Tag: ரா. பார்த்தசாரதி

  • தொழிலாளர் தினம்

     

    ரா.பார்த்தசாரதி

     
    தொழில்கள் சிறக்க தொழிலாளர்கள் தேவை

    பொருட்கள் செய்யவும் தொழிலாளர்கள் தேவை

    எந்திரங்கள் செய்தாலும் தொழிலாளி தேவை

    அதனை இயக்கவும் ஒரு தொழிலாளி தேவை !

     

    தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளி முக்கியம்

    அவர்கள் இல்லை எனில் உற்பத்தி குறையும்.

    அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள்

    அவர்கள் நலனில் அக்கறைக் காட்டுங்கள் !

     

    தொழிலாளியும் சாதிமதமற்ற மனிதன்தான்

    அவனுக்கும் வீடு வாசல்என்பதுண்டு

    முதலாளிகள் பலர் கசக்கிப் பிழிவதுண்டு

    நியாத்தை கேட்க அவர்களுக்கு உரிமையுண்டு

     

    தொழிலாளி மெச்சிய ஒரு முதலாளி இல்லை

    முதலாளி மெச்சிய ஒரு தொழிலாளி இல்லை

    என்றும் முதலாளி, தொழிலாளி முரண்பாடு

    கோரிக்கைகள் ஏற்க தொழிலாளி போடும் கூப்பாடு

     

    கார்ல்மார்க்ஸ் தொழிலாளர் இனத்தை மேம்படுத்தினார்

    தொழிலாளர்க் கென தனி கொள்கைகளை வகுத்தார்

    மே முதல்தேதி தொழிலாளர் தினமாய் கொண்டாடுகிறோம்

    தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற பாடுபடுவோம்

     

    Share
  • வாக்காளர்களே சற்றே நினையுங்கள்

     

    ரா.பார்த்தசாரதி

     
    தேர்தல் வந்தால் மாறுதல் உண்டு

    சூழ்ச்சிகளில் சிறந்த வேட்பாளர் உண்டு

    மக்களிடையே பல வாக்குறுதிகள் கொடுப்பதுண்டு

    தேர்தல் என்பதே ஒரு நாடக மேடை என சொல்வதுண்டு !

     
    கட்சிக்கு செய்ததை விட தொகுதிக்கு என்ன செய்வாய்

    மாதம் ஒரு முறை மக்களை நேரில் சந்திப்பாயா

    மக்கள் குறைக் கேட்டு தீர்ப்பாயா

    இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவாயா !

     
    மக்களே வாக்கினை அட்சயப் பாத்திரமாக நினையுங்கள்

    அதை பிச்சை இட்டு பிச்சைக்காரனாக நிற்காதீர்கள்

    பணம் கொடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்

    படித்த நற்பண்போடு உள்ளவர்களுக்கே வாக்களியுங்கள் !

     
    அரசியல் ஆதாயம் தேடுபவர்களை புறக்கணியுங்கள்

    மக்களை பலிகடா ஆக்கும் வேட்பாளரை எதிர்த்திடுங்கள்

    வாக்கினை பொன்னாகக் கருதி வாக்கு அளித்திடுங்கள்

    நல்ல தலைவனை நியமித்து நாட்டிற்கு நலம் சேர்த்திடுங்கள் !

    Share
  • இந்தியக் குடியரசு!

    -ராபார்த்தசாரதி

    அறுபத்தாராம்  ஆண்டு   குடியரசு தினத்தைக்  கொண்டாடுதே,
    இந்திய    நாடும்   உலகளவில்     வல்லரசு    ஆனதே ,
    உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே
    வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதைக்  காண்கிறோமே! 

    இயற்கைச்  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகியதே Republic-Day
    நாட்டுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
    இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே
    நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே! 

    குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
    நாட்டின் முன்னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே
    ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே,
    மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே ! 

    நாடு  உனக்கு என்ன செய்தது எனக்  கேட்காதிர்கள்
    நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள்,
    நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
    பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா ய் என்றும் விளங்குவோமே! 

    ஜனநாயகத்தின்  குடைக்கீழ்   வளரும்  நாடு,
    கலாசாரத்திலும்ஆன்மிகத்திலும்  சிறந்த நாடு,
    பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
    ணையற்ற  ந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!

     

     

    Share
  • பொங்கல் பண்டிகை! 

    -ரா.பார்த்தசாரதி 

    உத்தராயணம்  உதித்துவரும் காலம்
    உதய சூரியனை வழிபடும்  காலம்
    உழவர்கள் விளைச்சலைக் கொண்டாடும் காலம்
    தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக்காலம்! pongal

    உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் பண்டிகை
    விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
    திறமும், உறுதியும் கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
    இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!

    உழவன் சேற்றினிலே இறங்கினால்தான் நமக்குச் சோறு!
    நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு!
    விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு  என நினைத்திடுவோமே,
    விவசாயி  நலனில் அக்கறை கொண்டு  உதவி செய்திடுவோமே!

    கரும்பின் கணுவில் கரும்பு  துளிர்த்து  வளர்ந்திடுமே!
    உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே!
    விவசாயிக்கு முக்கியப் பண்டிகை பொங்கல் திருவிழா!
    சூரிய பகவனை நினைந்து கொண்டாடும் திருவிழா!

    பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப்பண்டிகை
    பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கனுப் பொங்கல்
    கால்நடைகளுக்காகக்  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்
    உறவும், நட்பும் பரிமாற்றம் கொள்ளக்  காணும் பொங்கல்!

    எத்துயர் வரினும் துவளுதல் கூடாது!
    உழவன் மனம் என்றும் தளர்ச்சியுறக்கூடாது!
    கரும்பும், பொங்கலும் இறைவனுக்குப் படைப்போமே!
    குடும்பத்துடன் ’பொங்கலோ பொங்கல்’ எனக் கொண்டாடுவோமே!

     

     

    Share
  • மக்களைப் பெற்ற மகராசி!

    -ரா. பார்த்தசாரதி

    வாழ்வின் ஏட்டினைத் திருப்பிப்  பார்த்தேன்
    வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன்
    எழுதுகோலைத்  துணிவுகொண்டு கையில் எடுத்தேன்
    அன்னை சரோஜாவின் அருமையினை எழுதத் துணிந்தேன்!

    மக்களைப் பெற்ற மகராசியே  தாய்தான்
    குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்
    ஞானியும், துறவியும் போற்றும் தெய்வம்
    ஞாலம்  புகழ்ந்திடும் சிறந்த தெய்வம்!

    ஏழு பிறவி எடுத்து ஏழு பிள்ளைகள் பெற்றாய்
    ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஓர்  தொடர்பு வைத்தாய்
    ஏழிலே ஒன்றே ஒன்று  பெண் ஆனாலும்
    எல்லோரிடத்திலும் மாறா அன்பும் பாசமும் வைத்தாய்!

    ஓய்வின்றி உறக்கம்மின்றி  உன்உயிரைக் கூட
    ஒவ்வோர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்
    உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே
    உன்அருமை அறியாப் பிள்ளைகளைத்  தூற்றுமே!

    பாசமுள்ள வேளையிலே காசு பணம்  கூடலியே
    காசுவந்த   வேளையிலே பாசம் வந்து சேரலியே
    பருவத்திலே நாங்கள் பட்டவலி தாங்கலியே
    வார்த்தையிலே வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே!

    பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே
    பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே
    எனக்கென்று துன்பம்வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு
    உனக்கென்று துன்பம் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ?

    தாயைவிடச்  சிறந்த தெய்வம் இல்லை
    திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை
    தாயின் பெருமையினைச் சொல்ல வார்த்தையில்லை
    தியாகச்சுடரே  தாயுருவம் மனதினின்றும் மறைவதில்லை!

    இளமையில் ஸ்பரிசம்  முதுமையில் பாசம்,
    என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்
    இளமையில்  நான் உனக்கொரு குழந்தை
    முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை!

    வாழ்க்கைப்  படகினிலே  நீயொரு  துடுப்பு
    எங்கள்  பிறப்பே  உன் படைப்பு
    எங்கள்  வளமே உன் சிறப்பு
    எங்கள்  நினைவே  பாசத்தின் பிணைப்பு!

