அஹிம்ஸையை நிலைநிறுத்தி
ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டி
இந்தியத் தலைமகனாய் நின்று
ஈன நிலையை அறவே கொன்று
உலக உத்தமனாய் நீ ஒளிர்ந்து
ஊழ்வினை தீர்த்த மகாத்மாவே
எங்கள் அன்னை பதறித் துடித்தாளே
ஏறு போன்ற மகன் மார்புச் சிதறக்
கண்டு
ஐயா நீ துயர் தந்து மறைந்தாய் இன்று
ஒற்றுமைக்கு வித்திட்ட குணவானே
ஓரிரு நிமிடமாவதுனை நினைப்போம்
மீண்டும் நீதான் மீண்டு வருவாயா
மலர்ந்து பாரதம் அமைதி கண்டிட!

– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *