Blog

  • நலம் .. நலமறிய ஆவல் (71)

    நிர்மலா ராகவன்

    தந்தையும் மகளும்

    நலம்

    `உங்கள் தந்தையைப்பற்றி சில வாக்கியங்களை அமையுங்கள்!’ என்று பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கேட்டிருந்தார்கள், மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில்.

    எல்லாச் சிறுமிகளும் ஒரேமாதிரிதான் எழுதியிருந்தார்கள்: `என் அப்பா வெளியில் அழைத்துப்போவார். எனக்காக நிறையச் செலவழிப்பார்! நான் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பார்!’

    அப்பா என்றால் பணம் கொடுக்கும் இயந்திரம் என்றுதான் குழந்தைகளின் மனதில் படிந்திருக்கிறது. இதைவிட வெளிப்படையாகத் தனது அன்பைக் காட்டிக்கொள்ள தந்தையால் முடியாதா?

    சில இல்லங்களில், “அப்பா ஆபீஸிலிருந்து வரட்டும்! ஒனக்கு இருக்கு!” என்று அம்மா குழந்தைகளை மிரட்டிவைப்பாள்.

    அப்பா என்றால் மரியாதை அளிக்கப் பழக்க வேண்டும். பயமுறுத்த அவர் என்ன பூதமா?

    `அன்புக்குத் தாய், அறிவுக்குத் தந்தை’ என்று சொல்வதுண்டு.

    அப்படியானால், தாய்க்கு அறிவு புகட்டத் தெரியாதா, இல்லை, தந்தைக்குத்தான் அன்பே கிடையாதா?

    பிள்ளைகளிடம் தங்கள் அன்பை விதவிதமாகக் காட்டுவார்கள் ஆண்கள். அன்பு என்று அவர்கள் நினைப்பதே சில சமயங்களில் அதீதமாகிவிடுகிறது.

    கதை

    மரீனா நான்கு அண்ணன்மார்களுக்குப்பின் பிறந்ததால் பெற்றோர் இருவருக்குமே அலாதி செல்லம். `நான் மிக உயர்த்தி, அதனால்தான் கொண்டாடுகிறார்கள்,’ என்ற எண்ணத்தில் திமிர் எழுந்தது. பதினைந்து வயதுப் பெண்ணை அப்பா கையைப் பிடித்து அழைத்துப் போவார், கும்பலே இல்லாத இடத்தில்கூட! பள்ளிக்கூடத்திலும் எல்லா பொறுப்புகளையும் தட்டிக்கழிப்பாள் என் மாணவியான அவள். அவளை ஒரு வேலையும் செய்ய விடாததால், சோம்பல் மிகுந்திருந்தது. அண்ணன்களை மரியாதை இல்லாது நடத்துவாள். ஆனால் யாருக்கும் அவளைக் கண்டிக்கத் தோன்றவில்லை. அப்பா செல்லமாயிற்றே! அதனால் பொறுத்துப்போனார்கள்.

    இந்தமாதிரி வளர்க்கப்படும் பெண்கள் கல்யாணமானாலோ, அல்லது உத்தியோகத்தில் அமர்ந்தாலோ, `நீதான் ராணி!’ என்பதுபோல் தம் வீட்டில் அனுபவித்ததை எதிர்பார்க்கிறார்கள். கிடைக்காதபோது, சண்டை போடுகிறார்கள். இல்லையேல், ஒரேயடியாக ஒடுங்கிவிடுகிறார்கள்.

    எல்லாப் பெண்களும் அழுமூஞ்சிகள்!

    இன்னொருவருக்கு ஒரே ஆண்குழந்தைதான். ஒன்றரை வயதான என் மகள் அழுதபோது, “இந்தப் பெண்களே இப்படித்தான்! எல்லாவற்றிற்கும் அழுவார்கள்!” என்று முகத்தைச் சுளுக்கினார். அவரது மகன் அந்த வயதில் அழுதிருக்க மாட்டானா, என்ன!

    வயதான தந்தை

    எங்கள் குடும்ப நண்பரான சிங் ஐம்பது வயதில் கல்யாணம் செய்துகொண்டார்.

    “மனைவியுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டீர்களா?” என்று குசலம் விசாரித்தேன்.

    “உங்களுக்குத் தெரியாதா, ஆன்ட்டி!” என்றார், அலுப்புடன்.

    சுவாரசியத்துடன், “எதற்குச் சண்டை போடுவீர்கள்?” என்று மேலும் துளைத்தேன்.

    “குழந்தை ஓயாமல் நை நையென்று அழுகிறாள். என்னால் சகிக்க முடிவதில்லை. நான் இரைந்தால், அவளுடைய அழுகை இன்னும் அதிகமாகி விடுகிறது. அப்போதெல்லாம் மனைவியைப் பார்த்துக் கத்துவேன். அவள் குழந்தையை உள்ளே தூக்கிப் போய்விடுவாள்!” என்றார்.

    எனக்கு ஒரே சிரிப்பு. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அழுகைதான் மொழி. அது அவருக்குப் புரியவில்லை. `குழந்தையை ஏன் அழ விடுகிறாய்?’ என்று மனைவியுடன் சண்டை போட முடியுமா!

    சுயநலமான அப்பா

    குடும்பப்பொறுப்பே இல்லாமல் ஒருவர் பிற பெண்களுடன் உறவு வைத்திருந்தார். அவர் பெற்ற பெண்களுக்கு அவரது வழிகாட்டலோ, அன்போ கிடையாது.

    இப்படிப்பட்ட பெண்கள் தம்மையும் அறியாது, அப்பாவைப்போன்றவரையே காதலித்து மணந்துகொள்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும், கணவர் நடத்தை எப்படி இருந்தாலும், `நம் அப்பா இல்லையா! எல்லா ஆண்களும் இப்படித்தான்!’ என்று ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

    `நீங்கள் என்னை மிஞ்ச முடியாது!’ என்று தந்தை தாம் பெற்ற குழந்தைகளுடனேயே போட்டி போடும்போது, அவர்கள் மனம் தளரலாம். இல்லையேல், தம் திறமைகளை ஒளித்து வாழலாம்.

    இயற்கை நியதி

    தாய்க்குத் தான் பெற்ற ஆண்குழந்தைகளைப் பிடிக்கும். தந்தைக்கு மகள்பால்தான் பேரன்பு.

    இதனால் பெற்றோரிடையே போட்டி வந்துவிட்டால், குழந்தைகளின்பாடுதான் திண்டாட்டம்.

    `அம்மா செல்லம் கொடுத்து உன்னைச் சீரழிக்கிறாள்!’ என்னும் தந்தை அதற்கு மாற்று மருந்துபோல் ஓயாத சிடுசிடுப்பைக் காட்டுகிறார். மகன் செய்வதெல்லாம் தவறு என்று பழிப்பு. சிறு தவற்றுக்கும் கடுமையான தண்டனை. மகளிடமோ, மிக அருமை. இந்த பாரபட்சத்தினால் சகோதர சகோதரிக்குள் கசப்பு எழும் என்பது ஒருபுறமிருக்க, தந்தையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் மகனது தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிடுகிறது.

    ஆணோ, பெண்ணோ, `நீ தைரியசாலி! மகா புத்திசாலி!’ என்று சிறுவயதிலிருந்தே இரு ழந்தைகளிடமும் சொல்லிச் சொல்லி வளர்த்தால், பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எழ, அவர்களுக்கு அக்குணங்கள் படியும்.

    ஒரு தந்தையின் அன்பும் ஊக்கமும் கிடைக்கப்பெற்ற பெண் ஆண்களைப் புரிந்துகொள்கிறாள். அவர்களைப்போன்றே ஒரு முடிவை எடுப்பதற்கு அறிவைப் பயன்படுத்துகிறாள். உணர்ச்சிகளை நம்புவதில்லை.

    ஆனால், தந்தையின் அந்த அன்புடன் கண்டிப்பும் இருக்கவேண்டுவது அவசியம்.

    அறியாப்பருவத்தினர் தவறு செய்வதைத் தண்டிப்பதால், நம் அன்பு குறைந்துவிட்டதென்ற அர்த்தமில்லை. அப்படிச் செய்யாவிட்டால்தான், நம்மையுமறியாது, அவர்களுக்குத் தீங்கிழைக்கிறோம்.

    `ஒரே மகள்! திருமணமாகி நீண்ட காலம் கழித்துப் பிறந்ததால் எனக்கு ரொம்ப அருமை. என்ன செய்தாலும் திட்டக்கூட மனம் வரவில்லையே!’ என்பவர்களுக்கு: தற்காப்புக்கலை போன்ற உடற்பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளில் மகளை ஈடுபடுத்துங்கள். அவைகளைக் கற்பிக்கும் ஆசிரியர் கண்டிப்பாக இருப்பார். அதனால், தானே கட்டொழுங்கு வரும்.

    அருமை மகள் திருத்தப்படும்போது மனம் பதைபதைத்துப்போகிறதா? எதிர்காலத்தில் அவள் பிரகாசிக்க வேறு வழியில்லை.

    முக்கியமாக, போட்டியின்றி, குழுவோடு ஒரு காரியத்தைச் செய்யும்போது சிறுபிள்ளைத்தனத்துடன் சுயநலமும் மறையும்.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 93

    க. பாலசுப்பிரமணியன்

    இசை நுண்ணறிவு (Musical Intelligence)

    education

    உலகின் ஆரம்பத்திலிருந்தே ஒலியும். அதன் கருவிலிருந்து பிறந்த இசையும் நம்மால் போற்றப்பட்டுவருகின்றது. இயற்கையின் பல இசைப் பரிமாணங்களை நாம் அனுபவித்தும் ரசித்தும் வந்திருக்கின்றோம். இசையின் பல வடிவங்கள், பல  வெளிப்பாடுகள் நம்முடைய உயிரோடும் வாழ்வோடும் உணர்வுகளோடும் ஒன்றியிருப்பதை நாம் அறிந்தும் அதனை உபயோகித்தும் வந்திருக்கின்றோம். இசைக்கு இணங்காத மானிடர்களை மிருகங்களுக்கு இணையாக பல கலாச்சாரங்களும் பல இயக்கியங்களும் ஒப்பிட்டு வந்திருக்கின்றன.

    ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பிறந்தது முதல் தாலாட்டு வழியாகவும் சிறிய பாடல்கள் வழியாகவும் இசை அவர்களது வளர்ச்சிக்கும் உணர்வுகளின் முதிர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கின்றது. மூளை நரம்பியல் வல்லுநர்கள் மூளையின் வலது பாகம் இசையை அறிந்து கொள்வதற்கும், இசை சார் உணர்வுகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். பல காலங்களாக இசையை கற்றுக்கொள்ளுவதற்கும் அதில் வல்லமை பெற்றுக்கொள்ளுவதற்கும் பாரமபரிய முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஆகவே இசையை பள்ளிகளின் மூலமாக அதிகமாக் கற்றுக்கொண்டு சிறப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் பாரம்பரிய முறைகளில் ஒரு குருவிடமிருந்து அவருடன் கூடவே இருந்து பயிற்சி மூலமாகக் கற்றுக்கொண்டு சிறப்படைந்தவர்களே அதிகமாக உள்ளனர்.

    இசையில் ஈடுபாடு வம்ச வழியாகவும் தன்னிச்சையாலும் மூளையின் வலப்பக்கத்தில் ஏற்படும் தூண்டுதல்களாலும் நுண்ணறிவாக வளர்ந்து வெளிப்படுகின்றது. `தாயின்  கருவிலே இருக்கும் சிசு தன் தாயின் இசை ஒலிகளைக்கேட்டு வெளிப்படுத்தும் அசைவுகள் அந்தக் குழந்தை பிறந்த பின்னே தாய் அதே இசையை இசைக்கும் போது முன்னிருந்ததுபோலவே வெளிப்படுவதாக ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

    மூளை அறிவியல் ஆராய்ச்சியில் வல்லுனராக விளங்கும் திரு வி. எஸ். ராமச்சந்திரா என்ற அறிஞர் வளரும் பருவத்தில் இசையின் முக்கியத்துவத்தை விளக்கி குழந்தைப் பருவத்தில் கற்றலில் இசையின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றார். அவருடைய கருத்தின் படி இசை சிந்தனையின் முதிர்ச்சிக்கும், கற்பனையின் வளர்ச்சிக்கும், படைப்பாற்றல்களை வளர்ப்பதற்கும் இன்றியமையாததாகும்.. இசையைக் கற்றுக்கொள்ளுபவரின் மூளையின் இணைப்புக்கள் அபரிமிதமாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆகவே வளரும் பருவத்தில் பள்ளிகளில் இசையை ஒரு முக்கிய பாடமாக மட்டுமின்றி கட்டாய பாடமாக ஆக்கவேண்டிய அவசியம் உள்ளது.

    இசை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் எப்படி வெளிப்படுகின்றன?

    1. ஒலிகளின் அசைவுகளை உணர்வும் திறன்
    2. ராகங்கள், தாளங்களை உணர்வும் திறன்
    3. இயற்கையில் இசையின் தாளங்களை அறிதல்
    4. மனமுவந்து இசையமைக்கும் திறன்
    5. பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளில் ஒருங்கிணைப்பை உணருதல், அறிதல்

    இதுபோன்று கற்றலிலும் கற்றல் முறைகளிலும் இசையின் அடிப்படை நுணுக்கங்களை அறிந்து போற்றி அதன் அமைப்புக்களை உபயோகப்படுத்துதல் இசையின் நுண்ணறிவின் வெளிப்பாடுகளாகக் கருதப்படுகிறது.

    இந்த இசை நுண்ணறிவின் சிறப்பினால் உலகில் கௌரவிக்கப்பட்டவர்கள் பலருண்டு. உதாரணமாக திருமதி எம். எஸ். சுப்பலக்ஷ்மி, காருக்குறிச்சி அருணாசலம், ஏ..ஆர். ரஹ்மான், பீத்தோவன், மொசார்ட் , இசைஞானி இளையராஜா போன்ற எண்ணற்றவர்கள் இந்த இசை நுண்ணறிவுக்குச் சான்றாக உள்ளனர். இசையில் பட்டப்படிப்பு பெறுவதற்கும் இசை நுண்ணறிவுக்கும் அதிகமான சார்புகள் இருப்பதாக கருதப்படுவதில்லை.

    இசை வல்லுனர்களின் மூளை செயல்பாடுகளைப் பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட ஒரு ஆராய்ச்சியில், இசைக்கும் பொழுது இந்த வல்லுணர்களின் மூளையின் எந்தப்பக்கம் அதிகமாகச் செயல்படுகின்றது என்பதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அறிவியல் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பின்படி அவர்களது மூளையின் வலது பக்கம் எண்பது விழுக்காடுகளும் இடது பக்கம் இருபது விழுக்காடுகளும் செயல்படுமென கணிக்கப்பட்டது.  ஆனால் இருநூறுக்கும் மேற்பட்ட வல்லுநர்கள் இசைக்கும் பொழுது அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்மறையான முடிவுகளைக் காட்டின. அதன்படி அவர்களது இடது பக்க மூளை கிட்டத்தட்ட எண்பது விழுக்காடுகளும் வலது பக்க மூளை இருபது விழுக்காடுகளும் செயல்படுவதாக அறியப்பட்டது, இதன் காரணத்தை அலசி ஆராய்ந்தபொழுது இசை கணிதத்தின் அடிப்படைகளில் அமைந்துள்ளது அறியப்பட்டது, தாளங்கள் ராகங்கள் ஆரோகண அவரோகணங்கள் எல்லாம் ஒரு கணக்கின்படி அமைந்துள்ளதையும், ஒருவர் பாடும்பொழுது இந்த தர்க்க ரீதியான கணிப்புக்களைப் பின்பற்றும்பொழுது மூளையின் இடது பக்கம் அதிகமாக வேலை செய்வதும் அறியப்பட்டது. ஆனால் இந்த இசையை ரசிக்கும் ரசிகர்களின் வலது பக்க மூளை அதிகமாக செயல்படுவது அவர்களின் ரசனைத் திறனுக்குச் சான்றாக இருந்தது. இந்த ரசனைத் திறன் வலது மூளையின் செயல்பாடுகளில் ஒன்றாகும். இதிலிருந்து கல்வியாளர்களுக் கிடைக்கும் ஒரு செய்தி:: இசையில் வல்லமையும் நுண்ணறிவும் பெற்றுள்ள ஒருவர் கணிதத்தில் ஏன் சிறப்பாக இருக்கக்கூடாது என்பதாகும்.

    இதைத் தொடர்ந்து மேற்கொண்ட பல ஆரய்ச்சிகள் இசையின் மேலாண்மையையும் எவ்வாறு ஒரு மனிதனின் மற்ற பல திறன்களை வளர்ப்பதற்கு அது உறுதுணையாக இருக்கின்றது என்பதையும் நிரூபிக்கின்றன. எனவே எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு இசைத்திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தினால் அது நல்ல பயன் தரும். அது மட்டுமல்ல,, இசை நுண்ணறிவு ஒரு தனி மனிதனின் உணர்வு நிலைகளை மேம்படுத்தி வாழ்க்கையைச் செம்மையாக்கத் தேவையான “உணவுசார் நுண்ணறிவை’ (Emotional Intelligence) வளப்படுத்த முக்கிய காரணமாக உள்ளது. அது மட்டுமல்ல கருணை, இரக்கம், மனித நேயம் ஆகிய குணங்களை வலுப்படுத்தி வாழ்க்கையின் சவால்களை சந்திக்காத தயாராக்குவது மட்டுமின்றி, அவர்களின் சமூக உணர்வுகளை (Social consciousness) வளப்படுத்தவும் உதவுகின்றது.

    இதை கருத்தில் கொண்டுதான் ஹோவர்ட் கார்ட்னர் என்ற “பல்வகை நுண்ணறிவுகள்” என்ற கருத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் கூறினார்: “நீங்கள் இசையில் சிறந்தவராக இருந்தால் மற்ற வகையான அறிவுகளில் நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்பதை என்னால் ஒரு விழுக்காடு தவறில்லாமல் கூறமுடியும்” (If I know you’re very good in music, I can predict with just about zero accuracy whether you’re going to be good or bad in other things)

    இசையின் வல்லமையை வெளிப்படுத்த பிளாட்டோவின் சொற்களை விட வேறு அதிகம் தேவையில்லை. “இசை ஒரு தார்மீகச் சட்டம். அது  அது உலகிற்கு ஆன்மாவையும், மனதிற்கு இறக்கைகளையும் கற்பனைக்கு வேகத்தையும், வாழ்க்கைக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் அழகையும்  மகிழ்வையும் அள்ளித்தருகின்றது.”  ( “Music is a moral law. It gives soul to the universe, wings to the mind, flight to the imagination, and charm and gaiety to life and to everything.”  Plato)

    (தொடரும்

    Share
  • குறளின் கதிர்களாய்…(182)

     

     

     

    புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுள்                                                  

    துச்சி லிருந்த வுயிர்க்கு.

