பெருவை பார்த்தசாரதி

 

 

 

 

 

 

 

 

 

 

மரக்கிளையில் அற்புதமாய் கூடுகட்டும் பறவைக்கு

=====மகத்தான சக்தியதை மனதுக்குள் புகுத்தியதாரோ..?

இரவிலொளி உண்டாக்கும் மின்மினிப் பூச்சிக்கு

=====அடிவயிற்றின் முடிவில் ஒளிகொடுத்தது யாரோ..?

மரங்கொத்திப் பறவைதன் கூரலகால் உளிபோல

=====மரத்தைச் செதுக்கும் உத்தியைத் தந்ததுயாரோ..?

குரங்குபோலத் தாவும்நம் அலைபாயும் மனதினில்

=====கோடி கோடியறிவியல் கேள்வியெழும் அன்றாடம்.!

 

குறையில்லா வாழ்வுவாழ வியனுலகில் இருக்கிறது

=====கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற இயற்கை வளங்கள்,!

அறைகுறையா யிதையறிந்த அறிவிலியோ ரெலாம்

=====அழித்தொழித்து விடவே கங்கணம் கொண்டிடுவார்,!

கறைபடிந்த மனதுக்குள் அலைபாயும் நினைவினில்

=====கரைகின்ற கரியவெண்ண மெழாதிருக்க வேண்டும்.!

நிறையிருட்டை நீக்குகின்ற முழுமதிபோல…நம்மின்

=====நினைவும் எண்ணமும் நல்லதையே நாடவேண்டும்.!

 

அருங்கல்வி பயின்ற ஆசானும்தன் மாணவனுக்கு

=====அற்புதமாய்ப் புரிய வைக்குமாற்றல் பெறவேணும்.!

ஒருமித்த கருத்துகளும் உருவாகி வரும்வரையில்

=====இருவரும் ஒன்றாயிருந்தே செயல்படல் வேணும்.!

குருவொருவன் நல்வழிகாட்ட..சீடனுமதைத் தன்

=====கருத்தில் கொண்டால்..குவலயமதில் சாந்திதவழும்.!

பெரும்ஆய கலைகளும் கைகூட வேண்டுமெனில்

=====பெரிதாயலையும் மனதையடக்கும் திறன் வேணும்.!

 

============================================================

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 02nd April’2018

நன்றி படம் :: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *