கடவுள் மடியில் கிடக்கும் வரையில்
அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே
பன்னகத்தில்(பாம்பில்) யோகம் பயிலும் பரம்பொருளாம்
கன்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
– ம.பிரபாகரன்
யாப்பிலக்கண உலகில் முதன்முதலில் தளையால் அடிவகுத்துப் புதுமை செய்தது இலக்கண விளக்கமே என்பர் ஆய்வாளர்கள். ஆனால் தளையால் அடிவகுக்கும் முறை யாப்பருங்கலக்காரிகை காலத்திலேயோ அல்லது அதற்கு முன்னரோ இருந்துள்ளதோ என்று ஐயப்படும் ஒரு குறிப்பு வே.பால்ராஜின் யாப்பருங்கலக் காரிகை பதிப்பிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அதாவது யாப்பருங்கலக் காரிகை கூறும் அடி பற்றிய காரிகை உரைப்பகுதியில் வரும் அடி பற்றிய மேற்கோள் சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக அடிக்குறிப்பில் வே.பால்ராஜ், தளை அடிப்படையில் அடிவகுக்கும் முறையைக் கூறும் சூத்திரம் ஒன்றினை எடுத்துக்காட்டுகிறார். அச்சூத்திரத்தின் முதல் இரண்டு அடியும் இலக்கண விளக்கம் தளை வகை அடி பற்றிக் கூறும் சூத்திரத்தின் முதல் இரண்டடியாகும். இவ்விடத்தில் இலக்கணவிளக்கம் கூறும் தளைவகை அடி பற்றி கூறும் சூத்திரம், வே. பால்ராஜின் யாப்பருங்கலப் பதிப்பிலுள்ள தளை வகை அடி ஆகியவை குறித்துக் காணலாம்.
இலக்கண விளக்கம்:
பால்ராஜின் யாப்பருங்கலப்பதிப்பு:
” எண்சீ ரெழுசீ ரிவையாம் கழிநெடிற்
கொன்றிய வென்ப உணர்ந்திசி னோரே ”
என்றார் பிறரும்மெனக் கொள்க. (பக். 137:2007)
மேற்கண்ட சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக, பால்ராஜ் அடிக்குறிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரமாவது:
” குறளொரு பந்த மிருதளை சிந்தாம்
முத்தளை யளவடி நாற்றலை நெடிலடி
மிக்கன கழிநெடி லென்றி சினோரே ” – ங, ட, ந; ஞ, ண, த, ப, ம, ய, ர சுவடிகளில் இல்லை. (பக். 137 மேலது ).
மேலே இலக்கண விளக்கச்சூத்திரத்தையும் வே. பால்ராஜ் எடுத்துக்காட்டும் தளையடி பற்றிய அடிக்குறிப்பில் இடம்பெறும் சூத்திரத்தையும் கவனிக்க. அடிக்குறிப்புச் சூத்திரத்தின் முதல் இரண்டு அடிகள் அப்படியே இலக்கணவிளக்கத்தில் இடம்பெற்றிருப்பதை நோக்குக. வே.பால்ராஜ், அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் அதிக சுவடிகளில் வராததுகொண்டு அதைப் பாடமாகக் கொள்ளாது விட்டிருப்பார் போலும். உண்மையில் அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் யாப்பருங்கலக் காரிகைக்குரிய பாடமாக இருந்தால் அச்சூத்திரம் பழையது என்றும் இலக்கண விளக்கம் அச்சூத்திரத்தை எடுத்துப்பயன்படுத்திக்கொண்டது என்று கூறலாம். அத்துடன் அப்பழைய சூத்திரம், தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுக்கும் பழைய தமிழ் யாப்பு மரபோடு தொடர்புடையதாக இருப்பதால், இலக்கணவிளக்கம் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்து, தமிழ் யாப்புலகில் புதுமை செய்தது என்ற யாப்பாராய்ச்சியாளர்களின் முடிவை மாற்றி அமைக்கவும் செய்யும். ஆனால் வே.பால்ராஜ் தம் யாப்பருங்கலப்பதிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரம் பழையச்சூத்திரமாக இல்லாமலிருந்து இடைச்செருகலாக இருந்தால் இலக்கணவிளக்கமே முதன்முதலில் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்தது என்று கூறலாம். ஆனால் அப்படிக் கூறுவதற்கு இச்சூத்திரம் தடையாக உள்ளதால் இச்சூத்திரம் குறித்த மேலாய்வு தேவையாக உள்ளது. ஒரு வாதத்திற்கு யாப்பருங்கல காரிகை பதிப்பில், அடிக்குறிப்பில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரம் இடைச்செருகலாக இருக்கிறது என்று கொண்டால், இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது? என்ற நோக்கிலான விவாதத்தை நாம் தொடங்க வேண்டியிருக்கும். மேலே கண்ட சூத்திரத்தின் உண்மைநிலை பற்றித் தற்போது நம்மால் ஒன்றும் சொல்ல முடியாததால் நாம் இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது என்ற நோக்கில் விவாதத்தைத் தொடரலாம். வீரசோழிய உரை தளைக்கு எதிரிடையாக வலுவான வாதத்தை வைக்கிறது என்று முன்னர்ப் பார்த்தோம். இவ்விடத்தில் தளைக்கு எதிராகக் அது கூறும் இன்னொரு வாதத்தையும் பார்ப்பது இத்தொடர்பில் உதவியாக இருக்கும்.
‘ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின் ‘ (கு.2)
‘ கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில் ‘ (கு.1087)
‘ உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. ” (கு.1200)
என்று இத்தொடக்கத்தனவற்றைச் செவிப்புலனே கருவியாக ஆராய்ந்தபொழுது ஓசை இனியாவாய் இருக்கும்; அலகிட்டு ஓசையூட்டில் அவை ஓசையுண்ணா என்றால், அற்றன்று; இவற்றின்கண் அளபெடை உண்டாகவே ஓசையுண்ணுமெனில், அளபெடை இன்றியேயும் ஓசை இனியனவாக இருந்தன என்க. (பக்.461, தி.வே.கோலையர் பதிப்பு, வீரசோழியம்:2005).
இங்குப் பெருந்தேவனார் ” அலகிட்டு ஓசை ” என்று கூறுவது தளைகளால் கொள்ளும் ஓசையை ஆகும். அதைப் போல பேராசிரியரும் நச்சரும் தளை உறுப்பாகக் கொள்ளத்தக்கதன்று என்று தம் கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றனர். இவ்விடத்தில் பேராசிரியர் கருத்தைச் எடுத்துக்காட்டுவது விவாதத்தைப் நன்கு புரிந்து கொள்ள உதவி புரியும் (நச்சர் பேராசிரியரைப் பின்பற்றுவதால் அவர் கருத்து இங்குச் சுட்டிக்காட்டப்படவில்லை):
மற்று, யாத்த சீரேயாப்பென்றதென்னை? தளையென்பதோர் உறுப்புப் பிறர் வேண்டுபவாலெனின், இவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப; தளைத்தலிற் றலையாதலானும் வேறு பொருளென வேண்டாரென்பது; என்றார்க்கு, அசையின்றிச் சீருமில்லை; சீரின்றி அடியுமில்லையாம். பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும் போல அவை கொள்ளப்படும்; தளையென வேறொன்றின்மையிற் கொள்ளான்; என்னை? குறளடியென வேறுறுப்பாயின்மையினென்பது; தளையென்பது இதனைக் கோடுமேல் அதனைக் குறளடியெனலாகாதென்பது; அல்லதூஉம், ஈரசை கூடி ஒருசீராயினவாறுபோல இருசீர் கூடியவழி அவ்விரண்டினையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே, நாற்சீரடியினை இடைத்துணித்துச் சொல்லுவதின்றி, நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லையென்க. யாத்தசீர் ‘ என்றதனானே அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம் அச்சீரான் அடியானவழிச் ‘ சீரியைந்திற்றது சீரெனவே ‘ படுமென்றதனாற் சீரெல்லாந் துணித்துச் சொல்லப்படும்மென்பதூஉங் கூறினான் இவ்வாசிரியனென்பது; அற்றன்றியும் அவ்வாறு தளை கொள்வார் சீரானடிவகுப்பதூஉங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற்றொழி லல்லது இன்மையினெனின், அற்றன்று; தொடுத்தற்றொழின் மாத்திரையானே தொடையென்றானல்லன்; அவ்வடிக்கண் நின்ற எழுத்தும் எழுத்தும் சொல்லும் பிற பொருளாகலான் அவற்றானே தொடை கொண்டைமையின் வேறுறுப்பென்றானென்பது. அஃதேல், சீருஞ்சீரும் இயைந்தவழி அவையிடமாகநின்ற அசையால் தளைகொள்ளாமோவெனின் கோடுமென்றே; அதனி அடியென்னாமாயினென முற்கூறியவாறே மறுக்க (பக்.210-211, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பிய பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும் பின்னான்கியல்கள், பாகம்- இரண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்:2007)
தளைக்கு ஆதரவான யாப்பருங்கல மரபிற்கு எதிரான வாதத்தை மிகத்தீவிரமாக வீரசோழிய உரைகாரரும், தொல்காப்பிய உரையாசிரியர்களும் வைக்கிறார்கள் என்று மேலே கண்டோம். ஆனால் மறுபடியும், வீரசோழியம், தொல்காப்பிய உரைகள் ஆகியவற்றிற்குப் பின் வந்த இலக்கணவிளக்கம் தளைக்கு ஆதரவாகப் பெருங்குரல் கொடுக்கிறது. அக்குரல் தளைக்கு எதிரான சிந்தனை மரபிற்கு எதிராகவே கொடுக்கப்படுகிறது என்று கூறவேண்டும். இலக்கணவிளக்கம், அடியைத் தளை அடிப்படையில் பகுக்கும்போது தளையின் முக்கியத்துவத்தை உறுதியாக எழுப்புகிறது. இதன் மூலம் தமிழ்ச்செய்யுளில் தளையை தவிர்க்க இயலாது என்ற யாப்பருங்கல மரபின் அடிப்படை வாதத்திற்கு வலுசேர்க்கிறது. தொல்காப்பியத்தைப் பொறுத்தவரை ‘ தூக்கு ‘ ‘ பா ‘ என்ற உறுப்புகள் மிக முக்கியமானவை. எனவேதான் ‘ தன்சீர் உள்வழி தளை வகை வேண்டா ‘ என்றது. வீரசோழியமும் ‘ ஓசை ‘ யைப் பொறுத்தவரை தொல்காப்பியத்தோடு ஒத்து அமைகிறது. ஆனால் இலக்கணவிளக்கம் தளைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ தூக்கினைத் ‘ தள்ளி நிறுத்துகிறது:
” இவ்வோசையை (செப்பலோசை) தூக்கு என்று ஓர் உறுப்பாகி மேல்கூறுவாரும் உளர். மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இவ்வுரை உய்த்து உரைக்க ”. (பக். 731, மு.சு.நூ)
இங்கு இலக்கண விளக்கத்தார் தளையால் பெறும் ஓசையை முதன்மைப்படுத்தி ” தூக்கு ” உறுப்பைத் தள்ளி நிறுத்துவதைக் கவனிக்க. தளைக்கு ஆதரவாக இலக்கணவிளக்கம் தளை அடிவகுக்கும் முறைக்கு ஒரு வலுவான காரண அடிப்படையை வழங்கவில்லை. வீரசோழிய உரைகாரர், மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியர், நச்சர் ஆகியோர் தளைக்கு எதிரான வாதத்தை வைக்கும் போது இன்னின்ன காரணங்களால் தளை கொள்வதும், தளையை உறுப்பாகக் கொள்வதும் பொருந்தாது என்று விரிவாக விவாதிக்கின்றனர்.
யாப்பருங்கல மரபு கூட ஏழ்வகைத் தளை கொள்வதற்கு ஒரு தத்துவ அடிப்படை இருந்திருக்க வேண்டும். அது சமணம் சார்ந்ததாக இருக்கலாம். யாப்பருங்கல மரபின், தளையைச் செய்யுளின் உறுப்பாகக் கொண்ட தளைகோட்பாடு வீரசோழிய உரையாசிரியர் மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களால் தர்க்கமுறையிலமைந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மறுக்கப்பட்டது போல இலக்கண விளக்கம், வீரசோழிய உரைகாரர், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஆகியோரின் வாதத்தைத் தர்க்கமுறையில் மறுக்கவில்லை. இன்னின்ன காரணங்களால் தளை உறுப்பாக கொள்ளத்தக்கது இன்னின்ன காரணங்களால் தளை அடிப்படையில் ஓசைகொள்வது பொருந்தும்
என்று கூறி எப்படி தளைக்கு எதிரான வாதம் தவறு என்று விளக்கவில்லை. வீரசோழிய உரைகாரர், பேராசிரியர், நச்சர் ஆகியோரின் வாதம் வலுவுடையதாக தனியே நிற்க, இலக்கண விளக்கத்தார் மொழி விளையாட்டுப் போல தளைவகை அடிகள் படைத்து யாப்பு விளையாட்டு ஒன்றை விளையாடியுள்ளார் என்று கூறலாம். ஆனால் அந்த விளையாட்டு என்பது தளைக்கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவே, வலுவூட்டவே செய்யப்பட்டது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த யாப்பு விளையாட்டை ஒரு உதாரணம் காட்டி விளக்கலாம். 2+2 = 4 ; இது யாப்பருங்கல மரபு கூறிய இரு சீர் வருவது குறளடி என்பதற்குச் சமமானதாக வைத்துக் கொள்வோம். 2+2 = 4 என்பதை 1+1+1+1 = 4 என்றும் கூறலாம்; இது இலக்கணவிளக்கம் இருசீர் அடியில் வரும் ஒருதளையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தளை வருவது குறளடி என்று கூறியதோடு ஒப்பிடலாம் (ஏற்கனவே நாம் இலக்கணவிளக்கம் எப்படித் தளைவகை அடிகளுக்கு யாப்பருங்கல மரபு பயன்படுத்திய சீர்வகை அடிகளுக்கான சூத்திரத்தையும் உதாரணங்களையும் பயன்படுத்திக்கொண்டது என்று பார்த்தோம்). இரண்டு சீர்வந்தால் ஒருதளை காணப்படும். இது இயல்பு. இரண்டுசீர் வருவதை யாப்பருங்கல மரபு குறளடி என்று கூறிவிட்டது. ஆனால் இதை ஒருதளை வந்த குறளடி என்று யாப்பருங்கல மரபால் கூற முடிந்திருக்கும். ஆனால் கூறவில்லை. ஏனெனில் தளை அடியின் ஓசையைத் தீர்மானிக்கும் ஆனால் அடியைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை அம்மரபு கொண்டிருந்தது. தளை அடியைத் தீர்மானிக்கும் என்றால் சீர் செய்யுளின் ஓசையைத் தீர்மானிக்குமா? என்ற கேள்வி எழும். செய்யுளில் தளையின் பங்கு ஓசை நிமித்தமே. ஆனால் இலக்கண விளக்கம் இது எதனையும் கருத்தில் கொண்டதுபோல் தெரியவில்லை. அது தளை அடிப்படையில் அடிவகுக்கும் போது ஒரு புதுமையாகவும்; அதே நேரத்தில் தளையின் இன்றியமையாமையை வற்புறுத்துவதாகவும் அமைகிறது. இலக்கணவிளக்கத்தார் எதிர்பார்த்ததும் இதுவேதான்; அதாவது ஒரு புதுமையான செயல்மூலம் தளைக் கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவேண்டும் அதே நேரத்தில் தர்க்கமும் செய்யக் கூடாது. எனவே தளைவகை அடிகள் கூறியதன் மூலம் தளைக்கோட்பாட்டை முக்கியத்துவபடுத்தியும் விடுகிறார்.
பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கணவிளக்கம் ஆகியவை அடிகளைப் பகுத்துள்ள முறைமையைப் பட்டியலிடுகிறது.
அட்டவணை : 5
தொல்காப்பியம் யாப்பருங்கல மரபு வீரசோழியம் இலக்கணவிளக்கம்
எழுத்தெண்ணிக்கை அடிப்படையில்
5.நெடிலடி சீரடிப்படையில்
1.குறளடி
1.குறளடி
1.குறளடி
தொடை:
தொடை மரபைப் பொறுத்தவரையிலும் இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே பின்பற்றுகிறது. தொல்காப்பியத்தோடு முரண்படவில்லை எனினும் அதைத் தன் வழிக்குரியதாகக் கொள்ளவில்லை. தொல்காப்பியம் முதன்மைத்தொடைகளாக மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற ஐந்தைக் கூறுகிறது. விகற்பத் தொடைகளாக ஒரூஉ, பொழிப்பு ஆகியவற்றைக் கூறுகிறது. விகற்பமில்லாத் தொடைகளில் செந்தொடையை மட்டுமே பேசுகிறது. யாப்பருங்கல மரபு முதன்மைத்தொடைகளாக தொல்காப்பியம் கூறியவற்றையே கூறுகிறது. மேலும் விகற்பத் தொடைகளாக இணை, பொழிப்பு, ஒரூஉ, முதலிய ஏழினைக் குறிப்பிடுகிறது. விகற்பமில்லாத தொடைகளாக இரட்டை, அந்தாதி, செந்தொடை ஆகியவற்றைக் கூறுகிறது. ஒட்டுமொத்தமாகத் தொடை விளக்குமுறையைப் பார்க்கும் போது இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறது. எந்த வித மாற்றுக்கருத்தும் கொள்ளவில்லை.
இலக்கண விளக்கம் ” தொடையும் தொடைவிகற்பமும் ” பகுதியில் (722) தொடைகள் பற்றிய வைப்புமுறையை அமைக்கும்போது தொல்காப்பியம், யாப்பருங்கல மரபைப் போல மோனைக்கு முதலிடமும் எதுகைக்கு இரண்டாமிடமும் அளிக்கின்றது. ” சில தொடை விகற்பங்கள் ” என்ற தொடர்ந்துவரும் பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்குகிறது (எதுகை, மோனை). வீரசோழிய உரை, எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும் ‘ என்று எதுகையை முக்கியத்துவப்படுத்தும். எனினும் வீரசோழியத்தின் தொடைகள் பற்றிய வைப்புமுறையில் (தொடைகள் பற்றிய அறிமுகக் காரிகையில்) மோனை, எதுகை என்ற வரிசைமுறையே காணப்படுகிறது. வீரசோழியம் மோனையை வைப்புமுறையில் முதலில் வைத்தாலும் எதுகையையே கருவியாகக் கொண்டு அடிவகுத்து அதனையே முதன்மைப் படித்துகிறது. இதிலிருந்து இலக்கணவிளக்கம் ” சிலதொடைகள் விகற்பம் ” என்ற பகுதியில் எதுகையை முதன்மைபடுத்தியிருப்பது வீரசோழியத்தை பின்பற்றியோ என்று எண்ணத் தோன்றலாம். ஆனால் இலக்கணவிளக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனலாம். இலக்கணவிளக்கம் தோன்றிய காலகட்டம் வாய்பாட்டுத்தன்மையில் கவிதைபுனையும் கவிஞர்கள் பெருகியிருந்த காலகட்டம். வெண்பாவைப் பார்த்து இன்னொரு வெண்பாவும் விருத்தத்தைப் பார்த்து இன்னொரு விருத்தமும் பாடிய காலகட்டம். இக்காலகட்டத்தில் ‘ எதுகை ‘ சொற்சிலம்பம் ஆடுவதற்குத் தேவையான ஒன்று. எனவே இலக்கணவிளக்கம் ” சில தொடை விகற்பங்கள் ” என்ற பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்கியது என்று கூறவேண்டும். மற்றபடி எதுகையைப் பொறுத்தவரை வீரசோழியத்திற்கு இருந்த வலுவான கோட்பாட்டுப் பின்னணி இலக்கணவிளக்கத்திற்கு கிடையாது என்று நிச்சயமாகக் கூறலாம். பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகியவை தொடைகள் பற்றிக் கூறுவதைப் பட்டியலிடுகிறது:
அட்டவணை:6
தொல்காப்பியம் வீரசோழியம் யாப்பருங்கலமரபு இலக்கணவிளக்கம்
முதன்மைத்தொடைகள்
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை
விகற்பத்தொடைகள்
பொழிப்பு, ஒரூஉ
விகற்பமில்லாத்தொடை
செந்தொடை மோனை
எதுகை முதன்மைத்தொடைகள்
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை
விகற்பத்தொடைகள்
இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,
முற்று முதன்மைத்தொடைகள்
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை
விகற்பத்தொடைகள்
இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,
முற்று
பா மற்றும் பாவினம் ஆகியவைக்குறித்துப் பேசும் பொழுதும் இலக்கணவிளக்கம், யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது.
கருத்துநிலை அடிப்படையில் இலக்கணவிளக்கம் முழுக்க முழுக்க யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பது மேலே விளக்கப்பட்டது. கருத்துநிலை அடிப்படையில் மட்டுமல்ல விளக்குமுறை அடிப்படையிலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. அதாவது அதன் விளக்குமுறை யாப்பருங்கல மரபின் சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும், உரைகளைத் தழுவியும் விளக்குவதாக அமைகிறது. இத்தன்மை குறித்துக் கீழே காணலாம்.
இலக்கண விளக்கத்தின் எழுத்துக்கள் குறித்து வரும் சூத்திரமாகிய
” எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்து
தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
யடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்
தினமாய் வழங்களி னினமெனப் படுமே ”
என்பது யாப்பருங்கலக்காரிகையுரையில் தற்சிறப்புப் பாயிரப்பகுதியில் மேற்கோளாகக் காட்டப்படுகின்ற சூத்திரம் ஆகும் (பக்.111, மு.சு.நூ). ஆனால் யாப்பருங்கல விருத்தியிலும் இச்சூத்திரம் இடம்பெறுள்ளது எனினும் யாப்பருங்கலக் காரிகையைப் போல எட்டடி பெறாமல் மொத்தம் ஏழு அடிகளை உடையதாக இருக்கின்றது. மேலும் ஆறாவது, ஏழாவது அடிகள் யாப்பருங்கலக்காரிகையைப் பார்க்கிலும் வேறாக அமைகின்றது. அச்சூத்திரம் வருமாறு:
எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்
தசைத்திசை கோடலின் னசையே யசைபியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
அடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
தொடுத்தன் முதலாயின் தொடையே யத்தொடை
தூக்கிற்றொடர் திசைத்தலிற் றூக்கெனப் படுமே ” (பக்.18; பவானந்தம் பிள்ளை பதிப்பு, யாப்பருங்கல விருத்தி தொகுதி 1 :1916)
மேற்கண்ட இரண்டு சூத்திரங்களையும் ஒப்பிட்டு நோக்குக. மேற்கண்ட பாடலுக்கு யாப்பருங்கல விருத்தியின் பதிப்பாசிரியர் பவானந்தம் பிள்ளை இலக்கண விளக்கத்தில் உள்ள சூத்திரத்தைப் (மேலே நாம் காட்டிய சூத்திரம்) பாடமாகக் கொள்கிறார். அடிக்குறிப்பில் பவானந்தம் பிள்ளை இது குறித்து கூறுவதாவது:
” தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்
தினமாய் வழங்கலி னினமெனப் படுமே ”எனப்பாட முரைக்கும் இலக்கணவிளக்கம் (பக்.18; மேலது).
இவர் கூறுவது போல இலக்கண விளக்கச் சூத்திரத்தைப் பாடமாகக் கொள்வது பொருந்துமா? என்ற வினா எழுகிறது.
[தொடரும்]
*****
கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்
பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
புதுச்சேரி
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிக்குப் பின்னால் இம்மடலுடன் உங்கள் முன்னால் வருவதில் பெருமகிழ்வடைகிறேன். வருடம் முழுவதும் வாழ்க்கை எனும் சிக்கல் மிகுந்த புதிருக்கான விடைதேடி ஓடிக்களைத்ததினால் சிறிது இடைவெளி வேண்டி கொஞ்சம் ஓய்வெடுக்க எண்ணியதின் விளைவே எனது சிறிய மறைவுக்குக் காரணம். மிகவும் மகிழ்வான , ஆனந்தமான, அலாதியான ஒரு விடுமுறை என்றுகூடச் சொல்லலாம். நாங்கள் குடும்ப வாழ்வில் இணைந்து இப்போது சுமார் 36 வருடங்கள் ஓடி விட்டன. ஆரம்பகாலத்தில் வாழ்வினைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளைத் தவிர வேறு எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை. அதைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வில் முன்னேற்றமடைந்த ஒரு நிலையில் எமது ஒரே மகனை வாழ்வில் நிலைநிறுத்தும் பணியில் முழுநேரச் செலவு இப்படியாகத்தான் ஓடியது எமது வாழ்க்கை.
சில வருடங்களாகவே குறூஸ் ( Cruise ) எனும் கப்பல் மூலமான விடுமுறையில் ஆர்வம் காட்டி வந்த என் மனைவியின் விருப்பத்தை நான் அறிந்திருந்தேன்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னார்வ ஓய்வெடுத்த பின்னால், என் மகனின் திருமணம் முடிந்த பின்னால் கடந்த வருடம் எனது மனைவியின் பலநாள் கனவு நிறைவேறியது. ஆம் கப்பல் விடுமுறையில் ஆர்வம் கொண்டிருந்த எனது சகோதரிகளும் வேறு சில நண்பர்களும் இணைந்து ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றுக்கான கப்பல் விடுமுறையை கடந்த வருடம் அதாவது 2016 யூலை மாதம் மேற்கொண்டோம். அவ்வகையான் விடுமுறையின் மீதான நாட்டம் அதில் ஈடுபட்ட அனைவருக்குமே அதிகமாகியது.
அவ்விடுமுறையில் இருந்து திரும்பிச் சில மாதங்களிலேயே இவ்வருடம் அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றுமொரு கப்பல் விடுமுறைக்கு முன்பதிவு செய்து கொண்டோம். இப்பயணம் வெஸ்டேர்ன் கரிபியன் குறூஸ் ( Western Caribean cruise ஆகும். அதே கூட்டத்துடன் மேலும் இருவர் இணைந்து 14 பேரடங்கிய குழுவாக இப்பயணத்துக்குத் திட்டமிட்டோம். இங்கிலாந்திலிருந்த 12 பேருடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இருவர் இணைந்து கொள்வதாக இருந்தது. நவம்பர் மாதம் 23ம் திகதி லண்டன் கட்விக் விமான நிலையத்திலிருந்து 12 பேரும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒர்லாண்டோ நகருக்கு விமானம் மூலம் பயணித்தோம். எமது நாட்டின் விமான நிலையத்தை எத்தனையோ முறை விமர்சித்த எமக்கு மற்றொரு நாட்டின் விமான நிலையத்தின் அல்லகல்லோலங்களைப் பார்த்ததும் தான் எமது நாட்டு விமான நிலையத்தின் அருமை புரிகிறது போலும் ! அப்பப்பா ஒர்லாண்டோ நாட்டின் விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதி இருந்த பகுதியில் சுமார் 500 பேர் வளைந்து, வளைந்து ஒரு பத்து வளைவுகள் கொண்ட வரிசையாக நின்றிருந்தோம். வியர்வை வழிந்தோடியது அத்தனை பேருக்கும் பொதுவாக ஒரு பெரிய மின்விசிறி மட்டும் நடுப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவாறு சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னால் குடிவரவு அதிகாரியின் முன்னால் நானும், மனைவியும் போய் நின்றதன் பின்னால் தான் அமெரிக்க நாட்டு விமானநிலையத்தில் மரியாதை என்பது மட்டளவில் கூடக் கிடையாது என்பதைத் தெரிந்து கொண்டோம்.
ஒருவாரு அனைவரும் இணைந்து அங்கு வந்து எம்மோடு இணைந்த அவுஸ்திரேலிய தம்பதியினரையும் இணைத்து ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் எமக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பங்களாவை நோக்கிச் சென்றோம். எமது வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி எம்மோடு பேசிக்கொண்டு வந்தாலும் அவர் முகம் கடுகடுப்பாக இருந்தது. அப்புறம் தான் புரிந்தது அன்று அமெரிக்க நாட்டின் முக்கிய விடுமுறை தினமான ” தாங்ஸ் கிவிங் டே ( Thanks giving day , அன்று இரவு ஒரு விருந்துக்குப் போக வேண்டிய அச்சாரதி எமது தாமதமான வரவால் அவ்விருந்துக்கு தாமதமாகிக் கொண்டிருப்பதே அவரது கடுகடுப்புக்குக் காரணம் என்பது. ஒருவாரு எம் அனைவரையும் விடுதியில் இறக்கி விட்ட போதுதான் கூறினார் அன்று விடுமுறையாதலால் அனைத்து சாப்பாட்டுக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்று. எமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இரவு 9 மணிக்குப் பின்னால் ஏதாவது பிட்சா கடை திறந்தாலும் திறக்கும் என்றார். அன்றைய இரவு பட்டினி போலும் என்று எண்ணிக் கொண்டோம்.
பங்களாவினுள் சென்று உடை மாற்றிக் கொண்ட பின்னால் ஆர்வப்பிரியையான என் மனைவி வெளியே சென்று அடுத்த வீட்டு கதவைத் தட்டியுள்ளார். அங்கே இவ்விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்துடன் வந்திருந்த ஒரு அமெரிக்கரைப் பார்த்துள்ளார். அவரிடம் எமது நிலையை விளக்கிக் கூறிய போது, அவர் சில பிட்சா கடைகளின் தொலைத்தொடர்புகளைக் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு திரும்ப வந்து தொலைபேசி மூலம் சில பிட்சாக்களுக்கு ஆர்டர் கொடுத்ததும் தான் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது அட பிட்சா இத்தனை சீக்கிரம் வந்து விட்டதே எனும் ஆச்சரியத்தில் கதவைத் திறந்தால் அங்கே அந்த அடுத்த வீட்டு நண்பர் கையில் பல பொருட்களுடன் நின்றார். கோகா கோலா போத்தல், பால் போத்தல் காப்பித்தூள், பாண் என அனைத்தையும் எம்மிடம் கையளித்தார். ஜொஸுவா எனும் அந்த அமெரிக்க நண்பர் அது தமது “தாங்ஸ் கிவிங் டே ” அன்பளிப்பு என்று கூறி பணமமெதுவும் வாங்க மறுத்து விட்டார். அப்போதுதான் கவியரசரின் பாடல் ” பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா ” வரிகளின் உண்மை அர்த்தம் புரிந்தது.
கப்பல் பிரயாணத்தை ஆரம்பிக்கும் முன்னால் இரண்டு நாட்கள் ஒர்லாண்டோவில் கழிப்பது என்பதே எமது திட்டம். அடுத்த நாள் காலை மீண்டும் ஒழுங்கு செய்திருந்த பெரிய கறுத்த காரில் நாம் அருகிருந்த ஒரு ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டோம். அங்கு ஜோடி ஜோடியாக அனைவரும் பிரிந்து சென்று அமெரிக்க கடைகளை ஒரு கை பார்த்துத் திரும்பினோம். திரும்பியது என்னவோ வெறுங் கையுடன் தான். அன்று இரவு எம்முடன் வந்திருந்த ஒரு நண்பரின் மனைவி தான் கொண்டு வந்திருந்த பலசரக்குப் பொருட்களை உபயோகித்து அருமையான சாப்பாடு தயார் பண்ணி விட்டார் போங்கள். அடுத்த நாள் எமது திட்டப்படி ஒர்லாண்டோவில் உள்ள யூனிவர்சல் வேர்ல்ட் எனும் கேளிக்கை இடத்துக்கு விஜயம் செய்தோம். ஆளுக்கு 125 டாலர்கள் கொடுத்து உள்ளே நுழைந்த நாம் பல விடயங்களைப் பார்வையிட்டு விட்டு, சிம்சன் ரைடு எனும் ஒரு ரதத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். அனைவரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர். அப்பாடா அந்த சுற்றூர்தியில் இருந்து இறங்கியதும் தான் உயிருடன் தப்பி விட்டோம் என்று எண்ணத் தோன்றியது. அத்தனை அபாயகரமான ஆனால் பாதுகாப்பான ஒரு தேரோட்டம். அதைப் போல பல தினுசான வினோதங்களைப் பார்த்து விட்டுக் களைத்துப்போய் வீடு திரும்பினோம். அடுத்த நாள் எமது கப்பல் பிரயாணத்தைத் தொடங்குவதற்காக மயாமி நகருக்குச் செல்வதற்காக எம்மை அழைத்துச் செல்வதற்கு இரண்டு வாகனங்கள் வந்திருந்தன. சுமார் நான்கு மணி நேர பிரயாணத்தின் பின்னால் மயாமி கப்பற் தளத்தை வந்தடைந்தோம்
மிகுதி அடுத்த வாரம் தொடரும்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் நான்முகன்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….கிரேசி மோகன்….!
“நாலா யிரக்கண்ணன் நான்முகன் தொட்டிலில் –
ஓலாவில்(taxi ) போவதுபோல் ஓய்ந்திருக்க -தாலாட்டு –
மாலோலர் தூங்கிட மாதா யசோதாவின் –
பாலூறும் பாடல்வெண் பா “….கிரேசி மோகன் ….!
Yashoda sings a lullaby to Krishna describing the gem-adorned cradle given by Brahma and reminisces his avatar as Vamana. (Inspired by the 4000 divine songs of the Azhwars) #Krishnafortoday
-மேகலா இராமமூர்த்தி
இல்லக்கிழத்தியாகிவிட்ட செல்வமகளின் மனைமாண்பைச் செவிலி தேர்ந்த சொற்களால் வருணிக்க, வியப்பில் வாய்மூடாது செவிமடுத்துக்கொண்டிருந்தாள் நற்றாய்.
”காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய சேவலின் ஒளிபொருந்திய புள்ளிகளை உடைய கழுத்தில் குளிர்ந்த நீர்த்துளி துளிக்கும்படி, புதலி(ரி)ன்கண் நீர் ஒழுகும், மலர்மணம் வீசுகின்ற முல்லை நிலத்தின் கண் அமைந்த சிறிய ஊரில் உள்ளாள் நம் காதல் மடந்தை. தலைவனது தேரோ வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும், சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின்வருதலை அறியாது உடனே வந்து விடும்” என்றாள் செவிலி.
தலைவன் தன் காதல் மனைவியைப் பிரிந்து வேற்றூர்களுக்கு அதிகம் செல்வதில்லை; அவ்வாறு தவிர்க்க இயலாது வேந்தன் இடுகின்ற பணிகளைச் செய்வதற்காகச் சென்றாலும் வேலைமுடிந்தவுடன் உடனே வீடு திரும்பிவிடுவானென்று, தலைவியைப் பிரியாது உடனுறையும், தலைவனின் உயர்பண்பைப் பாராட்டுகின்றாள் செவிலி.
கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே. (குறு2: 242 – குழற்றத்தன்)
செவிலியின் இன்சொற்கள் நற்றாயின் பொற்செவியில் தேனாய்ப் பாய்ந்தன. மகளின் மணவாழ்க்கை மணம்பொருந்திய வாழ்க்கையாய் அமைந்ததில் அகமகிழ்ந்தாள் அவள்.
செவிலியின் சொல்லில் மிகையில்லை எனும்படியே தலைவனும் தலைவிபால் கழிகாதலொடு விளங்கினான்.
”விரிந்த அலையையுடைய பெரிய கடலலால் வளைக்கப்பட்ட இப்பூவுலக இன்பமும், பெறுதற்கரிய பெருமையையுடைய தேவருலக இன்பமும் ஆகிய இரண்டும், தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தால், தலைவியொடுபெறும் இன்பத்தின் கனத்திற்கு ஈடாகாது” என்று எண்ணியிருந்தான் அவன்.
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. (குறுந்: 101 – பரூஉமோவாய்ப் பதுமனார்)
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103) எனும் குறளும் இதேகருத்தைப் பேசுவதைக் காணலாம்.
தலைவியும் தலைவனும் அன்பும் அறனும் உடைத்தாய் இல்லறத்தைப் நடாத்திவருகையில் தலைவன் சேர்த்திருந்த பொருள் சிறுகச் சிறுகச் செலவழியலாயிற்று. ஆதலால் மீண்டும் பொருள்தேடவேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது.
அறம்பெற ஈதலும், இன்பம்பெறத் துய்த்தலுமான காரியங்கள், அப்பொருளைப் பெறாத இல்லோர்க்கு இல்லையாகிப் போகுமாதலால் பொருள்செய்தலை மேலானதாக எண்ணி யான் மேற்கொள்ளும் வினைக்கு, அழகிய மாமை நிறமுடைய இப்பாவையும் உடன் வருவாளோ? இல்லை என்னை மட்டும் தனியாகச் செலுத்துவாயோ?!” என்று தன் நெஞ்சை வினவி விடைகாண முயன்றான் தலைவன்.
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. (குறுந்: 63 – உகாய்க்குடி கிழார்)
”நீ வற்புறுத்தினாலன்றி நானாகச் செல்லேன்!” என்று தலைவன் தன்னைக் குற்றமற்றவனாக்கித் தன்னை பொருள்வழியிற்செலுத்தும் தன்நெஞ்சைக் குற்றவாளியாக்கும் முயற்சியில் ஈடுபடுவதனை இப்பாடல்வழி உணர்கின்றோம்.
புணரின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும்
நல்லதற்கு உரியை வாழிய நெஞ்சே…. (நற் 16 – சிறைக்குடி ஆந்தையார்)
எனும் நற்றிணைப் பாடலும் பொருள்தேடவிழையும் தன் நெஞ்சுக்குத் தலைவன் கூறும் மறுமொழியாகவே அமைந்திருக்கின்றது.
இளம் மனைவியைப் பிரிந்து பொருள்தேடச்சென்றால் இளமையின்பம் கிட்டாது; ஆனால் வாழ்வை நெடுங்காலம் செம்மையாய் நடத்துவதோ, வறியோர்க்கு ஈந்து மகிழ்தலோ வளமையில்லையேல் எட்டாது”எனும் சிக்கல் தலைதூக்கும்போது காதலா? பொருள்தேடும் கடமையா? என்று இளந் தலைவன் தடுமாறுவது இயல்பே.
காதலும் அதுகூட்டுவிக்கும் இன்பமும் இளமைப்பருவத்துக்கே உரியது; ஆனால் பொருளோ இளமைக்கு மட்டுமல்லாது முதுமைக்கும் வேண்டுவது; ஆதலினால் தலைவிமாட்டுக் காட்டும் காதலினும் பொருளே வாழ்வுக்குத் தேவையானது என்று அவனைத் தெருட்டியது அவன் அறிவு. 
செல்வம் தேட மறுபடியும் செல்வோம் எனும் முடிவுக்குவந்த தலைவன் அதனைப் பக்குவமாய்த் தலைவிக்கு எடுத்துரைக்க விரும்பி, ”பொலிவான குழையணிந்த பெண்ணே! என்னருமைக் கண்ணே! நீலமணி ஒழுகியதுபோல் காட்சிதரும் கரிய அறுகங்கொடியின் மெல்லிய தண்டைப் பெண்மானொடு சேர்ந்து வயிறுநிரம்ப உண்ட ஆண்மானானது துள்ளிவிளையாடும் கானம் ஒன்று நம் ஊருக்கு அணித்தே உள்ளது” என்று மெல்ல ஆரம்பித்தான். தலைவியும் அவன் ஏதோ சுவையான சம்பவத்தைச் சொல்லப்போகிறான் எனும் ஆர்வத்தில் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கத் தொடர்ந்த தலைவன்…
”அந்தக் கானம் பின்னே செல்லுமாறு நான் அதனைக் கடந்துசென்று பொருளீட்டி வரலாம் என எண்ணுகிறேன்; அதுவரை என் பிரிவை இந்தத் தெரிவை தாங்கியிருப்பாள் அல்லவோ?” என்று கேட்குமுன்னமே தலைவியின் கண்கள் கண்ணீர் மழையைக் கொட்டத் தொடங்கியதைக் கண்ட தலைவன், அவள் கலக்கத்தைத் துலக்கமாய்த் தெரிந்துகொண்டான். தன் பயணத்துக்கு ஆயத்தமாக வெளியில் நிறுத்தியிருந்த தேரிலிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டுப் பயணத்தை நிறுத்தினான்.
மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை
பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த
மானே றுகளுங் கானம் பிற்பட
வினைநலம் படீஇ வருது மவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச்
சொல்லா முன்னர் நில்லா வாகி
நீர்விலங் கழுத லானா
தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே. (குறுந்: 256 – ?)
தலைவியைச் சமாதானப்படுத்திப் புறப்படலாம் எனும் தன் எண்ணத்தில் மண்விழவே ஏமாற்றமடைந்து யோசனையில் ஆழ்ந்தான் அவன்.
அக்காலத்தில் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்தேடும் முயற்சி ஆடவரைக் குடும்பத்தைவிட்டுப் பிரிக்கும் கொடுவாளாக இருந்ததையும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கை வளம்பெற அதனைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அவர்கட்கு அமைந்ததையும் பாலைத்திணைப் பாடல்கள் பலவும் பரக்கப்பேசுகின்றன.
உள்ளூரிலேயே செய்வதற்குத் தகுந்த தொழிலேதும் அமையாததால் அவர்கள் வெளியூர்களுக்கு வேலைதேடிச் சென்றார்களா? கடும் பாலைநிலங்களையும் கொடுஞ்சுரங்களையும் கடந்து அவர்கள் வேலைதேடிச் சென்ற ஊர்கள் யாவை? அங்கு அவர்கள் செய்த வேலைகள் என்ன? போன்ற பல கேள்விகளுக்குச் சங்கப் பாடல்களில் தெளிவான பதிலில்லை.
[தொடரும்]
”மந்திக்கும், பால்பசு மாட்டுக்கும், பேதத்தை
சிந்திக்கா கண்ணன், சமத்துவ -நந்தன்
சுகுமாரன் நெய்வெண்ணை சோரன்வாத் சல்ய,
வெகுமானம் கேசவ் வரைவு’’….!
”மந்திமனம் மண்ணிலே மண்டியிட்டுக் கண்ணனின்
பந்திக்கு முந்தும் பரவசத்தை, -தந்தீர்(கேசவ்): –
கிருஷ்ணப் பிரேமியென்றார் கோபுலு ஆசான்,
பிரஷ்ணப்(BRUSH) பிரேமிவெண் பாக்கு”….கிரேசி மோகன்….!
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
என் கதையைக் கேட்பார் எங்காவது
எவரேனும் உள்ளாரா,
என்னோடு வாழ வந்த அந்தப்
பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள ?
பெருங் கதை யுள்ள
பெண்ணைப் பற்றி அறிந்தால் நீ
வருத்தம் அடைவாய் !
ஆயினும்
ஒருநாள் கூட வேதனைப் படாய் !
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
கடந்த போன கால மெல்லாம்
நினைத்த போது,
விலகிச் செல்ல முனைந்தி ருக்கிறேன்
கடினமாக !
அப்போது என்னை நோக்கி
அழத் துவங்குவாள் !
உறுதி செய்வாள் வெகுமதி அளிப்பதாய்;
நானும் அதை நம்புவேன் !
ஏனென அறியேன்!
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
ஒரு மாதிரிப் பெண்ணவள்,
உனைத் தாழ்த்திட முனைபவள் !
உன் சகத் தோழர் முன்பு
உன்னை மூடனாய் ஆக்குபவள் !
நல்லவள் என்று
நான் அவளைப் பாராட்டும் சமயம்
முகக் குளிர்ச்சி தெரியும் !
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
எவரேனும் சொல்லிக் கொடுத்தாரா
இளமையில் உள்ள போது,
துன்பம் அளித்தால்
இன்பம் விளையு மென்று ?
புரியுதா அவளுக்கு,
அனுதினமும்
ஒருவன் களியாட்டம் ஒதுக்கி
முதுகை முறித்துப் பணம்
சம்பாதிக்க வேண்டு மென்று ?
நம்புவாளா
அந்தப் பெண் அதை
அவன் செத்த பின்னும் ?
அவளொரு பெண்ணே !
ஆம் பெண்ணே !
+++++++++++++
முதல் கோணல்
முற்றிலும் கோணல்
உன் வரவில்…..
உற்று நோக்கல் தவறா?
உற்று நோக்கியது தவறா?
வினாக்கள் தொடுத்து
இன்றுவரை
விடைகளைப் பெற முடியவில்லை
என்னால்…..
காரணம் கேட்க எந்தவித
பதிலும் வரவில்லை
உன்பார்வையின் தோற்றம்
இதுவரை வேண்டாதவனாய்
பார்ப்பவர்க்கு மட்டும் அது.
என்னைப் பொறுத்தவரை
வேண்டப்பட்டவராய்
மட்டுமே உன் வரவு…
ஊடல்களுக்கு நடுவில்
சில முரண்பாடுகளின்
விளக்கம் உன் வார்த்தையில்
தெளிவுபெறும் போது
சமாதனம் பெறுவது
மனம் மட்டுமல்ல…..
ஊடல்களைத் தீர்க்க
எந்த உறவுகளுக்கும்
தெரியாது மனம் செய்யும்
ஆறுதல் மொழி
உனக்கு மட்டுமே புரியும்
விளக்கம் இன்று வரைத் தேடலே…….
மூச்சுக் காற்றின்
வெம்மையும் இன்று
அனலாகத் தான்
வெளிப்படுகிறது….
நாள்தோறும் உன்னைத் தேடும் கண்களுக்கு
ஆறுதல் கூறுவது இனி
எப்படி என்பது தேடுதலாக அமைகிறது…..?
ஏக்கம் கொள்ளும்
மனதிற்குப் புரியுமா
இது இன்னொருவரின்
பொருள் என்று….
சொந்தம் கொண்டாட
உரிமையில்லை என்று
விளக்கும் பக்குவம்
மனதிற்கோ அறிவிற்கோ
எட்டாது கோபம்
இடைமறிக்கிறது….
விட்டுச் சென்று
வீரநடைப் போட்டு
வாழ்வைத் தொடங்க
மனம் செயல்பட
நினைக்கும் போதெல்லாம்
பார்வையின் பரிசம்
கண்முன் காட்சியாய்
தோன்ற கோபமும்
கானல் நீராய்
காணமல் போவது
வேடிக்கையாகத்தான்
இருக்கிறது………
கோபங்களைத் தாண்டி
மனம் உறுதியாக எடுக்கும்
முடிவினையும் உன் வார்த்தைகள்
பிளவுபடுத்துகிறது…..
நீ விருப்பம் போல செயல்பட
என் வெறுப்புகளை உன் மீது
வேண்டா வெறுப்பாய்
மட்டுமே திணிக்கிறேன்
நீ வேண்டாம் என்பதற்காக
அல்ல…… நீ விலகிச்
செல்வாய் என்பதற்காக…!
கிட்ட இருந்து
வேதனைப் படுவதைக் காண மனம்
இயங்காத போது
எட்ட இருந்து உன்
சந்தோசத்தை நிலைக்கச்
செய்ய முடியும் என்ற
நம்பிக்கையால் மட்டுமே…..
மழையைக் கூட
ரசிக்க மனம் ஒன்றவில்லை
மழையும் உன்னை
நினைவுபடுத்துகின்றது
பிரிந்து செல்ல மனம்
ஏதுவாக இல்லைதான்
இருப்பினும் என் பிரிவால்
உன்னை நீ பெறுவாய்
என்பதால் மட்டுமே
உனக்குரிய பொருள்
உனக்காக இருக்க
இடையே வந்தது
இடம் தெரியாமல்
போக மனம் ஒன்றாத போதிலும்
விலகிப் போக முடிவு
செய்த போதிலும் நடக்குமா
என்பது கேள்விக் குறியே…….!
சிந்து.மூ, உதவிப்பேராசியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,ஈச்சநாரி.
– ம.பிரபாகரன்
தொல்காப்பியச் செய்யுளியலையும் (கி.பி 2) இலக்கணவிளக்கச் செய்யுளியலையும் (கி.பி 17) ஒப்பிட்டு இலக்கணவிளக்கத்தினுடைய செய்யுளியல் வழியை (Root) அடையாளப்படுத்துவதை, இக்கட்டுரை தன் நோக்கமாகக் கொள்கிறது. அங்ஙனம் அடையாளப்படுத்துவதன் வழி இடைக்கால யாப்பிலக்கண வரலாற்றிற்குப் பயன்படும் செய்திகளைத் தரவல்லதாக இக்கட்டுரை அமையும்.
தொல்காப்பியத்தையும் இலக்கணவிளக்கத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்கையில் அதற்கு இடைப்பட்ட நூல்களை விட்டுவிட்டு ஒப்பீடு செய்யமுடியாது. இடைப்பட்ட நூல்களைக் கணக்கில் கொண்டாலே இலக்கணவிளக்கத்தின் வழியை (Root) கண்டறிய முடியும். அவ்வகையில் தொல்காப்பியத்திற்குப் பின்னும் இலக்கணவிளக்கத்திற்கு முன்னும் உள்ள யாப்புச் சிந்தனைப்பள்ளிகளான யாப்பருங்கல மரபும், வீரசோழிய மரபும் இங்குக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இலக்கண விளக்கம், யாப்பருங்கலக்காரிகையைப் பின்பற்றுகிறது என்று யாப்பிலக்கண வரலாற்று நிலையில் செய்யப்பட்ட முன்னைய ஆய்வுகள் பொதுவாகக் கூறினாலும், இலக்கண விளக்கத்தை மூலத்தையும் உரையையும் இணைத்து நோக்கி அதன் வழியை முந்தைய ஆய்வுகள் சுட்டவில்லை என்றே கூறலாம். எனவே இக்கட்டுரை இலக்கண விளக்கத்தை மையப்படுத்தியதாக அமைகிறது.
தொல்காப்பியம் செய்யுள் உறுப்புக்கள் 34 என்று கூறுகிறது. பின்னர் வந்த யாப்பருங்கல மரபு 6 என்று கூறுகிறது. வீரசோழியம் செய்யுள் உறுப்புக்கள் இத்தனை என்று வரையறுத்துக் கூறவில்லை. இது இலக்கண விளக்கத்திற்கு முன்னால் உள்ள நிலையாகும். இலக்கணவிளக்கத்தைப் பொறுத்தவரை யாப்பு உறுப்புகளைத் தொகுத்துக் கூறும் முறையில் இரண்டு நிலைகள் உள்ளன.
(I) சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை
(ii) உரையை அடிப்படையாகக் கொண்ட நிலை
இவற்றுள் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையே முதன்மைத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறவேண்டும். இலக்கணவிளக்கத்திற்கு மூலநூலாசிரியரான வைத்தியநாத தேசிகரே உரையாசிரியராகவும் உள்ளார். எனவே அவர் தன் கருத்தில் முதன்மையானவற்றைச் சூத்திரத்திலும், இரண்டாம் தன்மையானவற்றை உரையிலும் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும். இதை மூலத்தையும் உரையையும் படிக்கும்பொழுது தெரிந்துகொள்ள முடிகிறது.
உறுப்புகளைத் தொகுத்துக்கூறும் முறையில் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபோடு ஒன்றுபடுகிறது. தொல்காப்பியத்தோடு வேறுபடுகிறது. இதைப் பின்வரும் தொல்காப்பிய, யாப்பருங்கலக்காரிகை, இலக்கணவிளக்கச் சூத்திரங்கள் காட்டும்:
தொல் :
‘ மாத்திரை…………….
யாப்பியல் வகைப்பட்ட அந்நால் ஐந்தும்
அம்மை…………..
பொருந்தக் கூறிய எட்டொடும் ( தொல். செய்.1)
யா.கா :
‘ ………………………………… எழுத்தசைச்சீர்
பந்தம் அடிதொடை பாஇனம் கூறுவனம் ‘
இ.வி:
‘ செய்யுள் என்பது தெரிவுறக் கிளப்பின்
முன்னர்க் கூறிய முறைமைத்து ஆகி
எழுத்து அசை சீர்தளை அடிதொடை என்ற
மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் (710)
மேற்காட்டிய சூத்திரங்களைக் கவனிக்கையில் இலக்கணவிளக்கம் தொல்காப்பிய மரபிலிருந்து விலகித் தனக்கான மரபு யாப்பருங்கல மரபு என்று காட்டிக் கொள்வதைக் காணமுடிகிறது. அடுத்தநிலை, உரையை அடிப்படையாகக் கொண்டது. தொல்காப்பியம் செய்யுள் உறுப்புகள் 34 என்று கூறியது முன்னர் எடுத்துக்காட்டப்பெற்றது. இ.வி உரை, செய்யுள் உறுப்புகள் 22 என்ற ஓர் அடிப்படையை வகுக்கிறது. மூலத்தையும் சேர்த்தால் மொத்தம் 28 உறுப்புகள். இது பிற்கால யாப்புமரபுகளில் காணப்பட்டதாகத் தெரியவில்லை. இது போன்ற ஒரு பகுப்பு வீரசோழியப் பொருட்படலத்தில் காணமுடிகிறது எனினும் அப்பகுப்பு வீரசோழியத்தைப் பொறுத்தவரைச் செய்யுள் உறுப்புகளாக இனம் காட்டப்படவில்லை. இலக்கணவிளக்க உரையில் உறுப்புக்கள் குறித்து வரும் பகுதியாவது:
‘மூவிரண்டுறுப்புமேவரச்சிவணி‘ எனவே மேவரச்சிவணாதனவும் உளவென்பதூஉம் பெற்றாம். அவை எழுத்தோத்தினுட் கூறிய மாத்திரைவகையும் அகத்தோத்தினுட் கூறிய திணை முதலிய பன்னிருவகையும் இவ்வோத்துட் கூறப்படும் வண்ணமும் அம்மை முதலிய வனப்பெட்டும் அவைபோல்வன பிறவுமாமென்றுணர்க (பக்.714, சி.வை.தா பதிப்பு, இலக்கண விளக்கம்: 1889 )
மேலே இலக்கண விளக்க உரையில் எடுத்துக்காட்டப்பட்ட உறுப்புகளில், தொல்காப்பியர் கூறிய உறுப்புக்களிலிருந்து, நோக்கு , பா, அளவியல், மாட்டு ஆகியவை விடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் கூறிய 34 உறுப்புகளில் இலக்கணவிளக்கம் 28 உறுப்புக்களைக் கூறினாலும், அவை தொல்காப்பியச் செய்யுள் உறுப்புக்கோட்பாட்டோடு பொருந்தாமலேயே உள்ளன. தொல்காப்பியச் செய்யுளியல் கோட்பாடு உருவம், உள்ளடக்கம் சார்ந்தது. 28 உறுப்புக்களைக் கூறினாலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபைப் போல உருவம் மட்டுமே சார்ந்தது. இந்த 28 என்ற உறுப்பு எண்ணிக்கையை இலக்கணவிளக்கம் எதற்குக் கைகொண்டது என்னும் வினா முக்கியமானது. இது யாப்பருங்கல மரபோடு தொல்காப்பிய மரபையும் சேர்த்து ஒரு புதிய செய்யுள் உறுப்பு மரபை உண்டாக்கும் முயற்சிபோலத் தெரிகிறது. திணை முதலியவற்றைப் பற்றி யாப்புப்படலத்தில் சிறிதும் பேசாமல் பொருட்படலத்தில் ஒதுக்கிவிட்ட வீரசோழிய மரபிற்கு அல்லது அது போன்ற ஒரு சிந்தனைப் பள்ளிக்கு எதிராக இலக்கணவிளக்கம் இந்த 28 உறுப்பைக் கட்டமைத்ததா? என்ற கேள்வியை மட்டும் இங்கு எழுப்பி மேற்செல்லலாம்.
பின்வரும் அட்டவணை வீரசோழியம் (பொருட்படலம்), இலக்கணவிளக்கம் சுட்டும் உறுப்புகளைப் பட்டியலிடுகிறது:
வீரசோழியம் (பொருட்படலம்) இலக்கண விளக்கம்
1.சட்டகம்
27.பொருளடைவு செய்யுள் உறுப்புக்கள் -6
7.திணை
8. கைகோள்
9.கூற்று
10.கேட்போர்
11.இடன்
12.காலம்
15.மெய்ப்பாடு
16.எச்சம்
17.பொருள்
18.துறை
19.வண்ணம்
வனப்பு-8
இலக்கணவிளக்கம் தொல்காப்பியச் செய்யுளியல் உறுப்புக்களை என்னதான் வலிந்து சேர்த்துக்கொண்டாலும் அவ்வுறுப்புகள் இலக்கண விளக்கச் செய்யுளியல் கோட்பாட்டோடு ஒட்டாமல் தனியே துருத்திக்கொண்டு நிற்கின்றன எனலாம். பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை, இலக்கண விளக்கம் ஆகியவை கூறும் செய்யுள் உறுப்புக்களைப் பட்டியலிடுகிறது.
அட்டவணை 2
தொல்காப்பியம் யாப்பருங்கலக்காரிகை இலக்கணவிளக்கம்
1.மாத்திரை
2.எழுத்து
3.அசை
4.சீர்
5.அடி
6.யாப்பு
7.மரபு
8.தூக்கு
9.தொடை
10.நோக்கு
11.பா
12.அளவியல்
13.திணை
14.கைகோள்
15.கூற்று
16.கேட்போர்
17.களன்
18.காலவகை
19.பயன்
20.மெய்ப்பாடு
21.எச்சவகை
22.முன்னம்
23.பொருள்
24.துறைவகை
25.மாட்டு
26.வண்ணம்
வனப்பு-8 1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை சூத்திரம்- 6 உறுப்புகள்
1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை
உரை
7.மாத்திரை
8.திணை
9.கைகோள்
10.கேட்போர்
11.இடன்
12.காலம்
13.பயன்
14.முன்னம்
15மெய்ப்பாடு
16.எச்சம்
17.பொருள்
18.வண்ணம்-8
அசை, சீர் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. பின்வரும் அட்டவணைகள் தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கணவிளக்கம் சுட்டும் அசை, சீர்களைப் பட்டியலிடுகின்றன.
அட்டவணை:3
அசை:
தொல்காப்பியம் யாப்பருங்கல மரபு வீரசோழியம் இலக்கணவிளக்கம்
நேர்
நிரை
நேர்பு
நிரைபு நேர்
நிரை நேர்
நிரை நேர்
நிரை
அட்டவணை 4
சீர்:
தொல்காப்பியம் யாப்பருங்கல மரபு வீரசோழியம் இலக்கணவிளக்கம்
ஈரசைச்சீர்
இயற்சீர்-10
உரிச்சீர்-6
மூவசைச்சீர்
வெண்பா உரிச்சீர்-4
வஞ்சி உரிச்சீர்-60 இயற்சீர்-4
உரிச்சீர்
வெண்பா உரிச்சீர்-4
வஞ்சி உரிச்சீர்-4
பொதுச்சீர்
நாலசைச்சீர்-16
ஓரசைச்சீர்-2 இயற்சீர்-4
உரிச்சீர்
வெண்பா உரிச்சீர்-4
வஞ்சி உரிச்சீர்-4
பொதுச்சீர்
நாலசைச்சீர்-16
ஓரசைச்சீர்-2 இயற்சீர்-4
உரிச்சீர்
வெண்பா உரிச்சீர்-4
வஞ்சி உரிச்சீர்-4
பொதுச்சீர்
நாலசைச்சீர்-16
ஓரசைச்சீர்-2
தளையும் அடியும்:
அடுத்து விவாதத்திற்குள்ளாவது தளையும் அடியும் ஆகும். தொல்காப்பியம் தளையை ஓர் உறுப்பாகக் கூறவில்லை; வீரசோழியமும் (மூலம்) தளை பற்றிப் பேசவில்லை. ஆனால் வீரசோழிய உரை தளைக்கு எதிராக தன் வாதத்தை முன் வைக்கிறது:
‘அன்றியும் தேமா முதலாகிய உதாரணங்களால் ஓசையூட்டில் அவ்வோசை வெண்பாவின் ஓசையன்று, அஃது உதாரணத்தின் ஓசை என்று கொள்க. ‘ வெண்பாவின் ஓசையும் உண்டே? எனில், ‘ இரண்டு ஓசை ஓரிடத்து நில்லா என்க. வெண்பாவின் ஓசை அங்கு (உதாரணத்தில்) இருப்பதாகில், வெண்பா, தன்கண் ஓசையின்றி இருக்கும். அப்பாலது வெண்பாவின்கண்ணும் கண்டோம். ஆதலால், உதாரணத்தால் ஓசையூட்டும்பொழுது உதாரணத்தின் ஓசை என்று கொள்க.(பக்.461;2005:வீரசோழியம், தி.வே.கோபாலையர் பதிப்பு).
வீரசோழியத்திற்கு முன்னர் எழுந்த யாப்பருங்கல மரபு, தளையை உறுப்பாகக் கொண்டு தளை அடிப்படையிலேயே ஓசையும் கொள்ளும். இந்தப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இலக்கணவிளக்கம் தளைபற்றிக் கூறுவனவற்றை ஆராயவேண்டும். தொல்காப்பியம் எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் நாற்சீரடியைக் குறளடி(4-6 எழுத்துக்கள்) , சிந்தடி (7-9 எழுத்துக்கள்) அளவடி (10-14 எழுத்துக்கள்)நெடிலடி(15-17 எழுத்துக்கள்) கழிநெடிலடிகள்(18-20 எழுத்துக்கள் )என்று பகுக்கும். தொல்காப்பியத்திற்குப் பின்வந்த யாப்பருங்கல மரபு சீரடிப்படையில் அடிகளுக்குப் பெயர் சூட்டும். அதாவது இரண்டு சீரைக் கொண்டது குறளடி, மூன்று சீரைக் கொண்டது சிந்தடி, நான்கு சீரைக்கொண்டது அளவடி, ஐந்தடியைக் கொண்டது நெடிலடி, ஆறடியும் அதற்கு மேற்பட்ட அடிகளும் கழிநெடிலடி என்று விளக்கும். யாப்பருங்கல மரபைப் பின்பற்றும் இலக்கண விளக்கம் அடியைப் பொறுத்தவரை யாப்பருங்கல மரபிலிருந்து வேறுபட்டு தளை அடிப்படையில் அடிகளை வகுக்கிறது.இது குறித்த இலக்கண விளக்கப் பகுதியாவது:
குறளொரு பந்த மிருதளை சிந்தா
முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
யைந்தளை முதலா வெழுதளை காறும்
வந்தவும் பிறவுங் கழிநெடி லென்ப இது முற்கூறிய அடிகளாமாறு கூறுகின்றது.
இ-ள் ஒரு தளையான் வந்த அடியினைக் குறளடியென்றும், இருதளையான்வந்த அடியினைச் சிந்தடியென்றும், முத்தளையான் வந்த அடியினை அளவடியென்றும், நாற்றளையான் வந்த அடியினை நெடிலடி யென்றும், ஐந்தடியான் வந்த அடியினையும் அறுதளையான் வந்த அடியினையும் எழுதளையான் வந்த அடியினையும் இவற்றின் மிக்கதளையான் வந்த சிறப்பிலடியினையுங் கழிநெடிலடியென்றுங் கூறுவர் ஆசிரியர் எ-று.(பக்.722,மு.சு.நூ)
மேலும் இவ்வடிகளுக்கு உதாரணங்கள் கொடுக்கும் போது ஆசிரியர் எண்டளை, மற்றும் ஒன்பது தளையான் வந்த பாடல்களுக்கும் உதாரணம் கூறுகிறார். இதன் மூலம் ஒருதளை முதல் ஒன்பது தளை வரை அமையும் அடிகள் பற்றி இலக்கண விளக்கத்தார் வெளிப்படையாகப் பேசுகிறார் எனக் கொள்ளவேண்டும். எனினும் அவரின் உரைப்பகுதியிருந்து தெரியவரும் முக்கியமான கருத்து ஏழுதளையான் மிக்கு வந்த அடிகள் சிறப்பில்லை என்பதாகும். ஒன்பது தளை அடிகளுக்கும் இலக்கண விளக்கத்தார் காட்டியுள்ள பாடல்கள் அனைத்தும் யாப்பருங்கல விருத்தியிலும், யாப்பருங்கலக் காரிகையிலும் சீரடிப்படையிலான அடிகளுக்கு காட்டப்பட்ட உதாரணங்கள் ஆகும். அது குறித்து ஓர் உதாரணத்தைக் கீழே காணலாம்:
யாப்பருங்கல விருத்தி:
” திரைத்த சாலிகை
…………………… ”
இது குறளடியான் வந்த செய்யுள் (பக்.107:1973, இரா.இளங்குமரன் பதிப்பு,கழகம்)
யாப்பருங்கலக் காரிகை:
திரைத்த இருது குறள் சிந்து:
திரைத்த சாலிகை
……………………..
இது குறளடியான் வந்த செய்யுள்.(பக்.88.1993 EFEO பாண்டிச்சேரி, உல்ரிகே நிகோலஸ் மொழிபெயர்ப்பு)
இலக்கண விளக்கம்:
குறளடியான் வந்தச் செய்யுள்;
” திரைத்த சாலிகை
……………………..” (மு.சு.நூ:பக்.722)
இவ்விடத்தில் இன்னொன்றும் சுட்டிக்காட்டத் தகுந்தது. இலக்கண விளக்கம், ஏழுதளை வரும் அடிகளே சிறப்பானவை என்றும் அவற்றின் மிக்க தளைகளான் வந்த அடிகள் சிறப்பில என்று காட்டுவதற்கு, யாப்பருங்கல விருத்தியும், யாப்பருங்கலக் காரிகையும், சீர்வகை அடிகளில் எட்டு சீரடிகளால் வருவன சிறப்புடையவை, அதற்கு மேற்பட்ட சீர் வகை அடிகளால் வருபவை சிறப்பற்றவை என்பதை நிறுவுவதற்கு மேற்கோளாக எடுத்துக்காட்டிய காக்கைபாடினியாரின் சூத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. இங்ஙனம் இலக்கண விளக்கம் எதனால் தளை வகை அடிகளை விளக்கச் சீர்வகை அடிகளுக்கான காக்கைபாடினியார் சூத்திரத்தை எடுத்துக் காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. காக்கைப்பாடினியாரின் சூத்திரம் குறித்த யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை, இலக்கண விளக்கம் ஆகிய நூல்களின் பகுதியைக் இவ்விடத்தில் காண வேண்டியது அவசியமாகும்:
யாப்பருங்கல விருத்தி
அதனால், எண்சீரின் மிக்கு வந்த செய்யுள்கள் சிறப்பில எனக் கொள்க.
” இரண்டு முதலா எட்டீ றாகத்
திரண்ட சீரான் அடிமுடி வுடைய
இறந்தன வந்து நிறைந்தடி முடியினும்
சிறந்த அல்ல செய்யு ளுள்ளே ” (காக்கைபாடினியார்) (மு.சு.நூ: பக் 108)
யாப்பருங்கலக் காரிகை
விரிக்கும் நெடிலடி என்று சிறப்பித்தவதனால், எண்சீரின் மிக்க சீரான் வரும் அடிகள் சிறப்பில எனக் கொள்க. என்னை,
இரண்டு முதலா வெட்டீ றாகத்
திரண்ட சீரா னடிமுடி வுடைய
இறந்து வரினு மடிமுடி வுடைய
சிறந்த வல்ல செய்யு ளுள்ளே
என்றார் காக்கைபாடினியார்.(மு.சு.நூ: பக். 92)
இலக்கணவிளக்கம்
” இரண்டு முதலா வெட்டீ றாகத்
திரண்ட சீரா னடிமுடி வுடைய
விறந்தன வந்து நிறைந்தடி முடியினுஞ்
சிறந்த வல்ல செய்யு ளுள்ளே ” என்றார் பிறருமெனக் கொள்க..(மு.சு.நூ: பக்.722)
மேற்கண்ட உரைப்பகுதியில் காக்கைபாடினியாரின் சூத்திரத்தின் மூன்றாம் அடி (இறந்து வரினு மடிமுடி வுடைய) யாப்பருங்கல விருத்தியிலும், இலக்கணவிளக்கத்திலும் ஒத்து அமைவதைக் கண்டுக் கொள்க. யாப்பருங்கலக் காரிகையில் அந்த மூன்றாமடி சற்று வேறுபட்டு அமைவதைக் காண்க. வே.பால்ராஜ் தன் யாப்பருங்கலக்காரிகைப் பதிப்பிலும் மேற்கண்ட யாப்பருங்கலக்காரிகைப் பகுதியில் காணப்படுவது போலவே பாடம் கொண்டுள்ளார்.
இலக்கண விளக்கத்தார் சீரடிப்படையில், யாப்பருங்கல மரபு காட்டிய உதாரணங்களை ஏன் தளை அடிப்படையிலான அடிகளுக்குக் காட்ட வேண்டும்?. நிற்க. இவ்விடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியையும் சுட்டிக்காட்டவேண்டும்.
[தொடரும்]
*****
கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்
பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
புதுச்சேரி
-பீ.பெரியசாமி
1.முன்னுரை
முதலில் எண்வகை மெய்ப்பாடுகளை உணா்த்தி அதன் பின் அகத்திற்கும் புறத்திற்குமான முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளை எடுத்தோதிய தொல்காப்பியா், (நு-3-12). அதன்பின்னே அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளை எடுத்தோதியுள்ளார். அவற்றை உரையாசிரியா்கள் அவத்தைகள் எனக் கொள்வா். (நூ 13-18) அவத்தைகள் ஆறு. அவற்றுள் முதலாமவத்தையும் அதன் விரிகளையும் தொல்காப்பியா் விரித்தோதியுள்ளார். அவற்றுக்கு உரைவகுத்துள்ள உரையாசிரியா்கள் தங்கள் உரைகளில் அகநானூற்றுப் பாடல்களை எவ்வாறு எடுத்தாண்டுள்ளனா் என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது.
1.1 முதலாமவத்தையும் அதன் விரிகளும்:
முதலாமவத்தையின் விரிகளைத் தொல்காப்பியா்,
“புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியா்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவுபிறா்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப“ (நூ.13) எனும் நூற்பாவில் கூறியுள்ளார்.
1.2 உரையாசிரியா்கள் பார்வையில் முதலாமவத்தை:
உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், ச.சோ.பாரதி) ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டவழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள் கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது எனக் கூறுகின்றனா்.
1.2.1 பொறிநுதல் வியர்த்தல்
பொறிநுதல் வியா்த்தலென்பது அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும் வந்துழி வரும் நுதல்வியா்ப்பு என இளம்பூரணரும் (இள.மெய்.நூ-3) தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்கு வந்தடைதலின் வியா்பொறித்த நுதலளாதலும், இம்மெய்ப்பாடு தலைமகற்குரித்தன்று; உட்கும் நாணும் அவற்கின்மையின் எனப் பேராசிரியரும் (பேரா.மெய்.நூ-13) நோக்கெதிர்ந்து தலைவன் காதற்குறிகண்டு மகிழுந் தலைவிக்கு உள்ளுணா்வு பொங்கப் பொள்ளெனப் புறம்வியா்த்தல் இயல்பாதலின் மறையா அவள் சிறுநுதலின் குறுவோ்வை தோன்றும் என ச.சோ.பாரதியும் (ச.சோ.பா.மெய்.நூ-13) உரை கொள்வா். இவற்றின் வழித் தலைமகன் தலைமகளை நோக்கியவழி தலைமகளிடையே அச்சமும் நாணமும் தோன்ற நுதல் வியா்தல், பொறிநுதல் வியா்த்தல் எனப்படும் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் ச.சோ.பாரதியும்,
“பெரும்புழுக் குற்றநின் பிறைநுதா் பொறிவியா்
உறுவளி யாற்றச் சிறுவரை திறவென“ (அகம்-136)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலில் படுக்கையில் என் உயிருக்கு உடம்பாக வந்த தலைவி உடம்பு முழுவதையும், புத்துடையால் போர்த்திக் கிடந்தாள். நான் அவளை நெருங்கி அவள் முகத்தைக் காண விரும்பி மிக்க புழுக்கத்தால் உனது நெற்றியில் அரும்பிய வியா்வையைக் காற்று நீக்குமாறு சிறிது திற என்று கூறி அன்பின் மிகுதியால் போர்வையை நீக்கினேன் என்பதில் பொறிநுதல் வியா்த்தலெனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.
1.2.2 நகுநயம் மறைத்தல்
நகுநயம் மறைத்தலென்பது தலைமகன் கூறுவனகேட்டு நகை வந்துழி நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல் என இளம்பூரணரும்; தலைமகன்கட்டோன்றிய குறிப்புகளான் அதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்த வழியும் நகாது நிற்றலும் எனப் பேராசிரியரும்; முதற்காட்சியில் தலைவன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவி மகிழ்வான் முகிழ்க்குந் தன் முறுவலை “பிணையோ; மடநோக்கும் நாணுமுடையள் ஆதலின் மறைக்குமவள் முயற்சியைக் குறிப்பதாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், “நாணினளிறைஞ்சி மிகை வெளிப்படாது நகைமுகங்கரந்த நன்னுதல் அரிவை“ என வருதல் காண்க என ச.சோ.பாரதியும் பொருள் கொள்வா். இதன் வழி நகுநய மறைத்தலென்பது தலைவன் தலைவியை நோக்கிச் செய்யும் செயலினால் தலைவிக்கு நகை தோன்றியவழி அதனைத் தலைவனுக்கும் புலனாகாமல் மறைத்தலே நகுநய மறைத்தல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியா். குறுந்.169, குறள்.1274 ஆகிய பாடல்களையும், ச.சோ.பாரதி, குறள்.1098, 1271, 1274 ஆகிய குறட்பாக்களையும் எடுத்தாண்டுள்ளனா்.
1.2.3 சிதைவு பிறர்க்கின்மை
சிதைவு பிறா்க்கின்மையென்பது தன்மனனழிவு பிறா்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது என இளம்பூரணரும்; நகுநய மறைத்த வழியும் உள்ளம் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு (தலைவிக்கன்றிப்) புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தலும் எனப் பேராசிரியரும்; நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் தலைவி தன்நிறையழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி என ச.சோ.பாரதியும் உரை கொள்வா். இவற்றின் வழி நகுநய மறைத்தும் தலைவன் மீதான அளவுக்கடந்த காதலால் மனன் சிதைந்தவழி அதனை புறத்தார்க்குப் புலப்படாது காத்தல் (சிதைவு பிறர்க்கின்மை) என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியா் தொல். பொருள்.98 ஆம் நூற்பாவில் ச.சோ.பாரதி குறள்.1253, சீவக 710-712 ஆகியவற்றினையும் எடுத்தாண்டுள்ளனா;. மேலும் பேராசிரியா்,
“அகமலி யுவகைய ளாகி முகனிகுந்து
ஒய்யென இறைஞ்சி யோளே“ (அகம்.86)
எனும் பாடலை எடுத்தாண்டுள்ளார். இப்பாடலில் அகத்தே பொலிந்த மகிழ்ச்சியளாய் நாணினால் முகத்தை வளைத்து விரைவு வணங்கினாள் தாழ்ந்தாள் என்றவழிச் சிதைவு பிறா்க்கின்மை எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டமையை அறிய இயலுகிறது.
1.2.4 புகுமுகம் புரிதல்
புகுமுகம் புரிதலென்பது தலைமகன் புணா்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல் என இளம்பூரணரும்; ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்மை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி; புகுதலென்பது தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான் சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக்கெதிர் நோக்குதலை முகநோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றானென்பது. புரிதலென்பது, மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாளாம்; மற்றது தலைமகற்கு உரித்தன்றோவெனின் அவன்தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான், அது தலைமையன்றாகலி னென்பது அது எனப் பேராசிரியரும்; “புகுமுகம்“ என்பதை “முன்றில்“, “தொழுதெழும்“, “வணங்கி வீழ்ந்தான்“ என்பன போலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும் என ச.சோ.பாரதி உரைகொள்வா். இவற்றின் வழி புகுமுகம் புரிதலென்பது தலைவனும் தலைவியும் முதற்முதலாய் எதிர்ப்பட்ட வழி தலைமகன் தலைமகளை நோக்கிக் காமக் குறிப்பினனாய் அவள் முகத்தை நோக்குதல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் குறள்-1085 ஐயும். பேராசிரியா் குறள்-1094ஐயும்; ச.சோ.பாரதி குறள்.1082 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனா்.
1.3 முடிவுரை
முதலாமவத்தையினை விளக்க இளம்பூரணர்; ஒரு திருக்குறளையும் பேராசிரியா் இரண்டு திருக்குறள், இரண்டு அகநானூற்றுப்பாடல், ஒரு குறுந்தொகைப் பாடல், ஒரு தொல்காப்பிய நூற்பா என ஆறு எடுத்துக்காட்டுகளையும்; ச.சோ.பாரதி ஆறு திருக்குறள்களையும், அகநானூற்றுப் பாடல் ஒன்றையும், சீவகசிந்தாமணிப் பாடலடி ஒன்றையும் என எட்டு எடுத்துக்காட்டுகளையும் எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி உரையாசிரியா்கள் திருக்குறள் (1085, 1094, 1274, 1082, 102, 1098, 1271) ஏழும், அகநானூறு (136, 86) இரண்டும், குறுந்தொகை (169) ஒன்றும், தொல்காப்பிய நூற்பா (தொ.பொ.98) ஒன்றும் எனப் பதினொரு எடுத்துக்காட்டுகளை எடுத்தாண்டுள்ளனா். இதில் அதிகமாகத் திருக்குறளும் அடுத்தப்படியாக அகநானூற்றுப் பாடலும் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.
*****
கட்டுரையாசிரியர்
தமிழ்த்துறைத்தலைவர்
டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம்
க. பாலசுப்பிரமணியன்
இறைவனின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
பல நேரங்களில் நம்முடைய மனதில் எழுகின்ற ஒரு ஐயம் – இறைவனை எப்போது வணங்கினால் அவனுடைய பார்வை நம் மீது விழும்? காலையிலா. மாலையிலா அல்லது நண்பகலிலா? அவனை எப்படி பூசிப்பது? என்ன மலர்களைக் கொண்டு வழிபடலாம்? என்ன சொற்கள் கொண்டு போற்றலாம்? இறைவனுக்கு என்ன உணவு பிடித்தமானது? என்ன உணவுகளை படைக்கலாம்? என்ன செய்தாவது, அவனுடைய கடைக்கண் பார்வையில் நிரம்பி வழியும் அருளுக்குப் பாத்திரமாகி விட வேண்டும் என்ற எண்ணம்.
இந்த ஐயத்தினை விளக்கும் வகையிலும் தடுமாறுகின்ற உள்ளங்களுக்கு வழிகாட்டும் வகையிலும் திருமூலர் கூறுகின்றார் :
பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசர்க் கிணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே
அதுமட்டுமல்ல.. அவன் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்குழல் சேரவொண் ணாதே
“ஊனினை நீக்கி உணர்தல்” – ஒரு சாதாரண மனிதனால் எப்படி முடியும்? இதற்கு நாம் வெளி உலகத்தைத் தேடும் புற அறிவினை விட்டு உள்நோக்கிச் செல்லுதல் அவசியம். உள்ளிருந்து நமக்கு வழிகாட்டும் பேரொளி தான் நமக்கு ஐம்பொறிகளின் தூண்டுதலால் ஏற்படுகின்ற துயரங்களிலிருந்து விடுதலை தரும்.
இந்த நிலைக்குச் செல்ல நாம் என்ன முயற்சி செய்ய வேண்டும்? முன்காலத்தில் அடியார்கள் வேண்டியதெல்லாம் “இறைவா., எனக்கு இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்ல வழிகாட்டு; பொய்மையிலிருந்து வாய்மை நோக்கிச் செல்ல வழிகாட்டு: அநித்தியத்திலிருந்து நித்தியத்தை நோக்கிச் செல்ல வழிகாட்டு.” என்பதே. இருளிலிருந்து ஒளியைத் தேடித் செல்ல நாம் முயற்சிக்க வேண்டாமா? இதை எப்படிச் செய்யலாம்? திருமூலரே நமக்கு வழிகாட்டுகின்றார்:
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே !
என்ன அருமையான சொல்லாடல் ! என்ன ஆழமான கருத்துக்கள்!
“உங்களுடைய உள்ளத்தில் ஞானவிளக்கினை ஏற்றுங்கள். அதன் துணையோடு உள்ளத்தில் இருக்கும் மலங்களை நீக்கி அருளொளியை அடைய முயலுங்கள்” என்ற கருத்தை அழகாக முன்வைக்கின்றார் .
“சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே.”
என்று துயரத்தில் வாடுகின்ற பட்டினத்தாரும் அவனைக் “கல்லுளிருந்த கனலாகக்” காண்கின்றார்
சொல்லுக்கடங்கான்காண் சொல்லிறந்து நின்றவன்காண்
கல்லு ளிருந்த கன்னலொளிபோ னின்றவன்காண்.
என்று அவனை உள்ளிருக்கும் சோதியாகக் கருதியே வழிபடுகின்றார்.
அவனுடைய அருள் மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால் அகத்தில் உள்ள மலங்களெல்லாம் நீங்கி உள்ளத்தில் பேரொளியாக அவன் திகழ்வானே ! இதற்கும் அவன் அருள் தானே வேண்டும். இந்த அருள் பெற்ற நிலையை வர்ணிக்கும் மாணிக்கவாசகர் இவ்வாறு கூறுகின்றார்:
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்
நீ அலால் பிரித்து மற்று இல்லை
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்று ஆம்
திருப்பெருந்துறை உறை சிவனே
ஒன்றும் நீ அல்ல அன்றி ஒன்று இல்லை
யார் உன்னை அறியகிற்பாரே.
பரந்து நிற்கும் பரஞ்சோதியை தங்கள் எண்ணத்துக்குள் அனுபவத்திருக்குள்ளும் சொற்களுக்குள்ளும் கட்டுப்படுத்தி அவனை ஒரு வர்ணனைக்குள் கட்டுப்படுத்த நினைக்கும் மாந்தரைப் பார்த்து திருமூலர் கூறுகின்றார் :
உறையற்ற தொன்றை யுரைசெய்யு மூடர்காள்
கரையேற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ?
