Blog

  • குறளின் கதிர்களாய்…(191)

    -செண்பக ஜெகதீசன்

    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படுங் கீழ். (திருக்குறள்-1078: கயமை) 

    புதுக் கவிதையில்… 

    வறியோர் தம்
    குறைபாட்டினைச் சொன்னதுமதை
    நிறைவேற்றிப் பயன்படுவர்,
    நற்குணம் நிறைந்த மேலோர்…
    கயமைநிறை கீழோரைக்
    கரும்புபோலப் பிழிந்தால்தான்
    பயன்படுவர் பிறர்க்கு…! 

    குறும்பாவில்… 

    சொன்னதும் செய்துதவுவர் சான்றோர்,
    கரும்புபோல் பிழிந்து ஒறுத்தால்தான்
    பயன்படுவர் கீழோர்…!      

    மரபுக் கவிதையில்… 

    வறியோர் வந்து சொன்னாலே
    வலிய வந்தே உதவியேதான்,
    அறிவொடு பண்புடை மேலோரெலாம்
    அகில வாழ்வில் பயன்படுவர்,
    அறிவே யில்லாக் கீழோர்தமை
    ஆலைக் கரும்பாய்ப் பிழிந்தால்தான்
    சிறிதே மனது யிரங்கியவர்
    சீக்கிரம் வருவர் உதவிடவே…! 

    லிமரைக்கூ… 

    சான்றோர் உதவிடுவர் சொன்னாலே,
    ஆலையில் கரும்பெனப் பிழிந்தெடுத்தால்தான்
    கீழ்மக்கள் பயன்படுவர் பின்னாலே…! 

    கிராமிய பாணியில்… 

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன்கொணம் தெரிஞ்சிக்கோ,
    பெரியமனுசன் சின்னமனுசன்
    பொறப்புக்கொணம் தெரிஞ்சிக்கோ…

    பாவப்பட்டவன் சொன்னாப்போதும்
    பெரியமனுசன் ஒதவிடுவான்,
    கேட்டவுங்க
    கொறதீர ஒதவிடுவான்…

    சின்னபுத்தி உள்ளவங்கிட்ட
    சொன்னா ஒண்ணும் நடக்காது,
    அவனக்
    கரும்பப்போலப் புழிஞ்சாத்தான்
    கொஞ்சமாவது ஒதவிடுவான்…

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன்கொணம் தெரிஞ்சிக்கோ,
    பெரியமனுசன் சின்னமனுசன்
    பொறப்புக்கொணம் தெரிஞ்சிக்கோ…!

     

     

     

    Share
  • சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்

    Posted on November 5, 2017
    A team of Saturn moon keeps Saturn’s A ring from spreading. This image from NASA’s Cassini mission clearly show the ring’s density waves created by the small moons. The waves look like the grooves in a vinyl record.
    Credit: NASA
    ++++++++++++++

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    சனிக்கோளின் துணைக்கோளில்
    பனித்தளம் முறியக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்பட்டை  வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீறிட்டெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள் !
    முகில் அயான் வாயுக்கள் எழும் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் திறக்கும் !
    நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் !
    ஊற்று நீராகப் பீறிட
    உந்துவிசை அளிப்பது எது ?
    பனிக்கடல்  உருகித்
    தென்துருவ ஆழத்தில் மட்டும்
    திரவ மானது ஓர் புதிர் !
    ஏழு சந்திரன்கள் சனியின் வளையத்தை
    சூழ்ந்த அரணுக்குள் ஒடுக்கும் !  
    காஸ்ஸினி விண்ணுளவி முடிவில்
    வளையங்கள் ஊடே சென்று
    சனி மீது மோதி முறிந்தது !

    ++++++++++++++++++++

    வளையங்களின் ஊடே உளவியது காஸ்ஸினி விண்ணுளவி

    +++++++++++++++++++

    https://www.sciencedaily.com/releases/2017/10/171017124352.htm

    Image result for planet saturn's rings

    http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY

    http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html

    +++++++++++++++++++++++

     

    சனிக்கோளின் துணைக்கோள்களின் நிறையையும், பௌதிகப் பண்பாடுகளையும், நாசா காஸ்ஸினி விண்ணுளவி விளக்கமாக உளவிக் கணித மூலத்தில் அனுப்பியதால், விஞ்ஞானிகள் சனிக் கோளின் ஜானஸ் துணைக்கோள் மட்டும் முதல் வளைய அரண் அமைப்பைக் கட்டுப்படுத்த முடியாது என்று முடிவு செய்தோம்.

    ராட்வான் தஜேட்டைன் [Radwan Tajeddine] [தலைமை ஆய்வாளர்]

    unnamed (1)

     

    2017 செப்டம்பர் 15 இல் காஸ்ஸினி விண்ணுளவிப் பயணம் முடிந்தது

    கடந்த 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் சனிக்கோளின் முதல் வளையத்தை அரணுள் ஒடுக்கி வைப்பது, துணைக்கோள் ஜானஸ் [Janus] மட்டும்தான் என்று தவறாகக் கருதி வந்தார். சனிக் கோளின் முதல் வளையம் [A – Ring] வெகுதூரத்தில் காணப்படும் மிகப்பெரிய வளையம்.  நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவியின் உளவுத் தகவல் இப்போது சனிக்கோளின் ஏழு துணைக்கோள் ஒருங்கிணைப்பே, முதல் வளையத்தின் அரண் அமைப்புக்குக் காரணம் என்று கார்நல் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்.

    Image result for Number of Rings On Saturn

    சனிக்கோள் வளையத்தின் துண்டு துணுக்குகள், வெளியேற்றப் படாமல் ஓர் சுழற்சி அரணுக்குள் கிடப்பதற்குத் தனித்துவ விசை ஒன்று இருக்க வேண்டும்.  எல்லாவற்றிலும் மிகப்பெரிய எ – வளையத்தை அரணுக்குள் அடைத்த ஏழு துணைக்கோள்கள் எவை ?  பான், அட்லாஸ், புராமிதியஸ், பண்டோரா, எபிமேதியஸ், மிமாஸ், & ஜானஸ் [Pan, Atlas, Prometheus, Pandora, Epimetheus, Mimas, & Janus].   அந்த ஏழு துணைக்கோள்களும் இணைந்து, அவற்றின் கூட்டிணைப்பு விசையே, முதல் வளைய அரணைச் சிதையாது அமைத்து வைத்துள்ளன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Image result for Saturn's moons and rings

    2017 செப்டம்பர் 15 ஆம் தேதி குறிப்பணி முடித்த நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி, சனிக்கோளின் வளையங்களின் பண்பாடுகளை விளக்கமாக உளவி அனுப்பியுள்ளது.  குறிப்பாக முதல் எ -வளையம் வரிசையாய்ச் சுற்றியுள்ள  “திணிவலைகள்” [Density Waves] கொண்டுள்ளது என்று காட்டியுள்ளது.  அதாவது வளையத்தின் சுற்றுத் துணுக்களின் பாதை கிராமஃபோன் பாட்டுத் தட்டுபோல் [Gramaphone Record] உள்ளது.  அந்த  சுழற்சி வரி அமைப்பு “சந்திரச் சீரிணைப்பு” [Moon Resonance] என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்.  சனிக்கோள் வளையத் துண்டு, துணுக்குகள் சிதறி வெளியேறாமல் சேர்ந்து கொண்டிருப்ப தற்குச் சந்திர சீரிணைப்பே காரணம்  என்று தெரிகிறது.  துணைக்கோள்களின் ஈர்ப்பியல் விசையே துணுக்குகளை மெதுவாக்கி, வளையத்தின் நெம்பு மோதலை  [Rings Momentum] தளரச் செய்கிறது.

    saturn-details

    காஸ்ஸினி விண்ணுளவிப் பாதையைச் சிறிதளவு கட்டுப்பாடு செய்ததும், எங்களுக்குப் புதிய குறிக்கோள் [Radio Science Experiment] நிறைவேற வழி அமைந்தது. நாசா விண்ணுளவி  சனிக்கோள் வளையத்தின் இடைவழி புகுந்து முதன்முதலாய் வளையங்களை ஆழ்ந்து ஆய்வு செய்தது.

    ஏர்ல் மைஸ் [காஸ்ஸினி திட்ட ஆளுநர், நாசா ஜெட் உந்து ஆய்வகம்] 

    பல்லாண்டுகளாய் நாங்கள் திட்டமிட்டது.  இப்போது அது வெற்றி பெற்று வளைய நோக்குச் சுற்றுப் பாதையில் [Ring-Gazing Orbit] புதிய தகவல் இலக்கம் வருகிறது என்பதை அறியும்போது எங்கள் மனம் துள்ளுகிறது. இந்தப் புல்லரிப்புப் பயணத்தில் இதுவே ஓர் உன்னத தருணம்.

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி, ஜெட் உந்து ஆய்வகம்] 

    Image result for Saturn's moons and rings

    சனிக்கோள் வளையத்தை ஊடுருவும் காஸ்ஸினி விண்ணுளவி

    2016 டிசம்பர் 6 இல் முதன்முதலாக, நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி திசை திருப்பப்பட்டு சனிக்கோளின் வளையங்களின் இடைவெளிப் புகுந்து விளக்கமாய்ப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளது.  டிசம்பர் 4 ஆம் தேதியன்று விண்ணுளவி சனிக்கோளின் முகிலுக்கு மேல் 57,000 மைல் [91,000 கி.மீ] உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது.  அவ்விடத்தில்தான் சனிக்கோளின் சிறு துணைக்கோள்கள் “ஜானஸ்”, எபிமேதிஸ்” [Janus & Epimetheus] உருவாகி மிஞ்சிய  மங்கலான தூசி வளையம் ஒன்று சுற்றி வந்தது.  அது சனிக்கோள் வளையம் F இன் மையத்திலிருந்து [Saturn’s F Ring]  சுமார் 6,800 தூரத்தில் உள்ளது.  காஸ்ஸினி விண்ணுளவியின் காமிராக்கள் வளையத்தைக் கடக்கும் முன்பே படமெடுக்கத் தொடங்கின. அடுத்த வளையத்தின் ஆய்வு டிசம்பர் 11 இல் திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தம் 20 வளையங்கள் ஏப்ரல் 22, 2017 வரை நெருங்கி ஆராயப்படும்.

    Image result for Number of Rings On Saturn

    cassini-final-images-1

    இறுதியாக விண்ணுளவி சனிக்கோளின் துணைக்கோள் டைடானை [Titan] நெருங்கிச் சுற்றி [Flyby Swing] விரைவாக்கம் பெறும்.  அதன் பிறகு, 1500 மைல் [2400 கி.மீ.] அகலமுள்ள சனிக்கோளின் உட்புற வளையத்தை ஏப்ரல் 26, 2017 இல் 22 முறைகள் கடந்து தகவல் அனுப்பும்.  முடிவாக செப்டம்பர் 15, 2017 இல் விண்ணுளவி சனிக்கோள் சூழ்வெளியில் விழ விடப்பட்டு, சமிக்கை தீரும்வரைத் தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.

    காஸ்ஸினி விண்ணுளவி 1997 இல் ஏவப்பட்டு 2004 இல் சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்து. 12 ஆண்டுகள், சனிக்கோள், அதன் துணைக்கோள்கள், வளையங்கள் பற்றித் தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது.  இப்போது வளையத்தை ஆராயும் இறுதிப் பணியோடு காஸ்ஸினியின் பயணம் முடிவடையப் போகிறது.  காஸ்ஸினி விண்ணுளவியின் சிறப்பான கண்டுபிடிப்புகள் துணைக்கோள் என்சிலாடஸில் [Enceladus] உள்ள கடல் நீரூற்றுகள், டைடான் துணைக்கோளில் உள்ள திரவ மீதேன் [Liquid Methane]

    fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus

    +++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
    13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)

    15. https://www.sciencedaily.com/releases/2017/10/171017124352.htm [October 17, 2017]
    ******************

    S. Jayasbarathan   jayabarathans@tgmail.com.com [November 5, 2017] [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150913 -Soulmates -watercolour -wm

    ’’கால்மாட்டில் மேய்ந்திட கோமாதா ரெண்டுமே
    டோல்கேட்(TOOL GATE) திருமால்தன் காலெட்ட(கால் எட்ட),-மால்காட்டில்
    பால்கொட்டி மாரியாய்(மழையாய்) பந்தயமாய்ச் சுற்றுது
    ஸோல்மேட்டை ,ம்யூஸிகல் சேர்(MUSICAL CHAIR)”….கிரேசி மோகன்….!

     

    Share
  • இன்றைய பொருளாதார நிலையில் மாற்றம் வருமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்திய பொருளாதார வளர்ச்சியில் தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை தற்காலிகமானதுதான் என்று உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் கூறியுள்ளது சமாதானம் ஏற்படுத்துவதாக இருந்தாலும் சமீப காலாண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகியுள்ளது வருத்தத்திற்குரிய விசயமாகவே உள்ளது. இந்த தேக்க நிலைக்குக் காரணமாக உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் கூறுவதும் தேசிய அளவில் புதிய வரி விதிப்பினால் ஏற்பட்ட குழப்பம்தான்.

    ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் கிம் விதைத்துள்ளார். பொதுவாக அனைத்துத் தரப்பினருக்கும் இது சிறந்த திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும், சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத நிலையில் இன்று பிரச்சனைக்குரியதாகவே உள்ளது. வணிக உலகில் ஏமாற்று வேலை செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி பெரும் சவாலாக உள்ளது என்பது ஒரு நேர் மறையான சிந்தனை.

    வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்னால் வருடம் ஒரு முறை கணக்கு செலுத்தினால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது மாதம் ஒரு முறை கணக்கு செலுத்த வேண்டியதாக உள்ளது. இது பழக்கத்திற்கு வருவதற்கு சற்று சிரமம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சில தொழில்களுக்கு மிக அதிகப்படியான வரிவிதிப்புகள் உள்ளதை கவனம் கொண்டு சரிசெய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இந்திய ஜிடிபி ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏப்ரல் -ஜூன் காலாண்டில் 5.7 சதவீதமாக உள்ளது.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் குறைந்துள்ளதற்கான காரணம் ஜிஎஸ்டி சட்டத்துக்கு தயாராவதற்கு ஏற்பட்ட குழப்பம்தான் என்று கொள்வோமானால் இந்தப் பிரச்சனையை தற்காலிகமானதாகக் கொள்ளலாம்.ஆனால் இந்திய பொருளாதாரத்தில் இந்தச் சட்டம் மிகப் பெரிய அளவில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி சட்டம் ஆகிய இரண்டும்தான் மந்த நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், பொருளாதார அறிஞர்களும் குற்றம் சுமத்தி வருவது சிந்திக்கத்தக்கது.

    இந்தியா இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமாகுமா என்ற வினா இன்று பல தரப்பிலும் எழுப்பப்பட்டுள்ள இன்றைய நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிப்பதன் மூலமாக இந்தியாவில் வளர்ச்சித் தரத்தை அதிகரிக்க வேண்டுமானால் , முக்கியமான தளங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்று உலக பொருளாதார கருத்துக்களம் கருத்து தெரிவித்துள்ளது.

    பொருளாதாரத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கு பெற்றால் அது உண்மை ஆகலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடு என்ற நிலையை பொருளாதார வளர்ச்சியின் மூலம் இந்தியா வென்றது.

    பாலின இடைவெளியைப் பொருத்தவரை உலகிலேயே மிக மோசமான ஒன்றாக நம் இந்தியா இருப்பதும் கண்கூடு. உலகளாவிய பாலியல் இடைவெளி கருத்துக்கணிப்பின் அறிக்கையில் இந்தியா மொத்த 144 நாடுகளில் 108 ஆவது இடத்தில் உள்ளது. உண்மையில் இந்த இடைவெளி மேலும் கூடுதலாக இருப்பதையே வேறு சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

    ஒரு ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் 66 சதவீதம் பெண்களுக்கு தங்கள் பணிகளுக்கான ஊதியமே செலுத்தப்படுவதில்லை, இதில் ஆண்கள் 12 சதவீதம் மட்டுமே. மேலும் இந்த அறிக்கையில், தொழிற்சங்கங்களில் பங்கேற்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மேலாளர்கள், தொழில் மற்றும் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் பெண்களின் விகிதம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது பெரும் சவால்களையே சந்தித்துக்கொண்டிருக்கிறது.

    பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் முக்கிய சவால் என்றால் அது குழந்தைப்பேறு காலங்களில்தான். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகப்பேறு விடுப்புச் சட்டத்தில் அரசு சில மாற்றுத் திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும். இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட உலக வங்கியின் சமீபத்திய வணிக வேலைவாய்ப்பு அறிக்கையும் இந்த புதிய சட்டம் ஒட்டுமொத்த வேலை தரத்தையும் மேம்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்தியாவில் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகளில் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் உள்ளனர். நிறுவனங்களின் உயர் மட்ட பதவிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருப்பதால் நிர்வாகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதும் சமீபத்திய கார்ப்பரேட் ஆளுமை பற்றிய உதய கோடக் அறிக்கை மூலம் அறியமுடிகிறது.

    Share
  • ”ஸ்ரீராம தர்ம சரிதம்” (16)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: 16

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1
    “மிதிலைக்குப் புறப்படுதல்”

    பொழுது புலர்ந்த வேளையதில்
    புனிதக் கதிரின் மேன்மைகளை
    தொழுது முடித்த இராமபிரான்
    தூய முனியின் முகம்பார்த்து
    விழுது நாங்கள் உங்களது
    விருப்பம் அறிய விரும்புகிறோம்
    எழுத முடியா குருவருளே
    இயம்பும் அடுத்த செயலென்றார்! (1)

    அங்கே இருந்த முனிவர்கள்
    அன்பாய் இராமன் விழிநோக்கி
    சிங்கம் போன்ற சீராளா
    சேர்ந்து வருக எங்களுடன்
    பொங்கும் ஞான மிதிலைக்குப்
    போக வேண்டும் எல்லோரும்
    அங்கு நடக்கும் யாகத்தின்
    அருமை அப்படி என்றார்கள் ! (2)

    ஜனகரிடம் உள்ள “வில்”

    மிதிலை அரசன் ஜனகருக்கு
    மிகுந்த செல்வம் இருந்தாலும்
    எதிலும் அவர்க்குத் துளிகூட
    ஈர்ப்பே இன்றி வாழ்கின்றார் !
    முதியோ ரான முன்னோர்க்கு
    முன்பு கிடைத்த “வில்”லொன்றை
    புதியோ ரான நீர்காணப்
    புறப்ப டுங்கள் என்றார்கள் ! (3)

    “சோணா நதிக்கரை அடைதல்”

    விசுவா மித்ரர் புறப்பட்டார் ;
    விரும்பிப் பறவைக் கூட்டங்கள்
    பசுவும் கன்றும் விலங்கினங்கள்
    பக்தி யுடன்பின் வரக்கண்டு
    “திசையாம் வடக்கில் செல்கின்றோம்
    திரும்பி நீங்கள் செல்கவென்று”
    அசையா மனத்து முனிமன்னன்
    ஆசி தந்து அனுபினரே ! (4)

    சோணா நதியின் கரைவந்து
    சுகமாய் சந்தி செய்தார்கள்
    காணா சாந்தி கிடைத்ததுபோல்
    கவலை மறந்து செபித்தார்கள் !
    வீணாய்க் காலங் கழிக்காத
    விசுவா மித்ரர் குலக்கதையை
    வாணாள் சிறக்க உதவுமென
    மனத்தால் வணங்கிக் கேட்டார்கள் ! (5)

    “விசுவாமித்ரரின் குலக்கதை”

    நான்கு முகனின் மகன்”குசனின்”
    நல்ல தவத்தின் பயனாக
    நான்கு மகன்கள் பிறந்தார்கள்
    ஞான வான்கள் ஆனார்கள் !
    வான மழைக்கு ஈடாக
    வளர்ந்த பிள்ளை “குசநாபன்”
    மான மிகுந்த பெண்பிள்ளை
    வரமாய் நூறு பெற்றிட்டான் ! (6)

    நூறு பெண்கள் அழகினிலே
    நொடியில் வீழ்ந்த வாயுவிடம்
    வேறு பெண்ணைத் தேடுங்கள்
    விட்டு விடுங்கள் ஆசையென
    கூறிய மொழியில் சூடாகிக்
    கோபங் கொண்ட வாயுவுமே
    நேரிய பெண்கள் யாவரையும்
    நெஞ்சம் நடுங்கச் செய்துவிட்டான். (7)

    பெண்கள் பொறுமை நிலைபுரிந்து
    “பிரும்ம தத்தர்” எனும்மன்னன்
    திண்ணம் இவர்க்குத் துணையென்றே
    சேர்த்து வைத்தார் தந்தைதான் !
    பெண்கள் சென்ற பின்தனக்குப்
    பிள்ளை வேண்டிக் குசநாதன்
    எண்ணி யாகம் முடித்திட்டார் !
    இனிய மகனாய்க் “காதி”பெற்றார். (8)

    அறத்தை அகத்தில் காக்கின்ற
    அன்புத் தந்தை “காதிக்கு”
    புறத்தே இரண்டு பிள்ளைகள் !
    போற்றும் படியாய் “சத்யவதி”
    துறவை மனத்தில் வைத்திருக்கும்
    தொண்டன் அடியேன் “கௌசிகனும்”
    இறைவன் கொடுத்த கொடையாக
    என்றும் நிலைத்து வாழ்கின்றோம். (9)

    “கௌசிகீ நதியின் வரலாறு”

    மூத்த பெண்ணை “ரிசீகமுனி”
    முறையாய் மணந்த பின்னாலே
    காத்த தவத்தின் பயனாக
    களிக்கும் தேவ ருலகத்தில்
    பூத்த பொன்னாய் ஆனார்கள் !
    பூமி காக்க சத்யவதி
    ஏத்த நதியாம் “கெளசிகீயாய்”
    இமயம் வழிந்து செழிக்கின்றாள். (10)

    “குலத்தின் பெருமை கேட்டதனால்
    குணத்தைக் கூறித் தெரிவித்தேன்
    நிலத்தின் பெருமை சத்தியத்தை
    நிதமும் காக்கும் மேலோரின்
    பலத்தில் தானே உள்ளதென்று”
    பண்பு விசுவா மித்திரரும்
    நிலத்தில் நிலவின் ஒளிபரவும்
    நேரம் இரவில் துயில்கொண்டார். (11)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 31, 32, 33, 34ம் பகுதி நிறைந்தது)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4319
    ”தாயை மயக்குகிறார், தாமோ தரர்தன்மண்
    வாயைத் திறக்க வினோதங்கள்: -ஆயர்
    குலக்கொழுந்தா!அன்றி கடவுளா! என்று,
    அலமலங்கி னாள்அன்னை அன்று’’….கிரேசி மோகன்….!

    Share
  • பெருகிவரும் மன நோயாளிகள்…

    பவள சங்கரி

    மன அழுத்தம் என்பது உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005 மற்றும் 2015 க்கு இடையிலான காலகட்டத்தில் 18% அதிகரித்துள்ளது.

    இந்தியாவில், மனநல சுகாதார மற்றும் நரம்பியல் ஆய்வாளர்கள் (NIMHANS) நடத்திய, இந்தியாவின் தேசிய மனநல சுகாதார ஆய்வில், 2015-16, கணக்கெடுப்பு செய்யப்பட்ட மக்கள் தொகையில் 13.7% மக்கள் மன நோய்களின் பாதிப்படைந்திருப்பதை வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பதட்டம் கோளாறுகள் உள்ளிட்ட பொது மனநல குறைபாடுகள் நம் இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10% பேரை பாதிக்கின்றன அதாவது இந்தியாவில் 20 பேரில் 1 நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் நாட்டில் கிராமப்புறங்களில் மிக அதிகமாக இருக்கிறது.
    தேசிய மனநல சுகாதார திட்டத்தின் படி, ஒவ்வொரு முக்கியமான சுகாதார மையத்திலும் அடிப்படை மனநல பராமரிப்பை வழங்க வேண்டும் .
    பல கிராமப்புற பகுதிகளில், மனநோய்க்கு எதிரான மூட நம்பிக்கைகள் ஒரு கடுமையான சமூகக் களங்கமாகி உள்ளது என்பதை NIMHANS ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் மன நோய் என்பது “தீய ஆத்மாவின் உடைமை” என்று கருதப்படுகிறது. இந்த தீய ஆவியை அகற்றுவதற்காக, மன நோயாளிகளை குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய வைத்தியர்களையோ அல்லது மத குருமார்களையோ நம்பியிருக்கிறார்கள். மனக் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தப் பிரச்சனை மேலும் கடுமையாகிறது. மன நோயாளிகளிடம் சமூகத்தில் பாகுபாடு சிந்தைகள் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான குடும்பங்கள் மன நோயாளிகளை மற்றவர் முன்னிலையில் சொல்லவே தயங்கி, மறைக்கவும் முயல்கிறார்கள்.

    இந்தியாவில் பயிற்சி பெற்ற மன நோய் மருத்துவர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. 1,00,000 மக்கள் தொகையில் 0.2 உளவியல் நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். கிராமிய மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. மனநல குறைபாடுகளுடன் வாழும் பல தனிநபர்கள் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், அதற்குரிய மனநல சுகாதார உள்கட்டமைப்புகளும் சரிவர இல்லாததால் பொது சுகாதார பிரச்சனைகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மன நோயாளிகள் பொருளாதார சிக்கலாலும் சரியான சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். வெகு தொலைவில் இருக்கும் அரசு மருத்துவ மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய சூழலில் போக்குவரத்துச் செலவைக்கூட அவர்கள் சமாளிக்க முடியாமல் போவதும் முக்கிய காரணமாகிவிடுகிறது. அரசும், தொண்டு நிறுவனங்களும் இந்தப்பிரச்சனையில் கவனம் செலுத்தி தீர்வு காண முயலவேண்டும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171103 i - Gosakha -wm

     

    ”நாஸகர் கம்ஸனுக்கு, நாயகர், வாகீஸ
    போஷகர் வெண்பா விளையாட்டில், -கோஸகர்,
    கொட்டும் மழையில் குளிர்காத்த ரக்‌ஷகர்,
    விட்டலவர் கண்ணன் வியப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • என் விழி மூலம் நீ நோக்கு !

     

    image (4)

     

     

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா

     

     என் விழி மூலம் நீ பார்க்க முயல்;

    வாய் களைத்து போகும் வரை

    நான் பேச வேண்டுமா ?

    உன் விழி மூலம் பார்த்தால்,

    சீக்கிரம்

    நம் காதல் முறிந்து போகும்

    வாய்ப்புள்ளது !

    நாமிருவரும் தீர்த்துக் கொள்ளலாம்,

    தீர்வு காண முடியும் நாம்.

    சிந்தித்துப் பார்

    நீ என்ன சொல்கிறாய் என்று.

    நம் வாழ்நாள் மிகவும் குறைவு !

    நாம் புகார் செய்யவோ,

    தகராறு புரியவோ,

    சண்டை செய்யவோ

    நமக்கு ஏது நேரம் ?

    அவை யாவும் பெரும் தவறாய்த்

    தெரியு தெனக்கு ! 

     

    மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்:

    என் விழி மூலம் நோக்கு !

    உன் விழி மூலம் பார்த்தால்

    உறவு அறுந்து போகும்

    சீக்கிரம் !

    யார் சொல்வது சரி ?

    நீயா ? நானா ?

    காலமே உனக்கறி விக்கும்

    ஒருநாள்.

     

    Share
  • எழுத்து – 5

    வேதா . இலங்காதிலகம்
    dsc_0023pl

     

     

     

     

     

     

     

     

     

     

     

    முன்னுரையாய் அறிவுப் பள்ளத்தாக்கில் நுழைந்து

    மென்னீல எழுத்து நதியில் கரைகிறேன்.

    என்னவெல்லாமோ எழுத்தில் பகிர ஆசை

    பன்மையாய் உந்துகிறது மழைத் துளிகளாக

    உன்னுது எண்ணங்கள் எழுத்தாயுதிர்ந்திட ஆயினும்

    முன்னேறும் அக்னியுறங்கும் காடு எழுத்துலகம்.

    மென்னகை மென்னடை வன்மையாகவும் விழுந்து

    முன்மாதிரியாக முரண்டுடன் முன்னோடியாகிற நல்லெழுத்து.

     

    மூச்சாக, பேச்சாக, வீச்சாகும் எழுத்து

    பூச்சான உலகில் உண்மையான உயர்வு.

    நீச்சல் நீட்சியான நீன்மை (பழைமை) நீரதி(கடல்).

    தீச்சொல்லற்ற நேர் பயண நினைவு.

    அச்சமற்றுத் தகுதியாய் வாழ்வதின் முனைவு.

    உச்சமான வாழ்வு மேன்மை நிறைந்தது.

    பச்சை உண்மைகளே பதியப் படுகிறது.

    துச்சமின்றி நிலைக்க வேண்டுமென் இச்சை.

     

    நாள்தோறும் புதிய புரிதல்கள் பாடங்கள்

    ஆள்கை முயற்சியடிப்படை கோவை(கோப்பாய்) மண்ணே

    தோள் கொடுத்துத் துணை வருகிறது

    நாள் கிழமை பார்க்காத உலா.

    நீள்வது அமாவாசையிலும் மாணிக்க ஒளியன்றோ!

    வேள்வி எழுத்தால் விளையும் நூல்கள்

    தாள் திறக்கும் மனித மனக்கதவுகளை.

    கேள்விச் செல்வத்தோடன்றோ மனிதன் பிறக்கிறான்!

    Share
  • மொழிபெயர்ப்புக் கவிதை – சிங்களக் கவிதை

     துஷாரி ப்ரியங்கிகா

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது.

    உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே

    எம் சுவாசக் காற்று

     

    இரவு பகலாகக் கூலி வேலை

    தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு

    மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு

    வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க

     

    கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை

    அதுவே எமதும் ஒரே கனவு

    அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்

    சிதறியது முத்து மாலை

    இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை

    ஜீவிதம் எனும் நூலிழையில்

     

    சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்

    பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன

    சொற்களை உச்சரித்து வாசிக்கும்

    உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன

    வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்

    வீழ்ந்தழுகிறாள்  எமது மகள்

    தேயிலைச் சாயத்தால் மாத்திரம்

    வயிறு நிரம்பும் நாட்கள் அநேகம்

    ஒவ்வொரு ரூபாயாகச் சேமிப்பாள்

    புத்தகங்களை வாங்கவென

    சீருடையும் கூடக் கிழிந்து

    கந்தலாகிக் கறை படிந்து கிடக்கையில்

    பிளவுண்ட இதயத்தை நிரப்புவது இப்

    பெருந் துயரம் மாத்திரமே

     

     

    வாந்தியெடுக்கும் பட்டினி வயிறுகள்

    முடிவற்றவை

    பசியை அறியாதவர்களுக்கு அவை

    தெளிவற்றவை

    மனிதாபிமானமற்ற உயரதிகாரிகளுக்கு

    போதுமானவையா பதவிகள் மாத்திரம்

    எவரும் எதையும் கண்டுகொள்ளாமல்

    வாய் கண் மூடிக் கிடப்பதுவும் விசித்திரம்தான்

    இம் மகளே எமதுலகின் ராஜ கிரீடம்

    சந்திர சூரியனாக ஒளிரும்

    எமது ஆகாயத்தின் பெரு வெளிச்சம்

    கலங்கிய நீர்க்குளத்தின் உச்சியில்

    எப்போதும் பூத்திருக்கிறாள் எமது மகள்

    செந்தாமரைகள் எழுவது சேற்றிலிருந்துதான்

     

    இருக்கக் கூடும் இம் மகளைப் போலவே

    அழுது புலம்பும் பல மகள்கள்

    இப் பார் முழுதும்

    யாருக்கெல்லாம் கேட்கின்றன

    அந்த அழுகுரல்கள்?

    அதிகாரத்துக்கே எவரும் தலைசாய்க்கும் நிலையில்

    நூலிழையில் முடிந்து வைக்கவா

    இருக்கிறது நீதி?

     

     

    Share
  • மகாகவி பாரதி – பாவலர் துரையப்பா பிள்ளை: நவீன தமிழ்ப் புத்திலக்கிய முன்னோடிகள்

    -ர. சுரேஷ்

     

         தமிழகத்தில் மகாகவி பாரதியும் இலங்கையில் பாவலா் துரையப்பா பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்த கவிஞா்கள் ஆவா். தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி பாரதி என்றால் இலங்கையில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி என்று பாவலா் துரையப்பா பிள்ளையை ஆய்வாளா்கள் குறிப்பிடுவா். மகாகவியைப் போலவே சமூக, அரசியல், பொருளாதார, சமயச் சிந்தனைகள் பாவலா்க்கும் உண்டு. இதனை அவா்தம் கவிதைகளை வாசிக்கும் யாவரும் அறியலாம். சிறப்பாக தேசப்பற்று, சமூகச் சீா்த்திருத்தக் கருத்துகள் இருவருக்கும் பொதுவான அம்சங்களாக விளங்குகின்றன. ஓப்பிட்டளவில் கருத்தொற்றுமை, பொருளொற்றுமை, நடையொற்றுமை போன்றவையும் இருவா் கவிதைகளிலும் ஒருமித்துக் காணப்படுகின்றன. எனவே பாவலா் அவா்களின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றோடு மகாகவியின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றை ஒப்புநோக்கி காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.

    பாவலா் துரையப்பா பிள்ளை:

     1872-ஆம் ஆண்டு ஈழ நாட்டுத் தௌ்ளப்பழை கிராமத்தில் பிறந்தார். வட்டுக்கோட்டை செமினாரியில் கல்வி கற்றார். பின்னா், பாணந்துறை, தூய யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பாணந்துறை ஆசிரியப் பணியைத் துறந்து மும்பையில் உள்ள கோலாப்புர் மிஷனரியில் பள்ளி ஆசிரியரானார்;. பாரதியின் வாழ்க்கையில் காசி நகரம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் போலவே பாவலருக்கு கோலாப்புர் வாழ்க்கை தாக்கத்தினை ஏற்படுத்தியது. பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளுக்குக் கோலாப்புர் வாழ்க்கை வித்திட்டத்தைப் பேராசிரியர் க. கைலாசபதி கீழ்வருமாறு குறிப்பிடுவார்.

         “பம்பாய் வாசம் அவருக்குப் பல வழிகளில் நன்மையாகவே அமைந்தது. இரு வருடங்கள் கோலாப்புரில் பணியாற்றியபின் பெல்காம் இங்கிலாந்து உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சோ்ந்தார். அங்கு ஒரு வருடம் வசித்தார். தனது கல்வியை மேலும் விருத்தி செய்துகொண்ட அதே வேளையில் பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாக பம்பாயில் அரசியல்-சமூக இயக்கங்களில் உழைத்த பாலகங்காதர திலகா், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நவுரோஜி முதலியோரின் நடவடிக்கைகளைக் கவனித்து அவற்றால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக கோகலேயின் செல்வாக்கு அவா் மீது அதிகம் எனலாம்.” (க. கைலாசபதி, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், ப.109.)

         இவ்வாறு கோலாப்புரிலான இந்திய வாழ்வால் பாவலரின் சமூகச் சிந்தனைகள் விரிவுபெற்றன. பின்னா் 1898-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பிய பாவலா் 1901-லேயே தனது முதல் கவிதைத் தொகுப்பான கீதோபதேச கீதரச மஞ்சரி-யை வெளியிட்டார். பின்னா் 1910-இல் மகாஜன கல்லூரியை நிறுவினார். 1929-இல் இயற்கை எய்தினார். பாவலா் பற்றிய சுருக்கமான அறிமுகமாக மேலே சில கூறப்பட்டன.

    மகாகவி பாரதி – பாவலா் துரையப்பா பிள்ளை சமகாலத்தில் உருவான இரு புத்திலக்கிய முன்னோடிகள்:

         பொதுவாக தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாரதியை குறிப்பிடுவதைப் போலவே இலங்கையில் நவீன தமிழ்க் கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாவலா் துரையப்பப் பிள்ளையைக் குறிப்பிடலாம். பாரதியை விட பத்து ஆண்டுகள் மூத்தவரான பாவலா் பாரதியின் கவிதை 1904-இல் தமிழுக்கு அறிமுகமாவதற்கு முன்னரே கவிதை எழுதத் துவங்கியவா் என்ற கருத்து ஈழ ஆய்வாளா்களால் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டு வந்தார் என்பதை மீளாய்வு செய்வதுடன் பாரதி தொடங்கி வைத்த கவிதை மரபு எது என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. பழகுதமிழில் எளிய நடையில் பாமர மெட்டுகளில் பாரதியைப் போலவே பாவலரும் கவிதை எழுதியிருக்கிறார். சமூகச் சிந்தனைகளை மையமிட்டு இருவரையுமே நவீன கவிதை முன்னோடி கவிஞா்கள் என்று குறிப்பிடலாம். எனினும் இருவரின் கவிதைகளிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வது இன்றியமையாத ஒன்றாகும்.

    பாரதி – பாவலா் இலக்கியக் கொள்கைகள்:

         தமிழகத்தைப் பொறுத்தமட்டில் புதுக்கவிதை முன்னோடியாக பாரதியைக் குறிப்பிடுகிறோம். பாவலரைவிட பத்து ஆண்டுகள் இளையவரான பாரதியார் தன் கவிதையைப் பற்றி குறிப்பிடுகையில்,

         “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
              சொற்புதிது, சோதிமிக்க
         நவகவிதை யெந்நாளும் அழியாத
              மாகவிதை”

    என்று குறிப்பிடுகின்றார். மேலும் தான் இயற்றிய பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில், “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது மொழிக்கு உயிர் தருவோனாகிறான்” என்று தமது கவிதை குறித்த இலக்கிய கொள்கையைப் பிரகடனப்படுத்துகிறார்.

         பாரதி சொல்லியபடியே பழகுதமிழில் இனிய நடையில் சமூக சிந்தனைகளை மையமிட்டு அவருக்கு முன்னதாகவே பாவலர் அவர்கள் சிந்தித்து எழுதியுள்ளார். பாரதி இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த கருத்து நிலையே பாவலருக்கும் இருந்தது என்பதை அவர் இயற்றிய யாழ்ப்பாண சுவதேச கும்பியின் அவையடக்கப் பகுதியில் கண்டுகொள்ளலாம். அது,

         “தேசோப காரங் கருதி இக்கும்மியை
           செப்புகின் றேனாதலால் எவரும்
           லேசாய் விளங்க இலகு தமிழில்
           இயம்புவதே நலம் சங்கமின்னே”

         இவ்வாறு கவிதையின் நோக்கம் சமூகத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமென இவர் பிரஞ்கை பூர்வமாக உணா்ந்திருந்தார். பாரதி பாடிய பெண் விடுதலை கும்மியைப் போலவே பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட கும்மி வடிவத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாண சுவதேச கும்மியைப் பாடியுள்ளார். இலக்கியம் என்பது பரவலாகச் சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்திருக்கிறது. இதுவே இருவரின் இலக்கியக் கொள்கையாகவும் இருந்திருக்கின்றது. இனி இருவரும் தம் பாரம்பரியப் பிற்போக்குத் தனங்களை தங்களுடைய கவிதைகளில் எவ்வாறு தரிசித்திருக்கிறார்கள். அவற்றை மீறித் தம் கவிதைகளில் புதிய உள்ளடக்கத்தை,வீச்சை, புதிய பரிமாணங்களை எந்தளவிற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று காண்போம்.

    மகாகவி – பாவலா் : பெண் விடுதலைச் சிந்தனைகள்:

         நவீன சித்தாந்தங்களின் ஓர் அம்சமாக பெண் குறித்த சிந்தனைகளைக் குறிப்பிட வேண்டும். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமிழறிஞா்கள் பலா் பெண்களை மையமிட்டுப் பேசுவதும், எழுதுவதுமாக தங்களுடைய சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளனா். அவ்வகையில் பாரதியும் பாவலரும் பெண்பற்றி கொண்டிருந்த கருத்துகளை ஒப்பிட்டு விளங்கிக்கொள்ள வேண்டும். துரையப்பா பிள்ளை அவா்கள் பெண்கல்வி பரவுதல் சந்தோசம் என அக்கால நிலையை ஏற்றுக் கொண்டாலும் பெண் கல்வியின் எல்லை எது என்பதை மிகத் திட்டவட்டமாக கூறுகின்றார். தமது யாழ்ப்பாண சுவதேச கும்மியில்,

         “வீட்டினில் சீவியம்
    இன்பம் நிறைந்ததது
         விளங்குதற்கேற்ற
         சுகிர்தகலை
         ஊட்டுதல் போதும்
         பி.ஏ. எம்.ஏ. பட்டம்
         உதாவது பெண்கட்குச் சங்கமின்னே” 

    எனப் பெண்கள் வீட்டு வேலைகளைத் திறமையாக செய்வதற்கு ஏற்ற கல்வியன்றி உயா்கல்வி அவாவுதல் வீண் என ஆணித்தரமாகக் கூறுகின்றார். ஆனால் பாரதியோ,

         “பட்டங்கள் ஆள்வதும்
              சட்டங்கள் செய்வதும்
         பாரினிற் பெண்கள்
              நடத்த வந்தோம்”

    என உணா்ச்சி மேலிடப் புரட்சி கீதம் பாடுகின்றார். மேலும் தம்முடைய கடிதங்கள் மூலமும் கட்டுரைகள் மூலமும் பெண்கள் குறித்த முற்போக்குச் சிந்தனைகளை பதிவு செய்கிறார். பழம் மரபுகளோடு சமரசம் செய்து கொள்ளும் போக்கு கிஞ்சித்தும் பாரதியிடத்தில் இல்லை. ஆனால் பாவலர் பழமைவாதியாக, பாரம்பரிய ஒழுக்கவியலாளராகவே பெண்களை அணுகுகின்றார்.

         “பெண்க ளியல்பிற் பெலவீன ரென்ற
         பெருமுண்மை தன்னை யலட்சை செய்து
         ஒண்கலை மிக்க அருந்திட லாற்றுயா்
         ஓதற் கரிதடி சங்கமின்னே”
         “நற்கலை சேரு முனைவு அமைத்திடல்
         நாயகா் தங்கட் கிதம் புரிதல்
         சொற்சுவை சேருநற் பாக்கள் புனைதல்
    சுகிர்தம்பெண் கட்கடி சங்கமின்னே”
     

    எனப் பெண்கள் இயல்பிலேயே பலவீனமானவா்கள், என்றும் அதன் காரணமாக அரிய பல கலைகளைக் கற்கும் ஆற்றலற்றவா்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மேலும் பாவலா், பெண்களுக்குக் கல்வியானது குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிக்கவும், தங்கள் கணவன்மார்களை மகிழ்விக்கவுமானதாக அமைந்தாலே போதும் என்கிறார். ஆனால் பாரதி,

    “எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
         இளைப்பில்லை காணென்று கும்மியடி” 

         எனக் கல்வியில் பெண்களுக்கு ஆணுக்குச் சமமான தகுதியை வலியுறுத்துகிறார். பெண்ணுக்கு இருக்கவேண்டிய அருட்குணங்களாக நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு போன்றவற்றை வலியுறுத்தி நவினகாலத்தில் பெண்கள் அவற்றை இழந்து காணப்படுவதை எண்ணிப் பாவலா்,

         “நாண்மட மச்சம் பயிற்ப்பென வான்றோர்
          நவிலு மரும்லட்ச ணங்கள் சற்றும்
          பூண்டில ராய்ச்சில நவீனஸ் திரிகள்
          புரிசெயல் கேளடி சங்கமின்னே

    என்று வருந்துகிறார்.ஆனால் பாரதி,

    “நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
         ஞான நல்லறம் வீர சுதந்திரம்
         பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்” எனப் புரட்சி முழக்கமிடுகிறார்.

    மகாகவி – பாவலா்: சாதியச் சிந்தனைகள்:

         சமூக அநீதிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணமான சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணிய ஒடுக்குமுறையையும் பாரதி மிகக் கடுமையாகச் சாடுகின்றார். சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடுகிறார். சாதிகளைத் திடீரென்று அறுதியாகத் துடைத்தெறிந்துவிட முடியாது என்பதை உணர்ந்தே இன்றைய வருங்காலத் தலைமுறைக்கு சாதியற்ற எதிர்காலச் சமூகத்தைப் பற்றிய கனவை விதைத்திருக்கிறார். அத்துடன் தாழ்த்தப்பட்டவா்களுக்குப் பூணூல் அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்.

         “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
         அந்நியர் வந்துபுகலென்ன நீதி?” 

         என்ற பாடல், சாதிகளால் பிளவுண்டு கிடக்கும் உங்களுக்கு சுயராஜ்ஜியம் செய்யும் தகுதியில்லை என்று வினவும் ஆங்கிலேயனுக்கு விடை பகா்வதாய் அமைகிறது. சாதிகளற்ற சமூகத்தைப் பாரதி எண்ணினாரோ இல்லையோ, சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகம் பற்றிய எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. ஆனால் பாவலா் சாதி பற்றிய கருத்துகளில் சற்று பிற்போக்குக் கொள்கையுடையவராகப்படுகிறார். கிறித்துவ சமயத்தைத் தழுவியதாலும் ஆங்கிலேய ஆட்சியினாலும் தம் மண்ணில் சாதி மற்றும் ஆசார அனுட்டானங்கள் நலிந்துவருவதை எண்ணி வருந்துகிறார்.

         “சீரார் கிருஸ்தவ மதத்தைத் தழுவுவோர்
         செப்பிடுஞ் சாதிய சாரங்களை
         நேராக தள்ளிப் பறங்கிகளாதல்
         நீதியோ சொல்லடி சங்கமின்னே”

    என்கிறார்.

     நாவலரின் தாக்கம் இவரிடம் மிகுதியும் காணப்படுகின்றது. கிருத்துவ சமயத்துக்கெதிரான நாவலரின் சைவ மரபு மீட்டுருவாக்கச் சிந்தனைகளின் தாக்கம் பாவலருக்கு சில பிற்போக்குத்தனங்களைக் கடந்து செல்ல தடைகளாக இருந்திருக்கின்றன என்பதே உண்மை.

    பெரியோர் சிறியோரென்ற பேதமில்லை – உயா்
         பெருங்குணம் பொறையன்பு நீதியில்லை
    அரியவ ருணாச்சரம தம்மமில்லை – எங்கும்
         அனைவரும் சமமென்பா ராலே தொல்லை” என்று பாடுகிறார்.

    முடிவாக,

         சமகாலப் புத்திலக்கிய முன்னோடிகளாகக் கருதப்படும் மகாகவியும் பாரதியும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளிலும், இலக்கிய கொள்கைகளிலும் ஒருமித்த கருத்துடையவா்களாகக் காணப்பட்டாலும், பழம் மரபுகளை உடைத்தெறிவது, குறிப்பாகப் பெண்விடுதலை, பெண்கல்வி, சாதி போன்ற ஒருசில அம்சங்களில் மகாகவி முற்போக்குவாதியாகவும் பாவலர் பழம்மரபுவாதியாகவுமே தென்படுகின்றார். நவீன கவிகள் என்ற நிலையில் இருவரும் முன்னோடிகளாக இருந்தபோதிலும் புரட்சிக்கவி, புதுமைக்கவி என்ற அளவில் பாரதியின் இடத்தை பாவலர் தவறவிட்டிருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    துணைநூல்கள்:

    1.துரையப்பா பிள்ளை தெ.அ. பாவலா் சிந்தனைச்சோலை, மகாஜனக் கல்லுரிவெளியீடு, 1960.

    2.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள்.

    3.கைலாசபதி க. ஈழத்து இலக்கிய முன்னோடிகள், மக்கள் வெளியீடு,1986

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசியா்
    தமிழ்த்துறை
    கற்பகம் பல்கலைக்கழகம்
    கோவை

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 253 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    காலம் எனும் படகு யாருக்கும் காத்திராமல் தன்னுடைய திசையிலே மிகவும் அவசர கதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இக்கால ஓட்டத்தினைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு வாழ்வினில் வெற்றியடைந்தோர் பலர், கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திக்குமுக்காடிச் சிக்கித் தவிப்போர் பலர் எனப் பலவிதமான வாழ்க்கைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதும், அவிழ்ப்பதுமாக இக்கால ஓட்டப் பயணத்தின் விளைவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆண், பெண் என்று வித்தியாசம் காட்டாது அவர்களுக்கான பாதைகள் வகுக்கப் படுகிறது. பெண்ணின்மேல் ஆண் அதிகாரம் செய்வதென்பது அனைத்துக் கலாசாரங்களிலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

    ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதைக் காட்டும் முகமாகவே ஈசன், அர்த்தநாரீஸ்வராகப் பெண்ணுக்குச் சமபாகம் கொடுத்தார் என்கிறது இந்து வேதங்கள். ஆனால் இன்றைய உலகில் ஆண், பெண் எனும் வேறுபாடு பலவடிவங்களில் தலைதூக்கிக் கொண்டுதானிருக்கிறது. பெண் என்பவள் இல்லத்தரசி என்றும், குழந்தைகளைப் பெறுவதும்,பேணுவதும் மட்டுமே அவர்களுக்கு உகந்த பணி எனும் வகையில் இன்று சில ஆண்கள் நடப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இன்றும் இங்கிலாந்தில் சம பணிகளில் இருக்கும் ஆணைவிடப் பெண்ணுக்கு ஊதியம் குறைவாகவே கொடுக்கப்படும் ஒரு நிலையைக் காண்கிறோம். இந்த வித்தியாசத்தை அரசாங்கம் இனங் கண்டு கொண்டு இவ்விடைவெளி நிரப்பப்படுவதற்கு காலக்கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    நாட்டைக் காக்கும் பணியில் இராணுவத்தில் இணையும் பெண்கள் சமீபகாலம் வரை போர்க்களங்களில் முன்னணிக்கு அனுப்பப்படாமலிருந்த நிலை இங்கிலாந்தில் இருந்தது. அது சமீப காலத்தின் முன்னால்தான் சட்ட மாற்றம் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தேசங்களிலும், பின்புலங்களிலும் கணவன், மனைவி இருபாலாரும் வேலை பார்ப்பதன் மூலமே குடும்பத்தைப் பராமரிக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. ஆயினும் பல இடங்களில் இன்றும் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்களே வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு விதிவிலக்காகப் பலர் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது; இருப்பினும் ஆணாதிக்கத் தன்மையும் பல இடங்களில் ஓங்கி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. எத்தனை கடினமாக உழைத்தாலும் பெண்ணாக இருந்தால் பதவி உயர்வுகளைப் பெறுவதிலும் பெண்கள் பல தடைகளைத் தகர்த்தெறிய வேண்டிய கட்டாயத்துக்குட்படுத்தப்படுகிறார்கள். சமீப காலத்தின் முன்னால் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் அவர்கள் பெண்ணாக இருந்ததால் அளவுக்கதிமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக முன்னணியில் திகழ்வதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே இத்தகைய நிலையானால் மற்றைய நாடுகளைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா என்ன ?

    சரி, எதற்காக இந்த ஆய்வெல்லாம் எனும் எண்ணம் ஏற்படுகிறதா? சமீபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் அமைச்சரவையே உலுப்பும் அளவிற்கு வலுப்பெற்றதனை நோக்குவதே இம்மடலில் முக்கியக் காரணியாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஹாலிவூட்டின் முன்னணித் தயாரிப்பாளரும், மிகவும் பிரசித்தி பெற்ற அமெரிக்கருமான “ஹார்வி வெயின்ஸ்டைன் (Harvey Weinstein)” என்பவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இச்சம்பவம் ஒரு பெரிய பாரிய பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. ஒரு பெரிய அணைக்கட்டை உடைத்து வெள்ளம் பாய்வதுபோலப் பல பிரபல்யமானவர்கள், தமது பிரபல்யத்தை உபயோகித்துத் தம்மைப் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளார்கள் என்று பல பெண்கள் குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்திருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த குற்றச்சாட்டுகள் இப்போது இங்கிலாந்து அமைச்சரவையில் வந்து நிற்கிறது. எப்படி என்கிறீர்களா? இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கு உதவியாளர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் பணிபுரியும் பல பெண்கள் தாம் ஒரு காமப்பொருளாக அங்குப் பணிபுரியும் பல ஆண்களினால் நடத்தப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். பிரபல்யமானவர்கள் மீது குற்றம் சுமத்தினால் தமது எதிர்காலம் பாழ்பட்டு விடும் எனும் பயத்தினால் பல சமயங்களில் மெளனமாக இத்தகைய செயல்களைத் தாம் பொறுத்துக் கொண்டிருந்ததாகவும் இப்போது பல வழிகளில் இத்தகைய செயல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதால் தாமும் வெளிவருவதாகக் கூறியுள்ளார்கள்.

    ஆச்சரியமான் விடயம் என்னவெனில் இத்தகைய செயல்கள் சில நடந்தது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சிக்கலிலே மாட்டிக் கொண்ட இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் இன்று தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அப்படி இவர் மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது? ஒரு முன்னணிப் பெண் ஊடகவியலாளர் கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர் சுமார் பதினைந்து வருடங்களின் முன்னால் இப்போதைய பாதுகாப்பு அமைச்சர் (நேற்றுவரை) அன்றைய பாராளுமன்ற அங்கத்தவர் தன்னுடன் தனிமையில் பேசும்போது தனது துடையில் கையை வைத்துப் பேசினார் என்றும், அத்தகைய செயலில் ஈடுபட்டால் விளைவு விபரீதமாகும் என்று தான் எச்சரித்ததினால் அவர் நிறுத்தினார் என்றும் கூறியதே அவ்வமைச்சரின் சரிவுக்குக் காரணம்.

    ஆனால் ஆச்சரியம் என்னவெனில் தான் கூறியதின் விளைவு அமைச்சர் தனது பதவியை இழப்பது என்று தான் கடைசிவரை எண்ணவில்லை என்றும் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சிறிய விடயம் இத்தனை பாரதூரமாக்கப்பட்டிருக்கத் தேவையில்லை என்று அப்பெண் ஊடகவியலாளர் இப்போது கூறியிருப்பதே இப்படியான பல குற்றச்சாட்டுகளில் சில பாரதூரமானவை என்றாலும் இத்தகைய விடயங்கள் பல மிகைப்படுத்தப் படுக்கின்றன என்று சில ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்துப் பாராளுமன்ற வளாகம் பல காமவெறியர்களைக் கொண்டது என்பது போன்ற தோற்றத்தையளிக்கும் வகையில் இருக்கிறது, இங்கிலாந்துப் பாராளுமன்றம் 14000 பேர்வரை பணிபுரியும் ஒரு கெளரவமான இடம் என்பதை மறந்து விடக்கூடது எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.

    பெண்களை நோக்கிய ஆண்களின் பார்வை மாற வேண்டியது அவசியம். பெண்களை வெறும் காமத்தின் அடையாளமாய்ப் பார்க்கும் பல ஆண்கள் இருப்பது உண்மையே ! இது சிறுவயது முதலே ஆண்களின் மனத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய வகையில் அவர்களது கல்விமுறை அமைக்கப்பட வேண்டும். இச்சமயத்தில் நிவேதிதா அம்மையார் பாரதியாருக்குச் சொன்னதை நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது ” பெண்கள் விடுதலையடையும் வரை ஒரு நாடு விடுதலையடைய முடியாது .”  இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் அதிபர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • “அவன், அது , ஆத்மா” (55)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 54

    “வங்கக் கவிஞர் டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தி”

    டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தி

    வங்கக் கவிஞர் டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தியின் அறிமுகம் அவனுக்கு மனைவி சீதாலட்சுமி மூலமாகக் கிடைத்தது. அவர் கொல்கத்தாவில் இருக்கும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவர். நவீன வங்க இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞர். இந்திய அரசாங்கம் வழங்கும் “தேசியக் கவி” (National poet) என்ற விருதை இரண்டு முறையும், சோவியத் நாடு நேரு பரிசையும் பெற்றவர். இனிமையாகப் பழகும் தன்மையும், அன்பும் கொண்ட ஒரு நல்லறிஞர். “ஷேக்ஸ்பியர்” படைப்புகளில் ஆழ்ந்த புலமை கொண்ட உலகத்தரத்தில் மதிக்கப் பெற்ற அறிஞர்.

    பத்து கவிதைத் தொகுதிகள், மூன்று ஆய்வு நூல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஷேக்ஸ்பியர் பற்றிய ஆங்கில ஆய்வு நூல்கள் இரண்டு, காந்தியின் வாழ்க்கை வரலாறு போன்ற அவரது படைப்புகள் முக்கியமானவைகளாகக் கருதப்படுகிறது.

    1985ம் வருடம் அக்டோபர் மாதத்தில், அவனுக்கு மனைவி அவனை அழைத்துக் கொண்டு கொல்கத்தாவில் ஜாதவ்பூரில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்றிருந்தார். தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பலரை அவருக்குத் தெரிந்திருந்தது. முக்கியமாக மகாகவி பாரதியாரின் கவிதைகளை அவர் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக அறிந்து வைத்திருந்தார். ஞானக்கூத்தன், கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் போன்றவர்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்ததை அவருடன் உரையாடும் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது. அவரது சீரிய வழிகாட்டுதலில்தான் அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மி “மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வால்ட் விட்மன் கவிதைகளை ஒப்புவமை” ஆய்வை ஆங்கிலத்தில் செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

    சதக அமைப்பைக் கொண்டு வங்காள மொழியில் திரு. ஜகன்னாத் சக்கரவர்த்தி எழுதி இருந்த நூறு கவிதைகளை டாக்டர் சீதாலட்சுமி அவர்கள் “மௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸும்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து மார்ச் மாதம் 1992ம் வருடம் அவனுக்கு நண்பர் திரு.அகிலன் கண்ணன் அவர்களின் “தாகம்” பதிப்பகம் மூலம் வெளியிட்டார்கள். அந்தக் கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் அருமையான முன்னுரை வழங்கி,” எனக்கு ஜகன்னாத் சக்கரவர்த்தியை நேரில் பார்த்து உரையாட வேண்டும். அவர் சென்னைக்கு வரும்பொழுது தெரியப் படுத்துங்கள்” என்று சொல்லி இருந்தார். இந்த மொழிபெயர்ப்புக் கவிதை வெளியான மார்ச் மாதமே (28.03.1992) அந்தத் தொகுப்பைப் பார்க்கும் முன்பே புற்றுநோய் காரணமாக தனது அறுபத்தி எட்டாவது வயதில் அவர் விண்ணுலகம் சென்றுவிட்டது ஒரு துரதிருஷ்டம்.

    தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

    “ஒரு தடவை கலிபோர்னியாவில்”

    “ஒருதடவை கலிபோர்னியாவில் …….
    ரெட்வுட் காட்டில் நடக்கும் பொழுது உணர்ந்தேன்
    நான் தனியொருவனாகவே
    முழுக் காட்டையும் விட மேல்லானவன் என்று.
    இன்றோ ஆல்ப்ஸின் மேல் ஏறி வந்தபின்
    எனக்குத் தோன்றுகிறது
    நான் தனியொருவனாகவே
    இந்த மலை, காடு இரண்டையும் விட
    மேலானவன் என்று.
    காட்டாலும், மலையாலும்
    தங்களுக்குள் இந்த பூமியைப் பங்கு கொள்ள முடியவில்லை
    எனக்கும் உனக்கும்
    மற்ற யாத்திரிகர்களுக்கும்
    நிற்க இடம் தர வேண்டி வந்து விட்டது.
    நான் உண்மையிலேயே அபரிமிதமானவன்.”

    “இவரது கவிதைகள் எளிமையும், அமைதியும் உடையனவாக உள்ளன. மன விரிவையும், விடுதலை உணர்வையும்,சிறிதளவு துக்கத்தையும் கூடத் தருகின்றன. நமக்கு இவரது கவிதைகள் ஒரு நல்ல வரவு. மொழிபெயர்ப்பில் ஒரு இனிய இசைகூடக் கேட்கிறது” என்று கவிஞர் ஞானக்கூத்தன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

    03.11.2017

    மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share