Blog

  • உன் கண்கள்!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (18)

    உன் கண்கள்!

    (பாடல்)

    10537115_733346410056383_5641177453017657101_n

    உன் கண்கள்! அதில் மலரும்

    என்னெஞ்சம்! அதில் சிரிக்கும்

    உன் கண்கள்! வாழ்க்கை இதே!

     

    தீபங்கள்! தினம்தினமும்

    தீ வேண்டும்! எனக்கென்றும்

    நீ வேண்டும்! நீதான் வேண்டும்!

     

    அருகினில் உருகுகிறேன்

    தொலைவினில் மருகுகிறேன்

    ஒருகணம் பலயுகமாய்

    உதிர்ந்துதிர்ந்து ஏங்குகிறேன்!  (உன் கண்கள்)

     

    காற்றோடு தவழ்ந்துவரும்

    கனவென்றன் பூநெஞ்சம்

    சொல்லாத கவிதை போலே

    சோதிக்கும் உன் பாதம்

     

    பாதத்தில் சேரும் வரை

    பனித்துளியும் பாரம்

    நில்லாமல் உன்னில் தீர

    என்றுவரும் நேரம்?

     

    ஊரில்லை! உயிரன்றிப்

    பேரில்லை! உறவன்றி

    வேறில்லை! விந்தையிதே!

     

    உன்வார்த்தை போதாது

    உன் மெளனம் தாங்காது

    இவையன்றி வேறேதும்

    என்னெஞ்சம் ஏங்காது!

     

    வாழாமல் வாழ்கின்றேன்

    வளராமல் கரைகின்றேன்

    உன்வாசல் ஓரத்தில்

    ஒரே கீதம் பாடுகிறேன்!

     

    நீயின்றேல் ஒருதுளியும்

    நானில்லை! ஒருதுளியும்

    நானிருந்தால் நீயில்லையே!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy
    “ஆலில் மிதந்தவன் ,ஆயர் குலத்தவன்,
    காலிங்கு மாற்றிக் கடுந்தவம், -போலிருத்தல்,
    FIXINGகைப் போக்கிட FUTURE அவதாரம்,
    SIX &FOUR (TEN ) கல்கியாகே சவ்”….!கிரேசி மோகன்….

     

    Share
  • JAMES CHADWICK-THE NEUTRON MAN

    3BD0C600-B09E-475C-9EFB-40821E9F023E

    James Chadwick, desciple of Rutherford, was the great Neuclear scientist who discovered the sub atomic particle- neutron which answered the puzzle of the gap between atomic number & atomic weight of a substance.

    Once again with respect n regards to Dr.Seha.Srinivasan, I dedicate this drawing of JAMES CHADWICK to him for his excellent write up on the great scientist n his contribution to Atomic Physics.

    Su.Ravi
    For paarkka,rasikka…

    Share
  • மந்த்ர ரூபம்

    கே. ரவி

     

    பாடியிருப்பவர்  : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

    மந்த்ர ரூபம்

    {கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே}

    sivan5

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்

    மன்மதனை வென்ற சிவ வைராக்யம் – மணி

    கண்டனே உந்தன் மலர்ப்பதம் – துணை

    கொண்டவர்க்கு வழி புலப்படும்

     

    தென்றலோடொரு செந்தழலெழுந் தன்று செய்தது

    நர்த்தனம் – சிவ

    நர்த்தனம் – அந்தச்

    சங்கமத்தில் வந்த சந்திரன் – ஒளி

    பொங்கித் ததும்பும் எழில் பாலகன்

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்

     

    தன்னையிழக்கும் சரணாகதி அதில் வந்துசிரிக்கும் முகம் முழுமதி

    தேகமேயொரு யோகசாதனம் உணர வைக்குமுன்

    பெருவழி

    தத்வமஸி என்ற தத்துவம் – உன்

    சன்னிதிக்குள் வரும் அனுபவம்

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்.

     

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்பு

    fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus

     

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

     

    http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY

    http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html

     

    சனிக்கோளின் துணைக்கோளில்
    பனித்தளம் முறியக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்பட்டை  வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீறிட்டெழும்
    வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் !
    முகில் மய  அயான் வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் மீண்டும் திறக்கும் !
    நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் !
    வாயிலை வெப்ப மாக்கும் !
    பனிக்கடல்  உருகித்
    தென்துருவ ஆழத்தில்
    திரவ மானது ஓர் புதிர் !
    ஊற்று நீராக வெப்பத்தை,
    உந்துவிசை தன்னை  அளிப்பது எது ?
    விந்தை ஊற்றெழுச்சிகள் !
    புரிந்தும் புரியாதப்
    பிரபஞ்ச நீர்மயப் புரட்சி !

    ++++++++++++++++++++

     

    Encyladus geysers -2

     

    சனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு,  நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான  வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே.   என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் 180 செல்சியஸ் [-292 டிகிரி F].  ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர்.   கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே  உள்ளது என்று கணிக்கப் படுகிறது.  கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில்,  பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.

    லுசியானோ லெஸ்  [ரோம், ஸபைன்ஸா பல்கலைக் கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்] 

     

    Encyladus geysers -1

     

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல !   அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை.

    காரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி]

    fig-3-cassini-space-probe-orbiting-saturn

     

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

     

    Enceladus Erupts

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

     

    Encyladus Icy Moon

    பனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு

    2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி  சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில்  101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது.   என்செலாடஸ் ஒரு பனிக்கோள்.  நாசா விஞ்ஞானிகள்  பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.   அத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் வெடித்தெழுவதைப் பற்றித்  தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன.  காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது.   அந்த ஆய்வுகளின் விளைவாக  நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour]  பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர்.   இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார்.   அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுக்களின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார்.  2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப் பட்டது.   சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்றும் என்செலாடஸில் இத்தைய கொந்தளிப்பை உண்டாக்கி  இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    fig-1-saturns-moon-enceladus

     

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல !   அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார்.

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    jay

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Fountains -1


    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்

    ​ ​

    கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !

    Encyladus geysers -4

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.

    பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?

     

    fig-1c-how-the-geyser-does-function

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.  காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

     

    fig-2-hot-giant-geysers-in-enceladus-south-pole

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.

    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட ​நாசாவின் ​காஸ்ஸினி விண்கப்பல்

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!

     

    fig-3-water-springs

     

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

     

    Cassini Space Probe -1

    காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:

    1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?

    2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?

    3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?

    4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]

    fig-5-saturns-moons

    5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ?  பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா ?  2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன ?

    6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ?

    7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ?

    8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ?

    9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?

    10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32. http://www.space.com/25340-saturn-moon-enceladus-ocean-discovery.html [April 3, 2014]

    33. http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-246&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=NASAJPL&utm_content=cassini20140728  [July 28, 2014]

    34.  http://thetechjournal.com/space/nasas-spacecraft-cassini-spotted-101-geysers-saturns-icy-moon-enceladus.xhtml  [July 31, 2014]

    35.  http://www.techtimes.com/articles/11504/20140731/nasa-cassini-saturn-probe-spots-101-geysers-on-enceladus.htm [July 31, 2014]

     

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [August 8, 2014]

    101 Geysers Spotted on Saturn’s Icy Moon Enceladus
    Share
  • An Empty Canvas

    Ajith
    61EBC28B-1F13-40E4-8986-8B31E5766009

    An Empty Canvas
    Life is like a painting,
    With lots of colors and hues.
    The bits and pieces that float aloof,
    The brush of time to stitch things loose.

    Like the strokes from the painters brush,
    Nothing makes much sense now
    But when we step back and look at the finished painting,
    We cant stop wondering how.

    The shades of colors, the variety of moods
    The sad days and the pastel greys and blues,
    Each stroke from the painters brush,
    Reminds me that life is what I choose.

    An empty mind and an empty canvas,
    are one in the way I see
    Like the painters brush doing the magic,
    I will color my life the way I want it to be!

    He starts musing every now and then,
    to check the painting against his painted mind.
    He chuckles looking at the painting, unfinished
    For only he knows the beauty that’s hidden behind.


    Ajith

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “தாள்பார்க்க தாய்ப்பசு, தோள்பார்க்க சேய்க்கன்று,
    BOWLபண்ணும் கண்ணன் பரவசம் -தூள்கேசவ்;
    சென்னைக்(கு) இவன்SPIN செய்திட IPL
    தொன்னைக்CUP தோனிக்குத் தான்”….கிரேசி மோகன்….

     

    Share
  • நீ சொல்லாதே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (17)

     

    நீ சொல்லாதே!

    {கேட்டு மகிழ சொடுக்குங்கள்மேலே}

     

    ஒரு

    19

    சுழலின் தவிர்க்கவொண்ணாச் சூழ்ச்சியும்

    ஒரு

    மழலையின் தானறியாத ஆட்சியும்

     

    சாமரம் வீச

     

    நீ

    நெருங்கி நெருங்கி வந்தபோதெல்லாம்

    வற்றிய என் உதடுகளை

    வரியோடும் உன் வசந்த இதழ்கள்

    பற்றிக்கொண்டுவிடும் என்று

    பகற்கனவு காணவில்லை

     

    புண்ணியன் அல்லன் நான் என்பது

    புரிந்தே இருக்கிறது எனக்கு

     

    ஆம்

    நினைக்கவில்லை

    நீ முத்தமிடுவாய் என்று

     

    ஆனால்

    நீ வந்து, மூச்சுப்பட நின்று

    நெருப்பை வீசுவாய் என்று

    நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!

     

    எட்டி இருக்கச் சொல்

    எங்கேனும் போகச் சொல்

    ஏன், சாகச் சொல்

    ஏதும் கேட்காமல்

    ஏதும் காட்டாமல்

    செய்து முடிவேன் சேவகனாய்..

     

    ஆனால்—–

    உனக்குள் என்னையும்

    எனக்குள் உன்னையும்

    உருட்டி உருட்டிப் பார்க்கிறதே!

     

    உனக்கும் எனக்கும் நடுவில்

    உயிரை மண்ணாய்ப் பிசைகிறதே!

     

    உறக்கம் கனவு நினைவெல்லாம்

    ஊடுருவிப் புரட்டி எடுக்கிறதே!

     

    ஒன்றையும் வேண்டாமல்

    உயிரை அள்ளி அள்ளி இறைக்கிறதே!

     

    இதயத்தைத் தொட்டுச் சொல்

    இதையா காதலில்லை என்றாய்???

     

    என்-

    காதலை மறுத்துவிடு

    கவலையில்லை! செத்துவிடலாம்

     

    இதைக்

    காதலில்லை என்று மட்டும்

    கண்ணே! நீ சொல்லாதே!!

     

    அவமானத்திற்கு மரணம் கிடையாது

    அது நரகங்களின் தலைநகரம்………..

     

     

     

     

     

    Share
  • அரசுப் பள்ளி- மறவபாளையம்

    கல்வி துளிர்

    வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்றது கொங்குநாட்டு சிங்கிங்க. நான் இன்று உங்களிடம் பேசப் போவது கல்வித்துளிர் என்னும் தன்னார்வ அமைப்பைப் பற்றி.

    காங்கயம் அருகிலுள்ள மறவபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செயல்படும் அமைப்பே கல்வித்துளிர். எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க,காரணம் சொல்றவன் காரியம் செய்யமாட்டான், காரியம் செய்யறவன் காரணம் சொல்லமாட்டான்னு. அது போல, அரசுப் பள்ளியில் படித்து முட்டிமோதி கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகளால் நடத்தப்படும் முன்னாள் மாணவர்கள் அமைப்பே கல்வித்துளிர்.

    பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சிவப்ரகாசம் அவர்களே மீண்டும் அப்பள்ளிக்கு 2009 ம் ஆண்டு இறுதியில் தலைமையாசிரியராக வந்துள்ளார். அவரின் முயற்சியாலும், முன்னாள் மாணவர்களிடம் அவருக்கு இருந்த நல்லுறவின் காரணமாக உதயமானதே கல்வித்துளிர்.

