Tag: பாகம்பிரியாள்

  • அய்யனாரும், ஆட்டுக்குட்டியும்

    பாகம்பிரியாள்A-index

    கம்பீரமான முகம், களையான மீசை
    கையில் இருக்கும் பளபள கத்தி,
    கனைத்து நிற்கும் குதிரை -இவை யாவும்
    கொடுமை ஏதும் நிகழாது என்று
    கொடுத்த நம்பிக்கையை…….

    அவர் காலடியில் கிடக்கும்
    ஆட்டுக்குட்டி கொடுக்கும் தீனமான
    அலறலோடு கலந்த அமானுஷ்யம்
    அதை அவசரமாய் அழித்துச் செல்கிறது
    ஒவ்வொரு ஓங்காரமான வீச்சுக்கும்!
    படத்துக்கு நன்றி

    http://www.skyscrapercity.com/showthread.php?t=1034825

    Share
  • பெண்ணுக்கு ஒரு கடிதம்!

    பாகம்பிரியாள்
    அன்பே,
    நீ , அவசரமாய் நான் அலுவலகத்திற்கு செல்லும்
    நாட்கள் பல எனக்கு சாரதியாய் இருந்திருக்கிறாய்.
    பணப்பிரச்னை என்னை பிய்க்கும் போதெல்லாம்
    கை கொடுத்து உதவியிருக்கிறாய்.
    கவலை என்னும் மேகம் சூழந்த போதெல்லாம்,
    இன்முகம் காட்டி என்னை கரையேற்றிருக்கிறாய்.
    வேலையில்,  இற்ங்குமுகம் வந்த போதெல்லாம்
    என்னை உன் நெஞ்சில் சுமந்திருக்கிறாய்.
    இவ்வளவு எல்லாம் செய்த உனக்கு
    என்ன கைம்மாறு செய்ய முடியும்?

    பெண்கள் தினமான  இன்றைக்காவது
    நீ அலுவலத்திலிருந்து வரும் போது,
    சில ஆச்சரியங்களை பரப்பி வைத்து
    கண்ணான உன்னை சீராட்டவும்,
    பாராட்டவும் நான் நெடுநேரமாய் என்
    காதை,  கதவுக்கருகில் வைத்து
    காத்திருக்கிறேன் பொறுமையாய் .
    எப்போது உன் மெல்லிய .
    காலடி ஓசை கேட்குமென்று!
    அன்புடன்,
    உன் ………..

    படம் தந்த இணைய தளத்திற்கு நன்றி 

    Share
  • பாதுகாப்பு!

    பாகம்பிரியாள்
    காதலில் வீழ்ந்தாலும், வெளியே தெரியாது
    கட்டிக் காக்க, ஒளிய வேண்டும் என்ற உந்துதலில்
    ஓர் அறை ஒன்றைத் தேடுகையில்
    குயுக்தியாய் தோன்றியது ஓர் எண்ணம்,
    சர்க்கரைப் பாகில் செய்ததை தேர்வு செய்யலாமென்று!
    பளிச்சென்று இருந்ததால் உள்ளேயிருந்து
    வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்
    பாதுகாப்பாய் இருக்கிறது என்றே
    ஆனால் ஒவ்வொரு தடவையும் அருகில் வந்து
    அழகாய்  குவியும் உன் உதடுகள்  பட்டு
    உருகப்போவது  கண்ணாடி மட்டுமல்ல நான்
    என்ற என் இறுமாப்பும் என்றே தெரியாமல்!

    படத்துக்கு நன்றி

    http://www.colourbox.com/image/close-up-shot-of-a-woman-s-lips-kissing-image-1729702

    Share
  • என்னுடைய போன்சாய்!

     

    பாகம்பிரியாள்
    நான் வளர, வளர என் நினவுகளும்
    நெடுநெடுவென்று வளர்ந்தன.
    என்னோடு போட்டிப்போட்டுக்கொண்டு

    வளரும் வேகத்திலோ அவை
    வேண்டாத இடத்தில் எட்டிப்பார்த்ததால்,
    வந்து விழுந்த வம்பு சண்டைகள் ஏராளம்.

    அதைத் தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை
    என்ற அங்கலாய்ப்பும், எரிச்சலும் குடும்பத்தை
    அவ்வப்போது  பிரட்டிப்போட்டது.

    சற்றே வலித்தது என்றாலும்
    தொல்லை தரும் நினவுகளை
    குட்டையாய் வெட்டிக் கொண்டேன்.

    வீண் தொல்லைகள் ஏதுமில்லை.
    விழும் சருகுகள் என் தொட்டியிலேயே
    வேருக்கான உரமாகிப்போனது.

    வேலை வட்டாரத்தில், பழகப்பழக
    புரிந்தது, என்னைப்போல் பலரும்
    போன்சாய் வைத்திருக்கிறார்கள் என்று!

    அதைப்பற்றி நல விசாரிப்புகளும்,
    அவசியமான குறிப்புக்களும்
    அவ்வப்போது வந்து சேருகின்ற போதில்,

    மரமெங்கும் பூக்குவியல் கொத்துக்கொத்தாய்,
    மணம் வீசியதால், மகிழ்ந்தவர் சிலரே, பலருக்கோ
    மனனதைப் பிராண்டும் கேள்விகள் பல.

    ஆனால் அவர்களிடம் எப்படி சொல்வேன்?
    மரமாய்  நின்ற  என் மீது காதலி(யி)ன்
    அழகிய பாதம்  பட்டதால் நிகழ்ந்த விந்தை இதுவென்று!

     

    படத்துக்கு நன்றி

    http://www.masterfile.com/stock-photography/image/400-05878811/Pink-Azalea-Bonsai-Tree-of-Satzuki-type.

    Share
  • பயணம் !

    பாகம்பிரியாள்

    இதில் ஏறி வெற்றிக் கொள்வது
    எப்படி என்பது இன்று வரை புதிர்தான்!
    எதிர்பாராமல் திறக்கும் முத்தப்பொந்தும்,
    இடை தழுவும் கொடியும் உன்மத்தம் ஏற்றும்.
    கால் வைத்து ஏற ஆங்காங்கே கவிதைப்படிகளும்,
    கண்ணீர் உப்பால் கெட்டித்துப்போன பாறையும் உண்டு.
    அமைதியாய் இருப்பதாய் எண்ணுகையில்
    அதை முறிப்பதற்கே  விழுந்து தெறிக்கும்
    கூரான கோபச் சில்லுகள் எங்கும்.
    கண்ணில் பட்டவரும், காவியங்களும்
    சொன்ன கதையில் மயங்கி ஓர் ஆர்வம்
    கொழுந்து விட்டது மெல்லவே. இதோ
    யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
    யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
    ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
    வழுக்குப் பாறையின் மீது!

    படத்திற்கு நன்றி

    http://www.bigbasin.org/trailssequoia.html

    Share
  • காதல் கொடி!

    பாகம்பிரியாள்  
    நம் காதல் மலையைப்போல்,
    மௌனமாகவே இருக்கிறது
    என்றே நீ அங்கலாய்த்தாய்.
    அதற்கு  அருகில் நீ சென்றதுண்டா?

    துள்ளியோடும் மானைப் போல்,
    நினைவுகள் அங்கும் இங்கும்
    ஓடிக் கொண்டேயிருக்கும்
    நீ வரும் வழி பார்த்தே!

    நம் கோபம் போல், சில நினைவுகள்
    இறுகிக்கிடக்கும்  கரும் பாறையாய்.
    சில இடங்களிலோ புதிதான நிறத்தில்,
    பச்சைப்பாசி படர்ந்திருக்கும் மெலிதாய்!

    சொல்லத் தெரியாத சோகம் போல், பெயர்
     தெரியாத பறவைகள் புலம்பிக் கொண்டிருக்கும்.
    இளங் கொடிகள் கட்டுண்டு கிடந்தாலும்,
    அவ்வப்போது புதிய இலைகள் தலை காட்டும்.

    அன்பை  ஏற்கிறேன் என்று நீ சொன்ன  செய்தி
    வந்தவுடனே , சந்தோஷம்  எங்கும் பற்றிக் கொண்டு,
    குல்மொகர் பூக்களைக் கட்டி காதல்,  தன் கொடியை  ஏற்றிவிடும்
    காடெங்கும் கண்ணை பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில்!    
     
    படத்திற்கு நன்றி

    http://blogs.gonomad.com/traveltalesfromindia/2012/05/gulmohar-flowers.html

    Share
  • ஓசையும், ஆசையும்!

     

    பாகம்பிரியாள்

     நாம் காதல் கொண்ட தருணத்தில்,
    நம் புரிதலுக்கு முன் நீயோ

    கடும் சொல் ஒன்றை உதிர்த்தாய்,
    காதலுக்கு கண்ணில்லையென்று.

    அன்றிலிருந்தே நான் போட்டேன்
    அவசரமாய் என் கண்ணுக்குத் திரை.  

    உன் காலடி ஓசையில், சருகுகள்  மிதிபடுவதில்
    எனக்குப் புரியும் உன் எண்ணங்களின் வேகம்!  

    சுழன்று வரும் இலைகளோடு கலந்து வரும்
    செடிகளின் வாசம் சொல்லும் உன் சோகத்தை.

     பூக்களின் மகரந்தத் தூவலின் சொரிதல்
    புரிய வைக்கும் உன் நேச வருடலை.

    ஓசை என்னும் என் கரம்  காத்திருக்கிறது 
    ஆசை எனும் உன் கரம் எப்போது இணையுமென்று!

    ஆம் கண்ணே! ஓசையும், ஆசையும் சேர்ந்ததுதானே காதல்?
     

    படத்துக்கு நன்றி

    http://io9.com/5872520/a-form-of-blindness-where-you-can-see-everything-but-recognize-nothing

    Share
  • காந்தி தாத்தா!

     

    பாகம்பிரியாள்

    கண்ணான தலைவராம் என புகழப்படும்    
    காந்தியிடமிருந்து எல்லோரும், தனக்கு
    வேண்டியதெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். .

    அவரின் வாழ்க்கை சரிதத்தை
    வெள்ளைக்காரன் படமாய் எடுத்தான்.
    வாரிக் கொட்டியது பணமும் பெயரும்!

    அரைக்கால் தெரியும் வெள்ளை ஆடையை
    அனைத்து ஏழைகளும் பாரபட்சமின்றி
    தனது உடையாய்  எடுத்துக் கொண்டனர்.

    அவரின் ஒத்துழையாமை கொள்கையை
    எல்லா கட்சி  அரசியல்வாதிகளும்
    அவரவர் கையில் ஆயுதமாய் எடுத்துக் கொண்டனர்.

    கம்பி போட்ட சிறைச்சாலையும்,  
    கண்ணைக் கட்டி இருக்கும்  நீதித்துறையும்
    களையான அவர் படத்தை எடுத்துக் கொண்டன.

    சுண்டியிழுக்கும்  அவரின்  நல்ல பெயரை,
    சுறுசுறுப்பான அங்காடிகளும், தெருக்களும்,
    சிறார்களின்  பள்ளிகளும் எடுத்துக் கொண்டன.

    அகலமாய்  சிரிப்பை சிந்தும் அவர்  முகம்
    அழகாய் காட்சியளிக்கும்  ரூபாய்  நோட்டுக்களை  
     அச்சடிக்கும் பணியையோ அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
     
    அனைத்தையும் பங்கு போட்டுக் கொண்டவர்கள்
    அவசியமில்லை என்று விட்டுச் சென்ற உண்மையும்,
    அஹிம்சையும்  எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை  

    அதனை மீட்கவே, காந்தி தாத்தா தடி ஊன்றியே   
    ஓய்விலாது செல்கிறார் வீதி தோறும்,
    எங்கேனும் ஓரிடத்திலாவது காண முடியுமென்றே!
     
     
    படத்துக்கு நன்றி

    http://oxmedia.oxford.emory.edu/studentwiki/index.php/Durga

    Share
  • அன்னையைப் பணிவோம்!

     

    பாகம்பிரியாள்

    இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களைத் தன்
    அருள்பார்வையால் காத்த அன்னையைப் பணிவோம்.

    பொருளே வாழ்க்கை என கானல் நீரைத்தேடியவர் மேல்
    அருள் மழை பொழிந்த அன்னையைப் பணிவோம்.

    துன்பம் வந்த போதெல்லாம்  துவண்டு விடாமல் நம்
    துயர் துடைத்துய்வித்த  அன்னையைப் பணிவோம்.

    பொறாமை என்னும் நோய் பீடித்தபோதெல்லாம்
    பொறுமையாய்க் காத்த அன்னையைப் பணிவோம் .

    இரவும், பகலும் அவளை மறந்து அலைந்த போது
    அருள் கரம் காட்டிய அன்னையைப் பணிவோம்.

    கால பயம் நீங்கிட காலனை காலால் உதைத்து
    கனகமணியாய் விளங்கும் அன்னையைப் பணிவோம்  

    தேறும் வழி தெரியாது தவித்தழுத போதெல்லாம்  
    தஞ்சம் என்று அருளிய  அன்னையைப் பணிவோம்.

    வல்வினைகளை நீக்கி , வாடும் உயிர்கள்மேல்
    வாஞ்சையைப்பொழியும் அன்னையைப் பணிவோம்.

    ஒன்பது நாளும் கம்பீரமாய்  கொலு வீற்றிருக்குமவள்
    அழகை  தீந்தமிழில் பாடி, அன்னையைப் பணிவோம்!

     

    படத்துக்கு நன்றி

    http://www.lotussculpture.com/8bc11.html

    Share
  • ஒய்யாரம்!

     பாகம்பிரியாள்
    வெளியே!
    கொட்டிலில் இருக்கும் மாட்டிற்கு
    இரு கையால் தவிட்டை அள்ளிப்போட்டு     
    அவசரமாய் போகிறான் மகன்.
    அனைத்தையும் மாடு அசை போடுகிறது!

    உள்ளே!
    நோயும், உணவு கட்டுப்பாடும்  இருப்பதால்,
    வாயைக்கட்டும் வழி வகையில்  தேடியதில்
    வந்து விழுந்தது ஓர் சிறு தட்டில்,
    வட்ட வடிவமான நாலு தவிட்டு பிஸ்கட்!

    அதை உண்ணும்  முன் நேரம் குறித்து,  
     எண்ணிக்கைகளையும்  ஓர் குறிப்பாக
    அழகாய் எழுதி வைத்ததுடன்,  கணியை
    அலசியதில் தெரிந்தது அதில் உள்ள சக்தியின் அளவு!

    ஓ!  இதுதான் தவிடு தின்பதில் ஒய்யாரமோ?
     
    படத்திற்கு நன்றி

    http://www.charlestoncitypaper.com/charleston/DishCasualFineDining/Page

    Share
  • இரும்பு மனுஷி!

    பாகம்பிரியாள்

    இன்றைக்கும் அலுப்பு, சலிப்பு ஏதுமில்லாமல்
    அம்மாதான் உணவு போடுகிறாள் எல்லோருக்கும்.
    ஆனால் உணவுக் கவளத்தை விடவும் நாங்கள்
     அதிகம்  உண்டு மென்றது  மௌனம் தான் .
    ஏதோ ஒரு கவலை அவளை வாட்டுகிறது.  
    ஆனால் அருகில் செல்ல யாருக்கும் பயம்.
    எப்போதாவது என் சின்னப்பெண்ணை பார்த்து
    அபூர்வமாய் மலரும் ஓர் சின்ன சிரிப்பு.
    இரும்பு மனுஷியை தேற்றும் வழி தெரியாது
    துவண்டு போன என்னை விட்டு தூக்கம் விலகியது.
    இரவில் நீர் குடிக்க சென்ற என் கண்ணில் பட்டது
    எதிர்பாராமல் நடந்த ஓர்  நிகழ்வு.  .
     

    பாட்டியிடம் அவளுக்குத் தெரிந்த மொழியில்
    பேத்தி கேள்விகளைத் தொடுக்கிறாள்.
    நீண் ட அமைதிக்குப்பிறகு அருவியாய் வீழ்ந்தது,
    நெஞ்சில்  அடைபட்டுக்கிடந்த நினைவுகள் யாவும்.
    பிஞ்சு விரல்களின் வருடலைத் தாங்க இயலாது
    பழுப்பேறிய தலை சாய்ந்து கொள்ள இடம் தேடியதில்,
    மடி தன்னை மழலை மெல்லவே காட்ட,
    குலுங்கியதில் வெடித்தது ஓர் அழுகை. 
    இரும்பு மனுஷியை கரும்பு மனுஷியாய்
    மாற்றிய  என் மகள்  ஏதும் அறியாது   
    பொம்மையுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள்
    பூஞ்சிரிப்பு  ஒன்று உதட்டில் உறைந்திருக்க!
     
    படத்திற்கு நன்றி

    http://www.rgbstock.com/photo/mgF5K92/Old+Woman

    Share