Blog

  • இந்த வார வல்லமையாளர் (269)

    இவ்வார வல்லமையாளராக அ.முத்துலிங்கம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்

    1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.

    அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்

    . கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது

    நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

    (நன்றி: விக்கிபிடியா)

    பரிந்துரை செய்த பேராசியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”சபரி கிழமவர் சத்வக் கனியை
    அபரிமித அன்பை அயோத்தி -நபரவர்
    ராமரின் பின்வந்தோன்(கண்ணன்) ராப்பகலாய் கீதமாம்
    சாமரஸம்(சாம கானம்) மாட்டின் செவிக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180424 -Trivikrama-Universe in three steps-lr-27.9×35.6 (11×14”) Jambavan circumambulates. Brahma hails Vamana.

    ”ஜாம்பவான் சுற்றுகிறார் ஜாண்பிள்ளை வாமனனை
    தாம்பில் பிணைந்த திருமாலை -மாம்பழ
    வாயனின்(பாரதியார் பிரயோகம்) காலை வணங்குகிறார் அன்னத்தன்,
    ஆயரா கொக்கா அரி(றி)’’….கிரேசி மோகன்….!

    Share
  • அலை பாயும் மனதினிலே..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

     

     

    மரக்கிளையில் அற்புதமாய் கூடுகட்டும் பறவைக்கு

    =====மகத்தான சக்தியதை மனதுக்குள் புகுத்தியதாரோ..?

    இரவிலொளி உண்டாக்கும் மின்மினிப் பூச்சிக்கு

    =====அடிவயிற்றின் முடிவில் ஒளிகொடுத்தது யாரோ..?

    மரங்கொத்திப் பறவைதன் கூரலகால் உளிபோல

    =====மரத்தைச் செதுக்கும் உத்தியைத் தந்ததுயாரோ..?

    குரங்குபோலத் தாவும்நம் அலைபாயும் மனதினில்

    =====கோடி கோடியறிவியல் கேள்வியெழும் அன்றாடம்.!

     

    குறையில்லா வாழ்வுவாழ வியனுலகில் இருக்கிறது

    =====கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற இயற்கை வளங்கள்,!

    அறைகுறையா யிதையறிந்த அறிவிலியோ ரெலாம்

    =====அழித்தொழித்து விடவே கங்கணம் கொண்டிடுவார்,!

    கறைபடிந்த மனதுக்குள் அலைபாயும் நினைவினில்

    =====கரைகின்ற கரியவெண்ண மெழாதிருக்க வேண்டும்.!

    நிறையிருட்டை நீக்குகின்ற முழுமதிபோல…நம்மின்

    =====நினைவும் எண்ணமும் நல்லதையே நாடவேண்டும்.!

     

    அருங்கல்வி பயின்ற ஆசானும்தன் மாணவனுக்கு

    =====அற்புதமாய்ப் புரிய வைக்குமாற்றல் பெறவேணும்.!

    ஒருமித்த கருத்துகளும் உருவாகி வரும்வரையில்

    =====இருவரும் ஒன்றாயிருந்தே செயல்படல் வேணும்.!

    குருவொருவன் நல்வழிகாட்ட..சீடனுமதைத் தன்

    =====கருத்தில் கொண்டால்..குவலயமதில் சாந்திதவழும்.!

    பெரும்ஆய கலைகளும் கைகூட வேண்டுமெனில்

    =====பெரிதாயலையும் மனதையடக்கும் திறன் வேணும்.!

     

    ============================================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 02nd April’2018

    நன்றி படம் :: கூகிள் இமேஜ்

    Share
  • படக்கவிதைப் போட்டி 157-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கோலாட்டம் ஆடும் பெண்ணின் முகபாவங்கள் அழகாய் வெளிப்படும் வண்ணம்  புகைப்படம் எடுத்துள்ளார் திருமிகு. ஷாமினி. இந்த இரசமிகு படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி.

    கலைகளில் சிறந்தது நவரசங்களையும் (தமிழில் மெய்ப்பாடுகள் எட்டே) வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆடற்கலை. தில்லை அம்பலவனே ஆடவல்லானாய் – நடவரசனாய் ஆனந்த நடம் ஆடிக்கொண்டிருப்பது ஆடலின் மகத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்துகின்றது. 

    இனி, முகபாவத்தால் நம் அகம் மயக்கும் இந்த ஆரணங்கைத் தம் கவியாரத்தால் அணிசெய்ய வருகின்றார்கள் கவிவலவர்கள்!

    *****

    ”மனஅழற்சி போக்கும் பயிற்சி; உடல்நலத்தை, மனவளத்தைக் கூட்டும் முயற்சி” என்று இந்த அம்மணி ஆடும் அழகு ரங்கோலியைப் புகழ்கிறார்  ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.

    ஆடு..உடல்வளம் நாடு!!

    அம்மிணியாடும் ரங்கோலி _
    ஜம்முனிருக்குது பங்காளி!!
    குச்சிரெண்டத்தூக்கிகிட்டு
    குதிச்சுக்குதிச்சு ஆடும்போது
    கூடச்சேந்து கும்மிகொட்டி
    ஆடுது ஆசை எனும் ஓங்காளி!
    கச்சிதமாய்க் கால வச்சுக்
    கைகள் செய்யும் சாகசத்தில்
    உறுப்புகள் முறுக்கேற…விளி
    உற்றுப்பார்க்கும்போதுகோடாலி
    கூர்மையோடு ஒளி வீசும்!!
    அடிமனசுக்கு ஏற்ற பயிற்சி
    அடித்துப்போகும்மன அழற்சி!!
    வடக்கிருந்துவந்த விருந்தாளி!
    இளமையிலே விளையாட்டு
    இரும்பாக்கும் உடல் வளத்தை
    கரும்பாக்கும் மன நலத்தை!! _
    நோய்நொடிக்குப்பகையாளி!!
    உண்ணுபவை உடன்செரிக்க,
    கண்ணயர்ந்து தூக்கம்வர
    பெண்களுக்கு பெரிதுதவி
    நன்குவாழ உதவும் கூட்டாளி! _
    கட்டுடலோடு நற்றவம் சேர
    பட்டொளிவீசி வாழ்வதே ஜாலி!!
    *****

    ”ஆடல்காண வந்தவரை வண்டுவிழிகள் துழாவ, கண்மலர்கள் வரவேற்க, வெண்முத்துப் பற்கள் ஒளிசிதறக் கோலாடிக் கொண்டாடினாள்” என்று பாவையின் எழிலைப் பழகு தமிழில் பாராட்டுகின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    வரவேற்பு

    ஆடை வனப்பு அழகைக் கூட்டி
    அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
    உற்றவரை உறவுக்கு உகந்தவரை
    அங்குமிங்கும் படபடக்கும்
    வண்டு விழிகளால் துழாவி
    கண்மலர்களால் வரவேற்று
    கோலாடிக் கொண்டாடினாள்.

    உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும்
    சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
    கூடியாடிக் குதித்ததில்,
    மேடையெங்கும் ஒரே முத்துச் சிதறல்கள் !

    *****

    ”தமிழ்ப்பாட்டு காதில் தேனாய்ப் பாய, சேலாட்டம் விழிகள் ஆட, கோலாட்டம் ஆடு பெண்ணே! குவலயத்தில் தாய்த்தமிழ்க்கு முடிசூட்டு கண்ணே!” என்று உற்சாகமூட்டுகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கலை வளர்க்க…

    ஆடு மயிலே கோலாட்டம்
    ஆடுமுன் விழிகள் சேலாட்டம்,
    பாடு பாடு தமிழ்ப்பாட்டு
    பாயவே காதில் தேனாட்டம்,
    சூடு சூட்டு முடிசூட்டு
    செந்தமிழ்த் தாய்க்கும் முடிசூட்டு,
    ஈடு இணையே இதற்கில்லை
    இக்கலை வளர்த்தே ஆடுநீயே…!

    *****

    ”அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு; எண்ணக்கோல் செலுத்தியாடி புதுசாத்திரம் சமைத்திடு; செங்கோல் உயர்த்தியாங்கு சட்டமாற்றம் வகுத்திடு எம் சுதந்திர தேவி!” என்று நடமிடும் சுந்தரிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    கன்னக்கோல் சுழற்றியாங்கு கயவர் கள்வினை கவர்ந்திடு
    துன்னக்கோல் அசத்தியாங்கு மாதர் நல்வினை கோத்திடு
    அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு
    ஆனைக்கோல் தூக்கியாங்கு வலிய தீவினை ஒடுக்கிடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    வண்ணக்கோல் தட்டியாடி உடல் சீர்மையைச் செழித்திடு
    திண்ணக்கோல் திருத்தியாடி உளஉறுதியை முறுக்கிடு
    தண்ணக்கோல் வீசியாட்டிக் கற்பு சூத்திரம் முழக்கிடு
    எண்ணக்கோல் செலுத்தியாடிப் புதுசாத்திரம் சமைத்திடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    செங்கோல் உயர்த்தியாங்கு சட்ட மாற்றமும் வகுத்திடு
    வெங்கோல் நிறுத்தியாங்கு கடின விதிமுறை பதித்திடு
    அங்கோல் கரத்திலாங்கு மல்லாயுதம் எடுத்திடு
    தங்கோல் நாட்டியாங்கு நவயுவ பாரதம் எழுப்பிடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    கொடுங்கோல் ஒடித்து ஆங்கு ஆணவம் அகற்றிடு
    கடுங்கோல் மடித்து ஆங்கு உபத்திரம் ஒழித்திடு
    தடுங்கோல் வளர்த்து ஆங்கு பத்திரம் வழங்கிடு
    நெடுங்கோல் வழங்கியாங்கு சுதந்திரம் பெருக்கிடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    சுடுங்கோல் பொருத்தியாங்கு வஞ்சநெஞ்சகம் பொசுக்கிடு!
    அடுங்கோல் அணைத்து ஆங்கு அமைதியை நிறுத்திடு
    மடுங்கோல் திருத்தியாங்கு தமிழகநீர்வளம் மீட்டிடு
    எடுங்கோல் எழுப்பியென்றும் நல்லுறவினை உயர்த்திடு! ( சுதந்திரதேவி! —)

    *****

    நல்லதமிழ்ச் சொல்லெடுத்து நாட்டிய நங்கைக்கு இனிய தமிழ்மாலை சூட்டியிருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை எனும் பாராட்டைப் பெற்ற கவிதை அடுத்து…

    கோபாலா வா…வாவென்று கோலாட்டம் போடுங்கடி..!

    பெண்களின் கலைநயத்தைக் காணுகின்ற கலையில்
    ……….பெருங் கலையே கும்மியடிக்கும் கோலாட்டமாம்..!
    வண்ணம் கொண்ட கழிகளிரண்டைக் கையிலேந்தி
    ……….வகையாய்த் தட்டியே ஒலியெழுப்புமோர் ஆட்டம்..!
    எண்ணத்தை வெளிப்படுத்தும் விசேட ஒலியாய்
    ……….இங்குமங்கும் ஓடியாடி உல்லாசம் கொடுக்குமாம்..!
    கண்ணசைவால் கவரும் இளநங்கைகள் தாங்கள்
    ……….கால்விரலில் உடல்தாங்குமொரு உத்தியை அறிவர்..!

    கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் பட்டாடை உடுத்தி
    ……….கண்ணன் பிறந்தநாளில் கோலாட்டம் குதூகலமாம்..!
    மண்ணில் அன்னவனால் பிறவி கொண்டோமென
    ……….மாயவனைக் கூத்தாட அழைப்பதுவும் வழக்கமாம்..!
    பண்ணிசையால் பாவையர்கள் பாடுமழகைக் காண
    ……….பறந்தோடி வருவான் மாயப்பிரான் கண்ணனுமே..!
    அண்டத்தைத் தன்னண்ணத்தில் காட்டிய பெருமாயன்
    ……….அகமகிழ்ந்தே ஆயகலையும் கைவர அருளுவான்..!

    பண்ண(ணிய) கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
    ……….பளிச்சென முகம்வெளிரப்…பலமாகக் கும்மியடி..!
    வெண்ணெய் திருடுமுன் அந்தத் தாழியுடையுமாறு
    ……….கண்ணன் வருவதற்குமுன் கழிதட்டி ஆடுங்கடி..!
    உண்ணவும் உழைக்கவும் உடல்பயிற்சி பெறவும்
    ……….ஓடியாடி ஒன்றாய்ப்பின்னிப் பிணைந்து கும்மியடி..!
    தண்டையணிந்த நம் குதிகாலும் தரையிலூன்றாது
    ……….வெண்தாடி விருத்தரும் விரைந்துவரக் கும்மியடி..!

    ”அண்ணத்துள் அண்டம் காட்டிய அந்த மாமாயன் அருள்பெறவே, அவன் பிறந்தநாளில் பாவையர் ஆடும் கோலாட்டம், அனைவர்க்கும் தந்திடும் கோலாகலம்! கெண்டை விழிகள் சுழன்றாட, தண்டையொலிகள் பண்பாட, இளம்பெண்டிர் ஆடும் இந்த எழிலாட்டம் வெண்தாடி விருத்தரையும் விருப்பத்தோடு காண வைக்கும் ஒயிலாட்டம்!” என்று கோலாட்டத்தின் சிறப்பைக் குவலயத்துக்கு இயம்பும் இக்கவிதையினைப் படைத்த பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180423 – Tvameva -A4 -icam -lr

    ’’கன்றுபோல் என்றுமே கண்ணனே காப்பாக,
    சென்றவர் சேவடியில் சேர்ந்திடு-நன்றிதைச்,
    சொன்னது கேசவ், சரண்புகு சென்னியால்,:
    ஒண்ணது ஒண்ணாக்கும் ஒண்ணு’’….கிரேசி மோகன்….!

    Share
  • உனக்குள்ளே ! உனக்கு வெளியே !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     

     

     

     

     

     

    நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள

    தூரத்தைப் பற்றி

    வாதாடிக் கொண்டி ருந்தோம் !

    மனிதர் சிலர் மயக்க நினைவுச் சுவருக்குள்  

    ஒளிந்து கொண்டுள்ளார்  !

    மெய்ப்பாடு கண்டு கொள்ளார்  !

    அறியும் போது

    தவறிப் போகுது காலம் !

     

    நாமெல் லோரும் பகிர்ந்து கொள்ளும்

    நேசத்தைப் பற்றி

    பேசிக் கொண்டி ருந்தோம் !

    நட்பைக் கண்டு விட்டாலோ  நாம்

    வெட்டி விடத் துணிவோம் !

    நேசத்தால் நாமிந்த

    காசினியைக் காப்பாற் றலாம் அதன்

    வாசனை நுகரும் போது !

     

    எவரும் உன்னை மாற்ற இயலாது !

    எண்ணிக் கொள்,

    எல்லாம் உன் நெஞ்சுக் குள்ளே

    இருக்குது.

    பார்த்தால்  நீ  ஓர் அற்பம் !

    வாழ்வு புலர்கிறது

    உனக்குள்ளே !  உனக்கு வெளியே !

     

    நாமெல்லாம் ஆறிப் போகும்

    காதல் உணர்வைக் காண்கிறோம் !

    உலகைக் கைப்பற்ற முனைவோர்  

    இழப்பர்  தம் ஆத்மாவை !

    அதை அறியார் அவர் ! காணார் அவர் !

    அவர்களில் ஒருவனா நீ ?

    உன்னைக் கடந்து அப்பால்

    உன்கண் நோக்கினால்,

    உனக்கு அங்கே காத்திருக்கும்

    மனச்சாந்தி !

    நாமெல்லாம் ஒன்றெனும்

    காலம் வரும் ! அன்று

    உயிர்க்கும் வாழ்வு உனக்குள்ளே !

    உனக்கு வெளியே !

    Share
  • படக்கவிதைப் போட்டி (158)

     

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    மோகன்தாஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கைகோள் நோக்கில் மருதத் திணையில் பரத்தமை

    -ம. ஆனந்தன்

    சங்க இலக்கியங்களில் பரத்தமை என்பது முக்கியப் பாடுபொருளாக விளங்கியது. காதலை மையப்படுத்திய அக இலக்கியங்களில் பரத்தமை தனி இடத்தைப் பெற்று இருந்தது. தொல்காப்பியர் தலைவன் தலைவியின் காதல் களவிலிருந்து கற்பில் பயணிக்கும் பொழுது பரத்தமையொழுக்கம் அவர்களது வாழ்வில் உட்புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார். இதன் விளைவால் தலைவி அடையும் துன்பங்கள், ஊராரின் அலர், விருந்தோம்பல் நிகழாமை போன்ற  இன்னல்கள் தோன்றுகின்றன.

    பரத்தமை என்ற ஒழுக்கம் சங்க காலத்தில் ஆதரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்ந்தது. பரத்தையர் இற்பரத்தை, சேரிப்பரத்தை எனக் கூறப்பட்டனர். இது கூடா ஒழுக்கம் எனினும் அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டொழுகினர். பிற்காலத்தில் இவ்வொழுக்கம் சாடப்பட்டது. பரத்தமை பெரும்பாலும் மருதநிலத்தில் மிகுந்து காணப்பட்டது. இதற்கு காரணம் அங்குக் காணப்பட்ட செல்வ வளம், சூழல், மக்களின் வாழ்வியல் இயல்பு போன்றவையாகும்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுளியல் உறுப்புகளில் ஒன்றான கைகோளின் கற்பு வாழ்க்கையில் பரத்தமை நீங்கா இடம்பெற்றுள்ளது. அத்தகைய பரத்தமை வாழ்க்கையை எட்டுத்தொகையில் குறிப்பிடும் அக இலக்கியங்களில் மருதத்திணையில் காணலாகும் பரத்தமை வாழக்கையோடு பொருத்திக் காட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

    தொல்காப்பியரின்  கைகோள்

    தொல்காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரத்தின் உட்பிரிவுகளுள் எட்டாவதாக அமைவது செய்யுளியல் என்ற பகுதி. இலக்கிய மரபினைப் பற்றிய இயல் செய்யுளியலாகும். தமிழண்ணல் அவர்கள் இன்று படைப்பிலக்கியம் என்று நாம் கூறுகிறோமே அதே பொருளில்தான் தொல்காப்பியர் செய்யுள் எனும் சொல்லை ஆள்கின்றார் எனக் கூறுகிறார். அகத்திணையைப் பற்றிக் கூறி அகப்பாடலின் பொருளை உணர்த்தும் தொல்காப்பர் 14 ஆவது உறுப்பாகக் கைகோள் என்பதைக் குறிப்பிடுகிறார்.

    சோடிகளின் வாழ்வே கந்தருவ மணம் என்கிறார். எனவே வடமொழியில் கந்தருவ மணம் போன்று இங்கு ‘களவு’என்பதாகும். கைகோள் வகையில் களவு இன்னது என்பதை,

    காமப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும், கைகோள் என்பதற்குப் பவானந்தர் தமிழ்ச்சொல்லகராதி ஓழுக்கம் எனப் பொருள் தருகிறது. மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவது கைகோளாகும். இதனைத் தொல்காப்பியார் களவு, கற்பு என இருவகைப்படுத்துகிறார்.

    கைகோளில் பரத்தமை

    பரத்தமை-அயன்மை, பரத்தையர்-அயலார்: களவொழுக்கம் ஒழுகி, மணஞ்செய்து கொண்டு கற்பொழுக்கம் ஒழுகும்- இல்லறம் நடத்தும் தலைவியரல்லாத பிற மகளிர் அதாவது களவொழுக்கம் ஒழுகாமலும், மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்டிர். இவர்,

    1.காமக் கிழத்தியர்
    2.காதற் பரத்தையர்
    3.சேரிப்பரத்தையர்  என மூன்று வகைப்படுவர்.

    இன்று சமயக் கன்னிப் பெண்கள் இருப்பது போல. ஆனால் இன்பத்தை வெறுக்காமல், அதற்காகவே பண்டு மணஞ்செய்து கொள்ளாது சில பெண்கள் இருந்து வந்தனர். அவர்கள் தன்னுரிமையுடனேயே வாழ்ந்து வந்தனர். அவர்களே இம்மூவகையினரும்.

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப”        (கற்பு – 4)

    என்பதால், தமிழரிடை, களவொழுக்கம் ஒழுகி, கரணம் இன்றி-பலரறிய மணம் செய்து கொள்ளாது கற்பொழுக்கம் ஒழுகி இல்லறம் நடத்தி வந்த காலமும் ஒன்று இருந்து வந்தது. அதாவது ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். திருமணம் என்பதே அன்றில்லை பின்னர் தான்  திருமணம் குலப்பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்பரத்தையர் களவொழுக்கமொழுகாது காம நுகர்பவர். எனவே முன்னது தூய ஒழுக்கமாகும். பின்னது தீய ஒழுக்கமாகும்.

    காமக் கிழத்தியர்

    தக்க பருவத்தே காதலுற்று முறையாகக் களவொழுக்கம் ஒழுகாமலும் மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக மனைவியர்போல் இருந்து வருபவர்.

    காதற் பரத்தையர்

    இவர் தலைவனிடம் அன்பு கொண்டு இன்பந்துய்ப்பவர். ஆனால் காமக்கிழத்தியர் போலத் தலைவனோடு உடனிருந்து வாழ்க்கை நடத்தாமல் தனிவாழ்க்கை வாழ்பவர். தலைவன் குடும்பத்திற்கும் இவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பரத்தையர் என்பதே இதற்குச் சான்றாகும்.

    சேரிப் பரத்தையர்

    இவர் தமக்கென ஒருவரை வைத்துக் கொள்ளாமல் விருப்பமுள்ள போது விரும்பியவரைக் கூடி வாழ்பவர். இவர் தலைவன் மீது அன்பின்றித் தலைவன் கொடுக்கும் பொருள் மீது அன்புடையவர்.

    “ஒழுங்கங் காட்டிய குறிப்பினும்”
    “காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
    ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்”       (கற்பு – 5)

    என உயிரினும் ஒழுக்கமே பெரிதெனக் கொண்ட நம் முன்னையோர்க்கு இஃதொரு பேரிழுக்கே யாகும். ஒரு சில ஒழுக்கத்தை மதியாதவர்களால் உண்டான இத்தீமை தமிழினத்திற்கே ஒரு களங்கமாக விளங்கி வருகிறது.

    மருதத்திணையில் பரத்தமை

    மருதத்திணையின் திணை ஒழுக்கம் ஊடல் ஆகும். அவ்வூடலானது தோன்றுதற்கு முக்கியக் காரணம் பரத்தமையே. இதன் விளைவாகவே தலைவன், தலைவியிடையே ஊடல் மிகுந்தது.

    ஒளி இழந்த தலைவி

    புதல்வனை ஈன்ற தலைவி அதன் காரணமாகத் தான் அடைந்த முதுமை நிலையைத் தலைவன் வெறுப்பான் என ஐயமுடையவளாய் இருக்கின்றாள். அப்பொழுது தலைவன் பரத்தையரோடு தன் பொழுதினைக் கழித்து வருகின்றான். இதனைக் கேள்வியுற்ற தலைவி அவனை நோக்கி அவனது பரத்தமையை வெகுண்டு கூறுகின்றாள். இதனை,

    பழனப் பன்மீ  னருந்த நாரை
    கழனி
    மருதின் சென்னி சேக்கு
    ………  ………         ……….   ……………
    ……..     ………         ……….    …………..
    பேஎ யனையமியாஞ் சேய் பயந்தனமே

    ஐங்குறுநூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது. ஊர்ப் பொது நிலத்தின்கண் வாழும் பல்வேறு வகை மீன்களையும் பற்றித் தின்ற நாரையானது நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ள மருதமரத்தின் உச்சியிலே தங்குவதற்கு ஏற்ற இடமான மிகுந்த நீரை உடைய பொய்கையையுடைய புது வருவாய் மிக்க ஊரனே! யாம் மகப் பெற்றுள்ளோம். ஆகவே உனக்குப் பேய் போலத் தோன்றுகிறோம். அதனால் உன்னுடைய பிற பரத்தை மகளிர் தூய்மையும் நறுமணமும் கமழுகின்றோர் போலத் தோன்றுகின்றனர். அதனால் நீ இங்கு வர வேண்டாம் அவர்களிடத்தே தங்கிக் கொள்வாயாக! என வெகுண்டு கூறுகின்றாள்.

    இதில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினைத் தலைவி சாடுகின்றாள். பல வகையான மீன்களை உண்ட புலவு நாற்றத்தை உடைய நாரையானது கழனி மருதின் உச்சியிலே சென்று தங்குவது போலப் பல பரத்தையரோடு கலந்து உறவாடிக் களித்த பின் நீ இப்பொழுது சிறிது இளைப்பாற என்னுடைய இல்லத்திற்கு வந்திருக்கிறாய். இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு உயர்ந்த மருதின் உச்சி தங்குமிடம் போல மகவை ஈன்று ஒழிந்த என் இல்லம் உனக்கு தங்கும் இடம் போல ஆயிற்று என்று தலைவனின் பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இப்பாடல் தலைவனின் பரத்தமையைத் தலைவி நேரடியாக அவனுக்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

    வாளை மீனை உண்ணும் நீர்நாய்

    பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனிடம் தலைமகள் அவனது பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இதனை

    அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
    பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
    ………….     ………….               ………….    ……………….
    ………….      ………….               …………      ………………….
    இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே ”

    என்ற நெடுந்தொகைப் பாடல் புலப்படுத்துகின்றது. பரல்கள் இடம்பெற்ற சிலம்பினையும் ஆம்பல் மலராகிய அழகிய மாலையினையும் அரத்தால் பிளக்கப் பெற்ற அழகிய வளைகளாற் பொலிந்த முன் கையினையும் அணிகலன் அணிந்த மூங்கிலையொத்த தோளினையும் உடைய ஐயை என்பாளுக்கு தந்தையாகியவன் மழைவளம் தரும் பெரிய வண்மையையுடைய தித்தன் ஆவான். அத்தகையவனின் நெற்குவியல்களை உடைய உறையூரிடத்தில் ஓடக்கோலும் நிலைத்து நில்லாத்தன்மையுடைய காவிரி நீர்ப்பெருக்கில், குழை முதலாகிய மாண்புறம் ஒளி பொருந்திய அணிகளையுடைய உன்னால் விரும்பப்பட்ட பரத்தையொடு வேழக் கரும்பாலாகிய வெள்ளிய தெப்பத்தினைக் கொண்டு அந்த இடத்து பூமி நாட்டாரது குளத்தினை நாடிச் சென்று விளையாடும்.

    களிறும் பிடியும் போல முக மலர்ச்சியுற்று உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மலர்மாலையின் அழகுகெட நேற்று நீ புனலாடினாய்! ஆனால் இன்று இங்கு வந்து மார்பிலுள்ள அழகிய முலையில் தேமல் தோன்றிய குற்றமற்ற கற்பினையுடைய என் புதல்வன் தாயே என்று வஞ்சனை பொருந்திய பொய்ம்மொழியினை வணங்கிப் பல முறை கூறுகின்றாய்! என்னுடைய முதுமையை இகழாதே. இந்நிலைக்கு நான் காரணமல்ல என்று கூறுகின்றாள்.

    பின்பு தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய நீர் மிகுதியாக உள்ள வயலில் அழகிய உட்டுளையுடைய வள்ளையின் மெல்லிய கொடிகளை உழக்கி வாளைமீன்களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர் நாயானது முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரம்பின் பழைய தூறுகளில் தங்கி இருக்கும். ‘மத்தி’ என்பனது ‘கழாஅர்’ என்ற ஊரினைப் போன்ற எனது இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று. எனவே உன் பரத்தமையை மறைக்க என்னிடம் உன் பொய்ம்மொழிகளைக் கூறாதே. எனக்கு உன் நிலை அனைத்தும் தெரியும். எனவே உனது பொய்ம்மொழிகள் எனக்கு இன்பம் செய்விக்காது அதை நீ புரிந்து கொள்வாயாக! எனக் கடிந்துரைக்கின்றாள்.

    வாளைமீனை உண்டு களிக்கும் நீர் நாயைத் தலைவனது பரத்தமைக்குச் சான்று படுத்திக் கடிந்துரைக்கின்றாள்.

    நாணமில்லாதவன்

    நெல்லரியும் வினைஞர் தம் தொழிலை விடுத்து இழிந்த கள் வண்டியில் ஆழ்ச்சியைப் போக்குவதற்குச் சிறந்த கரும்பினைச் சிதைப்பது போல நீ இல்லறக் கடமைகளைச் செய்யும் ஒழுக்கத்தினைக் கைவிட்டு இழிந்த பரத்தையின் இன்பத்தை நுகர்வதற்குப் பண்பிற் சிறந்த தலைவியை வருத்துகின்றாய் எனத் தலைவனின் பரத்தமையைச் சாடி வாயில் மறுக்கின்றாள் தோழி. இதனை,

    எரியகைந் தன்ன தாமரை யிடையிடை
    அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
    கட்கொண்டு மறுகுஞ் சாகாடளற்றுறின்
    ஆய்கரும் படுக்கும் பாய் புனல் ஊர
    ஆடுகொள் வியன்களத் தார்ப்பினும் பெரிதே” 

    அகநானூற்றுப் பாடல்வழி புலவர் மிக அழகாய்ப் புலப்படுத்தியுள்ளார். நெருப்பு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடைஇடையே நெல்லரிவோர் நெல்லினை அரிந்து அரி அரியாகப் போட்டனர். உழைப்பின் களைப்புத் தெரியாமல் இருக்கவும் மகிழ்ச்சிக்காகவும் தங்களுக்குக் கள்ளினைக் கொண்டு வரும் வண்டி சேற்றில் பதிந்து கொள்ளக்கூடும் என அப்பாதைகளில் கரும்பினை அடுக்கி அதன் மீது வண்டியினை செலுத்தும் வளம் பொருந்திய ஊரனே உறுதியாக நீ மிகவும் நாணமில்லாதவனானாய்.

    ஏனெனில் பொரி போலப் புன்கம்பூ மலரும்; அகன்ற நீர்த்துறை பொலிவு பெற ஒளி பொருந்திய நெற்றியினையும் நல்ல நறுமணம் வீசும் மலர்களைச் சூட்டிய பார்ப்பவர்க்கு இனிமை பயக்கும் கூந்தலையும் மாவடு போன்ற கண்ணினையும், முத்துவடம் அசையும் அழகிய முலையினையும் நுண்ணிய அழகின் நலத்தையும் உடைய ஒரு பரத்தையோடு நேற்று இடையூறு இல்லாமல் செல்லும் புனலில் நீ விளையாடினாய் எனப் பலர் கூறினர். ஆனால் அதை நாங்கள் பொய்யென புறத்தே மறைத்தோம். எனினும் எங்கள் செயலினையும் கடந்து அச்செயல் அலரானது.

    அது எத்தகு தன்மையுடையது என்றால், மலர்ந்த பூமாலையினையும் தலையில் மை அணிந்த யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனது என்றும் நீங்காத விழவினையுடைய போர்க்களத்தில் தம்முள் ஒருங்கே இயைந்து எழுந்த சோழ,சேரர்களது கடல் போன்ற பெரிய படைகளைக் கலக்கும் பரிசு தாக்கி ஒலிக்கும் ஒலியினையுடைய முரசு ஒழிந்து கிடைக்க, அவர் பறந்து ஓடும் புறக் கொடையைக் கண்ட நாளில் வெற்றி கொண்ட பெரிய களத்தின் கண் எழுந்த ஆரவாரத்தினை விடப் பெரியதாக இருந்தது. அவ்வாறு பேரலர் தோன்றும் அளவிற்கு உனது புறத்தொழுக்கம் அமையலாயிற்று. எனவே நீ நாணமில்லாதவனானாய் எனத் தலைவனின் பரத்தமையின் இயல்பைத் தோழி கூறி வாயில் மறுக்கின்றாள்.

    இந்நிலையை நோக்கும்போது அன்றைய காலகட்டச் சமுதாயச் சூழல் புலனாகின்றது. செல்வ வளத்தின் காரணமாக ஆடவர்கள் தீயொழுக்கம் புரியத் தலைப்பட்டனர். அத் தீய பண்பு நலனின் வெளிப்பாடு பிறர் அறிய நிகழ்ந்துள்ளது என்பதைப் பழம் பாடல்கள் பதிவு செய்துள்ளன.

    கூடிக் களிக்கும் கொழுநன் மார்பு

    தலைவி தன்னைப் பற்றி இழிவாகப் பேசக் கேட்ட பரத்தை அவளது தலைவனின் நிலையைக் கூறி நகையாடுகின்றாள். அதனை குறுந்தொகைப் பாடல் பதிவு செய்கின்றது.

    கூந்தல் ஆம்பன் முழுநெறி யடைச்சிப்
    பெரும்புனல்
    வந்த இருந்துறை விரும்பி
    …………         …………..          …………..      ………….
    முனையான் பெருநிரை போலக்
    கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே”

    பரத்தைத் தலைவியின் இயலாமையைக் கூறி அவளது தலைவனைத் தம்மிடமிருந்து காக்கும் தன்மை அவளுக்கு இல்லை. எனவே அவள் என்னைப் புறங்கூற எந்தத் தகுதியும் இல்லை என்று எள்ளுவது போன்று இப்பாடல் அமைந்துள்ளது.

    கூந்தலில் ஆம்பலின் முழுநெறிப்புள்ள அறுப்பினைச் செருகிக் கொண்டு மிகுந்த நீர்வளம் பொருந்திய நீர்த்துறையை விரும்பி நானும் தலைவனும் நீர் விளையாட்டைச் செய்வதற்காக செல்வோம். தலைவி தான் அவ்விளையாட்டை அஞ்சுதலைக் கொண்டாளாயின், கொடிய போரில் தூசிப்படை அழியும்படி, மேலேறிச் செல்லும் பல வேல்களை உடைய ‘எழினி’ என்பவனின் போர்க்களத்திடத்தில் விளங்கும் பெரிய மன்னர்திரளைப் போல, அவளது சுற்றத்தாரோடு சேர்ந்து எம்மோடு கூடிக்களிக்கும் அவளது கொழுநன் மார்பைக் காப்பாளாக! எனக் கூறுகின்றாள்.

    தொல்காப்பியக் கைகோளில் பரத்தமையானது களவொழுக்கம் ஒழுகாது, திருமணம் செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் சங்க இலக்கிய மருதத்திணையில் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்து பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்கிறான். இத்தகு பரத்தமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்கிறாள் தலைவி. மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை தலைவியின் ஊடலுக்குத் தலைவனின் பரத்தமை ஒழுக்கமே காரணம் என்பதை இதன் மூலம் அறியலாம். இவ்வாறு மருதத்திணைப் பாடல்களில் பரத்தமை ஒழுக்கம் பெரிதும் குறிக்கப்படுகிறது.

    *****

    துணை நூல்கள்

    தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை
    தொல்காப்பியம் – தமிழண்ணல் உரை
    நற்றிணை    – நியூ செஞ்சுரி வெளியீடு
    குறுந்தொகை  – நியூ செஞ்சுரி வெளியீடு
    ஐங்குறுநூறு  – நியூ செஞ்சுரி வெளியீடு
    அகநானூறு  – நியூ செஞ்சுரி வெளியீடு
    கலித்தொகை – நியூ செஞ்சுரி வெளியீடு
    சங்க காலப் பெண்மை – பதிப்பு முனைவர் அன்னிதாமசு
    தொல்காப்பியர் காலத் தமிழர் – புலவர் குழந்தை
    சங்கத் தமிழர் வாழ்வியல் – மு.சண்முகம் பிள்ளை,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
    சங்க மரபு – தமிழண்ணல்

    *****

    கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோயம்புத்தூர்-46.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (104)

    நிர்மலா ராகவன்

     

    நான் தனிப்பிறவி. நீயும்தான்!

    அன்பாக வளர்க்கப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர்கிறார்கள். பிறரிடம் அன்பாக அவர்களால் நடக்க முடிகிறது. பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடந்தால் நற்பெயர் எடுக்க முடியும் என்று அவர்களுக்குத் தோன்றிப்போகிறது.

    சற்றே பெரியவர்களானதும், பிறரது எதிர்பார்ப்பின்படி நடந்தால்தான் அவர்களுக்கும் நம்மைப் பிடிக்கும் என்று அதன்படி நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், பலர் பாராட்டினாலும், மனத்துள் ஒரு வெறுமை. ஏனென்றால், அவர்கள் தமக்குப் பிடித்ததுபோல் நடக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன உகந்தது என்றே அறியாது நடக்கிறார்கள்.

    `நீ என்ன, இப்படி இருக்கிறாயே!’ என்று வித்தியாசமாக இருப்பவரைப் பிறர் கேலி செய்வார்கள். அவர்களை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி. ஏன் இப்படி இருக்கிறோம் என்று அனைவருக்கும் விளக்க வேண்டுவதோ, `ஏனோ இப்படி ஆகிவிட்டேன்!’ என்று வருந்துவதோ வேண்டாத காரியம்.

    பெரும்பாலும் இளைய வயதினர்தாம் பிறர் ஏற்க மாட்டார்களோ என்ற அச்சத்தால் கண்மூடித்தனமாக மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்.

    தமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, எங்காவது கிரிக்கெட் பந்தயம் நடக்கும்போது, அதைப்பற்றி விவாதிப்பார்கள் கல்லூரி மாணவிகள். எதுவும் புரியாவிட்டாலும், அல்லது ஆர்வம் இல்லாவிட்டாலும் கலந்துகொள்ள வேண்டும். வகுப்பிற்கு மட்டம் போட்டாவது வானொலியில் வர்ணனையை ரசித்துக் கேட்பார்கள்.

    பிரபல நடிகர் அஜித் ஒரு படம் முழுவதிலும் வேஷ்டி அணிந்து நடிக்க, பண்டிகைக்கு எல்லா இளைஞர்களும் வேஷ்டி வாங்கினராம்!

    `புகழ்பெற்ற திரைப்படத்தில் கதாநாயகி இந்தமாதிரி புடவையைத்தான் அணிந்திருந்தாள்!’ என்ற விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் புடவைகளுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது.

    பிறரைப் பின்பற்றி நடந்தால் தம்மை யாரும் பழிக்க மாட்டார்கள், சங்கடம் எதுவும் வராது என்று அதிகம் யோசியாது எதையும் செய்பவர்கள்தாம் காப்பி அடிக்கிறார்கள். பிரபலமானவர்களின் உடையையோ, தலையலங்காரத்தையோ பின்பற்றினாற்போல், நாம் பிறர்போல் சிறந்துவிட முடியுமா?

    `புடவை அழகாக இருக்கிறதே!’ என்று வாங்குவது வேறு. `எல்லாரிடமும் இருக்கிறது. நான் மட்டும் வாங்கக்கூடாதா?’ என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமான போட்டி.

    இதைத் தவிர்க்க, `பிறர் கூறுவது எதையும் ஏற்காது எதிர்த்தால்தான் வெற்றி பெறலாமா?’ என்று யோசனை போனாலும் ஆபத்துதான். நம் குணத்திற்கும் திறமைகளுக்கும் எது உகந்தது என்று புரிந்து நம்பகமான பிறரது அறிவுரையை ஏற்பதே சிறந்தது.

    நம்மை எதற்காகப் பழிக்கிறார்களோ, அதுவே வெற்றிக்கு வித்தாகலாம்.

    கதை

    என் பதின்ம வயதில், என் பாட்டி என்னை `நோணாவட்டம்’ என்று பழிப்பார். இயற்கையாகவே, எதிலும் என்ன குறை என்று உடனே என் யோசனை போய்விடும். அதை எப்படித் தீர்ப்பது என்று கேட்டால் அதற்கும் பதில் தயாராக இருக்கும். (இக்குணம் ஆசிரியர்களுக்கும் விமரிசகர்களுக்கும்தான் ஏற்றது).

    என் மாமி ஒருத்தர் மிகச் சுமாராகச் சமைப்பார். விடுமுறை காலங்களில், நாத்தனார்களும் மைத்துனர்களும் கேலி செய்யப்போக, வெட்கமும் பயமும் எழுந்தன. ஒவ்வொரு நாளும் ரகசியமாக என்னைச் சமையலறைக்குக் கூப்பிட்டு அனுப்புவார்.

    நான் ஒவ்வொன்றையும் ருசி பார்த்து, `சாம்பாரில உப்பு அதிகம்! ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, கொஞ்சம் கொதிக்க விடுங்கள்,’ `வெண்டைக்காய் (பயத்தங்காய்) பொரியலில் எண்ணை அதிகம். கொஞ்சம் ஓட்ஸ் போட்டு வதக்குங்கள்,’ என்று பலவாறாகக் கூறுவேன்.

    பிற்காலத்தில், இந்திய பாரம்பரிய இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விமரிசகராக இருக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

    `நான் எழுதுவது blunt ஆக இருக்கும்,’ என்று மறுத்தேன், சிரிப்புடன்.

    `இல்லை. நீ honest!” என்று வற்புறுத்தினாள் கலைப்பகுதியின் ஆசிரியை.

    குறைகாணும் தன்மைகூட சில சமயங்களில் உபயோகமாகிவிடுகிறது. பிறர் ரசிக்கிறார்களே என்று எல்லாரையும்போல பாராட்டிவைத்தால் கலைஞர்கள் எப்படி முன்னேறுவார்கள்?

    காற்றின் எதிர்த்திசையில் பறக்கும் பட்டம்தான் உயரத்திற்குச் செல்ல முடிகிறது. எதிர்ப்புகள் வரலாம். அவைகளைக் கண்டு மனம் தளராது இருப்பதுதான் வெற்றிக்கு வழி.

    ஒரு சிறுவனுக்குச் சற்று விவரம் புரிந்ததும், பெற்றோர் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்காது, தன் எண்ணம்போல் செய்ய முயற்சிக்கும்போது தடை விதிக்காது, அல்லது கேலி செய்யாது இருந்தால் தன் திறமையில் அவனுக்கு நம்பிக்கை எழும். அவன் செய்ததில் வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ, சுயமாக யோசிக்கும் திறனைப் பெறுகிறான். குழப்பம் வரும்போது, எங்கே தவறு நேர்ந்தது என்று அவனுடன் அலசலாமே!

    மாறாக, `நீ இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருக்கக்கூடாது!’ என்று ஒவ்வொருவர் கூறுவதையும் கேட்டு நடந்தால், சுயபுத்தியை உபயோகிக்கும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. பிறர் ஒப்பாததால் நாம் செய்வது தவறு என்றாகிவிடாது.

    பிறருக்கு நம்மைப் பிடிக்கலாம். ஆனால் நமக்கே நம்மைப் பிடிக்காமல் போகும் அவல நிலை வரலாமா?

    ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போதே அது மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு வித்தாகிவிடும்.

    ஒரு வெற்றி அடைந்தவுடனேயே அடுத்து என்ன சாதிக்கலாம் என்று வெறி பிடித்து அலையாது, அவ்வப்போது சிறிது ஓய்வு பெறுவது அவசியம். எப்படிச் செய்தால் வெற்றி அடைய முடிகிறது, ஏன் சுணக்கம் ஏற்படுகிறது என்று அவ்வப்போது அலசுவது நன்று.

    தவறு இழைத்துவிட்டோமா? அதனால் என்ன! நாம் என்ன, கடவுளா, தவறே செய்யாதிருக்க!

    `இதை எப்படி செய்து முடிக்கப்போகிறோம்!’ என்று மலைக்காது, ஒரு காரியத்தில் ஈடுபடுவதே உற்சாகத்தை அளிப்பதாக இருந்தால் என்றாவது வெற்றி கிட்டும்.

    வாழ்வில் மகிழ்ச்சி இல்லாது போவதற்கு போட்டி, பொறாமை, தன்னிரக்கம் ஆகியவை முக்கிய காரணங்கள்.

    `எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’

    `கலிகாலத்திலே நல்லவர்கள்தான் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’

    என்று பலவாறாகப் புலம்பிக்கொண்டு, `என்னால் இப்படி இருக்க முடியவில்லை, அவளைப்போல் எல்லாம் செய்ய முடியவில்லை!’ என்று பிறருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, தன்னைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

    ஒருவரிடம் திறமை இருந்தாலும், பிறர் பாராட்டவில்லையே என்ற தாபம் இருந்தால் இந்த நிலைமைதான் வரும்.

    குறைகளுடன் தம்மைத்தாமே ஏற்றுக்கொள்பவர்களால்தான் ஆரோக்கியமான உறவுகளை அடைய முடிகிறது. இவர்களை எளிதில் வீழ்த்திவிட முடியாது. (ஆனால், குறைகளைப் பிறரிடம் சொல்லி, அவர்கள் நம்மை இளக்காரமாக நினைக்கச் செய்ய வேண்டாமே!)

    Papa, he loves Mama.

    Mama, she loves Papa.

    என்றிருக்கும் ஓர் ஆங்கிலப்பாடலை, என் குழந்தை மூன்று வயதில் இப்படிப் பாடினான்:

    Papa, he loves Sashi.

    Mama, she loves Sashi!

    அகம்பாவமா?

    இல்லை. `என்னை எனக்குப் பிடிக்கிறது , மற்றவர்களுக்கும் பிடிக்கிறது,’ என்ற எண்ணம் இருந்தால்தான் மகிழ்ச்சி நிலைக்கும்.

    நாம் நம்முடன்தான் எப்போதும் இருக்கிறோம். அந்த அருகாமை மகிழ்வூட்டுவதாக இருக்க வேண்டாமா?

    Share
  • திருவுடை மன்னரும் தீராத நோய்களும்!

    -மேகலா இராமமூர்த்தி

    உலகைப் படைத்துக் காப்பவன் இறைவன் என்றொரு நம்பிக்கை உலக மக்களில் பெரும்பான்மையோருக்கு உண்டு. விண்ணுலகவாசியாய்க் கருதப்படும் கடவுளைக் கண்ணால் கண்டவர் உண்டா என்பது இன்றுவரை விவாதத்துக்குரிய பொருளாகவே இருந்துவருகின்றது. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று இதற்கு விடைசொல்லிச் சென்றுவிட்டார் தமிழ்ச் சித்தரான திருமூலர்.

    விண்ணுலகக் கடவுள் காட்சிக்கு எட்டாதவராக ஆகிவிட்டமையால், மண்ணுலக மாந்தரின் காட்சிக்குத் தென்படுபவராகவும் அவர்தம் குறைகளைக் களைபவராகவும் கடவுள் ஒருவர் தேவைப்பட்டார். ஆகலின் திருவும் உருவும் வலிவும் பொலிவும் மிக்க ஆடவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அரியணையில் அரசனாய் அமர்த்தி அழகுபார்த்தனர் மக்கள். ’திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்று அவனைக் கண்டு பரவசமடைந்தனர்.

    இறை என்ற பெயர் அற்றை நாளில் இறைவனுக்கு மட்டுமல்லாது அரசர்களுக்கும் பொதுவான பெயராக விளங்கிவந்தது. அரசர்தம் மாட்சியை விளக்கவந்த வள்ளுவர், ’இறைமாட்சி’ என்றோர் அதிகாரம் படைத்திருப்பது அக்கருத்துக்கு அரண் சேர்க்கின்றது. தன் கருத்தை மேலும் தெளிவுபடுத்த விரும்பிய அவர்,

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்
    என்று விளம்பினார்.

    கோயில் என்றசொல்கூட கோவாகிய அரசனின் இல்லத்தை – அரண்மனையைக் குறிக்கும் சொல்லாகவே அன்று பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.

    ”…வாயில் வந்து கோயில் காட்டக் 
    கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி…” (சிலப்: வழக்குரை காதை) என்ற சிலப்பதிகார வரிகள் இதனை உறுதிசெய்கின்றன.

    பாடப்படும் ஆண்மகனின்/அரசனின் கொடை, வீரம், வென்றிச் சிறப்பு முதலியவற்றைப் போற்றும் ’பாடாண்’ எனும் தமிழிலக்கணப் புறத்திணையின் துறைகளில் ஒன்றாகக் கருதப்படுவது பூவைநிலை. பூவை என்பது காயா மரத்தைக் குறிக்கும் சொல்லாகும். காயாம்பூ வண்ணனாகிய திருமாலை ஒப்புமைகாட்டி அப்பூவைப் புகழ்தல் பூவைநிலை ஆகும். இத்துறை அரசனைத் திருமாலோடு ஒப்பிட்டு போற்றுகின்ற துறையாக மாற்றமும் வளர்ச்சியும் பெற்றதற்குச் சங்கப்பாடல்கள் பல சான்றாய் நிற்கின்றன.

    கண்கண்ட தெய்வமாய்த் திகழும் அரசனைத் தரிசித்தால் தம் தீராத நோய்களெல்லாம் தீரும் என்றொரு நம்பிக்கையும் அன்றைய மக்களிடம் இருந்திருக்கின்றது. சங்கப் புதையலான புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடலொன்று இதற்கு ஆதாரமாய் விளங்குகின்றது.

    பொறையர் குடியில் பிறந்து கொங்குநாட்டுக் கருவூரில் முடிசூட்டிகொண்ட அரசன் ஒருவன் இருந்தான்; ஒளிமிகு வாளேந்தித் தன் வெந்திறலால் பகைவரின் செருக்கழிப்பதிலும், தண்ணளியால் குடிகளைக் காத்தோம்புவதிலும் வல்லவனான அவன், ’கரூவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரலிரும்பொறை’ எனும் பெயரால் அழைக்கப்பட்டான்.

    மெய்ப்பொலிவு மிக்கவனாக விளங்கினான் அவன். அவனுடைய எழில்வடிவைக் கண்டோர் தம் உடற்பிணிகள் நீங்கப்பெறுவர் என்ற எண்ணம் அவன் குடிகளிடம் இருந்தது. அதனைச் சான்றோர் வாயிலாய் அறிந்தார் நரிவெரூஉத்தலையார் எனும் நல்லிசைப் புலவர். யாதுகாரணத்தாலோ அவருடைய தலை, நரி அஞ்சுதற்குரிய தலையாக இருந்திருக்கின்றது. (அப்படியாயின் அவர்தலை நாயின் தலைபோல் இருந்திருக்கவேண்டும்; அது எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான விளக்கங்கள் ஏதும் சங்கப்பாடல்களில் கிட்டவில்லை.) ஏதேனும் நோய் காரணமாகத் தலையின் அமைப்பு மாறிப்போனதோ என்னவோ நாமறியோம்.

    இரும்பொறையைக் கண்டால் தன் விகார வடிவம் விடைபோற்றுப் போகும் என்றறிந்த அவர், அந்நன்னாளை ஆவலோடு எதிர்நோக்கியவராய்க் கருவூருக்கு விரைந்துவந்தார். பேரெழில் வாய்ந்த சேரனின் ஒளிமிகு திருமுக மண்டலத்தைக் கண்டதும், அவரின் கோரவடிவம் மாறி, இயல்பான தோற்றத்தைப் பெற்றாராம்! அதனால் மட்டிலா மகிழ்ச்சியடைந்த புலவர் பெருந்தகை, அரசனை அன்போடும் நன்றிப்பெருக்கோடும் வணங்கினார்; கண்ணீர்மல்க வாழ்த்தினார்.

    பின்னர், மன்னனுக்குத் தான் கூறவிழைந்த நன்மொழிகளை ஓர் இன்கவியில் எடுத்தியம்பலானார்.

    எருமை யன்ன கருங்கல் லிடைதோறு
    ஆனிற்
    பரக்கும் யானைய முன்பின்
    கானக
    நாடனை நீயோ பெரும
    நீயோர்
    ஆகலின் நின்னொன்று மொழிவல்
    அருளும்
    அன்பும் நீக்கி நீங்கா
    நிரயங்
    கொள்பவரோடு ஒன்றாது காவல்
    குழவி
    கொள்பவரின் ஓம்புமதி
    அளிதோ
    தானேயது பெறலருங் குரைத்தே. (புறம்: 5 – நரிவெரூஉத்தலையார்)

    ”பெரும! எருமைபோலும் வடிவையுடைய  கரிய கற்பொருந்திய  இடந்தோறும் பசுக்கூட்டம்போலப் பரக்கும் யானைகளைக் கொண்ட, வலிமைமிகு காட்டிற்குள்ளே அமைந்த அரணுடைய நாட்டையுடையவனே! இங்ஙனம் பகைவரால் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்செல்வத்தை யுடையவன் நீ ஆதலின் உனக்கொன்று சொல்லுவேன் கேட்பாயாக!

    அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்செய்து, நீங்காத நரகத்தைத் தமக்கு  இடமாகக் கொள்பவரோடு பொருந்தாது, நின்னால்  காக்கப்படும் தேயத்தைக் குழவியை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக!  அளிக்கத்தக்கதொன்றும், பெறுதற்கரியதுமானது அக்காவல்.” என்று பொருள்செறி அறிவுரை பகர்ந்தார் புலவர்பெருமான்.

    ”குழவியைப்போல் நாட்டை ஓம்பு” என்றமையால் இது செவியறிவுறூஉவும், ”அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரோடு ஒன்றாதே” என்றமையான் இது பொருண்மொழிக்  காஞ்சியுமாயிற்று.

    “நிரயங்  கொள்பவரோ   டொன்றாது   காவலை 
    யோம்பென  வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி  மன்னற்கு உறுதி பயத்தலின் இது வாயுறை வாழ்த்தாயிற்று” என்பர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.

    அரசனைத் தரிசித்தால் நோய்களும், சங்கடங்களும் தீரும் எனும் நம்பிக்கை நம்மவரிடம் இருந்ததுபோலவே மேனாட்டாரிடமும் இருந்திருக்கின்றது என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகின்றது.

    காசநோய் காரணமாகக் கழுத்திலுள்ள நிணநீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் (Tuberculous cervical lymphadenitis better known as scrofula or the King’s Evil), அரசர்களால் குணமடையும் எனும் நம்பிக்கை மேற்குலக நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் அன்று இருந்திருக்கின்றது. 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சிசெய்த ஆறாம் ஹென்றி (Henry VI – 1485–1509) ஒரு தங்க நாணயத்தை (touch piece), நோயாளியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வைத்துத் தடவுவது (royal touch), அந்நாணயத்தை நோயாளியின் கழுத்தில் கட்டித் தொங்கவிடுவது முதலியவற்றைச் செய்து நோயாளிகளைக் குணப்படுத்தினாராம். இவரைப் போலவே இவருக்கு முன்னும் பின்னும் ஆட்சிசெய்த பல அரசர்கள் ஈதொத்த தொடுவழி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

    ஓராண்டுக்கு எத்தனை நோயாளிகளை இவ்வாறு தொடுவது, எந்தச் சமயங்களில் தொடுவது என்பது போன்ற வரையறைகளும் பின்பற்றப்பட்டிருக்கின்றன என்பது நமக்கு மேலும் வியப்பைக் கூட்டுகின்றது.

    கிருமித்தொற்றால் ஏற்படும் நோய்கள் அரசன் ஒருவன் தொட்டால் குணமாகிவிடுமா? இதற்கெல்லாம் மருத்துவரை அல்லவா நாடவேண்டும்? என்று பகுத்தறிவின்பாற்பட்டுச் சிந்தித்து வினா எழுப்பினால் விடை பகர்வது கடினம். உளவியல் பார்வையில் இதனை அணுகுவோமேயானால்… நிறைந்த நம்பிக்கையோடும், நேரிய எண்ணத்தோடும் (Positive thinking) நாம் செய்கின்ற பல செயல்கள் வாழ்வில் வெற்றியடைவது கண்கூடு. அந்த அடிப்படையில், அரசனைத் தரிசித்தால் – அவன் புனிதக் கரங்கள் நம் நோயுடலைத் தொட்டால் நோய்கள் அகன்றுவிடும் எனும் மக்களின் திடமான நம்பிக்கைகூட அவர்களின் நோய்க்கு நல்லதொரு சிகிச்சையாக அமைந்திருக்கக்கூடும்.

    எது எப்படியாயினும், அரசன் என்னும் மனிதனைப் புனிதனாகவும், ஏன்… வழிபடு கடவுளாகவுமே வையத்து மாந்தர் மதித்தனர்- துதித்தனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

     

     

    Share
  • சிற்றிலக்கியச் சமுதாய வாழ்வியல் மதிப்புகள்

    -முனைவர் நா.கவிதா

    இல்வாழ்க்கையில் தனிமனித நிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய, ஆற் வேண்டிய பணிகள் போற்றத்தகுந்த பண்புகள் எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற வகைப்படுத்தினால் அவை வாழ்வியல் மதிப்புகள் ஆகும். இத்தகைய சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சிற்றிலக்கியக் காலகட்டத்தில் எத்தன்மையுடன் திகழ்ந்தன என்பனவற்றை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

    சமுதாய வாழ்வியல் மதிப்புகள் விளக்கம்

    உலகில் தோன்றும் ஒவ்வொரு மொழி இலக்கியமும் வாழ்க்கை மதிப்புகளை எடுத்துரைப்பதை முதன்மை நோக்கமாகக் கருதுகின்றது.

    வாழ்வியல் என்பதற்கு விளக்கம் தருகையில், “வாழ்வியல் என்பதில் ‘வாழ்வு’ என்பதன் பொருள் முறைமை, வாழ்தல் என்பதாகும். ‘இயல்’ என்பதற்கு ‘ஒழுங்கு’ என்று பொருள். வாழ்வு + இயல் = வாழ்வியல். முறையான ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழும் வாழ்க்கை முறை வாழ்வியல் ஆகும்.”1 என்று கூறுவர்.

    மேலும் சமுதாய வாழ்வியல் மதிப்புகளே வாழ்வியல் நெறிகளாக மலர்கின்றன என்று கூறுவதை, “முறையான சமுதாய வாழ்க்கைக்குப் பயன்படுகின்ற பண்புகளே சமுதாய மதிப்புகள் (Social Values) எனப்படுகின்றன. இவையே சமுதாய ஒழுங்கு முறையினை உருவாக்கும் வாழ்வியல் நெறிகளாகின்றன; சமுதாயத்தின் குறிக்கோளை வகுத்துத் தந்து, மக்கள் நடத்தைக்கு வழிகாட்டுகன்றன.”2 என்பது சமூகவியலார் கருத்து.

    உடன்பாட்டு, எதிர்மறை வாழ்வியற் மதிப்புகள்

    சமுதாயவியல் அணுகுமுறையில் அதிகக் கவனத்தைப் பெறுவது சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சார்ந்தது ஆகும். இது “சமுதாய உறவுகளின் பிணைப்பிலே, சமுதாய நடப்பின் காரணமாகத் தோன்றுகிற சமுதாய உணர்வு வடிவங்களிலே ஒன்று”3 என தி.சு.நடராஜன் வரையறை செய்கின்றார். இவர் சமுதாய வாழ்வியல் மதிப்புகளைப் பின்வருமாறு பகுத்துக் கூறுகின்றார்.

    சமுதாய மதிப்புகள் (Social Values)

    உடன்பாட்டு மதிப்புகள்        எதிர்மறை மதிப்புகள்

    (Positive Values)                                (Nagative Values)

    காதல், கற்பு, தாய்மை, பாசம், புகழ்,          பொய்ம்மை, தீமை, பாவம், பக்தி, கொடை போன்றவை.                    குடிப்பழக்கம், லஞ்சம், பித்தலாட்டம்
    போன்றவை.”4

    சிற்றிலக்கிய காலச் சமுதாயத்திலும் இவ்விருவகை மதிப்புகளும் வழக்கில் இருந்தன என்பதனைச் சிற்றிலக்கிய கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களை ஆராய்வதால் அறியமுடிகிறது. இவ்விரு வகையானவற்றுள் உடன்பாட்டு மதிப்புகள் போற்றப்பட வேண்டியவை, எதிர்மறை மதிப்புகள் மாற்றப்பட வேண்டியன.

    உடன்பாட்டு மதிப்புகள் என்ற பிரிவினில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம், தானம் வழங்கும் நெறி, நிலையாமை நெறியை அறிவதால் கிடைக்கலாகும் புகழ், பக்தியுணர்வு ஆகியவற்றை அடக்கலாம்.

    எதிர்மறை மதிப்புகள் என்ற பிரிவினில் கள் குடிக்கும் வழக்கம், பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வசிய மருந்திடும் முறை ஆகியவற்றை அடக்கலாம்.

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம்

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உலகிற்குப் பறைசாற்றியது தமிழகம் எனலாம். ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாகக் கற்பித்தார் திருவள்ளுவர். அவர்தம் பார்வையில் கல்விக்கு இரண்டாம் இடம்; ஒழுக்கத்திற்கே முதலிடம். ஆக ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையே தவம். ஒழுக்கம்கெட்டு வாழும் வாழ்க்கையே சவத்திற்கு ஒப்பானது என்று கூறலாம். இவ்விடத்தில் கலாசாரம் குறித்துக் கூறும் இலக்கணம் குறிப்பிடத்தக்கது.

    “கலாசாரம் என்பது இடங்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், சுய அடையாளங்கள், சமூக அடையாளங்கள், மொழி, இலக்கியம், கலை மற்றவர்களுடன் பழகும் முறைகள், குடும்ப அமைப்புகள், கட்டுப்பாடுகள் என வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும்.”5 என்று கூறுவர். இத்தகைய பண்பாடு சமூகத்தின் அடையாளமாகும். சிற்றிலக்கிய காலச் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் ஏற்புடைய ஒன்று என்றாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதுவே வழக்கில் இருந்தது.

    திருக்குற்றாலக் குறவஞ்சியில் குறவர்களின் வாயிலாக அவர்களின் குலமரபு குறித்த கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம். குறவர்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழும் மக்கள் என்பதை,

    “உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள்” (திருக்குற்றாலக் குறவஞ்சி, செ.எ., 7)

    என்ற அடிகள் வாயிலாக அறியலாம். இதிலிருந்து குறவர் குலத்தில் ஒருவரை வாழ்க்கைத் துணை உறவாகப் பிடித்துக் கொண்டனர் என்றால் எந்நாளும் அந்த உறவை கைவிடாத ஒழுக்கம் உண்டு என்பதை அறிய முடிகின்றது.

    ஆனால் இக் கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் ஆட்சி செய்த மன்னர்தம் கலாசாரம் மக்களுக்கும் பரவியது என்று கூறலாம். அதனில் ஒன்றே பலதார மணம்.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் பின்பற்றப்பட்டு வாழ்ந்த தமிழ் மக்களிடையே மன்னனைப்போன்று பலதார மணம் பின்பற்றப்பட்டது. இதனைப் பின்வரும் கூற்றினால் அறியலாம்.

          “மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி” என்பதற்கு ஒப்ப நாயக்கர் கால ஆண்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர். அத்துடன் உயர்வர்க்கத்தவரிடையே பலதார மணம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.”6 என்ற கூற்று கலாசார மாற்றத்தை இயம்புகிறது.

    தானம் வழங்கும் நெறி

    தானம் வழங்குவதின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்காத இலக்கியங்களே என்று கூறலாம். அத்தகைய தானத்தை எவ்வாறு, எத்தகைய நெறியுடன் வழங்க வேண்டும் என்பதை தைத்திரிய உபநிஷதம்,

    ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்! ச்ரியா தேயம்!
    ஹ்ரியா தேயம்!
    பியா தேயம்! ஸம்விலிதா தேசம்”
    7

    என்ற சுலோகத்தில் கூறுகின்றது. இதில், வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்தல் வேண்டும். அத்துடன் பணிவுடனும், தகுந்த அறிவுடனும் தானம் செய்வதே சாலச் சிறந்தது என்று தானம் குறித்துச் சுட்டப்பட்டுள்ளது. தானம் வழங்குதல் பற்றி முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டிநாடகம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. முக்கூடற்பள்ளுவில் பண்ணைக்காரனிடம் வடிவழகக் குடும்பன் தானமாக அளந்த நெல்லின் கணக்கு வகைகளை,

    “ஆடித் திரு நாளுக்கு நெல்
    ஆறாயிரங் கோட்டை நெட்டைத்
    தாடிப்பிச்சன் நேருஞ் சம்பா
    நெல் அளந்தேன்.
    வருபங் குனித் திருநாட்படி
    வகைக் காயிரம் கோட்டை சின்னத்
    திருவன் பயிரிடும் புள்ளியில்
    செந்தாழை நெல் அளந்தேன்.” (முக்கூடற்பள்ளு, செ.எ.,143)

    என்று குறிப்பிடுவதன் வாயிலாக அறியலாம். மேலும், ஆடித் திருநாளுக்குச் சம்பா நெல்லும், பங்குனித் திருநாளுக்கு செந்தாழை நெல்லும் அளந்து கொடுத்த வழக்கையே அறிய இயலுகின்றது.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வள்ளல் செய்தக்காதியின் கொடை வளத்தை,
    “சங்கநிதி பதுமநிதி போல் நிதிவாரிச்
    சடையாமலிரு கையுங் கொண்ட கொடுக்க
    தருப்போற் கொடை கொடுக்கும் வட்டாவுந்
    தாம்பூல முந்துகிலந் தாங்கி நிற்க
    விருப்பொடு முத்துரத்தினப் பரீட்சையர்
    மேன்மை யொடு தானிருக்க” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ.,190) என்ற பாடலடிகள் சுட்டுகின்றன.

    புகழ்பெறும் முறை

    சமயங்கள் எவ்வாறு தங்கள் கருத்தை வலியுறுத்தி இறைவனை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றனவோ, அதனைப் போன்றே அறஇலக்கியங்களும் நிலையாமைக் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களுக்கு நல்வாழ்க்கை நெறியைக் கற்றுத் தருகின்றன. இவ்வுலகில் காணப்படும் செல்வம், இளமை, யாக்கை போன்றவை நிலையற்றவை என்று எடுத்துரைக்காத அறஇலக்கியங்களே இல்லை. குமரேச சதகம் இவ்வுலகில் எவை எவை நிலையற்றன என்று வரையறுத்துள்ளது. ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் நிலையற்ற தன்மையுடையது. ஆகவே நிலையாமை நெறியினை உணர்ந்து வாழும் காலத்தே அறச் செயலைப் புரிதல் வேண்டும் என்று வழிகாட்டுகின்றது. இக்கருத்தினை,

    “மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
    மருவுகன வாகும் அன்றோ”
    (குமரேச சதகம், செ.எ.,73)

    என்ற வரிகளில் அறியலாம். இந்நெறியினை அறிந்து வாழ்வில் பின்பற்றினால் புகழ் என்ற உடன்பாட்டு மதிப்பு கிடைப்பது திண்ணம்.