    பணம் என்னும் மாயக்காரனால் பள்ளிக் கல்வி மறுக்கப்படும் அனைவருக்கும் உதவுவதும், இயற்கை விவசாயம், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதும் அவர்களின் நோக்கம். ஊர் மக்களை தன்னுடன் இணைத்துக் கொள்வது, கல்விக்கு உதவிட விரும்பும் மனமுள்ளவர்களை தன்னுடன் அணைத்துக் கொள்வது என திண்ணிய நெஞ்சமுடனும் தெளிந்த நல்லறிவுடனும் ஜந்தாண்டுகளுக்கு மேலாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது கல்வித்துளிர்.

    ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் பல பேர் படித்து பலனடைந்த வரலாறு, வெறும் சில பேர் படிக்கும் பள்ளியாய் மாறிப் போனது. எட்டு வகுப்புக்கள் கொண்ட பள்ளிக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கல்வித்துளிர் தரும் சிறு பகுதின்னு போட்டு மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கல்விக்கண் திறந்துள்ளனர். இடைவிடாத போராட்டத்தின் விளைவாய், தமிழக அரசு ஒரு ஆசிரியரை இந்த கல்வியாண்டு முதல் நியமித்துள்ளது.

    பிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என வாழ்ந்து படிக்கும் பாடங்களை சுயமுன்னேற்ற வகுப்புகள் மூலமாகவும்,ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது.

    மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. தொலைக்காட்சியில் தன்னை தொலைக்காமல் இருக்க, காக்னிஸண்ட் மென்பொருள் நிறுவனத்தால் ரூ.30,000 அதிகமான மதிப்பில் வழங்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டு பள்ளியிலேயே நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவும், இணையம் பற்றிய பயிற்சிகளும் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

    டைல்ஸ் / கிரானைட் தரை,அனைவருக்கும் தரமான சீருடை,LCD புரஜெக்ட்டர், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை என காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை அடிப்படை வசதிகளுடன் சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் உழைத்துக் கொண்டுள்ளனர். தங்கள் தேவைக்கும் அதிகமாக வரும் அன்பளிப்புகளை சென்னிமலையில் உள்ள பாரதியார்.மன நலம் குன்றிய அமைப்பு, சிவன்மலை கோயிலால் நடத்தப்படும் கருணை இல்லம் என கொடுத்துவிடுகிறார்கள்.

    முகநூலில் பக்கம் அமைத்து முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களை இணைக்கின்றனர் (https://www.facebook.com/govtschoolmaravapalayam).

    மறவபாளையம் அரசுப் பள்ளியில் வேர் விட்டு உலகெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் தற்போது வேரைத் தாங்கும் விழுதுகளாய் முளைக்கத் தொடங்கியுள்ளனர். வரும் காலங்களில் அவர்களின் விழுதுகள் பக்கத்துக் கிராமங்களுக்கும் வேர் பிடிக்க நாமும் வாழ்த்துவோம்.

    கல்வித்துளிரில் இணைய : kalvithulir@gmail.com.
    முகநூலில் : https://www.facebook.com/kalvi.thulir
    Share
  • காதல் நாற்பது (17)

    ஓரிடத்தைத் தேர்ந்தெடு!

    Elizabeth-Browing2

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னரும் கவிஞனே !  நீ தொடலாம்
    கடவுள் தனது படைப்பில்
    முற்பட்ட பிற்பட்ட
    கானச் சுரங்கள் அனைத்தையும் !
    தூய தென்றலில் மௌனமாய் மிதக்கும்
    இன்னிசையை மீட்பாய் !

    ஆரவார உலகத்தின் கூச்சல்களை
    வேரறுப்பாய் நீ !
    மனித இனம் கைவிட்ட நற்பலனை
    மீட்டு வர
    அவரது செவிகளுக்குள் ஊற்றி
    மாற்று மருந்தளிப்பது
    உன்னிசை !

    அவ்வித முடிவுகட்கு உன்னை
    அர்ப்பணம் செய்வது
    கடவுளின் நியதி !
    உனக்காக நான் காத்திருப்பது
    எனக்காகத் தான் !
    பெரும்பான்மைப் பயன்களுக்கு
    எவ்விதம் நான் ஈடுபட வேண்டுமென
    எண்ணுகிறாய் நீ
    எனக்கி னியவனே ?

    ஒரு நம்பிக்கை கொண்டு
    உவகை யோடு
    நானும் பாடவா ? அல்லது
    மோனத்துடன்
    என் மெல்லிய சோக நினைவுகள்
    உன் கீதங்க ளோடு கலந்து
    ஒன்றிக் கொள்ளவா ?

    பாடி மகிழ நமக்கு
    ஒரு பைன் மரத்தடி நிழலா ?
    அல்லது
    பாடாது ஓய்வெடுக்க
    ஓர் சமாதியா ?
    ஏதேனும் ஓரிடத்தைத்
    தேர்ந்தெடு !

    ********************

    Poem -17

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    My poet, thou canst touch on all the notes
    God set between His After and Before,
    And strike up and strike off the general roar
    Of the rushing worlds, a melody that floats
    In a serene air purely. Antidotes
    Of medicated music, answering for
    Mankind’s forlornest uses, thou canst pour
    From thence into their ears. God’s will devotes
    Thine to such ends, and mine to wait on thine.
    How, Dearest, wilt thou have me for most use
    A hope, to sing by gladly? or a fine
    Sad memory, with thy songs to interfuse?
    A shade, in which to sing–of palm or pine?
    A grave, on which to rest from singing? . . . Choose.

    **********

    Share
  • பொதுவுடைமை!

    -சேசாத்ரி பாஸ்கர்

    அந்த வயதில் எல்லோரையும் ஈர்த்த வஸ்து
    ஆண் பெண் பேதமில்லை
    யாருக்கு அதிகம் என்பதில் போட்டி…                    mehandi
    எல்லோரும் காத்திருக்கும் இரவு!

    வாசம் மூக்கைத் துளைக்கும்
    சாப்பிடலாமா?
    ரப்பர் பந்துபோல் அம்மா உருட்டும் லாவகம்
    யாருக்கு வரும்?

    வட்டமாய் அமர்வது வாகு
    பங்கு குறையாது
    தள்ளி நின்றால் சுண்டக்காய் மிஞ்சும்
    கூச்சம் இங்கு அகௌரவம்!

    முதல் குப்பி கட்டை விரலுக்கு
    பின்னர் எல்லா மந்திரிகளுக்கு
    எல்லோர் மனசும் நெருக்கம்
    விரல்கள் மட்டும் விலக்கு!

    சண்டை போட்ட அக்கா தம்பிக்கு
    மூக்கில் சொறியும் அன்பு அமெரிக்கா அறியுமா?
    தனித்தனி கனவுகள்
    ஆனாலும் எல்லோரும் கூட்டமாய் அதில்தான் வருவர்

    வறண்ட  குப்பியை விலக்கி நீர் நனைத்து
    சிவப்பை நோக்கும் கண்கள்…ஆணாவது பெண்ணாவது
    மருதாணி இரு பாலார்க்கும் பொது…!

    Share
  • மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை

    — முனைவர்.பி.ஆர்..லட்சுமி.
    பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்),எம்.ஏ.,(மொழியியல்),எம்ஃபில்.,டிஎல்பி.,(பிஜிடிசிஏ).,(எம்பிஏ)
    தமிழ்த்துறை வல்லுநர்

     

    ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது.

    தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு  பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை.

    பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன.

    கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ்  பங்கியாவைப்   ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து உடையத் தொடங்கிய நிலப்பரப்பு கோண்டுவானா. வடக்கிலிருந்து பிரிந்த நிலப்பரப்பு இலாராசியா. கோண்ட்வானா மீண்டும் உடைந்து தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று பிரிந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோண்ட்வானா பெருங்கண்டம் அமைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    கன்னியாகுமரி வரலாற்றுச் சிறப்புமிக்க இதனைத் தென்கடலில் மூழ்கிப் போன குமரியத்தின் எஞ்சிய நிலமாகக் குமரிமுனை, இலங்கை, இலட்சத் தீவுகள் அறியப்படுகின்றன.
    ”பஃறுளி-…………………………………………
    ………………………………கொடுங்கடல் கொள்ள”…….சிலம்பு கா. காதை (19-20) பாடலடிகள் தமிழ்மொழியின் பெருமையை அறியச் செய்துள்ளது. குமரிக்கோடு என்ற மலைநிலத்தைச் சுற்றி குமரி ஆறு, மலை, அதனைச் சுற்றி நாடுகள் பல இருந்தன. அவைகளே பஃறுளியாறு, குமரிக்கோடு. குமரிமுனையின் வரலாறு குறித்து
    •    ஸ்டிராபோ-கி.மு.74-கி.பி-24
    •    தாலமி—கி.பி.119-161
    •    மார்க்கோபோலோ—கி.பி.1254-1324 போன்றோர் ஆய்வு செய்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
    தாலமி இந்தக் குமரி முனையை ‘ புரோமன்போரியம் குமரி‘ என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் பஃறுளி ஆறு அழிந்து, குமரிக்கோடு கடலில் மூழ்கிய பின், முசிறியின் பல பகுதிகளும் கடலில் மூழ்கின. கடல்கோள் நடந்த செய்திகள் கி.பி. 79 ஆகஸ்டு 23-24 அத்துடன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் (300) இறுதி எனவும், காவிரிப்பூம்பட்டினம், மலங்கே என்ற மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் ஆகியன கடலில் மூழ்கியவற்றைக் கூறுகின்றனர்.

    ”குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வழியாக வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்) மக்கள்  எகிப்தியர் என்று ” புராதன கிழக்கு வரலாறு”  (The Ancient History of the Near east) என்ற தமது நூலில் ஆர்.எச்.ஹால் என்பவர் கூறுகிறார்.. அவரே  திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் கூறுகிறார். இதே கருத்தினை( outline of history by H.G Wellman”s place in nature  and other essays P.23 Thoms Huxle) மற்றும்” ருக்வேத இந்தியா ” என்ற தமது நூலில் அபினஸ் சுந்தரதாஸ் என்பவரும் ” புராதனக் கலைஞன் ” என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனீஸ் ஆகியோரும்  குறிப்பிடுகின்றனர்.

    ஏராளமான சங்கச் செய்திகள் சமகாலமான சங்க இலக்கிய எழுத்துகளில் கிடைத்துள்ளன. புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப் பத்து 7,8,9 ஆம் பத்துக்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ பெயர் பொறித்த பழந்தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது. தேரிருவேலி அகழாய்வில் நெடுங்கிள்ளி பெயர் பொறித்த பானை ஓடும், மாக்கோதை, கொல்லிப்பாறை, கொல்லிரும்பொறை, குட்டுவன்கோதை என்ற சேரர் பெயரும், பெருவழுதி என்ற பாண்டியர் பெயரும் பொறித்த காசுகளும்  கிடைத்துள்ளன.

    அண்மைக்காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் பல சங்ககாலச் சோழர்  புலிக்காசும், பெரும்பத்தன் கல் என்று பழந்தமிழ் எழுதப்பட்ட தங்கம் உரைத்துப் பார்க்கும் உரைகல்லும் கிடைத்துள்ளன. எகிப்து நைல் நதிக்கரை ஊரான குவாசிர் அல்காதிம் என்ற ஊரில் கண்ணன், சாத்தன், பனை ஒறி என்று எழுதப்பட்ட பானை ஓடுகளும், பெறனிகே என்ற இடத்தில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானைஓடும் கிடைத்துள்ளது. இவை சங்ககாலத்தின் இருப்பையும், தொன்மையையும், காட்டுகின்றன. (செவ்வியல் ஆய்வுக்கோவை, உலகத் தமிழ்ப்படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சிராப்பள்ளி, மு.பதி.2011)

    விழுப்புரம் கீழ்வாலை மலைப்பாறைப் பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், குறியீடுகள் போன்றவை பழங்காலத்து வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளனவாக அமைந்துள்ளன. இங்கு காணப்படும் ஓவியங்கள் ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா ஓவியங்களை ஒத்துள்ளது.

    செங்கோன் தரைச்செலவு குறித்த நூல் குமரிக்கண்டம் குறித்த பழமையான செய்திகளைத் தரலாம் என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. சமவயங்க சுத்த என்ற சமண நூல் (18 மொழி-தொகுப்பு) வாயிலாகத் தமிழ்மொழி குறித்த பல செய்திகளை அறியலாம். லலிதா விஸ்தாரம் என்ற பௌத்த நூல் தொகுப்புப் பட்டியலில் தமிழ்மொழி குறித்த செய்திகள் கிடைக்கலாம்.

    கி.மு 4500-இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுபற்றி எகிப்திய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல், 300 புராதன அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதி வைத்தார். எகிப்தில் மீனன் சவ உடல் மதமதக்கத் தாழி என்ற குழு தாழியில் தைலம் பூசிப் புதைக்கப்பட்டுள்ளது. கி.மு.4000 ஆண்டில் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான். அவர்கள் பேசிய மொழி தமிழ்மொழி எனப் பலநூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    tamil 1

    கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன.  எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு(பாண்டியர்)நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

    tamil 2

    சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம்  அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த  கடலாடிப் பகற்பரவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழியினரே பிரிட்டானியர்.  இச்செய்திகளின் வழி தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது என அறியப்படுகிறது.

    யோனாகுனி  தீவை ஒட்டிக் கடலில் மூழ்கித் தேய ஆய்வாளர்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்தில் பிரமிடுகள் போன்ற வடிவத்துடன்கூடிய கட்டுமானங்களைக் கண்டறிந்தனர்.கற்களால் ஆன இந்தக் கட்டுமானங்கள் இயற்கையா? இலெமூரியாக் கண்டத்தின் நாகரிக எச்சங்களா என்ற ஆய்வு நிலை நீடித்து வருகிறது.

    இலெமூரியாக் கண்டம் என்பதை மூ என்று சொல்வார்கள். இந்தியாவிலும், பர்மாவிலும் உள்ள இந்து மடாலயங்களில் கிட்டும் ஆவணங்கள் இது பற்றிப் பேசுகின்றன.

    ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சுசர்ச்சுவார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ அல்லது இலெமூரியாக் கண்டம் ஹவாய் தொடங்கி மரியானாவரை பரவி இருந்ததாகவும், கடற்கோள் ஏற்பட்ட பிறகு தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிசுக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவுக்கும் அகதிகள் பரவினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிரெஞ்சு எழுத்தாளர் அகசுதசு லெ பிளாஞ்சீயோன்(1825-1908) 19 ஆம் நூற்றாண்டில் மூ கண்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மாயன் சுவடிகளை அவர் மொழியாக்கம் செய்தபோது மூ என்னும் கண்டம் இருந்தது குறித்தும், அக்கண்டத்திலிருந்து தப்பித்தவர் மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் எழுதியுள்ளார். இதன்வழி இலமூரியாக் கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    எட்கார் காய்சி(1877-1945) அட்லாண்டிசு பற்றியும், மூ பற்றியும் அறிந்தவரான இவரே முதன்முதலில் இலெமூரியாக்கண்டம் எனப் பெயரிட்டார். துறவி தந்த சுவடிகள் வழி மூ என்னும் பழம்பெரும் நாகரீகம் குறித்து அறியப்பட்டுள்ளதாக நந்திவர்மன் குறிப்பிடுகிறார் (கடலடியில் தமிழர் நாகரீகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.,மு.ப.2010) .

    tamil 3

    மேலும், மூழ்கிக் கிடக்கும் அட்லாண்டீசு தென் சீனக் கடலில் இருப்பதாயும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூழ்கிய குமரிக்கண்டம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கனடா நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஏட்டில் திசம்பர் 7,இல் செய்தியாளர் மைக்கேல்  கியூபா நாட்டருகே கடலடி நாகரிகம் குறித்த சான்றுகள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

    tamil 4

    கியூபா நாட்டு மாந்த உயிரியல்( Anthropology ) அகாதமியின் ஆய்வாளர் ஒருவர் அந்தப் பாறையின் மீது குறியீடுகளும், கல்வெட்டு எழுத்துகளும் தெளிவாகப் பார்க்கமுடிந்ததையும், அது எம்மொழி எனத் தெரியவில்லை எனவும் குறித்துள்ளார்.

    இதன்வாயிலாகத் தமிழ்மொழியின் பெருமை அறியப்படவேண்டிய நிலையிலேயே இன்னமும் அமைந்துள்ளது. இவ்வாய்வு முடிவுகள் வெளிவரின் தமிழ்மொழியின் பெருமை தழைத்து வளரும்.இது குறித்து இன்னமும் ஆய்வுகள் வெளிவர தமிழ்மொழி செழித்து வளரவேண்டும்.சுவடிகள் படிக்கவும்,கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் குறித்தும் அறிய மக்கள் முன்வரவேண்டும்.

    Share
  • காற்று வாங்கப் போனேன் (30)

    கே.ரவி

    காலபைரவன் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துகிறேனா? காலத்தில் முன்னும், பின்னும் நாம் சென்றுவர வேண்டுமென்றால் அவன் துணை வேண்டும். காலக் குதிரையின் கடிவாளம் அவன் கையில்.

