Blog

  • பாதப் புகலொன்றே போதுமப்பா

    சரஸ்வதிராசேந்திரன்

    OLYMPUS DIGITAL CAMERA

     

     

     

     

     

     

     

     

    பாதப் புகலொன்றே போதுமப்பா

    முதல்வனே மூஷிக வாகனனே

    முதல் வணக்கம் உனக்கே ஐயனே

    பரமன் கொழுந்தே உமை பாலகனே

    பேழை வயிறோனே மோதகப்பிரியனே

     

    அழகு முருகனுக்குதவிய ஆசை

    அண்ணனே ஆனை முகத்தோனே

    அப்பமோடு அவல்பொரி படைப்பேன்

    அருள் தருவாய் ஆதி சக்தி மகனே

     

    சங்கரன் மகனே சஞ்சலம் தீர்ப்பாய்

    சங்கரி மைந்தா உன் தாள்பணிந்தேன்

    உத்தமன்உனையேஉறுதியாய்நம்புகிறேன்

    பித்தன்எனைஆண்டருள்வாய் பித்தனின் மகனே

     

    தொல்வினைகள் தொல்லை செய்யாமலே

    தடுத்தென்னை தாங்கி நிற்பாய் ஐயனே

    பேரெதுவும் வேண்டாம் புகழ்வேண்டாம்உன்

    பாதப்  புகலொன்றே போதுமப்பா  தூயனே

     

     

    Share
  • நிழல் சா்ப்பம்!

     

    இல.பிரகாசம்

     

    ஒரு ஒலி என்னைத் தொடா்ந்து வருகிறது

    “வழ் வழ்” என்று அது

    என்னை ஏதோ ஒன்றிலிருந்து

    விலகியிருக்க மீண்டும் துரத்த ஆரம்பித்திருக்கிறது

     

    கால்கள் வேகமெடுக்க முயலுகின்றன

    புரியமால் தடுமாறுகின்றன!

    மீண்டும் ”வழ் வழ்” வெறிபிடித்த ஒரு

    சப்தம் புடைத்துக் கொண்டு

    எங்கிருந்து வருகிறது?

     

    மீண்டும் “வழ் வழ்” இரத்தத்தை

    குடிக்கிற வெறி பீறிட்டு ஒழுகுகிறது!

    வெறி பிடித்த சா்ப்பத்தைப் போல ஊா்ந்து ஊா்ந்து

    நிழல் போல வருவதை

    பின் நோக்கிப் பார்த்தேன்

     

    சந்தேகம் இல்லை நிச்சயம் சந்தேகம் இல்லை

    அது தான் நிச்சயம் அதுவே தான்

    ”நான்””நான்”“நான்”

    நிழல் சா்ப்பம் ”நான்”

     

    Share
  • கண்ணால் காண்பதும்

     

     ரா.பார்த்தசாரதி

     

    கண்ணால்   காண்பதும்,  மனத்தாலே நினைப்பதும்,

    கண்ணால்  உறவாடி,  உள்ளத்தால்  தவிப்பதும்

    காதலன், தன்  காதலை  காதலியிடம் உணர்த்துவதும்

    காதலர்கள்  இரு பார்வைகளால்  சொந்தமாவதும் !

     

    கண்ணிற்கு இன்றியமையாத  ஒன்று  இரக்கமோ

    கண்ணின் இரக்கமே,  பாசமாய்   மாறுமோ

    காதலனிடம், இரு விழிகள்  சிறகடித்து  பேசுமோ

    நினைக்கத்  தெரிந்த மனதிற்கு மறுக்கவும் தெரியுமோ !

     

    கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

    நல்லதையும், கெட்டதையும் வெளிப்படுத்தும் கண்களே

    மனம்  நினைப்பதை, கண்கள் என்றும்  மறுக்கும்

    கண்கள் சொல்வதை  மனம் நினைக்க மறுக்கும் !

     

    கண்கள் பார்க்காததை  மனம்  மறுக்குமா

    மனதினால்  தியானம்  செய்தால் ஞானம் கிடைக்குமா

    கண்களோடு கண்கள் கலந்தால் காதல் உண்டாகுமா

    நினைக்கத்  தெரிந்த  மனதிற்கு மறக்கத்  தெரியுமா !

     

    கண்களின் வார்த்தைகள் புரியாதா, காத்திருப்பதும் தெரியாதா

    இரு கண்கள்  சந்திப்பதால் என்றும்  காதல் மலராதா

    கண்ணின் அருகே, இமை இருந்தும் கண்கள் பார்ப்பதில்லை

    துணைவன் அருகில் இருந்தும், அவனது அருமை தெரிவதில்லை!

     

     

     

     

     

     

    Share
  • சித்ரா – 1

    (காதலின் புதியதொரு பரிமாணம்)

              மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

     முன்னுரை:

              இந்தச் சொற்களாலான நாடகம் தாகூரால் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

             ஒரு பிராயச்சித்தத்தின் காரணமாக அலைந்து திரிந்த அர்ஜுனன், மணிப்பூரை வந்தடைகிறான். அந்நாட்டு அரசனான சித்ரவாஹனனின் அழகான மகள் சித்ராங்கதாவைக் காண்கிறான். அவள் அழகால் கவரப்பட்டு அவளைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு அரசனிடம் கேட்கிறான். அர்ஜுனனை யாரெனக் கேட்கும் சித்ரவாஹனன் அவன் பாண்டவர்களில் ஒருவன் என அறிந்ததும் அவனிடம் தன் கதையைக் கூறுகிறான்.

                பிரபஞ்சனன் எனும் அவனுடைய மணிப்பூர் அரச வம்சத்து  மூதாதையானவன், குழந்தைகளின்றி வருந்தினான். அதற்காகக் கடுந்தவம் புரிந்தான். அதற்கு மகிழ்ந்து சிவபெருமான், அவனும் அவன் வம்சாவழியினரும் ஒவ்வொரு குழந்தையைப் பெறுவார்கள் என அருளினார். எல்லாருக்குமே ஆண்குழந்தைதான் பிறந்து வந்தது. சித்ரவாஹனனுக்கு மட்டும் அவன் வம்சத்தை விளங்கவைக்க ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் அவளை ஒரு மகனாகவே பாவித்து, தனது வாரிசாகக் கொண்டான். அரசன் கூறுவான்:

             ‘இவளுக்குப் பிறக்கும் ஒரு மகன் என் வம்சத்தை விளங்கவைப்பவனாக இருப்பான். அந்த மகனே நான் இந்தத் திருமணத்திற்காகக் கேட்கும் விலை! அர்ஜுனா! நீ இதனை ஒப்புக்கொண்டால் இவளை மணந்து கொள்ளலாம்.’

        அர்ஜுனன் இதற்கு ஒத்துக்கொண்டு சித்ராங்கதாவை மணந்து கொள்கிறான். மணிப்பூரில் மூன்று ஆண்டுகள் அவளுடன் வாழ்கிறான். அவளுக்கு ஒரு மகன் பிறந்ததும், அவளை அன்போடு அணைத்துக்கொண்டு, அவள், அவள் தந்தை இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, தனது பிரயாணங்களைத் தொடர்கிறான்.

          இவர்களுடைய மகனே வீரனாகிய பப்ருவாஹனன்.

                                      ————————-

     

    காட்சி 1:

             சித்ரா: ஐந்து கணைகளைக் கொண்ட கடவுள் தாங்கள் தானே? காதல் கடவுள்?

              மதனன்: படைத்தவனின் உள்ளத்தில் முதலில் பிறந்தவன் எவனோ அவனே நான். ஆண், பெண் இருவரின் வாழ்க்கையிலும் காதலால் விளையும் வேதனையையும் பேரானந்தத்தையும் நிரப்புபவனும் நானே!
    சித்ரா: அந்த வேதனையையும் ஆனந்தத்தையும் நான் நன்றாகவே உணர்ந்தவளாவேன். தாங்கள் யாரோ, கடவுளே?

        வசந்தன்: நான் இவரது நண்பன் வசந்தன், பருவங்களின் அரசன் நானாவேன். சாவும் முதுமையின் தளர்ச்சியும் உலகினை நசிப்பித்துவிடும். ஆகவே நான் அவற்றை விடாது தொடர்ந்து தாக்குபவன், என்றும் இளமை குன்றாதவன்.

       சித்ரா: வசந்தக் கடவுளே! உம்மை நான் வணங்குகிறேன்.

              மதனன்: மென்மையான புதியபெண்ணே! உனது கடினமான சபதம் என்னவோ? உனது புத்தம்புது இளமையை ஏன் நீ தவத்தாலும் உடலை வருத்துவதாலும் வீணடித்துக் கொள்கிறாய்? காதலின் வழிபாட்டிற்கு இந்தத் தியாகம் ஏற்றதல்ல. நீ யார்? உனது வேண்டுதல்தான் என்ன?

             சித்ரா: நான்தான் சித்ரா, மணிபுரியின் அரசகுடும்பத்து மகள். கடவுள்களுக்கே உரிய தயாள குணத்துடன் சிவபெருமான் எனது தந்தையின் வம்சத்திற்குத் தலைமுறை தலைமுறையாகத் தவறாமல் ஆண்வாரிசைத் தருவதாக வாக்குறுதியளித்தார். இருப்பினும், அந்த தெய்வவாக்கு என் விஷயத்தில் உயிர்ப்பின் பொறியை மாற்றும் சக்தியற்றுப் போனது. என்தாயின் கர்ப்பத்தில் நான் பெண்ணாகப் பிறந்தேன்.

                   மதனன்: அதனால்தான் உன் தந்தை உன்னைத் தன் மகன் போலவே கருதி வளர்த்துவருவதனை நானறிவேன். அவர் உனக்கு விற்பயிற்சியும் கொடுத்து, ஓர் அரசனின் கடமைகளையும் போதித்து வருகிறார் அல்லவா?
    சித்ரா: ஆம்; அதனால்தான் நானும் ஓர் ஆணைப்போல் உடைகளணிந்தும் அந்தப்புரத்தின் தனிமையில் வாழாமலும் உள்ளேன். ஆண்களின் உள்ளங்களைக் கவரும் பெண்மையின் நளினமான செயல்கள் எனக்குத் தெரியாது. எனது கரங்கள் வில்லை வளைக்க உறுதியானவை; ஆனால் கண்களின் அசைவுகளால் நிகழ்த்தும் காதல்போரில் எனக்குப் பரிச்சயமில்லை.

                 மதனன்: அவற்றைக் கற்கப் பாடம் தேவையில்லை மகளே! கண் தனது பணியை கற்பிக்கப்படாமலே சரியாகச் செய்தால், அந்தக் கண் எய்த அம்பு யாருடைய இதயத்தைத் தைக்கின்றதோ, அவன் அதனை நன்கு உணர்ந்து அறிவான்.

              சித்ரா: ஒருநாள் நான் வேட்டை மிருகங்களைத் தேடியலைந்து காட்டில் தன்னந்தனியாக  பூமா ஆற்றங்கரையில் உலவிக்கொண்டிருந்தேன். மாலைப்போதில், பின்னிப்பிணைந்த மரக்கிளைகளினூடாக வளைந்து செல்லும் ஒரு குறுகலான பாதையைக் கண்டேன். இலைகளினூடே சில்வண்டுகள் சப்தமெழுப்பிக் கொண்டிருந்தன. அப்போது திடீரென, என் பாதையின் குறுக்காக ஒரு மனிதன் காய்ந்த இலைச்சருகுகளின் மீது படுத்திருந்ததைக் கண்டேன். நானொரு இளவரசன் (இளவரசி) எனும் கர்வத்துடன் அவனை வழியைவிட்டு நகருமாறுகூற, அவன் அதனைக்  காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. ஆகவே எனது வில்லின் கூர்மையான முனையால் அவனை எரிச்சலுடன் குத்தித் துன்புறுத்தினேன். அவனும் உடனே சாம்பற்குவியலிலிருந்து திடீரென ஒரு நெருப்பின் நாக்கு பெரிய ஜ்வாலையாக வெளிப்பட்டதுபோலத் தனது நீண்ட உறுதியான கைகால்களுடன் துள்ளியெழுந்தான். எனது சிறுவன்போன்ற உருவத்தைக் கண்ணுற்றோ என்னவோ, அவனுடைய இதழ்க்கோடியில் ஓர் இகழ்ச்சியான புன்முறுவல் மின்னிற்று. அத்தருணத்தில்தான் நான் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன்; ஓர் ஆண்மகன் என்முன் நிற்பதையும் அறிந்தேன்.

              மதனன்: அப்படிப்பட்ட நல்லதொரு சரியான தருணத்தில்தான் நான் ஆணுக்கும் பெண்ணுக்கும் தாங்கள் ஒருவரையொருவர் உணரும் பாடத்தைக் கற்பிப்பேன். பின் என்ன ஆயிற்று?

             சித்ரா: உடலில் நடுக்கத்துடனும் ஆச்சரியத்துடனும், “தாங்கள் யார்?” எனக்கேட்டேன். “நான் அர்ஜுனன், பெருமைவாய்ந்த குரு வம்சத்தவன்,” என்றான். நான் அவருக்கு மரியாதை செய்யவும் மறந்துபோய் பயத்தில் சிலையாக உறைந்து நின்றேன்; இவர்தான் அர்ஜுனரா? எனது கனவுகளின் மகோன்னதமான லட்சிய புருஷரா? அவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மசரியம் கடைப்பிடிப்பேனெனச் சபதம் செய்திருந்ததை நீண்ட நாட்களுக்கு முன்பே நான் அறிந்திருந்தேன். அவரை என்னுடன் ஒருவரோடொருவரான வாட்போருக்கழைத்து ஆயுதப்பயிற்சியில் எனக்குள்ள திறமையை அவருக்குக் காட்ட வேண்டும் என எத்தனையோ நாட்களாகவே நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆ! முட்டாள் உள்ளமே! உனது அகந்தை நிறைந்த எண்ணம் இப்போது என்னவாயிற்று? எனது இளமையையும் அதன் கனவுகளையும் அவருடைய கால்தூசிக்கு சமர்ப்பணம் செய்யவா? மிகவும் உன்னதமான  கௌரவமாக அதனை நான் கருதுவேனே.

           என்னவிதமான எண்ணச்சுழல்களில் ஆழ்ந்திருந்தேனோ நான், திடீரென அவர் மரங்களினூடே சென்று மறைவதனைக் கண்டேன். ஓ முட்டாள் பெண்ணே! நீ அவருக்கு வந்தனம் செலுத்தவில்லை, ஒரு சொல் கூறவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை, அவர் உன்னிடமிருந்து அலட்சியமாக நடந்து சென்றபோது ஒரு பண்பற்ற பட்டிக்காட்டான் போல நின்றாயே!

              அடுத்தநாள் காலையில் நான் எனது ஆண்மகனின் உடைகளை ஒதுக்கி வைத்தேன். கரங்களில் வளையல்களையும், கால்களில் பாதசரங்களையும், இடையில் ஒட்டியாணமும் அணிந்தவள், ஒருகருஞ்சிவப்பு வண்ணப் பட்டாடையையும் உடுத்தேன். அந்தப் பழக்கமில்லாத ஆடை என் மறைக்கவியலாத அவமானத்தை எடுத்துக்காட்டி என்மீது பொருத்தமின்றித் தொங்கியது! ஆனால் நானோ எனது தேடலை நோக்கி விரைந்தேன். அர்ஜுனனைக் காட்டினுள்ளே சிவன்கோவிலில் கண்டேன்.

              மதனன்:  கதையின் முடிவுவரை எனக்கு விவரமாகக் கூறுவாய். நான் இதயங்களில் வசிக்கும் தெய்வம் ஆதலால் எனக்கு இந்த உணர்ச்சிவேகத்தின் சூட்சுமங்கள் நன்றாகவே புரியும்.

              சித்ரா: நான் என்ன சொன்னேன் என்றும், அதற்குக் கிடைத்த விடையும் எனக்கு நன்கு நினைவிலில்லை. எல்லாவற்றையும் கூறச் சொல்லிக் கேட்காதீர்கள். இடிவிழுந்தது போல என்மீது அவமானம் இறங்கியது; இருப்பினும் நான் சுக்குநூறாகச் சிதறவில்லை; ஆண்மகனைப்போல உறுதியாக அதனைச் சகித்துக் கொண்டேன். அவர் கூறிய கடைசி வார்த்தைகள், நான் வீடு திரும்பும்போது பழுக்கக் காய்ச்சிய கூரிய ஊசிகளைப்போல் எனது செவிகளைத் துளைத்தனவே! ‘நான் பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளேன். உனக்குக் கணவனாக இருக்க எனக்குத் தகுதி இல்லை.’ ஓ! ஆண்கள் செய்யும் சபதங்கள்! காதல்கடவுளே, எத்தனை ஞானிகளும் துறவிகளும் தங்களது ஆயுட்காலத் தவத்தின் பயனை ஒரு பெண்ணின் காலடியில் சமர்ப்பித்துள்ளனர் என்று உமக்குத் தெரியாதா?

              நான் எனது வில்லை இரண்டாக முறித்து, அம்புகளைத் தீயில் எரிய விட்டேன். வில்லின் நாணைத் திரும்பத் திரும்ப ஏற்றியதால் தழும்பேறிய எனது பலம் வாய்ந்த புஜங்களை வெறுத்தேன். ஓ காதலே, காதல்கடவுளே! எனது ஆண்மைநிரம்பிய பலம், அதனால் உண்டான செருக்கு இவை அனைத்தையும் நீர் புழுதிபடிய வைத்துவிட்டீர். எனது ஆண்மைத்தனமான பயிற்சிகள் அனைத்தும் உம் காலடியில் நசுக்கப்பட்டுக் கிடக்கின்றன. இப்போது எனக்கு உமது பாடங்களைக் கற்பிப்பீராக! வலிமையற்றவர்களின் சக்தியையும், ஆயுதங்களற்ற கரத்தின் ஆயுதத்தையும் எனக்கு அளிப்பீராக!

              மதனன்: நான் உனது நண்பனாக இருப்பேன். உலகையே வெல்லும் சக்திபடைத்த அந்த அர்ஜுனனை உன்முன்பு கொண்டுவந்து நிறுத்தி, அவனுடைய எதிர்ப்பின் தண்டனையை உன்கரத்தால் அவனைப் பெறவைப்பேன்.

              சித்ரா: எனக்கு மட்டும் நிறைய அவகாசம் இருந்திருந்தால் கடவுள்கள் யாரையும் உதவி கேட்காமல்  சிறிது சிறிதாக அவருடைய இதயத்தை வெற்றி கொள்ள முயற்சித்திருப்பேன். அவருக்கு உதவியாக அவர் பக்கத்தில் ஒரு தோழமையாக நிற்பேன்; அவருடைய தேரின் சாரதியாக அந்தக்  குதிரைகளைச் செலுத்துவேன்; அவர் வேட்டைக்குச் செல்லும்போது உடன் செல்வேன்; அவருடைய கூடாரத்தின் வாயிலில் இரவில் காவல் காப்பேன். எளியோரைக் காப்பதும், தேவையானபோதில் தர்மத்தை நிலைநாட்டுவதுமான ஒரு க்ஷத்திரியனின் கடமைகளில் துணை நிற்பேன்; இறுதியில், கட்டாயமாக ஒருநாள் அவர் ஆச்சரியத்துடன் என்னை நோக்கி, “யாரிந்த இளைஞன்? எனது முன்பிறப்பில் இருந்த எனதடிமைகளில் ஒருவன் நான்செய்த புண்ணியத்தால் என்னைத் தொடர்ந்து வந்தானோ?” என எண்ணுவார். நான் ஒன்றும் அவநம்பிக்கையால் நாள்முழுதும் துயரத்திலாழ்ந்தும், இரவில் ஒரு விதவையைப்போல் கண்ணீர் வடித்தும், பகலில் பொறுமையாகப் புன்னகை முகத்துடனும் இருப்பவளல்லள். எனது ஆசையெனும் மலர் கனிந்து பழமாகும்வரை உதிர்ந்து மண்ணில் விழுந்துவிடாது. வாழ்நாளின் இடைவிடாத முயற்சியால் எனது உண்மைவடிவை உணர்ந்து அதனை மதிப்பிற்குரியதாக்குவேன். உலகையே வெற்றிகொள்ளும் காதல்கடவுளே! அதற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன். வசந்தனே! பருவங்களைக்காக்கும் இளமைவாய்ந்த தலைவனே! எனது இளமையான உடலிலிருந்து இந்தப் புராதனமான அநீதியான கவர்ச்சியற்ற கட்டமைப்பை நீக்குவீராக! ஒரே ஒரு நாள் மட்டுமே என் உள்ளத்தில் மலர்ந்துள்ள காதலின் அழகுக்கு இணையான அழகுவாய்ந்தவளாக என்னை மாற்றுவீர்; ஒரேயொரு நாள் மட்டும் எனக்குப் பரிபூரணமான அழகினைத் தருவீர்; அதனைக்கொண்டு நான் தொடரும் நாட்களுக்கெல்லாம் மறுமொழி அளிப்பேன்.

              மதனன்: பெண்ணே! நான் உனக்கு இவ்வரத்தை அளிக்கிறேன்.

              வசந்தன்: ஒரேயொரு நாளுக்கு மட்டுமல்ல, ஒரு முழு ஆண்டிற்கு உனக்கு நான் வசந்த மலர்களின் வசீகரத்தை உனது உடலில் தவழச் செய்கிறேன்.

    [தொடரும்]

     

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (70)

    நிர்மலா ராகவன்

    குறையும் நிறைவும்

    நலம்-4-1-1

    ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது அவளும் அவளது துணைவனும் பல இன்பக்கனவுகளைக் காண்பது சகஜம். பிறக்கப்போகும் குழந்தை யாரைப்போல இருக்கும்? தாயைப்போல துணியில் பூவேலை செய்வதிலும், தோட்ட வேலையிலும் நாட்டமிருக்குமா, இல்லை, தந்தையைப்போல விளையாட்டு வீரனாக வளருமா என்று ஏதேதோ எண்ணி மகிழ்வார்கள்.

    பிறக்கும் குழந்தைக்கு உடலிலோ, மூளையிலோ ஏதோ குறைபாடு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அப்போது, அக்கனவுகள் நனவாகவே முடியாது என்ற கசப்பான உண்மையுடன் வேறு பல உணர்ச்சிகளும் எழும்.

    நமக்கு எந்த நோய் வந்தாலும், `இதெல்லாம் எனக்கு வராது!’ என்று எதிர்மறையாகத்தானே சிந்தனை எழும்? அதேபோல்தான், முதலில் `டாக்டர் ஏதோ உளறிவிட்டார். என் குழந்தையாவது, குறையோடு பிறப்பதாவது!’ என்று ஆத்திரம் வரும். `அவரது சிகிச்சையில்தான் ஏதோ கோளாறு!’ என்று தமது குற்ற உணர்ச்சியை மறைக்க பழியை யார்மேலாவது போடத் தோன்றும் பெற்றோருக்கு.
    ஓராண்டுக்குப்பின், குழந்தை உண்மையிலேயே குறைபாட்டுடன்தான் பிறந்திருக்கிறது, இனி அதை மாற்ற ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் தள்ளப்பட்டவுடன், ஆழ்ந்த வருத்தம் எழும். `எவ்வளவு பெரிய பொறுப்பு, ஆயுள் முழுவதும்!’ என்ற அயர்ச்சியுடன், குடும்பச் செலவுவேறு அதிகரிக்கும்.

    இப்படிப்பட்ட பெற்றோர்கள் எல்லாருமே ஒரேமாதிரி நடப்பதில்லை.

    கதை

    என் சக ஆசிரியை ரஃபிடா எப்போதும் தன் ஒரே மகளைப்பற்றி எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள். `என் மகள் வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மை படைத்தவள்!’ என்று நிலைநாட்டுவது போலிருக்கும் அவளது பேச்சு.

    ஒரு முறை, பேரங்காடி ஒன்றில் ரஃபிடாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். என்னை அறியாதவள்போல், வேகமாக வேறு திசையில் விரைந்தாள். அப்போதுதான் அவளுடைய மகளைக் கவனித்தேன்.

    எட்டு வயதிருக்கும் அப்பெண்ணுக்கு. MONGOLOID என்ற குறைபாடு அப்பட்டமாகத் தெரிந்தது அவளது பரந்த முகத்தில். தலை பெரிதாக, அந்த குறைபாட்டுக்கே உரிய, மங்கோலியர்களைப்போன்ற மேல்நோக்கிய கண்களுடன் காணப்பட்டாள். தலைமுடியில் அடர்த்தி கம்மி.

    `இந்தப் பெண்ணைப்பற்றியா அவ்வளவு கதைகள் சொன்னாள்!’ என்ற ஆச்சரியம் எழுந்தது எனக்குள்.

    (எங்கள் பள்ளியில் மன் யீ என்று அப்படி ஒரு மாணவி இருந்தாள். படிக்கவோ, எழுதவோ தெரியாது. தன் வயதொத்தவருடன் பழகிவிட்டுப்போகட்டுமே என்று அனுப்பியிருந்தார்கள். கரும்பலகையை அழிப்பது, அழிப்பானைச் சுத்தப்படுத்துவது – இவை மட்டும்தான் அவளால் செய்யமுடியும். எப்போதும் வகுப்புக்கு வெளியே chalk duster-ஐ தட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பாள். பதினைந்து வயதாகியும் உடலைப்பற்றிய பிரக்ஞை அற்றவளாக, குட்டைப்பாவாடை மேலே ஏற, உள்ளாடை தெரிய உட்கார்ந்திருப்பாள். எனக்கு `குட்மார்னிங்’ சொல்வதற்காக, பள்ளியின் வெளிக்கதவினருகே தினமும் காத்திருப்பாள். குரல் குழறி இருக்கும்).

    மறுநாள், நான் வேறு சில தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, `ரஃபிடா என்னைத் தெரியாதவள்போல் வேகமாகப் போய்விட்டாள்!’ என்று நான் ஆச்சரியப்பட்டேன். இன்னும் சிலருக்கும் அதே அனுபவம் நிகழ்ந்தது என்று தெரியவந்தது.

    தன் மகள் குறையோடு பிறந்தவள் என்று தெரிந்தால் தன்னைப் பிறர் மதிக்கமாட்டார்கள் என்று நினைத்து அப்படி நடந்திருக்கிறாள்! அப்பெண்ணால் தனக்கு அவமானம் என்ற எண்ணம் கொண்டதால் அவளுடைய தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்கெல்லாம் ஈடு செய்வதுபோல் பேசிவருகிறாள், பாவம். தான் ஒரு மகளைப் பெற்றால் எப்படியெல்லாம் இருப்பாள் என்று கற்பனை செய்ததுபோல் இருப்பதாகப் பிறரிடம் சொல்லி, தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்! உண்மை பிறருக்குத் தெரியவரும்போது, காரணமின்றி அவர்களுடன் சண்டை போடுவது அவள் வழக்கமாக இருந்தது.

    ஆனால், மன் யீயிடம் அவள் மிகுந்த பரிவு காட்டியது இப்போது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒரு நாள் ரஃபிடா பள்ளிக்கு வராவிட்டால், அந்தப் பெண் துடித்துப்போய்விடுவாள்.

    கதை

    யாராவது தங்கள் குழந்தைகளைப்பற்றிப் பேசினால், மிஸஸ் ஹோ அவர்களை வெறுப்புடன் பார்ப்பது எனக்கு அதிசயமாக இருந்தது. மற்றபடி, அவள் பரம சாது. மிக பொறுப்பானவள். (ஆனால், அதைப்பற்றி மற்ற ஆசிரியைகளைப்போல் பெருமை பேசிக்கொண்டிருக்க மாட்டாள்).

    எங்கள் இருவருக்குமே ஆங்கில நாவல்கள் படிக்கப் பிடிக்கும் என்பதால் சற்று நெருங்கிப்போனோம். ஒரு முறை, தானே கூறினாள், “என் மகனுக்கு ஆடிசம்,” என்று.
    “அப்படியென்றால் என்ன? படிக்க முடியாதா?” என்று கேட்டேன்.

    குற்றத்துக்கான தண்டனையா?

    நமக்கு ஏதாவது கெடுதல் நடந்தால், உடனே எப்போது என்ன தவறிழைத்ததற்கு இந்த தண்டனை என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம்.

    திருமணம் ஆகுமுன்னரே உடலுறவு கொண்ட தம்பதிகள் அவர்கள். அடுத்த ஏழாவது மாதத்திலேயே குழந்தை பிறந்தது, ஏதோ குறையுடன். `நாங்கள் பாவம் செய்துவிட்டோம்!’ என்று கதறினார்கள் இருவரும்.

    குடும்பத்தில் விரிசல்

    சில தம்பதியர், `உன் குடும்பத்தில் யாருக்கோ இந்த நிலை இருந்திருக்கிறது. ஏமாற்றிக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்!’ என்று ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.

    ஊனமாக இருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்வது அனேகமாக பெற்றவளின் பொறுப்பாகிவிடுகிறது. அது தவிர்க்க முடியாதது என்று புரிந்தாலும், தந்தைக்கு மனைவி தனக்காக முன்போல் அதிக நேரத்தைச்செலவிடுவதில்லை என்ற குறை ஏற்பட்டுவிடும்.

    குறையுள்ளவர்களை எப்படி நடத்துவது?

    `உன்னால் எதுவும் செய்ய முடியாது!’ என்று தனது மனக்கலக்கத்தை தான் பெற்ற பிள்ளையிடமே திருப்புவது தகாது.
    எந்தக் குழந்தையாலும் ஏதாவது செய்ய முடியும். தகுதி பாராட்டப்பட்டால், அவனுக்குத் தன்மேல் இரக்கம் பிறப்பதைத் தவிர்க்கலாம். தன்மேல் அன்பு செலுத்துபவர்களும் இருக்கிறார்கள், தானும் ஏற்கப்படுகிறோம் என்பது புரிந்து, கூடியவரை பிறருக்குப் பாரமாக இருக்கமாட்டான்.

    சமீபத்தில் ஆடிசம் வந்த ஒரு பதின்மூன்று வயதுச் சிறுவனைப்பற்றி அறிந்தேன். வயலின் வாசிப்பதில் நிபுணன். தன்னை மறந்து, பிறரையும் மீறி வாசித்துக்கொண்டே போவான். குழுவில் வாசிக்க நேரிடும்போது, அவனுடைய இந்தக் குணம் பிறருக்குத் தொந்தரவாகிவிடும். அதனால், அவன் எப்போது தன் தனி உலகத்தில் சஞ்சரிக்கப்போகிறான் என்றுணர்ந்து, அப்போது அவனுடைய தோளுக்குக்கீழ் லேசாகத் தட்டினால், உடனே நிகழ்காலத்துக்கு வந்துவிடுவான். இப்போது பல ஆசிய நாடுகளிலுள்ள வசதிகுறைந்த மாணவ மாணவிகள் கோலாலம்பூரில் ஒன்றாக இணைந்து, பல்வகையான பாடலும் ஆடலும் படைக்கப்போகும் நிகழ்ச்சியில் அவனும் இடம்பெற்றிருக்கிறான்.

    பீட்டர் என்ற இன்னொரு ஆடிச சிறுவனை கிளப்பில் நீச்சலுக்குப் போனபோது பார்த்தேன். அடிக்கடி அவன் தாய் அவனது தலையைத் தடவுவாள். தனியாக இருந்தால், அர்த்தமில்லாமல் கத்திக்கொண்டிருப்பான். வாய் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு, யார்மேலாவது உமிழ்வான். அப்படித்தான் எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது.

    அவனுடைய நிலை புரிந்து, யாரும் கோபிக்கவில்லை. பிறர் பிடித்துக்கொள்ளாமல் நடக்க முடியாது இருந்தவனது உடலுக்குப் பலம் வருவதற்காக தாய் அவனை நீச்சல் குளத்திற்கும் கடலுக்கும் விடாது அழைத்துப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகச் சொன்னாள். அங்கே பலரும் அவனுக்கு குளிக்கவும், நடக்கவும் உதவி செய்தார்கள்.

    பல ஆண்டுகளுக்குப்பின் பீட்டரை ஒரு பேரங்காடியில் சந்தித்தேன். தனியாக நடந்துவந்தான்.

    மகிழ்வுடன், “ஹலோ பீட்டர்!” என்று நான் முகமன் கூற, ஒரு வினாடி தாமதம்கூட இல்லாது, “ஹலோ ஆன்ட்டி நிர்மலா,” என்று இயந்திரம்போன்று உணர்ச்சியற்ற குரலில், என் முகத்தைப் பாராது, சொல்லியபடி நடந்துபோனான். அவனுடைய திறமை நீச்சலில்.

    இவனுடைய தந்தை, `இந்த மகன் வித்தியாசமானவன்!’ என்று பெருமையாகப் பிறருக்கு அறிமுகப்படுத்துவார். தன்னுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துப்போவார்.

    ஊனமுள்ளவரின் சகோதர சகோதரிகளும் பாதிப்படைகிறார்கள். `பெற்றோர் தன்னைச் சரியாக கவனிப்பதில்லை,’ என்று சிலர் எண்ணுவார்கள். பெற்றோருடன் சேர்ந்து, அவர்களும் குறையுள்ள சகோதரரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வேறு. வயதுக்குமீறிய பொறுப்புகளால் மன இறுக்கம்.

    ஒரு பெண், “என் பெற்றோர், பாவம், ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பே இல்லை. நான் மிக மிக நன்றாகப்படித்து, அவர்களுக்கு என்னால் ஒரு தொந்தரவும் இல்லாதபடி நடக்க முயற்சிக்கிறேன். ஆனால், அது எனக்கே பாரமாக இருக்கிறது!” என்று தோழிகளிடம் அரற்றுவதைக் கேட்டிருக்கிறேன்.
    சிலருக்கு இப்படி ஒரு சகோதரர் இருப்பது தம் சிநேகிதர்களுக்குத் தெரிந்தால் அவமானம் என்ற எண்ணம் எழும். `இப்படி நினைக்கிறோமே!’ என்று குற்ற உணர்ச்சியும் கூடவே உண்டாகும்.

    “எங்கள் மூத்த மகன் இவனுக்கு ஈடு செய்வதுபோல், எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறான்,” என்று பீட்டரின் தாய் என்னிடம் தெரிவித்தாள். பெற்றோரின் மனப்பளுவைக் குறைக்கவே கஷ்டப்பட்டு அப்படி நடக்கிறான் என்று நான் எடுத்துக்கூற, அவள் அதிர்ந்தாள். “இது அவன் தப்பில்லையே!” என்றாள் சிறு குரலில்.
    குறைபாட்டுடன் இருப்பவர்களை வேண்டாத ஆர்வத்துடன் வெறித்துப் பார்ப்பதும் ஒதுக்கிவைப்பதும் கேவலம்.

    அங்கக் குறைவுடன் பிறப்பது மரபணுக்களாலோ, சுற்றுச்சூழலாலோ, அல்லது புரியாத எந்தக் காரணத்தாலும் இருக்கலாம். இதில் அவர் செய்த தவறு என்ன?
    தொடருவோம்

    Share
  • “வேர்களும் விழுதுகளும்”

    **********************************************

    “ஈழத்து இலக்கியப் பரப்பு”
    **********************************************
    வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
    (தி. ஞானசேகரன் – பகுதி-III)
    *********************************

    2015 ஞானம் 175 ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்

    GNANAM - 200J

    06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 175ஆவது இதழ் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக 976 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

    தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 175ஆவது இதழில், ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும்,
    50 கட்டுரைகள்,
    127 கவிதைகள்,
    85 சிறுகதைகள்,
    22 ஓவியங்கள்
    என்பன இடம்பெற்றுள்ளன.

    2005 இந்துமதம் என்ன சொல்கிறது (1ம் பாகம்)

    சமயக் கருத்தரங்குகள் செயலமர்வுகள் பலவற்றில் ஆசிரியர் அவ்வப்போது முன்வைத்த கருத்துக்கள் இந்நூலாக்கத்துக்கு வழிகோலியுள்ளன.

    இந்துமதம் ஓர் அறிமுகம்,
    திருக்கோயில்,
    திருக்கோயில் வழிபாடு,
    திருவுருவ வழிபாடு,
    பரிவாரத் தெய்வங்கள்,
    திருக்கோயிற் பூசைகள்,
    அபிஷேகம் பூசைக்குரிய சாதனங்கள்,
    இறைவழிபாட்டிற்குரிய ஏனைய முறைகள்,
    ஆன்மார்த்த கிரியைகள்,
    அபரக்கிரியைகள்,
    விரதம், பண்டிகைகள்,
    புண்ணிய காலங்கள்,
    சமய நடைமுறை விளக்கங்கள்,
    தல விசேடங்கள்,
    ஆகியவற்றை எளிதாக விளங்கவைக்கும் நூல்.

    இந்து கலாசார அமைச்சின் பரிசினைப்பெற்றது.

    2005 இந்துமதம்என்ன சொல்கிறது (2ம் பாகம்)

    மங்கலப் பொருட்களின் மகத்துவம்.
    இந்து சமயிகளின் வாழ்க்கையானது
    கிரியைகள், சடங்குகள், அனுட்டானங்கள், சம்பிரதாயங்கள், ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

    இவற்றைக் கடைப்பிடிக்குமிடத்து பயன்படுத்தப்படும் பொருட்கள் மங்கலப் பொருட்களாகும்.

    இத்தகைய மங்கலப் பொருட்கள் யாவை?
    அவற்றின் தாற்பரியம் எத்தகையது?
    அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
    அவற்றிற்குரிய சமய தத்துவப் பின்னணி யாது?
    போன்ற விடயங்கள் இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளன.

    2014 ஸ்ரீ ராமகானசபா பவளவிழா மலர் நவம்பர் 2014.

    சிற்றிதழ் உலகத்தின் சிகரம் இது!!
    சிற்றிதழ் ஒன்றை ஆயிரம் பக்கங்களில்
    அச்சில் இட்டு நிகழ்த்திக் காட்டிய சாதனை இது!!

    இதுவரை யாரும் சாதித்ததுமில்லை!!
    இனிமேலும் எவரும் சாதிக்கப் போவதுமில்லை!!!

    ஈழத்து இலக்கியப் பரப்பினை ஆளுகின்ற
    இந்த ஆளுமைகளின் சாதனைகளை எடுத்துச் சொல்வதன்
    ஞானம் சிற்றிதழ் தன்னை ஏனைய சிற்றிதழ் தரத்திலிருந்து நிமிர்ந்து நிற்கிறது.

    இதன் ஆழமும் அகலமும் கண்டு
    நாமும் வியந்து நிற்கின்றோம்!

    2000ஆம் ஆண்டு தொடக்கம் 2017 தைமாதம் வரை 200வது இதழ் என்ற மாபெரும் சாதனையை நிறுவிக்காட்டிய பின்னும்
    சளைக்காது தொடர்ந்து வீறுநடைபோடுகிறது.

    இந்த இதழின் அசுர வளர்ச்ச்சிக்கு அதன் ஆசிரியரின் கடின உழைப்பே பெரிய மூலதனம் ஆகின்றது.

    இலங்கையில் டொமினிக்ஜீவாவின் மல்லிகை தொடர்ச்சியாக வெளியாகி 50 ஆண்டுகளை நெருங்குவதற்கு முன்பே ஆசிரியராலேயே    நிறுத்தப்பட்டுவிட்டது.

    யாழ்ப்பாணத்திலிருந்து கலாமணி பரணீதரன் நடத்தும்
    ஜீவநதி 100வது இதழை பெண்கள் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது.

    கிழக்கிலிருந்து மகுடம்,
    அநுராதபுரத்திலிருந்து படிகள்,
    யாழ்ப்பாணத்திலிருந்து புதியசொல்
    என்பன வெளியாகின்றன.
    மேலும் சில இதழ்கள் அங்கு வெளிவரக்கூடும்.

    ஞானம் இதழின் 200 ஆவது இதழைப்பார்த்தால்,
    அதன் பரிணாம வளர்ச்சியை கட்டம் கட்டமாக
    நாம் அவதானிக்க முடிகிறது.

    ” ஜூன் 2000 ஆம் ஆண்டில் ‘ஞானம்’ சஞ்சிகையைத்தொடங்கிய நாம், அன்றிலிருந்து நிதானமாகப்பயணித்து
    50 ஆம் இதழை ‘பொன்மலரா’கத் தந்தோம்.

    100 ஆவது இதழை ‘ஈழத்து நவீன இலக்கியச்சிறப்பிதழா’க வெளிக்கொணர்ந்ததன் வாயிலாக தமிழிலக்கியப்பரப்பில் எம்மை அடையாளப்படுத்திக்கொண்டோம்.

    150 ஆவது இதழை ‘ ஈழத்து போர் இலக்கியச்சிறப்பிதழா’கவும்
    175 ஆவது இதழை ‘ஈழத்து புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழா’கவும் தொகுத்தளித்து உலகத்தமிழிலக்கியத்தில் எமக்கான வகிபாகத்தை வகுத்துக்கொண்டோம்.

    பூமிப்பந்தெங்கும் பரந்து திணைகள் கடந்துநிற்கும் தமிழிலக்கிய வெளிக்குள், ‘ஈழத்துத்தமிழ் நவீன இலக்கிய வெளி – நேர்காணல்’ எனும் இப்பெருந்தொகுப்பை இணைத்து எம்மை மேலும் விரிவுபடுத்திக்கொள்கின்றோம்.

    இவையனைத்தும் தமிழன்னையின் பாதங்களுக்கு சமர்ப்பணம்!”

    என்று தமது  இலக்கியத் தொடர்பயணத்தில் தாம் வெளியிட்டுவரும் ஞானம் இதழின் அழுத்தமான அடையாளத்தை ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் இச்சிறப்பிதழின் தொடக்கத்தில் சொல்கிறார்.

    அவர் இதன்மூலம் தம்மை மாத்திரம் விரிவுபடுத்திக்கொள்ளவில்லை. வாசகர்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் விரிவுபடுத்தியுள்ளார்
    என்பதே எமது கருத்தாகும்.

    ஈழத்தின் மூத்த – இளம் தலைமுறையினரின் கருத்துக்களின் சங்கமமாகவே இந்த நேர்காணல் தொகுப்பு அமைந்திருக்கிறது.

    இதற்கு ஞானம் ஆசிரியர் இட்டிருக்கும் ” புரிதலும் பகிர்தலும்” என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானதே.

    தனிப்பட்ட  விருப்பு வெறுப்புகளுடன் இயங்கும் எம்மவர்களிடத்தில் வாழும் படைப்பாளிகளும், இலக்கியப்பேராசிரியர்களும், ஊடகவியலாளர்களும் இந்த விருப்பு – வெறுப்புகளுக்கு ஆளானவர்கள்தான்.

    அல்லது பலியானவர்கள்தான்.
    அவர்கள்  அனைவரையும் கருத்தியலில் ஒன்றிணைப்பது
    சாத்தியமல்ல.

    கருத்தியல் முரண்பாடுகள்,
    சித்தாந்த கோட்பாட்டுச்சிந்தனைகள்,
    இலக்கியத்தில் இஸம் தேடும் போக்கு,
    மரபுக்கும் நவீனத்துவத்திற்கும் இடையே நடக்கும்
    மோதல்கள்,
    முதலான இன்னபல காரணங்களினால் வரக்கூடிய
    மன அழுத்தங்களையும்  தாங்கிக்கொண்டு இந்தப்பெரிய
    அரிய தொகுப்பை  வெளிக்கொணர்வது  சாதனைதான்.

    இந்த தொகுப்பிலுள்ள ஆளுமைகளை வரிசைப்படுத்துமிடத்து:

    எஸ்.பொ, டொமினிக்ஜீவா, நுஃமான், செ. யோகநாதன்,
    வ. அ. இராசரத்தினம், அருண். விஜயராணி, கே.எஸ். சிவகுமாரன், பொன். பூலோகசிங்கம், கவிஞர் அம்பி, கலாமணி, முருகபூபதி,
    சி. தில்லைநாதன், வரதர், கே. கணேஷ், சிற்பி சரவணபவன், சிவத்தம்பி, நா. சோமகாந்தன்,  சித்திரலேகா  மௌனகுரு,  புதுவை இரத்தினதுரை, வீ. அரசு,  பஞ்சாட்சர சர்மா,  பாலசிங்கம் பிரபாகரன்,
    செங்கை ஆழியான்,  அனந்தராசன்,  தெளிவத்தை  ஜோசப்,
    துவாரகன்,  உமா ஶ்ரீதரன்,  சபா. ஜெயராசா,  வீ. தனபாலசிங்கம்,
    மு.பொன்னம்பலம்,  தெ. மதுசூதனன்,  ஷோபா சக்தி,
    குழந்தை  ம. சண்முகலிங்கம்,  கார்த்திகா கணேசர்,
    முல்லை அமுதன்,  செ. கணேசலிங்கன்,  சோ. பத்மநாதன், செ.யோகராசா,  தெணியான்,  அ.முத்துலிங்கம்,
    ஜின்னாஹ் ஷரிபுத்தீன்,  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,
    அகளங்கன்,  நூலகர் என். செல்வராஜா,  அன்னலட்சுமி  இராஜதுரை,
    இளைய அப்துல்லா,  கே.ஆர். டேவிட்,  வீ. ஜீவகுமாரன்,
    அ. சண்முகதாஸ்,  இரா. உதயணன், துரை மனோகரன்,
    ஆசி. கந்தராஜா,  நா. சுப்பிரமணியம்,  சோ. சந்திரசேகரம்.

    இவர்களில் சிலர் இலங்கையில், சிலர் வெளிநாடுகளில்,
    சிலர் இன்று எம்மத்தியில் இல்லை.

    சிலர் பேராசிரியர்கள். சிலர் ஊடகவியலாளர்கள்.
    சிலர் கலைஞர்கள், சிலர் கவிஞர்கள்,
    சிலர் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள்.

    இவர்கள் அனைவரையும் நேரிலும் சந்தித்து,  தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்  தொடர்பிலும் பெற்றுக்கொண்டு பதிவுசெய்யப்பட்ட நேர்காணல்கள்.
    சில சந்திப்புகளை ஞானம் ஆசிரியரே சந்தித்தும் தொடர்புகொண்டும் எழுதயிருக்கிறார்.

    ” குறிப்பிட்டவருடன்  தொடர்புகொண்டு நேர்காணலை  எடுத்து அனுப்புமாறு ”  சிலரைப்  பணித்ததன் அடிப்படையில் பெறப்பட்டவையும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

    சுருக்கமாகச்சொல்வதாயின் ஞானம் ஆசிரியர் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களைக் கடந்தே  இந்த அரிய இலக்கியச்சேவையைச் செய்திருக்கிறார் எனக்கருதமுடிகிறது.
    இந்தச்சேவை  இதர  இதழாசிரியர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும்  ஒரு  சிறந்த  முன்னுதாரணம்.

    ஞானம் புரிதலும் பகிர்தலும், வாசகர்களை கலை,
    இலக்கியத்தின் பலதரப்பட்ட  திசைநோக்கி  நகரச்செய்திருக்கிறது.

    தீவிர இலக்கிய வாசகர்களுக்கு   மாத்திரமல்ல,
    படைப்பிலக்கியவாதிகளுக்கும் தெரியாத   பல  தகவல்களின்
    சுரங்கமாகவும்  இந்தத்  தொகுப்பு  மிளிர்கிறது.

    நேர்காணல்களை பெற்றவர்கள் யார்,
    ஞானத்தில் பதிவுசெய்யப்பட்ட   ஆண்டு ,
    முதலான விபரங்களுடன் உடனுக்குடன் வந்த எதிர்வினைகளும்  தரப்பட்டுள்ளன.

    ” புலம்பெயர்ந்த  ஒரு  காலகட்ட  எழுத்தாளர்கள்  சாதனை புரிகிறார்கள்.

    ஷோபா சக்தி,  கருணாகரமூர்த்தி,  அ.முத்துலிங்கம், கலாமோகன்  போன்றோர்  மிகவும்  ஆழமாகவும்  சிறப்பாகவும் இலக்கியம்  படைக்கிறார்கள்.

    ஆசிரியர்  ஞானசேகரனின்  நீண்ட கால உழைப்பு வீண்போகாது.
    அவர்  சொல்வதுபோல், நாமும் பூமிப்பந்தெங்கும் பரந்து
    திணைகள் கடந்துநிற்கும் தமிழிலக்கிய வெளிக்குள்,
    இணைத்து  எம்மை  மேலும் விரிவுபடுத்திக்கொள்கின்றோம்.”

    இனிவரும் தொடர்களில் ஒவ்வொரு ஆளுமைகளின் நேர்காணல்கள், மற்றும் அவர்களின் இலக்கியக் கருத்துக்கள் பற்றியும் அறிந்துகொள்வோம்.

    வேர்களும் விழுதுகளும் இன்னும் வளரும்….

    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    25/08/2017

    Share
  • குறளின் கதிர்களாய்…(181)

    செண்பக ஜெகதீசன்

    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.   (திருக்குறள் -395: கல்வி) 

    புதுக் கவிதையில்…

    செல்வரிடம் பொருள்பெற,
    வணங்கி நிற்பர்
    வறியோர்…
    கற்றோரிடம் கல்விபெற
    இதுபோல்
    பணிவுகொண்டோர் உயர்ந்தோர்…
    பணிவிது இல்லாதோர்
    பயனிலாக் கீழோரே…! 

    குறும்பாவில்…

    பொருள்பெறச் செல்வரிடம் பணிவோர்போல்
    கல்விபெறப் பணிவோர் உயர்ந்தோர்,
    பணிந்து கல்விபெறார் தாழ்ந்தோரே…! 

    மரபுக் கவிதையில்…

    வறுமையில் பொருள்பெறச் செல்வரிடம்
    -வணங்கிப் பணிந்து பெறுவோர்போல்,
    பொறுமையாய்க் கேட்டே கல்வியினைப்
    -பெறுவோர் தரத்தில் உயர்வாரே,
    சிறிதும் பணிவது இல்லாமல்
    -சேர்ந்த கற்றோர் தம்மிடத்தில்
    பெறுவோம் கல்வி எனுங்கல்லார்,
      -பெறுவர் நிலையில் கீழோரே…! 

    லிமரைக்கூ…

    பொருள்பெறுவர் செல்வரிடம் பணிந்து,
    பணிவுடன் கற்போர் உயர்ந்தோர், பணிவிலார்
    கீழோரெனக் கல்லாரைச்சொல் துணிந்து…! 

    கிராமிய பாணியில்...

    படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
    பாடுபட்டுப் பணிவோட நல்லாப்படிக்கணும்…
    பணக்காரங்கிட்ட பணம்கேக்கிற
    ஏழயப்போல பணிவோட
    படிச்சவங்கிட்ட கேட்டுப்படிச்சா,
    படிக்காதவனும் ஒசந்தவனாவான்… 

    அப்புடிப்
    பணிவோட படிக்காத படிக்காதவன்
    நெலமயில ரெம்பக் கீழ்த்தரமாவான்… 

    அதால,
    படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
    பாடுபட்டு பணிவோட நல்லாப்படிக்கணும்…!

     

     

     

    Share
  • காதலனின் காதல் வரிகள்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    உன் கண்ணுக்குள் நோக்கும்
    ஒவ்வொரு தருணமும் காண்கிறேன்,
    அங்கோர் சொர்க்க புரி
    உள்ளதை!
    அங்கு நான் பார்த்தால்                     jayabarathan
    காதலனின் காதல் தென்படும்!
    அவரும் காண்பர் ஒருநாள் காதல்
    துவக்க காலத்தை!
    உன்னித யத்தில்
    ஆழமாய்ப் பதிந்து உள்ளது
    என் இருப்பு!
    காண்பேன் உன் இதயத்தில்
    காதலனின் காதலை!

    முன்பதை நான் ஒருமுறைக் கூறினும்,
    பன்முறைக் கூறுவேன்,
    மேன்மேலும் நான் கூறுவேன்!
    நீ என்னை நேசிப்பதை
    நிச்சயமாய் நான் நம்புவதால்,
    இன்றுமுதல் அறிந்து கொண்டேன்,
    வழிப் பாதையில்
    நீ என்னை நோக்கும்போது
    காதலிப்பதாய் நீ சொல்லும்போது
    காண்கிறேன்.

    மழை பெய்தால் என்ன?
    கவலைப் படேன்!
    உன்னிதய ஆழத்திலே நான்
    என்றும்
    நிலைத்தி ருப்பேன்!

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 238

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    தம் சுற்றத்தினரையும் விட்டுநீங்கி
    குழலையும் குடுமியையும்
    மழலைப்பேச்சுடைய சிவந்த வாயையும்
    தளர்வான நடையும் உடைய கூட்டத்துடன்
    விளையாடும் சிறுவர்கள் அனைவரும்  silambu
    அந்த அந்தணனைச் சூழ்ந்து கொள்ள,
    பராசரன் பேசலானான்:

    “அந்தணச் சிறுவர்களே!
    என்னுடன் சேர்ந்து மறைதனை ஓதி
    என் பொதியில் இருக்கும் பண்டங்களை
    எடுத்துச் செல்வீராக!

    பெருமைவாய்ந்த சிறப்புடைய
    வார்த்திகன் புதல்வன்
    தட்சணாமுர்த்தி எனும் பெயர் கொண்டவன்
    பால்மணம் கொண்ட சிவந்த வாயை உடைய
    தன்னை ஒத்த இளையவரின்முன்,
    தளர்வு கொண்ட நாவினை உடையவனாய் இருப்பினும்
    மறையின் ஓசைமுறை தவறாது
    உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன்
    அவனுடன் சேர்ந்து ஓதினான்.

    அங்ஙனம் மறையினைத் தன்னுடன் ஓதிய
    தட்சணாமூர்த்தியை வியந்து பாராட்டினான்.
    முத்துக்களால் செய்த பூணூலையும்
    அதற்கேற்ற அணிகலன்களையும் புனைந்து
    கைக்குக் கடம், காதுக்குத் தோடு ஆகியவற்றுடன்
    தன் கைப்பொருளாகிய பண்டங்கள் நிறைந்த
    சிறு பொதியையும்
    தட்சணாமூர்த்திக்கு அளித்துப் பின்
    தன் ஊர் திரும்பினான் பராசரன்.

     

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 92

    க. பாலசுப்பிரமணியன்

     தர்க்கரீதியான நுண்ணறிவு (LOGICAL INTELLIGENCE)

    education

    மொழிசார்ந்த நுண்ணறிவு வாழ்க்கையின் வெற்றிக்கு எவ்வளவு இன்றியமையாததாக இருக்கின்றதோ அதுபோல தர்க்கரீதியான நுண்ணறிவும் வாழ்க்கையின் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. மொழிசார் நுண்ணறிவு எவ்வாறு வலது மூளையின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளதோ அதுபோல் தர்க்கரீதியான நுண்ணறிவு இடது மூளையின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது. இந்த நுண்ணறிவு ஒரு பொருள், ஒரு கருத்து அல்லது ஒரு செயலின் காரண காரியங்களை அறிந்துகொள்வதற்கும் அவைகளின் இடையே உள்ள தொடர்புகள் விளைவுகள், நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை அறிந்துகொள்வதற்கும் அவற்றை நோக்கித் தேவையான செயற்பாடுகளுக்கான வழிமுறைகளை வகுப்பதற்கும் மிகவும் தேவையானது.

    தர்க்கரீதியான நுண்ணறிவே நாம் ஒரு செயலை ஏன் செய்கின்றோம்  எவ்வாறு  செய்ய வேண்டும் என்பதற்கான கேள்வி- பதில்களையும் அதனால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கும் ஏற்படும் பலவித பாதிப்புக்களைத் தெரிந்து அறிந்து செயல்பட உதவுகின்றது. ஆனால் இந்த நுண்ணறிவு நமக்கு கிடைப்பதற்கு நமது மூளை என்னென செயல்களைச் செய்கின்றது, எவ்வாறு மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து இடம் பொருள் காட்சி உறவு நிலைகள் போன்ற பல பரிமாணங்களை ஆராய்ந்து நமக்கு கண்ணிமைக்கும் நேரத்தைவிட குறைந்த நேரத்தில் அறிவிக்கின்றது என்று பார்ப்போமானால் நாம் வியப்பின் உச்ச நிலையை அடைந்து விடுவோம்.`

    இந்த நுண்ணறிவின் வல்லமை பெற்றவர்கள் கணிதம் அறிவியல், தொழில்நுட்பம், கணினி, கைத்திறன்கள், ஆராய்ச்சி, சட்டம், வாதங்கள், பட்டையக் கணக், தொழில்துறை உற்பத்தி போன்ற பல துறைகளில் விருப்பமுள்ளவர்களாகவும் மேன்மைபெற்றவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு கருத்தையும் கோட்பாடுகளையும் செயல்முறைகளையும் மேல்நோக்காக எடுத்துக் கொள்ளாமலும், கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், அதைத் தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து அது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று அறிந்து செய்யப்படக்கூடியவர்கள். இவர்களை பொதுவாக Number Smart (எண் நுண்ணறிவு) உள்ளவர்கள் என்று கூறுவார்கள்.

    இந்த நுண்ணறிவின் வல்லமை பெற்றவர்களின் சில திறன்களாவன:

    1. எண்களோடு விளையாடுதல்
    2. புதிர்களை விடுவித்தல்
    3. ஆராய்ச்சிப்பாதைகளுக்கு வழிவகுத்தல்
    4. எண்-கருத்துக்களுக்கான குறியீட்டு முறைகளை வகுத்தல்
    5. பாய்வு விளக்கப்படங்கள் தயாரித்தல்
    6. கணினி நிரல்கள் தயாரித்தல்
    7. வரவு-செலவு திட்டங்கள் வகுத்தல், கணித்தல், கண்காணித்தல்
    8. சட்ட விளக்கங்கள் அளித்தல்
    9. கேள்விக்கணைகளைத் தொடுத்தல்
    10. அளவீடு மற்றும் மதிப்பேடு செய்தல்

    இதைப்போன்ற பல திறன்களில் வல்லமை பெற்றவர்கள் இந்த நுண்ணறிவுக்குச் சான்றாக விளங்குகின்றனர். இந்த வகையைச் சார்ந்த சில நபர்கள் :

    1. 1. கணித மேதை ராமானுஜம்
    2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
    3. சர் ஐசக் நியூட்டன்
    4. சார்லஸ் டாரவின்
    5. பொறியியல் வல்லுநர் எம். விஸ்வேஸ்வரய்யா

    இந்த வல்லமையை நாம் குழந்தைகளுக்குச் சிறிய வயது முதற்கொண்டே வளர்க்க வேண்டும். இளம் வயதில் இந்த தர்க்கரீதியான சிந்தனையை நாம் வளர்க்கத் தவறி விட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல சந்தர்பங்களில் சவால்களைச் சந்திக்க நேரிடும். கோர்வையான சிந்தனை, தொடர் சிந்துக்கும் திறன், காரண-காரிய சிந்தனைத் திறன்கள், குறிக்கோளுடனும் வழிநெறிகளுடனும் சிந்தித்தல் ஆகிய பல திறன்கள் அவர்களுக்குப் பிற காலத்தில் பயன்படுத்த வேண்டிய நேரங்களில் தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

    பள்ளிகளில் இந்தத் திறனை வளர்க்க சில சிறிய எளிதான செயல்களை பின்பற்றலாம் :

    1. எண்ணறிவுத் திறன்கள் (Skills of Nunmeracy)
    2. வரிசைமுறைத் திறன்கள் (Skills of Sequencing)
    3. தொடர்புச் சிந்தனைத் திறன்கள் (Skills of correlation
    4. ஒப்பீட்டுத் திறன்கள் (Skills of comparison_
    5. அமைப்புத் திறன்கள் ( Skills of Organization)
    6. ஆய்வுத் திறன்கள் (Skills of reseaching)
    7. பகுப்பீட்டுத் திறன்கள் (Skills of differentiation)
    8. இணைச்சிந்தனைத் திறன்கள் (Skills of Parallel thinking_
    9. பகுப்பாய்வுச் சிந்தைந் திறன்கள் (Skills of Rational Thinking)
    10. பக்கவாட்டுச் சிந்தனைத் திறன்கள் (Skills of Lateral Thinking)
    11. வகையீட்டுத் திறன்கள் (Skills of differentiation)
    12. வடிவியல் திறன்கள் (Skills of geometry)
    13. வரைவுத் திறன்கள் (Skills of graphics)

    இதைப்போன்ற பலவகையான திறன்கள் தர்க்கரீதியான நுண்ணறிவை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவும். இந்தத் திறன்களை பள்ளிகளில் மட்டுமல்ல வீடுகளிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்ந்தைகளோடு உறவாடும் நேரத்திலும் விளையாட்டாகக் கூட வளர்க்க முடியும். இந்த நுண்ணறிவு மற்ற எல்லாவிதமான நுண்ணறிவுகளை மேம்படுத்தவும் மற்றும் ஒரு தனி மனிதனின் செயலாற்றல் முறைகளை வளப்படுத்தவும் உதவும்.

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170827 -Dialogue with Arjuna -lr

    மீசைக்கு பாரதியார், ஆசைக்கு ருக்மணி,
    பூசைக்கு ஆழ்வார்கள் பாசுரம், -ஓசைக்கு
    வெண்சங்கின் ஓங்காரம், வெற்றி உனக்குத்தான்
    உன்சங்கு கீதை உரை’’….!

    மூண்ட சமர்தனில் மாண்ட உறவுகள்
    மீண்டெழுந்து கண்ணனை கெக்கலிக்க, -பூண்டோடு
    பாயாசம் சேர்ந்தாற்போல், வெற்றியில் வாடைவர,
    ஆயாச மானார் அவர்….கிரேசி மோகன்….!

    Share
  • சூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது

    சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

    Image result for uranus and neptune
    Uranus & Neptune
    எமது ஆய்வகச் சோதனைகள் அண்ட வெளிக்கோளின் [Exoplanets] உள்ளமைப்பை அறிய உன்னத உட்காட்சிகள் அளித்தன.  நமது பரிதி மண்டலத்துக்கு அப்பால் உள்ள அண்டவெளி  அசுரப் பனிக்கோள்களின் [Cosmic Ice Giants] நிறையையும், ஆரத்தையும் எம்மால் அளக்க முடிந்தது. இவ்விரு பரிமாணங்களின் உறவுப்பாடு, கோளின் இரசாயன அமைப்பைக் காட்டுவதோடு, அவை மெலிந்த மூலகமா, அல்லது கன மூலகமா [Light or Heavy Elements] என்றும் அறிய முடிகிறது.
    டாமினிக் கிரௌஸ், ஆராய்ச்சிக் குழுத் தலைவர்.  
     
     
    Its raining diamonds
    விஞ்ஞானிகள் நீண்ட காலமாகக் கோள்களில் பேரளவு உள்ள ஹைடிரஜன், ஹிலியம் & மீதேன் வாயுக்களால் என்ன, என்ன விளைவுகள் உண்டாகும் என்று வியந்தனர். சூரியனின் புறக்கோள்களான யுரேன்ஸ், நெப்டியூன் ஆகிய இரண்டும் நீல நிறத்தில் தெரிவதற்கு இவ்வாயுக்களே காரணம்.  மூன்று வாயுக்கள் உள்ள புறக்கோள்களின் வெப்ப அழுத்த நிலையே, வைரத் துணுக்குகள் உருவாக ஏதுவாகிறது.  அதாவது அந்த வாயுக் கோள்களில் தூய வைரக் கரு மையம் இருப்பதோடு அதைச் சுற்றிலும் ஒருபெரும் வைரக் கோளம் உள்ளதென்றும் அறிய முடிகிறது.
     டாமினிக் கிரௌஸ், ஆராய்ச்சிக் குழுத் தலைவர்.  
     
    Image result for uranus and neptune
     
    சூரியனின் புறக்கோள்களில் பேரளவு வைரக் கல்மழைப் பொழிவுகள்
    சூரிய மண்டலத்தின் புறக்கோள்களான பூதக்கோள் வியாழன், வளையக் கோள் சனிக்கு அப்பால் சுற்றும் யுரேனஸ், நெப்டியூன் வாயுக் கோள்களில் பெரும்பான்மை ஹைடிரோ கார்பன், நீர், அம்மோனியா கலந்துள்ளது. அங்கே ஏற்படும் மின்னலால் ஹைடிரோ-கார்பன் பிரிந்து, கார்பன் வெப்பமும், அழுத்தமும் உள்ள ஆழ்தளத்தில் விழுந்து,  பேரளவு வைரத் துணுக்குகள் தொடர்ந்து பெரு மழையாகப் பொழிகின்றன என்று விஞ்ஞானிகள் ஆய்வகச் சோதனைகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளர். அந்த புதிய தகவல் சமீபத்தில் [ஆகஸ்டு 21, 2017]  இயற்கை வானியல் விஞ்ஞான [Journal  Nature of Astronomy]  [DOI: 10.1038/S41550-017-0219] இதழில் வெளிவந்துள்ளது. வைரப் பொழிவு பற்றி இதுவரை அது வெறும் கோட்பாடாகவே இருந்தது.  ஆய்வகச் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டு முதன்முறை அது மெய்யென்று உறுதியாகியுள்ளது.

    Image result for it's rainig diamonds on neptune

    இந்த ஆய்வுக் குழுவின் ஜெர்மன் தலைவர் : டாமினிக் கிரௌஸ் [Dominic Kraus, Head Helmholtz Junior Research Group at HZDR] [Helmholtz-Zentrum Drsden-Rossendorf].  ஜெர்மன் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கூட்டாய்வுச் சோதனை அது,  அவர்கள் பயன்படுத்திய  ஆய்வுச் சோதனைச் சாதனம் :  காலிஃபோர்னியாவில் நிறுவப்பட்ட ஸ்டான்ஃபோர்டு நேர்போக்கு விரைவாக்கி மையத்தின் சாதனங்களுடன் பேராற்றல் படைத்த எக்ஸ்ரே லேசர்  [Ultra-Strong X-Ray Laser & other Facilities at Stanford Linear Accelerator Center (SLAC) in California] பயன்படுத்தப் பட்டது.
    நேர்போக்கு விரைவாக்கி யந்திரத்தில் பனிக்கோள் நெப்டியூன், யுரேனஸ் கோள்களின் 10,000 கி.மீடர் ஆழத்தில் எழும்  வெப்ப, அழுத்தப் போலி நிலை உண்டாக்கி முதன்முறை மீதேன் வாயுவுக்குப் பதிலாக ஒருவித பிளாஸ்டிக் [Polysytrene – A mixture of Carbon & Hydrogen ] பயன்பட்டு  கார்பன் பிளக்கப்பட்டு வைரத் துணுக்குகள் உருவாவது உறுதி செய்யப் பட்டது.

    Image result for Raining Diamonds Neptune Uranus

    யந்திரத்தில் உண்டாக்கிய உஷ்ணம் : 6000 கெல்வின்,  வாயு அழுத்தம் : சுமார் 150 கிகாபாஸ்கல் [gigapascal].  சோதனை இயக்கம் நீடித்த நேரம் : பின்ன வினாடி.  உருவான வைரப் பரிமாணம் :  மிகச் சிறியது [nanometer size]. நேர்போக்கு விரைவாக்கியில்  பனிக்கோள் அளவு வெப்ப அழுத்த நிலை போலிச் சோதனை செய்யாமல், மட்டநிலை வெப்ப, அழுத்தமே உண்டாக்கப் பட்டது.  ஆய்வகச் சோதனை மூலம் கிடைத்த மிகச்சிறு  வைரக் கல்லை விடப் பெரிய அளவு வைரத் துணுக்குகள் மழையாகப் பொழிந்து, பனிக்கோள்களில் நிரம்புகின்றன என்று குழு விஞ்ஞானிகள் கருதுகிறார். பனிக்கோள்களான யுரேனஸ், நெப்டியூன் போலின்றி, பூதக்கோள் வியாழனிலும், சனிக்கோளிலும் வைரக் கற்கள் சிறிதளவு உருவாகும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.

    unnamed 

    +++++++++++++++++++++++++++

    W Herschel -4

    வில்லியம் ஹெர்ச்செல்  (1738-1822)

    ++++++++++++++++++

     

    [youtube https://www.youtube.com/watch?v=AwIVbzIsoX8?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    “எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் பிரபஞ்சத்தை ஆழமாய் என் கண்கள் நோக்கிச் சென்றன !”

    வில்லியம் ஹெர்ச்செல் வானியல் விஞ்ஞானி

    ‘புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது ‘

    ஜான் ஹெர்ச்செல் (John F. Herschel) (1792-1871)

    [youtube https://www.youtube.com/watch?v=ur9o74s6GnM?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=gkSXjpBQov0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

     

    முன்னுரை: 1781 ஆம் ஆண்டு வரை சூரிய மண்டலம் ஆறாவது அண்டமான சனிக்கோளுடன் முடிவதாக எண்ணப்பட்டது. அந்த ஆண்டில் இன்னிசை ஞானியும், விண்ணியல் ஆரம்பநிலை விஞ்ஞானியும் [Amateur Astronomer] ஆன வில்லியம் ஹெர்ச்செல் என்பவர், யாருமே நினைத்துப் பாராதவாறு சனிக் கோளுக்கும் அப்பால் பரிதியைச் சுற்றி வரும் ஒரு புதிய அண்டக்கோள் நகர்ச்சியைக் கண்டு, வானியல் வரலாற்றில் ஒரு மாபெரும் வியப்புணர்ச்சியை உண்டாக்கினார்! பரிதியிலிருந்து சனிக்கோள் சுற்றி வரும் தூரத்தை விட, இரண்டு மடங்கு தொலைவில் சுற்றி வந்ததால், எவரது தொலைநோக்கியும் அதுவரைப் புதுக்கோளைக் காண வில்லை! அத்துடன் ஹெர்ச்செல் பயன்படுத்திய புதிய தொலைநோக்கி மிகக் கூர்மையும், கையாளும் திறமையும் கொண்டதாக இருந்தது!

    W Herschel -1

    பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சம் ஓர் பெரும் வெடிப்பில் தோன்றி 15 பில்லியன் ஆண்டுகள் ஓடி விட்டன என்று வானியல் வல்லுநர் முடிவு செய்துள்ளார்கள்! தான் படைத்த முதல் தொலைநோக்கியின் வழியே விண்வெளியின் திரையை நீக்கிய காலிலியோ (1564-1642), பூமியின் நிலவைப் போல வெள்ளிக் கோளின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி ஆகியவற்றைக் கண்டார்! வியாழனின் துணைக் கோள்களைக்  கண்டார். முதன்முதல் சனிக் கோளின் நீள் வடிவத்தைக் கண்டார்! யுரேனஸ் புறக்கோளுக்கு அப்பால் நகரும் நெப்டியூன் [Neptune] கோளைக் கண்டாலும், அது ஒரு பரிதி மண்டலக் கோள் என்பதைக் காலிலியோ அறியாது தவற விட்டுவிட்டார்!

    பால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ

    1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.

    காலிலியோ, ஹியூஜென், நியூட்டன், காஸ்ஸினி ஆகியோரைப் பின்தொடர்ந்து, வில்லியம் ஹெர்ச்செல் தொலைநோக்கியைச் செம்மையாக்கி, மேம்படுத்திப் பெரிதாக்கி புதுக் கோள் யுரேனஸ், அதன் இரண்டு துணைக் கோள்கள், அற்புத காலக்ஸிகள் [Galaxies], ஆயிரக் கணக்கான நிபுளாக்கள் [Nebulae] ஆகியவற்றைக் கண்டு பிடித்து உலகை வியக்கச் செய்தார். அத்துடன் சனிக்கோளின் அடுத்த இரண்டு சந்திரன்களைத் தனது தொலைநோக்கி மூலம் கண்டு பிடித்தார், ஹெர்ச்செல்.

     

    Neptune Orbit

    வானியம் வல்லுநர் வில்லியம் ஹெர்ச்செல் வாழ்க்கை வரலாறு

    1781 மார்ச் 13 ஆம் தேதி வில்லியம் ஹெர்ச்செல் தொலைநோக்கி வழியே விண்மீன்களை உளவி வரும் போது ஓர் மங்கலான அண்டத்தைக் கண்டார். அது என்னவென்று துருவி நோக்க கருவியின் கூர்மையை மிகைப்படுத்திப் பார்க்கும் போது ஒரு தெளிவான நீல நிறத் தட்டு தெரிந்தது. முதலில் அது ஒரு வால்மீன் [Comet] என்று கருதினார். வால்மீன்கள் விண்மீன்களைப் பின்புலமாக்கிப் பரிதியைச் சுற்றுபவை. ஆனால் புதுக் கோள் நகர்ச்சியை அவர் தொடர்ந்து நோக்கும் போது, அதன் புதிய இடம் அண்டையில் இருக்கும் விண்மீன்களின் இருக்கைக்கு ஒப்பிய தூரத்தில் மாறியது. அவ்விதம் அதன் போக்கைப் பொறுமையாக நீண்ட காலம் ஹெர்ச்செல் பதிவு செய்ததில், அதன் நகர்ச்சி வால்மீனின் போக்கை ஒத்திருக்க வில்லை! புதுக்கோளின் சுற்றும் வீதி ஏறக் குறைய வட்ட வீதியில் [Circular Orbit] காணப் படவே, அது பரிதியைச் சுற்றும் மற்றுமோர் அண்டக்கோள் என்பதை ஹெர்ச்செல் முடிவு செய்தார்.

    ஒளிமந்தைகள், நிபுளாக்கள்

    புதுக்கோள் கண்டு பிடிப்பதற்கு முன்பு 90 ஆண்டுகளாய்ப் பல வானியல் வல்லுநரின் கண்ணில் அது தென்பட்டிருந்தாலும், அதை ஒரு விண்மீன் என்று கருதினார்! பரிதி மண்டலக் கோள் அது என்பதைப் பலர் அறியத் தவறி விட்டார்கள்! யுரேனஸைக் கண்டு பிடித்த ஹெர்ச்செல்லின் கூரிய விழிகள் அவரைச் சிறந்ததொரு வானோக்காளர் என்பதை நிலைநாட்டியது. யுரேனஸ் கோள்தான் மனிதர் தொலைநோக்கி மூலம், முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட சூரிய மண்டலக் கோள்! யாவரும் அறிந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய பண்டைக் கோள்களை யார் முதலில் கண்டு பிடித்தார் என்பது எந்த வரலாற்றிலும் காணப் படவில்லை! நமது இந்து ஜோதிடக் கணிப்பில், கிரேக்க ஜோதிட ஞானத்தில் மேற்கூறிய கோள்கள் யாவும் பல்லாயிர ஆண்டுகளாகக் கையாளப் பட்டு வருகின்றன!

    1738 நவம்பர் 15 ஆம் தேதி வில்லியம் ஹெர்ச்செல் ஜெர்மனியில் ஹானோவர் என்னும் ஊரில் பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் இசை ஞானிகள். அவ்வழிப் பிறப்பில் வில்லியம் ஹெர்ச்செல்லிடம் புகுந்து இன்னிசைத் தானாக அவர்பால் குடிகொண்டது. 1757 இல் பத்தொன்பது வயது வந்ததும், விஞ்ஞானி வில்லியம்  ஹெர்ச்செல் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார். அவருக்குப் பிறகு அவரது தனயன் அலெக்ஸாண்டர், தங்கை கரோலின் பிரிட்டனுக்கு வந்து அவருடன் இணைந்தார்கள்.

    பிரிட்டனில் வில்லியம் இசைக்கலையை விருத்தி செய்து, இசைப்பயிற்சி ஆசிரியராகவும், இராணுவப் பாண்டு வாத்தியக் குழுவினராகவும் பணியாற்றினார். இசைக்கலையில் மூழ்கிச் சிறப்புற்ற வில்லியத்துக்குத் திடீரென வானியல் துறையில் ஆர்வம் பொங்கி, பிறகு அதுவே அவரது தலையாய வேட்கை ஆயிற்று! முதலில் தொலைநோக்கியை வாடகைக்கு எடுத்து வான மண்டலத்தை ஆராய்ந்தார். பிறகு அலெக்ஸாண்டர், கரோலினுடன் சேர்ந்து மூவரும் 48 அங்குல ஒளிப்பிம்ப 40 அடிக் குவிநீளத் தொலைநோக்கியை [48 ‘ Reflector, 40 ‘ Focul Length Telescope] உருவாக்கினார்கள். அதை டிசைன் செய்து முடிக்கப் பேரரசர் மூன்றாம் ஜார்ஜின் [King George III] 6600 US டாலர் நிதி உதவி கிடைத்தது. ஆனால் அவரது மகத்தான கண்டு பிடிப்புகளுக்கு அவரது 20 அடி நீளத் தொலைநோக்கியே அவருக்கு முதலில் உதவி புரிந்தது!

    வில்லியம் ஹெர்ச்செல் வானோக்கி உளவும் போது, அண்டக் கோள்களையும், பால்மய மின்மினிகளையும் முறைப்படிப் பதிவு செய்து, சீரான ஒழுங்கில் ஆய்வு செய்பவர். 1781 மார்ச் 13 ஆம் தேதி அன்று தனது 7 அங்குல ஒளிபிம்பத் தொலை நோக்கியில் யுரேனஸ் புதுக்கோளைக் கண்டு, பல ஆண்டுகள் அதன் நகர்ச்சியைப் பதிவு செய்து, சனிக்கோளுக்கும் அப்பால் அது ஏறக்குறைய வட்ட வீதியில் சுற்றி வருவதைக் கணித்தார். ஹெர்ச்செல் புதுக்கோளுக்கு முதலில் இட்ட பெயர் ‘ஜார்ஜியம் சைடஸ் ‘ [Georgium Sidus]. பேரரசர் ஜார்ஜ் மன்னரின் நினைவாக அப்பெயரை அளித்தார். வானியல் குழு [Astronomical Society] அவரிட்ட பெயரை ஏற்றுக் கொள்ளாது, புதுக்கோளை ‘யுரேனஸ் ‘ என்று கிரேக்க இதிகாசக் கடவுள் பெயரால் பின்னால் அழைத்தது.

    W Herschel -2

    பால்மய வீதி வெளி மின்மினிகளைக் கண்டுபிடித்த ஹெர்ச்செல்

    பிரிட்டனின் பேரரசர் ஜார்ஜ், ஹெர்ச்செலை அரசாங்க வானியல் துறைஞராக ஆக்கி அவருக்கு ஆண்டுக்கு 320 டாலர் [US Dollar Value] பென்ஸன் ஊதியப் பணமளித்துச் சேர்த்துக் கொண்டார். 1774 முதல் வில்லியம் தொலை நோக்கி ஏணியில் நின்று கண்காணித்து, வர்ணித்து அளக்கும் விபரங்களை எல்லாம், கீழே அமர்ந்து கொண்டு தங்கை காரோலின் பதிவுத் தாளில் எழுதி உதவி செய்தாள். 1782 இல் சனி நிபுளா [Saturn Nibula, NGC-7009] பதிவானது. 1783 இல் 18.7 ‘ அபெர்சர் [Aperture] 20 அடி குவிநீளத் தொலைநோக்கியில் வில்லியம், கரோலின் இருவரும் இணைந்து பல பால்மய நிபுளாக்களையும், காலக்ஸியையும் கண்டு விளக்கங்களை எழுதினார்கள். பதினெட்டு மாதங்கள் வெகு ஆழ விண்வெளியைக் கண்காணித்து 1785 இல் 1000 ஆழ்வெளி மின்மினிகள் [Deepsky Objects], 1788 இல் அடுத்து 1000 ஆழ்வெளி மின்மினிகள், 1802 இல் இன்னும் 500 ஆழ்வெளி மின்மினிகள் கண்டு பிடிக்கப் பட்டுப் பதிவு செய்யப்பட்டன! 1888 ஆண்டு வெளியான புதிய நிபுளா அட்டவணையில் [New General Catalogue] உள்ள 8000 நிபுளா எண்ணிக்கையில் முதல் 2477 நிபுளாக்களைக் கண்டவர் வில்லியம் ஹெர்ச்செல்.

    வில்லியம் ஹெர்ச்செல் வானியல் விஞ்ஞானத்தின் பல பகுதிகளுக்குத் தன் மூலப் படைப்புகளை வழங்கி யிருக்கிறார். யுரேனஸ் கோள் (1781), அதனிரு துணக்கோள்கள் [Titania, Oberon (1787)], சனிக்கோளின் இரண்டு சந்திரன்கள் [Mimas, Enceladus (1789)], ஆயிரக் கணக்கான நிபுளாக்கள் கண்டு பிடிப்பு, பால்மய வெளியின் காலக்ஸி மாடல் அமைப்பு [Model of the Milkyway Galaxy], இரட்டை விண்மீன்களின் பொது இருக்கை [Common Existence of Binary Stars], புறவெளிப் பிரபஞ்சத் தீவுகள் இருக்கையின் எதிர்பார்ப்பு [Possibility of External Island Universe (Galaxy)], ஹெர்குலிஸ் விண்மீன் கூட்டத்தை நோக்கிப் பரிதி மண்டல நகர்ச்சி [Motion of the Solar System towards the Direction of Constellation Hercules], உட்சிவப்பு ஒளிக் கண்டுபிடிப்பு [Discovery of Infrared Light] ஆகிய அனைத்தும் வில்லியம் ஹெச்செல் புரிந்த பணிகளில் முக்கியமானவை.

    யுரேனஸ் புறக்கோளின் சிறப்பு அம்சங்கள்

    ஹெர்ச்செல் கண்டுபிடித்த புதுக்கோளுக்கு ‘யுரேனஸ் ‘ என்று பெயரிட்டவர், ஜெர்மன் வானியல் நிபுணர் யோஹான் போடே [Johann Bode]. கிரேக்க இதிகாசப்படி ‘யுரேனஸ் கடவுள் ‘, சனிக் கடவுளின் தந்தை என அறியப்படுகிறது. பூமியைப் போல் நான்கு மடங்கு பெரிதான யுரேனஸ், வியாழன், சனிக் கோள்கள் போன்ற ஓர் வாயுக் கோளம். பரிதியிலிருந்து 1800 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வரும் யுரேனஸ் கோளைச் சாதாரண ஒரு பைனாகுளர் வழியாக வானில் காண முடியும். சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் பார்த்தால், யுரேனஸ் நீலம் கலந்த ஒரு பச்சை வண்ணத் தட்டு போல் தோன்றுகிறது.

    யுரேனஸின் விட்டம் 32,190 மைல். அக்கோள் 22 துணைக் கோள்களையும் [22 Moons], 11 ஒல்லியான வளையல்களையும் [11 Thin Rings] கொண்டது. உட்புற வளையல்கள் 6 மைல் அகண்டவை! வெளிப்புற வளையல் 60 மைல் அகலம் கொண்டது! யுரேனஸ் மேல்முகில் தளத்திலிருந்து உள் வளையல் 11,000 மைல் தூரத்திலும், புற வளையல் 16,000 மைல் அப்பாலும் உள்ளன. பரிதியை ஒரு முறைச் சுற்றி வர, யுரேனஸ் கோளுக்குச் சுமார் 84 ஆண்டுகள் ஆகின்றன. தன்னைத் தானே யுரேனஸ் தன்னச்சில் சுற்றிக் கொள்ள 17.24 மணி நேரங்கள் ஆகும்.

    யுரேனஸ் கோளின் அச்சு [Axis] மிகவும் திரிந்த கோணத்தில் சாய்ந்து [98 டிகிரி Tilt] ஏனைய பரிதி மண்டலக் கோள்களைப் போலின்றி மாறுபட்டுச் சூரியனைச் சுற்றுகிறது! அதாவது யுரேனஸின் துருவ அச்சு [Polar Axis] ஏறக் குறைய, சுற்றுவீதி மட்டத்தில் [Orbital Plane] படிந்து, வட தென் துருவங்கள் மாறி மாறிப் பரிதியை நேரே நோக்கிச் சுற்றுகின்றன! அவ்விதம் பரிதியைச் சுற்றுவதால், யுரேனஸில் விந்தையான காலநிலை நிகழ்கிறது! வட துருவத்தில் 21 பூகோள வருடங்கள் பகல் உள்ள போது, தென் துருவத்தில் 21 வருடம் இரவு நீடிக்கிறது! யுரேனஸின் துருவ அச்சு அத்துணை அளவு கோணிப் போனதற்குக் காரணம் இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒருவேளை பூத வால்மீன் ஒன்றோ அல்லது வேறோர் அண்டம் ஒன்றோ யுரேனஸ் மீது மோதி அதன் அச்சைச் சாய்த்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்!

    யுரேனஸ் வாயுக் கோளத்தில் பெரும்பான்மையாக ஹைடிரஜன் [83%], மற்றும் ஹீலியம் [15%], மீதேன் [2%] வாயுக்களே நிரம்பி யுள்ளன. மீதேன் வாயு யுரேனஸின் மேல் தளத்தில் பரிதியின் செவ்வொளியை உட்கொண்டு, நீலப்பச்சை நிறத்தை உமிழ்கிறது! வியாழன், சனிக் கோள்களைப் போன்று, யுரேனஸின் சூழ்வெளி மட்ட ரேகைப் [Lattitude] பகுதிகளில் சீரான முகில்கள் நிலை பெற்று, கண்கவர் வண்ணப் பட்டைகளாய்க் [Vivid Colour Bands] காணப்படுகின்றன! 1986 ஜனவரியில் அருகே பறந்து சென்ற வாயேஜர்-2 விண்ணாய்வுக் கப்பல் [Voyager-2 Space Probe] யுரேனஸ் தளத்தில் உள்ள மிகக் குளிர்ந்த உஷ்ணத்தைக் [-220 டிகிரி C] காட்டி இருக்கிறது! நடுப்பகுதி மட்ட ரேகைகளில் கடும் புயல் காற்றுகள் மணிக்கு (90-360) மைல் வேகத்தில், யுரேனஸ் சுற்றும் திசையில் எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றன! ரேடியோ விஞ்ஞானச் சோதனைகள் [Radio Science Experiments] மூலமாக ஆராயும் போது, யுரேனஸ் மத்திம ரேகையில் [Equator] மணிக்கு 180 மைல் வேகப் புயல், விந்தையாக எதிர்த்திசை நோக்கி அடிப்பது அறியப் பட்டது!

    William Herschel Discovery

    1977 ஆண்டு வரை யுரேனஸின் 9 வளையங்கள் மட்டுமே அறியப் பட்டிருந்தன! 1986 இல் யுரேனஸை அண்டிய வாயேஜர்-2 விண்ணுளவி மற்றும் 2 வளையங்களைக் கண்டு படமெடுத்து, அவற்றின் பரிமாணங்களையும் அளந்தது. அவ்விரு வளையங்கள் வியாழன், சனிக் கோள்களின் வளையங்கள் போலின்றி மாறாக இருந்தன. வெளிப்புற எப்ஸிலான் [Epsilon] வளையத்தில் பனிப் பாறைகள் பல அடிகள் அகண்டு காணப் பட்டன. அத்துடன் மிக நுண்ணிய தூசிகள் வளையங்களில் படிந்துள்ளதும் தெரிந்தது.

    யுரேனஸின் அச்சு, நீள்வட்டப் பாதையின் மட்டத்தில் அமைந்துள்ளதால், அதன் வீரிய காந்த மண்டலம் அச்சுக்கு 60 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளதை, வாயேஜர்-2 விண்ணுளவி காட்டி யுள்ளது. யுரேனஸ் வாயுக்கோளின் காந்த மண்டலம் எதனால், எதிலிருந்து நிகழ்கிறது என்பது இன்னும் புதிராகவே உள்ளது!

    பூமி, மற்ற அண்டக் கோள்களின் உருகித் திண்ணிய நடுக்கருவால் [Dense Molten Core] காந்த மண்டலம் உண்டாவது போல், யுரேனஸ் கோளிலும் நேரலாம் என்று கருதப்படுகிறது.

    Caroline Herschel

    பிரபஞ்ச காலக்ஸிகளை ஆராய்ந்த ஹெர்ச்செல் குடும்பத்தார்

    பிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.

    வில்லியம் ஹெர்ச்செல் பெற்ற சிறப்பான விருதுகள்

    வில்லியம் ஹெர்ச்செல் வானியல் பணிகள் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு வழி அமைத்ததோடு, அண்ட வெளித் தேடலுக்கும் விதை யிட்டன! காலிலியோவுக்குப் பிறகு மேன்மையான வானோக்காளர் என்று கருதப் படுபவர் ஹெர்ச்செல்! முதன் முதலில் பால்மய வெளியின் காலக்ஸி, விண்வெளி மின்மினிகளின் அமைப்பு ஏற்பாடையும் விளக்கமாக உலகுக்கு எடுத்துக் காட்டியவர் அவர்தான் என்று வில்லியம் ஹெர்ச்செல் கண்காட்சி [William Herschel Museum] அதிபர் பாட்டிரிக் மூர் [Patrick Moore] கூறுகிறார்.

    ஹெர்ச்செல் யுரேனஸ், அதனிரு துணைக் கோள்களைக் கண்டு பிடித்துத் திறமையான வானோக்காளி எனப் பெயர் பெற்றுப் பிரம்மாண்டமான சூரிய மண்டலப் பரிமாணத்தை இரட்டிப்பு செய்தவர்! அப்பணியை மெச்சி பேரரசர் மூன்றாம் ஜார்ஜ் [King George III] அவருக்கு கோப்லே தங்கப் பதக்கம் [Copley Medal] அளித்தார். அடுத்து ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] மதிப்பும் ஹெர்ச்செல் பெற்றார். ராஜீய வானியல் குழுவினரின் [Royal Astronomical Society] அதிபதியாகவும் இறுதியில் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

    கெப்ளர் விண்ணோக்கி

    வில்லியம் ஹெர்ச்செல் தனது 84 ஆவது வயதில் 1822 ஆகஸ்டு 24 ஆம் தேதி காலமானார்! அவர் இறுதியாக 1819 இல் கண்டது ஓர் வால்மீன்! அவருக்குப் பிறகு வானியல் பணியை அவரது புதல்வன் ஜான் ஹெர்ச்செல் அடுத்து மேற்கொண்டு பல அற்புதக் கண்டு பிடிப்புகளைச் செய்தார்! 2007 ஆம் ஆண்டில் அனுப்பி இயங்கப் போகும் ‘ஹெர்ச்செல் விண்வெளி நோக்ககம் ‘ [Herschel Space Observatory] ஈரோப்பிய விண்வெளி ஆய்வுப் பேரவையால் [ESA] தயாரிக்கப்பட்டு வருகிறது.

    பால்மய வெளியில் புதிய வானியல் விண்மீன்களையும், வண்ணச் சுடர்வீசும் கண்கொள்ளா விண்வெளிப் பூக்களையும் நோக்க நோக்க, பிரபஞ்ச அமைப்பின் மகத்தான புதிர்கள் பெருகிக் கொண்டே போகின்றன! விண்வெளியைப் படிபடியாக படையெடுத்து மின்மினிகளைக் கண்பற்றிப் பதிவு செய்யும் வானியல் விஞ்ஞானிகளின் அசுரப் பசி என்றாவது அடங்கப் போகிறதா ?

    ++++++++++++++++++++++

    தகவல்:

    1. New Lights on the Solar System – Scientific American [Oct-Dec 2003]

    2. The Once & Future Universe By: Rick Gore, National Geographic [June 1983]

    3. Coming of Age in the Milky Way By: Timothy Ferris [1988]

    4. Exploration of the Universe By: Abell, Morrison & Wolff [1987]

    5. Uranus: Visit to a Dark Planet By Rich Gore, National Geographic [Aug 1986]

    6. Book of the Universe By: Ian Ridpath [1991]

    7. Exploring the Planets By: Brian Jones [1991]

    8. Planets & Moons By: William Kaufmann [1978]

    9. http://www.newworldencyclopedia.org/entry/William_Herschel  [February 20, 2014]

    10. http://www.britannica.com/biography/William-Herschel

    11. https://en.wikipedia.org/wiki/William_Herschel  [JKune 12, 2016]

    12. http://www.inquisitr.com/4451725/scientists-recreate-diamond-rains-in-neptune-and-uranus/

    13. http://gizmodo.com/scientists-say-its-raining-diamonds-on-neptune-and-uran-1798150640  [August 21, 2017]

    14. http://www.inquisitr.com/4451725/scientists-recreate-diamond-rains-in-neptune-and-uranus/  [August 25, 2017]

    15.  http://nationalpost.com/news/world/it-rains-solid-diamonds-on-uranus-and-neptune  [August 25, 2017]

     

    ************************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  August 26, 2017 [R-2]

    Attachments area
    Preview YouTube video Does It Rain Diamonds On Saturn And Jupiter?

    Does It Rain Diamonds On Saturn And Jupiter?

    Preview YouTube video Raining Diamonds, Tentacle Petting Zoo, Water on Exoplanet

    Raining Diamonds, Tentacle Petting Zoo, Water on Exoplanet

    Preview YouTube video The great big diamond mountain

    The great big diamond mountain

    Preview YouTube video Sir William Herschel — A Path To Discovery | David Rives

    Sir William Herschel — A Path To Discovery | David Rives

    Preview YouTube video Sir William Herschel and his dicovery of infrared radiation

    Sir William Herschel and his dicovery of infrared radiation

    Preview YouTube video The Georgian Star: how William and Caroline Herschel invented modern astronomy

    The Georgian Star: how William and Caroline Herschel invented modern astronomy
    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (6)

     

     

     

    மீ.விசுவநாதன்
    பகுதி: ஆறு

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1-1

    காவியம் இயற்றினார் வால்மீகி

    உருவாய் தருமம் உலகில் பிறந்து
    திருவாய் நடந்த தெய்வக் கதையை

    அகத்தி லாழ்த்தி அமுதாய்ச் சொல்ல
    சுகமாய்த் தனித்துச் சூழல் மறந்து

    நாத வீணை நலந்தரும் இசையை
    வேத நரம்பெலாம் விருப்புடன் கேட்டல்போல்

    வால்மீகி உள்ளே வந்து குவிந்தது
    ஆல்போல் வம்ச அத்தனை செய்தியும்

    உண்மை ஒலியாய் உரக்கக் கேட்டது !
    மண்ணில் நடந்த மனித தருமனை

    கண்ணில் ஒற்றிக் கவிதை செய்ய
    எண்ண எண்ண இராமன் விரிந்தான் !

    உண்ணும் உணவிலும் உத்தமன் ருசியைத்
    திண்ணமாய் உணர்ந்து தீட்டினான் காவியம்!

    சீதையின் மகாவரலாறு

    பிறப்பும் வளர்ப்பும் பிரிந்த நிகழ்வும்
    துறந்த முனிகளின் தூய வழியும்

    சிறந்த நட்பும், சிறிய செய்கையால்
    இறந்த உயிரிலும் இருந்த மேன்மையும்,

    ஆசை கொண்ட அற்ப உறவும்
    ஆசை விட்ட ஆண்மைத் திறமும்

    அப்படியே ஏதும் அழுக்கின்றிச் சொல்லி
    இப்படிதான் வாழ்ந்தான் இராமன் என்று

    எடுத்துச் சொன்ன ஈடிலாச் சரித்திரம்
    தொடுத்துக் கொடுத்த தூயோன் வால்மீகி !

    “இலவ-குசன்” இசைத்த இராமாயணம்

    இராம கதையை எழுதி முடித்தவன்
    நாம மேன்மையை நாட்டு மக்கள்

    அறிந்திடச் செய்ய ஆசை கொண்டார் !
    செறிந்த ஞானம் சிறந்த பண்புடன்

    இணைந்து விளங்கும் “இலவகுச” ரெட்டையர்
    இணைந்திதைப் பாடினால் எப்போதும் உயிர்ப்புடன்

    இருக்கு(ம்) என்று நினைத்த வேளை
    உருக்கும் இசையால் உலகை மயக்கும்

    “இலவனும் குசனும்” இணையிலா முனிமுன்
    தலைவணங்கி நின்றனர் ! தாயாய்த் தந்தையாய்

    தானே இருந்து தங்களை ஆக்கிய”ஆ
    சானே” என்றவர் தாளினைப் பற்றினர் !

    சீதையின் வரலாறைச் சிறப்பாகப் பாட
    மேதைகள் கிடைத்ததாய் மிகவும் மகிழ்ந்தார் !

    படிப்பதற்கும் நன்றாகப் பாடுதற்கும் ஏற்ற
    துடிப்பான குழந்தையெனப் போற்றித் தேர்ந்தார் !

    நன்றாகக் கற்று ஞானம் பெற்றனர் !
    ஒன்றாக இருவரும் ஊரூராய்ச் சென்று

    இராமா யணத்தை இசையுடன் வழங்கினர் !
    கிராம மக்களும் கீர்த்திமிகு முனிகளும்

    பக்திப் பெருக்கிலே பதறாது கேட்டனர் !
    புத்தியில் தருமநெறி புதைத்துக் கொண்டனர் !

    பரிசுப் பொருள்களைப் பாடிய பிள்ளைக்குப்
    பெரிய வாழ்த்துடன் பிரியமாய்த் தந்தனர் !

    “பிற்காலம் இக்கதை பேர்சொல்லும்! ஊன்றிக்
    கற்றோரின் கவலைகள் களியாக மாறும் !”

    என்று முனிவர்கள் இனிதுற வாழ்த்தினர் !
    கன்றுக ளிருவரும் கர்வம் துறந்தனர் !

    அந்த அயோத்தி அரசன் இராமனும்
    இந்தக் கதையை தெருவோரங் கேட்டு

    அரச சபைக்கு அழைத்துவரச் சொன்னார் !
    முரசு முழங்க முகத்தில் சூரிய

    குலமே ஒளிர குழந்தைகள் வந்தனர் !
    நிலவே இரண்டாய் நிலத்தில் நிற்பதை

    அனைவரும் பார்த்து அதிச யித்தனர் !
    இனியவன் இராமன் இப்படிச் சொன்னார்”

    “மங்களங்கள் வாரி வழங்கிடும் கதையை
    உங்களுக்காய் இசைக்க உள்ளனர் இவர்கள் !

    நானும் கேட்டேன் நல்லவள் சீதையின்
    மானங் காத்த மகத்தான வரலாற்றை !

    மீண்டும் என்மனம் கேட்கத் துடித்தது
    ஆண்ட, ஆளும் அயோத்தி அரசரின்

    இரகுகுல சரித்திரம் ரத்தின ஒளியுடன்
    இரகுகுல “லவகுசன்” இசையிலே கேட்கலாம் !”

    குழந்தைகள் கதையைக் கூறத் தொடங்கினர்!
    குழந்தைபோல் இராமனும் முன்னே அமர்ந்து

    கதையில் கரைந்தார் ! கவனம்
    சிதையா சபையும் சேர்ந்து கொண்டதே ! (44)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் மூன்றாவது, நான்காவது பகுதி நிறைந்தது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170826 -Vatsalya -sparrow -lr
    ”கன்றுக்கு பாதம், குருவிக்கு பாதாமும்
    இன்று கொடுத்திடும் இச்சேய்தான் -அன்று
    அணிலின் முதுகை அலங்கரித்த ராமர்:
    கணுவில்வாத் ஸல்யக் கரும்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouseயிக வாகனா மோதகா -houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….
    பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
    பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
    தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
    பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….

    பிள்ளையார் பதினாறு
    —————————-
    ஷோடஸ நாயகர்
    ———————-

    பிள்ளையார் பிறப்பு
    ———————–
    நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
    ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
    மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
    ஞானி வினாயக னை….()….

    ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
    பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
    தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
    கிள்ளியங்கு வைத்தான் கஜம்….()….

    ஸுமுகர் (பெரியவா ”அருள் வாக்கு’’ படித்துவிட்டு எழுதியது)….!
    ———–
    சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
    விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
    இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
    அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….

    ஏகதந்தர்
    ———–
    சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
    யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
    காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
    பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….

    கபிலர்
    ——–
    சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
    தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
    கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
    வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….
    கஜகர்ணகர்
    —————
    கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
    நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
    ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
    பகர்அப லைக்கும் பலன்….(4)….

    லம்போதரர்
    ————–
    சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
    லம்போ தரனால் லகுவாக -வம்போடு
    தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
    நம்பாள் கஜகர் ணகர்….(5)….
    விகடர்
    ———–
    மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
    சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
    லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
    எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….

    விக்கினராஜர்
    —————-
    சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
    இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
    ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
    பூஜா பலனாய் பவிஷு….(7)….

    வினாயகர்
    ————
    வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
    மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
    விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
    சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….

    தூமகேது
    ———–
    சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
    தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
    வாக அவதரித்து வெற்றியை சூடிய
    வாகை வினாயகனை வாழ்த்து….(9)….

    கணாத்யஷர்
    —————
    அனாதியாதி அச்சன் அரசவை பூத
    கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
    தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
    சாமகீதம் சம்சார சிந்து….(10)….

    பாலசந்த்ரர்
    ————–
    நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
    பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
    கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
    தனாக்ஷர தீரம் தரும்….(11)….

    கஜானனர்
    ————-
    அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
    கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
    கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
    பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….

    வக்ரதுண்டர்
    —————
    வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
    நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
    சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
    விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….

    சூர்ப்பகர்ணர்
    —————-
    வரம்தரும் போதே முறம்போல தீதை
    புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
    ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
    சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….
    ஹேரம்பர்
    ————-
    பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
    பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
    ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
    நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….

    ஸ்கந்தபூர்வஜர்
    —————–
    சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
    சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
    முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
    பின்வந்து நிற்கும் பிடி….(16)….
    பலஸ்ருதி
    ————-

    பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
    பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
    அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
    மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….(17)….

    Share