    பூமியைவிடச் சிறந்தவள் தாய்
    ஆகாயத்தைவிடச்  சிறந்தவர்  தந்தை
    பூவிலே சிறந்தது  மல்லிகை ரோஜா
    எங்கள் தாயின் பெயரோ சரோஜா!

     

    Share
  • நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

    –ரா. பார்த்தசாரதி.

     

    நீங்கள் எப்படி இருப்பீர்கள், நீங்கள் எதை இழப்பீர்கள்!!

    who

     

     

    அறிவு ஆற்றலுடன் பேசினால், அறிவாளியாக இருப்பீர்கள்!
    சிந்தித்துப் பேசினால், சிறப்புடன் இருப்பீர்கள்!
    நயம்பட பேசினால், நல்லவனாக இருப்பீர்கள்!
    பண்புடன் பேசினால், பயன் அடைபவனாக இருப்பீர்கள்!
    பொருத்தமாகப் பேசினால், பாரட்டத்தக்கவராக இருப்பீர்கள்
    பொறுமையாகப் பேசினால், போற்றப்படுவராக இருப்பீர்கள்!

    அதிகமாகப் பேசினால், தன் மதிப்பை இழப்பீர்கள்!
    ஆணவமாய் பேசினால், அன்பை இழப்பீர்கள்!
    கடுமையாகப் பேசினால், நட்பை இழப்பீர்கள்!
    கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பீர்கள்!
    வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பீர்கள்!
    பொய் பேசினால், நற்பெயரையே இழப்பீர்கள்!

    நல்லதே பேசுங்கள், நல்லதே செய்யுங்கள் … நன்மை அடைவீர்கள்!

    Share
  • பிரியமானவளே!

    -ரா.பார்த்தசாரதி

    திருவிழாவில் மாவிலைத் தோரணம் கட்டி
    அழகாக அலங்கரிக்கக் கண்டேனே,
    வானம்  எனும் வீதியிலே நிலவும்,
    நட்சத்திரங்களும் மின்ன
    அவைகள் என்னைக் கவர்ந்ததே!

    தோரணத்தில் ஆங்காங்கே  பூக்களும்,
    இலைகளும் செருகியதே ஓர்  அழகு,
    உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்கியதே
    நீ நீர்தெளித்துக் கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
    கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய்!

    ஆடி மாத அம்மனுக்குப் பொங்கல் இட
    சுள்ளிகளைப் பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன்
    அந்த வெயிலில்  தூரத்துச் சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!
    சாமிக்குப் படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலைக் கொடுக்கும்போது
    என் இதயம் இனிக்கிறது என்றாய்
    உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு!

    மறுநாள் ஊருக்குக் கிளம்புகையில்
    திரும்ப எப்ப வருவே  எனும் ஏக்க
    விழியாலும், பார்வையாலும் என்னை நோக்கினாய்!
    பிரியமானவளே, அப்போதுதான் புரிந்துகொண்டேன்
    என் உடலை விட்டு என் உயிரை எடுத்துச் செல்கிறாய் என்று!

     

    Share
  • சுதந்திரம் எங்கே?

    -ரா. பார்த்தசாரதி 

    நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்
    வெள்ளையனே வெள்ளியேறு  எனச் சொன்னோம்!

    அரசியல்வாதிகள்  ஊழலை மறைப்பதற்குச் சுதந்திரம்
    ஏன்  என்று கேட்பவர்களுக்குச் சிறையே  அடைக்கலம்!

    நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம்
    இன்று கெடுதல் நடக்காமலிருக்க ஓர் யாகம்!

    ஆன்மிகவாதிகளுக்கும் அரசியல்வாதிக்கும் சுதந்திரம்
    நல்லதைச் செய்பவர்களைத்   தடைசெய்யுதே  சுதந்திரம்!

    பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
    பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம்?

    அறுபத்தொன்பது  ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு
    இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

    கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
    இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே!

    இளைஞர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் !
    தாய்நாட்டின் முன்னேற்றத்திற்குக் கடினமாய் உழைத்திடுங்கள் !

    ஊழலையும் கொடுமைகளையும்  எதிர்த்துப் போராடுங்கள் !
    ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

    சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள் !
    அதுவே  பல தியாகிகளின்  தியாகம் என நினைந்திடுங்கள் !

    இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உங்களைத் தூண்டட்டும் !
    இன்றைய பாரத இளைஞர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் !

     

    Share
  • வாஷிங்டனில் வசந்தம் !

    -ரா. பார்த்தசாரதி

    எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம்
    பன்னீர்த்துளியெனத்  தெளித்தது  பனித்துளி
    சற்றே தயக்கமும் நடுக்கமும் அடைந்தோம்
    அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?

    இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்
    மலர்கள் பல நிறங்களில்  மிளிர்வதைக் காண்கின்றோம்
    மனிதர்கள்முகமலர்ச்சியுடன் வரவேற்பதைக்  கண்டோம்
    எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!

    பூத்துக் குலுங்கும்  புதுமலர்கள் அசையப்
    புதிதாய்த்  தளிர்த்துப்  புன்னகை புரிய
    மகிழ்ச்சியில்   நாங்கள்  பூரிப்பு அடைய
    வரவேற்றதே   வசந்தமே  வருக  வருக  என!

     

    Share
  • உலகத் தாய்ப்பால் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    தாய்க்கு  மிஞ்சிய  தெய்வமில்லை
    தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமில்லை                   breastfeeding
    பிறந்த குழந்தைக்கு இதுவே  உணவு
    மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உணவு !

    தாய்ப்பால் கொடுத்தால் பாசம் மிகும்
    தாய்ப்பால் இல்லாத குழந்தைக்கு நோய் மிகும்
    புட்டிப்பாலை அதிகம்  கொடுக்காதீர்
    குழந்தையின்  வளர்ச்சியினைத் தடுக்காதீர் !

    தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும்
    என நினைப்பது தாய்க்கு அழகல்ல!
    குழந்தையின் வளர்ச்சியினை மனதிற் கொள்ளவும்
    குழந்தையின் நலமே தன் நலம் எனத் தெளியவும் !

    பெண்மையையும் தாய்மையையும்  போற்றிடுவோம்
    தாய்ப்பாலின்   சிறப்பினைத் தாய்மார்களுக்கு எடுத்துரைப்போம்
    தாய்மார்களுக்கு மருத்துவர்களால் எடுத்துரைக்கப்பட்ட  தினம்
    தாய்ப்பால்  ஊட்டும் தினத்தை எல்லோரும் போற்றுவோம் !

     

    Share
  • மதுவின் கேடு

    -ரா.பார்த்தசாரதி

    மதுவினைக் குடித்தால் உடலும் அறிவும் மயங்கும்
    மது உண்பவன் தன் நிலை அறிந்து பேசமாட்டான்
    உடலுக்கும் அறிவுக்கும் கேடு விளையும் என அறிவான்
    விட்டில் பூச்சி போல் மதுக்கடையைத்தானே அடைவான்!

    மதுவினால்  மக்கள் நல்வாழ்விற்குக் கேடு  நமது அரசாங்கம் அறிந்ததே
    மதுவினால் அரசாங்கம் பலகோடி வருமானம் என்றும்  பெறுகிறதே
    பலகோடி வருமானம்  ஈட்ட பல நல்லத்  திட்டங்கள்  நாட்டிலே உள்ளதே
    இதனைச்  செய்ய அரசாங்கம்  முயற்சி செய்யத் தயங்குதே!

    மது  உண்பவன் பகைவர்களுக்கும்  அஞ்சமாட்டான்
    பிறரைக் கண்டால் மதிக்கமாட்டான்; தன்னை மறைத்துக்கொள்வான்
    பெற்றோர், மனைவி, குழந்தைகளால்  இகழப்படுவான்
    உற்றார், உறவினர்  கண்டால் மறைந்து செல்வான்!

    பிறரிடம்  தன்மானத்தை விட்டுப் பணத்திற்காகக்  கையேந்துவான்
    சம்பாதிக்கும்  பணத்தை நேர்வழியில்  செலவிடமாட்டான்
    தன் உடம்பு   பாதிக்கப்படுவதை  என்றும்  உணரமாட்டான்
    கடைசியில்  அவனே  பூமிக்குப்  பாரமாக  இருந்திடுவான்!