    ஆங்கிலத்தில் டைம், ஸ்பேஸ் என்று சொல்லப்படும் காலமும், வெளியும் எப்போதுமே புதிரானவை. இந்த இரண்டில் எது முன்னது, எது பின்னது என்று கேட்டால், முன்-பின் என்ற தொடர் மூலம் காலம் தலைக்காட்டித் தானே முன்னிற்கும். இந்த இரண்டில் எதிலிருந்து எது வந்தது என்று கேட்டால், எதற்கு எது இடமளித்தது என்ற கேள்வியாக அதை மாற்றி வெளியாகிய இடமே வியாபித்து நிற்கும். தலைசுற்ற வைக்கும் இரட்டைக் குதிரைகள் அப்பா!

    dravidமுன்பொருமுறை, 1988-ஆம் ஆண்டு என்று ஞாபகம், சென்னை, பெஸண்ட் நகரில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயிலில், ஆதிசங்கரர் விழாவையொட்டி, நண்பர் சுப்பு, இப்பொழுது மிகப் பிரபல எழுத்தாளராயிருக்கும் ‘திராவிட மாயை’ சுப்பு, ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கவிமாமணி மதிவண்ணன் தலைமையில் நான் பாடிய பாடலின் பல்லவி இப்பொழுது நினைவுக்கு வருகிறது:

    வெளிச்சம் வந்தா இருட்டு எங்கே போகும் – அட

    இருட்டு தானே வெளிச்சமுனு மாறும்

     

    இப்படி இரட்டைப் புதிர்கள் இயற்கையில் ஏராளம். 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கவியரங்கத்தை நான் இப்போது நினைத்துக் கொண்டதற்குக் காரணம், நான் புதுக்கவிதையோ அல்லது அது மாதிரி ஏதாவதோ எழுதியிருக்கிறேனா என்ற கேள்விதான். அந்தக் கவியரங்கத்தில், மேலே குறிப்பிட்ட பாடலைப் பாடிவிட்டு நான் படித்த ஒரு கவிதை, அல்லது வசனம், என் நினைவில் நிழலாடுகிறது. அதையும்தான் சொல்லி வைக்கிறேனே:

     

     

    ஓம்!

     

    பஞ்ச பூதங்களை வணங்குகிறேன்

     

    ஆதாரம் ஆகி என்னைத் தாங்கும் நிலத்தை

     

    ஆகாரம் ஆகி என்னைக் காக்கும் ஜலத்தை

     

    தேகாபி மானம் கொன்று புசிக்கும் நெருப்பை

     

    ஓசைகள் பறக்கச் சிறகு கொடுக்கும் காற்றை

     

    ஓங்காரம் என்ற லயம் ஜனிக்கும் வெளியை

     

    வணங்குகிறேன்

     

    லம் வம் ரம் யம் ஹம்

     

    ஐந்தும் கடந்து சென்று

     

    ஆறாவ தான புருவ மத்தியில்

     

    மாறாத ஜோதி வடிவில்

     

    பாராள வந்த பஞ்ச பூதங்களை

     

    ஒருமைப் படுத்தி வணங்குகிறேன்

     

    நீங்களிட்ட பிச்சை – நான்

     

    அணிந்திருக்கும் சட்டை – என்

     

    ஒவ்வோர் அணுவும் உங்கள் வசம் ஒப்படைக்கப் போகிறேன்

     

    பஞ்ச பூதங்களே பஞ்ச பூதங்களே – என்

     

    த்யானம் பலிக்கட்டும் – என்

     

    சங்கல்ப தீபம் சத்தியமாக ஜொலிக்கட்டும்

     

    எத்தனை மேடு பள்ளங்கள் ஏறி இறங்கிய பாதங்கள்

     

    எத்தனைக் கோடி உயிர்களின் மீது நடந்தன கேளுங்கள்

     

    தட்டுப்பட்ட பொருள்களைத் தட்டி விட்ட புறங்கால்கள்

     

    தண்டைபொற் சதங்கை கட்டி நடனமிட்ட கணுக்கால்கள்

     

    தண்டனிட்டு மண்டியிட்டுத் தேய்ந்து போன முழங்கால்கள்

     

    ஆணவத்துடன் ஆயிரம் முறைத் தட்டப்பட்ட தொடைகள்

     

    ரத்தஓட்டப் பித்தலாட்டத்(து) அகப்பட்டு முறுக்கேறிச்

     

    சத்தழிந்து போவதற்கே சதிசெய்த குறியீடு

     

    உண்டுயிர்த்து வாழ்வதையே மாபெரும் லட்சியமாய்க்

     

    கொண்டிருக்க வைத்த வயிறு

     

    தேகத் தினவு தீரச் சத்தமிட்டுப் பிறர்

     

    நோகச் சிரித்து நொந்தவிலா

     

    உணர்வலை ஓட்டத்தில் சிக்குண்டு

     

    துடித்துத் துடித்துத் துவண்ட மார்பு

     

    பந்தபாச நுகத்தடிக்கே தந்த இரு தோள்கள்

     

    தன்னைவிடச் சிறியவர்கள் தன்னிச்சைக் கடிபணிய மடங்கித்

     

    தன்னைவிட வலியவரின் தண்டனையில் இருந்து தப்ப வணங்கித்

     

    தன்னுடையதாய் எண்ணித் தர்மத்தின் பேர்சொல்லி வழங்கி

     

    மடங்கிக் குவிந்து வளைந்து மெலிந்த கைகள்

     

    ஆகாத ஓசைகள் ஏராளம் எழுப்பி ஆகாசம் கெடுத்த தொண்டை

     

    காவல் மறந்து பேசிப்பேசிக் கலிவளர்த்த நாக்கு

     

    கர்மவாசம் அற்றுப் போகாமல் நுகர வைத்த மூக்கு

     

    வண்ணமே வடிவமென்றும் வடிவமே உண்மையென்றும்

     

    கண்டு மயங்கிச் சுழன்ற கண்கள்

     

    வியப்பூஞ்சல் ஆடியாடி வில்லாய் வளைந்த புருவங்கள்

     

    கவலைக் கதிர்கள் தாக்கித் தாக்கிச் சுருங்கிப் போன நெற்றி

     

    மெளனம் என்ற மகோன்னதத்தை மறக்க வைத்துச்

     

    சத்தச் சில்வண்டின் ரீங்காரத்தில் மரத்துப் போன காதுகள்

     

    நாடி நரம்பில் ஓடியடைந்த சேதிகளை

     

    வகைப்படுத்துவதிலேயே அறிவு முழுக்கச் செலவழித்த மண்டை

     

    அத்தனையும் உங்களிடம் அர்ப்பணிக்கிறேன்

     

    அக்குவே றாணிவே றாகக் கழற்றி

     

    ஒவ்வோர் அணுவும் உங்கள் வசம் ஒப்படைக்கப் போகிறேன்

     

    பஞ்ச பூதங்களே பஞ்ச பூதங்களே – என்

     

    த்யானம் பலிக்கட்டும் – என்

     

    சங்கல்ப தீபம் சத்தியமாக ஜொலிக்கட்டும்

     

    ஓம்!

     

     

     

     

    நிலம், நீர், காற்று, நெருப்பு, வெட்டவெளி ஆகியவற்றைப் பஞ்ச பூதங்கள் என்று குறிப்பிடும் வழக்கம் இந்தியாவில் உண்டு. இந்தக் கட்டத்தில் 1996-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொள்கிறேன். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வானவில் பண்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு பாரதி விழாவில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

    வானவில் பண்பாட்டு மையம், பாரதி விழா என்று நான் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போனால் எப்படி? விளக்க வேண்டாமா?

    1994-ஆம் ஆண்டில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி என்னுடைய சில பாடல்களை சங்கீதா ஸ்டூடியோவில் பதிவு செய்தேன். என் மேல் மிகவும் அன்பு கொண்ட அந்த ஸ்டூடியோவின் நிறுவனர் மஹேஷ், அந்தப் பாடல்கள் கொண்ட ஒலிப்பேழையைத் தாமே வெளியிட முன்வந்து உதவினார். அதில் பதிவு செய்யப் பட்டதெல்லாம் தெய்வப் பாடல்கள். அது கூட ஒரு கேள்விக்கு இடம் தந்துவிட்டது.

    ஏற்கனவே வல்லமையில் அந்தப் பேழையில் இருந்து கலைமகள் மேல் உள்ள பாடலின் வரிகளை மட்டும் பதிவேற்றியிருந்தார்கள். அதைப் படித்துவிட்டுத் தேமொழி என்ற சகோதரி அது பக்திப் பாடல்தானா என்று கேட்டிருந்தார். அந்தப் பாடலின் ஒலிப்பதிவைக் கேட்டால் இன்னும் என்ன சொல்வாரோ? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நான் அடிக்கடிச் சொல்வதுபோல், ஜேசுதாஸ் காதல் பாட்டுப் பாடினாலும் அது பக்திப் பாடல் போல் இருக்கும், எஸ்.பி.பி. பக்திப் பாடல் பாடினாலும் அது காதல் பாடல் போல இருக்கும். அடுத்த காரணம், எனக்கே பக்திக்கும், காதலுக்கும் வேறுபாடு புரியாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடும் போது இந்த வேற்றுமை எப்படிக் குறுக்கே வரும்? நான் காதலியைப் பாடினாலும் பக்திதான்; மதுரை மீனாட்சியைப் பாடினாலும் காதல்தான். அந்தப் பேழையில் இருந்து வல்லமையில் வரிவடிவில் மட்டும் பதிவான கலைமகள் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள், அது காதலா, பக்தியா என்று நீங்களே தீர்ப்புச் சொல்லுங்கள்:

    பாடலைக் கேட்கச் சொடுக்கவும் —.

    அந்த இசைப்பேழைக்குத் ‘தெய்வகானாம்ருதம்’ என்று பெயர் தந்து அதை வெளியிட ஒரு விழா நடத்த வேண்டுமென்று மஹேஷ் என்னைக் கேட்டுக் கொண்டார். சங்கீதா நிறுவனம் வெளியீட்டு விழாக்கள் நடத்தும் வழக்கம் இல்லையென்பதால் வேறு ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் அந்த விழாவை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒரு கணம் சிந்தித்தேன். சிந்தனைக் கோட்டம் செயலற்றவுடன் திரு.ஒளவை நடராஜனின் நல்யோசனையின்படி ‘வானவில்’ என்று ஒரு கட்டமைப்பில்லாத, அதாவது, ஆங்கிலத்தில் இன்ஃபார்மல் என்பார்களே அப்படியோர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதில் ஒவ்வொரு மாதமும் ஓர் இலக்கிய ஜாம்பவானை அழைத்துப் பேசச் சொல்லிக் கேட்பது என்று முடிவு செய்தோம். அது 1970 – ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஆழ்வார்பேட்டையில் இருந்த என் மூத்த சகோதரி நந்தினி சத்தியமூர்த்தி வீட்டில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்தோம். ஒரு மாதம் பெரியவர் பி.ஶ்ரீ. அவர்கள் தள்ளாத வயதிலும் வந்து சாய்ந்து படுத்தவாறே, கம்பராமாயணக் காட்சிகள் சிலவற்றை விவரித்ததை மறக்க முடியுமா?

    .. .. .. .. … … … … … … அவர்

    சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்

    அசோக வனத்தில் சீதை இருந்த நிலை பற்றிய கம்பனின் வரியை அந்தக் கிழவர் அப்போது அனுபவித்துச் சொன்னவிதம் கேட்டவர் செவிகளில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும்.

    அதே போல் இன்னொரு மாதம், பேராசிரியர் அ.சீ.ரா. என்ற ஆ.சீனிவாஸ ராகவன் வந்து “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி” என்ற பாரதி பாடலின் நாலே நாலு வரிகளை வியந்து, விளக்கி ஒன்றரை மணி நேரம் பேசி எங்களையெல்லாம் பிரமிப்பில் ஆழ்த்தியதைத்தான் மறக்கமுடியுமா? இல்லை, ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் நந்தினி படைத்த நல்விருந்தை, அதுவும் நா.பாவும், ஒளவையும் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்டு வாங்கிக் குடித்த ஆப்பிள் மில்க்கைத்தான் மறக்க முடியுமா? அந்த நிகழ்ச்சிகள் ஏனோ நாலைந்து மாதங்களுக்குமேல் தொடரவில்லை. அதே வானவில் பெயரில் நண்பர் சுப்புவால் நாமகரணம் செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ல் பிறந்ததுதான் வானவில் பண்பாட்டு மையம்.

