அய்யனாரும், ஆட்டுக்குட்டியும்
கம்பீரமான முகம், களையான மீசை
கையில் இருக்கும் பளபள கத்தி,
கனைத்து நிற்கும் குதிரை -இவை யாவும்
கொடுமை ஏதும் நிகழாது என்று
கொடுத்த நம்பிக்கையை…….
அவர் காலடியில் கிடக்கும்
ஆட்டுக்குட்டி கொடுக்கும் தீனமான
அலறலோடு கலந்த அமானுஷ்யம்
அதை அவசரமாய் அழித்துச் செல்கிறது
ஒவ்வொரு ஓங்காரமான வீச்சுக்கும்!
படத்துக்கு நன்றி
http://www.skyscrapercity.com/showthread.php?t=1034825