயம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசாவினால் முன்வைக்கப்பட்ட இவ்வுடன்படிக்கையை அனைத்துத் தரப்பினரும் எதிர்க்கத் தலைப்பட்டனர். அவரது கட்சிக்குள்ளேயே பெரிய பிளவு தோன்றியது. இவ்வுடன்படிக்கையை டிசம்பர் 11ம் திகதி மாலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்காக விடப்போவதாக அறிவித்த பிரதமர் டிசம்பர் 11ம் திகதி இவ்வுடன்படிக்கைக்கான வாக்கெடுப்பைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார். இதற்கான காரணமாக பலதரப்பு வாதங்களையும் செவிமடுத்தபின் அயர்லாந்துக்கான தீர்மானமே அனைத்து தரப்பினருக்கும் பிரச்சனையாக உள்ளது அதனால் அதனை சிறிது சீர்படுத்துவதற்காக மீண்டும் ஜரோப்பிய ஒன்றியத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப் போவதைச் சுட்டிக்காட்டினார்.

    பலவிதமான சர்ச்சைகள் பலமுனைகளிலும் கிளம்பின. பிரதமர் பாராளுமன்றத்தில் தனது அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் துள்ளிக் குதிக்கின்றன. பிரதமரின் கட்சிக்குள்ளேயே ப்ரு போராட்டம் ஆரம்பித்து, தமது கட்சித் தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையான 15 வீதமான 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை கடித மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

    விளைவாக இன்று அதாவது டிசம்பர் 12ம் திகதி மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற அங்கத்தினர்களினால் நடத்தப்படப் போகிறது. முடிவு இரவு 10 மணிக்குள் அறிவிக்கப்படும். பிரதமரின் அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதார எதிர்காலமும் இவ்வாக்கெடுப்பிலேயே தங்கியிருக்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. இன்று டிசம்பர் 12 காலை 8.45 மணியளவில் இன்றைய தன்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி நாட்டுக்கு ஆற்றிய சிறிய உரையில் இத்தகைய ஒரு நெருக்கடியான சிக்கலுக்குத் தீர்வாக பிரதமரை மாற்றுவது அமையாது எனவும் இத்தீர்மானத்தை தான் தன் முழுசக்தியுடனும் எதிர்த்துப் போராடுவேன் என்றும் சூளுரைத்தார். இந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமருக்கே வெற்றி கிடைக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம் ஆனால் எத்தகைய வாக்கு வொத்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதிலேயே அவரது அரசாங்கத்தின் மீதான ஆதிக்கம் நிலைபெறும் என்பதே உண்மையாகிறது.

    இன்றைய இரவு வெளியாகப்போகும் முடிவை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது

    இன்று இரவு கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி சற்று நேரத்துக்கு முன்பாக பிரதமர் தெரேசா மே அவர்கள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் 200க்கு 117 எனும் வாக்குகளின்படி வெற்றியீட்டியுள்ளார். ஆனால் இவ்வெற்றி அவருக்கு பிறெக்ஸிட் உடன்படிக்கையில் வெற்றியீட்டித் தருமா? என்பது கேள்விக்குறியே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (287)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் மற்றொரு மடலுடன் அன்பு வாசகர்களுடன் கருத்தாட விழைகிறேன். காலம் காற்றாகக் கரைந்து 2018ஆம் ஆண்டு இறுதியை நோக்கி அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்து முழுமையாகத் தன்னை “ப்ரெக்ஸிட்” எனும் புதை சேற்றுக்குள் புதைத்துக் கொண்டு செல்கிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சொல்லின் பின்னால் இங்கிலாந்து நாட்டில் ஏற்படப்போகும் சிக்கல்களின் ஆழத்தை”ப்ரெக்ஸிட்” தேவை என்று வாக்களித்த மக்கள் முழுமையாக அறிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது சந்தேகமே!

    2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது தவிர்க்கப்படமுடியாத உண்மை. மிக விரைவாக அக்காலக்கெடுவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னால் இருந்த முக்கியமான தேவை இவ்வெளியேற்றம் எவ்வகையில் இங்கிலாந்தின் மீதான பாதிப்புகளை மிதப்படுத்தும் வகையில் அமையப்போகிறது என்பதை நிர்ணயிப்பதே. அவ்வகையிலான நிர்ணயிப்பின் வெற்றி அவ்வெளியேற்ற உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் புரிந்துணர்வுடன் செயல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

    இவ்வெளியேற்ற உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றை முக்கியமாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதே.

    1. இங்கிலாந்துக்கும்,ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குமிடையிலான மக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் இலகுவாக விசா இன்றி இங்கிலாந்துக்குள் வந்து பணிபுரியலாம் எனும் நிலையைக் கட்டுப்படுத்துவது.
    2. ஒவ்வொரு வருடமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிக்காக இங்கிலாந்து செலுத்தும் பலகோடி ஸ்டேலிங் பவுண்ஸ்-ஐ நிறுத்துவது.
    3. ஐரோப்பிய நீதிமன்றம் இங்கிலாந்து நீதிமன்றத் தீர்ப்புக்களில் செலுத்தும் ஆதிக்கத்தை நிறுத்துவது.
    4. பொது விவசாயத் திட்டம்,மற்றும் பொது மீன்பிடித் திட்டம் ஆகியவற்றில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது
    5. இங்கிலாந்து சுயாதீனமாக மற்றைய ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த உலகநாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வது.
    6. தனிநாடான தெற்கு அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாகும்; ஆனால் அதே சமயம் வடஅயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தின்போது இவ்விரு பகுதிகளுக்குமிடையில் ஒரு நிரந்தரமான எல்லைக்கோட்டைத் தவிர்ப்பது.

    மேற்கூறியவைகளை முக்கிய இலக்காகக் கொண்டிருந்தாலும் வேறு சில விடயங்களும் சர்ச்சைக்குரியதாக இருந்தன. இதற்கான பேச்சுவார்த்தை ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஏறக்குறைய கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்தது. பல விடயங்களில் உடன்பாட்டை எட்டினாலும் அயர்லாந்து எல்லைப்பிரச்சனையே இழுபறியாக இருந்தது. வெளியேறும் காலக்கெடு அவசரமாக நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இருவாரங்களின் முன் பிரதமர் தெரேசா மேயும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் உடன்பாட்டை முழுமையாக எட்டி விட்டதாகக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து அவ்வுடன்படிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்துவிட்டு அதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் தனக்கு அவ்வுடன்படிக்கையில் திருப்தி இல்லையெனக்கூறி தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அவரோடு இணைந்து மற்றொரு அமைச்சரும் இராஜினாமா செய்தார்.

    பிரதமரின் நிலை மோசமாகி விட்டது. பிரதமர் பதவியிலிருப்பாரா? மாட்டாரா? எனும் விவாதம் காரசாரமாக ஊடகங்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தன. ஆனால் பிரதமர் மிரளவில்லை. நான் எது செய்தாலும் அது எனது பதவியை முன்னிறுத்துவதற்காக அல்ல. நாட்டின் நன்மையைக் கருதியே செய்வேன் என்பதே அவரது வாதமாக இருந்தது. பிரதமரின் இவ்வுடன்படிக்கைக்கு நாலாபக்கமும் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பின. அவரது கட்சியைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களே பகிரங்கமாக பிரதமரின் உடன்படிக்கையை எதிர்த்தனர். பிரதமரின் கட்சியைச் சேர்ந்த 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்ப்பிக்கையில்லை என்று கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்தால் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும். அப்படியோர் நிலை வருமென பலராலும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கெதிராக 48 பேர் முன்வரவேயில்லை.

