கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
விவேகானந்தரின் பூர்வாஸ்ரமப் பெயர் ‘’நரேன் என்னும் நரேந்திரர்’’…..பரமஹம்ஸரின் பூர்வாஸ்ரமப் பெயர் ‘’கதாதரர்’’(கண்ணன்)….கேசவ் உன் ஓவியத்தில் பரமஹம்ஸம் தனதம்ஸமான கண்ணனைக் கட்டித் தழுவி ஞானம் பெறுகிறது….
நெற்றியில் தொட்டு நரேனுக்குள் ஞானத்தை
பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென்
நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர்
தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்….!

