உனக்கு மட்டும்
முதல் கோணல்
முற்றிலும் கோணல்
உன் வரவில்…..
உற்று நோக்கல் தவறா?
உற்று நோக்கியது தவறா?
வினாக்கள் தொடுத்து
இன்றுவரை
விடைகளைப் பெற முடியவில்லை
என்னால்…..
காரணம் கேட்க எந்தவித
பதிலும் வரவில்லை
உன்பார்வையின் தோற்றம்
இதுவரை வேண்டாதவனாய்
பார்ப்பவர்க்கு மட்டும் அது.
என்னைப் பொறுத்தவரை
வேண்டப்பட்டவராய்
மட்டுமே உன் வரவு…
ஊடல்களுக்கு நடுவில்
சில முரண்பாடுகளின்
விளக்கம் உன் வார்த்தையில்
தெளிவுபெறும் போது
சமாதனம் பெறுவது
மனம் மட்டுமல்ல…..
ஊடல்களைத் தீர்க்க
எந்த உறவுகளுக்கும்
தெரியாது மனம் செய்யும்
ஆறுதல் மொழி
உனக்கு மட்டுமே புரியும்
விளக்கம் இன்று வரைத் தேடலே…….
மூச்சுக் காற்றின்
வெம்மையும் இன்று
அனலாகத் தான்
வெளிப்படுகிறது….
நாள்தோறும் உன்னைத் தேடும் கண்களுக்கு
ஆறுதல் கூறுவது இனி
எப்படி என்பது தேடுதலாக அமைகிறது…..?
ஏக்கம் கொள்ளும்
மனதிற்குப் புரியுமா
இது இன்னொருவரின்
பொருள் என்று….
சொந்தம் கொண்டாட
உரிமையில்லை என்று
விளக்கும் பக்குவம்
மனதிற்கோ அறிவிற்கோ
எட்டாது கோபம்
இடைமறிக்கிறது….
விட்டுச் சென்று
வீரநடைப் போட்டு
வாழ்வைத் தொடங்க
மனம் செயல்பட
நினைக்கும் போதெல்லாம்
பார்வையின் பரிசம்
கண்முன் காட்சியாய்
தோன்ற கோபமும்
கானல் நீராய்
காணமல் போவது
வேடிக்கையாகத்தான்
இருக்கிறது………
கோபங்களைத் தாண்டி
மனம் உறுதியாக எடுக்கும்
முடிவினையும் உன் வார்த்தைகள்
பிளவுபடுத்துகிறது…..
நீ விருப்பம் போல செயல்பட
என் வெறுப்புகளை உன் மீது
வேண்டா வெறுப்பாய்
மட்டுமே திணிக்கிறேன்
நீ வேண்டாம் என்பதற்காக
அல்ல…… நீ விலகிச்
செல்வாய் என்பதற்காக…!
கிட்ட இருந்து
வேதனைப் படுவதைக் காண மனம்
இயங்காத போது
எட்ட இருந்து உன்
சந்தோசத்தை நிலைக்கச்
செய்ய முடியும் என்ற
நம்பிக்கையால் மட்டுமே…..
மழையைக் கூட
ரசிக்க மனம் ஒன்றவில்லை
மழையும் உன்னை
நினைவுபடுத்துகின்றது
பிரிந்து செல்ல மனம்
ஏதுவாக இல்லைதான்
இருப்பினும் என் பிரிவால்
உன்னை நீ பெறுவாய்
என்பதால் மட்டுமே
உனக்குரிய பொருள்
உனக்காக இருக்க
இடையே வந்தது
இடம் தெரியாமல்
போக மனம் ஒன்றாத போதிலும்
விலகிப் போக முடிவு
செய்த போதிலும் நடக்குமா
என்பது கேள்விக் குறியே…….!
சிந்து.மூ, உதவிப்பேராசியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,ஈச்சநாரி.