Tag: மலர் சபா

  •  நான் அறிந்த சிலம்பு – 242

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    சோதிட வார்த்தை

    ஆடிமாதத்தின்
    கிருஷ்ண பட்சத்து அஷ்டமியும்
    கார்த்திகையின் குறையும் சேர்ந்த
    வெள்ளிக் கிழமையில்,
    தெளிவாக அமைந்த தீக்கதுவினாலே,
    புகழில் சிறந்த மதுரை நகரத்துடன் சேர்ந்து
    மன்னனும் கேடு வாய்க்கப் பெறுவான்
    என்ற வாக்கு உண்டானது.

    பாண்டியன் முறைபிழைத்த காரணம்

    கோவலனின் முற்பிறப்பு வரலாறு

    மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த
    கலிங்க நாட்டில்
    இனிமையான நீர் நிறைந்த
    மருதநிலம் அமைந்த சிங்கபுரத்திலும்
    மூங்கில் காடுகள் நிறைந்த கபிலபுரத்திலும்
    அரசை ஆள்கின்ற செல்வம் உடைய
    நேர்த்தியான மாலையணிந்த
    அரசனாகிய
    திருவேலினை ஏந்திய
    பெரிய கையை உடைய
    வசு என்பவனும்
    குமரன் என்பவனும்
    என்றும் அழியாத செல்வமுடைய
    சிறந்த குடியில் தோன்றிய
    இந்த இருவரும்
    தம்முள் பகையுற்றனர்.
    ஆறு காவதத்துக்கு
    இடைப்பட்ட நிலத்தில்
    ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ளப்
    போர் தொடுத்தனர்.

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 240

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    வார்த்திகனைச் சிறைவிடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல்

    திறக்க இயலாதபடி மூடிக்கொண்ட
    கோவில் கதவின் உறுதியான நிலையறிந்து,
    வீரம் மிக்க வேலை உடைய
    பாண்டிய நெடுஞ்செழியன் மயங்கினான்.

    “என் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியானதா?
    கொற்றவைக்கு நேர்ந்த வருத்தம் என்ன?”malar
    இதை ஆராய்ந்துவந்து என்னிடம் கூறுங்கள்…
    என மன்னன் கட்டளையிட்டான்.

    இளமையான அந்தச் சேவகர்,
    மன்னனை வணங்கிச் சென்றனர்.
    உளவுகண்டு செய்தி அறிந்து,
    வார்த்திகனைச் சிறையிலிருந்து அழைத்துவந்து
    மன்னன்முன் நிறுத்தினர்.
    உணமையை எடுத்துரைத்தனர்.

    உண்மையறிந்து மனம் வருந்தினான் மன்னன்.
    வார்த்திகனிடம் பேசலானான்.
    “பெரியவரே! உம்மைச் சிறையில் அடைத்தது
    செங்கோன்மைக்குப் பொருத்தமான
    செயல் அன்று;

    தம் கடமையிலிருந்து தவறிய
    அறிவில்லாத எம் காவலரால்
    என் அரசநீதி தவறிவிட்டது.
    இதைப் பொறுத்துக்கொள்வது
    பெரியவராகிய உங்கள் கடமை!”

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 239

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    வார்த்திகனைச் சிறையிட, ஐயை கோயிலின் கதவம் திறவாமை 

    தட்சணாமூர்த்தி அணிந்த அணிகலன்களைப்
    பார்த்துப் பொறாமையுற்ற
    அரசுப் பணியாளர்கள் சிலர்
    “இவன் புதையலைக் கவர்ந்த பார்ப்பனன்”
    என்றே கூறிக்
    கள்வரை அடைக்கும் சிறையில்temple doors
    அவனை அடைத்தனர்.

    அங்ஙனம் சிறையுற்ற
    வார்த்திகனின் மனைவி கார்த்திகை
    அம்முறையற்ற செயலால்
    பெரிதும் வருந்தினாள்
    மயங்கி நிலத்தில் விழுந்து புலம்பினாள்.

    ஒரு பாவமும் செய்யாத தன் கணவனுக்கு
    நேர்ந்த கொடுமையை எண்ணி
    இறைவன் மீது கோபம் கொண்டாள்.

    அவளின் இந்தச் செயல் கண்டு
    குற்றமேதும் இல்லாத சிறப்பினை உடைய
    சிற்ப வேலைகள் அமைந்த
    கொற்றவைக் கோயிலின் கதவு மூடிக் கொண்டது.

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 238

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    தம் சுற்றத்தினரையும் விட்டுநீங்கி
    குழலையும் குடுமியையும்
    மழலைப்பேச்சுடைய சிவந்த வாயையும்
    தளர்வான நடையும் உடைய கூட்டத்துடன்
    விளையாடும் சிறுவர்கள் அனைவரும்  silambu
    அந்த அந்தணனைச் சூழ்ந்து கொள்ள,
    பராசரன் பேசலானான்:

    “அந்தணச் சிறுவர்களே!
    என்னுடன் சேர்ந்து மறைதனை ஓதி
    என் பொதியில் இருக்கும் பண்டங்களை
    எடுத்துச் செல்வீராக!

    பெருமைவாய்ந்த சிறப்புடைய
    வார்த்திகன் புதல்வன்
    தட்சணாமுர்த்தி எனும் பெயர் கொண்டவன்
    பால்மணம் கொண்ட சிவந்த வாயை உடைய
    தன்னை ஒத்த இளையவரின்முன்,
    தளர்வு கொண்ட நாவினை உடையவனாய் இருப்பினும்
    மறையின் ஓசைமுறை தவறாது
    உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன்
    அவனுடன் சேர்ந்து ஓதினான்.

    அங்ஙனம் மறையினைத் தன்னுடன் ஓதிய
    தட்சணாமூர்த்தியை வியந்து பாராட்டினான்.
    முத்துக்களால் செய்த பூணூலையும்
    அதற்கேற்ற அணிகலன்களையும் புனைந்து
    கைக்குக் கடம், காதுக்குத் தோடு ஆகியவற்றுடன்
    தன் கைப்பொருளாகிய பண்டங்கள் நிறைந்த
    சிறு பொதியையும்
    தட்சணாமூர்த்திக்கு அளித்துப் பின்
    தன் ஊர் திரும்பினான் பராசரன்.

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 237

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை

    செங்கோல் கொண்ட பாண்டியனின்
    திருந்திய செயல் உடைய
    அந்தணர்கள் வசிக்கும் ஊர் திருத்தங்கால்…
    அவ்வூரில் உள்ள
    பசுமையான தழைகளால் நிறைந்த
    அரசமரத்தின் கீழ்த்
    தண்டையும் கமண்டலத்தையும் வெண்குடையையும்
    பண்டங்கள் உடைய சிறிய பொதியையும்
    மிதியடியையும் வைத்திருப்பவன் அவன்…

    குடிமக்களைக் காக்கும் வெண்கொற்றக் குடையும்
    அறநெறியால் கொண்ட வெற்றியும் உடைய
    மேலானவன் வாழ்க…
    கடலின்கண் பகைவர் தம்மை அழித்த
    மன்னவன் வாழ்க…
    இமயமலையில் வில்லெழுதிய
    காவலன் வாழ்க…
    பொலிவும் குளிர்ச்சியும் பொருந்திய
    பொருநையாற்றினையுடைய
    பொறையன் வாழ்க…!

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 235

    -மலர் சபா

     மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு

    பராசரன் சேரனைக் காணச் சென்று பார்ப்பன வாகை சூடி மீளுதல்

    அறத்தின் தன்மையை நூல்களின் மூலம் அறிந்து
    அதையொற்றிச் செங்கோல் முறையில்
    ஆட்சி செய்பவர்கள் பாண்டவர்கள்.
    அதற்குத் தகுந்தது போல்
    நெடிய வாளையும் உடையவர்கள்.
    அவர் குடி பற்றிய பெரிய உண்மைகளை King Sibi
    நான் சொல்வதன் மூலம் கேட்டறிவாயாக…

    தஞ்சமாக வந்த ஒரு புறாவுக்காக
    அதன் எடைக்கு எடை தன் தசை வைத்து
    அது போதாமல் போகவே
    தானும் துலாம் ஏறியவன் சிபி மன்னன்.

    ஒரு பசுவிற்கு நீதி வழங்கத்
    தேர்க்காலில் தன் மகனையே இட்டு
    நீதி வழங்கியவன் மனுநீதிச் சோழன்.
    இத்தகைய மன்னர் கொண்டது சோழர்குடி.

    சோழரின் தலைநகரான புகார்நகரம்
    பலவகைப் பூக்கள் பூத்த கழனிகள் மற்றும்
    பூமிக்கே பாரம் என்று சொல்லும் அளவு
    அதிகமான விளைச்சல் கொண்டது.

    அந்தப்புகார் நகரில்
    அறிவில் சிறந்த ‘பராசரன்’ என்னும்
    பார்ப்பனன் வாழ்ந்து வந்தான்.

    பாரதப் போர் நடந்த போது
    பாண்டவர்க்கும் கௌரவர்க்கும்
    உணவளித்துப் பெருமை கொண்ட வள்ளல் தன்மை,
    திருத்தமான வேலினை ஏந்திய கை,
    இலக்குமி நிலைபெற்று விளங்கும் கொலுமண்டபம்
    தன்னுடன் குலவி வருகின்ற வேல்படை
    இவை அனைத்தும் உடையவன் உதியஞ்சேரலாதன்.
    இப்படிப்பட்ட புகழை உடைய
    பல சேர மன்னர்களின் வள்ளல்தன்மையைக்
    கேள்விப்பட்டான் பராசரன்.

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 234

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    கை குறைத்த கொற்றவன்

    இப்பாண்டிய மன்னனின் சிறப்புக் குறித்து
    இன்னமும் கூறுவேன் கேட்பாயாக!
    பிறர்க்கு உதவி செய்ய இயலாத
    வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தனன்
    கீரந்தன் எனும் அந்தணன்.
    பொருள்தேட முற்பட்டு அவன்    Artist : Company school (India, estab. late 18th century, closed late 19th century) Title : Date : circa 1800 Medium Description: opaque watercolour with gold on paper Dimensions : Credit Line : Gift of Mr George Sandwith 1957 Image Credit Line : Accession Number : 9636
    வெளியூர் செல்ல விரும்பினான்.
    “நீங்கள் வெளியூர் போய்விட்டால்
    எனக்குத் துணை யாரும் இல்லையே”
    என்றாள் அவன் மனைவி.

    அந்தணன் அவளிடம்,
    “குடிமக்களுக்குக் காவலாய்
    அரசனது செங்கோலே
    பாதுகாப்பு வேலியாய் நிற்கும்;
    அதைவிடச் சிறந்த வேலி
    வேறு எதுவும் இல்லை;
    எனவே பயப்படாதே”
    என்று கூறி வெளியூர் சென்றான்.

    இக்குடியில் பிறந்த மன்னன் ஒருநாள்
    மாறுவேடம் பூண்டு
    அந்தப் பெண் இருந்த வீட்டின் அருகே வந்து
    உள்ளே இருப்பது யார் என்றறியக்
    கதவைத் தட்டினான்.
    கதவின் ஒலி கேட்டு அஞ்சிய அப்பெண்,
    “அரசனது காவல் சிறந்தது எனக்கூறி
    எனைத் தனியே இங்கே விட்டுச் சென்றாயே,
    இன்று அந்த அரசன் காவல்
    எனைக் காத்திடாதோ”
    எனக் கூறிப் புலம்பினாள்.

    அப்பெண்ணின் சொல் பழுக்கக் காய்ச்சிய
    இரும்பைப் போல
    அந்த மன்னனின் மனத்தைச் சுட்டது.
    ‘நம் செயலால் இப்பெண்ணுக்குப் பழி நேருமோ’
    என அஞ்சிய அந்தப் பாண்டிய மன்னன்,
    வச்சிரப்படையை உடைய இந்திரன் மணிமுடியை
    ஒளிபொருந்திய தனது சக்கரப் படையால்
    உடைத்திட்ட தன் கையினைத்
    தானே வெட்டிக் கொண்டான்.

    இத்தகைய செங்கோன்மை தவறாத
    வெற்றிகொண்ட பாண்டியர் குலத்தில் பிறந்தவர்களுக்கு
    ஒருபோதும் இழுக்கு ஏற்பட்டதில்லை.

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 233

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    பாண்டியர் குலத்தின் இயல்பு உரைத்தல்

    அந்தணர் தம்
    வாயால் ஓதுகின்ற
    வேதங்களின் ஓசை
    கேட்டவனே அல்லாது,                  pandya
    ஒருபோதும் குறைகூறும்
    ஆராய்ச்சி மணியின் நாவோசையைக்
    கேட்காதவன் மன்னன்;

    அவன் தாள் பணிந்து வணங்காத, 
    கைகூப்பாத பகையரசர்கள் வேண்டுமெனில்
    அவன்மீது பழிகூறக்கூடும்;
    ஆனால், குடிமக்கள்
    அவனை ஒருபோதும்கொடுங்கோலன்
    எனக் கூறியது கிடையாது.

    கேட்பாயாக!
    எம் அரசன் பிறந்த குடிமாண்பினை…

    நல்ல நெற்றியை உடைய மகளிர்
    தம் அழகு மிகுந்த 
    பார்வையின் காரணமாய்,
    தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு
    எல்லை மீறிச் செல்லும் 
    இளமையாகிய யானை,
    கல்வி எனும் பாகனுக்கு அடங்காமல்
    விடாத ஊக்கத்துடன் ஓடினாலும்,
    அது நல்லொழுக்கத்துடன் 
    இக்குடியில் பிறந்த
    பாண்டியர்களுக்குச் சிறு பழியைக்கூடத் தராது.
    இன்னமும் கூறுவேன் கேள்;

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 232

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரைக் காதை

    கண்ணகியின் வினா

    மதுராபதி தெய்வம் கூறியதைக் கேட்ட கண்ணகி,
    துன்பத்தால் வாடியிருந்த தன் முகத்தை
    வலப்புறம் திருப்பி, அத்தெய்வத்தை நோக்கி,
    “என் பின்னால்  வருபவளே, நீ யார்?
    பொறுப்பதற்கு இய்லாத என் துன்பம்  kannaki
    எப்படிப்பட்டதென்று நீ அறிவாயோ?”
    எனக் கேட்டாள்.

    மதுராபதி சொல்லிய செய்திகள்
    தீவினை வந்த வகையைக் கூறல்

    அழகூட்டும் அணிகளை அணிந்தவளே!
    பொறுப்பதற்கு அரிதான
    உன் துன்பம் நான் அறிந்தேன்;
    நான் சிறப்பான இக்கூடல் நகரில் வாழும் தெய்வம்;
    மதுராபதி என்னும் பெயர் உடையவள்;
    உன்னிடத்தில் கூற
    அர்த்தமுள்ள செய்திகளுடன் வந்துள்ளேன்.
    உன் கணவன் கொலையுண்டது அறிந்து வருந்துகிறேன்;
    எனினும் நீ இதைக் கேட்பாயாக!

    பெருமைக்குரிய தகுதிகள் வாய்ந்த பெண்ணே!
    வருந்தும் என் உள்ளம் கூறும் மொழிகள் கேள்…
    எம் பாண்டிய மன்னனுக்கு
    ஊழ்வினை ஏற்பட்டதையும்
    அது எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணத்தையும்
    நீ கேட்பாயாக பெண்ணே!
    உன் கணவனுக்குத் தீங்கு நேர்ந்ததற்குக் காரணமான
    பழவினை குறித்த செய்தியைக் கேட்பாயாக!

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 231

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரைக் காதை

    மதுராபதித் தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல்

    சடையில் இளம்பிறை நிலவைத்
    தாங்கிய தலை உடையவள்;
    குவளை மலரைப் போன்ற
    மைதீட்டிய கண்கள் உடையவள்;      madurapathi
    வெள்ளிய ஒளிபொருந்திய
    முத்தைப் போன்ற முகம் உடையவள்;
    கடைப்பல் வெளியே தோன்றும்
    பவளம் போன்ற சிவந்த வாய் உடையவள்;
    அந்த வாயினில் நிலவினைப் போல் ஒளிரும்
    முத்துப்பல் வரிசை உடையவள்;

    இடப்பாகம் இருளைப்போல் நீலநிறம் என்றாலும்
    வலப்பாகம் தங்கம் போன்று ஒளிரும் மேனியுடையாள்;
    இடக்கையில் பொன்னிறமான தாமரையையும்
    வலக்கையில் கொடிய வாளையும் தாங்கியவள்;
    வலக்காலில் வீரமான கழலும்
    இடக்காலில் சிலம்பும் பூண்டவள்;
    இத்தகைய தோற்றம் கொண்டவள்
    மதுராபதித் தெய்வம்.

    அந்தத் தெய்வம்,
    சிறந்த முத்து மற்றும் துறையையுடைய
    கொற்கை நகரத் தலைவனும்,
    குமரியாற்றுத் துறையை உடையவனும்,
    இமயமலையைத் தம் ஆட்சியின்
    வடக்கு எல்லையாக உடையவனும்,
    பொதிய மலையை உடையவனும் ஆகிய
    பாண்டியர் குலம் தோன்றியது முதல்
    அக்குடியைக் காத்து வருகின்றாள்.

    அத்தெய்வம் இந்த நேரம்
    அக்குடிக்கு நேர்ந்த துன்பம் கண்டு வருந்தினாள்;
    வருந்திய அவள்,
    இடதுமுலை திருகி மதுரையை எரியூட்டிக்
    கணவனை இழந்த துன்பத்தோடு
    மனம் பேதலித்துத் தடுமாறி நடந்த கண்ணகியை
    நேர்எதிரே சந்திக்க அஞ்சி,
    கண்ணகியின் பின்புறம் வந்து,
    “பெண்ணே!
    என் குறையைச் சற்றுக் கேள்”
    எனக்கூறி நின்றனள்.

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 230

     -மலர் சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    நித்திய கருமம் நடைபெறாது ஒழிதல்

    மாலைதோறும் நடைபெறும் விழாக்களும்,
    வேத முழக்கங்களும்,
    தீயின்முன் செய்யும் வேள்வியும்,
    கோவில்களுக்குச் சென்று மக்கள்
    தெய்வங்களைக் கும்பிடுவதும்,
    மனையில் பெண்கள் விளக்கேற்றுதலும்,madutharapathi
    மாலையில் விளையாடுதலும்
    முரசின் முழக்கமும்…
    இவை எல்லாம் மதுரை மாநகரில்
    இல்லாது ஒழிந்தன.

    கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றுதல்

    தன் கணவனைக்
    காணமுடியாத துன்பத்தால்
    உள்ளம் கொதித்து,
    கொல்லன் உலைக்களத்தில்
    ஊதும் துருத்தி போல்
    அனல் மூச்சு விட்டாள் கண்ணகி.
    அங்ஙனம் துயருற்று
    வீதிகளில் சுற்றிச் சுற்றி வந்தாள்.
    குறுகிய வீதிகளில்
    கவலையுடன் நின்றாள்.
    பின்னர் அங்கும் இங்கும் சென்றாள்.
    என்ன செய்வது என்று புரியாமல்
    மயங்கி நின்றாள்.

    இவ்வாறு அடைவதற்கு அரிய
    துன்பம் பெற்ற
    அந்த வீரபத்தினி முன்,
    திரண்டு எரிகின்ற
    மிக்க வெப்பமுடைய
    நெருப்பினைக் கண்டு பொறுக்காது,
    மதுராபதி காவல் தெய்வம் தோன்றியது.

    வெண்பா

    திருமகளும், கலைமகளும்
    மாபெரும் மகிடன் என்னும்
    அசுரனைக் கொன்ற
    வீரம் மிக்க கொற்றவையும்…
    இம்முத்தேவியர் பெற்ற
    பெருமை அனைத்தையும்
    மொத்தமாய்ப் பெற்றுள்ள
    மதுராபதித் தெய்வம்,
    தன் முலை ஒன்றைத்திருகி எறிந்த
    வீரபத்தினி கண்ணகி முன் தோன்றியது.

    அழற் படு காதை முற்றியது. அடுத்து வருவது கட்டுரை காதை.

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 229

    மலர் சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    இல்லறம் வழுவாத மகளிர்

    தம் இல்லத்துக்கு வருகின்ற
    விருந்தினர்களைப் பேணி,
    ஒவ்வொரு நாளும் இல்லத்து அறங்கள்
    தவறாமல் செய்து வருகின்ற,
    பெரிய மனைகளில் வாழும் மகளிர் fire
    மிகுந்த மகிழ்ச்சி அடைந்து,
    “அழகான அணிகள் அணிந்த மார்பினை உடைய,
    கணவனை இழந்த,
    அந்த இழப்புக்குக் காரணமாய் விளங்கிய
    பாண்டிய மன்னனை வென்ற,
    சிறப்பான அணிகளை அணிந்த கண்ணகி,
    தன் கொங்கையால் செய்த
    இந்தப்பூசல் முறையானது” எனக்கூறி
    அவர்களும் கோபப்பட்டு,
    பற்றி எரியும் தீக்கடவுளையும்
    கைதொழுது வணங்கி நின்றனர்.

