170905 -Sandipani ashram -Guru dakshina -lr

”புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
கஜேந்திரர் கத்த கருட -விஜயேந்த்ரர்,(விஜேந்திரர்)
அந்தநாள் ஆதிமூலம், இந்தநாள் கீதைமூலம்,
வந்தனன் நந்தன் வளர்ப்பு’’….

”காட்சியிதில், ஆனை கஜேந்திரரை காத்தருளும்
மோட்சமது உண்டாம் முதலைக்கும், -ஆட்சி
அரியா சனத்திலே அம்முதலை சாட்சி:
பரிவா சனமவர் பார்’’….!

”அடிசறுக்கி ஆனை துடிதுடித்த போது
நொடிக்கணக்கில் வந்தகால நேமி: -வடிவெடுத்து
ஆவென வாய்பிளந்த பாவத்தின் பற்களுற்றேன்
ஆவன செய்யவா தேவு”….!
”துரியோ தனனும் விருகோ தரனும்(பீமன்)
சரியில் தவறில் சமமே, -அரியின்
அரசாட்சி தன்னிலே ஆராய்ச்சி வேண்டாம்,
ஒருசாட்சி யாய்அறி(ரி) வோ(ஓ)ம்”….

”தும்பிக்கை மாலையாய் தோள்தழுவ ஆனைக்கு
நம்பிக்கை தந்தார் நவனீத -நம்பீசர்:(மயிலையில் இப்படி ஒரு வெண்ணைக் கடையுண்டு….மலரும் நினைவுக்கு மரியாதை)-
ஆதிமூல மேயென்ற ஆனை கஜேந்திர
வாதியாச்சு மோட்ச விலங்கு’’….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.