Blog

  • புத்தரும் பெரியாரும்

     முனைவர். ஜ.பிரேமலதா,

    தமிழ்  இணைப் பேராசிரியர்,

    அரசு கலைக் கல்லூரி,

     சேலம் -636 007

    முன்னுரை

    இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

    புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு, சுய சிந்தனை, நேர்மை,  பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்கருத்து போன்ற பல கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக் கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள். போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள். சுய சிந்தனையாளர்கள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள ஒற்றுமைகளை ஆராய்கிறது.

    வாழ்க்கை ஒற்றுமையடிப்படையில் பார்க்கும் பொழுது, தனக்குரிய அரச பதவியையும் போகத்தையும் துறந்து  பத்தொன்பதாவது வயதில் சித்தார்த்தர்புத்தராகிறார். பெரியாரும் தன்னுடைய செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து விலகி 25ம் வயதில் துறவறம் மேற்கொள்கின்றார்.

     திருமணத்திற்குப் பிறகு இருவரும் துறவறத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். எனினும் அவர்களின் மனைவிமார்கள் இதற்குக் காரணமில்லை. சுஜாதையும் நாகம்மையும் உயர்வானவர்களே. இருவரும் கணவனுடைய கருத்திற்கு ஒத்துப் போகிறார்கள். பிற்காலத்தில் கணவருடைய பாதையைப் பின்பற்றுகிறார்கள்.  புத்தரும் பெரியாரும்  துணிவுடன் செயல்படுதலில் தாங்களே வழிகாட்டியாக உள்ளனர். செல்வத்தில் பற்றின்மை என்பதில் இருவரும் ஒத்துப் போகின்றனர். தம்மைச் சுற்றியுள்ளவற்றை நேரடியாகக் கண்டு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றுவதே இருவரின்; அணுகுமுறையாக இருந்துள்ளது. சிக்கல்கள் யதார்த்தமானவை, நம் கண்முன் நிகழ்பவை. அவற்றுக்கு அசாதாரணமான வழிகளில் தீர்வு கண்டுவிடமுடியாது என்று  நினைத்தனர்.  இருவரும் வாழ்நாள் முழுவதும் தம் கருத்துக்களை மக்களுக்குப் போதித்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் வரையிலும் வாழ்ந்துள்ளனர். இருவரும் மனித வாழ்க்கை மற்றும் உலக நடப்புகள் பற்றி பல ஐயங்கள் கொண்டனர். உலக துன்பங்களிலிருந்து மனிதகுலம் விடுபட வேண்டும் என்பதில் உண்;மையான அக்கறை கொண்டிருந்தனர். இருவருடைய உள்ளத்திலும் உயிர்களிடத்தில் அளவற்ற பரிவிருந்தது. மனிதரின் இயல்பு உன்னதம் பெற வேண்டும். மனித வாழ்க்கை சுதந்திரம் பெறவேண்டும் என்று விரும்பினர். ஆழ்ந்த சிந்தனையாளர்களாக விளங்கியுள்ளனர்.

    ஞானம் பெற்ற பின்னர் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டியது என  புத்தர்நினைத்திருக்கிறார். எனவேதான், தான் ஞானம் பெற்ற நிலையில் தனக்கான சீடர்களை உருவாக்கி அவர்களிடம் போதனைகளைப் பரப்பினார். அதன் பின்னரே சங்கம் அமைத்தார். அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.  புத்தர் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. என்னிடம் வாருங்கள், நான் உங்களை மீட்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு புத்தரால்கூட வழியை மட்டுமே காட்டமுடியும், நீங்கள்தான் உங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக ;கொள்ளவேண்டும் என்கிறார்(பி.எஸ்.ஆச்சார்யா. ப.96). ”பௌத்த சமயம் கொள்கைப் பிடிவாதம் கொண்டதில்லை. அதைப் பின்பற்றுவோர்களிடம் அது அதன் போதனைகளை விமர்சன நோக்குடன் பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் அதை எப்போதும் தங்கள் சொந்த அனுபவத்தின் துணையுடன் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அதைப் பின்பற்றுவோரிடம் தொடக்கக் காலக் கட்டங்களில் சில அடிப்படையான போதனைகளை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக் கொள்ளுமாறும், ஆக்கபூர்வமான, திறந்த மன மனோபாவத்தைக் கைக்கொள்ளுமாறும் அது கேட்டுக்கொள்கிறது; என்றாலும்கூட அதன் அக்கறை கோட்பாடுகளை வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில் இருப்பதை விடப் புரிந்து கொள்வதை வளர்ப்பதில் இருப்பது அதிகமானது. பௌத்த சமயம் அதைப் பின்பற்றுவோர் மீது பாவ மன்னிப்பு சார்ந்த நிபந்தனைகளைச் சுமத்துவதில்லை.

    சிறுபான்மைக் குழுக்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டு மரபுகளைப் பராமரிக்கும் சமூகச் சூழ்நிலையில் ஒரு பௌத்தனாக வாழ்வது எளிதாகிறது.”என்கிறார் தாமியென் கோவ்ன்.(பௌத்தம் ப.172-173 )

     புத்தரின் போதனைகளில் இரகசியம் என்று எதுவும் இல்லை. பூகட்டு என்று எதுவும் இல்லை.; சடங்குகள், சம்பிரதாயங்கள்  இல்லை. சமூகத்திலிருந்த மூட பழக்கவழக்கங்களை உற்று நோக்கிய பின்னரே அவற்றை அறிவு பூர்வமாக விமர்சிக்கிறார்.

    ஜென், யோகா, தவம் போன்றவற்றுக்கும் புத்தருக்கும் தொடர்பில்லை. பௌத்தம் என்பது ஒரு வறட்டுத் தத்துவப் பிரிவு மட்டுமே அல்ல. புத்தருக்கும் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் தொடர்பில்லை. மந்திர உச்சாடனங்களுக்கு பௌத்தத்தில் இடமில்லை.) இதே கருத்துடையராகவே பெரியார் சமூகத் தொண்டில் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டுமெனத் திட்டமிட்டார். முதலில் சமூக விடுதலை அதாவது சமுதாயத்தைப் பிடித்துக் கிடக்கும் பிற்போக்குக் கொள்கைகள் குருட்டு நம்பிக்கைகள் கடவுளின் பெயராலும் மக்களிடையே நிலவி நிற்கும் குருட்டுத்தனமான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

    தலைவிதி.முற்பிறப்பில் மோட்சம் நரகம் என்கிற பொய்மைகளை மக்கள் எண்ணத்திலிருந்து அவர்கள் முற்றிலுமாக விடுபட வேண்டும். .அத்தகைய விடுதலைகளுக்குப் பிறகே மக்களை எதையும் சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கா;களாக அறிவு நிரம்பியவர்களாக மாற்றிய பிறகே அரசியல் விடுதலை பொருளாதார விடுதலை என்றார்.

    முன்னது பெறா முன்னர் பின்னவை இரண்டும் அவ்வளவு எளிதில் கைகூடா. கைகூடினாலும்  அவற்றின் உண்மையான பயனை மக்கள் துய்க்க முடியாது என்ற முடிவுடன் காங்கிரசு இயக்கத்திலிருந்து விலகிச் சமுதாயத் தொண்டு செய்வதே தம் பணி எனப் பெரியார் தம்மை மாற்றியமைத்துக் கொண்டார் என்கிறார்பண்ணன்(ப.45);.

    பெரியாரும் புத்தரைப் போலவே முதலில் தம் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்கள் இலக்கியங்கள் ஆயின. குறிப்பாகப் பேச்சு நடை மக்கள் மொழியிலேயே அமைந்தது. மக்களிடம் அரசியலையும் சமயத்தையும் வாழ்;க்கையையும் விளக்கிப் பேசியவர் . தம்முடைய கருத்துக்களின் உள்ளடக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம்பகுத்தறிவு வாதம் என்றெல்லாம் பெயர் தந்தார். தம் சிந்தனைகளை இயக்கமாக நடத்தினார். பெரியார் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. தான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறவில்லை.

    பகுத்தறிந்து எதையும் கேள்விகள் கேட்டு தெளிவான பின்னரே கடைப்பிடிக்கும்படி கூறினார். தொடக்கக் காலத்தில்; ஈ.வே.ராமசாமி பெரியார் தமிழ்ச் சமூகத்தைக் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சியாளராகவம் இழிநிலையில் இருக்கும் மக்களுக்காகப் போராடும் தலைவராகவும் போராளியாகவும் விளங்குகின்றார். குறிப்பாக, அவர் செய்த சமூகத் தொண்டில் சாதி மத ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது முக்கியப் பணியாக இருந்தது. கடவுள் மறுப்பு மத எதிர்ப்புப் போன்றவை கூடவே தொடாந்துள்ளன. சாதி மனப்பான்மை, சாதிக் கொடுமைகள் ஆகியவற்றிற்கு மூலம் யார் அல்லது எது? என்று உணர்ந்து பெரியார்அந்த அடிப்படைகளை எதிர்த்து அதில் ஏற்பட்டுள்ள குற்றங்களை எடுத்துக்கூறியும் பேசியள்ளார்.

    இந்தியாவிலும் தமிழகத்திலும் சாதி வேறுபாடுகள் உருவானதற்குக் காரணமாய் இருக்கும் சமூக அமைப்பகளையும் பெரியார்கண்டித்துப் பேசுகிறார் சாதி, சமயம், கொள்கை போன்றவற்றாலும் சுயநலத்தாலும் பிரிந்து கிடக்கிற தமிழர்களிடையே தோன்றுகிற அறிஞாகளாலும், சமய, சாதி இலக்கியங்களாலும்; சமயவாதிகளாலும் பயன் ஏற்பட முடியாது என்பது பொpயாhpன் கருத்தாக இருந்தது. எனவே உருவாகிற அறிவியல் சமூக நன்மைகள் மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனில் சாதி, சமய மனப்பான்மை போன்ற பண்புகள் நீங்கிட வேண்டும் என்பதை வலியறுத்தும் வகையில் பெரியார்பேசியுள்ளார். மனிதர்களைப் பொதுவில் வைத்து எண்ணுகின்ற இப்போக்கை புத்தத்திலும் பார்க்கமுடிகிறது.

    மனிதர்களைப் பற்றி ஆராய்கின்ற நிலையையே புத்தத்தில் பார்க்க முடியும். மனிதத்தைத் தாண்டி அது சிந்திக்கவில்லை.புத்த மதம் நடப்பு இயல்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கருத்து முதல்வாதத் தன்மை அதில் இல்லை. அனைவருக்கும் சுதந்தரம், சமத்துவம்,வாய்மை மற்றும் நீதியை உயர்த்திப் பிடிக்கிறது. மனித நேயம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    பவுத்தத்தில் சாமி இல்லை; சடங்கு இல்லை; சாதி இல்லை; மாயம் இல்லை; மந்திரம் இல்லை; பூஜை இல்லை; பிரார்த்தனை இல்லை; எல்லாவற்றுக்கும் மேலாய் தனி உடைமைச் சுரண்டல் இல்லை; இவைகளில் எதுவொன்று இருப்பதும் பவுத்தம் இல்லை. மாறாக, பவுத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு, சமதர்மம் உண்டு, ஒழுக்கம் உண்டு, இரக்கம் உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, இவைகளில்  எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை. இக்கருத்துக்கள் அனைத்தும் பெரியாரியத்திற்கும் பொருந்தும். பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை.

    நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்பதாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட மானிடன் அல்லன் என்றும் கூறி இருக்கிறார். (பி;.எஸ்.ஆச்சார்யா. 56) எனவே, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது பவுத்தம் எனலாம். பேளத்தத்தைப் பற்றிக் கூறுமிடத்து, ”எதுவானாலும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பயமில்லாமல் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் பௌத்தன். அதுதான் பவுத்தம்.” என்கிறார் பெரியாரும். (பௌத்தநெறி ப.13)

    அதுபோலவே, பெரியாரும்   சமயம் மதம் தொடர்பான கருத்துக்களில் இவ்வாறே கூறுகிறார். மதம் பற்றிக் கூறும்போழுது தம் கருத்தைக் கட்டாயமாக்காமல் மக்களுடைய சிந்தனைக்கே விடுகிறார். தம்முடைய கருத்தில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டால் பின்பற்றும்படியம் அன்றேல் விலகி விடும்படியம் கூறுகிறார். அவருடைய கடுமையான விமாpசனங்களினூடே இத்தகைய ஆழ்ந்த பக்குவமும் காணப்படுகிறது. நான் சொல்வது, உங்கள் அறிவு ஆராய்ச்சி பக்;தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்துவந்தால் காhpயத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரா;களுக்கும் இதைச் சொல்லி அவா;களையும் ஈடேற்றுங்கள். என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்வதனால் எனக்கு இதில் ஒரு சுயநலப் பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள்(தொ.3 ப.1352) என்கிறார்.;  கடவுளின் பெயரால் அமைக்;கபட்டுள்ள அனைத்து மதங்களையும் இருவரும் மறுக்கின்றனா;. மனித சமூகத்திற்கு அவை தீங்கிழைப்பதாகக் கூறுகின்றனா;. மக்கள் வேதனைப்படுகிறார்கள்; என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; அந்தக் காரணத்தைக் கண்டறியமுடியும்; அகற்றமுடியும் என்று உணர்தல். வேதனையைக் கண்டு ஒதுங்காமல், ஓடாமல், ஒளியாமல் இருத்தல். வேதனை குறித்த வியாக்கியானங்களோடு நின்றுவிடாமல் துணிவுடன் போராடுதல். இவையே ஒரு பகுத்தறிவுவாதியின் செயலகளாகும்;. புத்தர் இதைத்தான் செய்தார்.

    எண்ணற்ற யுகங்களுக்குப் பிறகு இதுவே எனது கடைசிப்பிறவி. தேவர்களிலும், மனிதர்களிலும் நான் ரொம்பவும் அருமையானவன். முதிக்கத்தக்கவன். இந்த தேவர்களையும், மனிதர்களையும் பயனடையச் செய்வேன். புலனுணர்வு கொண்ட அனைத்து உயிர்களையும் அழிவில் இருந்து காப்பாற்றுவேன் என்று புத்தர்கூறுகிறார். (பி.எஸ். ஆச்சார்யா, ப.11) இவை புத்தருடைய வாழ்க்கை காட்டும் பாதை. பெரியாரும் இந்த உலகம் சீர் கெட்டிருக்கிறது. இதைச் சீர் செய்ய யாரும் முன் வரவில்லை. நான் முன் வந்தேன் என்கிறார். இருவருடைய தத்துவமும் இயங்கியல் தன்மை கொண்டது. அறிவியல்பூர்வமானது. அனைத்தையும் தழுவிச் செல்வது. அறிவுக்கும் தர்க்கவியலுக்கும் பொருந்தக்கூடியது. அறவொழுக்கம் சார்ந்தது. மனித நேயம் மிக்கது.

    பிறவி குறித்த கருத்தாக்கத்தில் பார்க்கும் பொழுது, புத்த மதம் பிறவிக் கோட்பாட்டை ஏற்பதில்லை.மாறாக, இங்கு இந்தப் பிறவியிலேயே அடையக்கூடிய வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கூறுகிறது. பெரியாரும் பிறவிக் கோட்பாட்டை எதிர்க்கிறார். அது மக்களை சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு கோட்பாடு என்பது அவருடைய எண்ணம். உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்.

    முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சாPரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உஙகளுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியஙகளை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப்போகின்றது? அன்றியும் கடவள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தைநிலை நிறுத்தாதீ ர் கள். உணர்ச்சியும் அறிவம் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவள்செயல் பொருத்தமாக இருக்கும்(தொ.3.ப.1402) என்பது பெரியாரின் சிந்தனையாக அமைகிறது

    பெண்கள் நிலை –  பெண்கள் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது,பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் அறிவற்றவர்கள் என்ற மதக் கருத்துதான். பெண்ணிற்குக் கல்வியில்லை என ஒதுக்கி வைத்து, அறிவு இல்லாத காரணத்தால் அசுத்தமானவள் என்று பரப்புரை செய்யப்பட்டு, பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையான துறவறத்தை ஏற்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தாள்.

    துறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், அறிவு பெறுவதற்கான வாய்ப்பைப் பெண்களுக்கு நல்குகிறார். பெரியார்காலத்திலும் பெண்கல்வி மறுப்பு தொடர்ந்திருக்கிறது. எனவே பெரியார்பெண்களின் கல்வி உhpமை குறித்தும் மகளிர்க்குச் சொத்துரிமை குறித்தும் பேசியுள்ளார். கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத் தாய்மார்களாக ஆகவிருப்பப்படுங்கள்! நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்படிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் -இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படமாட்டாது இவா; இன்னாருடைய புருஷா; என்ற அழைக்கப்படவேண்டும். அந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவர அனுதினமும் பாடுபட்டுவரும் திராவிடர் கழகத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்து வரவேண்டும் (தொ.1 ப.177) என்கிறார் பெரியார்.

    துறவற நிலை – துறவற நிலையிலும் ஒன்றுபடுகின்றனர். ;.புத்தர்துறவு பூண்டாலும், துறவறம் பூண்டு உடலை வருத்திக்கொள்வது வேதனையைத் தரும், தேவையற்றது, பலனளிக்காதது என்கிறார் உபநிஷத்தையும் மோட்ச நம்பிக்கைகளையும் புத்தர் புறம் தள்ளினார். அந்த வகையில், புத்தர் ஒரு யதார்த்தவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தார்.

    தன்னால் நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே அவர் எதிர்வினை புரிந்தார். பிரபஞ்சப் பொருள்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த ஆய்வுகளையும் இறப்புக்குப் பிறகான காலகட்டம் குறித்தும் கவலைப்படுவது தேவையற்றது என்றார் புத்தர். தந்தையிடம் கோபித்துச் சில காலம் துறவியாக வாழ்ந்தமையால ;செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப் பிணி அறிந்திராத பெரியார் காசியில் எச்சிலைக்கு ஏங்கி நின்ற நிலையில் துறவறத்தை துறந்தார். உலக துயரங்களைத் தீர்க்காத இது போன்ற துறவறத்தால்; பயனற்றது என உணர்ந்து இல்லறத்திற்குத் திரும்பினார். தன்னுடைய மனைவி நாகம்மையையும் பகுத்தறிவுப் பாதையில் நடத்தி சமுதாய விடுதலைப் பேராட்டத்தில் ஈடுபடுத்தினார்.  மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்கள் அனுபவித்து வரும் பல்லாயிரக்கணக்கான துயரத்தை இருவரும் கண்டு அதற்கான தீர்வுகளைக் கூறிச் சென்றுள்ளனர். மனிதர்கள் தங்களின் துன்பத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க தாங்களே முன் வரவேண்டும் என்று இருவரும் கூறுகின்றனர். தனது உடலில் பாய்ந்திருக்கும் அம்பு எங்கிருந்து வந்தது என்றோ அதை யார் செய்தது என்றோ ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம். உடனே அதனைப் பிடுங்கி எறிய வேண்டியதுதான் புத்திசாலித்தனம் என்றார் புத்தர்.

     தீண்டத்தகாதாரைத் தங்கள் இழிவிற்கு எதிராகப் போராட வேண்டும் என்கிறார். பெரியாரும், உண்மையான விடுதலைஉங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவிற்கும் அடிமைத்தனத்துக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும் என்கிறார் (தொ.1ஃ ப.71). பிறருக்காக உழைப்பது, இருக்க வீடும், உண்ண உணவும், உடுத்த உடையும், கல்வியறிவும் இல்லாமல் வாழ்கிறவர்களை அவர்களின உழைப்பைச் சுரண்டி பயன்படுத்திவிட்டுக் கீழ்ச்சாதியென்று சமூகம் கூறுவதாக பெரியார்கூறுகிறார். (தொ.1ப.72).

    முடிவுரை –  புத்தம் என்ற நோக்கில் ஆராயும் பொழுதும் ,அறிவுபூர்வச் சிந்தனைக்கு முழுப்பெயர் பவுத்தம். நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப் பெயர் பவுத்தம். சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப் பெயர் பவுத்தம் என்று கூறலாம்.; மேற்கூறிய கூற்று மூன்றும் பெரியாரியத்திற்கும் பொருந்துகிறது என்பதை இக்கட்டுரை தெளிவுபடு;த்தியுள்ளது.

    பார்வை நூல்கள்

    1. ஆச்சார்யா. .பி.எஸ்.,கௌதமபுத்தரின் வாழ்வும்வாக்கும்,நர்மதா வெளியீடு,பாண்டிபசார்சென்னை-17. மு.ப.2015
    2. ஆனைமுத்து வே.,பெரியார்ஈ.வெ.ரா.சிந்தனைகள்(3ம்தொகுதி),சிந்தனையாளர்கழகம்,திருச்சி. மு.ப.1974
    3. தாமியென் கோவ்ன், தமிழில் சி.மணி. பௌத்தம்,அடையாளம் வெளியீடு,பௌத்தநாதம். ஆண்டு 2005
    4. பெரியார் தந்தை, பௌத்த நெறி, திராவிடர் கழக வெளியீடு, சென்னை- 7 ஆண்டு 1957(15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை)

    5.பண்ணன், சிந்தனையாளர்; பெரியார். திருமலைப்பதிப்பகம், சென்னை, ப.55மு.பதிப்பு 1988

    1. மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், கழக வெளியீடு,சென்னை. ஆண்டு 1964
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    170910 -eka rekha Krishna -lr

    ’’ஒன்றே சதமென்று ஒருஓரம் உட்கார்ந்து
    மென்று முழுங்கிட மாம்பழம்(கண்ணனின் கன்னம்-மாம்பழ வாயன்….) -கன்றெபோல்-,
    நித்தம் இதுபழக, நம்பீச மைத்துனனால்
    சித்தம்மாப் பிள்ளை சிவம்’’….!
    ’’அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • கொரிய – தமிழ் கலாச்சார ஒற்றுமை!

    பவள சங்கரி

    வளர்பிறை (சுக்ல பட்சம்) என்பது ஒவ்வொரு மாதத்திலும் 15 நாட்களுக்கு வருவது. சந்திரன் அமாவாசையிலிருந்து சிறிது, சிறிதாக வளர்ந்து வருவதை வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்கிறார்கள். நம் பாரம்பரிய சடங்குகள் பெரும்பாலும் இந்த காலகட்டங்களிலேயே நடத்தப்பெறுகின்றன.
    கொரியர்களின், முழு இராசி சுழற்சி 60 ஆண்டுகளைக் கொண்டதாக உள்ளது. இவர்களின் சந்திர நாட்காட்டி 60 வித்தியாசமான பெயர்களைக் கொண்டுள்ளது. நம் இராசி சுழற்சிகளும் 60 ஆண்டுகளும், வித்தியாசமான பெயர்களைக்கொண்டும் உள்ளதும் நாம் அறிந்ததே.

    முன் காலங்களில் மனித ஆயுள் குறைவாகவே இருந்தது. ஒருவர் முழுமையான இராசி சுழற்சியான 60 ஆண்டுகளைக் காண்பது அரிதாகவே இருந்தது. அப்படி முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்களை அவர்கள் குழந்தைகள் மகிழ்ந்து, உற்றார், உறவினர், நட்புகளுடன் உற்சாகமாகக் கொண்டாடி தங்கள் பெற்றோரை வாழ்த்தி வணங்குவது வழக்கத்தில் உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றும் இதை மணிவிழா அல்லது 60ஆம் கல்யாணம் என்று கொண்டாடப்படுகிறது. இதே பாரம்பரியப் பழக்கம் கொரிய நாட்டிலும் வழிவழியாக வழங்கி வருகிறது என்பதே சுவையான தகவல்!

    Share
  • செவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பிரபஞ்சத்தில்  உயிரின மூலவிகள் பிறப்பு

    உயிரினத் தோற்றத்தின் மூலவியான  ஆரென்யே [RNA] உண்டாக பொரேட்ஸ் [Borates] முக்கிய பங்கு வகிக்கிறது.  செவ்வாய்க் கோளில் போரான் [Boron] மூலகக் கண்டுபிடிப்பு உயிரினம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என்பதற்கு மேலும் வழி காட்டு கிறது.  பொரேட்ஸ் எளிய ஆரென்யே மூலக்கூறுகள் தோன்ற ஒருவகைப் பாலமாகக் கருதப் படுகிறது.  ஆரென்யே இல்லை என்றால், உயிரனத் தோற்றமே உருவாக முடியாது.  போரான் இருப்பு சொல்வது என்ன வென்றால், செவ்வாய்க் கோளில் கரி மூலக இரசாயனக் கலவை [Organics] காணப் படுவது, இவ்வித இரசாயன இயக்கங்கள் நடந்திருக்கலாம் என்பதே.

    பாட்டிரிக் காஸ்டா [Postdoctoral Research Leader, Los Alamos National Laboratory]

    செவ்வாய்க் கோளின் “கேல் ஆழ்குழியில்”  [Gale Crater] போரான் மூலகக் கண்டுபிடிப்பு, உயிரினத் தோற்றம் ஒரு காலத்தில் இருந்துள்ளனவா என்று விஞ்ஞானிகளுக்கு சிறு ஆதாரங்கள் காட்டியுள்ளன.

    3.8 பில்லியன் ஆண்டு வயதான செவ்வாய்க் கோளின் கேல் ஆழ்குழியில் நாங்கள் பொரேட்ஸ் [Borates] கண்டுபிடித்தோம். பூமியில் தோன்றிய உயிரினத்துக்கும் இளமையான உயிரினமே செவ்வாயில் இருந்திருக்க வேண்டும்.  முக்கியமாக இதன் மூலம் நாம் அறிவது என்ன வென்றால், செவ்வாய்க் கோளின் காலச் சூழ்வெளி அமைப்பு, பூமியோடு இணையாது, உயிரின வளர்ச்சி உருவாகத் தனி வசதி அளித்தது என்பதே.

    பாட்டிரிக் காஸ்டா [Postdoctoral Research Leader, Los Alamos National Laboratory]

    செவ்வாய்க் கோளில் கண்ட போரான் மூலகம் கால்சியம் ஸல்ஃபேட் தாதுவில் கண்டுபிடிக்கப் பட்டது.  அதாவது போரான் செவ்வாய்க் கோளின் தரை நீரகத்தில் [Ground Water] இருக்கிறது. அதைக் கண்டுபிடித்த கருவி : ரோவர் தளவுளவியின் கெம்காம் [ChemCam] [chemistry & Camera].  2020 ஆண்டில் நாசா ஏவப் போகும் செவ்வாய்த் தளவுளவி சுமந்து செல்லும் சூபர்காம் [SuperCam] & [SHERLOC] கருவிகள் பூர்வீக உயிரின மூல வசிப்புகள் வளர்ந்தனவா என்று ஆழமாக ஆராயும்.

    Solar Storms on Mars

    பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளோம். இப்போது இந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக நாங்கள் அறிந்து கொண்டோம்.  செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்றும் தெரிந்து கொள்கிறோம்.

    மைக்கேல் மேயர் [நாசா தலைமை விஞ்ஞானி, செவ்வாய்க் கோள் தேடல் திட்டம்]

    செவ்வாய்க் கோள் நீரைப் பற்றிப் பெரும்பாலோர் சொல்லும் போது, அங்கே உறைந்திருக்கும் நீர் அல்லது பூர்வீகப் பனித்தள நீரைத்தான் குறிப்பிடுகிறார்.  இப்போது மேம்பட்ட வரலாறு உள்ளது தெரிகிறது. நாங்கள் மீளும் சரிவுப் போக்கு நீரோட்டங்கள் மூலமாக முதன்முதல் ஒளிப்பட்டைக் காட்சியாய் [Spectral Detection] திரவ நீரை ஐயப்பாடின்றி கண்டோம்.

    லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]

    Mars brine water flow

    எமது செவ்வாய்க் கோள் வேட்கைக் குறிப்பணி, பிரபஞ்சத்தில் உயிரின மூலவிகள்  இருப்பதை உளவு செய்ய நீரைத் தேடிச் செல்வதே.  இப்போது நாங்கள் நீடிய காலம் ஐயுற்ற நீரிருப்பை உறுதியாக விஞ்ஞானச் சான்றுடன் அறிந்து கொண்டோம்.  செவ்வாய்ச் சரிவில் இன்று ஓடும் உப்பு நீரோட்டமாக இருந்த போதினும் இதுதான் இப்போது குறிப்பிடத் தக்க சிறப்பு கண்டுபிடிப்பாகக் கருதப் படுகிறது.

    ஜான் கிருன்ஸ்ஃபெல்டு  [நாசா விஞ்ஞானத் திட்ட ஆளுநர்]

    நாங்கள் பருவகால நிகழ்ச்சியாகப் பரவிய ஈரடிப்பு உப்பு [Hydrated Salts] நீரோட்டங்களை மலைச் சரிவுகளில் மீளும் நேர்போக்கில் செல்லக் [Recurring Slope Lineae] கண்டோம்.  இந்தக் கருநிற நெளிவுச் சிற்றாறுகள் ஈரடிப்புக் காரணமாக [Dark Streaks are sources of Hydration]  இருக்கக் கூடும்.

    லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]

    Martian glacier

    சூனியச் செவ்வாய்க் கோளில் வேனிற் கால உப்பு நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு

    2015 செப்டம்பர் 28 ஆம் தேதியில் நாசாவின் மேவன் விண்ணுளவி [MAVEN Spacecraft] முதன்முதல் உறுதியாகச் செவ்வாய்க் கோளின் மலைச் சரிவுகளில் மீளும் வேனிற் காலத்து உப்பு நீரோட்டச் சிற்றோடைகளைப் [Recurring Slope Lineae]  படமெடுத்துக் காட்டியுள்ளது. பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளார்.  இப்போது அந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக அறிந்து கொண்டுள்ளார்.  செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ளவும் வழி வகுக்குகிறது.

    Ancient Water Flows hint life in Mars

    குறுகிய பல திரவ நீரோட்டங்கள் கருமை நிறத்தில் சுமார் 100 மீடர் [300 அடி] நீளத்தில் செவ்வாய்க் கோள் சரிவை நோக்கிப் பாயும் சிற்றோடை களாய்க் காணப்பட்டன.  நீரோட்டமே செதுக்கிய நீரோடைகள் அவை. சமீபத்தில் அண்டக்கோள் விஞ்ஞானிகள் [Planetary Scientists] ஹேல் பெருங்குழிச் சரிவுகளில் [Hale Crater Slopes] ஈரடிப்பு உப்புகள் [Hydrated Salts] இருப்பதைக் கண்டனர்.  அவையே சிற்றோடைகள் திரவ நீரோட்டத்தால் செதுக்கப் பட்டவை என்பதை எடுத்துக் காட்டின. ஒளிப்பட்டை நீல நிறமாகத் தெரிவதின் காரணம், பைராக்சின் தாதுக்கலவை [Pyroxene Mineral].  அவை ஒருவிதப் பெர்கோலேட் தாதுக்கள் [Magnesium Percholate or A Mixture of Magnesium & Sodium Percholates]. கோடைக் காலத்தில் திரவ நீரோட்டம் பொங்கித் தணிவதும் தெரிந்தது. குளிர் காலத்தில் நீரோட்டம் அடங்கிச் சிற்றோடைகள் வெறுமையாயின. அவ்விதம் நீரோடும் சிற்றோடைகள் செவ்வாய்க் கோளின் பல இடங்களில் மைனஸ் 10 F [- 23 C] டிகிரிக்கு மேலாக உள்ள போது தெரிந்து, குளிர் காலத்தில் மறைந்து போயின.  தற்போது [அக்டோபர் 2015] செவ்வாய்க் கோளில் பல டஜன் தளங்களில் கோடைக் காலத்தில் இம்மாதிரித் திரவ நீரோட்டச் சிற்றோடைகள் காணப் பட்டுள்ளன.  அடுத்து செவ்வாய்த் தள ஆய்வுகள் இதுபோன்ற ஈரடிப்பு ஓடைகளில் உயிரின இம்மிகள் உள்ளனவா என்பதாக இருக்கும்.

    +++++++++++++++++++++

    Mars Exploration

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/

    Mars dust cover ice

     

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    செவ்வாய்க் கோளின் பனித்திரட்சி [Mars Glacier] அளவைக் கணித்ததில் அதன் கொள்ளளவு 150 பில்லியன் கியூபிக். செ.மீ. என அறிந்தோம். அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்பினால் 1.1 மீடர் [3 அடி] தடிப்பு பனித்தள வடிவம் பெறும்.  இந்த பனிக்கடி ஏரிகள் யாவும் செவ்வாய்க் கோளின் வடதென் பகுதிகளின் நடுப்புறத்தில் அமைந்துள்ளன.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர்]

    MARS GLACIERS

    செவ்வாய்க் கோள் தளத்தில் ரேடார் கருவி மூலம் சேகரித்த பத்தாண்டுக் கால பனிக்களத் தடிப்பையும், அதன் நடப்பையும் ஆழ்ந்து ஆராய்ந்தோம். பனித்திரட்சி [Glacier] என்பது ஒரு பெரும் பனிக்குன்று. அதற்கென தனித்த பனித்தள ஓட்டத் தடமும், தோற்ற வரி வடிவமும் உண்டாகி, எமக்கு அதன் மென்மைத் தன்மையைக் காட்டுகிறது.   இவ்வரிப் படங்களை பூமியின் பனித்திரட்சி [Earth’s Glaciers] வரை படங்களோடு ஒப்பிட்டு, நாங்கள் பனித்தள ஓட்ட கணினி மாடல்களை அமைக்கிறோம்.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர், நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்.

     

    Mars Ice cover

    செவ்வாய்க் கோள் தளத்தில் செய்த புதிய ஆய்வு அறிவிப்பு 

    2015 ஏப்ரல் 9 ஆம் தேதி  “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் அறிவிப்பு மூலம் டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகக் காலநிலை அறிவியல் பனித்திரட்சி நிபுணர் [Climatologist & Glacier Expert ] நன்னா கார்ல்ஸன் தெரிவிப்பது : செவ்வாய்க் கோளில் புதைந்துள்ள பனிதிரட்சிக் குன்றுகள் [Mars Buried Glaciers] பேரளவு பனிக்கட்டியைக் கொண்டுள்ளன.   அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்ப முடிந்தால், பனி மூன்றடி [1.1 மீடர்] உயரம் தடிப்பாகும் !   மேலும் மூடிய தூசிக்குக் கீழிருக்கும் பனித்திரட்சி வளையங்களில் [Glacier Belts] உள்ளது உறைந்த நீரே [Frozen Water] தவிர  அது உறைந்த கார்பன் டையாக்சைடு இல்லை [Not Frozen CO2] என்பது தெளிவானது.  செவ்வாய்க் கோளின் செந்நிறத் தூசி, பனித்திரட்சியை மூடி, உறைந்த பனிநீர் பரிதி வெப்பத்தில் ஆவியாக மறைய விடாது தடுத்து வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.

    “நீர் இருப்பு உயிரின வளர்ச்சிக்கு மிக முக்கிய மென்று நாமறிவோம்.  செவ்வாய்க் கோளில் நாங்கள் இப்போது கண்டிருப்பது வெறும் நீர் மட்டுமில்லை; அதற்கும் மேற்பட்ட பொருட்கள்:  நமது உடலில் காணும் உயிர் வளர்ச்சிச் சத்துக்களான ஸோடியம், பொட்டாஸியம், மெக்னீஸியம், ஃபுளுரைடுகள் !  ஆயினும் உயிரின விருத்திக்கு ஆதாரமான ஆர்கானிக் மூலக்கூறுகள் இன்னும் செவ்வாயில் காணப்பட வில்லை !  இனிமேல் திட்டமிடும் நாசாவின் அடுத்த பயணம் செவ்வாயில் உயிரினம் வாழ்ந்து வந்திருக்கிறதா என்று கண்டறியச் செல்லும்.”