    மதுவினால் ஏற்படும் தீயனவற்றை தடுக்கக்  கூடாதா?
    மக்கள் நல்வாழ்வில் அரசாங்கம் அக்கறை செலுத்தாதா?
    மதுவினால் வருமானம் இருந்தாலும் வேறு நல்ல வழிகள் இருக்கின்றதே
    இதனைக் கண்டுகொள்ளாமல் அடக்குமுறையினைக் கையாளுக்கின்றதே!

    மதுவினை ஒழிக்கவேண்டும்; கூக்குரல் கொடுத்து உதவ வேண்டும்
    பெண்களும், மாணவர்களும்  காந்தியின் வழியில்  போராடவேண்டும்
    மதுக்கடைகளை மூடுவதற்கு எல்லா இடங்களிலும் மக்கள் திரள வேண்டும்
    நல்வாழ்விற்கு உகந்த கடைகளாய் பொது நூலகமாய்  மாற்ற வேண்டும்!

     

    Share
  • மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

    -ரா. பார்த்தசாரதி

     

    kalam

     

     

     

     

     

     

     

    வையகம் போற்றும் சிறந்த விஞ்ஞானியே !
    தன்னலம் கருதாத  தலைவனும் நீயே !
    விருதுகள் பல பெற்ற  மாமேதையே !
    தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஜனாதிபதியே !

    இளைய சமுதாயத்தைக்  கனவு கொண்டு இலட்சியத்தை அறிவுறுத்தினாய் !
    இந்தியா வல்லரசு  ஆகும் என மக்களிடையே  எடுத்துரைத்தாய் !
    மாற்றுத் திறனாளிக்கு  எடை குறைவான காலணி  செய்துகொடுத்தாய்!
    மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் திறம்படத் தெளியவைத்தாய் !

    அரசியலையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே போற்றினாய் !
    ஏவுகணைகளின்  நாயகன் எனப் போற்றப்பட்டாய் !
    யாதும் ஊரே  யாவரும் கேளிர் என்பதை அகிலத்தில் உரைத்தாய் !
    எளிமையும் பணிவும்  கொண்டு  பதவி வகித்தாய் !

    தமிழினமே  உன்  இழப்பால்  கலங்கியதே !
    நரம்பிழந்த வீணையாக  இன்று காணப்பட்டதே !
    உன்  பிறப்பு  ஓர்  சம்பவமாக  இருந்ததே !
    உன் இறப்பு  ஓர்  சரித்திரமாய் மாறியதே !

     

     

    Share
  • மெல்லிசை மன்னன்

    -ரா. பார்த்தசாரதி

    இசைக்கு  உருகாதார்  யாரும் இல்லை
    இசையை வாழ்வோடு இணைத்து  வாழ்ந்த மனிதன்
    இசையை  வாழ்கையாய்க்  கொண்ட இசை மன்னன்
    அவரே மெல்லிசை மன்னன் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் !  msv

    ஏழு  ஸ்வரங்களில் எத்தனைப் பாடல்கள் இசை அமைத்தாய் !
    பாட்டிற்காக  இசையா,  இசைக்காகப்  பாட்டா ?
    மெட்டுக்காகப்  பாட்டா ,  பாட்டுக்காக  மெட்டா ?
    ஒன்றோடுஒன்று கலந்து வரும் திரு. எம்.எஸ். வியின் விளையாட  !

    கவிஞனின்  பாடல்கள்  இன்னிசையாய்  உருமாறி,
    சந்தத்துடன் பாடல்கள்  இனிதே மெருகேறி,
    பாடல்களும்  இன்னிசையால் புகழப் பெற்றதே !
    கவிஞனின் புகழும் அதனால் நிலைபெற்றதே !

    கண்ணதாசன் பாட்டுக்களைக் காலமெலாம் கேட்கச் செய்தாய்
    வாலிக்கும் மற்ற  கவிஞர்களுக்கும் இசை அமைத்துக் கொடுத்தாய்
    திரை உலகில் மெல்லிசை  மன்னனாய்த்  திகழ்ந்தாய்
    நீ மறைந்தாலும் உன் இசையை மக்கள் மனதிலே கலந்தாய் !

    நல்ல இசை கேட்டாலே மனிதனுக்கு மனநிறைவு
    அந்த இசையே  மனிதனுக்குத் தரும் மன நெகிழ்வு
    காலங்கள் மாறினாலும்  பாடலின் இசை  நம்மை நினைவுபடுத்தும்
    திரு. எம்.எஸ். வி. மறைந்தாலும் அவரது இசை நெஞ்சிலே நிற்கும் !

     

    Share
  • புரியாத புதிர்!

    -ரா. பார்த்தசாரதி

    அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டைப்  பின்பற்றுகிறேன்
    அன்று உன் நிலைமை கண்டு பிரமிப்பு அடைந்தேன்
    உன்னைப்போல் உழைக்கின்றேன் இன்று நானே
    அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன்
    இன்று திருமணம் ஆனதால் பிற(ர்) நலமாகச்  சிந்திக்கின்றேன்
    என்  குழந்தை என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்
    ஏன் இந்த மாற்றம்  என்  நிலைமை  என்னை மாற்றியதா?
    பெண் இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா?

    பிறந்த வீட்டின் குலமும் புகுந்த வீட்டின் நலமே எனக்கொண்டாலும்
    இரண்டையும் சமமாக நினைக்க வேண்டும் என நினைத்தாலும்
    பெண்ணின் நிலைமை மதில்மேல் பூனையாக  அமைந்தாலும்
    பெற்ற தாயும் தந்தையும் சற்றே தொலைவிலிருந்தாலும்
    அன்று ’கல்’ ஆனாலும் கணவன்; ’புல்’ ஆனாலும் புருஷன்
    இன்று ஒரு ஆண்,  மனைவிக்காக அனுசரித்து நடந்தும்
    ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்கும் மனப்பாங்கே
    வாழ்கையில் அன்பும், அமைதியும் என்றும் நிலவிடும்!

    நீயும் என் வயதில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய்
    உன் அன்பும் தியாகமும் எங்களுக்காக அளித்தாய்
    நீ தந்த பாசத்தையும் அன்பையும் திருப்பி அளிக்க முடியுமா?
    தாய்ப்பாசத்தையும் தந்தையின் அரவணைப்பையும் திருப்பித் தரமுடியுமா?
    தாயின் பாசமும் அன்பும்  அவள் மடியிலிருந்து தொடக்கம்
    பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி
    பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே  வெற்றிக்கு மாலை
    பல உருவினில் இருந்தாலும் இன்றும்  ஒரு புரியாத புதிர்!

     

    Share
  • காலம் பொன் போன்றது!

    -ரா.பார்த்தசாரதி

    காலம்  நம்மை  வாழ  வைக்கும்
    காலம் நம்மைச் சிந்திக்க வைக்கும்
    காலம் கருதி  செயலாற்றத் துவங்கு
    அதுவே உன் வெற்றிக்கு  இலக்கு!

    காலம் என்பது கடிவாளமில்லாக் குதிரை
    கடிவாளமிட்டு  அடக்குவது நம் திறமை
    காலம்  எனும் கண்ணாடியில் முகம் காணுங்கள்
    கண்ணாடியைப்  பார்த்தே வெற்றி காணுங்கள்!

    காலத்தின் அருமை அறிந்து செய்தால் வெற்றி தேடி வரும்
    காலத்தைச்  சரிவரப்  பயன்படுத்தினால் மகத்தான வெற்றி
    காலம் என்பது  யானை  போன்றது
    அதனை அடக்கும் அங்குசம் நம்மிடம் உள்ளது !

    காலம் மதியாதவனை மிதித்துவிட்டுப் போகும்
    காலத்தின் அருமை உணர்ந்தவனை வெற்றி சேரும்
    காலமும் கடல் அலையும்  மனிதனுக்காகக் காத்திருக்காது
    காலம் கடந்த செயல்கள் என்றும்  பலன்  தராது !

    நமது லட்சியத்தைக்  காலத்தோடு கைகோத்துச்
    சந்தர்ப்பத்தையும் நேரத்தையும் ஒருங்கே சேர்த்து
    எத்தொழிலையும் தொடங்கினால் வெற்றி நமதே
    நாம் நினைக்க  வேண்டியதுகாலம் பொன் போன்றதே !

     

    Share