– சித்ரப்ரியங்கா ராஜா

 

 

அன்னையும் ஆனவன்

ஆதியந்தம் இல்லாதான்

இன்னல்கள் களைபவன்

ஈசனே அனைத்திலும்

உமையொரு பாகன்

ஊர்த்துவத் தாண்டவக்கோன்

எல்லாம் அவன் செயலே

ஏகமனதுடன் நினைத்தால்

ஐயம் தெளிவிப்பான்

ஒரு நிலை மனமளிப்பான்

ஓம் நமச்சிவாய எனவே

ஓதினால் அவன் நாமத்தை

இன்னல்கள் ஓடிடும் தூரம்

இல்லை மனதினில்  பாரம்

சிவாய நம இன்று சொல்வோம்

சிவராத்திரியின் பலன் கொள்வோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *