கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
மீசைக்கு பாரதியார், ஆசைக்கு ருக்மணி,
பூசைக்கு ஆழ்வார்கள் பாசுரம், -ஓசைக்கு
வெண்சங்கின் ஓங்காரம், வெற்றி உனக்குத்தான்
உன்சங்கு கீதை உரை’’….!
மூண்ட சமர்தனில் மாண்ட உறவுகள்
மீண்டெழுந்து கண்ணனை கெக்கலிக்க, -பூண்டோடு
பாயாசம் சேர்ந்தாற்போல், வெற்றியில் வாடைவர,
ஆயாச மானார் அவர்….கிரேசி மோகன்….!