கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
என்ன ஆச்சரியம்…..வழக்கமாய் ‘’கேசவ்’ படத்துக்கு அடியேன் வெண்பா எழுதுவேன்…. இம்முறை அடியேன் வெண்பாவுக்கு (ரமண வசனாம்ருதம்…. எப்போதும் ஈசனைப் பற்றிக் கூறும் பகவான், அதிகாலை ரமண வசனாம்ருதத்தைப் பிரித்தால் ‘’பெருமாளை’’ப் பற்றி கூறியுள்ளார்…. அந்த வெண்பா ‘’கேசவ்’’ வரைந்த படத்துக்கு பொருத்தமாய் இருந்ததால், அதையே அனுப்பியுள்ளேன்…. இதுதான் COINCIDENCE என்பதா….!)கேசவ் படம் பொருத்தமாய் இருந்ததால் அனுப்பியுள்ளேன்….!ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்….!
–
KRISHNA FOR TODAY….!
——————————————-
” எண்ணம் எழஎழ எல்லாம் பெருமாளெனும்-
வண்ணமாய் பார்த்தால் வழியுண்டு :-முன்னமவர்-
கீதை உரைத்தது குந்தியின் சேய்க்கிலை,-
பாதை நமக்கவர் பந்து”….கிரேசி மோகன்….!