    கள் குடிக்கும் பழக்கம்

    மக்கள் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் பழக்கங்கள் வழக்கங்களாக அமைந்துவிடுகின்றன என்று கூறுவர். அவ்வகையில் கள் குடிக்கும் வழக்கம் அன்றிலிருந்து இன்று வரையிலும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. என்றாலும் அது எதிர்மறை மதிப்பாகவே விளங்கியது. கள்ளுண்ணுதல் குறித்துப் பதிவு செய்யாத சங்க இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். தெளியுங் கள்ளையும், நறவையும் உண்ட நபர்களுடைய உலகியல் கெட்ட மயக்கம் போல காணப்படுகின்றது என்று கூறுவதை,

    “தேறுகள் நறவுண்டார் மயக்கம் போற் காமம்”      (கலித்தொகை – நெய்தல் கலி-30:2)

    என்ற அடியின் மூலம் காணலாம். இவ்வாறே கள் குடிக்கும் வழக்கத்தினை சிற்றிலக்கியங்களில் முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டி நாடகம், நந்தனார் சரித்திரம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. முக்கூடற்பள்ளில் இடம்பெறும் பள்ளர்கள் தங்களது உழைப்பினால் விளைந்த நெல்லினைக் கண்ட மனமகிழ்ச்சியால் மிகுதியான மதுவைக் குடித்து மயக்கத்துடன் காணப்படுகின்றனர். அத்துடன் பெண்களும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை,

    “வடிக்கும் மதுவைக் குடிக்கும் ஆசை
    மயக்கமும் பெருந் தியக்கமும்
    வரம்பிற் பாய்ந்து பரம்பிற் சாய்ந்த
    வாட்டமும் முகக் கோட்டமும்”
    (முக்கூடற்பள்ளு, செ.எ., 130)

    என்றும்,

    “பெண்பிள்ளை ஆண்டே – பொல்லாத்
    தண்ணீர் குடித்த வெறியால்
    முதற் சொன்னேன் ஆண்டே
    கால் மரம் வெட்டி விடுவிக்க
    வேணுங்கான் ஆண்டே” (முக்கூடற்பள்ளு, செ.எ., 107)

    என்றும் குறிப்பிடுவதிலிருந்து முறையே பள்ளர்கள் மது அருந்தி மயங்கிய விதத்தையும், ஆண்டையிடம் மூத்தபள்ளி கள்ளுண்ட வெறியிலே பள்ளனைக் காவலில் வைக்குமாறு கூறிவிட்டேன் விடுவிக்க வேணும் என்று முறையிடுவதையும் அறியலாம். மனமகிழ்வு மற்றும் துயர காலங்களில் கள் அருந்திய சூழலை மேற்கூறிய கருத்துக்களில் இருந்து அறியலாம்.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் இடம்பெறும் ஒடுங்காப்புலியை சுலூபுகான் கூடாரத்தில் உள்ள துலுக்கர்கள் வரவேற்று கஞ்சாத் தண்ணீர் தருகின்றனர். அதனை மறுக்காமல் இஸ்லாமிய மார்க்க நெறியைக்கூறிக் கொண்டே ஒடுங்காபுலி அருந்துகிறான். இதனை,

    கடைபடு கஞ்சாத் தண்ணீர் பாத்திரத்திற்
    கட்டளையிட்டார் பிரமன் கட்டளையன்றே
    யிடையூறு பேசாமல் மண்டிபோட
    டிருந்து பிசுமிச் சொல்லி யருந்தினேன்”                          (செய்திக்காதி நொண்டி நாடகம், செ.எ., 96) என்னும் வரிகளால் அறியலாம்.

    வசிய மருந்திடுதல்

    பொதுவாக மருந்து என்பது ஓர் உயிரினத்திற்கு ஏற்பட்ட நோயை அல்லது உடற்கேட்டைத் தீர்க்கவோ தணிக்கவோ பயன்படும் பொருள். ஆனால், வசிய மருந்து கொண்டு விலங்குகளையும் தன் வசியமாக்கலாம் என்பர். கருவூரார் எனும் சித்தர் இயற்றிய ‘கருவூரார் பலதிரட்டு’ என்ற நூலில் மிருகங்களை வசமாக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. வெண்குன்றி மூலிகை எடுத்து, ‘வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்’ என்ற மந்திரத்தை கூறி மூலிகை வேரை வாயில் போட்டு, எந்த மிருகத்தை அழைக்கிறோமா அது வசியமாகும் என்று கருவூரார் சுட்டுகிறார். இதனை,

    “பாரப்பா வேண்குன்றி மூலம் வாங்க
    நேரப்பா மந்திரத்தான் வம்வம் வசிவசி
    நிறைமிருக வசீகரி ஓமென்று போற்றி
    வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
    பேசவே மிருக வசீகரங் காணும்”8 

    என்ற பாடலடி சுட்டும். இவ்வாறு பண்டை காலம் தொட்டே தமிழர்களிடம் வசிய மருந்தினைப் பயன்படுத்தும் முறைமை இருந்ததை அறியலாம். எவ்வாறு விலங்குகளையும் வசியப்படுத்தலாம் என்று கூறினார்களோ அதனைப் போல மனிதர்களையும் வசியமிட்டு, தவறான ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்த பாங்கினை சிற்றிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, செய்தக்காதி நொண்டி நாடகம் போன்ற நூல்கள் வசிய மருந்திடும் முறையைப் பதிவு செய்துள்ளன. முக்கூடற்பள்ளில் மூத்தபள்ளி மாடு குத்திய வடிவழகக் குடும்பனைக் காண வரும்போது இவ்வாறு நடக்கக் காரணம் இளையபள்ளி உனக்கு வைத்த கீழான வசிய மருந்தே என்று கூறுகிறாள். இதனை,

    “……………………………………………………………………………
    …………………… மருதூர்ச்
    சக்களத்தி புலைமருந்தின் வெறியோ
    முதலேயீ தார் விளைத்த இடும்போ – தெரிந்திலேன்
    முக்கூடல் அழகர் பண்ணைக் குடும்பா”
    (முக்கூடற்பள்ளு, செ.எ., 118) எனக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

    திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசிய மருந்துடன், வேறுசில மருந்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிங்கியைத் தேடிவரும் சிங்கன், தன்னுடன் வந்திருக்கும் நூவனிடம் சிங்கி இருக்கும் இடத்தைக் கூறினால் உனக்கு வாடை மருந்துப் பொடி, அம்மியிலேறி ஊர்ந்து வரும் மரப்பாவையுங்கூடப் பின்தொடர்ந்து வரச் செய்யும் மாயப்பொடி, பிரிந்தவர் கூடியிருக்குமாறு செய்யும் மருந்து, பிரியாமல் கூடி இருப்பவரைக் கலைப்பதற்கான மருந்து, இத்துடன் பொட்டிட்டு வசீகரம் செய்யும் முறையையும் உனக்கு கற்றுத் தருவேன் என்று கூறுகிறான். இதனை,

    “வாடை மருந்துப் பொடியும் அம்மியூர்
    மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும்
    கூடியிருக்க மருந்தும் இருபொழுதும்
    …………………….
    கூடியிருப்பார்களைக் கலைக்க மருந்தும் …………
    திலக வசீகரம் செய்வேன் …………………
    சிங்கிதனைக் காட்டாய் ஐயே!”
    (திருக்குற்றாலக்குறவஞ்சி, செ.எ., 36) என்னும் பாடலால் அறியலாம்.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வேசியர்கள் பொருள் பறிப்பதற்காக ஒடுங்காப்புலிக்கு மருந்துப் பொருள்களைக் கலந்துதரும் செய்தி காணப்படுகின்றது. இன்றும் வெற்றிலை, பால், உணவு முதலியவற்றில் மருந்தைக் கலந்துதரும் வழக்கம் நாட்டுப்புறங்களில் காணப்படுகின்றது. இந்த நாட்டுப்புற வழக்கத்தின் தாக்கமே நொண்டி நாடகத்தில் வேசியர் மருந்திட்டனர் என்று கூறுவதற்கு வழி வகுத்தது எனலாம். வசிய மருந்தினை தரும் முறையுடன், அதனை உட்கொண்டதால் உண்டாகிய விளைவையும்,

    “கைவேர்வையும் மருந்தும் பல
    காரத்துடன் கூட்டிச் சேரத் தந்தாள்
    தந்தட ருத்தா லே மித்
    தள்ளாடித் தள்ளாடி யுள்ளாகிச்
    சிந்தை தடுமா றியொட்டுச்
    சிட்டு போல் நானகப் பட்டுக் கொண்டேன்” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ., 33)

    எனச் சுட்டுவதிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் பள்ளர்கள், குறவர்கள், திருடர்கள் வாழ்க்கையில் வசிய மருந்தினை பயன்படுத்தியுள்ளதை உணர இயலுகின்றது. சமுதாய வாழ்வியல் மதிப்புகளில் எதிர்மறை மதிப்பினைத் தருவதாக வசிய மருந்திடும் முறைமை திகழ்கின்றன. சிற்றிலக்கிய காலச் சமூகம் இம்முறையை வரவேற்கும் ஒரு பிரிவாக விளங்கியுள்ளமையையும் அறிய இயலுகின்றது.

    *****

    குறிப்புகள்

    1. நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி, ப.14.
    2. N.Shankar Rao, Sociogy, P.469.
    3. தி.சு.நடராசன், திறனாய்வுக்கலை, ப.63.
    4. மே.நூ., ப.55.
    5. http:// tawp.in தமிழ் விக்கிப்பீடியா, கலாச்சாரம், ப.2.
    6. Rajayyan, History of Tamilnadu, P.68.
    7. kadampavanpoonga.com, கடம்பவன பூங்கா, தானத்தில் சிறந்த தானம், ப.4.
    8. keetru.com, கருவூரார், கருவூரார் பாடல் திரட்டு, ப.9.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
    சிவகாசி

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே.. 17

    க. பாலசுப்பிரமணியன்

     

    வாழ்க்கைக்கு உணவு ஒரு வரப்பிரசாதம் !

    ஒரு மருத்துவர் ஒரு இளைஞனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அந்த இளைஞனுக்குச் சில நாட்களாக வயற்றில் வலி. மருத்துவருக்கு அவன் குடலில் புண் இருந்தது தெரிய வந்தது..  அங்கே உடன் இருந்த அந்த இளைஞனின்  தந்தை வருத்தத்தோடு மருத்துவரைப் பார்த்துக்கூறினார் “இது என்ன குடலில் புண் வர வயதா அய்யா? சின்ன வயது.. சாப்பிட்டால் கல்லும் கரையும் என்று சொல்லுவார்கள் ..”

    அந்த மருத்துவர் அந்த இளைஞனின் தந்தையை சற்றே உற்று நோக்கினார்.. சிரித்தார்… “உண்மை தாங்க ,, இது கல்லும் கரையர வயது.. ஆனால் நாமே நம்முடைய உடல் உறுப்புக்களை பழுதாக விட்டால் அங்கே கல் எப்படி கரையும்?… சாப்பாடு கூட ஜீரணிப்பதில்லை…”

    மருத்துவர் கேட்டார் “உங்க பையன் வேளாவேளைக்கு ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா?”

    “இல்லீங்க அவன் வேலை அப்படி…  நேரத்துக்குச் சாப்பாடு கிடையாது.  அடிக்கடி காப்பிதான்”

    “அவர் உட்கார்ந்து அமைதியாக சாப்பிடுகின்றாரா?”

    “இல்லீங்க… அவர் எப்பவும் அவசர அவசரமாக சாப்பிடுவதுதான் வழக்கம். எப்பவும் காலிலே கஞ்சியைக்கொட்டிக்கொண்ட மாதிரி..  உட்கார்ந்து சாப்பிடறதே கிடையாது.. நின்றுகொண்டு.. நடந்து கொண்டு. போன் பேசிக்கொண்டு … டிவி பார்த்துக்கொண்டு.. ”

    மருத்துவர் சிரித்தார்… “அவர் ருசித்து சாப்பிடுவாரா ?”

    அந்தப் பெரியவர் சிரித்தார்.. “இவங்க சாப்பிடறதெல்லாம் அள்ளித் தெளித்த கோலம் மாதிரிங்கா.. ஏதோ எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து உள்ள தள்ளறாங்க… அறுசுவைனா என்னான்னு கேளுங்க… ஒன்றும் தெரியாது…”

    “அய்யா.. நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை.. அளவாகச் சாப்பிடுவதில்லை… சுவைத்துச் சாப்பிடுவதில்லை.. அமர்ந்து அமைதியாகச் சாப்பிடுவதில்லை… சாப்பிடுவது என்பது ஒரு தினசரி வேலையா.. இல்லை .. வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு ஆதாரமா.. ..நாம் உடலுக்குத் தகுந்தபடி ஒத்துழைக்கவில்லையென்றால் உடல் நம்மோடு எப்படி ஒத்துழைக்கும்? குடல் நோய்கள் ஏன் வாராது?”

    இந்த நிலையை நாம் பல வீடுகளில் பார்க்கின்றோம். உணவை உடலுக்கு ஒரு சக்தி தரும் உள்ளீட்டாகக் கருதாமல் கருதாமல், உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கும் ஒரு மருந்தாகக் கருதாமல், வேகமான வாழ்க்கைக்கு ‘வேகமான உணவுகளைத்” தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

    ஒருமுறை ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் நகருக்குக் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு அன்பர் கேட்டார் “அன்பரே.. உங்களுக்கு நல்ல சாப்பாடு வேண்டுமா அல்லது விலையுயர்ந்த சாப்பாடு வேண்டுமா?’  நான் சற்றே திகைத்தேன்.. “விலையுயர்ந்த சாப்பாடு வேண்டுமென்றால் அருகில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் உண்ணலாம். நல்ல சாப்பாடு வேண்டுமென்றால் அருகில் உள்ள “தாபா”வில் சாப்பிடலாம். எப்படி வசதி?”

    என்னுடைய அமைதியைக் கண்ட அவர் இந்த ‘தாபா”வில் உடனே தயாரிக்கப்பட்ட சூடான உணவு கிடைக்கும். அங்கே என்ன கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியும” என்கிறார்.

    நாம் எங்கே சாப்பிடுகின்றோம் என்பது முக்கியமில்லை. எதை உண்கின்றோம் எப்படி உண்கின்றோம். எந்தச் சூழ்நிலையில் உண்கின்றோம் என்பது மிகவும்  அவசியமாகக் கருதப்படவேண்டிய ஒன்று. சாப்பிடுவதற்காகவே வாழ்கின்றவர்கள் ஒரு வகை என்றும் வாழ்க்கையில் உணவின் சீரிய நோக்கத்தை சற்றும் அறியாதவர்கள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். நல்ல வாழ்விற்கான உணவு முறைகளை கூறும் வல்லுநர்கள் அறிவுரை:

    1. சத்தான உணவு
    2. சீரான உணவு
    3. சரியான நேரத்தில் உணவு
    4. சுவையான உணவு
    5. சுத்தமான உணவு

    இதை அத்தனையும் விட உண்ணும் நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது? உங்களுக்கு உணவு அளிப்பவர்கள் மனநிலை எப்படி இருக்கின்றது? கூட அமர்ந்து உண்ணுபவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பற்றியெல்லாம் மனநல வல்லுநர்கள் ஆலோசனைகள் கூறுகின்றனர்.

    ஒரு விழாவின் முடிவில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் ஏறக்குறைய நூறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் சுவையாக இருந்தாலும் ஒருவரால் அத்தனையும் உண்ண முடியுமா? எது நமக்குத் தேவையோ எது நமக்கு விருப்பமோ, எது நமது உடலுக்கு உகந்தது அதைத் தானே உண்ணமுடியும் ? அதைத்தானே உண்ண வேண்டும் ?

    அன்பாகப் பரிமாறப்படும் உணவில் உள்ள ஆக்க சக்தி எவ்வளவு அதிகமானது? நமது குடும்பங்களில் சிறிதளவே உணவு தயாரிக்கப்பட்ட நிலையிலும் அதை அன்புடன் பகிரும்பொழுது வயிறோடு மனமும் நிறைந்ததைப் பார்த்திருக்கின்றோமே !

    வாழ்க்கையில் உணவு ஒரு பெரிய வரப்பிரசாதம்!  அதற்குரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொடுத்து வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாமே ! `

    சிந்திக்கலாமே !

    Share
  • குறளின் கதிர்களாய்…(212)

    செண்பக ஜெகதீசன்

     

    எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை                                                                    

    வீயாது பின்சென் றடும்.

           -திருக்குறள் -207(தீவினையச்சம்)

     

    புதுக் கவிதையில்…

     பகைபல பெற்றவர்க்கும்

    வழியுண்டு

    தப்பிப் பிழைக்க..

     விடவே விடாது

    தீவினைப் பகை மட்டும்,

    தொடர்ந்து அவனைப்

    பின்சென்று வருத்தும்…!

     

    குறும்பாவில்…

    எப்பகையுற்றாரும் தப்பிப் பிழைக்கலாம்,   

    தப்பமுடியாது தீவினைப் பகையுற்றோர்-    

    தொடர்ந்தவரைப் பின்சென்று ஒறுக்கும்…!

     

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மாந்தர் வாழ்வினிலே

         மலைபோல் பகைவரும் வகைவகையாய்,

    எண்ணிலாப் பகைகள் இவற்றிலெல்லாம்

         எப்படி யேனும் தப்பிடலாம்,

    திண்ணமாய்த் தீவினைப் பகைமட்டும்

         தப்பி யோட விட்டிடாது,

    கண்ணில் காணா இடம்செலினும்

         கூடச் சென்றே ஒறுத்திடுமே…!

     

    லிமரைக்கூ..

    பெற்றோரும் தப்பித்திடலாம் பகையில்பல வகை,  

    சற்றும் தப்பிக்கவிடாது எங்கே சென்றாலும்       

    தொடர்ந்து சென்றொறுக்கும் தீவினைப் பகை…!

     

    கிராமிய பாணியில்…

    பயமிருக்கணும் பயமிருக்கணும்

    தீவினைக்குப் பயமிருக்கணும்..

    தப்பிச்சிரலாம் தப்பிச்சிரலாம்

    எந்தப்பக வந்தாலும் தப்பிச்சிரலாம்,

    எப்புடியாவது தப்பிச்சிலாம்..

     

    ஆனா,

    தப்பியெங்க போனாலும்

    தப்பவுடாம தொடந்துபோயி

    தண்டிச்சிப்புடும்

    தீவினப்பக மட்டும்..

     

    அதால,

    பயமிருக்கணும் பயமிருக்கணும்

    தீவினைக்குப் பயமிருக்கணும்…!

    Share
  • உலகளவில் 6 வது இடத்தில் இந்தியப் பொருளாதாரம்!

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவர்கள் அந்த நாட்டின் அரசு அல்லது அந்நாட்டின் பெரும் முதலாளிகள். அமெரிக்காவைப் பொருத்தவரை அந்த நாட்டின் அரசும், பெரும் முதலாளிகளும் சேர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். சீனாவைப் பொருத்தவரை அந்த நாட்டின் அரசு எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள், வியாபார உத்திகள் போன்றவையே அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன. ஜப்பானைப் பொருத்தவரை பெரும் தொழில் அதிபர்களே அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் நமது இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் ஆறாவது நாடாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சோதனைகள் மிகுந்த இந்த காலகட்டத்தில் உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகும், ஜிஎஸ்டி போன்றவைகள் மூலம் பொருளாதாரத்தில் குழப்பமானதொரு சூழ்நிலை இருப்பினும் இன்று இந்தியா 6வது இடத்தில் இருப்பதற்கு தனி மனித பொருளாதார முன்னேற்றமே காரணம் என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்திய மக்கள் ஒரு புதிய பொருளாதார சித்தாந்தத்தையே உருவாக்கிக்கொண்டுள்ளனர். ஒவ்வொரு தனி மனிதனும் தான் உயர வேண்டும் என்ற தீவிரத்துடன் உழைப்பதால் இந்தியப் பொருளாதாரம் இந்த உச்சத்தை அடைந்துள்ளது என்றே கொள்ளமுடிகிறது. வங்கிகள் மூலமாக பல ஆயிரம் கோடிகளை இழந்திருக்கும் இந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் வங்கிகளையே ஊக்கப்படுத்துவதால் புதிதாக என்ன முன்னேற்றம் வந்துவிடப்போகிறது என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க இயலவில்லை. இந்த நிலையில் தனி மனித முன்னேற்றத்திற்குப் பொருளாதார உதவிகள் கிடைக்கும்பொருட்டு பொருளாதாரத்தில் இன்றைய 6 வது இடம் என்பது மாறி, நம் இந்தியா கட்டாயம் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தனி மனிதர்களுக்கு வங்கிகள் உதவி செய்தால் அவர்கள் திருப்பி செலுத்தமாட்டார்கள் என்பது ஒரு மாயைதான். கீழ்மட்டத்தில் இருப்பவர்களில் 90% பேர் சரியாக பணம் திருப்பி செலுத்திவிடுகின்றனர். மீதமுள்ள இந்த 10% மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தாது. பெரும் பிரச்சனை ஏற்படுவதெல்லாம் பெரும் பண முதலைகளால் மட்டும்தான். நம் இந்தியப் பொருளாதாரம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் தங்களுடைய கொள்கைகளிலிருந்து மாறுபட்டு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முன்வரவேண்டும். உயர் மதிப்பீடு நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகும் நம்முடைய வங்கிகளிலும் கள்ள நோட்டுகள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் வங்கியில் செலுத்தியது 480 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்ற அறிவிப்பிற்குக் காரணமாக கள்ள நோட்டு ஒழிப்பு என்ற செயல் திட்டம் பலனற்றுப்போனது மட்டுமின்றி, கள்ள நோட்டுப் புழக்கம் 480 சதவிகிதம் நடைபெற்றுள்ளது என்பதே இதற்கான ஆதாரம். 400 சதவிகிதம் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்கள் வங்கிகளில் நடந்துள்ளதாக அரசின் STR – suspicious transaction report, தெரிவிக்கிறது. மேலும் அதில், 4.73 இலட்சம் இந்த சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய FIU முறையற்ற பணப்பரிமாற்றங்கள் மூலமாக தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு இந்தப் பணப்பரிமாற்றங்கள் வங்கிகள் மூலமாகவும், மற்ற பொருளாதார நிறுவனங்கள் மூலமாகவும் சென்றைய ஆண்டுகளைவிட 2016-17இல் மட்டும் 3.22 இலட்சம் முறை நடந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது. சி.சி.ஆர் அறிகையின்படி(counterfeit currency report) 2015 -16 இல், உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்று அறிவித்த பின்பு 7.33 இலட்சமாக, இது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்ய அரசு அடுத்து எடுக்கப்போகிற நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share