           -திருக்குறள் -340(நிலையாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    நோய் நொடிகளால்

    நிறைந்திருக்கும் வீடு,

    மனித உடல்..

     

    அதில்

    மறைந்து குடியிருந்து

    வெளியேறிய உயிர்,

    நிரந்தரமாய்க் குடியிருக்க

    இதுவரை கிடைக்கவில்லை

    வீடொன்று…!

     

    குறும்பாவில்…

     

    உடலெனும் வீட்டில் நெருக்கிக் குடியிருந்த           

    உயிரதற்குக் கிடைக்கவில்லை வீடு, 

    நிரந்தரமாய்க் குடியேற…!

     

    மரபுக் கவிதையில்…

     

    பிணிநிறை மனித உடலென்னும்

         பொருத்த மில்லா வீட்டைவிட்டு

    துணையா யிருந்த உயிரதுதான்

         துறந்து வெளியே சென்றபின்னே,

    துணிந்து மீண்டும் குடியேறத்

         தகுந்த நிரந்தர வீடெதுவும்

    அணுகிட யெங்கும் கிடையாத

         அகில வாழ்வின் நிலையதுவே…!

     

    லிமரைக்கூ..

     

    உயிரிருந்தது உடலெனும் கூட்டில் , 

    வெளியேறியபின் அதற்கு இடமேயில்லை குடியேற    

    நிரந்தரமாய் ஆங்கோர் வீட்டில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

    நிக்கும் உசிரு நெரந்தரமில்ல..

     

    நோநொடி நெறஞ்ச ஒடம்புலதான்

    நெருக்கியிருந்த உசிரதுதான்

    நெனச்சநேரம் போயிருமே,

    ஒடலவுட்டுப் போயிருமே..

     

    வெளியவந்த உசிரதுக்கு

    எப்பவும்

    நெலயாத்தங்க எடமில்லியே,

    ஒலகவாழ்க்க இதுதானே..

     

    பாத்துக்கோ

    நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

    நிக்கும் உசிரு நெரந்தரமில்ல…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170903 -Vatsalya -lr
    கழுதைக்கு காட்டுகிறான் கற்பூரக் கண்ணன் –
    விழுதாக வாத்சல்ய வெண்ணை :-தொழுதேன்நான்-
    கேசவ்தன் வண்ணத்தை , கழுதை கனைப்பில்-
    வாசம் அகன்றது(பூர்வஜென்ம ) வே”….கிரேசி மோகன் ….!

    Share
  • சிவபிரதோஷம் ஸ்ரீ சந்திரசேகரன்

     மீ.விசுவநாதன்

     ஸ்ரீ சிவாபிஷேகம்

     

     

     

     

     

     

     

     

     

     

    அஞ்செழுத்து மந்திரத்தைச் சொல்கிறேன் – துளி

        அச்சமின்றி அன்போடு வாழ்கிறேன் !

    பிஞ்சுமுகச் சந்திரன்போல் உள்ளவன் – என்

        பிரியமுள்ள சந்திரசே கரானவன் !

    கஞ்சமின்றிக் கருணைதன்னைக் காட்டுவான் – மனக்

        கற்பூரத் தீவண்ணச் சோதியன் !

    நெஞ்சமெனும் வேள்வித்தீ மத்தியில் – தான்

        நிமிர்ந்துநடை போட்டபடித் தோன்றுவான் !

     

    தீர்த்தபதி என்றவனைப் போற்றிட – என்

        திருநாவில் தானமர்ந்து பாடுவான் !

    கூர்த்தமதி கொண்டஞான சித்தனாய் – என்

        குருவாகக் கிட்டவந்து கூடுவான் !

    வார்த்தைக்குள் சிக்காத பேரொளி – சிறு

        மனச்சிறைக்குள் சிக்குகின்ற சிவனொளி !

    சேர்த்தகைக்குள் சிவலிங்க மூர்த்தியாய் – என்

        சிந்தையிலே நின்றுதவம் செய்கிறான் !

              (இன்று  03.09.2017பிரதோஷம்) 

    Share
  • கருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்

    unnamed

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    Image result for black hole paradox

     

    அகிலத்தின் மாயக் கருந்துளைகள்

    அசுரத் திமிங்கலங்கள் !

    உறங்கும் பூத உடும்புகள் !

    விண்மீன் விழுங்கிகள் !

    மரணக் கல்லறைகள் !

    காலக் குயவனின் களிமண்

    செங்கல்

    கருமைப் பிண்டம் !

    சிற்பியின் கருமைச் சக்தி

    குதிரைச் சக்தி !

    கவர்ச்சி விசைக்கு எதிராக

    விலக்கு விசை !

    கடவுளின்

    கைத்திறம், கலைத்திறம் காண்பது

    மெய்ப்பாடு உணர்வது,

    மூலம் அறிவது,

    மனிதனின் மகத்துவம் !

    +++++++++++++++++++++

    Black Hole -2

    எங்கள் விண்ணோக்க ஆய்வுகளில் தீவிர எக்ஸ்-ரே சுரப்பிகள் இருப்பினைக் காட்டுவது, ஒருவேளைக் கருந்துளைகளுக்கு ஊட்டம் அளித்து உருவாக்குவதாகக் கருதப்படலாம். கருந்துளைகள் விண்மீன்களிலிருந்து விடுபட க் கதிர்வீச்சு அயனிகளுக்கு உதவும் புயல்களை உருவாக்கும்.  அதன்படி பிரபஞ்சம் ஒளி ஊடுருவும் தன்மை பெற கருந்துளைகள் உதவி இருக்கலாம்.

    ஒரு கருந்துளைக்குள் பிண்டம் விழும்போது, கருந்துளை சுழலத் துவங்கிறது.  விரைவான சுழற்சி ஓரளவு பின்னப் பகுதிப் பிண்டத்தை வெளியேற்றும்.  கருந்துளைகள் எழுப்பும் காந்தப் புயல்கள் புறவூதா ஒளி வெளியேற விடுவிப்பு வழியை உண்டாக்கலாம்.

    ஃபிளிப் காரட் [ பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம், பௌதிக வானியல் துறை, தலைமை ஆய்வாளர்]

    Inline image 1

    கருந்துளை பற்றி புதியதோர் கருத்தோட்டம்

    2016 மே மாதத்தில் ஐயோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் பௌதிகப் பேராசிரியர் ஃபிளிப் காரட் [Philip Kaaret] மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், பூமியைச் சுற்றிவரும் சந்திரா விண்ணோக்கி மூலம், விண்மீன் உருவாக்கும் அரங்கத்தில், [Tol 1247-232] ஒற்றை எக்ஸ்-ரே சுரப்பி ஒளி வீச்சும், ஒளித் தணிப்பும் மாறி, மாறி வரக் கண்டனர். குழுவினர் அது விண்மீன் வடிவாக்கம் இல்லை.  நமது சூரியன் அதற்கு ஓர் உதாரணம்.  ஒளிவீச்சு மாற்றம் ஏற்பட அது கருந்துளை போல், ஓர் சிறு அண்டமாக இருக்க வேண்டும் என்று ஃபிளிப் காரட் கூறுகிறார்.

    Inline image 2

    ஆனால் கருந்துளை போல் அசுர ஈர்ப்பு விசையால் அனைத்து அண்டங்களையும் இழுத்து விழுங்கும் போது, அது பிண்டத்தை வெளியாக்குமா என்னும் வினா எழுகிறது. உடன்பதில் அதற்கு, யாருக்கும் தெரியாது என்பதே. காரணம் கருந்துளை பற்றித் தனித்து அறிவது மிகக் கடினம். ஏனெனில் காலக்ஸி ஒளிமந்தையில் நடுவில் ஆழ்ந்து பதிக்கப் பட்டுள்ளது கருந்துளை. நெருங்கிவரும் ஒளி கூடத் தப்ப முடியாது.  சமீபத்தில் வானியல் நிபுணர் கூறும் விளக்கம் :  வெளித்தள்ளும் பிண்டத்தின் உந்துவிசை கருந்துளை சுழற்சி விசைக்கு ஊட்டம் அளிக்கிறது.

    Inline image 3

    பிரபஞ்சப் பெருவெடிப்புக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் அனைத்திலும் இருட்டடிப்பு நேர்ந்தது.   அந்த தீவிரக் கொந்தளிப்பு நிகழ்ச்சி, அகிலத்தைக் குலுக்கி, கலக்கி, கனல் வாயுப் புகை மூட்டம் ஒளியை மூடிவிட்டது.  அடுத்து ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பிரபஞ்சம் விரிய ஆரம்பித்து ஒளி புகும்படி வசதியானது.  பிறகு விண்மீன்கள் நிறந்த ஒளிமந்தை காலக்ஸிகள் தோன்றி பிரபஞ்சத்தை நிரப்பின. அதுவே நாமிருக்கும் இப்போதைய பிரபஞ்சம்.

