பவள சங்கரி

 

நம் இந்தியாவில், 20 முதல் 24 வயதில் உள்ள, நகரங்களில் வாழும் 52% இளைஞர்கள் 2 மொழிகளில் வல்லமை பெற்றிருக்கின்றனர். 18% பேர் 3 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்றும் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய 50 முதல் 69 வயதுடையவர்கள் சரளமாக 3 மொழிகள் பேசக்கூடியவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களில் 22% பேர் 2 மொழிகளிலும், 5% பேர் 3 மொழிகளிலும் புலமை உடையவர்களாக உள்ளதாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளைய சமுதாயத்தில் ஆண், பெண் என்ற பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் முதியோர் சமூகத்தில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கிறது என்பதும் முக்கிய செய்தி … கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களிடமும் ஆண், பெண் என்ற வேறுபாடு 10 முதல் 14 வயதிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணம் கிராமப்புறங்களில் இன்றளவிலும் பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கு அனுப்பப்படாததால், கல்வி கற்பதில்லை என்பதால் அவர்கள் தங்கள் தாய்மொழி மட்டுமே அறிந்துள்ளனர். …

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *