மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

உன் கண்ணுக்குள் நோக்கும்
ஒவ்வொரு தருணமும் காண்கிறேன்,
அங்கோர் சொர்க்க புரி
உள்ளதை!
அங்கு நான் பார்த்தால்                     jayabarathan
காதலனின் காதல் தென்படும்!
அவரும் காண்பர் ஒருநாள் காதல்
துவக்க காலத்தை!
உன்னித யத்தில்
ஆழமாய்ப் பதிந்து உள்ளது
என் இருப்பு!
காண்பேன் உன் இதயத்தில்
காதலனின் காதலை!

முன்பதை நான் ஒருமுறைக் கூறினும்,
பன்முறைக் கூறுவேன்,
மேன்மேலும் நான் கூறுவேன்!
நீ என்னை நேசிப்பதை
நிச்சயமாய் நான் நம்புவதால்,
இன்றுமுதல் அறிந்து கொண்டேன்,
வழிப் பாதையில்
நீ என்னை நோக்கும்போது
காதலிப்பதாய் நீ சொல்லும்போது
காண்கிறேன்.

மழை பெய்தால் என்ன?
கவலைப் படேன்!
உன்னிதய ஆழத்திலே நான்
என்றும்
நிலைத்தி ருப்பேன்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.