Tag: சித்ரப்ரியங்கா ராஜா

  • சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு…

    சிட்டே நீதான் எங்களை
    விட்டுப் பிரியவில்லையே
    சின்னஞ்சிறு மழலைபோல்
    சிங்காரமாய் நீயுமே
    தத்தித் தத்தி நடந்து வந்து
    தாளம் கற்றுத் தருகிறாய்

    உருட்டும் விழி பார்வையால்
    சுற்றுமுற்றும் நீயுமே
    ஒய்யாரமாய் பார்த்துப் பின்
    ஓட எத்தனிப்ப தென்ன?
    வைத்த அரிசி தன்னை நீ
    கொத்தித் தின்னும் அழகையே
    பெற்ற அன்னை போல் மனம்
    பார்த்து ரசித்து மகிழுமே
    கீச்சு கீச்சு என்று நீ
    கூச்சலிடும் அழகைத்தான்
    மூச்சு முட்ட நாங்களும்
    ரசித்து மகிழ்ச்சி கொள்வோமே
    அலைபேசி கோபுரங்கள் தாம்
    உன்னை அசைய வைத்தாலும்
    அசராது இன்னும் நீயே
    எங்களுக்காய் வாழ்கிறாய்
    அழகிய சிட்டே நீயும்தான்
    எங்களின் அன்புச் செல்லமடி
    எங்கள் அனைவரின் இதயமுமே
    என்றும் உனக்கான அன்னை மடி.

    – சித்ரப்ரியங்கா ராஜா.
    திருவண்ணாமலை

    Share
  • சந்திர கிரஹண கவிதை

    மூவர்ண நிலா
    31.01.18

    FB_IMG_1517421787702

    வெண்ணிலா

    என்னவளின் பால்முகம்
    மறைக்கப்பட்டதால்

    செந்நிலாவாகி

    கோபத்திலும் தாபத்தை
    கொஞ்சலோடு உணர்த்தி

    நீல நிலாவாக

    நீந்தி மீண்டு வந்து
    பூரணப் பொலிவுடன்
    புதுநகை பூத்தாளே
    மீண்டும் வெண்ணிலாவாய்.

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • தந்தையர் நாள் கவிதை

     

    தந்தை
    18.06.17

    unnamed (2)

    அன்னைக்கும் தனயன்
    ஆண்மையில் பேரழகன்
    இல்லத்தின் ஆணிவேர்
    ஈசனாய்க் காப்பவன்
    உன்னத சுமைதாங்கி
    ஊர்மெச்சும் குணவான்
    எளிமையைத் தனதாக்கி
    ஏற்றத்திற்கு வழிவகுப்பவன்
    ஐயமறுக்கும் ஆசான்
    ஒப்பற்ற நண்பன்
    ஓய்விலும் ஜீவநதி
    ஔடதமாய் ஆறுதலில்
    ஃதே தந்தையாம் தாயுமானவன்.

    – கவிஞர் சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • அன்னை 

    -சித்ரப்ரியங்கா ராஜா

    அன்பின் உருவம்
    இன்முகத்தரசி                                   annai
    ஈடில்லா குணவதி
    உத்தம பத்தினி
    ஊமையாய்ப் பலநேரம்
    எளிமையின் பிறப்பிடம்
    ஏற்றத்தாழ்வின்மை என்றும்
    ஐயம் தீர்க்கும் குரு
    ஒப்பனையற்ற தேவதை
    ஓய்வில்லா எந்திரம்
    ஔடதமாய் ஆயுள் வரை
    இஃதே அழகு அன்னை
    இனிதே பணிவோம் உன்னை!

     

     

    Share
  • அனைத்து அன்னையர்க்காக

    amma d
    அன்னை என்றும் நீதானே
    ஆதாரம் உலகில் அனைவர்க்கும்
    இல்லை நீயும் என்றாலோ
    ஈரேழ் உலகிலும் உயிர்களேது?
    உள்ளத்தில் நீயே வெண்மை மொட்டு
    ஊழி நீக்குதலில் மென்மைப் பட்டு
    எத்தனை மொழிகள் உண்டு எனினும்
    ஏகமனதாய் அம்மாவே முதல் மொழி
    ஐ! நீயே அனைவரின் அன்புக்கு அரசி
    ஒப்பிலா தெய்வமே தலைமகளே தாயே
    ஓம்காரமாய் முதலே என்றும் நீயே
    கண்ணை இமை தான் காப்பது போல்
    கால நேரம் பார்க்காது காப்பாய் என்
    கிள்ளை மொழி கேட்டு அகமகிழ்வாய்
    கீரிடம் எனக்கு சூட்டி சும்மாடு நீ ஏற்பாய்
    குறைவின்றி விளங்கும் குணவதி நீ
    கூறும் ஒவ்வொரு வார்த்தையும் வேதம்
    கெடுதல் கனவினிலும் நினைக்காதவளே
    கேட்பாரற்று கிடக்கும் மழலையும் உன்
    கை மட்டுமே பிடித்து கரைசேர ஆசைப்படும்
    கொண்டவனுக்கும் அவன் கொடுத்தவைக்கும்
    கோடானு கோடி நலனே என்றும் சேர்க்கும்
    மாசற்ற திருவுருவே மாதவே உந்தன்
    மலரடி தான் பணிவோம் மகிழ்வுடன் இந்நாளில்
    அன்னையர் தின வாழ்த்துகளுடன்

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • சித்திரை மகளே வாராயோ

     

     

    சித்திரை மகளை கரவொலி எழுப்பி
    சப்தமாய் நாமும் வரவேற்போம்
    நித்திரையில் கூட புத்துயிர் பெற்று
    நிம்மதி காண வரவேற்போம்
    காலையில் அன்று கனிமுகம் விழித்து
    காண்போமே வருடம் முழுதும் சுபிட்சம்
    கன்னிச் சித்திரை மகளாமே
    ஹேவிளம்பி அவளை வரவேற்போம்
    தமிழ் மாதங்களில் முதலும் இவளே
    தாய்த் தமிழாலே போற்றுவோம் இவளை
    சித்திரை நிலவுக்கும் சிறப்புண்டாம்
    சித்ரா பௌர்ணமி நன்னாளிலே
    கள்ளழகர் தான் ஆற்றில் இறங்கி
    சித்திரை விழாவைச் சிறப்பித்தாரே
    மாங்கல்ய பலன் தான் அடைந்தனளே
    மீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்முடனே
    மாங்கனி எறிதல் விழாவும் தானே
    மாட்சிமை கண்டதே சித்திரையில்
    இத்தனை பெருமை ஒருசேரப் பெற்ற
    சித்திரை மகளே வாராயோ
    இன்பமே எல்லார்க்கும் அள்ளி வழங்கிட
    இன்முகத்துடனே வாராயோ!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • வாட்ஸப்

    சித்ரப்ரியங்கா ராஜா

     

     

     

    வாட்ஸப் செயலி அனைவர்க்கும்

    வரமாய் அமைந்த ஒன்றாகும்

    காணொலி கேட்பொலி படம் தன்னை

    கண நேரத்தில் பகிர்ந்திடலாம்

    தொலைவில் இருக்கும் நல்லவரை

    அலைபேசி வழியே இணைத்திடுமே

    தொல்லை கொடுக்கும் தீயோரை

    தீயாய் தடையும் செய்திடுமே

    நாடு கடந்து இருப்போரின்

    நாடித் துடிப்பறிதல் இதனில் தான்

    நலனும் அறிந்து அமைதி கொள்ள

    நண்பனாய் உதவும் புலனம் தான்

    அன்னப் பறவை போல் நாமும்

    அல்லல் களைய வாழ்விலே

    அளவாய் புலனத்தைக் கையாண்டால்

    அரசன் நாமே அனைத்திலுமே.

     

     

     

    Share
  • “அனைவரும் உழைப்பாளிகளே”

    சித்ரப்ரியங்கா ராஜா

              FB_IMG_1493606894685

     

     

     

     

     

     

     

     

     

    அகிலம் காத்து அருளும் தெய்வமாய்

    ஆருயிர் தந்து நம்முயிர் காக்கும் பெற்றோராய்

    இறுகிய மனதை இளகச் செய்யும் கலைத்துறையினனாய்

    ஈடற்ற சாகசங்களால் சாதனை படைக்கும் மாணவனாய்

    உழைப்பே உயர்வென நம் சோற்றிற்கு வியர்வை சிந்தும்  உழவனாய்

    ஊழிகள் பல  களைவதில் நல்ல மருத்துவனாய்

    எத்தனை இடர்வரினும் நாட்டு எல்லையில் எதிர்கொள்ளும் இராணுவ வீரனாய்

    ஏற்றங்கள் பல நல்கும் ஆற்றல்மிகு பொறியாளனாய்

    ஐயங்கள்அகற்றி அறிவை விருத்திக்கும் ஆசிரியனாய்

    ஒருவர் இருவரல்ல பலகோடி இவர் போன்றோர்!

    ஓய்விற்குப் பின்னும் சோராது உழைக்கும்

    சீரிய நல்மனிதர் இவர் அனைவரும்   உழைப்பாளிகளே!

    அண்டம் முழுதும் உள்ளோர் இன்று

    என் அன்புக் கவிதையின் உள்ளே அடக்கம் !

    யாதேனும ஒருவரை யான்விட்டு இருப்பின்

    சினமேனும் கொள்ளாது சிறியேன்

    பிழைபொறுத்து அருள்க!

     

     

     

    Share
  • கவிதையைக் காதலி

      சித்ரப்ரியங்கா ராஜா

     

     

    FB_IMG_14901173399182687

     

     

     

     

     

     

     

     

     

    அன்னை – அன்புக் கவிதை

    ஆசான் – அறிவுக் கவிதை

    இயற்கை – எழிற் கவிதை

    ஈகை – கொடைக் கவிதை

    உழைப்பு – முதலீட்டு கவிதை

    ஊக்கம் – உயர்த்தும் கவிதை

    எண்ணம் – சிந்தனை கவிதை

    ஏற்றம் – வெற்றிக் கவிதை

    ஐயம் – தேவையற்ற கவிதை

    ஒழுக்கம் – உயிர்க் கவிதை

    ஓய்வு-அத்யாவஸ்ய கவிதை

    இப்படி

    எங்கும் கவிதை

    எதிலும் கவிதை!

    மனிதரே கவிதை

    மனிதருள்ளும் கவிதை!

    கவிதை என்றும் இனியது

    அதைக்

    காதலித்துப் பார்த்த என் உணர்விது!

     

     

    Share
  • சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு…

    சித்ரப்ரியங்கா ராஜா

     

     

    சிட்டே நீதான் எங்களை

    விட்டுப் பிரியவில்லையே

    சின்னஞ்சிறு மழலைபோல்

    சிங்காரமாய் நீயுமே

    தத்தித் தத்தி நடந்து வந்து

    தாளம் கற்றுத் தருகிறாய்

    உருட்டும் விழி பார்வையால்

    சுற்றுமுற்றும் நீயுமே

    ஒய்யாரமாய் பார்த்துப் பின்

    ஓட எத்தனிப்ப தென்ன?

    வைத்த அரிசி தன்னை நீ

    கொத்தித் தின்னும் அழகையே

    பெற்ற அன்னை போல் மனம்

    பார்த்து ரசித்து மகிழுமே

    கீச்சு கீச்சு என்று நீ

    கூச்சலிடும் அழகைத்தான்

    மூச்சு முட்ட நாங்களும்

    ரசித்து மகிழ்ச்சி கொள்வோமே

    அலைபேசி கோபுரங்கள் தாம்

    உன்னை அசைய வைத்தாலும்

    அசராது இன்னும் நீயே

    எங்களுக்காய் வாழ்கிறாய்

    அழகிய சிட்டே நீயும்தான்

    எங்களின் அன்புச் செல்லமடி

    எங்கள் அனைவரின் இதயமுமே

    என்றும் உனக்கான அன்னை மடி.

     

     

    Share
  • பெண்ணே உனக்காக

    சித்ரப்ரியங்கா ராஜா

     

    பெண்ணாய் பிறந்ததற்கு நீதான்

    பெருமைப் பட்டுக்கோ – அடி

    கண்ணே நல்லன சில சொல்வேன்

    வாங்கிக் காதில் போட்டுக்கோ

    மகளாய் நீதான் பிறந்தவுடனே

    குலமும் தழைத்திடும் – நீ

    வளர்ந்து அறிவால் உயர இந்த

    உண்மை விளங்கிடும்

    பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்

    நீயும் வாழ்ந்திடுவாய்

    கல்வியில் சிறப்பாய் புலமை பெற்றே

    மடமையை வென்றிடுவாய்

    பெண்ணே நீதான் ஜீவசக்தி

    இதனை உணர்ந்து கொள்

    புவியில் இதை நீ நிலைப்படுத்த

    உன் நலம் பேணிக் கொள்

    பழகும் ஆடவர் குணம் அறிந்திட

    வேண்டும் எச்சரிக்கை – வாழ்வில்

    எதையும் வென்று சாதித்திடவே

    வைப்பாய் நம்பிக்கை

    குட்டக் குட்ட நீ குனிந்தாலோ

    உன்னை ஏய்த்திடுவார் – நீ

    குனியும் நேரம் குனிந்தால்தானே

    உன்னைப் போற்றிடுவார்

    சமுதாயத்தில் உன் நிலை உயர்த்தி

    சகத்தினை வென்றிடு – நீ

    இழிசொல்லுக்கு ஆளாகாமல் நாளும்

    இளமையாய் வாழ்ந்திடு

    எத்துறையிலும் பெண்கள் என்ற

    நிலை வந்தாலும் நீ

    என்றும் ஆணின் அன்பின் கீழென

    அனுசரித்தே வாழ்ந்திடு.

     

    Share
  • சிவராத்திரி நாயகன்

    – சித்ரப்ரியங்கா ராஜா

     

     

    அன்னையும் ஆனவன்

    ஆதியந்தம் இல்லாதான்

    இன்னல்கள் களைபவன்

    ஈசனே அனைத்திலும்

    உமையொரு பாகன்

    ஊர்த்துவத் தாண்டவக்கோன்

    எல்லாம் அவன் செயலே

    ஏகமனதுடன் நினைத்தால்

    ஐயம் தெளிவிப்பான்

    ஒரு நிலை மனமளிப்பான்

    ஓம் நமச்சிவாய எனவே

    ஓதினால் அவன் நாமத்தை

    இன்னல்கள் ஓடிடும் தூரம்

    இல்லை மனதினில்  பாரம்

    சிவாய நம இன்று சொல்வோம்

    சிவராத்திரியின் பலன் கொள்வோம்!

     

    Share
  • உலகத் தாய்மொழித் திருநாள்

    aui

    அன்னை ஊட்டிய பிள்ளைத்தமிழே
    ஆசான் பயிற்றுவித்த முத்தமிழே
    இல்லை உன் போன்ற செம்மொழியே
    ஈடில்லாப் புகழ் கொண்ட தாய்மொழியே
    உன்னில் தானே உயிர்மெய் அடக்கம்
    ஊர் பல கடந்துமே நின் புகழ் சிறக்கும்
    எளிய நடையிலும் உனைப் பயில்வோமே
    ஏட்டுச் சுரைக்காயாய் நாங்கள் இரோமே
    ஐ! எங்கள் தமிழே ஆரத்தியும் உனக்கு எடுத்து
    ஒன்றா இரண்டா பலகோடி பாமாலை தொடுத்து
    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா என்ற
    ஔவை மூதாட்டி அவர்தம் நல்வழி நின்று
    இஃதே எம் தாய்மொழியின் தனிச் சிறப்பென்று
    இறுமாப்புடனே மார்தட்டி யாவரும் முன்னின்று
    தப்பாது தானே நின் புகழ் பலவும் தன்னையே
    தரணிக்கே உரக்கச் சொல்வோம் தமிழன்னையே
    தாய்மொழித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • மகாத்மா

     

     

    அஹிம்ஸையை நிலைநிறுத்தி
    ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டி
    இந்தியத் தலைமகனாய் நின்று
    ஈன நிலையை அறவே கொன்று
    உலக உத்தமனாய் நீ ஒளிர்ந்து
    ஊழ்வினை தீர்த்த மகாத்மாவே
    எங்கள் அன்னை பதறித் துடித்தாளே
    ஏறு போன்ற மகன் மார்புச் சிதறக்
    கண்டு
    ஐயா நீ துயர் தந்து மறைந்தாய் இன்று
    ஒற்றுமைக்கு வித்திட்ட குணவானே
    ஓரிரு நிமிடமாவதுனை நினைப்போம்
    மீண்டும் நீதான் மீண்டு வருவாயா
    மலர்ந்து பாரதம் அமைதி கண்டிட!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • “உன்னை அறிந்தால் “

    இன்று 17.01.17 புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர் அவர்கள் 100 வது பிறந்த தினம். அவர் நடிப்பில் என்னை பெருமளவில் ஈர்த்த வசனம் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் அடிமைத் தனத்தை எதிர்த்து “உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றும் நிலைத்து நிற்பதற்கு?” என்ற வசனமே. அவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை எனினும், நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அவர் நடிப்பில். அவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வரும் கவியரசர் கண்ணதாசன் பாடல்”உன்னை அறிந்தால்” என்பதன் கருவை மையமாக கொண்டு நான் புனைந்த கவிதை.

    aa

    “உன்னை அறிந்தால் “

    அன்பெனும் தோணியைத் துணையாகக் கொண்டு
    ஆழ்கடல் சமூகத்தில் அழகாய்த் தான் முத்தெடுக்க
    இன்னது யாதென்ன நீ செய்ய வேண்டுமெனில்
    ஈடற்ற ஆற்றலின் உறைவிடமாய்த் திகழும்
    உன்னதமான உன்னை நீ முழுவதுமாய் அறிந்துபின்
    ஊக்கமாய் அனைவரோடும் ஒருசேரக் கைகோர்த்து
    எண்ணும் எழுத்தும் கண்ணெனச சொல்வது போல்
    ஏற்றம் நல்கும் மானத்தையும் உயிரென மதித்து
    ஐயம் தெளிவுற அனைத்திலும் அறவே தெளிந்து
    ஒப்பற்ற உன்குடியும் உயர்ந்திடச் செய்தால்
    ஓர்நாளும் நீயுந்தான் வீரநடை போட்டு
    ஓ! என அனைவர் வியக்க, கோ என வலம் வரலாம்!
    தான்கற்று தனையறிந்ததோடு நில்லாது
    தன்னலம் தன்னையும் தகர்த்திடுவாய் நாளும்
    பிறர்நலன் நோக்கும் பேரறிவாளனாய் நீயிருந்தால்
    இந்நன்னிலம் தன்னில் மன்னனாவது உறுதி!!
    அதனால்
    உன்னதமான உன்னை நீ முமுவதுமாய் அறிந்து
    சமூகம்
    உயர்வடையச் செயலாற்றுவாய் நீயுந்தான் விரைந்து!

    – சித்ரப்ரியங்கா ராஜா.
    திருவண்ணாமலை.

    Share