    சகல எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுத்த பிரதமர் தனது உடன்படிக்கையை முதல்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஒப்புதலைப் பெறும் கைச்சாத்துப் பெறும் முயற்சியில் இறங்கினார். அடுத்தடுத்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு விஜயம் செய்து பல கூட்டங்களை நடத்தினார். விளைவாக கடந்த 25ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஏகமனதான ஒப்புதலை பிரதமர் தெரேசா மேயின் உடன்படிக்கை பெற்றது. ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு எதிராக இங்கிலாந்தில் ஒலிக்கும் கோஷங்களின் தீவிரம் குறைந்தபாடில்லை. சரி இனி அடுத்தகட்டம் என்ன ?

    டிசம்பர் மாதம் வரும் கிறீஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக இவ்வுடன்படிக்கை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் அதன் அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு வாக்கெடுப்புக்கு விடப்படும். தற்போதைய கணிப்புகளின்படி இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரதமரோ மக்களுக்கும், அம்மக்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது தனது உடன்படிக்கை தோல்வியடைந்தால் அதன் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் என்பதே அது. விளைவாக இங்கிலாந்து எதுவிதமான உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது அன்றி மக்களின் விருப்பத்துக்கமைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது முடியாமல் போவது எனும் இரண்டு முடிவுகளை நோக்கித் தள்ளுவதாகவே இருக்கும் என்கிறார்.

    அருமையான ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    “நதியினில் வெள்ளம்
    கரையினில் நெருப்பு
    இரண்டுக்கும் நடுவே
    இறைவனின் சிரிப்பு
    ஏனிந்தச் சிரிப்பு?“

    பிரதமர் தெரேசா மே அவர்களுக்குத் தமிழ் தெரிந்தால் இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பாரோ ? பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(286)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இந்த இனிமையான தீபாவளித் திருநாளைக் கொண்ட இவ்வினிய வாரத்தில் உங்களிடையே இம்மடல் மூலம் உறவாட விழைவதில் மகிழ்கிறேன். எத்தனையோ எதிர்பார்ப்புகளில் தீபாவளியும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பே. வாழ்வின் அனைத்து இடர்களும் நீங்கி மகிழ்வான வாழ்வை நோக்கிப் போகப்போகிறோம் எனும் நம்பிக்கை இத்தகைய திருநாட்களில் மக்களுக்கு ஏற்படுவது சகஜம். புத்தாடைகள் வாங்கிப் பட்டாசுகள் வெடித்து ஆடம்பரமான கேளிக்கைகள் இடம்பெறும் அதேசமயத்தில் நாட்டில் நிலவும் சமகால நிகழ்வுகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.

    இங்கிலாந்தில் இவ்வாரம் பல விடயங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாக அலசப்பட்டு வருகிறது. இவற்றில் அதிமுக்கியமாக லண்டனில் கடந்தவாரம் நடைப்பெற்ற சுமார் நான்கு கொலைகள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பதின்ம வயதுகளின் முடிவில் இருக்கும் இளைஞர்கள் கத்திக்குத்து ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத அசம்பாவிதங்களில் உயிரிழந்திருப்பது பலருக்கும் மிகவும் விசனத்தை அளித்துள்ளது. இலண்டன் மாநகர போலிஸ் பந்தோபஸ்து தேவையான அளவு இல்லை எனும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலண்டன் நகர மேயரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது. இத்தகைய கத்திக்குத்துக்கள் சம்பந்தமான வன்முறைகளை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்னும் பத்து வருடங்கள் எடுக்கலாம் என்று அவர் கூறியதே சர்ச்சைக்குரிய கருத்தாகிறது.

    இன்றைய பிரதமராக இருக்கும் தெரேசா மே அவர்கள் முன்னர் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். இங்கிலாந்துப் போலிஸ்துறை உள்நாட்டு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அப்போது தெரேசா மே அவர்கள் நாட்டின் பொருளாதார நிலையைச் சீர்படுத்த முனைந்த நிதியமைச்சரின் திட்டப்படி போலிஸ்துறையின் செலவீனத்தை அதிக அளவில் குறைத்தார் அதன் விளைவாக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இத்தகைய அரசாங்கத்தின் நிதிக்கட்டுப்பாடே இன்றைய மேற்படி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாதவாறு இருப்பதன் காரணம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகளும், பொருளாதார நிபுணர்களும். போலிசாரின் கவனத்தை இத்தகைய வன்முறைச் சம்பவங்களின் பால் திருப்பப் போதுமான எண்ணிக்கை இல்லை என்று பலரது கணிப்பு. இதற்காக அரசாங்கம் போதுமான அளவு நிதியைப் போலிஸ்துறைக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கோஷமாக இருக்கிறது. மேலும் சிலரோ இளம்பிராயத்திலேயே மாணவர்களுக்கு இத்தகைய வன்முறைகளின் விபரீதமான தாக்கங்களை விளக்கிக் கல்விமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

    ப்ரெக்ஸிட் எனும் பூதம் மறுபடியும் தன் தலையை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஆமாம் டீலா? அல்லது நோ டீலா? எனும் கேள்விக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் பதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தரப்பினரும் தமது வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். பிரதமரும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் விரைவில் தாம் இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் ஒரு தீர்வை எட்டப்போவதாகக் கூறிவருகிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சில தகவல்கள் கசிகின்றன. இதற்கான காலக்கெடு மிக விரைவாக அண்மித்துக் கொண்டு வருகிறது. இதை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது இன்னமும் அனைவரின் மனதிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    அமெரிக்காவில் நடைபெற்ற செனட் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை இவைகளுக்கான தேர்தலை அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் எஞ்சிய இரண்டு வருட பதவிக்காலத்தில் அவர் நிறைவேற்ற எண்ணும் சட்டங்களுக்கு ஏதுவாக இவ்விரண்டு சபைகளிலும் அவருடைய கட்சி பெரும்பான்மை பெறுவது அவசியம். அதேசமயம் பல சர்ச்சைகளை உலகளாவிய அளவில் ட்ரம்ப் அவர்கள் ஏற்படுத்தி வருகையில் எதிர்க்கட்சியான டெமகிரட் கட்சி பெரும்பான்மை பெற்றால் திரு ட்ரம்ப் அவர்களின் மீதான மக்களின் அதிருப்தியை எடுத்துக்காட்டும் எனும் வாதத்தோடு எதிர்க்கட்சியும் தமது பெரும்பான்மைக்காகப் பாடுபட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்து விட்டது. செனட் சபையின் பெரும்பான்மையை ரிபப்ளிகன் கட்சியும், மக்கள் பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையை டெமகிரட்ஸ் கட்சியும் பெற்றுக் கொண்டன. இது தமது கட்சிக்கு கிடைத்த பெரும் ஆதரவு என்று ட்ரம்ப் அவர்கள் மார்தட்டிக் கொண்டாலும். இனி அவரது கொள்கைகளைச் சட்டமாக்குவதில் சிறிது சிரமத்தை எதிர்கொள்வார் என்பதே அரசியல் அவதானிகளினது அனுமானம்.

    கடைசியாக இன்று 14.11.2018 கிடைக்கும் செய்திகளின் படி இங்கிலாந்து அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து வெளியேறுவதற்கான உடன்படிக்கையை எட்டிவிட்டன. நேற்று மாலையிலிருந்து இங்கிலாந்துப் பிரதமர் தமது அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து வருகிறார். இன்று மதியம் 2 மணிக்கு அவரது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் இவ்வுடன்படிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதைத்தொடர்ந்து இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்காக விடப்படும். பாராளுமன்றத்தில் பிரதமரின் இவ்வுடன்படிக்கை வெற்றியடைவது மிகவும் கடினம் என்பதே அவதானிகள் கருத்து. தோல்வியுற்றால் அடுத்தது என்ன? பாராளுமன்றம் கலைக்கப்படுமா? இல்லை உடன்படிக்கை எதுவும் எட்டாமல் இங்கிலாந்து வெளியேறுமா? விடையில்லாத பல கேள்விகள் அனைவரின் மனங்களிலும் தொங்குகிறது. இவற்றிற்கு வரும் நாட்கள் பதிலிறுக்குமா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share