    “மேலும் இந்த தளப்பகுதி செவ்வாயில் எதிர்காலப் பயணிகள் குடியிருக்கத் தகுதி உள்ளதா என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியும்.  அது நாசாவின் எதிர்காலப் பயணத் திட்டத்தில் ஒன்றாக இருக்கும்.”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    MAVEN Spacecraft

    “இறுதியில் நாங்கள் செவ்வாய்த் தள மண்ணை ஆராய முடிந்து அதில் ஒட்டி இருப்பது உறைந்த நீரென்று உறுதிப் படுத்தினோம்.  மேலும் நீரான அதைத் தொடவும், சுவைக்கவும் முடிந்தது !  இதற்கு முன்பு சாதிக்காத ஒரு சோதனை அது !  அதன் சுவை மிக்க இனிமையானது !  இதைக் கண்டதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம்.

    வில்லியம் பாய்டன், ஃபீனிக்ஸ் விஞ்ஞானி, அரிஸோனா பல்கலைக் கழகம். [ஜூன் 2, 2008]

    “ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது.  தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது.  ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது.”

    டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

    “செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம்.  எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன் படுத்தவும் முடியுமென நினைக்கிறேன்.  அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன்.  செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை!  முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

    மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

    Water Flow on Mars

    21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் மகத்தான விண்வெளிக் கண்டுபிடிப்பு

    ஆகஸ்டு முதல் தேதி செவ்வாய்க் கோள் தளத்தில் உள்ள பனித் திரட்டுகளை உருக்கி நீரென்று நிரூபித்து நாசாவின் ஃபீனிக்ஸ் விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் ஒரு மகத்தான பொன் மைல் கல்லை நிலைநாட்டினார் !  இதுவரை அது நீர்ப்பனிக் கட்டியா அல்லது உறைந்த கார்பன் டையாக்ஸைடு வாயுக் கட்டியா என்னும் குழப்பத்தில் இருந்தது.  இப்போது அந்து ஐயமின்றி 100% நீர் என்பது உறுதியானது ! ஃபீனிக்ஸ் தளக்கருவி பனிக்கட்டியை உருக்கி நீரென்று சுவைத்துப் பார்த்து விட்டது என்று விஞ்ஞானிகள் பீடும், பெருமிதமும் கொள்கிறார் !  இந்த மகத்தான வெற்றி நாசாவுக்கு ஃபீனிக்ஸின் ஆய்வுக் காலத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டாலர் செலவில் நீடிக்க (செப்டம்பர் 30 தேதி வரை) அனுமதி கிடைத்துள்ளது !  செந்நிறக் கோள் செவ்வாயில் நீர் இருப்பது மெய்ப்பிக்கப் பட்டாலும் ஆங்கே உயிரினம் விருத்தி அடைந்ததற்குரிய சான்றுகள் இன்னும் கிடைக்க வில்லை !

    Clipboard02

    ஓராண்டு முன்பு ஏவப்பட்ட ஃபீனிக்ஸ் தளவுளவி விண்கப்பல் செவ்வாய்க் கோளில் நீர்  இருக்கிறதா என்று அறியவும், உயிரின மூலவிகளை வளர்க்கும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் (Complex Organic Molecules) உள்ளனவா என்று தெரிந்து கொள்ளவும் அனுப்பப் பட்டது.  அதற்கும் முன்னால் சென்று செவ்வாய்க் கோளைச் சுற்றிய ஆடிஸ்ஸி விண்கப்பல் (Odyssey Spacecraft) ஃபீனிக்ஸ் தளவுளவி இறங்கப் போகும் களத்தில் பனிக்கட்டிகள் உருகுவதைப் படமெடுத்து அனுப்பியது.  இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாய் இறங்கிய ஃபீனிக்ஸ் தளவுளவி செவ்வாய்த் தள மண்ணை அள்ளி இரசாயன ஆய்வுக் கருவியில் இடும் அகப்பையைக் கொண்டது.

    ஃபீனிக்ஸ் தளவுளவி நச்சு மூலக்கூறு (Toxic Molecule) கண்டது

    நாசா விண்தேடல் விஞ்ஞானிகள் செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவியின் மெக்கா கருவி [Microscopy, Electrochemistry, Coductivity, Analyzer (Meca)] ஒரு நச்சுப் பொருளைக் கண்டுள்ளதாகக் கூறினார்.  ஆகஸ்டு 5 ஆம் தேதி தளவுளவியின் அகப்பை எடுத்த மாதிரி மண்ணில் இரசாயனத் தீவிர இயக்கமுடைய பெர்குளோரேட் (Perchlorate) உப்பு கலந்திருப்பதாகக் கண்டது.  மேலும் அந்த இரசாயனப் பொருள் மற்ற இடத்திலும் பரவி உள்ளதா என்று அறியப்படும்.  பூமியில் மிக்க வறட்சியான பாலைவனப் பகுதிகளில் பெரும்பாலும் அந்த பெர்குளோரேட் இரசாயனம் காணப்படுகிறது.  செவ்வாய்த் தளத்தை ஒத்த தென் அமெரிக்கா சில்லியின் அடகாமா பாலைவனத்தில் (Atacama Desert, Chille) அது இருப்பதாக அறியப்படுகிறது.

    Martian water

    பெர்குளோரேட் உப்பு உயிரினத்தை விருத்தியும் செய்யாது, சிதைக்கவும் செய்யாது.  அது ஓர் ஆக்ஸிடைசிங் அயான் (Oxydising Ion). அதில் ஒரு குளோரின் அணுவை, நான்கு ஆக்ஸிஜென் அணுக்கள் சுற்றி உள்ளன.  அது இரசாயன இயக்கத்தில் ஆக்ஸிஜன் வாயுவை வெளியாக்குகிறது.  ஆனால் அதிலிருந்து குளோரின் வாயு வரவில்லை.  சில உயிரினச் செல்கள் பெர்குளோரேட்டைத் தீனியாய் எரிக்கின்றன. சில பயிரினங்கள் அதனைத் தம்முள்ளே சேமித்து வைக்கின்றன.  முக்கியமாக பூமியில் ராக்கெட் உந்திச் செல்ல பெர்குளோரேட் இரசாயனம் எரிசக்தியில் (Used in Rocket Fuel) பயன்படுகிறது.

    பூமியில் வாயுத் தூசிகள் சூரிய ஒளியில் பட்டு பெர்குளோரேட் மூலக்கூறு உருவாக்கப் படுகிறது.  பிறகு அது வரண்ட தளத்தின் மீது தங்கி விடுகிறது.  ஈரமான அரங்குகளில் அது மண்ணுக்குள் இறங்கிக் கொள்கிறது.  பூமியில் சில வித பாக்டீரியாக்கள் தமது உயிர்ச்சத்து மாறுபாடுக்கு (Metabolism) பெர்குளோரேட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன ! “பெர்குளோரெட்டுகள் செவ்வாய்க் கோளின் தளங்களில் நீரிருந்த வரலாற்றைச் சொல்லும்,” என்ற் ஃபீனிக்ஸ் ஆய்வாளர் ரிச்சர்டு குயின் (Richard Quinn) கூறினார்.

    Clues for water in Mars

    செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு !

    2008 மே மாதம் 30 ஆம் தேதி சமீபத்திலே 420 மில்லியன் டாலர் திட்டமான செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது ! “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி ! மெய்யாக ஃபீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப் பட்டது.  அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ஃபீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது !  மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்ட முள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  அடுத்து ஃபீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது.  அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி !  அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

     

    Flood waters on Mars -1

     

    ஃபீனிக்ஸ் எதிர்த்தள்ளி உந்துகள் இயங்கிக் கீழே மெதுவாக இறங்கிய போது மேலாகக் கிடந்த செம்மண்ணை வெளியேற்றித் தோண்டிய 6 செ.மீ. (~2.5 அங்குலம்) ஆழப் பள்ளத்தில் பனிக்கட்டி மாதிரி எடுக்கப்பட்டது.  அவ்விதம் தளவுளவியின் கரத்தில் எடுக்கப்பட்டு முதன்முதலில் கண்களில் தெரிந்த பனிக்கட்டி விஞ்ஞானிகளிடையே உற்சாகக் கொந்தளிப்பைத் தந்திருக்கிறது.  புதிய உலகில் குளிர்ந்த சுத்தமான நீர்க் கண்டுபிடிப்பு மனிதப் பயணத்துக்கும், குடியேற்றத் துக்கும் மிகவும் உதவிடும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயச் செய்தியாகும்.  திட்டமிட்டபடித் தளவுளவி பனித்தளத்தில் தடம் வைக்காது வேறு வேண்டாத பாறைத் தளத்தில் பாதம் பதித்து விட்டதோ என்றோர் ஐயப்பாடு முதலில் எழுந்தது !  அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது.  அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது !  “இன்று என்ன சேதி” என்று கேட்டால் எந்த நாசா விஞ்ஞானியும் “செவ்வாயில் நீர்ப்பனிக் கட்டியைக் கண்டோம்” என்றுதான் சொல்கிறார்.  இந்த பனித்தள இடத்தைதான் நாசா விஞ்ஞானிகள் உன்னதப் படமெடுப்புக் காமிரா மூலம் [High Resolution Imaging Science Experiment (HiRISE Imager of Mars Orbiter)] முன்னால் விண்ணுளவிக் கப்பல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.

     

    Fig 1A South Polar Ice Depth

     

    செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன.  துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும்.  நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது.  ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப்படுகிறது.  துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.

    பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம்.  செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது.  அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே !

    Fig 7 North Polar Ice Cap

    செவ்வாய்க் கோளின் துருவப் பனிப் பாறைகள்

    செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது!  துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது.  வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது!  மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது.  கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வறட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.

    அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன.  கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அளவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வறட்சிப்பனி [Dry Ice or Frozen Carbon dioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

     

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    Picture Credits:  NASA, JPL, ESA & Wikipedia

    1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
    2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
    3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
    4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    6  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
    [Author’s Article on Mars Missions]
    7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
    10 http://www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles)  [Aug 31, 2005]
    11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
    12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
    13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
    14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007]
    15 Phoenix Mission Control Team Poised for Epic Landing on Mars Planet – The Dailey Galaxy (www.dailygalaxy.com/) [May 23, 2008]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(Phoenix Launch Aug 7, 2007)
    17 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html(Mars Express Radar Finds Water Source in Mars South Pole)
    18. BBC News – Mars Lander is in Good Health [May 27, 2008]
    19 The New York Times – Mars Lander Transmits Photos of Arctic Terrain [May 27, 2008]
    20 RedOrbit News – Phoenix Lander Spotted from Mars Orbiter (www.redorbit.com) [May 28, 2008]
    21 Future Mission to Mars – Follow on Mars Missions / Mars Sample Return [May 28, 2008] (www.vectorsite.net/tampl_08.html)
    22 CNN News : Pictures Boost Hopes for Mars Ice Discovery [May 31, 2008]
    23 NASA’s Phoenix Lander Robotic Arm Camera Sees Possible Ice [May 30, 2008]
    24 Twittering from Mars – The Phoenix (Mars Lander Probe) on Ice [June 3, 2008]
    25 Phoenix Lander’s Robotic Arm Grabs a Scoop of Mars (Soil) [June 2, 2008]
    26 VOA News : Phoenix Spacecraft Confirms Water on Mars By : Art Chimes Washington DC [Aug 1, 2008]
    27 VOA News : NASA’s Phoenix Lander Finds Toxic Chemical on Mars [Aug 5, 2008]
    28 Phoenix Mars Team Opens Window on Scientific Process [Aug 5, 2008]
    29 BBC News : Open Science Promised for Phoenix [Aug 6, 2008]
    30 The New York Times : Alkaline Soil Sample from Mars Reveals Presence of Nutrients for Plants to Grow [June 27, 2008]
    31 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40806051&format=html (திண்ணைக் கட்டுரை-1)
    32 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805291&format=html (திண்ணைக் கட்டுரை-2)
    33 ABC News : Phoenix Lander Finds Water on Mars [Aug 1, 2008]

    34  Water on Mars Discovered by Phoenix Mission [Aug 5, 2008]

    35  Sky & Telescope Magazine – Phoenix Digs in By : Kelly Beatty  [September 2008]

    36.  http://www.sciencedaily.com/releases/2014/09/140929154248.htm [September 29, 2014]

    37.  http://www.marsdaily.com/reports/Mars_dust-covered_glacial_belts_may_contain_tons_of_water_999.html  [April 9, 2015]

    38. http://www.onenewspage.com/n/Science/754zwhlg5/Dust-covered-ice-glaciers-found-on-Mars.htm  [April 8, 2015]

    39.  http://www.sciencedaily.com/releases/2015/04/150408102701.htm  [April 8, 2015]

    40.  http://phys.org/news/2015-04-mars-belts-glaciers-frozen.html  [April 7, 2019]

    41. http://www.marsdaily.com/reports/Mars_rover_data_boosts_hope_for_liquid_water_on_Mars_999.html  [April 13, 2015]

    42.  http://www.marsdaily.com/reports/Mars_might_have_liquid_water_999.html [April 17, 2015]

    43.http://www.marsdaily.com/reports/Strongest_evidence_yet_of_liquid_water_on_Mars_NASA_999.html  [September 28, 2015]

    44.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/10/nasa-mars-ancient-ocean-larger-than-earths-arctic-ocean.html?  [October 6, 2015]

    45.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/-once-an-ancient-blue-world-nasa-tv-to-live-stream-new-findings-on-fate-of-mars-atmosphere.html  [November 2, 2015]

    46. http://www.mhttp://Marsdaily.com/reports/NASA_mission_reveals_speed_of_solar_wind_stripping_Martian_atmosphere_999.html  [November 5, 2015]

    47. http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/news-flash-nasa-tv-to-live-stream-new-findings-on-fate-of-mars-atmosphere-today.html?  [November 5, 2015]

    48.  https://en.wikipedia.org/wiki/Mars_Reconnaissance_Orbiter   [November 5, 2015]

    49.   http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/nasa-news-update-solar-winds-stripping-mars-atmosphere-over-billions-of-years.html?  [November 5, 2015]

    50.  http://mars.jpl.nasa.gov/mro/mission/overview/

    51.  https://en.wikipedia.org/wiki/MAVEN  [November 6, 2015]

    52  http://www.poandpo.com/in-the-meantime/what-have-we-learned-from-the-discovery-of-liquid-water-on-mars-7-11-2015/   [November 7, 2015]

    53. https://www.space.com/29977-buckyball-molecules-milky-way-mystery.html [July 17, 2015]

    54. http://ca.pressfrom.com/news/technology/-43878-new-discovery-hints-that-mars-could-have-once-supported-life/ [September 7, 2017]

    55. http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/organics-discovery-at-mars-gale-crater-hints-at-existence-of-rna-and-ancient-life.html  [September 7, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  September 9, 2017 [R-1]

    Attachments area
    Preview YouTube video NASA | Measuring Mars’ Ancient Ocean

    NASA | Measuring Mars’ Ancient Ocean

    Preview YouTube video Mars Reconnaissance Orbiter: Water Flowing on Mars

    Mars Reconnaissance Orbiter: Water Flowing on Mars

    Preview YouTube video Animation of Site of Seasonal Flows in Hale Crater, Mars

    Animation of Site of Seasonal Flows in Hale Crater, Mars

    Preview YouTube video NASA Announces Discovery Of Flowing Water On Mars, Sept 28, 2015

    NASA Announces Discovery Of Flowing Water On Mars, Sept 28, 2015

    Preview YouTube video Buried Glaciers found on Mars

    Buried Glaciers found on Mars
    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (8)

    மீ.விசுவநாதன்

     

    பகுதி: எட்டு
    பாலகாண்டம்

    “ரிஷ்ய சிருங்கரும் சுமந்திரர் சொன்னதும்”

     

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    மன்னன் தயரதன் மந்திரி சுமந்திரர்
    சொன்ன செய்தி மன்னனுக்கு மகிழ்ச்சியை

    அள்ளித் தந்தது ; அதைநாம் அறிவோம்:-
    புள்ளி விவரமாய்ப் புராணம் சொல்வதை

    நெஞ்சுள் வைத்தே விபரமாய்ச் சொல்கிறேன்!
    சஞ்சல மில்லா சனத்குமாரர் முனிவர்கள்

    சபையில் கூறிய சத்திய வாக்கிது ;
    சுபயோக வேளையில் சுந்தர ரூபனை

    தயரதன் பிள்ளையாய்த் தான்பெறப் போகிறான் ;
    அயற்சியே வேண்டாம் அத்தனையும் உண்மை !

    காசியபர் பிள்ளை “விபாண்டக” யோகிக்கு
    மாசிலா “ரிஷ்ய சிருங்கர்” மகனாவார் !

    காட்டில் குடிலமைத்துக் கருத்தோடு ஒன்றி
    நாட்ட மேதுமின்றி நாளெல்லாம் தவமிருப்பார் !

    தந்தையைத் தவிர தவறியும் ஒருவரை
    சிந்தைக் குள்ளே சிறைபிடிக் காதவர் !

    அந்த மகானை “அங்க தேசத்து”
    சொந்த மன்னன் “ரோமபாதர்” தன்னுடை

    நாட்டு வறுமை நசித்திட வேண்டி
    ஆட்களை அனுப்பி அழைத்து வருவார் !

    மகளை அவர்க்கு மணம்முடித் திடுவார் !
    அகத்தில் பூரணர் ரிஷ்ய சிருங்கரால்

    மாமழை பெய்து வளமை தேசமாய்
    ஆகிடும் அந்த அங்க பூமியே !

    சத்தியம் தவறா தயரத னொருநாள்
    நித்திய வேள்விசெய் ரிஷ்ய சிருங்கரை

    தன்குல விருத்திக்குத் தகுதியாம் வேள்விசெய
    இன்முக மனத்துடன் எதிர்வணங்கி அழைப்பார் !

    முனியும் வருவார் முடிப்பார் வேள்வியை !
    கனிபோல் நான்கு கண்வளர் குழந்தைகள்

    பெற்றுத் தயரதன் பெரும்புகழ் கொள்வார் !”
    பற்று நீக்கிய சனத்குமாரர் இதனையே

    “கிருத யுகத்தில்” கீர்த்தியால் அறிந்து
    திருடமாய்ச் சொன்னதை தெய்வீக பலத்தால்

    சுமந்திரர் சொற்களில் சுகமாய்க் கேட்ட
    எமபயம் இல்லா எதிரியிலா “தயரதன்”

    தயரதன் ரிஷ்ய சிருங்கரை அழைத்தல்

    தன்குரு வசிட்டரிடம் சங்கதி கூறி
    வன்புலிக் கூட்ட மாபெருங் காடு

    நதிகளைக் கடந்து நல்லங்க நாட்டுப்
    பதியினை அடைந்து பக்தியுடன் முனிவர்

    பாதம் பணிந்தார் ! பண்புடை அயோத்தி
    தேசம் வந்து வேள்வி செய்திட

    வேண்டு மென்று விரும்பி அழைத்தார் !
    வேண்டுதலை ஏற்ற வேதநெறி முனிவரை

    சங்கு, துந்துபி, சங்கீத அலைகள்
    எங்கும் ஒலித்திட எதிர்கொண்ட ழைத்தார் !

    அழகிய அயோத்தி ஆனந்தங் கொண்டு
    குழந்தைகள் போலக் கொண்டாட்டம் போட்டது !

    மறையறி அந்தணர் மந்திர மோதினர் !
    நிறைகுண மாந்தர்கள் நெஞ்சு குளிர்ந்தனர் !

    அசுவமேத யாகம் தொடங்கியது

    வசந்த காலம் வந்த வேளையில்
    இசைந்தனர் அசுவமேத வேள்வி செய்திட !

    சரையூ நதியின் வடக்குக் கரையில்
    விரைந்து அமைத்தனர் வேள்விக் கூடம் !

    விபாண்டக யோகியின் பிள்ளையின் மூலம்
    அவாவது தீரும்! அந்தணர் கூறும்

    ஆசி பலிக்கும் ! ஐயம் இல்லை
    நேசிக்கும் பிள்ளைகள் நிச்சயம் பிறப்பார் !

    நம்பிக்கை கொண்ட நல்லசரன்
    கும்பிட்டு நின்று குருவருள் பெற்றானே !

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் ஒன்பதாவது, பத்தாவது , பதினொன்றாவது, பன்னிரெண்டாவது பகுதி நிறைந்தது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170909 - Virat swaroop -lr

    “விராட்கோலி போல விதைக்கின்றார் வெற்றி,-
    கராட்டே போஸ்கொடுத்துக் கண்ணன் :-விராட்சொரூபம்-காட்டி
    அருஜ்ஜுனரை ஓட்டுகிறார் தேரில்அவர்,-
    மாட்டைக் கரமேந்தும் மால்”….கிரேசி மோகன் ….!

    Share
  • தாய்மொழிக்கல்வி

     முனைவர். ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப்பேராசிரியர்,

    அரசுகலைக்கல்லூரி,

    சேலம் -636 007 .

    சமூக மரபுரிமை எனப்படுவது நம்முடைய முன்னோர்கள் உருவாக்கித் தந்துள்ள பண்பாட்டில் காணப்படும் பல்வேறு கூறுகளாகும். இலக்கியம், நுண்கலைகள், தொழில்நுட்பஅறிவு, சமயக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைக் குறிக்கோள்கள் போன்ற யாவும் சமூக மரபுரிமைப்புக்குள் அடங்குவனவாகும். எனவேதான், ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன்.

    இச்சமூக மரபுரிமையே குழந்தைகளுக்குள் உள்ளடங்கிய பல்வேறு ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கிறது. எனவே, சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்மொழிப்பாடம் கற்பிக்கப்படவேண்டும். தாய் மொழி வழிக்கல்வியில் பல புதுமைகள் கொண்டுவந்து, தற்காலத் தொழில் நுட்பத்திற்கேற்ப கற்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். கணினி வழி கற்பித்தலை தமிழ் மொழிக்கும் பாலர் பருவத்திலிருந்தே செயல்படுத்தினால் கற்றலிலும் உயர்வு தோன்றும்.

    உலகின் தொன்மை மொழிகள் பலவும் தாய்மொழிவழிக் கல்வியையே கொடுத்து வந்துள்ளன. பின்னர் அவை வழக்கொழிந்து பிறமொழித் தாக்கத்தால் கலப்பால் பாதிக்கப்பட்டு வழக்கொழிந்து வந்து கொண்டுள்ளன. எனினும் அவை மீண்டும் தாய்மொழிக்கல்விக்கே திரும்பியுள்ளன. ஆங்கில மொழியே அதற்குச் சிறந்த உதாரணம்.

    பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆங்கிலம் கேட்பாரற்று ‘ஒரு வட்டாரமொழி’ என்ற அளவில்தான் அறியப்பட்டு வந்தது. இலத்தீன்தான் சிறந்த மொழி; அறிவு மொழி என்று போற்றப்பட்டது. ஒரு வட்டார மொழியாகக் குறுகிக் கிடந்த ‘ஆங்கிலத்தைத்’ தாய்மொழியாகக் கொண்ட ‘ஜெஃப்ரி சாசர்’ தான் பள்ளி முதல் கல்லூரி வரை திணிக்கப்பட்ட இலத்தீன் மொழிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார். ஆங்கிலம் வட்டார மொழியாக இருந்தாலும், அது ஒரு பகுதி மக்களின் தாய்மொழியானால், தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதால், ஆங்கிலத்தின் வழியே கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று போராடினார். இத்தனைக்கும் ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு இடத்தில் தோன்றிய தனித்த மொழி அல்ல.

    சில ஜெர்மானிய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்ச், செல்டிக் மொழி உள்ளிட்ட பல மொழிகளின் கலவையினால் உருவான கலப்பட மொழிதான் ஆங்கிலம். இக்கலப்பட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜான் வைக்லிப், ஜான் ஹஸ், தாமஸ் லினேகர், வில்லியம் டிண்டேல் போன்ற பலரும் போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் குதித்தனர். இதில் ஜான் ஹஸ், ஜான் ரோஜர்ஸ், தாமஸ் கிரான்மெர் பலரும் இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டனர். எனினும், இப்போராட்டம் தொடர்ந்து நடந்ததால் அன்றைய முதலாம் எலிசபெத் ஆங்கில தாய்மொழியாளர்கள், ‘தம் தாய்மொழியாலேயே கல்வி பயிலலாம்’ என 1563ல் அனுமதியளித்தார். 1320ல் தொடங்கிய ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் தாய்மொழிவழிக்கல்வியின் போராட்டம் 1563ல் முடிவுக்கு வந்தது.

    இலத்தீன் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த ஆங்கிலம், விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியதும், மைக்கேல் பாரடே (மின்னியல்), ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் (புகைவண்டி), ஜான் டால்டன் (அணு) ஜோசப் வில்சன் ஸ்வான் (கார்பனிழை மின்விளக்கு) போன்ற அறிவியலாளர்களை உலகிற்குத் தந்தது. அறிவியலுக்குத் தகுதியில்லாத மொழி எனக் கருதப்பட்ட ஆங்கிலம் “தாய்மொழிப் பற்றாளர்களால்” இன்று ‘உலகின் அறிவியல் மொழி’ யாக உயர்ந்துள்ளது. இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏழைகளின் பிள்ளைகள்.

    தாய்மொழியான ஆங்கிலத்தில் படித்து சிந்தித்ததன் விளைவே இவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணம். ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்று தமிழரிடம் இருந்தால், தமிழன் பல கண்டுபிடிப்புகளில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்வான். ஏனெனில் பண்டைத் தமிழில் உள்ள அறிவியல் நுட்பங்கள் தமிழரின் அரும்பெரும் சொத்துக்கள். ஏற்கனவே அறிவியல் துறைகளில் கால்பதித்துவிட்ட தமிழன், தாய்மொழிப் பற்றில்லாமையினால் ஆங்கில மறதி நோய் பற்றி அனைத்தையும் மறந்து அறிவியல் கண்டுபிடிப்பை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆங்கிலத்தைப் பின்பற்றுபவர்கள், ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்றையும் பின்பற்றினால் தமிழ் வாழும். தமிழரும் வாழ்வர். தமிழ் தமிழரை நம்புகிறது. தமிழர்தான் தமிழை நம்பவில்லை.

    தாய்மொழிவழிக்கல்விக்கு முன்னுரிமையும் சிறப்பும் தரப்பட்டால், தமிழிளைஞர்கள் பலரும் பல கலைகளில் சிந்திக்கும் நிலை பெற்றுச் சிறப்புடன் திகழ்வர். இதில் ஒரு தலைமுறை இடர்ப்பட்டு முன்னேறவேண்டியதிருக்கும். கற்பிக்கும் ஆசிரியர் ஆங்கில நூல்களைக் கொண்டே தமிழில் மொழிபெயர்த்து பாடம் நடத்தலாம். மாணவர்களும் புரியாமல் கேட்பதைவிட புரிந்த மொழியில் பாடங்களைக் கேட்டு பலவிதமான சிந்தனைகளைப் பெறலாம். ஒரு சிந்தனையுமின்றி ஆங்கில வழிப்பாடத்தை நெட்டுருப்போட்டு படிப்பதைவிட இது மேலானது. ஒரு சில பொருத்தமான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். ஒன்றும் புரியாமல் படிப்பதை விட ஒரு சில சொற்கள் புரியாமல் படிப்பது மேலானதல்லவா?

    இந்தியா போன்ற பல மொழிகள் உள்ள நாடுகளில் தாய்மொழிவழிக் கல்வி என்பது கானல் நீராகவே உள்ளது. ஒரு மனிதன் சுயமாகச் சிந்திப்பதற்கும், அறிவினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தொடர்ந்து படிப்பதற்கும் , புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தாய்மொழியே பெரிதும் துணைபுரிகிறது என்ற கல்வியாளர்களின் கூற்று காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது.

    தாய்மொழிப் பற்றற்ற தமிழர்கள் தான் இதற்குக் காரணம். இந்தியைத் தேசிய மொழியாக்க முனையும் மத்திய அரசோ, ஆங்கிலமோ தமிழர்க்கு எதிரியல்ல. தமிழர்தான் தமிழுக்குப் பகைவர்களாக உள்ளனர். ‘இவனா தமிழன் இருக்காது. யானைக்குப் பூனை பிறக்காது’ என மலேசியக் கவிஞர் சீனி நைனா முகம்மது இன்றைய தாய்மொழிப் பற்றற்ற தமிழனைப் பார்த்து சீறுகிறார்.

    இலக்கியக் கல்விக்கு தாய்மொழிக் கல்வி என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், அறிவியல் கல்விக்கு இது பொருந்தாது என்பவர்கள் அறியாமை நிறைந்தவர்கள். அறிவியல் கல்வி அவரவர் தாய்மொழியில் அமையும்போதே பெறத்தக்க நன்மைகள் பலவாகும் என்பதை உணராமல் அவ்வாறு கூறுகிறார்கள். தாய்மொழிவழிக்கல்வி கற்றல் என்பது சாதாரண உடையணிந்து மிடுக்காக நடப்பது போன்றது. பிறமொழிக்கல்வி என்பது மிடுக்கான பொருத்தமில்லாத உடையணிந்து நடக்க இயலா நிலைக்குப் போவதற்குச் சமமானதாகும்.

    மனிதனின் வாழ்நிலை, மனநிலை என்பது இயற்கையாக இருத்தல்வேண்டும். அது தாய்மொழிவழிக்கல்வியால் மட்டுமே சாத்தியம். தமிழகத்தில் 2006 -2007 ஆண்டிற்கு முன்னர் தமிழ்மொழிவழிக் கல்வியை ஒருவர் கற்காமலேயே பட்டம் பெறலாம் என்ற நிலையிருந்தது. 2006 -2007க்குப் பின்னர் பிறமொழி பேசுபவராக இருப்பினும் தமிழ்நாட்டில் கல்வி கற்பின் தமிழில் ஒருபாடமாவது கட்டாயம் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது 2015 -2016 ல் 10ம் வகுப்புத் தேர்வை அம்மாணவர்கள் எழுதும் நிலை உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு குறைந்துவிடக் கூடாதென்று அரசு, பிறமொழி பேசும் மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாடத்திற்கு மட்டும் சிறப்பு கையேட்டைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம் என மதிப்பெண்ணுக்காகத் தமிழைப் புறக்கணித்தவர்கள் இனித் தமிழைப் படிப்பார்கள் என நம்பலாம்.

    இது ஆங்கிலவழிக்கல்வியின் மோகம் மக்களிடம் குறைந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது. ஆங்கிலவழிக்கல்வி முறையே போதும் என்று மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். அதன் மூலமே உலக அறிவினைப் பெற முடியும் என்று நம்புகின்றனர். 2010ல் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை கொண்டுவரப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டன. ஒருசில மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. அதில் பெரும்பான்மையோரால் புறக்கணிக்கபட்டது தாய்மொழிவழிக்கல்வியும், மெட்ரிக்குலேசன் வாரியக் கலைப்பும்.

    பிள்ளைகள் தங்கள் தாய்மொழிவழிக்கல்வி வழியாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பதே சிறந்தது என்பது சமச்சீர்க் கல்விக் கொள்கைகளில் ஒன்று. எனினும் இம்முறை இன்னும் நடைமுறைக்கு வராமலுள்ளது. அரசின் கல்விக் கொள்கைக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வருதல் வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கல்விக் கொள்கைக்கு அரசு வருதல் வேண்டும் என்ற நிலை தோன்றி தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்கபட்டு வருகிறது. ஆங்கிலக் கல்வியின் மோகத்தால் ஆங்கில வழி கல்வி உள்ள தனியார் கல்விக்கூடத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மிகுதியாகி 3500 அரசு பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 1500 பள்ளிகளாக சுருங்கி உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் ஒருமொழி அறிவு ஒருவர்க்குப் பயன்தராது. பிறமொழி அறிவும் தேவைதான். உலகின் தலைசிறந்த கவிஞராகப் பாரதி திகழ்ந்ததற்கு அவருடைய பலமொழி அறிவே காரணமாகும். எனினும் தாய்மொழிக்கல்வியை அவர் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை.

    வேறுவேறு பாஷைகள் – கற்பாய் நீ
    வீட்டு வார்த்தை கற்கிலாய் –போ போ

    என்று தாய்மொழிக்கல்வியைப் புறக்கணிப்பவனைப் பார்த்து கூறுகிறார்.

    ‘குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்தது’ என காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. ‘ஆங்கிலம் உலகப் பொதுமொழி’ என்ற வலுவான எண்ணம்தான் அதற்குக் காரணம். சீனத்திற்கும், ஸ்பானிசிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகிலுள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை.

    .

    மக்கள் தாய்மொழியைத் தமிழைப், புறக்கணிப்பதற்கு ஊடகங்கள் பேருதவி (?) புரிகின்றன. தமிழைக் கொச்சையாகப் பிறமொழி கலந்து பேசுவது மிகச்சிறந்த நாகரிகமாகப் பரவுவதற்கு தொலைக்காட்சியின் பங்கு மிகப் பெரியது. பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடுருவி, சிற்றூர் மக்களின் தமிழையும் கலப்படமாக்கி வருகின்றன. இதில் வரும் விளம்பரங்களில் மிகத் தாராளமாக ஆங்கிலக் கலப்பு.

    தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. பேசும் தமிழிலும் வளமில்லை. பேருந்து நிலையம் என்றால் புரியாது தமிழனுக்கு. பஸ் ஸ்டேண்ட் என்றால் தான் புரியும். இன்றைக்கு காலைவேளை ‘டூத்பேஸ்டில்’ தொடங்கி இரவில் படுக்கும் ‘பெட்’ வரை தமிழன் வாழ்வில் எல்லாம் ஆங்கிலமயம்தான். பேச்சுத் தமிழோ ‘தமிங்கிலீசாக’ வலம் வருகிறது. ஒரு மொழி அழிவதற்கு முதன்மைக் காரணம் மொழிக்கலப்பு தான். இன்றைக்கு அன்றாட சிற்றூர் மக்கள் பேசும் மொழியில் கூடப் பிரிக்க முடியாத அளவிற்குப் பிறமொழி கலப்பு நிறைந்திருக்கிறது. தமிழிலுள்ள எண்ணற்ற சொற்கள் அவை தமிழ்ச்சொற்கள் தானா என்று குழப்பம் தரும் வகையில் விரவியுள்ளன.

    உலகிலுள்ள கல்வியாளர்களும் சமூக ஆய்வாளர்களும், உளவியல் நிபுணர்களும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்கின்றனர் என்றாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் போதுமானஅளவில் இல்லாமலிருப்பதே மக்கள் தமிழ்மொழியைப் புறக்கணிப்பதற்குக் காரணம். பல துறை சார்ந்த தமிழர்களை ஒன்றிணைத்து மொழிபெயர்த்துத் தர ஒரு குழு அமைக்கலாம். மொழிபெயர்ப்புகளை வெளியிடலாம். தொழில்நுட்ப தகவல்களைத் தாய்மொழியில் தரலாம்; விவாதிக்கலாம்; நுட்பப் பொருளை உணர்ந்து பல கருத்துக்களுக்குப் பின், அனைவரும் ஏற்கும் மொழிபெயர்ப்பு சொல்லை ஒத்த கருத்துடன் ஏற்கலாம்; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லையே ஒருமனதாகப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்; மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் சார்ந்த மொழிபெயர்ப்பு குழுக்கள் உருவாக்கப்படலாம்.

    “தாய்மொழி என்பது தாயின் மொழி-அது
    தாயும் நீயும் பேசும் மொழி
    ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்
    ஆன்மா உணர்மொழி அந்த மொழி”
    . . . . . .
    தேனாய் இனித்திடக் கேட்ட மொழி உன்
    சிந்தையில் விதைகள் போட்ட மொழி
    . . . . . .
    உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி-உன்
    உள்ளமும் உணர்வும் புரிந்த மொழி
    எண்ணியல் என்ன மின்னியல் என்ன
    எதையும் பயின்றிடச் சிறந்த மொழி-அது
    இறைவன் உனக்கென வரைந்த மொழி”

    என்று தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்பினை மறைந்த மலேசியக் கவிஞர் சி.செ. சீனிநைனா முகம்மது பாடிச் சென்றுள்ளார்.

    சிந்தையில் விதைகளை விதைக்கும் மொழி, எண்ணியல் மின்னியல் எதையும் பயின்றிடச் சிறந்த மொழி தாய்மொழியன்றி வேறொன்றில்லை என மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டும்’ ஔவையாரின் அறிவு தாய்வழிக்கல்வியினால் விளைந்தது அன்றோ? சித்த மருத்துவமே சிறந்த மருத்துவம் என்று உலகம் போற்ற தமிழரை தமிழ்வழிக்கல்வியைப் புறக்கணிப்பதுபோல் அதையும் புறக்கணித்து சர்க்கரை நோயினால் மடிந்து வருகின்றார்கள்.

    தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று நினைப்பவர்களையும்,. தமிழ்ச்சோறு போடுமா என்று கேட்பவர்களையும் நோக்கி பதிலடி கொடுக்கிறார் மலேசிய கவிஞர் பொன்முடி அவர்கள். தமிழ்மொழியால் தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும், தமிழனைத் தலையெடுக்க விடாமல் தமிழ்தான் செய்து விட்டதாகவும் கருதுவதால் தான் தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணிக்கின்றனர் எனக் கருதுகின்ற கவிஞர்,

    ”எந்த நாட்டினில் எந்த மொழிதான்
    எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
    துவையல் கறியுடன் ஊட்டுகின்றது?
    உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
    மொழியில் பழியை ஏற்றுவதில்லை””
    எனச் சாடுகிறார்.

    கல்லூரிகளில் மொழிபெயர்ப்பு பாடத்தினை வைக்கலாம். மொழிபெயர்ப்பு ஆற்றலையும், அறிவினையும் கல்விநிலையங்களில் முதன்மைப்படுத்தலாம்.

    தமிழில் அறிவியல் கருத்துக்களை வெளியிட முடியாதென்பவர்கள் உண்மையறியாதவர்கள். தமிழ் மொழி அறிவியல் மொழி என்பதை பண்டைய இலக்கியங்களை வைத்தே உறுதியாகக் கூறிடமுடியும்.சில சான்றுகள் இதோ……………..

    மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளைப் பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்குத் தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்துமலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது.

    இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………….. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. ஆனால் மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாகக் கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து.ஆனால் பழந்தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்பிருந்தே இதைக் கண்டு பிடித்துள்ளனர். மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இஃது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.

    ”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
    இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
    மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
    ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
    நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே …’ (..தொல் பொருள் மரபியில்:29. )

    தொல்காப்பியரின் கொள்கை டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது.

    மாற்றுருப்புப் பொருத்துதல்-பழுதுபட்ட ஓருறுப்பை எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. ஆனால் பண்டைத்தமிழர் இது போன்ற அறுவை சிகிச்சைகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர். இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.

    நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
    ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
    பொற்கை நறுந்தார் புனைதேர்ப் பாண்டியன் (சிலம்பு)

    இரவு நேரத்தில் மாற்றுடையில் ஊர் நிலவரம் அறிய சென்ற பாண்டியன்,கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் என்கிறது அச்செய்தி, உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் உணரலாம். அறுவைச்சிகிச்சையில் நோயாளி தன் நோயை உணராமலிருக்கச் சுஸ்ருதர் என்ற மருத்துவர் திராட்சை ரசம் பருகச் செய்ததாகச் சரகச் சம்கிதை என்ற நூல் கூறுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே இது போன்ற மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

    இரும்பு உலோகங்களான வேல், வாள்’ ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்’ இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது. ‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,(180) என இதைக்குறிப்பிடுகிறது. மேலும், அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினைப் பதிற்றுப்பத்தில்,

    “மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
    சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
    நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
    அம்புசே ருடம்பினர் சேர்ந்தோ ரல்லது
    தும்பை சூடாது மலைந்த மாட்சி” (பதிற்றுப்பத்து 42: 2 – 6)

    நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன.

    இக்கால மருத்துவத்தில் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் முறை, பண்டைய தமிழ் மருத்துவர்கள் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கலாம். அக்காலத்தில் தோன்றிய முறையே தொன்றுதொட்டு தொடர்ந்ததாகவும் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதத்தில்’

    “ கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்”

    என்னும் புறநானூற்று வரிகள் உறுதி செய்கின்றன.

    தமிழகத்தில் கட்டிடக்கலைத் திறம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் வாழ்ந்தனர். “ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டுத் தேஎங்கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து” ( நெடுநல்வாடை, 75- 78வது வரிகள்) என நக்கீரர் விளக்குகிறார். கடலின் போக்கையும், காற்றின் போக்கையும் கொண்டு மிகச் சிறப்பாக கடல் வாணிகத்தை மேற்கொண்ட தமிழனின் மொழியிலா அறிவியல் இல்லை? தமிழனின் கப்பல் கட்டும் தொழிலைக் கண்டு பொறாமைப்பட்டே தமிழரின் கப்பல் வாணிகத்தை கெடுத்த அந்நியர்களின் கதை நாம் அறியாததா? தமிழால் முடியும் என்று ஒவ்வொரு தமிழனும் நினைக்கவேண்டும்.

    ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். தன்மான உணர்வு அடிப்படையில் மக்கள் தாய்மொழியாம் தமிழினை வளர்க்க முன்வரவேண்டும். அரசும், கல்வி நிலையங்களும், ஊடகங்களும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழால் சாதிக்க முடியும் என்ற மக்கள் நம்பினால், தமிழனும் சாதிக்க முடியும். தமிழர் தமிழைப் புறக்கணித்தால் எதிர்காலத்தில் தமிழர்க்கு இருப்பதற்குக் கூட ஒரு நாடு இருக்காது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

    ஒருசில தலைமுறைகள் செய்கின்ற தவறுகள் ஒட்டுமொத்த இனத்தின் உரிமைக்கே சாவுமணியடித்து விடுகின்றன. தமிழினத்தின் எதிர்காலமே தாய்மொழிவழிக்கல்வியால் தான் சிறந்து உள்ளது. தமிழ் என்றைக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததில்லை. தாய்மொழி எனப்படுவது ஐம்புலன்களினாலும் உணரக்கூடிய, உணர்வுகளோடு ஊறிய சிந்திக்கத் தூண்டும் மொழியாகும். தாய்மொழியை சிந்தனை மொழி என்றே கூறலாம். சிந்திக்கின்ற மொழியால் பயிற்றுவிக்கப்படும் கல்வி, எண்ணங்களை மேம்படுத்தி, நுணுக்கங்களைப் புரிய வைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. தமிழ் உலகாள வேண்டும். அது தமிழர் கல்வியில்தான் உள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170905 -Sandipani ashram -Guru dakshina -lr

    ”புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரர் கத்த கருட -விஜயேந்த்ரர்,(விஜேந்திரர்)
    அந்தநாள் ஆதிமூலம், இந்தநாள் கீதைமூலம்,
    வந்தனன் நந்தன் வளர்ப்பு’’….

    ”காட்சியிதில், ஆனை கஜேந்திரரை காத்தருளும்
    மோட்சமது உண்டாம் முதலைக்கும், -ஆட்சி
    அரியா சனத்திலே அம்முதலை சாட்சி:
    பரிவா சனமவர் பார்’’….!

    ”அடிசறுக்கி ஆனை துடிதுடித்த போது
    நொடிக்கணக்கில் வந்தகால நேமி: -வடிவெடுத்து
    ஆவென வாய்பிளந்த பாவத்தின் பற்களுற்றேன்
    ஆவன செய்யவா தேவு”….!
    ”துரியோ தனனும் விருகோ தரனும்(பீமன்)
    சரியில் தவறில் சமமே, -அரியின்
    அரசாட்சி தன்னிலே ஆராய்ச்சி வேண்டாம்,
    ஒருசாட்சி யாய்அறி(ரி) வோ(ஓ)ம்”….

    ”தும்பிக்கை மாலையாய் தோள்தழுவ ஆனைக்கு
    நம்பிக்கை தந்தார் நவனீத -நம்பீசர்:(மயிலையில் இப்படி ஒரு வெண்ணைக் கடையுண்டு….மலரும் நினைவுக்கு மரியாதை)-
    ஆதிமூல மேயென்ற ஆனை கஜேந்திர
    வாதியாச்சு மோட்ச விலங்கு’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

    ஆங்கிலம்ஸர் கந்தையா வைத்தியநாதன்[1] — தமிழாக்கம்ஒரு அரிசோனன்

     மொழிபெயர்ப்பாளனின் குறிப்பு:  இலங்கையின் ஐந்து பழமையான ஐந்து சிவன் கோவில்களில் திருக்கேதீஸ்வரம் கோவிலும் ஒன்று.  இது மன்னாருக்கு அருகாமையில் இலங்கை தலைநிலப்பரப்பில் இருக்கிறது.  இக்கோவில் போர்ச்சுகீசியர்களால் பதினாறாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டுஇருபதாம் நூற்றாண்டில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது.  இப்பொழுதுஇந்திய அரசின் நிதியுதவியுடனும்தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணத்துடனும் மீண்டும் பெரிதாகக் கட்டப்பட்டுவருகிறதுகடந்த ஜனவரி மாதம், 2017ல் நான் நேரில் அங்குசென்று புதுப்பிக்கும் பணியைக் கண்டு வந்தேன்.  இக்கட்டுரையின் ஆங்கில மூலம்திருக்கேதீஸ்வர்ம் கோவில் புணர்நிர்மாணச் சங்கத்தால் 2003ல் மற்ற கட்டுரைகளுடன் திருக்கேதீஸ்வரம் கட்டுரைகள் [Thiruketheeswaram Papers] என்னும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும்மொழிபெயர்க்கும்போதுமொழிபெயர்ப்பாளர் தனது நடையில் மொழிபெயர்த்து எழுதுவது மூலத்தின் தனித்தன்மையை வெளிக்கொணராதுபோகும்.  அதைக் கருத்தில்கொண்டுஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்துமூல ஆசிரியர் எவ்வாறு சொல்லியுள்ளாரோஅதன்   தன்மை குன்றாதுநீட்டவோகுறைக்கவோ செய்யாதுதமிழ் இலக்கணத்திற்குத் தகுந்தவாறு சொற்றொடர்களை அமைத்துள்ளேன்.  அதன்மூலம் மூலக்கட்டுரையாளரின் நடையும்அவரது கருத்துகளும், உணர்ச்சிகளும் அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொணரப்பட்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்.

    இக்கட்டுரை திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணி சபையின் அனுமதியுடன் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது

    ***

    மொகஞ்சதாரோஹாரப்பாவில் நமக்குக் கிடைத்த வைளிப்பாடுகளின்  கபிடிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால்செம்புக்காலத்திற்கோ[bronzeage], அதற்கும் முன்னதாகவோ வரலாறு உள்ளது சைவசமயம்.  எனவேஅதை உலகத்தின் மிகப் பழமையான வாழும் சமயம் என்றே எண்ணவைக்கிறது

    — ஸர் ஜான் மார்ஷல்

    சிவபெருமானை ஒப்புயர்வற்றவரென்றும், முழுமையானவரென்றும் வழிபடுதல் மிகவும் பரவியுள்ள பழமையான சமயங்களில் தொன்மையானதாகும்.  அது படைப்பு துவங்கியதிலிருந்தே இருக்கிறது என்று மரபு பறைசாற்றுகிறது.  இமயம் தோன்றி ஆன்மீக மரபின் சின்னமாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே — மிகப்பெரிய இந்திய-ஆப்பிரிக்கக் கண்டம் பிரிவதற்குமுன்னரே — இலங்கை அதன் ஒருபகுதியாக இருந்தபோதே அங்கு சிவவழிபாடு துவங்கிவிட்டது.

    பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிவபெருமானை மகாதேவராக, ஆதிசைவத்தின் ஒரு பெரிய கடவுளாக வழிபட்டதாகவே — சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளியிலும், ஜார்ஜ் ஃபெப்ரி மற்றவர்கள் மால்ட்டா, மடகாஸ்கர் மற்றும் கிரீட்டிலும் கண்ட புதைபொருள் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று முகமுள்ள கடவுள் முத்திரைகளும் — மும்மூர்த்திக் குறிக்கோள் — பிற்காலப் பிரம்மா, விஷ்ணு, சிவன் பதிப்புருவாக இருக்கக்கூடும்.  பொது ஆண்டுகளுக்கு மூவாயிரம் ஆண்டு முன்னதான மூன்றுமுக சிவபெருமானும் ஒருமுகக் கடவுளின் முந்தைய முத்திரைகளவு முக்கியமானதாகவே இருக்கலாம்.

    சைவக் குருமாரான திருஞானசம்பந்தரும்[2], சுந்தரமூர்த்தி நாயனாரும்[3] திருக்கேதீஸ்வரத்திலுள்ள பெருமானைப் புகழ்ந்து பாடும்போது, பெரிய, சிறந்த துறைமுகமான — மகாவம்சத்தில் மாதிட்டை என்றழைக்கப்படும் — மாந்தோட்டத்தை எண்ணிலடங்காத மரக்கலங்களின் புகலிடம் என்றும், அங்கு மாடமாளிகைகள் நிறைந்திருந்ததாகவும், பூம்பொழில்கள், பழத்தோட்டங்கள், வயல்கல் சூழ்ந்திருந்ததென்றும் வர்ணித்திருக்கின்றனர்.

    மாந்தோட்டத் துறைமுகம் பாலாவி ஆற்றுமுகத்தில் இருந்தது. மலையளவு அலைகள் எழுந்தும் விழுந்தும் ஆர்ப்பரித்தன. ஆற்றின் தென்கரையில் அலைவாய்க்குரடுகளும் [piers] கிடங்குகளும் அமைந்திருந்தன.  இப்பொழுது அக்கிராமம் வங்காலை [வங்கக் கலங்கள் கலக்குமிடம்] என்றழைக்கப்படுகிறது.  வடகரையில் திருக்கேதீஸ்வரம் கோவிலும், அரசுக்கட்டிடங்களும், மாளிகைகளும் இருந்தன.  இது மாளிகைத்திடல் என்று இப்பொழுது அழைக்கபடுகிறது.  பபமொடை [அர்ச்சகர்களுக்கான இடம்], கோவில் குளம் என்றும் கிராமங்கள் உள்ளன. திருக்கேதீஸ்வரம் கோவில் வங்காலையிலிருந்து நான்குமைல் தொலைவிலுள்ளது.  இதிலிருந்து பாலாவி ஆற்றின் முகத்துவாரம் அந்நாளில் எவ்வளவு பெரிதாக இருந்ததென்றும், அதன் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

    எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வணிகம் அக்காலத்தில் நடந்துவந்தது. அந்நாட்டார் தென்மேற்குப் பருவமழைக்குப் பயந்தனர்.  அதன் சீற்றத்திலிருந்து மாந்தோட்டத் துறைமுகம் புகலிடமளித்தது. அதற்குக் காரணம் தெற்கிலுள்ள மன்னார் தீவும், ராமர் அணையும்தான்.  அக்காலத்தில் மன்னார் தீவுக்கும், இலங்கை நிலத்திற்கும் இடையுள்ள நீர்ப்பரப்பு இருபருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல்தட்டாமல், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.

    கப்பல்கள் செல்லுமளவுக்கு ஆழமான மன்னார் கடற்கால் எப்படி சதுப்புநிலமானது, மிகச்சிறந்த மாந்தோட்டத்துறைமுகம் மணல்மேடுற்றது, அலைமோதிய பாலாவியாறு எப்படி ஒரு சிறுவாய்க்காலானது, அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதி தரிசுநிலமானது என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.

    பாலாவி ஒரு வளமிக்க ஆறாக இருந்தபோது, மல்வத்து ஓயாவின் நீர்ப்பெருக்கும், மற்ற இயற்கையான நீரோட்டங்களும் அதில்தான் கலந்தன.  காலப்போக்கில் மல்வத்து ஓயா தனது போக்கைத் தெற்குநோக்கி மதவாச்சிப் பக்கம் திருப்பியது. இது மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தைப்பற்றி ஆய்வுசெய்த ஒரு ரஷ்யப் பேராசிரியரின் கருத்தும் ஆகும்.  மல்வத்து ஓயாவை ஜயன்ட்ஸ் டாங்கைவிட்டு [Giants Tank] மன்னாருக்குப் பலமைல்கள் தொலைவிலுள்ள அருவியாற்றுக்குத் திருப்பியது ஜீவநதியான பாலாவியாற்றை மழைகாலத்தில்மட்டும் நீர்ப்பெருக்குள்ள மணற்படுகையாக ஆக்கியது. அகலமான பாலாவியின் கழிமுகம் மணல்மேடாகுவது விரைவாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மன்னார் தீவுக்குச் செல்ல அமைக்கப்பட்ட சாலைப்பாலமும், ரயில்வே பாலமும் கடல் நீரோட்டத்தை முழுவதும் நிறுத்திவிட்டன.  மாந்தோட்டத்திற்குப் பதிலாகத் தலைமன்னார் இந்தியாவுக்கு அருகாமையான துறைமுகமாக உருப்பெற்றது. பராக்கிரமபாகுவின் காலத்தில் துவங்கி, போர்ச்சுகீசியரின் வருகையும் மாந்தோட்டத் துறைமுகத்தின் சிறப்புகுன்றி, வடக்கிலிருக்கும் கேட்ஸ் துறைமுகம் சிறப்புப்பெற்றது.

    மாந்தோட்டத்தின் பொற்காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமன்றி, தென்னிந்திய கடல்வணிகர்கள் தங்கள் சரக்குகளை மேற்கேயும், சீனாவுக்கு கொண்டுசெல்லும்போது இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகவும் விளங்கியது.

    அவ்வமயம் இந்தியாவில் இராமேஸ்வரம் கோவிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோவில் விளங்கியது.  ஆனால் அது இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் படைகளின் வழியைவிட இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்துவரும் இராணுவத்தின் வழியில் அதிகமாகவே இருந்தது.  அதனால் திருக்கேதீஸ்வரம் உள்ளான அளவுக்கு அதன் தோழமைக்கோவிலான இராமேஸ்வரம் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தது.

    திருக்கேதீஸ்வரத்தின் செழிப்பு வன்னித் தமிழர்களின் ஏற்றத்தாழ்வின்போது அதிகமாகவும், இந்தியத் தீபகற்கத்தின் ஏற்றத்தாழ்வின்போது மறைமுகமாவும் ஏற்றத்தாழ்வடைந்தது.

    சோழர்கள் பொலனருவையிலிருந்து இலங்கையில் ஆட்சிபுரிந்தபோது மாந்தோட்டமும், திருக்கேதீஸ்வரமும் தாற்காலிகமாக அவற்றின் புகழின் உச்சக்கட்டத்தை அடைந்தன. அது ராஜராஜேச்சுரம் என்றுகூட அழைக்கப்பட்டது. அரசியல்நிலை மாறியவுடன் அப்புகழ் உடனேயே மங்கிக் குன்றியது.

    முதலாம் சுந்தரபாண்டியனின் காலத்தில் [பொ.ஆ. 1251-80] அரசச்சலுகைபெற்ற திருக்கேதீஸ்வரம் கோவில் பாண்டியச் சிற்பக்கலையின்படி புதுப்பித்துக் கட்டப்பட்டது[4]. அதற்குச் சான்றுகள் தற்பொழுது கோவிலருகிலுள்ள கற்களின்வாயிலாகவும் கிடைக்கின்றன.

    சடையவர்மன் வீரபாண்டியனின் குடுமியாமலைக் கல்வெட்டுகள் அவன் இலங்கை மன்னனை வென்று திறைபெற்றதாகவும், கோணமலை[திரிகோணமலை]யில் பாண்டியரின் இரட்டைமீன் சின்னத்தைப் பொறித்ததாகவும் கூறுகின்றன.  கடற்படையில் வலிமையுள்ள பாண்டியனான அவன் திருகோணமலைக்குக் கடல்வழியாகச் சென்றிருந்தாலொழிய திருக்கேதீஸ்வரமும் அப்பொழுது அரசனின் கவனத்தைப் பெற்றிருக்கலாம்.

    போர்ச்சுகீசியர்கள் பொ.ஆ 1540ல் இலங்கையின் வடக்குக் கடற்கரைப்பக்கம் வந்தபோது திருக்கேதீஸ்வரம் ஒரு பெரிய இந்துசமய வழிபாட்டுத்தலமாகவே இருந்தது.[5]

    எமர்சன் டெனந்ட் [Emerson Tennent] கொடுத்துள்ள விவரிப்பைக் காண்போம்:

    போர்ச்சுகீசியர் நெடுங்காலமாக யாழ்ப்பாணத்தை அடையவிரும்பினாலும்அது செழிப்பான தெற்கிலிருக்கும் அவர்களது குடியிருப்பின் பாதுகாப்புக்காக அல்லஅவர்களது கடல்வணிகத்திற்காகவே.  அப்படியிருந்தும் 1617ல்தான் மலபார் அரசபரம்பரையைப் பதவிநீக்கம்செய்துஅதைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர்அதுவரை அவர்களது அரசியலுக்கு மசியாத அப்பகுதிஅப்பொழுது மதமாற்று நடவடிக்கைக்கு உற்சாகமளிக்கும் வாய்ப்பை அளித்தது

    1544ல் அவர்களின் முதல் படையெடுக்கும் முயற்சி தக்காணத்தின் தென்கடற்கரைப் பகுதிகளிலுள்ள இந்துக் கோவில்களைச் சூறையாடப் பொருத்தமாக அமைந்தது. [யாழ்ப்பாண]தீபகற்பத்தின் அரசரை அழைத்துபோர்ச்சுகலுக்குத் திறைசெலுத்தும் நாடாக ஆகாவிட்டால் [போர்ச்சுகலின்கொள்ளைக்காரக் கடற்படைத் தாக்குதலை எதிர்நோக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இடப்பட்டது.  அரசர் முன்னதைத் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு நாலாயிரம் டக்கெட்டுகள் திறைசெலுத்த ஒப்புக்கொண்டார்.  அந்த ஆண்டிலேயே செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியரின் கட்டளைப்படி ரோமன் கத்தோலிக்க மதப்பிரசாரகர்களால் ஏராளமானவர் மன்னாரில் மதமாற்றம் செய்தனர்யாழ்ப்பாணப்பட்டினத்தின் அரசர் சமயமாற்றத்தை

    வேரறுக்கவேண்டி புதிதாக மதம்மாறிய அறுநூறுபேருக்கு மரணதண்டனை கொடுத்தார்.  ஆயினும்இந்தத் துன்மார்க்கம் அவரது அரண்மனையையே அடைந்தது.  அவரது மூத்தமகன் மதம் மாறினான்.  எனவேஅதன் விளைவாகஅவனுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.  அவரது இரண்டாம் மகன் தந்தையின் தாளாத சினத்திலிருந்து தப்பிக்க கோவாவுக்கு ஓடினான்.

    இந்தக் கடுமையான நடவடிக்கைளுக்கு எதிராக மெதுவாகபாதுகாப்பாக,  ஆனால் தீவிரமாகப் பழிவாங்குமாறு மூன்றாம் போப் ஜான் [போர்ச்சுகலின்இந்திய வைஸ்ராயுக்கு உத்தரவிட்டார்.  உடனேமன்னாரில் கிறித்தவர்களின்மீது அடக்குமுறை அடுத்தடுத்து நிகழ்வதாகவும்கோவாவுக்கு ஓடிவந்த அண்ணனின் அரசுரிமையை யாழ்ப்பாண அரசர் பறித்துக்கொண்டதாகவும் உள்ள இரண்டு முறையீடுகளின்படி நடவடிக்கையெடுக்கவேண்டிஇந்திய வைஸ்ராய் டான் கான்ஸ்டன்டீன் தெ பிரகான்சா [Don Constantine de Braganza] யாழ்ப்பாணத்திற்கு எதிராக மற்றொரு கடற்படையை 1560ல் அனுப்பினார்தெ கோட்டோ [De Couto] தனது இந்திய வரலாற்றின் எழுபதாவது பத்தாண்டில் இந்த புனிதப்போரைப்பற்றி பகட்டான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்

    வைஸ்ராயுடன் கப்பலில் பயணித்த கொச்சி பிஷப் தரையிறங்கியவுடன் ஒரு  வழிபாட்டிடத்தை நிறுவிநகரின்மீது தாக்குதலைத் துவங்குவதற்காகப் படையெடுத்துவந்த இராணுவத்தின் முன்னிலையில் தொழுகைநடத்திபோரில்   விழுவோருக்கு முழுமையான சலுகைகளையும்சிலுவைக்காக உயிர்துறப்போருக்கு முழுபாவமன்னிப்பும் வழங்கினார்

    தாக்குதல் வெற்றியடைந்தாலும் முடிவு மோசமாக இருந்தது.  பல பிரபுக்கள்   எதிரிகளின் பீரங்கிகளால் கொல்லப்பட்டனர்.   நகரம் வீழ்ந்தது, அரண்மனை எரிக்கப்பட்டது. அரசரும், அவரைச் சேர்ந்தவரும் வெற்றிகொண்டோருடன் உடன்படிக்கை செய்துகொள்ளவைக்கப்பட்டனர்.  கண்டியிலிருந்தும், கோட்டாவிலிருந்தும் ஆறாம் புவனேகாவின் மருமகனும், தர்மபாலாவின் தந்தையுமான திரிபுல பந்தாவால் கொண்டுவரப்பட்ட பொக்கிஷத்தின் மறைவிடத்தைத் தெரிவிக்கவேன்டுமென்றும், அதற்கும் மேலாக, எண்பதாயிரம் குருசேடோ பணமும் தரவேண்டுமென்றும், மன்னார் தீவை போர்ச்சுகீசியருக்கு விட்டுத்தரவண்டுமென்பதும் என்பதே அந்த உடன்படிக்கை.  உடனே மன்னார் தீவு ஆக்கிரமிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

    சிங்கள அரசர்களுக்கு உதவியாக போர்ச்சுகீசியருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக யாழ்ப்பாண அரசரைத் தண்டிக்கவேண்டி, 1591லும், 1604லும்கோவாவிலிருந்து புதிய படையெடுப்புகள் மேற்கொள்ளப்பப்பட்டன.  ஆனால்ஒவ்வொரு தடவையும் பயமுறுத்தல் அபாயத்தைத் தடுக்க வலிமையற்றவர் தானாகச் சரணடைந்தனர்ஆயினும்ஏற்கனவே யாழ்ப்பாணப் பகுதியைப் போர்ச்சுகலின்கீழ் கொண்டுவரும் திட்டமிருந்தாலும்அதை நிறைவேற்றத் தகுந்த தருணத்திற்காக அச்செயல் ஒத்திப்போடப்பட்டுவந்தது.

    “1617ல் கான்ஸ்டன்டைன் தெ சா நொரனாவின் [Constantine de Saa Norana] தலைமையில் ஒரு படை யாழ்ப்பாணத்தை முன்புசொல்லப்பட்ட ஒருமுகப்பட்ட காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கிக் கைப்பற்றியது.  அரசர் கைதுசெய்யப்பட்டு கோவாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டார்மலபார் இளவரசர்களில் கடைசியான அவரது மருமான் அவரது அரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டி ஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டில் சேர்ந்தார்.  அவரது சொத்துரிமை போர்ச்சுகலின் ஆட்சிப்பகுதியாக முறைப்படி இணைக்கப்பட்டது.

    எமர்சன் டெனன்ட்டால் தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்படாதிருந்தாலும், இந்த வரலாற்றுச் சூறாவழிச் சுழல் நிகழ்ச்சிகளான போர்ச்சுகீசியரியன் காலத்தில் திருக்கேதீஸ்வரம் ஒரு முக்கியமான பங்கை வகித்தது.

    தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர்.  சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.

    மன்னார்த்தீவு மக்களின் சமயமாற்றம் துவங்குவதற்குமுன்னரே திருக்கேதீஸ்வரம் கோவிலின் சூறையாடல் நிகழ்ந்துமுடிந்தது.  அதைப் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களே மன்னார் கோட்டையைக் கட்டப் பின்னர் உறுதுணையாகவிருந்தன.  இதைப் பழிவாங்க யாழ்ப்பாண மன்னர் எடுத்துக்கொண்ட வலுக்குறைந்த முயற்சிகளே படுகொலையாக பூதக்கண்ணாடிகொண்டு காட்டப்பட்டன.

    இதில் நாம் கருத்தில்கொள்ளவேண்டியது என்னவென்றால், திருக்கேதீஸ்வரத்தின் வீழ்ச்சியுடன் இலங்கையின் தமிழ் அரசுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு, தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.

    [திரிகோணமலையில் குடிகொண்டுள்ள] கோணேஸ்வரரின் பக்தனான இலங்கேஸ்வரன் இராவணனும் அவனது மாமனார் மயனும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையான கோவிலைக் கட்டினார்கள் என்பது மரபு. இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பிச்செல்லும் வழியில் இராமேஸ்வரத்தில் சிவனுக்குக் கோவில்கட்டி வழிபட்ட இராமர், திருக்கேதீஸ்வரத்திலும் சிவபெருமானை வழிபட்டதாகப் புகழப்படுகிறது.

    மகாபாரதத்தின் நாயகனும், கிருஷ்ணனின் உறவினனும், சீடனுமான அருச்சுனன் தெற்கே தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது திருக்கேதீஸ்வரத்திற்கும் வருகைதந்தான் என்பது ஐதிகம்.  இந்த யாத்திரையின்போதுதான் அவன் மாந்தோட்டத்தையடுத்த பகுதியை ஆண்டுவந்த நாக இளவரசியான அல்லி அரசாணியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.  மன்னார்த்தீவை அடுத்து இலங்கை நிலப்பரப்பில் காணப்படும் இடிபாடுகள் அல்லியின் கோட்டையென்று குறிப்பிடப்படுகின்றன.

    பொது ஆண்டுகளுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பவுத்த இலக்கியங்கள் இவ்விடத்தை மஹாதித்த என்கின்றன. மரபையொட்டிச் சில கற்றறிவாளர் குறிப்பிடுவதைப்போல இராமர், அகத்தியர், அருச்சுனன் ஆகியோர் மாந்தோட்டத் துறைமுகத்தின்மூலம் கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தார்களென்றால், இளவரசன் விஜயனும்[6] அதேவழியில்தான் வந்திருக்கவேண்டும்.  அப்படியிருந்தால், விஜயனோடு வந்த உபதீசன் என்ற அந்தணப் பூசாரி வழிபாடு நடத்திய அங்கிருந்த சிவன்கோவில் திருக்கேதீஸ்வரத்தைத்தவிர வேறெதுவாகவும் இருக்கமுடியாது.

    யாழ்ப்பாணத்து டச்சு கவர்னருக்காக 1736ல் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் புலவரால் தயாரான [எழுதப்பட்ட] வரலாற்று மரபுகளின் பதிவான யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது:

    பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த    திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.

    ஒன்பது-பத்தாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மக்கள் குடியிருந்த பகுதிகளில் தமிழர்களின் மேலாண்மையை விவரிக்கும் ராஜ ரத்தினாகர என்ற சிங்கள நூல், சைவசமய முதல்வர்களின் காலத்திய மாந்தோட்டச் செழிப்பை ஒட்டியதாகவே உள்ளது.

    திருக்கேதீஸ்வரம் கோவிலை மீட்டெடுக்கும் [புணருத்தாரணம்] பணியின் முதல் முயற்சி மாபெரும் இந்துசமயச் சீர்திருத்தவாதியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரால் செய்யப்பட்டது. ஆயினும், அக்காலத்துச் சைவர்களின் அக்கறையின்மையாலும், கிறிஸ்தவர்களின் எதிர்ப்பாலும் அவரது முயற்சி உடனே வெற்றியை எதிர்கொள்ளவில்லை.

    அவர் காலமடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருக்கேதீஸ்வரம் கோவிலின் தொன்மைப் புகழைப்பற்றி நிலையான பதிவைத் தனது அலுவலக அறிக்கையில் எழுதியிருந்த ஸர் வில்லியம் ட்வைமனால் 13, டிசம்பர் 1893ல் யாழ்ப்பாணச் சைவர்களால், யாழ்ப்பாணக் கச்சேரியில் [அரசு அலுவலகம்] நடத்திய ஏலத்தில், நாற்பது ஏக்கர் காட்டுநிலம் யாழ்ப்பாணச் சைவர்களால் வாங்கப்பட்டபோது அவரது கனவு நிறைவேறியது.

    எந்தவொரு புதுப்பிக்கும் வேலையும் செய்யப்படும்முன்பு இந்தப் பண்டைய கோவில் இருந்த நிலத்தின் நிலைபற்றிய பதிவு நவம்பர் 7, 1887ல் திருக்கேதீஸ்வரம்மஹாதிட்டமாதோட்டம் அல்லது மாந்தொட்டை[7], என்ற தலைப்பில் டபில்யூ. ஜே. பொவாக்கே [W. J. Boake] சமர்ப்பித்த கட்டுரையிலிருந்து திரட்டிக்கொள்ளலாம்.

    செதுக்கப்பட்ட சிலைகளின் சில துண்டுகள்உடைந்த ஓடுகள்செங்கல்கள்மட்பாண்டச் சில்லுகள் தவிர வேறெதுவும் இப்புராதன நகரின் நிலப்பகுதிக்குமேல் காணப்படவில்லை.  இந்நிலம் மட்டுமீறிப் பெரிதாக வளர்ந்தஅடர்த்தி குறைந்ததாழ்ந்த காடாகிவிட்டிருக்கிறதுசில தனக்காபவொப்பா மரங்கள்தாம் பெரிதாக வளர்ந்துள்ளன.  பழைய தெருக்கள் இருந்ததற்கான அடையாளமும்இரண்டுமூன்று கிணறுகளும் காணப்படுகின்றன.  அங்கிருந்த குன்றின் மையத்திற்குப் பக்கத்தில் ஏதோ ஒரு இடத்திலிருந்த எந்தவொரு செங்கல்கட்டிடத்தின் அடித்தளத்தின்மேல் நகரின் பெரும்பகுதி நின்றது என்று நம்பினேனோஅவை அரண்மனை என்று குறிப்பிடப்பட்டன; கோவிலின் வாசல் கிணற்றுக்கு அருகாமையில் இருந்ததென்று சொல்லப்பட்டது.

    [கட்டுரை சமர்ப்பித்தபோது] கூட்டத்திற்கு வந்திருந்த பி. இராமநாதன் [பிற்காலத்தில் ஸர் பொன்னம்பலம்] இந்த அறிக்கையின் ஒருபகுதிக்கு மறுப்பு தெரிவித்ததுடன், இவ்விடத்தின் இந்துசமய நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஒரு கருத்தையும் சேர்த்தார்.  மேலும், பழைய கட்டிடங்களின் இடம் உலகியல் சார்ந்த [secular] நகரின் பகுதியல்லவென்றும், கோவிலின் உடமையென்றும், அந்தப் பகுதியின் மக்கள் கோவிலின் அதிகாரிகள், பக்தர்கள், பணியாளர்கள் என்றும் சொன்னார்.  அப்பகுதியின் ஒரு குறிப்பிடத்தக்க தனித்தன்மை —  பொவாக்கேவும், முந்தைய பிரித்தானியப் பார்வையாளர்களும் கவனிக்கத்தவறியவை, கோட்டையென்று சொல்லப்பட்டதைச் சுற்றியிருந்த இரட்டை அகழிகள் — வெளித்தடுப்பு அரணாகக் கடல்நீரையும், உட்பாதுகாப்பாக நன்நீரையும் உள்ளடக்கி, செல்வச்செழிப்பான கோவிலின் உடமைகளுக்கு வலுவான பாதுகாப்பாக அமைந்தன என்று இப்பொழுது தெளிவாகிறது.

    கோவில்நிலத்திலிருந்த சோழர்கிணறு, போர்ச்சுகீசியர் காலத்துக்குமுன் வழிபாட்டிலிருந்த சிவலிங்கம், உட்கார்ந்திருக்கும் நந்தி, அப்போது மண்மூடியிருந்த கோவில் அடித்தளத்தின் அருகிலுள்ள பிள்ளையார் திருவுருவங்கள் வாய்ப்பளித்த தடயங்களிலிருந்து தரைமட்டமாக்கப்பட்ட தலைமைக் கோவிலின் மூலமனை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    இலங்கை இந்துக்களின் வேண்டுதலின்படி காசியிலிருந்து புகழ்பெற்ற சிவலிங்கம் ஒன்று திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே தற்பொழுது ஆதிமூலமாக வழிபடப்பட்டுவருவதாகவும் இராமேஸ்வரத்திலுள்ள பதிவுகள் சான்றாக உள்ளன.

    பண்டைய [கோவில் இருந்த] மிகச்சரியான நிலத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டு, 1903, ஜூன் 28ம் தேதியில் பிராணப்பிரதிஷ்டை [உயிரூட்டல்] செய்யப்பட்டது[8].

    தற்போதைய சுவாமி மற்றும் அம்பாளின் சன்னதிகள் முதல் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மன்னாரில் பணியாற்றிய இந்துப் பொது அலுவலர்களின் [public servants] தூண்டுதலால் மிகவும் பகட்டான அளவில் கட்டப்பட்டன. அவைகளும் காலப்போக்கில் சிதிலமடைந்தன.  அக்டோபர் 19, 1948ல் இந்துக்களால் கொழும்பில் ஒரு கூட்டத்தில் துவக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் கோவில் மறுநிர்மாணிப்புச் சங்கத்தின் [Thiruketheeswaram Temple Restoration Society] ஆதரவின்கீழ் புதுப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 1952ல் குடமுழுக்கும் [கும்பாபிஷேகம்] செய்விக்கப்பட்டது.

    இது தற்போதைக்கு மையச்சன்னதிகளில் பூசைகளும், வழிபாடுகளும் தடையின்றித் தொடர உதவும்போது, ஒன்பது பிரகார சன்னதிகள், ராஜகோபுரம், திருமதில், மற்ற பக்கமண்டபங்களின் புதுப்பிப்புப்பணிகள் நடந்தன.

    தென்னிந்தியாவில் கிட்டும் மிகச்சிறந்த சமய, [ஆகம]சிலைக்கலை வல்லுனர்களின் திறமையால் புதுக்கோவிலின் வரைபடமும், நில அமைப்புத் திட்டமும் மரபுசார்ந்த வழியில் உருவாக்கப்பட்டன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்குச் சுற்றுக்கட்டில் ஒரு உத்சவ மண்டபம் [வசந்த மண்டபம்] உடனிருக்கும், வெளிச்சுவற்றால் சூழப்பட்ட மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் இருக்கும்.  மாபெரும் பக்தர்திரளுக்கு இடங்கொடுக்கும்வகையில் வெளிச்சுவருக்கு வெளியே சுற்றிலும் அகலமான பகுதியில் இரதவீதி அமைந்திருக்கும்.  அதைச் சுற்றியுள்ள நிலங்களில் குறுக்குநெடுக்கான வீதிகள் பூங்காக்கள், பொழில்கள், தோப்புகள், மடங்கள், சத்திரங்கள், அர்ச்சகர், அடியார்கள், கோவில் பணியாளர்களுக்கான வீடுகள் இவற்றுக்கு ஏற்பாடளிக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    திட்ட அமைப்பில் குருகுலம், சமய மேற்படிப்புக்கான கல்லூரி, சாதுக்களுக்கான ஓய்விடம் இவற்றிற்கும் திட்த்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  குருகுலம் ஏற்கனவே உருவாகியிருக்கிறது.  கோவிலுக்குச் செல்லும் வழியில் அநாதை இல்லத்திற்கான இடவசதியுடன் மகளிர் நல்வாழ்வு மையம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது.

    நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

    இந்தக் கும்பாபிஷேகத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி விநாயகர், சுப்பிரமணியர், நந்தீஸ்வரர் இவர்கள் உட்பிரகாரத்திலுள்ள தத்தம் சன்னதிகளில் நிறுவப்பட்டனர்.நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

    ‘ஈ’ என்னும் இசைத்தொனிக்கு துல்லியமாச் சுரம்கூட்டிய, தூய தாமிரம்-காரீயக் கலப்பு உலோகத்தில் லண்டனில் நன்கு அறியப்பட்ட வார்ப்பகத்தில் வார்த்த, நான்கடி விட்டமுள்ள கோவில்மணி ஒன்று ஏற்கனவே கடல்வழியாகத் திருக்கேதீஸ்வர்த்திற்கு வந்துகொண்டிருக்கிறது.  அதன் எடை ஒரு டன், மூன்று குவார்ட்டர்கள், ஐம்பதுக்கு, ஐம்பதுக்கு ஐம்பது அங்குல வடிவமைந்தது.  அதன் மொத்த எடை இரண்டு டன் ஆகிறது.  தகுந்த மணிக்கூண்டும் கட்டப்பட்டுவருகிறது.

    1960ன் திருவெம்பாவுக்காக கடல்மட்டத்திற்கு எழுபத்தைந்தடி உயரத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் பலமைல்கள் வட்டாரத்திலிருக்கும் இந்துக்களை திருப்பள்ளியெழுச்சி பாடித்தொழுவதற்காக அழைத்தெழுப்யும் என நம்பப்படுகிறது.

    பத்துவருட இருப்பை நிறைவேற்றிய திருக்கேதீஸ்வரம் கோவில் புனரமைப்புச் சங்கம் அதிகமாகச்  என்பதை கோவிலுக்கு வருகைதந்தால்மட்டுமே ஒரு இந்து அடியாரால் உணரவியலும்.  யாத்திரிகர்களின் வசதிக்குத் தேவையானதை நிறைவேற்றும் பல மடங்களுக்கும், கோவிலின் வாயிற்படிக்கு நேராக வருவதற்கு நல்ல வண்டிவரக்கூடிய தார்ரோடும் உள்ளது. பாலாவி ஆற்றில் புனித நீராடுவதற்காக சிமிண்ட் படிகளுல்ல குளிக்கும் துறையும், அருகாமையில் மற்ற நோக்கத்திற்காக குழாய்த் தண்ணீர் வசதியும் உள்ளன.  அடியார்களின் அனைத்து அன்றாடத் தேவைகளை எதிர்கொள்ள மின்வசதி, தொலைபேசி இணைப்புள்ள துணை அஞ்சல் அலுவலகம், கடைகள், மன்னாரிலிருந்து அடிக்கடி பஸ் சேவை உள்ளன.

    அவரது சமயத்தின், பண்பாட்டின், மொழியின், இந்நாட்டில் நிலைத்துநிற்கும் சின்னமான திருக்கேதீஸ்வரத்திற்குத் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வருகைதருவது இலங்கையிலுள்ள ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமையாகும்.

    தொண்டர் நாள்தொறுந் துதிசெய் அருள்செய்கே தீச்சர மதுதானே!

    ***

    இக்கட்டுரை பிரதிலிபி வலையத்தில் ஆங்கில-தமிழ் மொழியாக்கப் போட்டியில் வெளிவந்திருக்கிறது.

    ***

    [1] இக்கட்டுரை சிலோன் பல்கலைக் கழகத்தில் இந்து சமயப் பகுதிக்காக எழுதப்பட்டது.

    [2]  பண்டு நால்வருக் கறமுறைத் தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை

    கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்

    வண்டு பண் செயு மாமலர் போழில்மஞ்ஞை நட்முடு மாதோட்டந்

    தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தேச்சர் மதுதானே.

    — திருஞானசம்பந்தர்

    [3]  மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி

    மாவின்கனி தூங்கும்பொழின் மாதோட்டநன் நகரிற்

    பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்

    தேவன்னெனை யாள்வான்றிருக் கேதீசரத் தானே.

    — சுந்தரமூர்த்தி நாயனார்

    [4] சிதம்பரம் கோவில் கல்வெட்டுகளும் இதைத் தெரிவிக்கின்றன.

    [5] பொது ஆண்டு 1505ல் லொரென்சா த அல்மெய்டா [Lorenza de Almeyda] காலி[Galle]க்கு வந்தார்.  ஜூடாசின் மூன்றாவது வைஸ்ராயான லோப்பெஸ்  சுவாரெஸ் [Lopez Suarez] 1517ல் கொழும்புக்குப் படையெடுத்து வந்தார்.  லோப்பே தே பிரிட்டோ [Lope de Brito] 1520ல் மன்னாருக்கு அருகிலுள்ள அர்ரிபூ முத்துக்குளிக்கும் கரைக்கு வந்தார்.

    [6] பவுத்தநூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் விஜயனை இலங்கையின் முதல் அரசனாகக் குறிப்பிடுகின்றன.

    [7] Royal Asiatic Society Journal, Volume No. 35

    [8] திருவிழா விபரங்களுக்கு அத்தேதிய “யாழ்ப்பாண இந்து இசைப்பெட்டி”ச்  [Jaffna Hindu Organ] செய்தித்தாளைப் பார்க்கவும்.

    Share
  • எமது வாழ்வில் கோவில் – பகுதி I

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா, B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

     

    “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.   இவ்வாறு கோவிலை இவர்கள் முதன்மைப் படுத்தியதற்குக் காரணம் என்ன? கோவில் இல்லா விட்டால் வாழவே முடியாதா ? கோவில் என்பது வாழ்க்கையில் கட்டாயமான ஒன்றா ? இப்படிப் பல வினாக்கள் நம்முள் பலருக்கு எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வினாவானது அன்று தொடங்கி   இன்றுவரை மக்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கிறது. இப்படி எழுகின்ற மனங்களுக்குத் தெளிவு பிறக்கும் நோக்கில் சில கருத்துக்களை முன்வைக்கு முகமாகவே இச்சிந்தனை  இங்கு உருவாகி வந்திருக்கிறது.

     வாழ்க்கை என்பது மனிதனுக்குக் கிடைத்த பெரும்பேறு என்று தான் எண்ண வேண்டும். மனிதன் விலங்குகள் போல வாழ்ந்துவிட முடியாது.

    ஏனென்றால் சிந்தித்துச் செயலாற்றும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. சிந்திக்கும் ஆற்றலே மனிதனை உயர்வு உடையவன்   ஆகக்காட்ட  முயல்கிறது எனலாம். விலங்குகளோடு ஒன்றாகவே காட்டில் வாழ்ந்த மனிதன் இப்பொழுது இல்லை. மனிதனது வாழ்வானது ஓங்கி உயர்ந்து வந்து நிற்கிறது. அப்படி வந்து நிற்கும் நிலையிலும் மனிதன் மனத்தில் ஒருபக்கம் விலங்கு குணமும் இயல்பும் ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மனிதன் மனம் போனபடி வாழ முற்படுகின்றான். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து வாழ்வினையே தொலைத்தும் இழந்தும் விடுகின்றான்.

    இந்த நிலையில் ” இப்படித்தான் வாழவேண்டும் ” என்னும் நெறி முறையினை மனிதனுக்கு வழங்கி நிற்பது கோவில்களும் சமயங் களுமே ஆகும். இதனால்தான் ” கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ” என்று எமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்

    எனக் கொள்ள முடிகிறதல்லவா ?

    (தொடரும்)

    Share
  • போராட்டம்

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

     

    மொழிகாக்கப் போராட்டம்

    இனம்காக்கப் போராட்டம்

    மதம்காக்கப் போராட்டம்

    மன்னருக்கும் போராட்டம்

    ஏழைக்கும் போராட்டம்

    கோழைக்கும் போராட்டம்

    இவ்வுலகில் போராட்டம்

    எத்தனையோ நடக்கிறது !

     

     

    இல்லாமை காரணமாய்

    எடுக்கின்றார் போராட்டம்

    வல்லமையை நிலைநிறுத்த

    வகைவகையாய் போராட்டம்

    வாழவெண்ணி நடத்துகிறார்

    வாழ்வெல்லாம் போராட்டம்

    நீளமாய் தொடர்கிறது

    நீள்புவியில் போராட்டம் !

     

     

    முதலாளி போராட்டம்

    முதல்பெருக வைப்பதற்கு

    தொழிலாளி போராட்டம்

    தோல்வியின்றி வாழ்வதற்கு

    அரசியலார் போராட்டம்

    ஆட்சியிலே அமர்வதற்கு

    அவர்மனதில் போராட்டம்

    அதிகசொத்துச் சேர்ப்பதற்கு !

     

    மாணவர்கள் போராட்டம்

    மதிப்பெண்கள் பெறுவதில்

    பெற்றவர்கள் போராட்டம்

    பிள்ளைகளை உயர்த்துவதில்

    ஆசிரியர் போராட்டம்

    ஊதியத்தைப் பெருக்குவதில்

    ஆளுகின்றார் போராட்டம்

    அனைத்தையுமே பதுக்குவதில் !

     

    மதுவொழிக்கப் போராட்டம்

    நடக்கின்ற தொருபக்கம்

    மதுக்கடைகள் திறப்பதற்கு

    வருகின்றார் ஒருபக்கம்

    குடிநீரே இல்லயென்று

    குடிகள்செய்வார் போராட்டம்

    குடித்துவிட்டு பலபேர்கள்

    குழப்பிடுவார் நாட்டினிலே !

     

    பார்க்கின்ற இடமெல்லாம்

    பலநிலையில் போராட்டம்

    போராட்டம் என்பதற்கே

    அர்த்தமின்றிப் போகிறது

    மனட்சாட்சி தனைநிறுத்த

    போராட்டம் தேவயன்றோ

    மனமெல்லாம் மாறிவிட்டால்

    போராட்டம் ஓடிவிடும் !

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (247)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    ஏற்கனவே வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் சிக்கி வாழ்வோடு கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் தென்கிழக்காசிய நாட்டு பகுதிகள் பலவற்றில் வாடும் மக்களை இயற்கையன்னை அடைமழை எனும் ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருக்கிறாள். அதேநேரம் வசதிகளுடன் வாழும் மேலைத்தேசமான அமெரிக்க நாட்டின் பல பகுதிகளை இதுவரை கண்டிராத சூறாவளியினால் சிதைத்துக் கொண்டிருக்கிறாள். ஆம், இயற்கையன்னை மனிதன் தன் சுயலாபத்திற்காக இயற்கையைச் சீரழிப்பது கண்டு சீற்றம் கொண்டிருப்பது போல உலகின் பல பகுதிகளிலும் இயர்கையன்னையின் ஆவேசக்கோலம் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. உலகில் மனிதராகப் பிறந்த எம் அனைவருக்கும் எமது இறுதி முடிவு எதுவெனத் தெரிகிறது. இது ஓர் ஓட்டப் போட்டியே! அதன் இறுதிக் கயிற்றை யார் முதலில் தொடுகிறார்கள் என்பதுதான் யாருக்கும் தெரியாத மர்மமாக அமைந்துள்ளது. அது யாருக்கும் தெரியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மனிதர்களில் பெரும்பான்மையோர் இன்றும் மனிதத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    “அரிது, அரிது மானிடராகப் பிறப்பது அரிது ” என்றாள் தமிழ் மூதாட்டி. இத்தகைய அரிய பிறப்பெடுத்த நாமே , மற்றைய அரிய பிறப்புக்கைளை மதம், பணம், பொருள், காமம், காணி எனும் பல பேராசைகளின் காரணமாகச் சர்வசாதாரணமாக அழித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. பிறப்பு என்பது யாரையும் கேட்டு நடப்பதல்ல. ஆணும்,பெண்ணும் அனுபவிக்கும் இல்லற சுகத்தின் பலனாக அவர்களுக்கு அளிக்கப்படும் அன்புப்பரிசு என்பது அதற்கான ஒரு தூய விளக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய நாகரிக உலகத்திலே இல்லற வாழ்க்கை என்பதன் அடையாளமே மாறிப்போய்விட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக மேலைத்தேசங்களில் வாழ்வோர் எப்படியும் வாழலாம் எனும் ஒரு கருத்துக்குள் தம்மைப்புதைத்து வாழ்வது போலத் தென்படுகிறது. ஆனால் அதே மேலைத்தேசங்களில் தமது பழைய கலாசார, சமயக் கோட்பாடுகளை வாழ்வின் நெறிமுறைகளாக வகுத்து வாழ்வோர் இல்லையென்று கூறி விட முடியாது. வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தம்நாடுகளில் குடியேறி அங்கு அவர்களது கலாசாரங்களைப் பரவவிட்டு எங்கே தமது கலாசாரக் கோட்பாடுகளை அழித்து விடுவார்களோ எனும் அச்சம் பல மேலைத்தேச நாடுகளின் மக்கள் மனங்களில் ஊசலாடுவதின் காரணமே இங்கிலாந்தின்”ப்ரெக்ஸிட்” தேர்தல் முடிவு.

    அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப் என்பதுவே இன்றைய யதார்த்தமாகத் தென்படுகிறது. ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் பின்னால் அத்தகைய ஒரு நிலை உலகில் வந்துவிடக்கூடாது எனும் காரணத்தினால் மேலைத்தேசங்கள் பலவும் சுதந்திர நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்பது உண்மையே. அடுக்கடுக்காய் வந்த அரசாங்கங்கள் நிறவெறி, மதவெறி, இனவெறி என்பன தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக பல சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தன. அடிப்படையில் இவையனைத்தும் அந்தந்த நாடுகளில் குடியேறி வாழும் வேற்று நாட்டினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவைகளின் அதியுச்ச நிலையாக அந்த நாட்டின் மக்கள் தமது மனத்தில் நிலவும் கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. காலப்போக்கில் வேற்று நாட்டினரின் குடியேற்றம் கட்டுமீறிச் சென்றதாலும், மேலைத்தேச நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதாலும் ஒரு விகாரநிலை உருவெடுத்தது. இந்நிலையால் பொதுவாக மிகவும் மிதமான கொள்கைகளைக் கொண்ட பல மேலைத்தேச மக்கள் மனங்களில் கடுமையான வேற்றினத்தவருக்கெதிரான கொள்கைகள் வலுப்பெற்றன. அதன் பிரதிபலிப்பே இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்தின் “பிரெக்ஸிட்” எனும் சிக்கலும் என்பதே உண்மை.