    நாடக மடந்தையர்

    ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
    கற்றுத் தேர்வுபெற்ற இசையின் இயல்பறிந்து,
    அதற்கேற்ப நடனம் ஆடும் மகளிர்
    வாழ்கின்ற வீதிகளிலும் தீ பரவியது.
    மத்தளம், முழவு, இசையைத்
    தாழ்ந்து ஒலிக்கச் செய்யும்
    இனிமையான புல்லாங்குழலும்,
    பண் மற்றும் அதன் வகைகளை
    இசைக்கச் செய்யும் யாழ்ப்பாடல்
    இவற்றின் துணைகொண்டு நடிக்கின்ற நாடக மகளிர்,
    தாம் ஆடுகின்ற அரங்குகளில் தீ பரவியது கண்டு,
    அரங்குகளை விட்டு வெளியேறி,
    கண்ணகியைக் கண்டு,
    “இம்மூதூர் மதுரைக்கு வந்து
    தன் கணவனை இழந்து,
    ஆராயாமல் தன் செங்கோல் வழுவிய
    பாண்டிய மன்னனைத்தன் சிலம்பின் மூலம் வென்று
    இந்த ஊரை நெருப்புக்கிரையாக்கிய
    இவள் எந்நாட்டினளோ?
    யாருடைய மகளோ?”
    என அஞ்சி இரக்கப்பட்டனர்.

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 228

    -மலர்சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    நெருப்பினால் நேர்ந்த துன்பம் மிருகங்களின் நிலை

    பசுக்களும் அவற்றின் கன்றுகளும்
    பரவுகின்ற நெருப்பில் அகப்படாமல்,
    அறம் சார்ந்த வாழ்வு வாழும்
    அகன்ற தெருக்களை அடைந்தன.

    வீரம் மிக்க கொடிய ஆண் யானைகளும்
    இளம் பெண் யானைகளும்
    விரைந்து செல்லும் குதிரைகளும்
    மதிற்புறம் சென்றன.

    மடந்தையரின் நிலை

    சந்தனம் தோய்ந்த
    நிமிர்ந்த இளமையும் அழகும் உடைய மார்பையும்
    மைபூசிய பெரிய கண்களையும் உடைய மகளிர்
    செப்பின்கண் இடப்பட்ட
    தேன்மிக்க நல்ல மணம் கமழும்
    மொட்டவிழ்ந்த அழகிய மலர்கள் நெருங்கக் கட்டி
    மணம் கமழும் கூந்தலில் சூடும்போதுsilambu
    அதிலிருந்து சிதறிய தாதும்,
    குங்குமம் பூசிய மார்பில் இடப்பட்ட
    தம் மார்பில் அணிந்திருக்கும்
    பசிய முத்துவடத்திலிருந்து
    ஊடலால் அவிழ்ந்து உதிர்ந்த முத்துக்களும்
    கொட்டிக் கிடக்கும் தூய மலர்ப்படுக்கையில்
    தம்முடைய காதலருடன் உண்டான
    ஊடல் தீர்வதற்கு ஏற்ற காலத்தை
    எதிர்பார்த்துக் காமவிளையாட்டுகள் ஆடுவதற்கு
    வழியின்றி நெருப்புக்கு அஞ்சி மனம் கலங்கினர்.

    குழந்தைகளுடன் மகளிர் வெளியேறுதல்

    தேமல் பரவிய அல்குலையும்,
    மணம் வீசும் கூந்தலையும் உடைய மகளிர்
    மழலைச் சொல் பேசும் செவ்வாய் உடைய
    குறுக நடக்கும் புதல்வர்களை
    அவர்கள் உறங்கும் பஞ்சணையில் இருந்து எழுப்பி,
    தலைமுடி வெண்மையாக நரைத்த
    முதிய பெண்டிருடன்
    தீயால் வாடாமல் வெளியேறினர்.

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 227

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    நால்வகை வருணபூதமும் நீங்குதல்

    பாண்டிய மன்னன் நீதி தவறும் அந்த நாளில்
    இம்மதுரை நகர்
    தீக்கிரையாகும் செய்தி ஒன்றுண்டு என்பதனை
    அறிய வேண்டிய முறைப்படி முன்பே அறிவோம்.
    அதனால் காவல் புரிவதை விடுத்து
    இவ்விடத்தை விட்டு நீங்குதல் இயல்பானதேயாகும்.

    இங்ஙனம் பூதங்கள் நான்கும்            silambu
    தமக்குள் பேசி முடிவுக்கு வந்தபின்,
    தன் முலையாலே நகரைத் தீக்கிரையாக்கக் கருதிய
    வீரமங்கை கண்ணகி கண்முன்
    நகரத்தை விட்டு நீங்கின.

    மறவோர் சேரியில் எரி பரவுதல்

    தானியங்கள் விற்கும் கடைவீதியும்
    கொடிபறக்கும் தேர் செல்லும் வீதியும்
    நால்வகை மக்கள் பகுதி பகுதியாக
    வாழும் வீதிகளும்,
    வீரம்மிக்க குரங்காகிய
    அனுமனைக் கொடியில் எழுதி உயர்த்தி,
    காண்டிபம் என்னும் வில்லினை ஏந்தி
    வீரனாகிய அர்ச்சுனன்
    காண்டாவனத்தைத் தீக்கு இரையாக்கிய
    அந்நாளில் வனத்தில் வாழ்ந்த விலங்குகள்
    கலங்கியது போல் கலங்கி நிற்கின்றன.

    அறவோர் வாழும் தெருவில் எல்லாம்
    தீ தன் தழலைப் பரவ விடாமல்,
    தீவினை செய்பவர் நிறைந்த
    இடங்களில் மட்டும் அதிகமாகப் பரவியது.

    *****

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 226

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – அழற்படு காதை

    கலப்பை துலாம் தால் யாழ்
    கையில் ஏந்தியவன்;
    விளைபொருட்கள் அதிகம் விளையச் செய்து
    விருந்தினர்களை இனிதாக உபசரித்து
    மலைபடு பொருட்கள், கடல்படு பொருட்கள்
    இவற்றைக் கொண்டு வந்து
    வேண்டுவோர்க்கு விலைக்கு அளித்து,
    உழவுத்தொழில் செய்து                                silambu
    நெல் முதலியன விளைவித்து
    உலக மக்களுக்கு உதவும்
    சிறந்த வாழ்க்கை நெறியை உடையவன்.

    ஒளிபொருந்திய தலையில்
    இளம்பிறை அணிந்த கடவுளின் மேனியைப் போல
    ஒளிவீசும் ஒப்பற்ற அழகோடு விளங்கும்
    வணிக பூதங்களுக்குத் தலைமை வாய்க்கும்
    வணிக பூதக் கடவுளும்…

    வேளாண் பூதம்

    கருவிளைப்பூவைப் போன்றவன்;
    பொன் வெள்ளி அணிகலன்கள் பூண்டவன்;
    தெளிந்த கருப்பு நிற உடையை அணிந்தவன்;
    வைரம் பாய்ந்த அகில், சந்தனம்
    இவற்றைக் கலந்து அரைத்த
    சாந்து பூசிய மார்பினன்;
    உயர்ந்த கிளை, கொடி மற்றும்
    நீரில் நிலத்தில் பூத்த பூக்கள் கொண்டு தொடுத்த
    பூமாலையை அணிந்தவன்;
    கைத்திறமை வாய்ந்த கலைஞன் செய்த
    அழகிய வேலைப்பாடமைந்த கலப்பையைக்
    கையில் ஏந்தியவன்;
    கழுவியெடுத்த நீல மணி போன்ற
    மேனியை உடையவன்;
    வெற்றி சார்ந்த வேளாண் கருவிகள் ஏந்தியவன்;
    களத்தின் சிறப்புப் பாடுவோர் பாடும்
    துறைகளில் பயிற்சி உடையவன்;
    அரவம் மிக்க மதுரை நகரில் இருந்து
    வேளாண் மக்கள் இடுகின்ற
    பலிப்பொருட்களைப் பெறுகின்ற
    வேளாண் பூதங்களுக்குத் தலைமையான
    வேளாண் கடவுளும்…

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share