-சித்ரப்ரியங்கா ராஜா
அன்பின் உருவம்
இன்முகத்தரசி 
ஈடில்லா குணவதி
உத்தம பத்தினி
ஊமையாய்ப் பலநேரம்
எளிமையின் பிறப்பிடம்
ஏற்றத்தாழ்வின்மை என்றும்
ஐயம் தீர்க்கும் குரு
ஒப்பனையற்ற தேவதை
ஓய்வில்லா எந்திரம்
ஔடதமாய் ஆயுள் வரை
இஃதே அழகு அன்னை
இனிதே பணிவோம் உன்னை!

Leave a Reply