நான் அறிந்த சிலம்பு – 232

-மலர் சபா

மதுரைக் காண்டம்கட்டுரைக் காதை

கண்ணகியின் வினா

மதுராபதி தெய்வம் கூறியதைக் கேட்ட கண்ணகி,
துன்பத்தால் வாடியிருந்த தன் முகத்தை
வலப்புறம் திருப்பி, அத்தெய்வத்தை நோக்கி,
“என் பின்னால்  வருபவளே, நீ யார்?
பொறுப்பதற்கு இய்லாத என் துன்பம்  kannaki
எப்படிப்பட்டதென்று நீ அறிவாயோ?”
எனக் கேட்டாள்.

மதுராபதி சொல்லிய செய்திகள்
தீவினை வந்த வகையைக் கூறல்

அழகூட்டும் அணிகளை அணிந்தவளே!
பொறுப்பதற்கு அரிதான
உன் துன்பம் நான் அறிந்தேன்;
நான் சிறப்பான இக்கூடல் நகரில் வாழும் தெய்வம்;
மதுராபதி என்னும் பெயர் உடையவள்;
உன்னிடத்தில் கூற
அர்த்தமுள்ள செய்திகளுடன் வந்துள்ளேன்.
உன் கணவன் கொலையுண்டது அறிந்து வருந்துகிறேன்;
எனினும் நீ இதைக் கேட்பாயாக!

பெருமைக்குரிய தகுதிகள் வாய்ந்த பெண்ணே!
வருந்தும் என் உள்ளம் கூறும் மொழிகள் கேள்…
எம் பாண்டிய மன்னனுக்கு
ஊழ்வினை ஏற்பட்டதையும்
அது எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணத்தையும்
நீ கேட்பாயாக பெண்ணே!
உன் கணவனுக்குத் தீங்கு நேர்ந்ததற்குக் காரணமான
பழவினை குறித்த செய்தியைக் கேட்பாயாக!

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *