Blog

  • வால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது

    Posted on November 8, 2018

     

    Comet McNaught over the Pacific Ocean. Image taken from Paranal Observatory in January 2007. Credits: ESO/Sebastian Deiries

    +++++++++++++

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    காலவெளிப் பிரபஞ்சத்தில்
    வால்மீனின் நீண்ட
    வால்கள் ஒளிவீசும் விந்தையாய் !
    பரிதி ஈர்ப்பு வலையில்
    ஈசலாய்த்
    திரிபவை வால்மீன்கள் !
    வையகத்தில் உயிரினம் வளர
    விதையிட்டவை !
    பரிதியை நெருங்கும் போது
    வால்மீனின்
    நீண்ட ஒளிவால்
    நமது பூமியைத் தொடுமென
    நர்லிகர் கூறுகிறார் !
    வால்மீன் ஹார்ட்லியில்
    சையனைடு
    வாயு வெளியேறும் !
    வால்மீனில் எழுந்திடும்
    வாயுத் தூள்களை
    வடிகட்டிப் பிடித்து வந்தார் !
    வால்மீன்
    வயிற்றில் எறிகணை ஏவி
    உட்கருவை ஆராயும்
    ஓர் விண்ணுளவி !
    நீண்ட வால்களைப் பற்றி
    சூரிய அரங்கு சார்ந்த 
    விண்ணுளவிகள் புதுத் தகவல்
    மண்ணுக்கு அனுப்பும் !

    +++++++++++++++

    The first observations of striations forming have revealed new insights on the Sun’s effect on comet dust tails.
    Credits: NASA’s Goddard Space Flight Center/Genna Duberstein
    ++++++++++++++
    See the source image
     
     
    சூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் மூலம்  நாசா பொறியியல் நிபுணர் & விஞ்ஞானிகள் அறிந்த முதல் தகவல் இலக்கங்கள்
     
    2007 ஜனவரியில் முதன்முதல் நாசாவின் சூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் [NASA’S STEREO SPACECRAFTS A & B] [SOLAR TERRESTRIAL RELATIONS  OBSERVATORY (STEREO)] மூலம், வால்மீன் நீண்ட பல்வேறு வால்களைப் பற்றி புதிய தகவல் இலக்கம் [New Data] கிடைத்ததை, தலைமை நகர் வாஷிங்டன் நேவல் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளும் பொறியியல் நிபுணரும் ஆராய்ந்தனர்  [Naval Research Lab. Washington, D.C.].  அப்போதுதான் முதன்முதல் விண்ணுளவியின் கருவிகள் வால்மீன் வாலைப் பற்றி அறிய  இயங்க ஆரம்பித்தன.  அவர் அனைவரும் கண்டது  விரிந்த வெண்மை நிறமில்லை.  மயில் தோகைகள் விரித்ததைப் போல் வால்மீனின் பற்பல வால்கள் கண்ணைக் கவர்ந்தன.   
     
     
     
    Deployment of STEREO spacecraft panels (crop).jpg
    ILLUSTRATION OF A STEREO SPACECRAFT DURING SOLAR ARRAY DEPLOYMENT
    அந்த அரிய மயில்தோகைக் காட்சி  தன்னை  “வால்மீன் மெக்னாட்”  [Comet McNaught]. முதன் முறை கண்டதுபோல் பின்னால் பலமுறை கண்டார்.  2006 ஆகஸ்டில் அதைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் மெக்னாட்.   கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்ட ஒளிமிக்க வால்மீன்களில் இதுவும் ஒன்று.  பூமியிலிருந்து நேராகவே இதைக் காண முடிந்தது.  அதன் சீரிய வால் ஒழுங்கமைப்பு 100 மில்லியன் மைலுக்கும் நீண்டது.  ஒரு மாதம் கடந்து ஈசா & நாசாவின் விண்ணுளவி “யுலிசிஸ்” கண்ணிலும் பட்டிடிருக்கிறது. 
     
     
    See the source image
     
     
    வால்மீனின் வால்கள் எப்படி இவ்விதம் பிரிந்தன என்று நிபுணரால் விளக்க முடியவில்லை.  அதுபோல் 1744 இல் தெரிந்த மாபெரும் வால்மீன் ஆறு வால்களைக் காட்டி யுள்ளது.   அவை அனைத்தும்  சூரிய ஒளி வால்மீன் தூசி மீது பட்டுத்தான் அவ்வித மயில் தோகைக் காட்சியை அளித்துள்ளது என்று ஆலிவர் பிரைஸ் [Oliver Price] – பிரிட்டன் லண்டன் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞான பிஹெச்டி மாணவர் கூறியுள்ளார்.  அந்தப் படம் எடுத்த போது வால்மீன் விநாடிக்கு 60 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிப் போனது.  
     
     
     
    ILLUSTRATION OF A STEREO SPACECRAFT DURING SOLAR ARRAY DEPLOYMENT
    MISSION TYPE SOLAR OBSERVATION
    OPERATOR NASA
    COSPAR ID STEREO A: 2006-047A 
    STEREO B: 2006-047B
    SATCAT NO. STEREO A: 29510 
    STEREO B: 29511
    WEBSITE HTTP://STEREO.GSFC.NASA.GOV/ 
    HTTP://STEREO.JHUAPL.EDU/
    MISSION DURATION PLANNED: 2 YEARS 
    ELAPSED: 12 YEARS, 13 DAYS
    SPACECRAFT PROPERTIES
    MANUFACTURER JOHNS HOPKINS UNIVERSITY APPLIED PHYSICS LABORATORY
    LAUNCH MASS 619 KG (1,364 LB)
    DRY MASS 547 KG (1,206 LB)
    DIMENSIONS 1.14 × 2.03 × 6.47 M
    3.75 × 6.67 × 21.24 FT
    POWER 475 W
    START OF MISSION
    LAUNCH DATE OCTOBER 26, 2006, 00:52 UTC
    ROCKET DELTA II 7925-10L
    LAUNCH SITE CAPE CANAVERAL SLC-17B
    CONTRACTOR UNITED LAUNCH ALLIANCE
    ORBITAL PARAMETERS
    REFERENCE SYSTEM HELIOCENTRIC
    PERIOD STEREO A: 346 DAYS 
    STEREO B: 388 DAYS
    HIDEINSTRUMENTS

    HIDEINSTRUMENTS

    SECCHI Sun Earth Connection Coronal and Heliospheric Investigation
    IMPACT In-situ Measurements of Particles and CME Transients
    PLASTIC Plasma and Suprathermal Ion Composition
    S/WAVES STEREO/WAVES

    See the source image

    See the source image

     

    “நாசா எபாக்ஸி விண்ணுளவியை அனுப்பி வால்மீன் ஹார்ட்லியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது.  அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “ஆரம்ப நோக்குகளில் முதன்முதலாக விண்ணுளவி வால்மீனின் தனித்துவ உட்கருவை உளவ முடியும் என்று அறிந்தோம். படத் தகவல் நிரம்ப சேமித்துள்ளோம் இப்போது.  அவற்றில் நாங்கள் எதிர்பார்த்தபடி வால்மீன் பற்றிய அரிய தகவல் உள்ளன.”

    மைக்கேல் அ’ஹார்ன் (NASA’s Spacecraft EPOXI Pricipal Investigator)

    “ஹார்ட்லி வால்மீனின் உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழற்சியை (Comet Nucleus Spin) மாற்றுகிறது.”

    நளின் சமரஸின்ஹா, வானியல் விஞ்ஞானி (National Observatory, Tucson, USA)


    “விண்ணுளவி எபாக்ஸி வரலாற்றுப் பெருமை தரும் வால்மீன் ஒன்றின் புது நோக்குத் தகவலை அனுப்பியுள்ளது.  விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் உயர்தர விஞ்ஞான நுணுக்கத்தில் பழைய விண்ணுளவிக்குப் புத்துயிர் நீட்சி அளித்து, சிறிதளவு நிதிச் செலவில் ஒரு புதிய விஞ்ஞானத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.”

    எட்வேர்டு வெய்லர் (NASA Science Mission Directorate)

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல!  கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்மோதிச் (Deep Impact) சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டிஃப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து


    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது!  ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    “பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின!  விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது.  2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது.  அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம்.”

    தாமஸ் டக்ஸ்பரி பணித்திட்ட மேலதிகாரி [Thomas Duxbury, Mission Project Manager (ஜனவரி 15, 2006)]


    “வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானக் களஞ்சியம்!  பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ்!

    டொனால்டு பிரௌன்லீ பணித்திட்ட பிரதம ஆய்வாளி [Donald Brownlee, Mission Principle Investigator (ஜனவரி 15, 2006)]

    “ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை!  பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது!”

    கார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]

    “பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை!  பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன!  அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது! … பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது.”

    ஜொஹானெஸ் கெப்ளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]


    வால்மீனைச் சுற்றிவந்த நாசாவின் விண்ணுளவி

    2010 நவம்பர் 4 ஆம் தேதி நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி (EPOXI Spacecraft) 1.4 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்த ஹார்ட்லி 2 வால்மீனின் (Comet Hartley 2) திசை நோக்கித் திருப்பப் பட்டு அதை 435 மைல் தொலைவில் நெருங்கிச் சுற்றி அரிய புதிய படத் தகவல் பல அனுப்பியுள்ளது.  அக்டோபரில் அந்த வால்மீன்  98 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியைச் சுற்றி நீள்வட்டத்தில் 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வலம் வந்தது.  முதன்முதலாக வால்மீன் ஹார்ட்லியி லிருந்து சையனைடு (Cyanide Jet – CN) நச்சு வாயு வெளிவருவதை எபாக்ஸி விண்ணுளவி படத்துடன் காட்டியது.  மணிக்கு 27,500 மைல் வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஹார்ட்லியின் நீளம் 1.36 மைல் (2.2 கி.மீ) என்றும் அறிய முடிந்தது. “ஆழ்மோதி” (Deep Impact) என்னும் பெயர் பெற்ற அந்தப் பழைய விண்ணுளவி ஏற்கனவே 2005 ஜூலை 4 ஆம் தேதி டெம்பல் 1 (Tempel 1) என்னும் வால்மீனில் முதன்முதல் ஓர் எறிகணையை வீசி அதன் உட்கலவைகளை ஆராய்ந்தது.  2010 ஜூன் 27 ஆம் தேதி விண்ணுளவி எபாக்ஸி பூமியைச் சுற்றி ஈர்ப்பாற்றல் சுழல்வீச்சில் (Flyby Swing) 3470 mph (விநாடிக்கு 1.5 கி.மீ.) வேகம் அதிகரித்து வால்மீன் ஹார்ட்லியை நோக்கிச் சென்றது.  ஐந்தாண்டு பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய ஆழ்மோதியின் குறிப்பணி நீட்சி செய்யப் பட்டு இப்போது இரண்டாவது வால்மீன் ஹார்ட்லியை வலம் வந்தது.  “எபாக்ஸி விண்ணுளவியை நாசா அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது.  அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.” என்று நாசா ஆளுநர் சார்லஸ் போல்டன் கூறுகிறார்.

    நாசா பொறியியல் நிபுணர் ஏற்கனவே கணித்தபடி வால்மீனுக்கு 435 மைல் தூரத்தில் எபாக்ஸி விண்ணுளவி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது.  நாசா இட்ட “எபோக்ஸி” (EPOXI) என்னும் புதிய பெயர் இரண்டு பழைய திட்டப் பெயர்களை இணைத்துச் சுருக்கியது. ஆழ்மோதி விண்கப்பலின் திட்டப் பணி இரண்டு : முதலாவது திட்டப் பணி புறப் பரிதி மண்டலக் கோள்களைத் தேடி அவற்றின் இயற்கைப் பண்பாடுகளை அறிவது (Extrasolar Planet Observations & Characterization – EPOCh). இரண்டாவது திட்டப் பணி ஆழ்மோதி வால்மீன் ஒன்றில் எறிகணை ஏவி எழும் தூசி, துணுக்குகளை ஆராய்வது (Deep Impact Extended Investigation -DIXI).  மூன்றாவது திட்டப் பணி ஹார்ட்லி நோக்கிப் போகும் தற்போதைய நீட்சிக் குறிக்கோள் ஆகும்.  அதன் குறிக்கோள் வால்மீன் ஒன்றைச் சுற்றி விண்கப்பல் ஈர்ப்பியல் விரைவாக்கம் (Gravity Flyby Swing) அடைவது. (EPOCh) + (DIXI) —> (EPOXI) என்று அதனால் மூன்றாவது பயணத்துக்குப் பெயரிடப் பட்டது.  புதிதாகக் கிடைத்த வால்மீன் படங்களில் நமது சூரிய மண்டலம் எப்படி தோன்றியது என்பதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்க உதவலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.  இந்த மூன்று வால்மீன் ஆய்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கம் மொத்தம் 333 மில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு).

    நாசாவின் சூரிய குடும்ப வால்மீன்கள் ஆராயும் திட்டங்கள்

    4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டான சூரிய மண்டலத்திலே ஒருவிதப் பனிக்கட்டி எச்சமாகத் தோன்றியவை வால்மீன்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அவற்றை ஆராய்ந்தால் பூமி போன்ற அண்டக் கோள்கள் எப்படி உருவாயின என்று நாம் அறியலாம்.  ஹார்ட்லியைச் சேர்த்து இதுவரை ஐந்து வால்மீன்களை ஆழ்ந்து நோக்கித் தகவல் சேமித்துள்ளது நாசா.  பூமியிலிருந்து ஹார்ட்லி வால்மீன் 13 மில்லியன் மைல் தூரத்தில் இருந்த போது நாசாவின் புதிய திட்டம் ஆரம்பமானது.  2005 இல் ஆழ்மோதி டெம்பல் 1 மோதலுக்குப் பின் நாசா 2008 இல் அடுத்து வால்மீன் போதின் (Comet Boethin) மீது குறி வைத்தது.  ஆனால் எதிர்பார்த்தது போல் வால்மீன் போதின் விண்வெளியில் திடீரெனக் காணப்படாமல் போனது !  காரணம் அது உடைந்து சிதைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  அடுத்து பூமியைச் சுற்றும் எபாக்ஸி விண்ணுளவி திசை மாற்றம் செய்யப் பட்டு வால்மீன் ஹார்ட்லி 2 மீது குறிவைக்கப் பட்டது.  அத்திட்டம் 2010 நவம்பர் 4 ஆம் தேதி வெற்றிகர நிறைவேறியது.  அப்போது எபாக்ஸி விண்கப்பல் ஹார்ட்லியைப் பற்றி புதிய படத் தகவல் பல அனுப்பியது.  இதுவரை ஆழ்ந்து நோக்கியதில் ஹார்ட்லியே மிகச் சிறிய வால்மீன்.  அதன் அகலம் 1.5 மைல் விண்கப்பல் வலம் வரும் போது அதன் தூரம் பூமியிலிருந்து 13 மில்லியன் மைல்.  1986 இல் பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானி மால்கம் ஹார்ட்லி என்பரால் ஹார்ட்லி 2 வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.

    நாசா & ஈசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள்

    இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன.  முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust].  இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta].  மூன்றாம் திட்டம், ஆழ்மோதி [Deep Impact]. முதல் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும்.  அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கியது.  ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் உட்கலவைப் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்தது.  அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளித்தது..  மூன்றாவது திட்டம்தான் -“ஆழ்மோதி” எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம்.  2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதி உளவுத் திட்டத்தை (டெம்பல் 1 வால்மீன் மீது எறிகணை ஏவல்) நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.

    சுவீடன் துணைக்கோள் வால்மீன் ஹார்ட்லியில் நீர் உற்பத்தியைக் கண்டுபிடித்தது.

    2010 அக்டோபர் 29 இல் சுவீடனின் துணைக்கோள் ஓடின் (Odin Satellite) வால்மீன் ஹார்ட்லியில் நீர் இருக்கும் தளப் படத்தை எடுத்து அனுப்பியது.  ஓடின் துணைக் கோள் பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய துணைக்கோள்.  சுவீடன் கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின் உதவியில் 2001 பிப்ரவரி 20 இல் துணைக்கோளை அமைத்தது.  இதுவரை ஓடின் துணைக்கோள் 15 வால்மீன்களை நோக்கிப் படம் எடுத்துள்ளது.  ஓடின் படம் அனுப்புதல் நிகழ்ச்சி அக்டோபர் 29 முதல் நவம்பர் முதல் தேதி வரை நீடித்தது.  துணைக்கோளின் நோக்குகளில் விநாடிக்கு 180 முதல் 300 கி.கிராம் (400 – 600 பவுண்டு) உற்பத்தியாகும் பகுதிகள் தெரிந்தன.  வியப்பாக வால்மீனில் நீர் உற்பத்தி அளவு நேரத்துக்கு நேரம் வேறுபட்டது.  மேலும் நீர் உற்பத்தி வால்மீனின் உட்கரு சுழற்சியைச் (Rotation of Comet’s Nucleus) சார்ந்தது என்பதும் அறியப் பட்டது.  வால்மீனின் உட்கருச் சுழற்சி ஒரு சுற்றுக்கு 17 மணி நேரம் எடுத்தது (One Rotation took 17 Hours) !

    ஹார்ட்லி வால்மீனில் சையனைடு நச்சு வாயு வெளியேற்றம் !

    பூதக்கோள் வியாழன் குடும்பத்தைச் சேர்ந்த வால்மீன் ஹார்ட்லி 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வீதம் பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது.  ஹார்ட்லி வால்மீன் 2010 அக்டோபர் 28 இல் பரிதியிலிருந்து நீள் ஆரம் (Perihelion) 98 மில்லியன் மைல் (158 மில்லியன் கி.மீ) தூரத்தில் இருந்தது.  அக்டோர் 20 இல் பூமிக்கு அருகே வால்மீன் ஹார்ட்லி 11 மில்லியன் மைல் (18 மில்லியன் கி.மீ) தூரத்தில் வந்தது. அப்போதுதான் நாசா பூமியைச் சுற்றிய எபாக்ஸி விண்கப்பலை ஹார்ட்லி வால்மீனை நோக்கித் திசை திருப்பியது.  விந்தையாக முதன் முதலாக ஹார்ட்லி 2 வால்மீனிலிருந்து நச்சு வாயு சையனைடு (Cyanide Jet – CN) வெளியேறுவதை நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி கண்டுபிடித்தது. “வால்மீன் ஹார்ட்லி உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனைடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழலற்சியை மாற்றுகிறது.” என்று வானியல் விஞ்ஞானி நளின் சமரஸின்ஹா கூறுகிறார்.  வால்மீன் பரிதியைக் குறு ஆரத்தில் நெருங்கும் போது அதன் ஒளிவீசும் நீண்ட வால் பல மில்லியன் மைல் தூரம் உலவுகிறது என்று இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார்.  அதாவது 2010 அக்கோடபர் – நவம்பரில் ஹார்ட்லியின் நீண்ட வால் நமது பூமியைத் தொட்டிருந்தால் அதன் சையனைடு நச்சு வாயு எங்கெல்லாம் பரவி உள்ளது, அதன் கோர விளைவுகள் என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும் !

    வால்மீனைப் பற்றி நாசா, ஈசா நிகழ்த்திய விண்வெளி ஆய்வுகள்

    இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் உத்தரவைப் பெற்றன.  முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust].  இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta].  மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact].  முதல் விண்மீன்தூசித் திட்டப்படி  நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் வடிகட்டி, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும்!  அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும்!  ரோஸெட்டா  வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும்.  அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும்.  2005 ஜூலை மாதத்தில் மூன்றாவது திட்டமான வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.

    2005 ஜூலை 4 இல் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.  அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது !  அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன்.  இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை !  பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை!  எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது!

    பூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்

    பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள்.  3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது.  ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது.  நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது.  வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன !  பிரபஞ்சத்தில் மர்மமான வால்மீன்களை நாசாவும், ஈசாவும் தொடர்ந்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யும்.  2011 இல் நாசாவின் பழைய விண்ணுளவி ஸ்டார்டஸ்ட் (Stardust Spacecraft) 2005 இல் எறிகணை தாக்கிய டெம்பெல் 1 வால்மீனை நோக்கி ஆராயச் செல்லும்.

    ++++++++++++++++++++

    தகவல்:

    [Picture Credits: NASA Space Center, USA, ESA]

    1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
    2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
    3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
    4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
    5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]
    6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]
    7. NASA – The Fiery Return of NASA’s Space Dust Cargo [Nov 29, 2005]
    8. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
    9. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
    10 Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
    11 Watch Deep Impact’s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.comJuly 1, 2005]
    12 NASA to Study Comet Collision http://www.PhysOrg.com [2005]
    13 NASA Looks for Signs of Success from Celestial Broadside  http://www.PhysOrg.com [2005]
    14 Deep Impact Makes a Better Impact than Planned http://english.people.com.cn/ [July 5, 2005]
    815 Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4, 2005]
    15 Thinnai Article on Deep Impact http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html
    16 Thinnai Article on the Significance of Deep Impact http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html
    16 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html(Stardust Space Ship Collects Comets Coma Sample)
    17 A Comet Tale By Paul Weissman, Senior Research Scientist, NASA’s Jet Propulsion Lab. Sky & Telescope Magazine [Feb. 2006]
    18 Space Reference – Deep Impact Earth Swing-by Sets Second Comet Rendezvous By : Ken Kremer (June 28, 2010)
    19 NASA’s Spacecraft EPOXI Flyby –  October 26, 2010)
    20 NASA Spacecraft Preparation For Comet Flyby (Oct 29, 2010)
    21 Space Daily – The Man Behind Comet Hartley 2 (Nov 4, 2010)
    22 Space Daily : Flyby Observations To Offer Insight On Comet Nucleus (Nov 4. 2010)
    23 NASA Report : Spacecraft EPOXI Encounter With Comet Hartley 2 (Nov 4, 2010)
    24 Space Daily – Odin Satellite Observes Water in Comet 103P Hartley 2 (November 5, 2010)
    25 Ball Aerospace Built EPOXI Spacecraft Images Comet Hartley 2 (November 5, 2010)
    26 Space Daily – Spacecraft EPOXI Reveals Comet Hartley 2 (November 5, 2010)
    27 Daily Galaxy – NASA Deep Impact Spacecraft (EPOXI) Survives Rendezvous with Comet Hartley 2 (November 5 2010)

    28. https://www.universetoday.com/113583/what-are-comet-tails/  [July 31, 2014]

    29. https://www.nasa.gov/mission_pages/stereo/main/index.html

    30.  https://www.nasa.gov/feature/goddard/2018/new-insights-on-comet-tails-are-blowing-in-the-solar-wind  [November 5, 2018]

    31 https://en.wikipedia.org/wiki/STEREO [November 8, 2018]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan]  (November 8, 2018) [R-1]

    Share
  • திருவடியை தினம் தொழுவோம் !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

     

    ஈராறு முகம் உடையான்
    எண்ணியதை எமக் கருள்வான்
    பார்மீது நாம் வாழ
    பல எமக்குத் தந்திடுவான்
    கோல மயில் அமர்ந்திருந்து
    கொடுத்து நிற்பான் வரமெல்லாம்
    சீலமுடை சிவன் மைந்தன்
    திருவடியை தினம் தொழுவோம் !

    சஷ்டியை பிடித்து நின்றால்
    தரித்திரங்கள் அகன்று விடும்
    சந்ததியும் தளைத்து நின்று
    சரித்திரமும் படைத்து விடும்
    உத்தமராய் வாழும் எண்ணம்
    உள்ளம் அதில் எழுந்துவிடும்
    உமை மைந்தன் திருவடியை
    உவப்புடனே பணிந்து நிற்போம் !

    ஆலகால விஷம் உண்ட
    அரன் மைந்தன் கந்தனது
    கால் அடியைப் பற்றுதற்கு
    கந்த சஷ்டி துணையாகும்
    சீலமுடன் நாம் இருந்து
    தினமும் அவன் திருநாமம்
    காதலுடன் ஓதி நின்று
    கந்தன் கோவில் சென்றிடுவோம் !

    Share
  • பகதத்தனும் அவன் அத்தனும்!

    -மேகலா இராமமூர்த்தி

    மகாபாரதக் காவியத்தின் உச்சகட்டம், குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே நடைபெற்ற பதினெட்டு நாள் போர். இதில் இருதரப்பிலுமே வீராதிவீரர்களும் சூராதிசூரர்களும் எண்ணிறந்தோர் இருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பிரோக்ஜோதிஷ நாட்டு அரசனான பகதத்தன் என்பவன். இவன் யானைப்போரிலே ஈடு இணையற்ற ஆற்றல் வாய்ந்தவன். போர்க்களத்திலே பிறருடைய யானைகளை அலறி ஓடவைக்கும் பேராற்றலும் போராற்றலும் வாய்ந்தது இவனுடைய பட்டத்து யானையான ‘சுப்ரதீகம்.’ அசகாய சூரனான பகதத்தன் பாண்டவர்கள் பக்கம் சேராது கௌரவர்கள் பக்கம் சேர்ந்ததற்கு முக்கியக் காரணம், இவன் தந்தை பார்த்தசாரதியான கிருஷ்ணனால் கொல்லப்பட்டதே ஆகும்.

    கிருஷ்ணனால் கொல்லப்பட்ட இவன் தந்தை யார்?

    அவன் வேறு யாருமில்லை.  தீபாவளிப் பண்டிகை கொண்டாடக் காரணமானவன் என்று இந்துமத புராணங்கள் செப்பும் நரகன் என்னும் நரகாசுரன்தான் பகதத்தனின் அத்தன் (தந்தை).  

    இதுவல்லாமல், பகதத்தன் கௌரவர்கள் பக்கம் இணைய மற்றொரு காரணமும் சொல்லப்படுகின்றது. அஃது, இவன் மகளாகிய பானுமதி, கௌரவர் தலைவனான துரியோதனனை மணந்திருந்தது. துரியோதனனின் உயிர் நண்பனான கர்ணனோடு பானுமதி சொக்கட்டான் ஆடியதும், அதில் அவள் தோற்றோடியபோது, அவளை ஓடவிடாமல் தடுக்கக் கர்ணன் அவள் மேலாடையைப் பற்றியிழுத்ததும், அதிலிருந்த முத்துக்கள் நிலத்தில் சிதற,  அப்போது அவ்விடத்துக்கு வந்த துரியோதனன் அதைக்கண்டு, அவர்கள் இருவரிடமும் சிறிதும் ஐயமோ கோபமோ கொள்ளாமல் மிகவும் நிதானத்தோடு உதிர்ந்த முத்துக்களை நான் எடுக்கவோ கோக்கவோ என்று கேட்டதும் நம்மால் மறக்கவியலாத கர்ணன் தமிழ்த்திரைப்பட வசனங்கள் அல்லவா?

    எப்படிப்பட்ட தீயவனிடமும் குன்றிமணி அளவேனும் உயர்குணம் இருக்கும் என்பதற்குத் துரியனின் இச்செயல் சிறந்ததோர் சான்றாகும்.

    மீண்டும் பகதத்தனிடம் வருவோம்.

    குருஷேத்திரப் போரின் பன்னிரண்டாம் நாள் நிகழ்வில் பகதத்தனின் யானை சுப்ரதீகம் போர்க்களத்தில் சூறாவளியெனச் சுழன்று, பாண்டவர் சேனையைக் கதிகலங்க அடித்துக்கொண்டிருந்தது. அதைக்கண்ட பாண்டவர்கள் சுப்ரதீகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் பாண்டவர் படை விரைவில் நிர்மூலமாகும் என்றுணர்ந்தனர். உடனே வீமன் விரைந்து சுப்ரதீகத்திடம் வந்தான்; வந்தவன் சுப்ரதீகத்தின் மர்மப் பகுதியில் நுழைந்து அதனைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினான். இவ்வாறெல்லாம் செய்வது போர்விதிகளுக்கு முரணானதே; எனினும் அவன் செய்தான். போரில் இருபக்கமும் இழப்புகளின் எண்ணிக்கை கூடக்கூட இருதிறத்தாருமே போர் நெறிமுறைகளையும் விதிகளையும் காற்றில் பறக்கவிடத் தொடங்கினர் என்பதைப் பாரதம் படிப்பவர்கள் நன்குணரலாம்.

    வீமனால் துன்புறுத்தப்பட்ட சுப்ரதீகம் வலிதாளாமல் இப்படியும் அப்படியும் சுழன்று தன் கால்களை நெருக்கி அவனைக் கொல்லப் பார்த்தது. அந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்கு வீமன் அங்கிருந்து நகர்ந்து அதன் உட்புறம் சென்று மறைந்தான். வீமனைக் காணாத பாண்டவர்கள் அவன் மாண்டுவிட்டானோ என்று அஞ்சி, பகதத்தனைத் தாக்க தசார்ண தேசத்து அரசனை யானையோடு அனுப்பினர். ஆனால் அந்த யானையால் சுப்ரதீகத்தை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க முடியவில்லை; அது சுப்ரதீகத்தினால் குத்தப்பட்டுப் பரிதாபமாகக் கீழே வீழ்ந்தது!

    சூப்பர் ஹீரோவாகப் போர்க்களத்தில் எல்லாரையும் பந்தாடிக்கொண்டிருந்த சுப்ரதீகமும், அதை இயக்கிக்கொண்டிருந்த சூரன் பகதத்தனும் பின்னர், கிருஷ்ணனின் துணையோடு போரிட்ட அர்ச்சுனனால் கொல்லப்பட்டனர் என்கிறது பாரதம்.

    இம் மாபாரதப் போருக்குமுன்பே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் தேவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தவன் இந்த பகதத்தன். அதனால் இந்திரன் இவனுடைய உற்ற நண்பனாய்த் திகழ்ந்தான் என்பதும் பாரதம் நமக்குத் தரும் செய்தி.

    இவ்விடத்தில் பகதத்தனின் தந்தை நரகாசுரன் குறித்தும் அவனோடு இணைத்துப் பேசப்படும் தீபாவளிப் பண்டிகை குறித்தும் சிலவற்றைச் சிந்திப்போம்.

    நரகாசுரன் என்பவன் திராவிடன்/தமிழன். அவனை ஆரியனான கிருஷ்ணன் கொன்ற நாளே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே இதனைக் கொண்டாடுவது தமிழினத்துக்கு இழுக்கு என்றொரு வாதம் தமிழுணர்வாளர்களால் பல காலமாகச் சொல்லப்பட்டு வருவது நாமறிந்ததே.

    நரகாசுரன் உண்மையிலேயே தமிழனா?

    நரகாசுரன் ஆண்டது வடகிழக்கு இந்தியாவிலுள்ள அஸ்ஸாமின் ஒரு பகுதி. அன்று ’காமரூபம் அல்லது பிரோக்ஜோதிஷ தேயம் (Kāmarūpa/Pragjyotisha) என்றழைக்கப்பட்டிருக்கின்றது இப்பகுதி என்பதைப் புராணங்கள் மூலம் அறிகிறோம். எனவே நரகாசுரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்லன் என்பது உறுதி. இவனைத் தமிழல்லாத வேற்றுமொழி பேசிய ஓர் இனத்தின் தலைவன் என்று கருதலாம். இல்லை…அப்போதைய அஸ்ஸாம் பகுதி ஆதித்தமிழரின் வசிப்பிடமாகத்தான் இருந்தது; அதனால் அவன் தமிழன்தான் என்ற வாதத்தை, ஒரு பேச்சுக்கு, ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் இந்த நரகனின் எதிரியாகக் காட்டப்படும் கிருஷ்ணன் யார்? அவனும் யமுனைக்கரையிலுள்ள ஆயர்பாடியில் வாழ்ந்த ஓர் இடையர்குலத்தவன்தானே! அவனை எப்படி ஆரியன் என்று முடிவுகட்டுவது?

    ஆரியர் என்பவர் ஆசியாவின் மத்தியப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்கள் என்பதுதான் பொதுவான கருத்து. அவர்களோ வெளுத்த நிறம் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றார்கள். ஆனால் யமுனைத் துறைவனான கிருஷ்ணனோ கரியவன்! (Krsna என்ற வடசொல்லுக்கே கறுப்பு என்பதுதான் பொருள்!). ஆக வண்ணத்தின் அடிப்படையிலும் கிருஷ்ணனை ஆரியனாகக் கருத வாய்ப்பில்லை!

    சொல்லப்போனால் தொல்காப்பியம் சுட்டும் காடுறை உலகத் தலைவனான, தமிழ்மண்ணின், மாயோனை (மாமை என்றால் கருமை) ஒருவாறு கிருஷ்ணனோடு பொருத்திப் பார்க்கலாம்; தமிழன் என்று நாம் நம்பும் நரகாசுரனுக்கு அந்த வாய்ப்புமில்லை!

    ஆக, கிருஷ்ணன் நரகாசுரனிடையே நிகழ்ந்த சண்டையை எப்படிப் புரிந்துகொள்வது?

    கிருஷ்ணன் ஓர் இனக்குழுவின் தலைவன். அதுபோல் நரகன் மற்றோர் இனக்குழுவின் தலைவன். (நரகன், பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவன் என்ற அருவருக்கத்தக்க, அறிவுக்குப் பொருந்தா Fantasy கதைகளையெல்லாம் விட்டுவிடுவோம்.) இவர்கள் இருவருக்குமிடையே நடந்த சண்டையில் கிருஷ்ணன் வென்றான்; நரகன் தோற்றான்; அவ்வளவுதான்! இதில் ஆரிய திராவிட இனபேதத்தைப் புகுத்துவது தேவையற்றது!

    ’அசுரன்’ என்று சொன்னாலே அது திராவிடனைத்தான் குறிக்கும் என்பது நம்முடைய தவறான புரிதல். மோசமான நடத்தையால் மக்களைத் துன்புறுத்தியவர் யாரேனும், எந்த இனத்தவரேனும் அவருக்கு அசுரன் என்ற அடைமொழி அன்று வழங்கப்பட்டிருக்கின்றது என்பதே புராணங்கள் வாயிலாகத் தெரியவருகின்ற உண்மை. சான்று: விருத்திராசுரன் எனும் பார்ப்பன அசுரன்!

    நரகாசுரனின் மகனாகிய பகதத்தனின் வரலாற்றைக் காணும்போதும் அவன் அசுரர்களுக்கு (அதாவது நாம் திராவிடர்களாக அடையாளப்படுத்துவோருக்கு) ஆதரவாக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. மாறாகச் சுரர்களுக்கு (தேவர்களுக்கு) சாதகமாகவே அனைத்தும் செய்திருக்கிறான். அசுரர்களின் பகைவனான இந்திரனின் உற்ற நண்பனாகவும் திகழ்ந்திருக்கிறான்!

    இவர்களின் பெயர்களைக் கவனித்தாலும் நரகன், பகதத்தன், அவன் மகன் வஜ்ரதத்தன், நரகாசுரனின் அமைச்சர்களான ஹயக்ரீவன், பஞ்சகன், நிசும்பன், பிராபணன், முரன் என்று எதுவுமே தமிழ்ப்பெயர்களில்லை; அனைத்தும் வடமொழிப் பெயர்கள்! திராவிடராக/தமிழராக இருந்திருந்தால் ஆதன், உதிரன், எரவாதன், கோதை என்பனபோல் அல்லவா இவர்களின் பெயர்கள் இருந்திருக்க வேண்டும்?

    எப்படிப்பார்த்தாலும் நரகாசுரனைத் தமிழன் என்று நிரூபிக்க நம்மிடம் போதிய சான்றாதாரங்கள் இல்லை; அவன் தமிழனல்லன் என்று நிரூபிக்கவே அவனுடைய வழித்தோன்றல்களின் வரலாறும், அதைச் சொல்லும் மாபாரதமும் துணைநிற்கின்றன.

    எனவே அடிப்படையில் தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் எந்தச் சம்பந்தமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் பிற்காலத்தில், நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்களால், கிருஷ்ணன் பெருந்தெய்வமாக்கப்பட்டபோது அவன் மாட்சியைப் பேசுவதற்காக இணைக்கப்பட்ட புனைவுகளாகவே இருக்கவேண்டும்.

    *****

    துணைநூல்கள்:

    1.மகாபாரதம் (வியாசர் விருந்து) – சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரி, வானதி பதிப்பகம்.

    2. அபிதான சிந்தாமணி – ஆ. சிங்காரவேலு முதலியார்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181109 Vatsalya – Sepia ink -Canson 200 gsm A4 -72 dpi lr

    விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு….!

    இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்…

    சமர்த்தஅவ் ஆவினை சிந்தா சனத்தில்
    அமர்த்தி கிருஷ்ணனாய் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு….!

    பசு உவாச….!
    ==============
    எண்ணம் ஒடுங்கிட ஏகாந்தம் கூடிட
    கண்ணன் கருநீலக் காயாம்பூ -வண்ணன்
    நினைப்பும் நாலுகாலன் நானும் கலக்க,
    கனைப்பை மறந்தேனே காண்….!

    ”மாலோல பாகவதர், மாட்டின் முகம்வருடி
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
    வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
    ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • எல்லோரும் பணிந்து நிற்போம் !

     

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்…. அவுஸ்திரேலியா

    கருணைகூர் முகங்கள் கொண்ட
    கந்தனை நினைக்கும் இந்த
    பெருமையாம் விரதம் தன்னை
    உரிமையாய் எண்ணி நிற்கும்
    அடியவர் ஒன்று கூடி
    அன்னத்தை ஒறுத்து நிற்பர்
    அவருளம் புகுந்து கந்தன்
    அருளொளி காட்டி நிற்பான் !

    கந்தனை நினைக்கும் இந்த
    சஷ்டியாம் விரதம் தன்னை
    சிந்தையில் இருத்தி வைத்து
    சீலமாய் இருக்கும் மாந்தர்
    வந்திடும் வினைகள் எல்லாம்
    மறைந்துமே போகச் செய்ய
    எந்தையாம் கந்தன் அப்பன்
    என்றுமே உதவி நிற்பான் !

    ஆணவம் என்னும் மாயை
    சூரனாய் தோன்றி நிற்க
    அரன் மைந்தன் கந்தனையன்
    ஆற்றலால் உய்வு பெற்றான்
    அழிக்கின்ற பாங்கில் கந்தன்
    ஆணவம் போக்கி ஆங்கே
    அறிவினை உணர்த்தி நின்று
    அருளினை அளித்தே நின்றான் !

    கந்தனை நினைத்து நாங்கள்
    சஷ்டியை பிடித்து நின்றால்
    நிந்தனை கொடுத்து நிற்கும்
    நிட்டூரம் ஒழிந்து போகும்
    கொண்டிடும் எண்ணம் எல்லாம்
    குறைவின்றி நடந்தே தீரும்
    எந்தையாம் கந்தன் பாதம்
    எல்லோரும் பணிந்தே நிற்போம் !

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13

    பேரா. நாகராசன்

    கற்பனையும் அனுமானமும்

     

    உள்ளத்தில் உருவாகும் மனப்படங்களுக்கு எழுத்து வடிவம் தருவது கற்பனை. ஒரு எழுத்தாளன் தன் உள்ளத்தில் உருவான காட்சியை எழுத்து மூலம், படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சியாகப் படைக்கிறான். தமிழர் மனிதவியலில் தொன்மை மிக்க இலக்கியங்கள் கற்பனை வழியாகவே சமுதாயத்தில் பரவியது. கற்பனை படைப்பாற்றலை வளர்த்து படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைவது.

    தற்கால ஊடகமான வெள்ளித்திரை கனவுத் தொழிற்சாலையாக விளங்கி கற்பனையை ஒளி ஒலியுடன் பார்ப்போரைக் கண்ணைத் திறந்துகொண்டு கனவு காணச் செய்கின்றது. கணினியும் தொலைக் காட்சிப் பெட்டியும் எண்ணிம வடிவில் திரையில் தோன்றும் இல்லாத மாயத் தோற்றத்தை உண்மை என்று நம்பவைக்கிறது.

    இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கற்பனையும் கனவும் மாயத் தோற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் எண்ணற்ற வளங்களை கருத்துக் கருவூலங்களாகப் படைத்து அவற்றை இணைய வெளியில் எளிதில் கிட்டுமாறு செய்துள்ளது.

    ஆய்வுலகம் இவ்வாறு காணக்கிடைக்கும் கருத்துவளங்களைத் தகவலாக ஏற்றுக்கொள்வதில்லை. பகுத்தறிவால் சீர்தூக்கி ஐம்பொறிகள் வழியாகத் தரவுகளின் அடிப்படையில் பொய்யையும் புனைவையும் வடித்து அகற்றி எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுகளை வெளியிடும் பண்பு கொண்டது. ஆய்வு அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் தகவல்களைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி ஒரு சமூகத்தை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து ஒரு அறிவார்ந்த சமூகமாக மாற்ற வல்லது.

    எண்ணற்ற சிந்தனைகள் எண்ணிம வடிவில் இணைய வெளியில் கொட்டிக்கிடந்தாலும் ஆய்வாளர்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு செயல்படுவர். திருவிழாவில் எவ்வாறு ஒரு சிறு குழந்தை தந்தையின் தோளில் அமர்ந்து தந்தையின் பார்வைக்கு அப்பாலும் காண இயலுவதுபோல் ஆய்வாளன் கடந்தகாலக் கருத்துக் குவியல்மேல் ஏறிநின்று தொலை நோக்குப் பார்வையுடன் சமுதாயத்துக்குத் தேவையான புதிய தகவல்களை உருவாக்குகிறான்.

    ஆய்வு வெளியில் திக்குத் தெரியாத காட்டில் திரியும் வழிப்போக்கனை அனுமானம் மூலம் முன்னெட்டு எடுக்க வைக்கும். அனுமானம் என்பது கற்பனையோ கனவோ தோற்ற மயக்கமோ அல்ல. அனுமானம் என்பது ஆய்வில் முன்னேற ஆய்வாளன் கைகொள்ளும் உத்தி. ஆய்வுக்கு அனுமானம் ஒரு இன்றியமையாத கருவியாகும்.
    ஆய்வாளர்கள் அனுமானம் என்றால் என்ன? எவ்வாறு அனுமானத்தை உருவாக்குவது? போன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து அனுமானத்தை உருவாக்குதல், அனுமானத்தை நிறுவுதல் போன்ற செயல்களுக்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது கற்பனை. அய்வாளர்கள் மடம் தொடர்பான கருத்துகளை அனுமானமாகக் கொண்டு மடத்தின் தோற்றம் கட்டமைப்பு என்று அலகீடுகள் மூலம் தரமான நம்பகத்தன்மை மிக்க தகவல்களை நிறுவுவர்.

    தொடரும்

    Share
  • ஆறுபடை அழகா…. (2)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

    சூரனை அழித்திடவே சுடர்நெருப்பாய் பிறந்தவனே

    சீரலைக் கடலருகில் சீறிவந்து போர்தொடுத்தாய்

    சிங்கமுகன் அண்ணனின் சிரமனைத்தும் கொய்திட்டாய்

    சேவலுடன் மயிலாக்கி தன்னருளைத் தந்திட்டாய்

     

    ஒருமுகமும் மறுமுகமும் உனக்கென்றும் ஈடில்லை 

    அறுமுகமும் ஒருமுகமாய் அசுரனையே அழித்தவனே

    திருமுகத்தின் கண்ணிரண்டில் திருவருளைப் பெருகவிட்டு

    இன்முகமாய் அடியார்கள் இதயத்தில் அமர்ந்தவனே !

     

    விண்ணோரும் வந்திட்டார் செந்தூரில் சீர்கொண்டு 

    வினைதீர்க்கும் வேலோடு விளையாடும் உனைக்காண

    வாகையுடன் கொடிசேர்த்து மயிலோடு மனங்கவர்ந்த

    வாரணத்தின் இளையோனே செந்தூரின் சிங்காரா !

     

    கடலோரம்  நீயிருக்கக் கடலலைகள் களைப்பாறும்

    காற்றோடு தாளமிட்டுக் கருமேகம் கவிபாடும்

    கடலினங்கள் கரைவந்து காலடியில் விளையாடும்

    கருணையுள்ள குருநாதா கண்திறந்து பாராயோ !

     

    நலமனைத்தும் பெருகிடுமே நாழியிலே நீராட

    பலமனைத்தும் வந்திடுமே பார்வையுந்தன் அருளாலே

    புலனனைத்தும் அடங்கிடுமே பொன்மேனி கண்டாலே

    தலமென்று சொல்லிடவே திருச்சீரலைவாய் திருத்தலமே

     

     

    Share
  • பழநி முருகன் கோவில்

    திருமதி.ச.ஜெயந்திமாலா
    வரலாற்றுத்துறை,
    உதவிப்பேராசிரியர்,
    அருள்மிகு பழனியாண்டவர்
    மகளிர் கலைக்கல்லூரி,பழனி.

    ———————————–
    தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது. வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- ‘ஆவினன்குடி’ என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப் பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே. ‘பழனங்கள்’ (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் ‘பழநி’ எனப்பட்டது.

    பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார்- பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம்மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன. கொடைக்கானல் மலைக்கும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட் டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி. கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப்.பாதை உள்ளது. கொடைக்கானல்- குறிஞ்சி ஆண்டவர் கோயி லும், பழநி கோயிலும் நேர்க் கோட்டில் அமைந்து உள்ளன. குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பழநி மலையைக் காண முடியும்!

    அருணகிரியார்

    அருணகிரியார் அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் . இவர், பழநித் திருத்தலம் பற்றித் திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில் பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.

    தல வரலாறு:

    இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தைக் கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார். பின்னர்த் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தைச் சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில்வந்துதங்கிவிட்டார். சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை “பழம் நீ” என்றதால் இந்த இடம் பழநி எனப் பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்படுவது.

    அமைவிடம்
    இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்குச் சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளைத் தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையைத் தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழித்தார்.. பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்குச் சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில இடும்பனுக்குக் கோவில்உண்டு.

    ஆவினன்குடி

    ‘சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றிருந்தது!’ சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர் வந்ததாம். அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிகோயில்’ என்கிறார்கள்.

    ஒரு முறை கோபம் கொண்ட திருமால், திருமகளைப் புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்குத் தவம் இருந்து பலன் பெற்றாள். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரது ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இது. ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச் சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன்.

    சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இப்படித் திரு= லட்சுமி, ஆ= காமதேனு, இனன்= சூரியன், கு= பூமி, டி= அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால் பழநி திருஆவினன்குடி என்று ஆனது.
    அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.

    பழநி மலை
    ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதைத் தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காகக் கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவ பெருமான்.‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்துத் தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக, தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பர். கருவறையின் கிழக்குப் பகுதி மாடத்தில் ஊது வத்தி தூபம் காட்டி, இஸ்லாமியரும் ‘பழநி பாபா’ என ஓதி வழிபடுகின்றனர்.
    காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும்.

    கிரிவலப்பாதை

    பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.
    கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர- தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
    697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உண்டு. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில் பாதை மற்றும் ரோப் கார் பாதை.
    யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கி விட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.

    இழுவை ரயில்

    இந்தியாவிலேயே முதன் முதலாகப் பழநி ஆலயத்தில் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச் சரவையில் அமைச்சராக இருந்த பக்தவச்சலம். இரண்டாம் வழித்தடம் 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.

    திரு மஞ்சனப் பாதை’

    முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.

    தீர்த்தங்கள்

    பழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப் பொய்கை. சரவணப் பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம். பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞானத் தீர்த்தம், பிரம்ம தீர்த் தம் ஆகிய புண்ணியத் தீர்த்தங்கள் உள்ளன.

    மரபு.

    புனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன்- பெரு வுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு.

    சிற்பங்கள்

    மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர்- தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்குக் கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    மூலவர்சிற்பம்

    இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளைக் கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களைக் கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார். அப்படிச் சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்தச் சிலையே தற்போது பழநி முருகனாக நமக்குக் காட்சியளிக்கிறது. பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடைய சமாதியை பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.

    சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சோமஸ்கந்தனின் வடிவ அமைப்புக்கள்

    சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பித்தளை உலோகங்களில் செதுக்கப்பட்டு உள்ள சோமஸ்கந்தனின் வடிவ அமைப்புக்கள் அவை எந்த அளவு கலை நுணுக்கமாகச் செய்யப்பட்டு உள்ளன என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன. அவற்றில் உள்ள வடிவமைப்புக்கள் ஸ்கந்தனை நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் மற்றும் நடனமாடும் நிலையிலும் காட்டுகின்றன. சோழர்கள் காலத்து ஆலயங்களில் மிகச் சிறப்பானது பல்லவநீஸ்வரத்தில் உள்ள பல்லவநீஸ்வர ஸ்வாமி ஆகும். அந்தப் பெயரே அது பல்லவ மன்னர்களின் காலத்து சிலை என்பதைக் காட்டுகின்றது.
    பல்லவன் காலம் முதல் சோழர்கள் காலம் வரை பித்தளை உலோகத்தினால் செய்யப்பட்டு உள்ள வடிவமைப்புக்கள் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்களின் கலை வண்ணத்தில் உள்ளது. அவைகளில் சிவன் மற்றும் பார்வதிக்கு இடையே அமர்ந்து உள்ள முருகன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி தன்னை மறந்த நிலையில் காணப்படுகிறார். அது பல்லவ காலத்திய சிலை வடிவமைப்புடன் ஒத்து உள்ளது. (சிவராமமூர்த்தி 1963 -58). ஸ்கந்தனின் காதுகளைப் ‘பத்திரக் குண்டலங்கள்’ அலங்கரிக்கின்றன. நெற்றியில் உள்ள அணிகலன்கள் ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுக்கும் வகையில் அமைந்து உள்ளன. வலது கையில் தாமரைப் பூவை வைத்து இருக்க இடது கை வரத முத்திரை தோற்றத்தை தந்தபடி உள்ளது.கழுத்தில் காணப்படும் அணிகலன்கள் அற்புதமான வடிவமைப்புடன் துல்லியமான கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன. கண்கள் மேல்நோக்கிப் பார்த்தவண்ணம் இருக்கக் கொயுரைகள், தண்டைகள் (கொலுசு), மற்றும் கணுக்காலில் உள்ள அணிகலன்களும் கலை நயம் மிகுந்து கம்பீரமாகக் காட்சி தரும் வகையில் வடிவமைகபட்டு உள்ளன

    950 ஆம் நூற்றாண்டை சார்ந்த திருத்துறைப் பூண்டியில் உள்ள வர்தமானஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தன் தனது வலது காலை மடக்கி வைத்துக் கொண்டபடி காட்சி தருகிறார். சன்னவீராவையும் (ஒருவித அணிகலன்), பூமாலையையும் கழுத்தில் அணிந்து கொண்டு ஒரு கையால் கடக முத்திரை சின்னத்தையும், மறு கையால் வரத முத்திரை சின்னத்தையும் காட்டியவாறு உள்ளார்

    சிவபுராணத்தில் காணப்படும் சோமாஸ்கந்தன் பத்தாம் நூற்றாண்டின் மத்திய பகுதியைச் சேர்ந்தவர். அதில் உள்ள ஸ்கந்தன் உண்மையிலேயேயே வைரம் போன்று ஜொலித்தவாறு அற்புதமாகக் காட்சி தருகிறார். அதில் உள்ள வடிவமைப்பு மிகவும் நுண்ணியமாகச் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அங்கத்திலும் நேர்த்தியான கலை நயம் வெளிப்படுகின்றது. மொத்தத்தில் நடனமாடும் வடிவில் அமைந்து உள்ள மூர்த்தியின் வடிவம் சொல்ல முடியாத அளவு அழகு சொட்டும் அதி அற்புதமான வடிவமைப்பில் செய்யப்பட்டு உள்ளது. திருவேங்காட்டில் உள்ள ஸ்வேதனாரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தனின் வடிவம் மிகவும் வசீகரமாக உள்ளது. நின்ற நிலையில் படைக்கப்பட்டுள்ள அதன் தலையில் காணப்ப்படும் கரண்ட மகுடமும், கிண்கிணிகள் அடங்கிய ஒட்டியாணமும் நவநாகரீகமான தோற்றத்தில் மனதை அல்லும் விதத்தில் செய்யப்பட்டு உள்ளன

    தஞ்சாவூர் நீடூரில் உள்ள சோமாஸ்கந்த சிலை 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. குழந்தை முருகனின் அழகு அதில் விவரிக்கவே முடியாத அளவு கலை நயத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும் அமைக்கப்பட்டு இருக்கக் கரண்ட மகுடம், காதணிகள், நெக்லேஸ், சன்னவீரா, ஒட்டியாணத்தில் இருந்து இருபுறமும் தொங்கும்குஞ்சலங்கள், பாதசரச்ஸ் போன்ற அணிகலன்கள் அதன் அழகிற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளன

    12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டிகுவாரன் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தன் தனது வலது காலை தூக்கி வைத்தபடியும், இடது கையை நீட்டி வைத்துக் கொண்டு நடனமாடும் நிலையில் காணப்படுகிறார். வலது கையில் மலர் இருக்கக் கேச மகுட அமைப்பில்தலை தலைமுடி காணப்படுகிறது

    12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சாவூர் வெல்லூர் எய்ருவரை ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் ஸ்கந்தனின் வலது கை அபாய முத்திரை காட்டியவண்ணம் நீண்டு இருக்க இடது கை வரதக் கோலத்தைக் காட்டும் அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. விக்டோரியா அருங்காட்சியகத்தில் உள்ள 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோமஸ்கந்தனின் ஸ்கந்த வடிவம் சமபங்க கோலத்தில் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் காட்சி தரும் அமைப்பில் உள்ளது. அந்தக் கலைவண்ணம் சிறந்து விளங்கும் வகையில் அமைந்து உள்ளது

    பங்கால் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் இரண்டு கரங்களும் நீண்டு இருக்க இடது கால் நேராகவும், வலது கால் சற்றே முன் நோக்கி வளைந்து உள்ள நிலையிலும் காணப்படுகின்றது

    தில்லையாடி சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் கைகளில் மலர்கள் அதே 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குன்னான்டார் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் அவருடைய கரங்களில் மலர்கள் காணப்படுகின்றன. தலையைச் சடைமுடி அலங்கரிக்கின்றது ராமனன்தீஸ்வரா ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் வலது கையில் மலர் இருக்க இடது கை கீழ் நோக்கி நீண்டு உள்ளது. திருப்பனையூர் சௌந்தரீஸ்வரர் ஆலயம் மற்றும் கொடவாசல் கோணீஸ்வாரர் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் உள்ள ஸ்கந்தன் பத்மாசனக் காட்சியில் அமர்ந்து கொண்டு கைகளில் மலர்களை ஏந்தியபடி உள்ளார். திருவல்லிமலை ஆலயத்தில் காணப்படும் முருக வித்தியாசமான கோலத்தில் உள்ளார். வலது கை காடாக முத்திரையைக் காட்டியபடியும் இடது கை மேலே தூக்கியபடியும் உள்ளது. வலது கால் எதோ யுத்தத்திற்குக் கிளம்புவர் போல அமைந்து இருக்கக் காதுகளைப் பத்திர குண்டலங்கள் அலங்கரிக்கின்றன.

    பாண்டியர் காலத்துச் சிலைகளில் மிக அற்புதமானவை திருப்பரம்குன்றம் மற்றும் திருப்பாக்கலி ஆலயங்களில் உள்ளன (ஏகாம்பரநாதன் 1984 -78).

    விஜயநகரக் காலத்திலும் நிறையப் பித்தளை உலோகத்திலான சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. AD 1913 ஆம் ஆண்டு நெல்லூரில் கிடைத்த சிற்பத்தின் கலை நயம் அது விஜயநகரக் காலத்தை ஒட்டியது என்பதை நினைவுபடுத்தியது. (கங்கோலி 1915 – 125). அதில் ஸ்கந்தன் தன் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்

    ஹோசூரில் உள்ள சிற்பத்தில் ஸ்கந்தன் மாடு ஒன்றின் மீது சாய்ந்து நின்றபடி கடுரா தோற்றத்தை தந்தபடி இருக்கின்றார். விஜயநகரச் சிற்பங்களில் உள்ள கரண்ட மகுடம் அதிக நீளமாக உள்ளது. ஆபரணங்களும் அதிகமாகவே உள்ளது. உதயாபாளையம் கொலுமூர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் உள்ள ஸ்கந்தனின் தலை விரிந்த கோலத்தில் உள்ளது. ஆனால் மாலைகளும் காதணிகளும் அற்புதமான தோற்றம் தரும் வகையில் செதுக்கப்பட்டு உள்ளன

    கல்லிடைக் குறிச்சி சோமாந்தர் கோவிலில் உள்ள ஸ்கந்தன் சிலையில் அவர் முன்னால் தெரியும்படி இரண்டு கால்களையும் ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டு உள்ளார். திருக்குரலத்தில் உள்ள குரலனாதஸ்வாமின் ஆலயத்தில் உள்ள ஸ்கந்தன் இடது காலை மடித்து ஆசனம் போல வைத்து இருந்தும் வலது காலை குட்குடிகாசன கோலத்தில் வைத்தபடி இருக்கத் தலை அலங்காரம் குரிதமுகுடா தோற்றத்தில் செய்யப்பட்டு உள்ளது

    கல்வெட்டுக்களில் சோமாந்தர்

    சலுவான்குப்பத்தில் உள்ள அதிரானகண்டா ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களில் சிவனைப் பசுபதி என்றும் பார்வதியை மலைமகள் என்றும் ஸ்கந்தனை குஹா என்றும் கூறப்பட்டு உள்ளது. ராரராஜ சோழன் I னின் உமா ஸ்கந்த சாஹித்தியத்திலும் இவ்வாறே கூறப்பட்டு உள்ளது

    மயில் மண்டபம்

    மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்
    மயில் மண்ட பத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.

    பழநி மலைக் கோயில் அமைப்பு

    மலைக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.

    கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

    பிராகாரங்கள்

    பழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப் பாதை வழியாக வருவோர், 2- வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.

    முதல் பிராகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.

    நவரங்க மண்டபம்

    நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞானத் தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.

    மாக்கல்

    பழநியாண்டவர் முன்பாக ‘மாக்கல்’ எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஸ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது.

    பிரம்மன் விக்கிரகம்.

    இங்குள்ள மற்றொரு சிறப்புப் பிரம்மன் விக்கிரகம். இந்தப் பிரம்மன் அம்பு- வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார். ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக, பிறக்கும்படி பிரம்மனுக்குச் சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்குச் சாப விமோசனம் தரும்படி முருகனைப் பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.

    சனீஸ்வர பகவான்

    திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் .

    ஸ்தல விருட்சங்கள்

    தண்டாயுதபாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள்.

    நவ பாஷாணங்கள்

    மலைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞானத் தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள். திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவணப் பாஷாணம், பவளப் புற்றுப் பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு. சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரச கற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியவையும் நவபாஷாணங்கள் எனப்படுகின்றன. நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர் இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப் படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு. நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.

    போகர்

    போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர். போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னைப் பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர். போகருக்கு பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலி பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவர் சந்ததியினருக்குக் கோயில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் உள்ளது.ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. அதில் அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    பிணிகள் நீங்கும் பிரசாதமாகச் சந்தனம்

    தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதைத் துணியால் ஒற்றி எடுத்துத் தீர்த்தமாக வழங்குகின்றனர்.

    தண்டாயுதபாணி அலங்காரம்.

    தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள்.

    காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். சாயரட்சையில் ராஜ அலங்காரம். ராக்காலத்தில் முதிய வடிவம்.

    மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை.

    மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களைத் தண்டாயுத பாணி பூஜிப்பதாக ஐதீகம்.

    பல்லக்கு

    இங்குப் பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டிய காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்குப் பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளைப் படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.

    காவடி பிரார்த்தனை

    பழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித்,தம். கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்பவன் பொதிகைக்குத் தூக்கிச் சென்றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள். முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். திருவிழா காலங்களில் பக்தர்கள்- தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்படப் பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    பஞ்சாமிர்தம்.

    பழநியின் தனிச்சிறப்புப் பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதைத் தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவக் குணம் பெறுகிறது.

    ராமப்ப ஐயர்

    15- ஆம் நூற்றாண்டில் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அப்போது ராமப்ப ஐயர் என்பவர் தளவாயாக இருந்தார். இவர் பழநி கோயிலுக்கு வந்தபோது, புலிப்பாணியின் வழி வந்த பாத்திரசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். ஐயர் அல்லாத அவரிடம் இருந்து பிரசாதம் வாங்க வேண்டாம் எனக் கருதி, கொடுமுடியிலிருந்து சரசுவதி ஐயரை குருக்களாகவும், அவருக்குத் துணையாக மருதூர் தம்பா ஐயன், நாட்டார் அப்பன் கோயில் அகிலாண்ட ஐயன் ஆகியோரை பரிசாரகர் மற்றும் நம்பிமார்களாகவும் நியமித்தார் தளவாய் ராமப்ப ஐயர். இந்தத் தகவல்களைச் செப்பேட்டில் குறித்து, ராமப்ப ஐயர் செப்பேடு கொடுத்த காலம் கி.பி. 1477-ஆம் ஆண்டு
    தங்க ரதம்

    இங்கு வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் உலா வருவது தனிச் சிறப்பு. கார்த்திகை, விசாகம், சஷ்டி, மாத பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களிலும், விசேஷ விழாக்களிலும் மலை மீது உற்சவர் சின்னக் குமாரர் பவனி வருகிறார். தமிழகத்தில் முதன் முதலாகப் பழநி தண்டாயுத பாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தங்க ரதம் ஓடத் துவங்கியது. G 1960- ஆம் ஆண்டுக் கருவறைக்குத் தங்க விமானம் அமைக்கப்பட்டது

    பூஜைகள் மற்றும் விழாக்கள்

    தினசரி இங்கு ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகிறது. விழாக்களைப் பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
    மூலவர் சந்நிதி வழக்கமாகக் காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திரு விழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்காலப் பூஜை முடியும் வரையில் திறந்திருக்கும்..

    பங்குனி உத்திர விழா

    பழநியின் பங்குனி உத்திர விழாவை ‘நாட்டுப் புறத் திருவிழா’ என்பர். வருடம்தோறும் சூலமங்கலம் சகோதரிகளது கச்சேரி அன்று நடை பெறும். ‘பழநி எனும் ஊரிலே, பவனி வந்தான் தேரிலே’ என்ற பாட்டை அவர்கள் பாடுவதற்கும் முருகனின் தங்கத் தேர் அங்கு வருவதற்கும் சரியாக இருக்குமாம். ! பங்குனி உத்திரத் திருவிழாவின்போது பத்து நாள் உற்சவத்தில் முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் கிரிவலம் வருவார்.

    கந்தசஷ்டி
    கந்தசஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்கு புறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராகக் கோயிலுக்குத் திரும்புவார்.

    விசாகப் பெருவிழா

    பத்து நாள் நடைபெறும் விசாகப் பெருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேர் வடம் பிடிப்பார்கள்.

    தைப்பூசத் திருவிழா

    தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாகப் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழநி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.தைப்பூச விழாவின்போது நடைபெறும், முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், சண்முக நதி, பழநி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
    ‘ போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுத பாணிதான். தேவ ஸ்தானத்தின் பெயரும் ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் தண்டாயுதபாணியே என்றும் சொல்கிறார்கள்.
    போகரால் செய்யப்பட்ட சிலையில் வேல் இல்லை; தண்டமே உள்ளது. உற்சவர் கையில் வேலும் தண்டமும் மயிலும் இல்லை. அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுதசாமியே மயில் வாகனத்தில் வேலுடன் காட்சி தருகிறார்.

    பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்

    • திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
    • பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
    • மாரியம்மன் கோவில்
    • பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
    • குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
    • வேலப்பர் கோவில், கொடைக்கானல்

    கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் “அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்” என்பதாகும்.முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர்ச் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு.
    பெரும்பாலும் தமிழகக் கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்குக் காரணம் சேர மன்னர்கள் வடக்குத் திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!

    ——————————————

    துணைமேற்பட்டியல்:

    1. காந்திதாசன்.மா, தமிழகத்தில் முருகவழிபாடு என்னெஸ் பப்ளிஷேசன்,
    மதுரை முதல் பதிப்பு 1998.
    2. கிருஷ;ணமூர்த்தி , பழனி தலவரலாறு, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,பழனி.
    3. சுப்பிரமணியன் .பெ, பழனி முருகன் கோவிலும் தீர்த்தமும். ராம்குமார் பதிப்பகம்,1994.
    4. வைத்தியலிங்கம் செ., தமிழ் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு. சிதம்பரம் 1991.
    5. மணிவண்ணன்,க. முற்காலச் சோழர்கள் கோவில் கலைகளும் அழகியல் கோட்பாடுகளும். தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999. (ஆய்வேடு)
    6. கிருஷ;ணண் க., திருஆவினன்குடி கோவில் ஓர் ஆய்வு. அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, 2005 (ஆய்வேடு)
    7. ஜகந்நாதன் கி.வா. பழனி திருநாமம் , அமுத நிலையம் லிமிடெட், இராயப்பேட்டை ஹரோடு,சென்னை .
    8. நாகசாமி, இரா.சுந்தர ராமசாமி, தமிழ கோவிற்கலைகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
    9. கும்பாபிஷேக மலர்கள் , பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, சிறப்பு மலர் 1975.
    10. கும்பாபிஷேக மலர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா,சிறப்புமலர் , 05.07.2000.
    11. பால சுப்பிரமணிய கவிராயர், பழனி தலபுராணம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி
    சுவாமி திருக்கோவில் வெளியீடு, 1998.

    Share
  • எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன்

    -க. விஜய் ஆனந்த்

    முன்னுரை

    சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும்.  எட்டுத்தொகைப் பாடல்கள் தனிநூலாக இல்லாது உதிரிப்பாடல்களின் தொகுப்பாக அமையும்.

    நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் கற்றறிந்தார்
    ஏத்தும் கலியொடு அகம்புறம் என்ற
    இத்திறந்த எட்டுத்தொகைஎன்பதோர் நூற்பா.

    அகமும், புறமுமாய் அமைகின்ற நூல்கள் இவை.  இந்த எட்டு நூல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பலவகைகளில் இடம்பெற்றுள்ளன.  அவற்றை உட்தலைப்பிட்டுப் பகுத்துப் பார்த்தல் பயன்பலன்தரும்.  அதனையே இக்கட்டுரை  மேற்கொள்கிறது.

    சங்ககாலம் முதலே முருகன் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.  தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது. இதனை முருகனைப் பற்றிய முதற்பதிவாகக் கொள்ளலாம்.  சங்கப் பாக்களில் முருகப்பெருமானின் பிறப்புமுறை, தோற்றப்பொலிவு, பெயரீடுகள், ஊர்திகள், கொடிகள், ஆயுதங்கள் மற்றும் தொன்மச் செய்திகள் போன்றவை இலக்கியங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளமை குறித்தும், முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    பெயரீடுகள்

    சங்க இலக்கியங்களில்  முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி.  இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைந்துள்ளன.  முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:

    (1)   குறுந்தொகை

    சேவலங் கொடியோன் (கடவுள் வாழ்த்து), சேய் (பாடல் -1), முதிர்கடவுள்(87), நெடுவேள்(111), தெய்வம் (263), முருகு (362).

    (2)  நற்றிணை

    முருகு(47,82,225), நெடுவேள்(173), கடவுள்(251), தெய்வம்(351),   அணங்கு(376).

    (3)  ஐங்குறுநூறு

    அணங்கு (28), சேய் (242), கடவுள் (243, 257), முருகு (245,247,249,308), மலைவான் (248), மலைஉறை கடவுள் (259), விறல்வேள் (250).

    • அணங்கு – முருகவேள் என்று உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    (4)  அகநானூறு

    முருகன் (1,59,98), கடவுள்(13,156), நெடுவேள்(22,98,120,232,382), முருகு (11,28,118,158,181,232,288), நெடியோன்(149).

    (5) கலித்தொகை

    தெய்வம் (39), சேய் (39,104) கடவுள் (93).

    (6) பரிபாடல்

    சேய் (5, 21) , செவ்வேள் (5), முருகு (5,8), முருகன் (21), கடம்பமர் செல்வன் (8), குன்றமர்ந்தாண்டான் (17), செல்வன் (18, 21), மாஅல் மருகன் (19), நெடுவேள் (21).

    (7) பதிற்றுப்பத்து

    முருகு (26).

    (8) புறநானூறு 

    சேய் (14,120,125), முருகன் (16,23,299), நெடுவேள் (55), முருகு (56,259), கடவுள் (158).

    மேற்சுட்டப்பட்ட பெயர்களில் உரைகள் வாயிலாகத் தெய்வம், கடவுள், அணங்கு போன்றவை அனைத்தும் முருகனுக்குரிய பெயரீடுகளாக கொள்ளப்பெற்றிருப்பதனைக் காணவியலுகின்றது.

    தோற்றப்பொலிவு

    முருகப்பெருமான் ஒப்பற்ற ஆறு தலைகளையும், பன்னிரண்டு தோள்களையும் தன்னகத்தே ஒருங்கே பெற்றுள்ளதைப் பரிபாடல் 5ஆம் பாடலானது விளக்குகிறது.  மேலும் மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகியவற்றைத் தன் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டவன் என்பதை நூல்கள் பேசும். இனி இவனே நம் படைக்குத் தலைவன் என எண்ணி முருகனுக்குத் தீக்கடவுள் கோழியையும், இந்திரன் மயிலையும் தந்தனர். இயமன் வெள்ளாட்டு மறியை ஈந்தான். பிற தேவர்கள் தந்த மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகிய இவற்றைப் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டு அமரப்படைக்குச் செவ்வேள் தலைவனான செய்தியை எடுத்தியம்புகிறது சங்க இலக்கியம்.

    உவமை

    முருகனின் தோற்றப் பொலிவினைச் சங்கப் பாக்கள் முன்னிறுத்துகின்றன. குறுந்தொகையில் முருகனது திருவடியின் நிறத்திற்கும், அழகிற்கும் தாமரை மலர் உவமையாகச் சுட்டப்படுகிறது. முருகப்பெருமான் அணிந்துள்ள ஆடையானது சிவப்பு நிறம் பொருந்திய குன்றிமணியினை ஒத்ததாய் அமைந்துள்ளது. மேலும், அகம். 120ஆம் பாடலில் நெடுவேளின் செம்மேனிக்குச் செவ்வானமும், அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கிற்கு முருகனது மார்பிலணிந்த முத்தாரமும் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன. பரிபாடலில் மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் என்னும் வரியில் ‘சேய்’ மத்தளம் போன்ற பன்னிரண்டுத் தோள்களை உடையவன் (பரி.5) என்றும், “ஞாயிற்றேர் நிறத்தகை” (ஞாயிறு எழுச்சிக்கண் உண்டாகும் நிறத்தைப்) பெற்றவன் என்றும் பொருள்படும் சொற்கள் உள. முருகப்பெருமானின் உடையும், மாலையும் சிவந்த நிறமுடையன. வேற்படையும் பவழக்கொடியினது நிறத்தை ஒத்துள்ளதைப் பரிபாடலின் 18 ஆம் பாடல் உடையும் ஒலியலுஞ் செய்யை மற்றாங்கே”,  படையும் பவழக் கொடிநிறம் கொள்ளும் என்ற பாடல் வரிகள்  தெளிவுபடுத்தும். செந்தீயைப் போன்றதொரு நிறத்தையும், ஞாயிற்றினது மண்டிலத்தையும் ஒத்த நிறமுடையவன் என்பதை உருவும் உருவத்தீ ஒத்தி முகனும்”, “விரிகதிர் முற்றா விரிசுடர் ஏத்திஎன்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

    கொடிகள்

    குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முருகன் சேவலங் கொடியோன் என்று சிறப்பிக்கப்படும். சேவற் கொடியே மட்டுமன்றி மயிலையும் கொடியாக உடையவன் முருகன் பெருமான் என்பதை அகநானூறு (பாடல். 149) குறிப்பிடுகின்றது. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரியஎன்ற வரியில் இதனைக் காணலாம். 8ஆம் பரிபாடலில் முருகப்பெருமானின் கொடி சேவற்கொடி என்று விளக்கப்பெறுகிறது. மயிலையும், கோழியையும் செவ்வேள் ஒருசேரக் கொடியாகக் கொண்ட செய்தியை (பரி.17) அறியமுடிகிறது. பரிபாடல் 18, 21 ஆம் பாடல்களில் செவ்வேள் மயிற்கொடியினை உடையவன் என்று வரும் செய்தியும் தெளிவுதரும்.

    ஊர்திகள்

    உலகில்  உள்ள  ஒவ்வோர்  இறைவனும்  தமக்கென  ஓர்   ஊர்தியினைச்   சிறப்பாகக்  கொண்டு  தம்  தொழிலினைச்  செய்வர்.  அவ்வகையில்  முருகப்பெருமானின்  ஊர்திகளாகப்  பிணிமுகம்  என்னும்  யானையும்,  மயிலும்  அமைகின்றன.

    அகநானூற்றில்  முருகப்பெருமான்  களிற்றைத்  தன்  ஊர்தியாகக்  கொண்ட  செய்தியை,                                                                                                                                                                                                                                        “கடம்புங்  களிறும்  பாடித்  தொடங்குபு” (138)

    என்ற பாடல்  வரி  உணர்த்துகின்றது.  மேலும்  புறம்.  56ஆம் பாடலும் இவற்றையே சுட்டுகின்றது.   5ஆம்  பரிபாடலில் முருகக் கடவுளின் வாகனமாகப் பிணிமுகம்  என்னும் யானையும் மயிலும்  ஊர்திகளாக அமைந்துள்ளன. இவற்றையே அன்றி, (பரி. 8 )  ஊர்தி –  யானை, (பரி.17) ஊர்தி – யானை, (பரி.18) ஊர்தி – மயில்,  (பரி.19)  ஊர்தி-யானை   (பரி.21)  ஊர்தி-யானை என்றவாறு செய்திகளமையக் காணலாம்.

    மாலை

    முருகனுக்குரிய  மாலையாகக்  கடம்ப  மாலையானது  சிறப்பிடம்  பெறுகிறது.    முருகன்  கடம்ப  மாலையைச்  சூடியவன்  என்பதைக்  குறுந்தொகை 87ஆம் பாடலானது மொழியும்.  முருகப்பெருமான்   கடம்பின்கண்  உறைகின்ற  செய்தியை  மேற்சுட்டப்பட்ட  பாடலானது  எடுத்துரைக்கிறது.  மேலும்  அகநானூறு  (பாடல்.138)  வரியில்  கடம்ப  மாலை  பற்றிய  குறிப்புகள்  இடம்பெறுகின்றன.  புறம்.23 ஆம் பாடலில்  கடம்ப  மாலை  செவ்வேளுக்குரியது  என்ற  செய்தி உள்ளது.  18, 21 ஆகிய பரிபாடல்களும் கடம்பினது  சிறப்பினை  எடுத்துரைக்கின்றன.

    ஆயுதம்

    முருகனுக்குரிய  ஆயுதமாக  வேல்  விளங்கியதைப்  பரிபாடல்  5ஆம்  பாடலானது குறிப்பிடுகின்றது.  விறல்வெய்யோனூர்  மயில்  வேனிழனோக்கி  (பரிபாடல்  –  21) என்ற வரியில் செவ்வேள் பகைவரைக் கொன்ற வேலினை உடையவன் என்று சுட்டப்பெறுகிறது. வேல் பற்றிய செய்திகள் குறுந்தொகை (கடவுள் வாழ்த்து), அகம்.(10), கலி. (27, 93, 104),  பரி. (19, 26) போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன.

    தொன்மம்

    புராணம்  என்பது  பழையது, பழங்கதை  என்ற  பொருளுடையது. தொன்மம்  என்பதன்  பொருளாகத்  தொல்காப்பியர்,

               தொன்மை  தானே உரையொடு   புணர்ந்த
             பழமை  மேற்றே” எனக் குறிப்பிட்டுள்ளார்.  தொன்மத்தினை  அவற்றின்  பாடுபொருளின்  அடிப்படையில்  சடங்கு  சார்ந்த   தொன்மம், சமயம், மெய்யியல், பழக்க வழக்கம் சார்ந்த தொன்மங்கள் என வகைப்படுத்துவதுண்டு.  அவ்வகையில் முருகப்பெருமானின்  பிறப்புமுறை,  உறவுமுறை மற்றும்  புராணச் செய்திகள்  அனைத்தும்   தொன்மத்தின்  பாற்படும்.

    பிறப்புமுறை

    செவ்வேள்  சரவணப்  பொய்கையில்  பிறந்து, அறுவகைக்   கார்த்திகை  மகளிர்பால்  வளர்க்கப்பெற்றவன்  என்பதையும், உலகத்தை  அழிக்கும்  தொழிலை உடைய  சிவபெருமானுடைய  திருமகன்  என்பதையும் 5ஆம்  பரிபாடலின் வழி  அறியமுடிகிறது.  பரிபாடலின் 8ஆம்  பாடலானது  முருகனது   பிறப்பினை  மணமிடற்றண்ணற்கு மதியாரற்  பிறந்தோய்  நீ என்னும்  அடியில்   விளக்கியமைகிறது. மேலும்  முருகப்பெருமான்  தோன்றிய  பொழுதே  இந்திரன்  முதலிய  தேவர்கள்  அப்பெருமானை  ஆற்றாது  அஞ்சிய  செய்தியினைப்   பரிபாடலின்  14ஆம்  பாடலானது  சுட்டுகிறது.  கலித்தொகையில்  (பாடல் 83) முருகன் ஆல்அமர்  செல்வன்  அணிசால்  மகன் என்ற  கருத்தும்  ஈங்குச்  சட்டப்படுகிறது.

    நம்பிக்கைத் தொன்மம்

    நம்பிக்கை  சார்ந்த  தொன்மங்களும்  பண்டைய இலக்கியங்களில்  இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. அவ்வகையில் குறுந்தொகையில் முருகன் பற்றிய தொன்மக் குறிப்புகள் காணப்பெறுகின்றன.

    முருகப்பெருமான் இவ்வுலகைக் காத்தலானே இவ்வுலக உயிர்கள் நிலைபெற்றன என்னும் செய்தியைக் குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலில் காணமுடிகிறது.

    பண்டைத் தமிழர்கள் மரத்தின்கண் தெய்வம் உறைகின்றது என்ற நம்பிக்கை உடையோராய் விளங்கியதை இலக்கியங்கள் கூறும். அவ்வகையில் குறுந்தொகையின் 87ஆம் பாடலில் மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள் எனும் அடியில் முருகப் பெருமான் கடம்ப மரத்தின்கண் உறையும் செய்தியை அறிய இயலுகிறது.

    சடங்கு சார்ந்த தொன்மம்

    சங்க இலக்கியங்களில் சடங்கு சார்ந்த தொன்மங்களும் ஒருசேர இடம்பெற்றுள்ளன. வேலன் வெறியயர்தல் என்னும் பகுதியில் தலைமகள் உடல் மெலிவுற்றமை தெய்வத்தால் வந்தது என எண்ணி, உறவினர் முருகவேளுக்கு வெறியாட்டு நிகழ்த்திய செய்தி,

    “உண்துறை அணங்கு இவள் உறைநோய் ஆயின்” எனும் ஐங்குறுநூறு நூலில் (பாடல் – 28) இடம்பெற்றுள்ளதை அறியலாம். மேலும்,

          “சேய் மலைநாடன்’ செய்த நோயே”            (ஐங். 242)

    “கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி”       (ஐங். 243)

    “முருகு என மொழியும் ஆயின்”               (ஐங். 245)

    “அணங்கும் அணங்கும் போலும் அணங்கி ”      (நற். 376)

    “அன்னை அயரும் முருகுநின்”                 (நற். 376)

    “முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல”       (குறுந். 362)

    “நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென”      (அகம். 22)

    “முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”        (அகம். 22)

    “செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்”        (அகம். 98)

    போன்ற அடிகள் சடங்கு சார்ந்த தொன்மத்திற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

    புராணச் செய்தி

    புராணம் என்பதற்குப் பழங்கதை என்பது பொருளாகும். முருகனைக் குறித்த புராணச் செய்திகள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    முருகன் அவுணர்களுக்குத் தலைவனாக விளங்கப்பெற்ற சூரபதுமனையும், அவனது சுற்றத்தாரையும் அழித்த செய்தி இலக்கியங்களால் புனையப்பெறும். அவ்வகையில் குறுந்தொகை (பாடல். 1) செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செய்தியும், கடலின்கண் நடுவே மாமர வடிவாய் நின்ற சூரபதுமனை முருகவேள் அழித்தச் செய்தியும் கருதத்தக்கன. 59ஆம் அகநானூற்றுப் பாடலில் “சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்” என்ற குறிப்பும் காணக்கிடக்கிறது.

          “ஒன்னாதார்க் கடந்து அடூஉம் – உரவுநீர் மாகொன்ற”   (கலி. 27)

    “மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர்”        (கலி. 104)

    “சூர்கொன்ற செவ்வேலாற்பாடி பலநாளும்”            (கலி. 93)

    “சுருடை முழுமுதல் தடிந்த பேர் இசை”             (பதிற். 11)

    “முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்”            (பதிற். 26)

    “சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன”                (புறம். 23)

    “நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து”             (பரி. 5)

    போன்றவரிகள் கவனத்துக்குரியவை.

    மேலும் (பரி. 18), (பரி. 21) போன்ற பாடல்களும் சூரபதுமனை முருகன் வெற்றி கொண்ட சிறப்பினை எடுத்துரைக்கின்றன.

    கிரௌஞ்ச மலையைப் பிளந்தமை

    முருகப்பெருமான் குருகுபெயர்க்குன்றம் என அழைக்கப்படும் ஒரு மலையைத் தன் வேல்கொண்டு அழித்ததை “நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்” (குறுந்.கட.வாழ்) பாடலால் அறியமுடிகிறது. (பரி. 5, 19) பாடல்களும்  மலையைப் பிளந்த செய்தியினைக் குறிப்பிடுகின்றன. (குருகுபெயர்க் குன்றம் என்பது கிரௌஞ்ச மலையென்பது உரைச்செய்தி).

    திருமண உறவு முறை

    முருகவேள் வள்ளியுடன் கூடிச் சென்றதைக் குறிப்பால் “முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல” எனும் நற்றிணை 82ஆம் பாடலானது சுட்டுகிறது. வள்ளியை முருகக் கடவுள் மணந்த செய்தியை 9ஆம் பரிபாடலானது எடுத்துரைக்கிறது.

    அதற்கான சான்று வருமாறு,

    மையிரு நூற்றிமையுண் கண்மான்மறி தோண்மணந்த ஞான்று

    முருகன் – வள்ளி ஆகிய இருவருக்கும் இடையே ஆன உறவு முறையானது இலக்கியங்களில் தெளிவுறச் சுட்டப்படும். ஆனால் முருகக் கடவுள் தேவசேனையை மணந்த செய்தியானது குறிப்பால் மட்டுமே (பரி. 9ஆம் பாடலில் காணப்படுகிறது. இவை தவிர வேறு எந்த எட்டுத்தொகை இலக்கியத்தின் கண்ணும் தெய்வானை பற்றிய குறிப்புகள் இல்லை. சங்க இலக்கியங்களில் தெய்வானை என்ற சொல் இடம்பெறவே இல்லை என்பதை அறியமுடிகிறது.

    படைவீடுகளின் சிறப்புகள்

    முருகனுக்குரிய படைவீடுகள் ஆறென்ப. சங்ககாலத்தில் ‘படைவீடு’ என்ற கருத்தாக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பின்னர்வந்த படைவீடுகளின் செய்திகள் சங்க நூல்களில் பொருத்திப் பார்த்திருப்பதாகச் சிலர் கருதுவர். அவற்றை நிரல்படுத்துவது தேவை. முருகப்பெருமானின் படைவீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை போன்றவை திகழ்கின்றன. ஆறுபடை வீடுகளுள் முதலாவதாக அமையும் திருப்பரங்குன்றத்தின் சிறப்புகளே மிகுதியாக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

    ஒன்னாதார்க் கடந்து அடூஉம். உரவுநீர் மா கொன்ற (கலி-27) ஆம் பாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் சூரபதுமனை அழித்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளதென்பர்.

    • திருமால், சிவன், பிரம்மன், பன்னிரு ஆதித்தர், அசுவனிமருத்துவர், வசுக்கள் எண்மரும், உருத்திரர், திக்குப் பாலகர், தேவர், அசுரர், முனிவர் ஆகிய அனைவரும் திருப்பரங்குன்றத்தின்கண் வந்து உறைவதால் குன்றம் இமய மலைக்கு நிகராகச் சுட்டப்பட்டுள்ளதைப் பரிபாடல் 8ஆம் பாடலானது விளக்குகிறது.
    • இமயக் குன்றினில் உள்ள ஏனைச் சுனைகளினும் சிறந்தது திருப்பரங்குன்றத்துச் சுனை என்பதும், அவை என்றும் வற்றாமல் ஒரே நிலையில் இருப்பது சிறப்பாகும் என்பதும் கூறப்பட்டுள்ளன.
    • குன்றின்கண் இசைக்கருவிகள், நறுமணப் புகைகள், வானளாவி நிற்பதைப் பரி. 17ஆம் பாடலானது விளக்குகிறது.
    • ஐந்து வகையான மலைப் பொருள்களைக் குன்று பெற்றுத் திகழ்வதைப் பரிபாடலின் 18ஆம் பாடலால் அறியமுடிகிறது.

    முருகப்பெருமானின் படை வீடுகளுள் திருப்பரங்குன்றச் சிறப்புகளே எட்டுத்தொகையில் மிகுதியாக இடம்பெறுகின்றன. ஏனைய படைவீடுகளாக விளங்கப்பெறும் பழனி மற்றும் திருச்செந்தூர் ஆகியவைக் குறிப்பால் மட்டுமே சுட்டப்பட்டுள்ளன.

    படைவீடு (திருச்செந்தூர்)

    முருகனது ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்சீரலைவாய் எனப் பெயர்பெறும் திருச்செந்தூரின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடலில் காணமுடிகிறது.

    வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்”  (புறம். 55)

    வெண்மையான மேற்பரப்பினையுடைய அலைகள் திரியும் திருச்செந்தூர் எனச் சிறப்பிக்கப்படுகிறது. இப்பாடலில் இடம்பெறும் ‘செந்தில்’ என்ற பெயரானது முருகன் உறையும் திருச்செந்தூரையும், முருகனையும் குறித்த சொல்லாய் அமைந்துள்ளது.

    படைவீடு (பழனி)

    முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாக அமையும் பழனி மலை பற்றிய குறிப்புகள் புறம். 158 ஆம் பாடலில் காணப்படுகின்றன. கடையெழு மலையில் முருகன் கோயில் கொண்டுள்ளதைக் குறிப்பால் உணர்த்துவதாகச் சில பகுதிகள் அமைகின்றன.

    நிறைவுரை

    தமிழரின் அக  வாழ்விலும், புற வாழ்விலும் முருகக் கடவுள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை இலக்கியங்கள் நமக்குப் பகர்கின்றன. அவ்வகையில் முருக வழிபாடு தமிழ் மக்களின் சமய வாழ்க்கையில்  தனித்ததோர் இடத்தைப் பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.

    பயன் நல்கிய நூல்கள்

    1. அண்ணாமலை, வே. (2000), சங்க இலக்கியத்தில் தொன்மக்களஞ்சியம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
    2. இராசமாணிக்கம், தி. (1984), தமிழர்தம் தனிப்பெருங்கடவுள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    3. சாமி, பி.எல். (1990), சங்க நூல்களில் முருகன், சேகர் பதிப்பகம், சென்னை.
    4. ஞானம், ப. (2001), தமிழ் இலக்கியத்தில் முருகன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
    5. பாலசுப்பிரமணியன், சி. (1972), முருகன் காட்சி, பாரி நிலையம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
    புதுவைப் பல்கலைக்கழகம்
    புதுச்சேரி – 149944316067

     

     

    Share
  • அம்மா இல்லாத தீபாவளி 

    அம்மா இல்லாத தீபாவளி 
    அதுவே ஆறாதத் தீராவலி 
    உணர்ந்தவருக்குத் துயர் தெரியும் 
    உணராதவர்க்கு இனி புரியும் 

    முப்பது நாட்கள் முன்னிருந்தே 
    முதலாம் முயற்சியில் இற‌ங்கிடுவாள் 
    அப்புறம் பார்க்கலாம் மென்றிடினும் 
    அப்பா மனதைத் தளர்த்திடுவாள் 

    எப்பொழு தெங்கெனக் கேட்காமல் 
    இப்பொழு தெனவே இழுத்துசெல்வாள். 
    எங்களின் விருப்பத் திற்கேற்றாற்போல் 
    எல்லாம் எல்லாம் கிடைத்திடுமே 

    சீருடையாய் மொத்தத் துணிவாங்கி 
    சிறப்பாய் தைக்கவும் தந்திடுவாள் 
    தந்தைக்கும் சட்டை வாங்கியப்பின் 
    தனக்கெனப் பிறகே யோசிப்பாள். 

    திருச்சியின் பெருங்கடைச் சாலையிலே 
    தெப்பக்குள எதிர் சிந்தா மணியினிலும் 
    எங்களுக் கெனவே போரிட்டு 
    பட்ஜெட் பட்டாசும் வாங்கிடுவாள் 

    காலும் கைகளும் வலித்தாலும் 
    கரகரத் தொண்டைக் கனத்தாலும் 
    உறவினில் பிடித்தவைக் கணக்கிட்டு 
    இரவினில் பட்சணம் செய்திடுவாள் 

    எத்தனை சிக்கனம் நயத்தோடு 
    அத்தனை வகைகளும் சுவையோடு 
    இத்தனை பகுத்திட கொடுத்திடுவாள் 
    தனக்கென மறைக்கா தெய்வமகள் 

    காலையில் சீக்கிரம் எழவேண்டி 
    இரவினில் உறங்கிடச் செய்திடுவாள். 
    விடியலின் முன்னே எழுந்தாங்கே 
    எண்ணெய்க் குளியலைத் தொடங்கிடுவாள் 

    ஆடைகள் எடுத்து அணியவைப்பாள் 
    ஆசையில் ஆசிகள் பொழிந்திடுவாள் 
    அன்புடன் பொங்கிட அணைத்துடனே 
    ஆண்டவன் அருளிட துதிசெய்வாள் 

    இட்டிலி சட்டினி இடும்போதும் 
    தட்டினில் விருந்தினைத் தரும்போதும் 
    மட்டில்லாத மகிழ்ச்சி தரும் 
    அம்மா வருவாய் எப்போது? 

    சிரிப்பில் உதிரிட மத்தாப்பு 
    சிலநொடி கருகிட புகையாக‌ 
    சுழலும் சக்கரம் கக்கிவிட்டு 
    இருள்வெளி கோளம் ஆகிவிட 

    அதிரும் சரவெடி பட்டாசோ 
    சிதறிடத் துகளாய் வீதியிலே 
    புதிரும் போட்டது யாவுமெனைப் 
    புரிந்தது பிரிவுகள் இப்படியா?


    வருத்திடும் பிணியில் இருந்தாலும் 
    மருந்தினை உண்டிட மறந்தாலும் 
    விரும்பிடும் எங்களை மறக்காமல் 
    இருந்தவள் விட்டெனைச் சென்றது ஏன்? 

    சப்தமிட்ட வெடிகள் இன்றி 
    சாளரமெல்லாம் மூடிவைத்தேன் 
    மூச்சுத் திணறும் புகையென்றே 
    முகத்திரையும் நான் வாங்கிவைத்தேன் 

    தேடும் இடமெலாம் உனைப்போல 
    உருவம் நகர்வது தெரியுதம்மா 
    அகலின் விளக்கின் அடியினிலே 
    அம்மா உன் நிழல் ஆடுதம்மா 

    இருளைக் களைந்திடும் உன்விழிகள் 
    அருளைப் பெருக்கிடும் உன்மொழிகள் 
    கருணைக் கடலாய் இருந்தவளே 
    காதுகள் கொடுத்து கேளாயோ 


    படைத்ததும் கவிதைப் படித்துவிட்டு 
    பாராட் டள்ளி கொடுத்தவளே 
    கிடைத்திட வேண்டும் அதுபோன்று 
    நிலத்தினில் மீண்டு வருவாயா? 

    கனக்கும் மனதின் ஒலியோடு 
    கசியும் ஈரம் கண்களிலும் 
    துடைக்கும் விரல்கள் உனையன்றி 
    துணையாய் எதையும் கண்டதில்லை

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181107 – Adhara sudha -watercolour – A4 Canson 200gsm 100dpi lr

    சேதாரம் மேனிக்கே சாவில்லை ஆன்மனுக்கு
    ஆதாரம் விஷ்ணு அவதாரர், -ஸ்ரீதாரர் (ஸ்ரீதேவியைத் தரித்தவர்)
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….!

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….!

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….!

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு…!

    முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கத்தைத் தாண்டல் தவம்….கிரேசி மோகன்….!

    Share
  • ஆறுபடை அழகா…. (1)

     

     

    திருப்பரங்குன்றம்

    பரங்குன்றப் பொருளான பரமனுடன் பார்வதியும்

    பண்ணோடு இசையாகிப் பரந்தாமன் திருமகளும்

    பங்கயத்தை விட்டெழுந்து  பாட்டிசைக்கக் கலைவாணி

    பாரெல்லாம் சேர்ந்ததுவே பரங்குன்றத் திருமணமே !

     

    தெய்வானை கைப்பிடிக்கும் திருக்காட்சி கண்டிடவே

    தேவர்கள் சேர்ந்திட்டால் தென்மதுரை தாங்கிடுமோ

    தினம்தோறும் காட்சிதரத் திருவுள்ளம் கொண்டவனே

    திரிபுரமும் போற்றிடுமே திருவருளே  திருக்குமரா !!

     

    கல்லாக இருந்தாலும் கருணையின் ஊற்றனறோ

    கந்தாவென அழைத்ததுமே கடுந்துயரும் விலகுமன்றோ

    கண்விழியின் அசைவினிலே கோள்விதிகள் மாறுமன்றோ

    குன்றுள்ளே மறைந்தாலும் கைகொடுப்பது குகனன்றோ!

     

    குறைநீங்க உனைவேண்டித் தவமிருந்தான் நக்கீரன்

    குறைநீக்கி அருள்தந்தாய் பொய்கையிலே பூத்தவனே

    ஆறுபடை போதாதென்று பாடவைத்தாய் அருந்தமிழில்

    ஆற்றுப்படை கேட்டிருக்க அண்டமெல்லாம் ஆடிடுமே !

     

    வலம்வந்து காத்திருப்பேன் வாசலிலே உனைத்தேடி

    வரமொன்று கேட்டிடவே வார்த்தைகள் ஏதுமின்றி

    வளர்கின்ற நாட்களிலே வருந்துயர்கள் நீக்கிடவே

    வாவென்று அழைக்குமுன்னே வந்தருள்வாய் வேலவனே !

     

    Share
  • ஆழ்ந்த இரங்கல்கள் ..

    அன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள்
    இப்பூவுலகை விட்டு இறையடி நிழலை நாடிச் சென்றுள்ளார். அன்னார் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர் பொறுப்பில் எண்பதுகளில் பணி நிறைவு செய்தவர். அவர்தம் ஆன்மா சாந்தியடையவும்,  குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும் உளமார பிரார்த்திக்கிறோம்.

     

     

    ஆன்மனுக்குச் சாவில்லை சேதாரம் மேனிக்கேயென
     ஆதாரத்துடன் அங்கம் துலக்கி மீளாத
     சோகத்திலும் மாளாத பக்குவம் நிறைத்
    தவமாய் உதித்த தனயன்!

    சித்தின் விளையாட்டை ஆனந்தத்தின் சத்தாய்
    வேடிக்கைப் பார்க்கும் ஆன்மீகப் புத்தி
    உலகே மாயம் இவ்வாழ்வும் மாயம்
    எதுவும் நிரந்தரமில்லை சோகமிலைகாண்!

    மனத்தெளிவே உளத்துறவு வரவும் செலவுமே
    உறவும் பகையும் எனும் மாசற்ற மனம்
    அழிவற்ற ஆன்மா பயனற்ற கூடுவிட்டு 
    பண்ணோடு மீண்டு வாழும்!

    முடிவற்ற உயிர் வானமேறி வைகுந்தமேகி
    அரியையும் அரனையும் பாதாரவிந்தம் துதித்து
    பரமனின் பக்கத்தில் பதவிசாய் ஆனந்தமாய்
    பக்குவமாய் இறைநிலை இன்பமடையுமே!!

     

    படத்திற்கு நன்றி  : திரு இசைக்கவி ரமணன்

     

     

    Share
  • மொழிப்புலமை!

    பவள சங்கரி

     

    நம் இந்தியாவில், 20 முதல் 24 வயதில் உள்ள, நகரங்களில் வாழும் 52% இளைஞர்கள் 2 மொழிகளில் வல்லமை பெற்றிருக்கின்றனர். 18% பேர் 3 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்றும் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய 50 முதல் 69 வயதுடையவர்கள் சரளமாக 3 மொழிகள் பேசக்கூடியவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களில் 22% பேர் 2 மொழிகளிலும், 5% பேர் 3 மொழிகளிலும் புலமை உடையவர்களாக உள்ளதாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளைய சமுதாயத்தில் ஆண், பெண் என்ற பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் முதியோர் சமூகத்தில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கிறது என்பதும் முக்கிய செய்தி … கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களிடமும் ஆண், பெண் என்ற வேறுபாடு 10 முதல் 14 வயதிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணம் கிராமப்புறங்களில் இன்றளவிலும் பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கு அனுப்பப்படாததால், கல்வி கற்பதில்லை என்பதால் அவர்கள் தங்கள் தாய்மொழி மட்டுமே அறிந்துள்ளனர். …

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181014/15 Satyabhama -Parijatha and Narakasura vadam -wcol 14×20” Arches 300gsm -for Kalki Deepavali malar lr

    “உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
    சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
    பாபா வழிசென்று, பாமா உதவியில்
    தீபா வளிகாண் தினம்”….கிரேசி மோகன்….!

    மோதக மூக்கனவர், சாதக வாக்கனவர்
    தீதற போக்கிடும் தேஹனவர்-மாதவர்,
    பாபா வழிசெல்வாய், பாமா உதவியில்
    தீபா வளிகாண் தினம்”….!

    விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
    பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிந்து
    பாபா வழிசெல்வாய், பாமா உதவியில்
    தீபா வளிகாண் தினம்”….!

    Share