    இந்தப் பின்னணியில்தான் இப்போது இங்கிலாந்தில் ஒரு புதிய கடுமைப் போக்கைக் கொண்ட ஒரு தலைமை கன்சர்வேடிவ் கட்சிக்குள் உருவாகிறதோ எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவியுமான தெரேசா மே அவர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் குறைந்ததாகவே காணப்படுக்கிறது. அவரைத் தொடர்ந்து யார் கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்தப் போக்கிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. இங்கேதான் “ஜேக்கப் ரீஸ் மொஹ் ( Jacob Rees-Mogg) என்பவர் பிரசன்னமாகிறார். ஆக்ஸ்வேர்ட் பல்கலைகழகத்தில் பட்டாதாரியான இவர் இங்கிலாந்தின் பொருளாதார நிறுவனங்களில் பணிபுரிந்தவராவார். 1997ஆம் ஆண்டு தொடங்கி தேர்தல்களில் முயன்று 2010ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகியவர். தீவிரமான கத்தோலிக்கரான இவர் மதக்கோட்பாடுகளுக்கு முதன்மை அளிப்பவர். ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதித்துவத்துக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர். இன்றைய இங்கிலாந்து மக்களின் அரசியல் உணர்வு இத்தகைய கடுமையான கொள்கைகளை உடைய தலைவர்கள்பால் திரும்புமா ? எனும் கேள்வி இங்கிலாந்து அரசியல் அவதானிகளிடமும் எழுகிறது.

    இந்தச் சூழலில் தான் இவர் சமீபத்தில் தான் கருக்கலைப்பு மற்றும் ஓரினத் திருமணங்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் இவையிரண்டும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இங்கிலாந்தின் சட்டநிலைப்பாடுகள் இவையிரண்டையும் ஆதரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பழமைவாய்ந்த கொள்கைகளையும், கிறீஸ்துவ மதக் கோட்பாடுகளையும் முக்கியமாகக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டு அம்சங்களிலும் அவருக்கு எதிரான நிலையையே பெரும்பான்மையான கன்சர்வேடிவ் பாரளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டிருக்கிறார்கள். திடீரென இவர் இத்தகைய தனது தீவிரக் கொள்கைகளை வெளியிட்டிருப்பது சந்தேகங்களுடன் கூடிய சர்ச்சையை அரசியல் வட்டாரங்களில் கிளப்பி விட்டிருக்கின்றன. இவர் தனது கொள்கைகளைச் சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாக வெளியிட்டிருந்தார். இன்றைய மேலைத்தேச அரசியல் சூழலில் ட்ரம்ப் உட்பட பல தீவிர வலதுசாரப் போக்குடைய தலைவர்கள் தமது பிரசாரங்களுக்கு வழமையான ஊடங்களான பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றை விடுத்துச் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ட்ரம்ப் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர்ச் செல்வாக்குப் போல இவர் தனக்கும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் செயற்பட்டு, கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு வலைவீசுகிறாரா? என்பதுவே தற்போதைய சர்ச்சை ஆகும்.

    அதுமட்டுமல்ல… பொதுவாகக் கருக்கலைப்புக்கு எதிரானவன் என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை இவரோ கற்பழிப்பு மற்றும் முறைகேடான உறவுகளின் மூலம் தோன்றிய கரு என எதுவாக இருப்பினும் அனைத்தையும் கலைப்பதற்கு எதிரானவன் என்று கூறியிருப்பதுதான் தன்னை ட்ரம்ப் வகையிலான ஒரு தீவிர வலதுசாரத் தலைவன் என்று முன்னிலைப்படுத்த முனையும் செயலா? என்பதுவே கேள்வியாகிறது.

    இதன் எதிரொலிகள் அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல பல பெண்களின் பதுகாப்புக்கான அமைப்புக்களையும் மிகவும் ஆவேசத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.  பல வானொலி கருத்தாடு களங்களில் பலமாக இவர் பற்றிய விவாதங்கள் கடந்த சில தினங்களாக நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன.

    ஒருவேளை இவைகள்தாம் இயற்கையன்னையின் சீற்றத்துக்குக் காரணமோ?

    என்னதான் நடக்கும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…

    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.

    *********************************************************************************************************************

    ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…

    *********************************************************************************************************************

    5

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மாநிலமெங்கும் வாசகர் வட்டங்கள் தொடங்கப்படுகின்றன.

    1_Small

    இதன் ஒரு பகுதியாக ஈரோடு, பூந்துறை ரோடு 46 புதூர் கேஏஎஸ் நகர் பகுதியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா 03.09.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இவ்வாசகர் வட்டத்தின் தலைவர் திரு கே.கே.ஏ. ஹாஜி சையது அகமது அலி அவர்கள் தலைமையேற்றார். இவர் கே.ஏ.எஸ் நகர் என்ற புதிய நகரையே உருவாக்கிய 82 வயதுப் பெரியவராவார். இவர் ‘ நகரத்தந்தை ’ என்றே இந்நகர் மக்களால் அழைக்கப்படுகிறார். இவர் இப்பகுதியில் இவரது சொந்தப் பொறுப்பில் ஒரு தனியார் நூலகத்தைத் தொடங்கி அதில் ஏராளமான நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கி மக்கள் பயன்பாட்டிற்காக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2_Small

    மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு த. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாசகர் வட்டத்தைத் தொடக்கிவைத்து உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். தமிழகத்தில் எங்கெல்லாம் தொடர்பும் வாய்ப்பும் உள்ளதோ அங்கெல்லாம் இதுபோன்ற வாசகர் வட்டங்கள் தொடங்க பேரவை முழுமூச்சாகச் செயல்பட்டு வருவதாக தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார் பேரவைத் தலைவர்.

    3_Small

    முன்னதாக வாசகர் வட்டச் செயலாளர் அரிமா எஸ். கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திரு என். தமிழ்செல்வன் நன்றி கூறினார். காசிபாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் திரு கே. துரைராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

    4_Small

    இப்பகுதியில் வசிக்கும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஈரோடு நகரின் மிகமுக்கியப் பிரமுகர்கள் பலரும் பார்வையாளர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றது இக்கூட்டத்திற்குச் சிறப்புச் சேர்த்த அம்சமாகும்.

    படக்குறிப்பு :

    1. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் வாசகர் வட்டத்தைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றுதல்…
    1. திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள்…
    1. குடும்பங்களுடன் பங்கேற்றோர்…
    1. ஆர்வமிக்க வாசகர் வட்டத் தலைவர் திரு கே.கே.ஏ ஹாஜி சையது அகமது அலி அவர்களுக்கு செயலாளர் திரு எஸ். கார்த்திகேயன் சால்வை அணிவித்தல்…
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    விவேகானந்தரின் பூர்வாஸ்ரமப் பெயர் ‘’நரேன் என்னும் நரேந்திரர்’’…..பரமஹம்ஸரின் பூர்வாஸ்ரமப் பெயர் ‘’கதாதரர்’’(கண்ணன்)….கேசவ் உன் ஓவியத்தில் பரமஹம்ஸம் தனதம்ஸமான கண்ணனைக் கட்டித் தழுவி ஞானம் பெறுகிறது….

    170907 - Paramahamsa- 24x32 cms -watercolor-lr

    நெற்றியில் தொட்டு நரேனுக்குள் ஞானத்தை
    பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென்
    நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர்
    தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்….!

    Share
  • சித்ரா -2 (காதலின் புதியதொரு பரிமாணம்)

    Chitra-pic

     மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                                  *****************

    தொடர்ச்சி: காட்சி-2

     அர்ஜுனன்: நான் ஏரிக்கரையில் கண்டது கனவா அல்லது நிஜமா? அந்தப் புல்தரையிலமர்ந்து நான் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கானகத்தின் அடர்ந்த இருளிலிருந்து மெல்ல ஒரு அழகிய பெண்ணுருவம் வெளிப்பட்டது; வந்து நீர்க்கரையில் வெண்ணிறக்கல்லின் மீது நின்றது. அவளுடைய வெண்மையான பாதங்களின் கீழ் இருந்த பூமியின் இதயம் ஆனந்தத்தால் விம்முவது போலிருந்தது.

              கீழ்த்திசையில் காணும் மலைச்சிகரங்களின் பனி உருகி விடியலின் தங்கநிற மூடுபனித்திரையாகி வழிவதுபோல அவளுடைய உடலை மறைத்த துகில்கள் கரைந்தோடிடக் கண்டேன். கண்ணாடி போல ஒளிர்ந்த ஏரியின் நீரினை நோக்கிக் குனிந்து தனது முகத்தின் பிரதிபலிப்பை அவள் பார்த்தாள். ஆச்சரியத்தில் பிரமித்து அசையாது நின்றாள்; பின் புன்னகையோடு, அலட்சியமாகத் தன் கூந்தலைத் தளர்த்தி தன் காலடியில் பூமியில் தழைய விட்டாள். தனது ஆடையைத் தளர்த்தி, குறைகளின்றிப் படைக்கப்பட்ட தனது மார்பகங்களையும் கரங்களையும் பார்த்துக்கொண்டாள்; முறையாகத் தழுவியபடி சிலிர்த்தாள். தலையைக் குனிந்து பார்த்தபோதில் பூவிரிந்தது போன்ற இளமையின் இனிய வடிவையும் தோலின் இளஞ்சிவப்பு வண்ணத்தையும் கண்டாள். ஆச்சரியமான மகிழ்வில் அவள் ஜொலித்தாள். காலையில் கண்களை விரிக்கும் அழகிய வெண்தாமரைமலர் கழுத்தை வளைத்துத் தனது நிழலை நீரில் கண்டால், நாள்முழுதும் அதனையே நோக்கிக் கொண்டிருப்பாளா என்ன? அவளுடைய இதழ்களிலிருந்து அந்தப்புன்னகை மறைந்தபின்பு மெல்லிய ஒரு சோகம் அவள் கண்களில் குடியேறியது. தனது கூந்தலை முடிந்து கொண்டவள், ஆடையைத் தனது தோள்களின் மீது சரிசெய்து கொண்டாள். மெல்லியதொரு பெருமூச்சுடன் அழகான ஒரு மாலைப்பொழுது இரவினுள் கரைவது போல் சென்று மறைந்தாள். மிகவும் உயர்வானதொரு எழுச்சியின் நிறைவு ஒரு மின்னலைப்போல் தோன்றிப்பின் திடீரென மறைவதுபோல இருந்தது…. ஆ! அது யார் கதவைத் தள்ளித் திறக்கமுயல்வது?

              [சித்ரா ஒரு பெண்ணின் ஆடைகளில் உள்ளே வருகிறாள்]

              ஆ! அவள்தான். என் நெஞ்சே! அமைதியாக இரு!……… மாதரசியே, என்னைக்கண்டு அஞ்ச வேண்டாம்! நான் ஒரு க்ஷத்திரியன்.

     சித்ரா: மதிப்பிற்குரிய ஐயா, தாங்கள் எனது விருந்தினர். நான் இந்தக் கோவிலில் வாழ்கிறேன்.  தங்களுக்கு எந்தவிதத்தில் விருந்தோம்புவதென அறிய இயலவில்லையே!

    அர்ஜுனன்: அழகிய மாதே! உன்னைக்காணும் பெரும்பேறே உயர்வான விருந்தோம்பலுக்குச் சமமானதாகும். நீ தவறாக எடுத்துக் கொள்ளாவிடில், உன்னை ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன்.

     சித்ரா: அதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்.

     அர்ஜுனன்: உனது பேரழகினை மனிதர்கள் காணவியலாமல் இந்தத் தனிமைக் கோவிலில் அடைபட்டுக் கிடக்கச் செய்துள்ள கொடூரமான சபதங்கள் எதுவாகும் என நான் அறிந்து கொள்ளலாமா?

     சித்ரா: எனது உள்ளத்தில் ஒரு ரகசியமான விருப்பம் உள்ளது. அது நிறைவேறுவதற்காக நான் சிவபெருமானுக்கு தினம் பூசைகள் செய்து வருகிறேன்.

     அர்ஜுனன்: ஓ! உலகமே உன்னை விரும்புபவளாகிய நீயும் விரும்பும் பொருள் ஒன்று உள்ளதோ? சூரியன் தனது நெருப்புக் கால்களைப் பதிக்கும்  கிழக்கெல்லையிலுள்ள மலையிலிருந்து அச்சூரியன் மறையும் பூமிவரை நான் பயணப்பட்டிருக்கிறேன். உலகிலுள்ள அத்தனை மதிப்புள்ள, அழகான, பெருமைவாய்ந்த அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நீ தேடுவது எதனை அல்லது யாரை எனக் கூறினாயாயின், அந்த அறிவு அனைத்தையும் உனக்குத் தருவேன். நீ விரும்பும் பொருளை அடையலாம்.

     சித்ரா: நான் தேடுபவரை அனைவரும் அறிவார்கள்.

    அர்ஜுனன்: கட்டாயமாக! உனது இதயத்தைக் கவர்ந்து கொண்டுள்ள அந்தக் கடவுள்களுக்கும் விருப்பமானவன் யார்?

    சித்ரா: மிகவும் உயர்வான அரசகுலத்தைச் சார்ந்த அவர், வீரர்களிலேயே மிகவும் சிறந்தவரும் ஆவார்.

    அர்ஜுனன்: மாதே! உனது உயர்வான அழகை, பொய்யான கீர்த்தியின் சன்னிதியில் படையலிடாதே! சூரியன் உதிக்கும் முன்பெழும் காலைப்பனிபோல் தவறான புகழாரங்கள் ஒருவரிடமிருந்து ஒருவரைச் சென்றடைகின்றன. அரசவம்சங்களிலேயே மிகவும் உயர்வான வம்சத்தைச் சேர்ந்த அந்த மாபெரும் வீரன் யாரென எனக்குக் கூறுவாய்! 

    சித்ரா: தவசியே! மற்றவர்களின் புகழைக் கண்டு நீ பொறாமைப்படுகிறாய்!  உலகிலேயே குரு அரசவம்சமானது மிகவும் புகழ்வாய்ந்ததென்று உனக்குத் தெரியாததா?

    அர்ஜுனன்: குரு வம்சமா?!

    சித்ரா: அத்துணை புகழ்வாய்ந்த அரச வம்சத்தின் பெயரை நீ அறியாயோ!

    அர்ஜுனன்: உனது வாய்மொழியாக நான் அதைக்கேட்க விழைகிறேன்.

    சித்ரா: உலகையே வென்ற ஆற்றல் படைத்த அர்ஜுனனே அவர். உலகின் அத்தனை மனிதர்களின் வாயிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெயரை நான் எனது கன்னியுள்ளத்தில் பத்திரமாக ஒளித்து வைத்துள்ளேன். தவசியே! நீர் ஏன் சிறிது கலக்கத்துடன் காணப்படுகிறீர்? அப்பெயர் என்ன வஞ்சனையில் ஒளிருவது தானா? உண்மையைக் கூறுங்கள், அப்படியாயின் எனது உள்ளச்சிறையை உடைத்து அந்தப் பொய்யான ரத்தினத்தை மண்ணில் எறிய நான் தயங்க மாட்டேன்.

    அர்ஜுனன்: பெண்ணே! அவனுடைய வீரமும் தீரமும் பொய்யாகவோ, உண்மையாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்; தயவுசெய்து உனது உள்ளத்திலிருந்து அவனை வெளியேற்றி விடாதே! ஏனெனில் அவன் இப்போது உனதடியில் மண்டியிட்டுக் கிடக்கிறான்.

    சித்ரா: தாங்களா? அர்ஜுனரா?

    அர்ஜுனன்: ஆம். நானே அவன், உன்வீட்டு வாயிலில் காதலில் வாடி நிற்பவன் நானே!

    சித்ரா: அப்போது, அர்ஜுனன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளார் என்பது உண்மையல்லவா?

    அர்ஜுனன்: இரவின் தெளிவற்ற தன்மையை நிலவொளி கரைத்துவிடுவதனைப்போல் நீ எனது சபதத்தைக் குலைத்துவிட்டாய்!

    சித்ரா: ஓ! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தங்கள் சபதம் பொய்க்குமாறு செய்ய என்னிடம் எதனைக் கண்டீர்கள்? தங்களது நேர்மையையே விலையாகக் கொடுக்கத் தயங்காத நீங்கள் இந்தக் கரிய கண்களில், பால்போலும் கரங்களில், யாரைக் கண்டீர்கள்? எனது உண்மை வடிவையல்ல என நானறிவேன். இது ஆண் பெண்ணுக்குச் செலுத்தும் உயர்வான மதிப்பான பொருளல்ல; நிச்சயமாக இது காதலும் அன்று. இந்தப் பலஹீனமான வேடம், இந்த உடல், இவையனைத்தும் ஒருவரை, உள்ளிருக்கும் அழிவற்ற ஆன்மாவைக் காண முடியாதபடிக் குருடாக்கிவிடுகின்றன. ஆம்! அர்ஜுனா! உமது புகழ்வாய்ந்த வீரம்செறிந்த ஆண்மை பொய்மையானது என இப்போது நானறிகிறேன்.

     அர்ஜுனன்: ஆ! புகழும், வீரத்தால் விளையும் பெருமிதமும் எத்தனை நிலையற்றதென நான் இப்போதுதான் உணர்கிறேன். எல்லாமே ஒரு கனவு போலுள்ளது. நீ ஒருத்தியே முழுமையானவள்; பூரணமானவள்; நீயே உலகின் முதன்மையான செல்வம்; வறுமையின் முடிவு; முயற்சிகளின் நோக்கு, நீ ஒருத்தியேதான்! மற்று உள்ள அனைத்தையும் காலம் செல்லச்செல்ல மட்டுமே உணர இயலும். உன்னை ஒருமுறை கண்ணால் காண்பது மட்டுமே முழுமையின் நிறைவை இப்போதும் எப்போதும் அளிக்கும்.

     சித்ரா: அந்தோ! அர்ஜுனா! அது நானல்ல, நானல்ல! அது கடவுளின் வஞ்சனை! சென்றுவிடு, எனது வீராதிவீரனே! பொய்மையை வேண்டிக் கேட்காதே! உனது பரந்த இதயத்தை ஒரு மாயத்தோற்றத்திற்குக் காணிக்கையாக்காதே! சென்றுவிடு!

                                                      [தொடரும்]

    Share