ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

0

***************************************************************************************

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

***************************************************************************************

1

பர்கூர், கடம்பூர் ஆகிய சத்தியமங்கலம் பகுதியிலுள்ள மலைகளில் வாழும் சமார் 40 பழங்குடியின மாணவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு அவர்களின் ஆசிரியர்களால் அழைத்து வரப்பட்டனர். மிகவும் பின்தங்கிய மலைப் பிரதேசங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கிற பழங்குடியின மாணவர்களாகிய இவர்கள் ரயில்களையோ, நகரிலுள்ள தரமான பேருந்துகளையோ கூடப் பார்த்ததில்லை. இவர்கள் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள கொங்காடை, கடம்பூர் மலைப் பகுதியுலுள்ள குன்றி, விளாங்கோம்பை, அக்னிபாவி, ஜி.என். தொட்டி, நாயகன்தொட்டி, அணில்நத்தம் பண்ணையத்தூர் ஆகிய எட்டு கிராமங்களில் இயங்கிவரும் அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களாவர். இவர்களின் ஆசிரியர்கள் சிரத்தையெடுத்து ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு இவர்களை அழைத்து வந்ததோடு புத்தகத் திருவிழா அரங்கிற்குள் முழுமையாகச் சுற்றியும் காட்டினர். இம்மாணவர்களுக்கு மலைப்பகுதிகளில் செயல்பட்டுவரும்       ‘ சுடர் ’ தொண்டு நிறுவனம் உதவி வருகிறது.

3

இம்மாணவர்கள் விழாக்கோலம் பூண்டிருந்த புத்தகச் சந்தையைப் பார்த்தும் குவிந்து கிடந்த லட்சக்கணக்கான வண்ண வண்ணப் புத்தகங்களைப் பார்த்தும் குதூகலமடைந்தனர்.

புத்தக அரங்கைவிட்டு வெளியே வந்த இம்மாணவர்களிடம் “ யார் யார் புத்தகங்கள் வாங்கினீர்கள் ? ” என்று பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் கேட்டார். அனைவரும் வெறுங்ககையோடு வெளியே வந்ததோடு கையை விரித்து “ யாரும் எதுவும் வாங்கவில்லை ” என்று சைகை காட்டினர்.

அத்தனை மாணவர்களுக்கும் புத்தகங்கள் பேரவையின் சார்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டதோடு அவர்களுக்கு மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டது.

2

தீபாவளி சமயங்களில் கையில் பட்டாசு வாங்கிச்செல்லும் குழந்தைகளினின் பூரிப்பை இப்பழங்குடி மாணவர்களின் முகங்களில் பார்க்க முடிந்தது.

ஆம்… ஈரோடு புத்தகத் திருவிழா தொலைதூரத்திலுள்ள மலைப்பிரதேசக் கிராமங்களையும் எட்டியுள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *