எஸ்.ஜானகி – மனங்களில் ஒளிரும் மணிதீபம்
– அண்ணாகண்ணன்
சொல்லுக்கு உயிரூட்டி, சூழலுக்கு உணர்வூட்டி, நெஞ்சுக்கு அமுதூட்டிய நினைவுப் பறவை, ஆழ்மனத்தை மீட்டிய ஆலய மணி, அப்பாவிக் குரலால் கொள்ளை கொண்ட ஆயிரம் தாமரை, ஆலாபனைகளால் காற்றைக் கட்டி ஆண்ட ஆகாய கங்கை, பாத்திரமாகவே மாறிச் சிறகை விரித்த சிறிய பறவை, பாவங்களைக் குழைத்து ஊட்டிய ஜீவ நாதம், குழந்தையாகவும் குமரியாகவும் கொஞ்சி, அருவியாகப் பொழிந்த ஆகாசவாணி, குரலுக்கு மூப்பில்லாத கோகிலம், தேயாத புகழ்கொண்ட தேவதை, பிரதி செய்ய முடியாத அசல், சுதி பிசகாத சுடர், மக்கள் மனங்களில் ஒளிரும் மணிதீபம், சாவே இல்லாத சஞ்சீவி, அவர் எத்திக்கும் புகழ்மணக்கும் எஸ்.ஜானகி.
#SJanaki #எஸ்ஜானகி #Janaki #ஜானகி
