மீ.விசுவநாதன்

 ஸ்ரீ சிவாபிஷேகம்

 

 

 

 

 

 

 

 

 

 

அஞ்செழுத்து மந்திரத்தைச் சொல்கிறேன் – துளி

    அச்சமின்றி அன்போடு வாழ்கிறேன் !

பிஞ்சுமுகச் சந்திரன்போல் உள்ளவன் – என்

    பிரியமுள்ள சந்திரசே கரானவன் !

கஞ்சமின்றிக் கருணைதன்னைக் காட்டுவான் – மனக்

    கற்பூரத் தீவண்ணச் சோதியன் !

நெஞ்சமெனும் வேள்வித்தீ மத்தியில் – தான்

    நிமிர்ந்துநடை போட்டபடித் தோன்றுவான் !

 

தீர்த்தபதி என்றவனைப் போற்றிட – என்

    திருநாவில் தானமர்ந்து பாடுவான் !

கூர்த்தமதி கொண்டஞான சித்தனாய் – என்

    குருவாகக் கிட்டவந்து கூடுவான் !

வார்த்தைக்குள் சிக்காத பேரொளி – சிறு

    மனச்சிறைக்குள் சிக்குகின்ற சிவனொளி !

சேர்த்தகைக்குள் சிவலிங்க மூர்த்தியாய் – என்

    சிந்தையிலே நின்றுதவம் செய்கிறான் !

          (இன்று  03.09.2017பிரதோஷம்) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.