கைவல்ய நவநீதம்….
கிரேசி மோகன்
கடவுள் காப்புக்கு பதிலாக எழுத்தறிவித்த என் நண்பனுக்கு நன்றி….
———————————————————————————–
“கைவல் யநவநீதக் கட்டுரை யாப்பெனது
கைவரப் பெற்றதற்கு காரணம்கேள், -தைவர
தோன்றும் வழிபோலத் தோன்றிய நண்பனாம்,
சான்றோன் ரவிசகவா சம்”….கிரேசி மோகன்….
கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் (1)….நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….
குரு வந்தனம்….அவரது குரு ஸ்ரீவேங்கடேச முகுந்தரை தியானித்து….
——————————————————————————————
‘’ஆகாச சாட்சியாய், ஐம்புலன்கள் வாயிலாய்
தேகான்ம பாவமாய், தத்துவமாய்,-ஏகாந்த
நன்நிலமாய் நெஞ்சத்தில் நின்று மனமேழ்வாழ்
செந்நிலவு சூர்யா சரண்’’….(1)
கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 2….
———————————————————
“ஆழிஆ னந்தத்தில் ஆதவனாய்த் தோன்றிடும்,
கோழிகூ வாதந்த கோளுணர்வே , -வாழிய;
விஷ்ணு பிரம்மா விரிசடை யோனாகும்
உஷ்ணமே என்னுள் உதி”….(2)
கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 3….
———————————————-
“தேசிகன் பாதம் தொழுது தெளிவடைந்தேன்
பாசி உலகம் படர்வதால், -வாசிநான்,
பொய்யென்(று) அறிந்தேன் ,புகுந்தீர் மனச்சுவரில்
அய்யநீர் ஆகாச அன்பு”….(3)
கைவல்ய நவநீதம்”….ஸ்லோகம் 4….குரு வந்தனம்...
———————————————————–
“புத்திமன தேகம் புலனைந்தும் போக்கத்த
சக்தியெனச் சொன்ன சதாசிவவி, -ரக்தியே,
மூடுபனி ஆதித்தன் முன்னோடல் போல்வந்து
வீடுதந்தீர் வாடகையாய் வாழ்த்து”….(4)
கைவல்ய நவநீதம்….சுலோகம் 5….
———————————————-
நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….
“அடிமுடி மத்தியில்லா ஆகாச ஆசான்
அடிபணிந்து சொல்கிறேன், ஆன்ம,-மடிபுகுந்த
வித்தகம், பேத விடுதலையை, வேதாந்த
புத்தகப் போதில்லாத பேர்க்கு”….கிரேசி மோகன்….
கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 6….
———————————————
பண்டைநாள் வேதாந்த பாத்திரங் கள்தளும்பா(து)
உண்டபால் தன்னை உருக்கியபின், -சுண்டிடக்
காய்ச்சி அளிக்கின்றேன் ,கைவல்ய வெண்ணையிதை
ஆய்ச்சியர்க்கு கண்ணன் அளிப்பு”….(6)
கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 7….
——————————————-
‘’சுகந்த சுதந்திர ஸ்ரீவேங்க டேச
முகுந்தகுரு என்னுள் திகழ்ந்து -உகந்ததிதை,
பாகமிரண் டாக்கி, பரம்முதலில் பின்னெழும்சந்,
தேகம் இரண்டில், தெளிவு’’….(7)
—————————————————————————————————————————
பாகம்-ஒன்று
—————
The Exposition Of The Truth
————————————–
மெய்யுணர்வு
—————
ஸ்லோகம்-8
—————-
‘’விடுதலை வேட்கை, விசார விவேகம்
விடுதளை விட்டேத்தி வாழ்க்கை,-படுதலை
வைத்தாறு பண்புகளில், வேதாந் திகள்நான்கை
தைத்தார்கள் மெய்யுணர்வ தற்கு’’….கிரேசி மோகன்….(8)….
