கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’ஒன்றே சதமென்று ஒருஓரம் உட்கார்ந்து
மென்று முழுங்கிட மாம்பழம்(கண்ணனின் கன்னம்-மாம்பழ வாயன்….) -கன்றெபோல்-,
நித்தம் இதுபழக, நம்பீச மைத்துனனால்
சித்தம்மாப் பிள்ளை சிவம்’’….!
’’அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!