    ++++++++++++++++++++++

    A Black Hole

    கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தது என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துக்களைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம் அதன் விளக்கங்கள்தான்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)

    (காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்காலப் புதிரான விஞ்ஞானப் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

    பேராசியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)

    Star Blast to form a Black Hole

    பிரபஞ்ச விஞ்ஞான மேதை ஸ்டீஃபென் ஹாக்கிங் 

    இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பௌதிக மேதையாகத் தற்போது கடுமையான நோயில் காலந் தள்ளி 2016 இல் 74 வயதான ஸ்டீஃபென் ஹாக்கிங் விஞ்ஞான ஆற்றலில் கலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோருக்கு இணையாகக் கருதப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானி ! விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின் கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற நியதி [The Uncertainty Principle], அடிப்படைத் துகள்கள், [Elementary Particles], இயற்கையின் உந்துவிசை [The Force of Nature], பிரபஞ்சத்தின் கருங்துளைகள் [Black Holes], காலத்தின் ஒருதிசைப் போக்கு [The Arrow of Time], பௌதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரமாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய “மகா ஐக்கிய நியதி” [Grand Unified Theory, (GUT)] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும் என்று முற்பட்டு வருபவரில் ஒருவர், ஸ்டீஃபென் ஹாக்கிங்!

    Computer Simulated Image of A Black Hole

    இங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தவர். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பாற்றலைக் கண்டுபிடித்த கணிதப் பௌதிக மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726), நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்!

    பிரபஞ்சத்தின் கருந்துளை என்றால் என்ன ?

    1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலி லிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ! ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

    Stephen Hawking

    1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.

    Medal of Science to Hawking

    கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ? நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன ! அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு ! பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ! ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    Formation of a Black Hole

    அண்டவெளிக் கருங்குழிகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

    1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புதியக் கணித முறைகளைக் கையாண்டு, ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] “ஒற்றை முடத்துவத்தை” [Singularities] ஆராய்ந்து வந்தார். அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபென் ஹாக்கிங் அண்டவெளிக் கருங்குழிகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவர் கருங்குழிகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாடைக் [Property] கண்டுபிடித்தார்! ஒளி கருங்குழிக் கருகே செல்ல முடியாது! ஒளித்துகளை அவை விழுங்கி விடும்! ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது! கருங்குழியின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது! ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருங்குழிகள் கதிர்வீச்சை [Radiation] வெளியேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

    Swallowing in a Black Hole

    ஸ்டீஃபென் ஹாக்கிங் இளமை வாழ்க்கை வரலாறு

    காலிலியோ இறந்து துள்ளியமாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் ஸ்டீஃபென் ஹாக்கிங் 1942 ஜனவரி 8 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்தார். மருத்துவ டாக்டரான தந்தை பிராங்க் ஹாக்கிங், தேசிய மருத்துவ ஆய்வுக் கூடத்தில் [National Institute for Medical Research] வேனில் நாட்டு நோய்களில் [Tropical Diseases] சிறப்பாக ஆராய்ச்சி செய்து வந்த உயிரியல் விஞ்ஞானி [Research Biologist]. தாயார் இஸபெல் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வேதாந்தம், அரசியல், நிதித்துறை பற்றிப் படித்தவர். அவர்களது நான்கு குழந்தைகளில் ஸ்டீபென்தான் மூத்த பையன். அவன் பிறந்த சமயம்தான் இரண்டாம் உலகப் போர் துவங்கி, ஜெர்மன் கட்டளை ராக்கெட்டுகள் அடிக்கடி ஏவப்பட்டுக் குண்டுகள் விழுந்து, பிரிட்டனில் பல நகரங்கள் தகர்க்கப் பட்டன!

    Black Holes

    சிறுவனாக உள்ள போதே ஸ்டீஃபென் பௌதிகத்திலும், கணிதத்திலும் மித மிஞ்சிய சாமர்த்தசாலி யாக இருந்தான்! ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின், ஸ்டீஃபென் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958 இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார் மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீஃபென் கணிதம், பௌதிகம் இரண்டையும் விரும்பி எடுத்துக் கொண்டார்! அங்கே அவர் வெப்பயியக்கவியல், ஒப்பியல் நியதி, கதிர்த்துகள் யந்திரவியல் [Thermodynamics, Relativity Theory, Quantum Mechanics] ஆகிய பகுதிகளைச் சிறப்பாகப் படித்தார். 1961 இல் ராயல் விண்ணோக்கிக் கூடத்தில் [Royal Observatory] சேர்ந்து, தன் சிறப்புப் பாடங்களின் வேட்கையில் சில மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1962 இல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் B.A. பௌதிகப் பட்டதாரி ஆகி, அடுத்துக் கேம்பிரிட்ஜ் சென்று பொது ஒப்பியல், அகிலவியல் துறைகளில் [General Relativity, Cosmology] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.

    Black Hole Creation

    கேம்பிரிட்ஜில் முதற் துவக்க காலவரைப் படிப்பு [First Term] முடிந்த பின் மிகவும் சோர்ந்து நொய்ந்து போன ஸ்டீஃபெனைக் கண்ட தாய், டாக்டரைப் பார்க்கும்படி மகனை வற்புறுத்தினார். இரண்டு வார உடம்பு சோதனைக்குப் பின், அவருக்கு ALS என்னும் [Amyotropic Lateral Sclerosis] ஒருவித நரம்புத் தசை நோய் [Neuro-muscular Disease (Motor Neurone Disease)] உள்ளதாக, டாக்டர்கள் கண்டு பிடித்தார்கள்! அமெரிக்காவில் அந்நோயை “லோ கேரிக் நோய்” [Lou Gehrig’s Disease] என்று குறிப்பிடுகிறார்கள்! அந்நோய் மூளை, முதுகுத் தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும்! ஆனால் மூளையின் அறிவாற்றலைச் சிறிதும் பாதிக்காது! அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும்! திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட வாழ மாட்டார் என்று முன்னறி வித்தார்கள்! அதைக் கேட்ட ஸ்டீஃபென் ஹாக்கிங் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாலும், பௌதிக ஆராய்ச்சி செய்யும் போது மன உறுதியும், உடல் வலிவும் பெற்று பிரபஞ்ச விரிவு ஆய்வுகளில் முன்னேறிக் கொண்டு வந்தார்!

    மாதர் குல மாணிக்கமான மனைவி ஜேன் ஹாக்கிங்!

    வாழ்க்கையில் நொந்து போன ஹாக்கிங், 1965 இல் ஜேன் ஒயில்டு [Jane Wilde] என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜேன் ஹாக்கிங் மாதருள் ஒரு மாணிக்கம்! மில்லியனில் ஒருத்தி அவள்! அவரது கடும் நோயைப் பற்றி அறிந்த பின்னும், அவர் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டார் என்று தெரிந்த பின்னும், மன உறுதியோடு ஸ்டீஃபெனை மணந்து கொண்டது, மாந்தர் வியப்படையச் செய்யும் மனச்செயலே! ஹாக்கிங் கசந்த போன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங்! 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig’s Disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீஃபென் ஆயுள் முடிந்துவிடும் என்று டாக்டர்கள் கணக்கிட்டார்கள்! ஆனால் 74 ஆண்டுகளுக்கு மேற்கொண்டும் [2016] அவரது ஆயுள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது! அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் உள்ளார்கள்!

    Hawking with His Second Wife

    துரதிர்ஷ்ட வசமாக நகர்ச்சி நரம்பு நோயில் [Motor Neurone Disease] துன்புறும் ஸ்டீஃபென், முழுவதும் நடக்க முடியாது முடமாகிப் போய், பேச்சுத் தடுமாறி உருளை நாற்காலியில், வீல்சேர் விஞ்ஞானியாய் உலவிச் செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது! மற்றும் சில முறைகளில் அவருக்கு யோகமும் இருந்தது! அவரது மனைவி ஜேன் ஹாக்கிங், [Jane Hawking] புதல்வர், புதல்வி அளிக்கும் உதவி, ஆதரவு ஸ்டீ·பெனுக்கு விஞ்ஞானப் பணிகளில் வெற்றியும், சுமுகமான வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது! அவரது விஞ்ஞானக் கூட்டாளிகளான ராஜர் பென்ரோஸ் [Roger Penrose], ராபர்ட் ஜெரோச் [Robert Geroch], பிரான்டன் கார்டர் [Brandon Carter], ஜார்ஜ் எல்லிஸ் [George Ellis] ஆகியோர் ஆராய்ச்சியிலும், பௌதிகப் பணியிலும் அவருக்குப் பேராதரவாகவும், பெருந்துணைவராகவும் அருகே இருந்தனர்!