(தொடருவோம் )
-மு.இளங்கோவன்
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வு மாணவனாக நான் இருந்தபொழுது சென்னை எனக்கு அறிமுகமானது. எங்கள் அண்ணனுடன் சென்னையை வலம்வரும்பொழுதுதான் நண்பர் அ. தேவநேயன் தொடர்பு கிடைத்தது. அவர்தான் “அடவி வரைகலை” வே. இளங்கோவை அறிமுகம் செய்துவைத்தார். அந்த வரிசையில் இன்னொரு நண்பரும் அறிமுகம் ஆனார். அவர் பொம்மலாட்டக்கலைஞர் மு. கலைவாணன். மாணவர் நகலகத் தந்தை ஐயா நா.அருணாசலம் கண்டெடுத்த அறிவுக்கலைஞர்களுள் மு. கலைவாணன் குறிப்பிடத்தகுந்தவர்.
மாணவர் நகலகத் தந்தை நா. அருணாசலம் ஐயா
செய்த தமிழ்ப்பணிகளுக்குத் துணையாக அழைப்பிதழ்
உருவாக்குவது, அச்சிடுவது, ஒட்டுவது, நிகழ்ச்சி வடிவமைப்பது, பதாகை கட்டுவது, படம் வரைவது என்று அனைத்துப் பணிகளையும் சலிக்காமல் செய்த பெருமை மு. கலைவாணனுக்கு உண்டு. தமிழ்ச்சான்றோர் பேரவை விழாக்கள், நந்தன் இதழ்வெளியீடு என்று மு. கலைவாணனின் பணிகள் மாணவர் நகலகத்தில் நீண்டவாறு இருக்கும்.
சென்னை, தியாகராயர் நகரில் அமைந்துள்ள மாணவர் நகலகத்திற்குச் செல்லும்பொழுதெல்லாம் மு.கலைவாணனின் அறிவுத்துறையின் புதிய படைப்புகளைக் கண்டு கண்டு வியப்புறுவேன். அவருடன் உரையாடித் திரும்பும்பொழுது உலக அதிசயத்தைக் கண்டு வியந்த சிறுவனாக மகிழ்ச்சியுடன் வெளிவருவேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் குழு ஒளிப்படம் ஒன்றைக் கொடுத்து, இதிலிருந்து இக்குழந்தை வடிவத்தை மட்டும் தனிப்படமாக்கித் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டேன். அவரும் அறுவைப் பண்டுவத்தில் வல்ல மருத்துவர் ஒருவர், உடலோடும் உணர்வோடும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தையைப் பிரித்தெடுப்பதுபோல் கவனமாக என் குழந்தைப் பருவப் படத்தைப் பிரித்தெடுத்து, உயிர்கொடுத்து வழங்கினார். அதனை இன்றும் என் கண்ணெனக் காத்துவருகின்றேன்.
மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடியபொழுதுதான் கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்கள் இவரின் அன்புத் தந்தையார் என்று அறிந்து என் வியப்புக்கு வரம்புகட்டத் தெரியாமல் அப்பொழுது தவித்தேன். பல இலக்கிய நிகழ்வுகளில் முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு, வணங்கியமையும் உரையாடியமையும் இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன.
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை”
என்ற அரசகட்டளை திரைப்படத்தின் பாடலை இயற்றியும், “நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்! நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!” என்ற பாடலை இயற்றியும் பெருமைக்குரிய கவிஞராக அனைவராலும் அறியப்பட்டவர் ந. மா. முத்துக்கூத்தன் ஐயா என்பதை இங்கு நினைவுகூர விரும்புகின்றேன். புகழ்பெற்ற திரைக்கலைஞர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி, “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன், எம்.ஆர் இராதா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், எஸ்.எஸ்.இராசேந்திரன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர் இவர். அரசகட்டளை, நாடோடிமன்னன், இராஜராஜன் (எம்.ஜி.ஆர்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய “கலைமாமணி” ந. மா. முத்துக்கூத்தன் ஐயா அவர்களைத் தனித்துக்கண்டு அவர்தம் சீரிய பணிகளை எழுத முன்பே நினைத்திருந்தேன். என் விருப்பம் நிறைவேறுவதற்குள் ந.மா. முத்துக்கூத்தனார் 2005 மே 1இல் இயற்கை எய்தினார். இது நிற்க.
கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்களின் அருமைப் புதல்வராக மு. கலைவாணன் பிறந்து வளர்ந்ததால் தந்தையாரின் கலையுணர்வு, கவிதையுணர்வு இவருக்கும் மரபுக்கொடையாகக் கிடைத்தது. எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், ஓவியர், சிறந்த கையுறைப் பொம்மலாட்டக்கலைஞர், வில்லுப்பாட்டுக் கலைஞர் என்ற பன்முகம் கொண்டவர் மு. கலைவாணன்.
மு.கலைவாணன் மிகச் சிறந்த ஓவியர் என்பதை அறிந்து பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா அவர்களின் எங்கள் வீட்டுச் சேய்கள் நூலுக்கு உரிய அட்டைப்படம், உள்படம் வரைவதற்கு, வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டுக்குப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் அழைத்துச்சென்று பயன்கொண்டேன். புதுச்சேரிக்கு வந்தபிறகு மு. கலைவாணனுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அருகியே இருந்தது. அண்மையில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் குறித்த நூலொன்றை எழுதியபொழுது மு. கலைவாணன் நினைவு நெஞ்சில் வந்து தொற்றிக்கொண்டது. அவர்தம் திறமையை நீள நினைந்து, அவர்தம் ஆற்றலை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து எழுதுவதில் மகிழ்கின்றேன்.
கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன், மு. மரகதம் ஆகியோரின் அருமைப் புதல்வராக மு.கலைவாணன் 20.11.1957 இல் பிறந்தவர். “கலைவாணர்” என்.எசு. கிருட்டினன் அவர்களின் மேல்கொண்ட மதிப்பின் காரணமாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார் நம் முத்துக்கூத்தனார்.
மு.கலைவாணன் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றவர். இளமை முதல் தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். மு.கலைவாணன் – தமயந்தி திருமணம் 10.10.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு முத்தரசன், பகலவன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
மு.கலைவாணன் இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலைநிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை நிகழ்வுகளிலும் பகுத்தறிவுக்கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். பொம்மலாட்டத்தில் வழக்கமாக இடம்பெறும் புராணக் கருத்துகளை இவர் பின்பற்றாமல் மக்களும் மாணவர்களும் அறிவுத்தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில் தம் பொம்மலாட்ட நிகழ்வை நடத்துவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.
சென்னை, பொதிகை தொலைக்காட்சிக்காக இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், “கலை மாமா” என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்து தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். ஆசிரியர்களுக்கு இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் 54 ஐயும் நிகழ்த்தியுள்ளார். மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று மலேசியா, சிங்கப்பூர் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ளார். இலங்கைக்கு 2008ஆம் ஆண்டு சென்று, அங்குள்ள தேயிலைத் தோட்டப்பகுதியில் கலைநிகழ்வுகளை நடத்தி வந்துள்ளார். கலை அறப்பேரவை, கலைவாணன் பொம்மலாட்டக் கலைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை நிறுவித் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். பல இடங்களில் வில்லுப்பாட்டுப் பயிற்சி முகாம், பொம்மலாட்டப் பயிற்சி முகாம்களை நடத்தி இக்கலைகள் வளர்வதற்கு அருந்தொண்டாற்றியுள்ளார்.
ஆழிப்பேரலையால் தமிழகத்துக் கரையோர மக்கள் கவலையில் மூழ்கி, கண்ணீருடன் வாழ்ந்தபொழுது, இவரின் பொம்மலாட்ட நிகழ்வுகள் கன்னியாகுமரி முதல், சென்னைவரை நிகழ்ந்து, அவர்களுக்கு மன ஆறுதலையும், துன்ப மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
மு.கலைவாணன் பெற்ற விருதுகள்:
இலக்கிய வீதி அமைப்பு இவரின் பணியைப் பாராட்டி, சிறந்த பொம்மலாட்டக் கலைஞருக்கான விருதினை 1998இல் வழங்கியது. தாராபாரதி அறக்கட்டளை 2002இல் ’பல்கலை வித்தகர்’ விருதினை வழங்கியது. குரோம்பேட்டை திருக்குறள் பேரவை 2010இல் ’கலைஞாயிறு’ என்ற விருதினை வழங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ’கலைஞர் பொற்கிழி விருதினை’, 2004ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் உரூபாயுடன் வழங்கிப் பாராட்டியுள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 2015இல் ’பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டியுள்ளது.
மு.கலைவாணன் நூல்கள்:
தமிழர் மரபு, தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழிச் சிறப்பு, தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்க்கலை வளர்ச்சி, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை குறித்துப் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைவடிவங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் மு. கலைவாணன் அவர்களை உலகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் பிள்ளைகளுக்கு இவர் வழியாக, இக் கலைவடிவங்களைக் கற்றுத் தருவதற்குரிய வாய்ப்புகளையும் சூழல்களையும் அமைத்து, வாழும் காலத்தில் இவரைப் போற்றுவது நம் கடமை.
*****
மு. கலைவாணன் தொடர்புக்கு:
மு.கலைவாணன்,
கூத்தர் குடில்,
58/89 செல்லியம்மன்கோவில் தெரு,
காட்டாங்குளத்தூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 203
பேசி: 9444147373
முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
கேரளப் பல்கலைக்கழகம்
திருவனந்தபுரம்.
வீரத்தையும் காதலையும் சங்ககால மக்கள் தம் இரு கண்களாகக் கொண்டனர். எனவேதான் சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டன. காதலை அகநூல்களும் வீரத்தைப் புறநூல்களும் எடுத்தியம்பின. எனினும் அகநூல்களில் புறச்செய்திகளும் புறநூல்களில் அகச்செய்திகளும் இடம் பெறுவதைக் காணலாம். புறநானூறு என்றதுமே சங்ககால மக்கள் நடத்திய போர்களும் அவர்களது வீரச்செயல்களுமே நமது நினைவுக்கு வரும். ஆனால் போரினால் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி போர்களைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும் கட்டாயமாகப் போர்செய்ய வேண்டிய சூழல்களில் பொது மக்களுக்குத் துன்பம் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாத்த சங்ககால மக்களின் நிர்வாகத் திறனையும் புறநானூறு பதிவாக்கியுள்ளன. இக்கட்டுரை புறநானூறு காட்டும் அக்கால மன்னர்களின் போர் நிர்வாகத்தையும் போரிடர் மேலாண்மை திறத்தையும் எடுத்துரைக்க முயல்கிறது.
போரும் காரணங்களும்
போர் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது போரின் அழிவும் துன்பமும் தான். மனிதகுலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை போராட்ட உணர்வு மேலோங்கியே வந்திருக்கின்றது. நமது நாட்டில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் போர்களால் மக்கள் மிகுந்த துன்பத்தையே அனுபவித்தனர். அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்து கூடிவாழ முற்பட்ட பின்னரும் தொடக்ககால போர் வெறி குறைந்தபாடில்லை. போர் முறையில் ஈட்டியும், வாளும் துப்பாக்கியும் செயலிழக்க புதிய போர்க்கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் இராணுவத் தளவாடங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையும் பெருகிக்கொண்டே இருக்கிறது. வல்லாண்மை மிக்க நாடுகள் இந்த உலகத்தைப் போல பதினைந்து உலகங்களை அழிக்கின்ற அளவிற்கு அணு ஆயுதப் போர்க்கருவிகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அணு ஆயுதங்களைப் பெருக்குவதற்குக் காரணமாக அமைந்த போருக்குரிய சில காரணங்களைக் காண்போம்.
’இந்தியாவில் போர்’ என்னும் நூலில் போருக்குரிய காரணங்களாகக் கீழ்வருவனவற்றை இராமசந்திர தீட்சிதர் சுட்டுகிறார். மறவனின் போர் விருப்பமும் உடல்தினவும் வழிவழியாகப் போர் செய்யத் தூண்டுவனவாக அமைந்தன என்று குறிப்பிடுகிறார். போரையே தொழிலாகவும் போர்க்கள சாவையே புகழுக்குரியதாகவும் தமிழர் விரும்பினர். சங்ககால வீரத்தாயும் தன்மகன் போர் செய்வதையே பெருமையாகக் கருதினாள். சான்றாக,
’புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’ – புறம் 86
என ஒரு தாயிடம் நின் மகன் எங்கு உள்ளான்? என்று வினவியவர்க்கு அவன் போர்களத்து இருப்பான். அவனைப் பெற்ற வயிறு புலி இருந்து சென்ற கன்முழை போன்று இங்கு உளது என்று கூறுவதாக அமைகின்றது.
மேலும் பண்டைய தமிழர் போர் வீரர்களாக இருப்பதையும் போரில் களிறுகளை வீழ்த்துவதைப் பெருமைக்குரிய செயல்களாகவும் கருதியுள்ளனர். இத்தகைய வீரச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடுதல் வேண்டும் என்று புலவர்களுக்குப் பொருள் கொடுத்து ஆதரித்தனர்.
‘ வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின் நன்றுமன் என்ற நின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்ப – புறம் :53
கபிலர் இல்லையே என்று வருந்திய மாந்தரஞ்சேரலிரும் பொறையிடத்து இளங்கீரனார் ‘ நின் புகழ் முற்றுப் பெற்று விடவில்லை அதனைப் பாடி முடிதல் எம்மனோர்க்கு இயலா. கபிலர் இருந்தால் சிறப்புற நின்னை பாடுவான். ஆயினும் என்னால் இயன்றவரைப் பாடுவேன் பாடாதிருந்தால் அரிது என விளக்கினார்.
இத்தகைய எண்ணம் உலகம் முழுமையும் இருந்ததை சி.எம். பெளராவின் வீரயுலகப் பாடல் என்னும் நூல்வழி அறியமுடிகிறது. ஆக போர் என்பது மனிதனின் மனப் போக்கினால் உருவானது மட்டுமன்று உலகத்தின் இயல்பும் கூட எனப் புறநானூறு கூறுகின்றது.
‘ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத் தியற்கை – புறம் – 76
என்ற அடிகள் சுட்டுகின்றன. எனவே போர் பலவழிகளில் நிகழ்ந்துள்ளன. மன்னர்கள் தன் எல்லைகளைப் பரப்புவதற்காகவும் தன் புகழை நிலை நாட்டுவதற்காகவும் போர் செய்தனர். சான்றாக,
முழங்கு முந்நீர் முழுவது வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தானிற் தந்து தம்புகழ் நிறீஇ புறம் 18
கடலால் சூழப்பட்ட இவ்வகன்ற உலகத்தை மன்னன் தன் முயற்சியால் கொண்டு தன் புகழை நிலை நாட்டியதை இவ்வரிகள் சுட்டுகின்றன.
மேலும் தன்மானம் காரணமாகவும் ( புறம் 75) புலவர்கள் தம் வீரச் செயல்களைப் புகழ்வதற்காகவும், போர் நிகழ்த்தினர் என்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிகின்றோம்.
மகளிர் காரணமாகப் போர் நிகழ்ந்ததைப் புறநானூறு பதிவாக்கியுள்ளது. அதாவது மகட்கொடை மறுப்பு காரணமாகப் போர் நிகழ்ந்ததைப் புறம் 116, 337, 342 போன்ற பாடல்கள் எடுத்தியம்புகின்றன.
போரால் ஏற்படும் துன்பம்
போரால் மக்கள் பல துன்பத்திற்கு ஆளானதைச் சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. போர்களத்தில் பிணங்கள் எங்கும் கிடக்கும் தோற்றம் தச்சனின் உலைக்களத்தில் கிடக்கும் கருவிகளைப் போன்றிருந்தது என்றும் ( களவழி 15) வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அவர்கள் உடலிலிருந்து சொட்டுச் சொட்டாகக் குருதி ஒழுகும் காட்சி கார்த்திகை விழாவில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கார்த்திகை விளக்கு போன்று ( களவழி 21) இருந்தது என்றும் யானைகள் போர்க்களத்தில் கிடக்கும் காட்சி குன்றுகளைப் போலிருந்தது என்றும் ( களவ 21) களவழி நாற்பது போர்க்களக் காட்சியை எடுத்தியம்புகிறது. புறநானூற்றில் ஒரு பெண் தன்கணவன் போரிடச் சென்று திரும்பி வராதது கண்டு போர்களம் நோக்கிப் புறப்பட்டாள் . அங்கே அவளது கணவன்
‘ எடுப்ப எழாஅய் மார்பம் மண்புல்ல
இடைச் சுரத்து இறுத்த மள்ள ( புறம்254)
எழுப்ப எழாதவனாய் மார்பில் புண்பட்டு சுரத்திடை வீழ்ந்து கிடக்கின்றான் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன.
…………….யானும்
மண்ணுறு மழித் தலைத் தென் நீர்வார
தொன்று தாம் உடுத்த அம்பகைத் தெரியற்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைத்திருத்தல் அதனினும் அரிதே – புறம் 288
இவ்வரிகள் போர்களத்தில் தன் கணவன் இறந்த செய்தியைக் கேட்ட பெண்ணின் மன நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. முடிகளைந்து தலையைக் கழுவுதலும் அல்லி அரிசியை உண்டு அணிகலன்களைக் களைந்து கைம்பெண் போல கணவன் இறந்த பின்பு வாழ்தல் அரிது என்று ஒரு பெண் புலம்புவதாக அமைகிறது. இதிலிருந்து போர்த்துன்பத்தால் வீரர்கள் இறந்து படுவதும் அவ்வீரர்களின் மனைவியர் பெரும் துன்பத்திற்கு ஆளானதையும் புறநானூறு வழி அறிந்து கொள்ள முடிகிறது.
போர் நிர்வாகம்
நாட்டை ஆளும் மன்னனுக்குத் துணையாக அமையக் கூடியவற்றுள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது படை ஆகும். இதனைத் திருவள்ளுவர்,
’படைகுடி கூழமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு – திரு 381
என்று படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறங்கங்களைக் உடையவன் அரசருள் ஏறு போன்றவன் என்று எடுத்துரைக்கின்றார். இவ்வாறனுள் முதலிடம் பெறுவது படை ஆகும். இப்படையை நிர்வகித்தல் அரசனின் தலையாய கடமையாகும்.
சங்ககால மன்னனுக்கு எனத் தனியான ஒரு நிலையான படை இல்லை என்பதை சங்க இலக்கியம் வழி அறிய முடிகிறது. போர்க்காலத்தில் திரட்டப்படுவனவே படைகளாக அமைந்துள்ளன. அப்படைகள் போர் புரிந்து பல வெற்றிகளையும் பெற்ற செய்தியையும் அறிய முடிகிறது. சிறு குழந்தைகள் வரையிலும் போரில் ஈடுபட்ட செய்திகள் புறநானூறில் பதிவாகியுள்ளன. புறநானூற்றின் வாயிலாக அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ,தேர்ப்படை என்ற நாற்படை பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. எனினும் அதனை மன்னன் எவ்வாறு நிர்வகித்தான் என்பதற்கான அகச் சான்றுகள் மிகக் குறைவாகவே காணக்கிடக்கின்றன.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் சிறுவயதிலேயே போர்த்தொழிலை மேற்கொண்டவன். அவனைப் புகழும் இடைக்குன்றூர் கிழார்,
’ கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்
நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்கவன் கண்ணி தாட் பூண்டு
தாலி களைந்தன்று மிலனே பால்விட்
டயினியு மின்றயின்றனனே – புறம் -77
இப்பாடல் வரிகளில் காலிலே வீரக் கழலை அணிந்த ஐம்படைத் தாலிகழற்றாத இவன் பால் பருகுதலை விட்டு இன்று உணவு உண்டனன் என்று குறிப்பிடுகிறார். அதாவது போர்த்தொழில் செய்ய விரும்புவோர் உடல்வாகை ஊக்குவிக்கும் சத்தானஉணவு வகைகளை உண்டான் என்ற செய்தி இலைமறை காயாக இப்பாடலில் இருப்பதைக் காணலாம். போர் வீரர்கள் பல உணவு வகைகளை உண்டு தம் உடல் வலிமையைப் பெருக்கினர் என்பதையும் அறியமுடிகிறது. பாரதப்போரில் பெருஞ்சோறிட்ட உதியன் சேரலை இங்கு நினைவு கூறத் தக்கது.
போர் செய்யும் முறை
அக்காலத்தில் நிகழ்ந்த போர் முறைகளைத் தொல்காப்பியம் எடுத்தியம்புகின்றது. பழங்காலத்தில் ஐந்து நிலைகளில் போர் நிகழ்ந்ததைத் தொல்காப்பியம் சுட்டுகிறது. இவ்வைந்து நிலைகளுக்கும் ஐவகையான பூக்களை அணிந்தனர். இது இக்காலத்து சீருடைகள் அணிவதற்கு இணையானது என்ற பூரணசந்திரன் அவர்களின் கருத்து இங்கு ஒத்து நோக்கத்தக்கது. தொல்காப்பியர் கருத்துப்படி ஆ நிரைகளைக் கவர்தலே போரின் தொடக்கமாகும் இதற்கு வீரர்கள் வெட்சிப்பூச் சூடுவர். ஆ நிரைகளை மீட்க வருவோர் கரந்தைப் பூச்சூடுவர். கோட்டையில் நின்று போர் செய்வோர் உழிஞைப்பூச் சூடுவர். கோட்டையை முற்றுகை இடுதலைத் தவிர்ப்பதற்கு நொச்சிப்பூ சூடுவர். மட்டுமல்லாது இரு பெரும் வேந்தர்களும் ஒருகுறிப்பிட்ட இடத்தில் நின்று போர் செய்வதற்குத் தும்பைப்பூ சூடுவர். இப்போரில் நால்வகைப் படைகளையும் பயன்படுத்துவர். புறநானூறில் நால் வகைப் படைகளையும் பயன்படுத்துவதால் பெரும்பான்மையும் தும்பைப் போரைப் பற்றியே அதிகமாகப் பேசுகிறது எனலாம்.
மேலும் அக்காலத்தில் போருக்கென சில விதிமுறைகள் இருந்தன. அன்று நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி போன்றவை கொண்டு போரிடும் முறைகள் காணப்பட்டன.
’உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்று மிழிந்தன்று மிலனெ யவரை
அழுந்தப் பற்றி யகல் விசும்பார்ப்பெழக்
கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை’ புறம் – 77
என்ற வரிகளில் தன் எதிரில் வந்து நின்ற பகைவர்களை இறுகப் பிடித்து ஆகாயத்தில் ஒலியெழ உடல் நிலத்தில் விழவீழ்த்தியதை எடுத்தியம்புகிறது. எனவே அக்காலத்தில் நேருக்கு நேர் எதிர்த்து போரிட்டனர் என்பதை அரியலாம். புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆய்தம் இன்றி நிர்கதியாய் நின்றோரையும் தாக்குதல்கூடாது என்பது அக்கால மரபு.
போரிடர் மேலாண்மை
போர்த்துன்பத்தால் ஏற்படும் அபாய நிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளைப் போரிடர் மேலாண்மை எனலாம். அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் உறையுளும் வழங்குதல், வந்த போரை எதிர்கொள்ள படை பலத்தைப் பெருக்குதல் போன்றனவும் இவற்றுள் அடங்கும்.
போரிடரால் மக்களுக்குப் பேரழிவு ஏற்படாதவாறு போர் நிகழ இருக்கும் இடத்தின் அருகிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு பறை அடித்து அறிவிக்கும் நிகழ்ச்சி புறனானூற்றில் இடம் பெற்றுள்ளது.
’ஆவும் ஆன் இயற்பார்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங் கடன் இருக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் புறம்- 9
பசுவும் பசுவினியல்பை ஒத்த பார்ப்பனரும் பெண்களும் நோயுற்றவரும் இறந்து தென்திசையில் வாழும் முன்னோருக்குச் செய்யும் அரிய சடங்குகளை மதித்துச் செய்யும் புதல்வர்களைப் பெறாதவர் எனப்பலரும் கேட்பீராக யாம் எம் அம்புகளை விரைவுபட செலுத்திப் போரிட உள்ளோம் யாவரும் பாதுகாப்பான இடத்தை அடையுங்கள் என்று ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மக்களை இடம்பெயரச் செய்யும் உயரிய பண்பு அன்றைய மக்களிடையே நிலவியிருந்தது. இது இன்றைய போர் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது நினைவு கூறத்தக்கது.
போர்க்களத்தில் படையை அழித்தல், மன்னர்களைக் கொல்லுதல், பகை மன்னர்களின் முரசு, காவல்மரம் இவைககளைக் கவர்ந்து கொள்ளுதல் கடிமரத்தை அழித்தல், ஊரை எரிப்பதுடன் நீர் நிலைகளை உடைத்தல் விளைந்த வயல்களில் தீமூட்டுதல் எனப் பல்வேறு இழிச் செயல்களையும் செய்தனர். இதனை மனதில் கொண்ட புலவர்கள் போரைத் தூண்டாமல் போர் நடக்காமலிருக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தகைய முயற்சிகளைச் செய்துள்ளனர்.
சோழர் குடியில் பிறந்த நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர். அப்போது கோவூர்க்கிழார் என்னும் புலவர் உங்கள் இருவர் மாலையும் ஆத்திப்பூவால் ஆனது. போரில் இருவரும் வெற்றியடைதல் இயலாதது. ஒருவர் வென்று மற்றவர் தோற்பர். உங்களில் யார் தோற்பினும் உங்கள் குடியின் தோல்வியையே அது உணர்த்தும் . உங்களை ஒத்த சேரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இத்தோல்வி பெரும் மகிழ்ச்சியைத் தரும் எனவே போர் செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகின்றார். இதனைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்தியம்புகிறது
‘ நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் நன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே புறம் – 45
மேலும் தந்தை மகனுக்கு இடையே நடந்த போரைத் தவிர்த்தலையும் புறம் 213 ஆம் பாடலால் அறிகிறோம். போரால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி போரைத் தடுத்தலையும் ( புறம் 77) புற நானூறு சுட்டுகிறது.
சங்ககால மன்னர்கள் போர்த்தொழிலில் மட்டுமன்று படையின் வலிமையறிந்து படையை நிர்வகிக்கும் திறனையும் பெற்றிருந்தனர். போரினால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து போரிடருக்குரிய மேலாண்மைத் திறனை பெற்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
பயன்பட்ட நூல்கள்
என்ன ஆச்சரியம்…..வழக்கமாய் ‘’கேசவ்’ படத்துக்கு அடியேன் வெண்பா எழுதுவேன்…. இம்முறை அடியேன் வெண்பாவுக்கு (ரமண வசனாம்ருதம்…. எப்போதும் ஈசனைப் பற்றிக் கூறும் பகவான், அதிகாலை ரமண வசனாம்ருதத்தைப் பிரித்தால் ‘’பெருமாளை’’ப் பற்றி கூறியுள்ளார்…. அந்த வெண்பா ‘’கேசவ்’’ வரைந்த படத்துக்கு பொருத்தமாய் இருந்ததால், அதையே அனுப்பியுள்ளேன்…. இதுதான் COINCIDENCE என்பதா….!)கேசவ் படம் பொருத்தமாய் இருந்ததால் அனுப்பியுள்ளேன்….!ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்….!
–
KRISHNA FOR TODAY….!
——————————————-
” எண்ணம் எழஎழ எல்லாம் பெருமாளெனும்-
வண்ணமாய் பார்த்தால் வழியுண்டு :-முன்னமவர்-
கீதை உரைத்தது குந்தியின் சேய்க்கிலை,-
பாதை நமக்கவர் பந்து”….கிரேசி மோகன்….!