    1985 இல் “காலத்தின் ஒரு சுருக்க வரலாறு” [A Brief History of Time] என்னும் அவரது நூலின் முதற்படி எழுத்தாக்கம் [Draft] முடிந்தது. ஜெனிவாவுக்குச் சென்று செர்ன் பரமாணு விரைவாக்கியில் [CERN Particle Accelerator] ஆராய்ச்சிக்காகத் தங்கிய போது, நிமோனியா நோய் வாய்ப்பட்டு மருத்துவக் கூடத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டார். உயிர்த்துணைச் சாதனத்தை [Life Support System] அவருக்கு இணைத்திருப்பதில் எதுவும் பயனில்லை என்று டாக்டர்கள் கூற, மனைவி ஜேன் ஹாக்கிங் கேளாமல், அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக் கூடத்திற்கு விமானத்தில் கொண்டு வந்தார்! அங்கே தொண்டைக் குழாய் அறுவை [Tracheostomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம்! அறுவை வெற்றியாகி ஸ்டீஃபென் உயிர் பிழைத்துக் கொண்டார்! ஆனால் அவரது குரல் முற்றிலும் அறுந்து போய்விட்டது! அதன்பின் அவர் பிறரிடம் எந்த விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது!

    Supernova turns into a Black Hole

    அப்போது அவரது மாணவருள் ஒருவரான பிரையன் விட் [Brian Whitt] என்பவர் நூலை எழுதி முடிக்க உதவியதோடுப் பிறரிடம் தொடர்பு கொள்ள “வாழ்வியக்க மையம்” [Living Center] என்னும் தொடர்புக் கணினிப் படைப்பு [Communication Program] ஒன்றை ஸ்டீஃபெனுக்கு அமைத்துக் கொடுத்தார். “வாழ்வியக்க மையம்” ஸன்னிவேல் கலிஃபோர்னியாவில் உள்ள வால்ட் வால்டாஸ் [Walt Woltosz of Words Plus Inc. & Speech Plus Inc. Sunnyvale, California] அவரின் அன்பளிப்பு! அதைப் பயன்படுத்தி ஸ்டீஃபென் ஹாக்கிங் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்; அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthecizer] மூலம் ஸ்டீஃபென் பிறருடன் பேசலாம்! டேவிட் மேஸன் [David Meson] என்பவர் பேச்சு இணைப்பி, மின்கணனி இரண்டையும் அவரது சக்கர நாற்காலியில் வசதியாகப் பிணைத்து வைத்தார். இப்போது ஸ்டீஃபென் மின்னியல் குரலில் [Electronic Voice], முன்னை விடத் தெளிவாக இவற்றில் மூலம் எழுதவும், பேசவும் முடிகிறது!

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2. Universe 6th Edition (2002) 3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6. BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]

    10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html (May 16, 2007)

    11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe

    [www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html (July 10, 2007)

    12. Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html (April 12, 2007)

    13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)

    14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)

    15. The Hyperspace By: Michio Kaku (1994)

    16. Parallel Worlds By: Michio Kaku (2005)

    17. The New York Public Library Science Desk Reference (1995)

    18. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007)

    19. Astronomy “The Secret Lives of Black Holes” (Nov 2007)

    20. The Handy Space Answer Book By Phillis Engelbert & Diane Dupuis (1998)

    21. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html (பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)

    22.  http://www.nasa.gov/jpl/nustar/pia18842  [Oct 7, 2014]

    23.  http://science.nasa.gov/astrophysics/focus-areas/black-holes/  [February 16, 2016]

    24.  http://www.space.com/15421-black-holes-facts-formation-discovery-sdcmp.html

    25. https://en.wikipedia.org/wiki/Black_hole [May 17, 2016]

    26. https://www.scientificamerican.com/article/stephen-hawking-hasn-t-solved-the-black-hole-paradox-just-yet/ [August 27, 2015]

    27. https://www.universetoday.com/123039/what-is-the-black-hole-information-paradox/  [February 23, 2017]

    28.  https://en.wikipedia.org/wiki/Black_hole  [August 24, 2017]

    29.  https://en.wikipedia.org/wiki/Black_hole_information_paradox  [August 29, 2017]

    30 http://www.dailygalaxy.com/my_weblog/2017/08/the-black-hole-paradox-new-theory-says-soon-after-big-bang-black-holes-lit-up-the-universe.html  [August 30, 2017]

    ******************

     
     

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 2, 2017 [R-2]

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (7)

    மீ.விசுவநாதன்

    பகுதி: ஏழு

    பாலகாண்டம்

    “இஷ்வாகு குலமும் அயோத்தி தேசமும்”

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1-1

    மனுவில் தொடங்கி வருகிற “இஷ்வாகு”
    இனக்குலம் ஓங்கி ஈடிலாப் புகழுடன் (2)

    கோசல நாட்டை குற்ற மிலாது
    நேச முடைய நிறைகுண மக்களின் (4)

    விருப்பு அறிந்த வேந்தர் களாக
    பொறுப்பு மிகுந்து பூமியை ஆண்டனர் ! (6)

    அவர்களின் கதையே அயோத்தி நகரில்
    நவயுக இராமன் நடத்திய வாழ்வாய் (8)

    இராமா யணமாய் ஏற்றம் கண்டது !
    இராவும் பகலும் இசையுடன் சொல்ல (10)

    இங்கே குசனும் இலவ னுமாய்
    உங்கள்முன் நிற்கிறோம்! ஒருமுக நினைவாய்க் (12)

    கதையைக் கேட்டு கவலையை நீக்குவீர் !
    இதைவிட நமக்கோர் இன்பம் வேறில்லை ! (14)

    கோசல நாடும் சரயூ நதியும்

    சூரியக் கதிர்களைச் சுண்டி இழுக்கிற
    சீரிய நற்குணம் செழித்துப் பாய்கிற (16)

    நதியே சரயூ ! நற்கோ சலத்தின்
    நிதியே அதுதான் ! நேர்மை, வீரம் (18)

    நிறைந்த மக்களை நிமிர்த்தி வைத்துத்
    துறைக ளெங்கும் தூய்மை செய்து (20)

    ஆற்றுப் படுத்திய அழகிய ஆறது
    நோற்றுப் பெற்றதே நூதன அயோத்தி ! (22)

    தசரத மன்னனின் தவத்தால் மேலும்
    உசரம் கண்டதில் உலகே வியந்தது ! (24)

    அழகிய தெருக்கள் ! அதிலே வேதம்
    பழகிய சான்றோர் பல்லாயிர முண்டு ! (26)

    வேள்விப் புகையில் வீதியில் செல்லும்
    ஆள்மீது நெய்மணம் அப்பி இருக்கும் ! (28)

    கல்விச் சாலையில் கற்கும் குரலுக்குச்
    செல்வம் இறங்கிச் சிறப்புகள் செய்யும் ! (30)

    வயல்வெளி விளைந்ததை வாரி எடுத்தே
    புயலெனச் செல்கிற பொற்குண ஊழியர் (32)

    வழிகளில் சிந்திடும் தானிய மணிகளைச்
    செழிப்புடன் உண்டே சிறகடிக்கும் புள்ளினம் ! (34)

    அறிவில் சிறந்த ஆசார்ய வசிஷ்டர்,
    செறிந்த வாமதேவர், சிரஞ்சீவி மார்கண்டர் , (36)

    காசிபர், ஜாபாலி, காத்யா யனரும்
    யோசனை சொல்லும் உயர்ந்த மந்திரியாய் (38)

    மன்னன் தசரதன் மன்றில் இருந்தனர் !
    இன்னும் சுமந்திரன் என்றொரு சாரதி (40)

    அருகே இருந்து அரசனைக் காத்தார் !
    கருவிலே நீதி கண்ணியம் பெற்றவர் (42)

    இதுபோல் நிறையவே இருந்தனர் ஆன்றோர்
    புதுமை அயோத்திக்குப் புகழினைக் கூட்டவே ! (44)

    தயரதனின் விருப்பமும் ஞானியர் ஆசியும்

    இத்தனை இருந்தும் இல்லா ஒன்றுக்காய்
    சித்தம் வருந்தி இருக்கும் வேளையில் (46)

    மதிநுட்பம் கொண்ட மந்திரி சுமந்திரர்
    எதிலும் கலங்கா இந்த மான்னனேன் (48)

    இப்படி இருக்கிறார் என்பதை அறிந்து
    அப்படியே சென்று ஆசார்ய வசிஷ்டரை, (50)

    மந்திரி மார்களை வரவழைத் திட்டார் !
    இந்திரன் வணங்கும் இந்த தயரதன், (52)

    உள்ள மிருக்கும் ஒருவிருப்பம் சொன்னான் !
    “அள்ளி எடுத்து அப்படியே முத்தமிடப் (54)

    பிள்ளை என்னும் பேறு வேண்டும் !
    வள்ளல் இறையோன் வரமளிக்க வேண்டும் ! (56)

    பெரியோர் உங்களின் பேராசி வேண்டுமென”
    கரிபல பலங்கொண்டோன் கைகட்டிக் கேட்டான் ! (58)

    “பிள்ளை வேண்டி வேள்வி செய்வாய்
    வள்ளல் உனக்கு வாய்க்கும் வம்சம் ! (60)

    பட்டத்துக் குதிரையை பார்முழுதும் அனுப்புக !
    சிட்டெனப் பாய்ந்தது செகத்தை வென்று (62)

    திரும்பி வந்ததும் செய்வோம் வேள்வியை !
    கரும்பாய் இனித்துக் கடலாய் நடக்கும் (64)

    சரையூ நதியின் வடக்குக் கரையில்
    இறையை வேண்டும் வேள்விச் சாலையை (66)

    உடனே அமைக்க உத்தர விடுக !
    அடைவீர் உங்கள் அகத்தின் ஆசையை” (68)

    என்று யோகியர் இனிது கூறினர் !
    நன்றி கூறி நம்மன்னன் நகர்ந்தான் ! (70)

    மூன்று மனைவியர் முன்னே சென்று
    தோன்றிய எண்ணத் தூய்மையைச் சொல்லி (72)

    மக்கட் பேறு வரம்பெறும் துணைவீர்,
    “துக்கம் நீங்கிடத் துலங்கிடும் வம்ச (74)

    வேள்விக் கான விரத மிருப்பீர்
    கோள்கள் எல்லாம் குணமே செய்திடும்” (76)

    என்ற அரசனின் இன்சொல் கேட்டு
    நின்ற சிலையாய் நிம்மதி முகமாய் (78)

    பட்டத்து அரசிகள் பார்த்தபடி யிருக்க
    கிட்டத்து வந்து கிள்ளிப் பார்த்தான் (80)

    சக்கர வர்த்தி தம்முடைத் துணைகளை !
    அக்கணம் மூன்று அரசியும் கணவனின் (82)

    காதல் நெஞ்சிலே கூடல் செய்தே
    சீதக் கனலைச் சீண்டி விட்டனர் ! (84)

    சரண்மனை என்ற தயரதன்
    அரண்மனை எங்குமே அமுதம் பொழிந்ததே ! (86)
    (தர்ம சரிதம் வளரும்)

     

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பகுதி நிறைந்தது)

    Share
  • மாணவர்களே… சிந்தியுங்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    சுடர்மிகு அறிவோடு திகழ்ந்த ஓர் ஏழைக்குழந்தை தன் மருத்துவக் கனவு மெய்ப்படவில்லை என்று மாண்டுபோனது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. ’நீட்’ தேர்வு எமனாக மாறி அந்த உன்னத உயிரைக் காவு வாங்கிவிட்டது. உச்சநீதிமன்றம்வரை சென்றாலுங்கூட நிதிபடைத்தவர்களுக்குத்தான் நீதி கிடைக்கும் போலிருக்கிறது!

    ’நீட்’ தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெறும் நிலையில் நம் தமிழக மாணவர்கள் யாரும் இப்போது இல்லை என்பதே உண்மை. நம் கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்களை ’நீட்’ போன்ற தகுதித் தேர்வுகளுக்கு ஏற்றவர்களாக மாற்றும்வரைத் தமிழகத்துக்கு ’நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பதே இதற்கான தற்காலிகத் தீர்வு!

    இது ஒருபுறமிருக்கட்டும்!

    தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, ”மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை; அதனையொத்த செவிலியர் படிப்பு, பிசியோதெரபி, பார்மசி என்று எத்தனையோ மருத்துவம்சார் படிப்புகள் (allied health science courses) இருக்கின்றன…கலங்காதே!” என்று எடுத்துச்சொல்லி அனிதாவின் தோள்தொட்டுத் தைரியம் கூறவும், ஆற்றுப்படுத்தவும் யாரும் அருகில் இல்லாததுதான் அந்தக் குழந்தையைத் தற்கொலைவரை செல்லத் தூண்டியிருக்குமோ என்று ஐயுறுகின்றேன்.  

    தோற்பதைவிட நாம் தோற்றுத் துவண்டுநிற்கும் நேரத்தில் நம்மைத் தேற்ற யாருமில்லாததுதான் பெருங்கொடுமை! 

    துயர்மிகுந்த இவ்வேளையில் மாணவர்களுக்குச் சில சொல்ல விழைகிறேன்…

    பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் எப்போதுமே மேற்படிப்பு குறித்து ஒரே இலக்கை (one goal) வைத்துக்கொள்வது பல நேரங்களில் பலன்தருவதில்லை. Plan A, Plan B, and Plan C என்று மேற்படிப்பு குறித்த மூன்று திட்டங்களை அவர்கள் கைவசம் வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒன்று கிடைக்காவிட்டால் மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் திட்டமிடல் தேவையற்ற மன உளைச்சலையும், விரக்தியையும், அதனால் விளையும் தவறான முடிவுகளையும் தவிர்க்க உதவும்.

    ’மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பொறுப்பே’ என்று கருதி ஒதுங்கியிராமல் கல்வி நிலையங்களும், சமூக ஆர்வலர்களுங்கூடக் கற்றறிந்த ஆலோசகர்களைக்கொண்டு பள்ளி மாணவர்களின் (குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களின்),  எதிர்காலத் திட்டமிடலுக்குத் தங்களாலான வகையில் ’கவுன்சிலிங்’ செய்து உதவலாம்.

    எப்படிப் பார்த்தாலும் இவ்வகை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவையே!

    மாணவச் செல்வங்களே! பள்ளியில்பெறும் புள்ளிகளோடு (marks) முடிந்துவிடுவதில்லை உங்கள் வாழ்க்கை. பள்ளிக்கல்வியில் தோற்ற எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையில் பெருவெற்றி பெற்றிருக்கின்றார்கள்; தலைவர்களாகி நாட்டுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.

    எனவே, தயவுசெய்து தற்காலிகத் தோல்விகளுக்காகத் தற்கொலையை நாடாதீர்கள்! That’s not at all a solution for your problem! 

    “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்”
    என்றாரே நம் பேராசான்! அதனை மறக்கலாமா?

    கல்வித்தேடல் குறித்த உங்கள் பார்வையைக் கூர்மையாக்குங்கள்…வெற்றிக்கான வழி புலப்படும்!

    Share
  • மாணவி அனிதாவின் மரணம்…

    *********************************************************************************************************************
    மாணவி அனிதாவின் மரணம்…
    ஆழ்ந்த கவலையையும் உரத்த சிந்தனையையும் ஒருசேர உருவாக்கியுள்ளது…

    மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் அறிக்கை
    *********************************************************************************************************************

    மாணவி அனிதாவின் மரணம் பத்தோடு பதினொன்றாகக் கருதி கடந்து விடமுடியாத ஒன்றாகிவிட்டது. மனசாட்சியை உலுக்கும் வீச்சும் வீரியமும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு உண்டு.

    இது ‘ தற்கொலை தானே ’ என்று பகுத்தறவு பேசித் தள்ளிவிட முடியாத நிகழ்வுதான் அனிதாவின் மரணம்.

    ஏழைக் கூலித்தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்துள்ளார்… தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவராகத் திகழ்ந்துள்ளார். சிறுவயதிலேயே தாயை இழந்துள்ளார். சிறிதும் வளர்ச்சியடையாத குக்கிராமத்தில் வளர்ந்துள்ளார்.

    இத்தனை இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தபோதும் அரிதின் முயன்று கல்வியில் மிகச் சிறந்தவராக விளங்கியுள்ளார்.

    நீட் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அனிதா இன்று மருத்துவக் கல்லூரி மாணவியாக நம்மோடு மகிழ்வுடன் வாழ்ந்திருப்பார்.

    அனிதாவின் மரணம் ‘ ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி ’ என்ற கூற்றை உறுதி செய்துள்ளது.

    ‘ வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளா ? ’ என்ற அடிப்படையான கேள்வியையும் எழுப்பியுள்ளது.

    ‘ தரமான கல்வி வேண்டும் ’ என்பதிலும் ‘ அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும் ’ என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது.

    அத்தகைய நிலையை அடைய மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன ? சமூகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் ? கல்வித் துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் யாவை ? நீதித்துறையின் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் ? போன்ற எண்ணற்ற கேள்விகள் முறையாக பதிலளிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.

    இவை போன்ற அடிப்படையான அம்சங்களில் அரசும் சமூகமும் கவனம் செலுத்தத் தவறியதை இடித்துச் சொல்வதுபோல் அனிதாவின் மரணம் அமைந்துவிட்டது.

    கல்வி வளர்ச்சியை மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ பார்க்காமல் தரத்தை, வளர்ச்சியை சமூகக் கண்ணோட்டத்தோடு இணைத்துப் பார்க்கின்ற ஆழ்ந்த அக்கறையுள்ள சமூக நோக்கம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

    இந்த செய்திகயைத்தான் அனிதா தனது மரணத்தின் மூலம் இச்சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்.

    திறமை – திறமை என்கிறார்களே, மதிப்பெண் – மதிப்பெண் என்கிறார்களே அந்தத் திறமையும் மதிப்பெண்களும் இருந்தும் அனிதா ஏன் தான் நினைத்ததைப் படிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா ?

    திறமையிருக்கிற அனிதாவுக்கு மேலும் தரமான கல்வி வாய்ப்பளிக்காதது யார் குற்றம் ? குற்றம் இழைக்காத ஒருவர் தனக்குத்தானே தண்டனையளித்துக் கொண்டதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா ?

    அதுதான் அனிதாவின் மரணத்தில் நிகழ்ந்திருக்கிறது.

    அனிதாவின் மரணத்திற்கு மக்கள் சிந்தனைப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

    கல்வி சிலருக்கானதோ பலருக்கானதோ அல்ல… அது மகத்தானது மட்டுமல்ல… மக்களுக்கானது. அனிதாவின் மரணம் ஆழ்ந்த கவலையளிப்பதோடு உரத்த சிந்தனையையும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    ————————————————X————————————————

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170902 - Ananya - lr
    ”அனன்யபக்தி ஆவுக்(கு) அளிக்கும் பிருந்தா
    வனன்யகண்ணா காலை வணக்கம், -தினம்யென்
    கணினியில் பிறந்திடுவோய், கேசவ் வரைந்திடுவோய்,
    ManyMany HappyReturns மால்’’….!

    ”அனன்யமவர் ஆவுக்(கு), அராஜக சிந்தை
    சினன்யர்கள் கம்ஸ சிசுபால -இனன்யர்போல்
    கூடாரைக் கொல்லும்சீர் கோவிந்தன், ஆன்மனை
    தேடார்க்(கு) அதாகும்கீ தை’’….கிரேசி மோகன்….!

    Share
  • கோப்புக்கூட்டல் (7): தமிழ்

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 1, 2917

     

    innam

    டேவிட் ஷுல்மன்

    மொழிகள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவது அவற்றின் இயல்பு. அந்த இயல்பை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டதால்தான், இன்று ஆங்கிலம் உலகமொழியாக உலவி வருகிறது. ஸம்ஸ்கிருதம் என்ற பெயரின் பொருள், ‘நன்கு உருவாக்கப்பட்டது’. கணினியாளர்களில் பெரும்பாலோர் அது உண்மை என்பார்கள். அது ஒரு புறமிருக்க, எந்த மொழிக்கும் அந்தத் தகுதி இல்லாமல் போகவில்லை என்பதை கிரேக்கம், ரோமானிய மொழி, அரபி, ஹீப்ரு, தமிழ் அறிந்தவர்கள் அறிவார்கள். மேலும் சொல்லப்போனால், தனிமொழியாக இயங்கத்தொடங்கிய ஸம்ஸ்கிருதம், அதனாலேயே பேசாமடந்தை ஆயிற்று.

    இன்றைய கோப்பு, பேராசிரியர் டேவிட் ஷுல்மனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறது. முனைவர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் விமர்சனத்தையும் சுட்டுகிறது.

    இனி அவரவர் பாடு! தமிழின் பாடு!

    “The notion that there was a pure Tamil that had no Sanksrit in it is a complete fantasy. There are Prakrit and Sanskrit words in the earliest Tamil Brahmi inscriptions we have. The Tolkappiyam is permeated by Sanskrit — the phonological analysis of the yezhuthhu (alphabet) is taken from Sanskrit grammarians. The Tamil Brahmi script has some features peculiar to it, but it’s deeply interwoven with the Sanskrit system.”.. “I want, and hasten to say, that everything in life is singular and unique. Tamil is also unique. But it’s not unique because it has nothing to do with Sanskrit. It is unique because Tamil has all of this in it and it has its own genius. Tamil grammarians such as Sivananamunivar in the 18th century themselves say that it has iyarkai, iyalpu, a particular nature. It is the task of Tamil grammarians to unravel and review that logic or nature, and this nature does not depend on separating it from Sanskrit.”

    -David Shulman:  Tamil: A Biography.

    Excerpted with thanks on September 1, 2017 fromhttp://www.thehindu.com/society/i-cannot-compartmentalise-my-life/article19554510.ece

    “,,,But my biggest argument is with a thread that runs through the book. Shulman asserts that a pure, autonomous Tamil never existed. If this was the case, why, even in his own analysis, at every moment in its long history, is Tamil continually resisting and wrestling with Sanskrit to maintain its distinction — a cross that no other Dravidian/ Indian language wants to bear?…”

    Prof. A.R. Venkatachalapathy

    Excerpted with thanks on September 1, 2017 fromhttp://www.thehindu.com/books/books-reviews/review-tamil-a-biography/article17325788.ece

    ***

    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/David_Shulman.jpg/250px-David_Shulman.jpg

     

     

     

    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

    ***************************************************************************************

    ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

    ***************************************************************************************

    1

    பர்கூர், கடம்பூர் ஆகிய சத்தியமங்கலம் பகுதியிலுள்ள மலைகளில் வாழும் சமார் 40 பழங்குடியின மாணவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு அவர்களின் ஆசிரியர்களால் அழைத்து வரப்பட்டனர். மிகவும் பின்தங்கிய மலைப் பிரதேசங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கிற பழங்குடியின மாணவர்களாகிய இவர்கள் ரயில்களையோ, நகரிலுள்ள தரமான பேருந்துகளையோ கூடப் பார்த்ததில்லை. இவர்கள் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள கொங்காடை, கடம்பூர் மலைப் பகுதியுலுள்ள குன்றி, விளாங்கோம்பை, அக்னிபாவி, ஜி.என். தொட்டி, நாயகன்தொட்டி, அணில்நத்தம் பண்ணையத்தூர் ஆகிய எட்டு கிராமங்களில் இயங்கிவரும் அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களாவர். இவர்களின் ஆசிரியர்கள் சிரத்தையெடுத்து ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு இவர்களை அழைத்து வந்ததோடு புத்தகத் திருவிழா அரங்கிற்குள் முழுமையாகச் சுற்றியும் காட்டினர். இம்மாணவர்களுக்கு மலைப்பகுதிகளில் செயல்பட்டுவரும்       ‘ சுடர் ’ தொண்டு நிறுவனம் உதவி வருகிறது.

    3

    இம்மாணவர்கள் விழாக்கோலம் பூண்டிருந்த புத்தகச் சந்தையைப் பார்த்தும் குவிந்து கிடந்த லட்சக்கணக்கான வண்ண வண்ணப் புத்தகங்களைப் பார்த்தும் குதூகலமடைந்தனர்.

    புத்தக அரங்கைவிட்டு வெளியே வந்த இம்மாணவர்களிடம் “ யார் யார் புத்தகங்கள் வாங்கினீர்கள் ? ” என்று பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் கேட்டார். அனைவரும் வெறுங்ககையோடு வெளியே வந்ததோடு கையை விரித்து “ யாரும் எதுவும் வாங்கவில்லை ” என்று சைகை காட்டினர்.

    அத்தனை மாணவர்களுக்கும் புத்தகங்கள் பேரவையின் சார்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டதோடு அவர்களுக்கு மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டது.

    2

    தீபாவளி சமயங்களில் கையில் பட்டாசு வாங்கிச்செல்லும் குழந்தைகளினின் பூரிப்பை இப்பழங்குடி மாணவர்களின் முகங்களில் பார்க்க முடிந்தது.

    ஆம்… ஈரோடு புத்தகத் திருவிழா தொலைதூரத்திலுள்ள மலைப்பிரதேசக் கிராமங்களையும் எட்டியுள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170901 - Dialogue with Arjuna (Nara Narayana) -lr

     

    “டயலாக்வித் அர்ஜுனா, டாப்கிளாஸ் கேசவ் –

    பயலேக்(payalag) ஆகி பயந்தும் , -கயலாக –

    ஆமைவ ராகசிங்கம் அந்தணர்(வாமனர்) மூணுவித –

    ராமனும் கண்ணன் ரதம் “….

     

    ’’உள்ளத்தில் நல்லவுள்ளம் உள்ளதைக் காட்டிடும்,
    கள்ளமில் லாக்கலர் கண்ணாடி -பல்குனா(அருச்சுனா)
    வந்ததை ஏற்றதன்மேல் வில்லம்பு வீசடா
    பந்தங்கள்,சொந்தங்கள் பொய்’’….

     

    ’’சாரதி கீதையாய், சவ்யசாசி காமத்தை (பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
    வேரறுத்துச் சொன்னார் , விஜயரே!, – பாருச்சி,
    தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளான்,
    நூறைச் சிதைக்க நிமிர்’’….
    ”பகவான் உவாச’’….!
    ————————————————–

    ’’மடிதனில் குந்தி மகனேகாண்!, மந்தி
    வடிவினில் மாருதி விண்ணில் -கொடிதனில்
    வெற்றிவேல் வீரவேல் வாக்குறுதி செய்வதை,
    பற்றுவில் காண்டீபம் பாண்டு’’….!

    “வாகனம் தெய்வம், வழித்துணை ஆண்டவன்,
    போகும்நம் பாதை பகவானே, -நீகனம்,
    தன்செயலென்(று) எண்ணி ,தலைமேல் சுமக்கின்றாய்,
    என்செயல் ஆனால் இறகு(பீலி மயில்)”…..கிரேசி மோகன்….

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 9​7

    தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா

    முனைவர் சுபாஷிணி

    ​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தினைப் பற்றி இந்தப் பதிவில் சில செய்திகள் பகிர்ந்து கொள்கிறேன்.

    கோலாலம்பூரின் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு அருகே, டாமான்சாரா சாலையில் அமைந்திருக்கின்றது மலேசிய தேசிய அருங்காட்சியகம். மலேசிய மக்கள், வரலாறு, மன்னர்கள், பேரரசுகள், காலனித்துவ ஆட்சிக்கால செய்திகள், கலாச்சாரம், அகழாய்வு என மலேசியாவைப் பற்றி பொதுவாக ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், மிக நேர்த்தியான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சிலாங்கூர் அருங்காட்சியகம் சிதிலமடைந்த பிறகு இந்த புதிய கட்டிடத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 21 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு இப்புதிய கட்டிடம் திறப்பு விழா கண்டது. பாரம்பரிய மீனாங்கபாவ் கட்டுமான வடிவத்தில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

    as4

    அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் இருக்கும் வரவேற்பு வளையம் கெடா மாநிலத்திலிருக்கும் குவாலா கெடா கோட்டையின் முகப்பில் இருந்த வரவேற்பு வளையமாகும். அதனை பெயர்த்தெடுத்து வந்து இந்த அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியாக அது​ இங்கு​ இணைக்கப்பட்டிருக்கின்றது. கெடா மாநிலத்திலிருக்கும் அக்கோட்டைப் போர்த்துக்கீசியர்கள் மலாயாவைக் கைப்பற்ற 1611ம் ஆண்டில் நிகழ்த்திய போரின் போது பெருமளவு சேதமடைந்தது. மீண்டும் 1771ம் ஆண்டு அக்கோட்டை அப்போதைய கெடா மன்னர் சுல்தான் முகமது ஜீவா ஜைனல் அசீலீன் முஆஸாம் ஷா (1778 – 1797) அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. மலாயாவை ஆட்சி செய்த மன்னர்களின் பலத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாக இந்தக் கோட்டையின் வாயில் பகுதி திகழ்வதால்​,​ அது இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன் வாயிலில் பொருத்தப்பட்டு சிறப்பளிக்கப்பட்டுள்ளது.

    as3
    வாசல் பகுதியிலேயே அன்றைய மலாயாவில் செயல்பாட்டில் இருந்த ரயில்பெட்டிகள் சில வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ரயில்பெட்டி 121,600,00 மலேசிய ரிங்கி​ட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்டதாகும். 1921ம் ஆண்டு இது​ தன்​ சேவையைத் தொடங்கியது. இதன் எடை 88 1/2 டன் ஆகும். Kitson and Co. என்ற இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் இதனைத் தயாரித்தது. நவம்பர் மாதம் 1969ம் ஆண்டு இது தன் சேவையை நிறுத்திக் கொண்டது என்றும் தனது சேவைக் காலத்தில் இந்த ரயில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் சேவையில் இருந்ததாகவும், ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் ரயில் மைல்கள் இது பயணித்துள்ளது என்றும் அறிய முடிகின்றது. இதைப் போல இன்னும் சில ரயில்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பினாங்கு மலை உச்சிக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட பழைய கேபிள் ரயில் ஒன்றின் பகுதி ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றது.

    as2
    ​அன்றைய மலாயா உட்பட கிழக்காசிய நாடுகள்​ அனைத்தும் புத்தமதம் செழித்துப் பரவிய நாடுகள் எனலாம். கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்யவந்து பின்னர் இந்த​ புதிய நிலப்பகுதியிலேயே தங்கி​,​ இங்கே பௌத்த மதம் செழிக்கவும் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட பௌத்த மத வழிபாட்டினைக் கடைபிடிப்போராகவே தங்கள் பண்பாட்டினைத் தொடர்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது. கி.பி.6ஆம்​,​ 7ஆம் நூற்றாண்டு கோயில்களின் பகுதிகள்​ ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட ​ அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கெடா மாநிலத்திலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு இன்றளவும் இந்திய பழம் பண்பாட்டின் தாக்கத்தைக் காட்டும் உதாரணமாகத் திகழ்கின்றது எனலாம். அந்த வகையில் பேராக் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலோகிதர் சிற்பம் ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 1936ஆம் ஆண்டில் ஈயம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினருக்கு இந்தச் சிற்பம் கிட்டியது. இது செம்பினால் செய்யப்பட்ட சிற்பம். இதன் காலம் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக்கணக்கிடுகின்றனர். இக்காலகட்டத்தில் இந்து சமயமும் பௌத்த சமயமும் இப்பகுதிகளில் மிகச் செழிப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    as1

    மலேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என்றால் அது 31 ஆகஸ்ட் 1957ஆம் ஆண்டினைத்தான் குறிப்பிட வேண்டும். சுதந்திரம் வேண்டிய உள்ளூர் மக்கள் இங்கிலாந்தின் காலணித்துவ அரசை எதிர்த்து அகிம்சைப் போராட்டத்தை நடத்தினர். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1955ஆம் ஆண்டும் சட்டப்பேரவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்பட்ட அம்னோ, எம்.ஐ.சி, எம்.சி.எ ஆகிய மூன்று கட்சிகளும் மலாயாவின் பெரும்பான்மை சமூகத்தினைப் பிரதிநிதித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டாண்டுகளில் படிப்படியாக நிகழ்ந்த முன்னேற்றம் மலேசியா விடுதலைப் பெற்ற சுதந்திர நாடாக வலம் வர வழிவகுத்தது. சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமராக துன் அப்துல் ரகுமான் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள் மலேசிய வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பதில் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி மலேசிய சுதந்திரம் தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது.

    as

    இப்படி இங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விவரித்துக் கொண்டே போகலாம். பெருங்கற்காலக்கருவிகள், மரப்பட்டை ஆடைகள், மனித எலும்புக்கூடுகள், விவசாயக் கருவிகள், மன்னர்களின் வரலாறுகள், பேரரசர்களின் வரலாறுகள் என சுவாரசியம் குறையாமல் இந்த அருங்காட்சியகத்தில் நேரத்தைச் செலவிடலாம். ஒவ்வொரு பகுதியும் வருகை தருவோருக்குத் தேவையான தகவல்களை​ குறையாமல் வழங்குகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வருபவர்கள் தவறாமல் வந்து பார்த்து செல்ல வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த தேசிய அருங்காட்சியகத்தை நான் கருதுகிறேன்.

    சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?​

    Share
  • கைவல்ய நவநீதம்….

    கிரேசி மோகன்

    கடவுள் காப்புக்கு பதிலாக எழுத்தறிவித்த என் நண்பனுக்கு நன்றி….
    ———————————————————————————–

    “கைவல் யநவநீதக் கட்டுரை யாப்பெனது
    கைவரப் பெற்றதற்கு காரணம்கேள், -தைவர
    தோன்றும் வழிபோலத் தோன்றிய நண்பனாம்,
    சான்றோன் ரவிசகவா சம்”….கிரேசி மோகன்….

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் (1)….நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….
    குரு வந்தனம்….அவரது குரு ஸ்ரீவேங்கடேச முகுந்தரை தியானித்து….
    ——————————————————————————————

    ‘’ஆகாச சாட்சியாய், ஐம்புலன்கள் வாயிலாய்
    தேகான்ம பாவமாய், தத்துவமாய்,-ஏகாந்த
    நன்நிலமாய் நெஞ்சத்தில் நின்று மனமேழ்வாழ்
    செந்நிலவு சூர்யா சரண்’’….(1)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 2….
    ———————————————————
    “ஆழிஆ னந்தத்தில் ஆதவனாய்த் தோன்றிடும்,
    கோழிகூ வாதந்த கோளுணர்வே , -வாழிய;
    விஷ்ணு பிரம்மா விரிசடை யோனாகும்
    உஷ்ணமே என்னுள் உதி”….(2)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 3….
    ———————————————-
    “தேசிகன் பாதம் தொழுது தெளிவடைந்தேன்
    பாசி உலகம் படர்வதால், -வாசிநான்,
    பொய்யென்(று) அறிந்தேன் ,புகுந்தீர் மனச்சுவரில்
    அய்யநீர் ஆகாச அன்பு”….(3)

    கைவல்ய நவநீதம்”….ஸ்லோகம் 4….குரு வந்தனம்...
    ———————————————————–

    “புத்திமன தேகம் புலனைந்தும் போக்கத்த
    சக்தியெனச் சொன்ன சதாசிவவி, -ரக்தியே,
    மூடுபனி ஆதித்தன் முன்னோடல் போல்வந்து
    வீடுதந்தீர் வாடகையாய் வாழ்த்து”….(4)

    கைவல்ய நவநீதம்….சுலோகம் 5….
    ———————————————-

    நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….

    “அடிமுடி மத்தியில்லா ஆகாச ஆசான்
    அடிபணிந்து சொல்கிறேன், ஆன்ம,-மடிபுகுந்த
    வித்தகம், பேத விடுதலையை, வேதாந்த
    புத்தகப் போதில்லாத பேர்க்கு”….கிரேசி மோகன்….

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 6….
    ———————————————

    பண்டைநாள் வேதாந்த பாத்திரங் கள்தளும்பா(து)
    உண்டபால் தன்னை உருக்கியபின், -சுண்டிடக்
    காய்ச்சி அளிக்கின்றேன் ,கைவல்ய வெண்ணையிதை
    ஆய்ச்சியர்க்கு கண்ணன் அளிப்பு”….(6)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 7….
    ——————————————-

    ‘’சுகந்த சுதந்திர ஸ்ரீவேங்க டேச
    முகுந்தகுரு என்னுள் திகழ்ந்து -உகந்ததிதை,
    பாகமிரண் டாக்கி, பரம்முதலில் பின்னெழும்சந்,
    தேகம் இரண்டில், தெளிவு’’….(7)
    —————————————————————————————————————————
    பாகம்-ஒன்று
    —————

    The Exposition Of The Truth
    ————————————–
    மெய்யுணர்வு
    —————

    ஸ்லோகம்-8
    —————-

    ‘’விடுதலை வேட்கை, விசார விவேகம்
    விடுதளை விட்டேத்தி வாழ்க்கை,-படுதலை
    வைத்தாறு பண்புகளில், வேதாந் திகள்நான்கை
    தைத்தார்கள் மெய்யுணர்வ தற்கு’’….கிரேசி மோகன்….(8)….

    Share