    krs

    இசைப் பேழை வெளியீட்டு விழா முடிந்ததும் வானவில் பண்பாட்டு மையத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆலோசனை செய்த போது சுப்பு கொடுத்த யோசனைதான், ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை விமரிசையாக, அதுவும் திருவாரூர் தியாகைய்யர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடுவது. அப்படித்தான் ஆரம்பித்தோம் ஆண்டுதோறும் பாரதி விழா கொண்டாடும் வழக்கத்தை. அந்த விழாவில், முதலாண்டில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தள்ளாத வயதிலும் வந்து கலந்து கொண்டு ஆற்றிய பேருரையும் சரித்திர நிகழ்ச்சிகள்.

    arr

    ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்குவது என்றும் முடிவு செய்தோம்.

    ravi

    kss

    மூன்றாவது ஆண்டு பாரதி விழா, 1986-ஆம் ஆண்டு, டிசம்பர் 8-ஆம் தேதி, சென்னை ம்யூஸிக் அகாடமி பிரதான கூடத்தில் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அதில் பாரதி விருது வழங்க இரண்டு பேரைத் தேர்வு செய்து விட்டோம். ஒருவர், பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி. ‘பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாரதி கண்ட கனவு மெய்ப்பட அவர் ஆற்றிவந்த கல்விப் பணிக்காக அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நான் கேட்டவுடன் ஒப்புக் கொண்டு விட்டார். இன்னொருவர் அப்போது புதுதில்லியில் மிக முக்கியமான மத்திய அரசு அலுவலராக இருந்தார். “சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் கனவு மெய்ப்படப் பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். தொலைபேசியில் அவரை அழைத்ததும், “நான் பாரதி பக்தன். மேலும் உங்கள் விழாக்குழுத் தலைவர் செம்மங்குடி சீனிவாசய்யரின் அபிமானி. உங்கள் அழைப்பை எப்படி மறுக்க முடியும்?’ என்று அவர் கேட்டதும் நெகிழ்ந்து போனேன். விழா நாள் வந்தது. அதற்கு இரண்டு சோதனைகள் ஏற்பட்டன. ஒன்று அந்த விழா நடைபெற வேண்டிய நாளுக்கு நலைந்து நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டி காலமாகி விட்டார். அதனால் அரசாங்கம் பத்துநாள் துக்கம் என்று அறிவித்து விட்டது. அதனால் விழாவில் நான் எழுதிய முதல் தமிழ் நூலை வெளியிட ஒப்புக் கொண்டிருந்த கல்வியமைச்சர், பேராசிரியர் அன்பழகன் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. விழாவுக்கு முந்தைய நாளில் இருந்தே சென்னையில் பலத்த புயல், மழை. விழாவன்று காலையில் விருது பெற்றுக் கொள்ள தில்லியில் இருந்து வந்துவிட்ட அந்த அறிவியற் பெருமகனாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விழாவை ஒத்தி வைக்கலாமா என்று கேட்டேன். அவர், ” வேண்டாம், குறித்த படியே நடத்தி விடலாம்” என்றார். விழா நடந்தது. நீதியரசர் பக்தவத்சலம் விருது வழங்கினார். திருமதி ஒய்.ஜி.பி. அவர்களும், அந்த அறிவியற் பெருமகனாரும், அவர்தாம் பிறகு நம் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் விருது பெற்றுக் கொண்டு நல்லுரையாற்றினார்கள். “நமக்குத் தொழில் கவிதை” என்ற என் நூலை டாக்டர் ஒளவை நடராஜன் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

    ravi

    பொறுமை! பொறுமை! பஞ்ச பூதத்துக்கு வந்து விடுகிறேன்!

    ஒளவை அவர்கள் அந்த விழா நிறைவின்போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ ஏன் கவிதை என்பதை அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ மாயப் பொருளாகச் சித்தரித்திருக்கிறாய்? நம் நாட்டில்தான் அறிவு புறக்கணிக்கப் படுகிறது. நிலம், நீர், காற்று என்று நாம் அன்றாடம் காணும் பொருள்களைக் கூடப் பஞ்ச பூதங்கள் என்று சொல்லிக் கதையளக்கிறோம். நீயும் ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறாய்?”

    அந்தக் கேள்விக்கு நான் அப்போது எதுவும் விடை சொல்லவில்லை. சிந்தித்துப் பிறகு சொல்கிறேன் என்று நழுவி விட்டேன், ஏனென்றால், அதற்குள் திரு.கலாம் அவர்கள் என்னை அருகில் வரச் சொல்லி அழைத்துவிட்டார். சென்றேன். ஷோபனாவையும் அழைத்தார். அவளுடைய செய்தி வாசிப்பைப் பாராட்டிச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு, என்னிடமே தாள் கேட்டுப் பெற்று அதில் ஒரு கவிதையும் எழுதித் தந்தார், ‘எழுச்சி உள்ளம்’ என்ற தலைப்பிட்டு. அது இதோ:

    எழுச்சி உள்ளம்

    செல்வத்திற் கெல்லாம் தலையான செல்வம்kalam

    என்ன என்ன என்று எண்ணுக!

    உயர் லட்சியத் தீக்கொழுந்தால்

    எழுச்சி செய்யப்பட்ட உள்ளத்தின் சக்தி

    எல்லாச் சக்திக்கும் பெரிய சக்தி;

    சக்திக் கெல்லாம் சக்தி!

    பூமியிலும் விண்ணிலும் பூமிக்கடியிலும்

    நிகரில்லாத சக்தி!

    மாந்தரின் உள்ளச் சக்தி!!

    கலாம் விடை பெற்றுச் சென்ற பிறகு, ஒளவையிடம் உங்கள் கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். இன்னும் சொல்லவில்லை. ஆனால், அதற்கான விடை, மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக படைத்தபோது அதில் வெளிப்பட்டது. அந்த விடையை அடுத்த பகுதியில் சொல்கிறேனே!

    (தொடரும்)

    Share
  • அந்தக்கால விளையாட்டுகள் – பேசும் படம்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    paesum padamஉங்களுக்கு இப்போது வயது ஐம்பது அல்லது அதற்கு மேல் இருந்தால் இந்த வார்த்தை உங்கள் நினைவுகளில் ஒரு புத்தகத்தைக் கொண்டு நிறுத்தும். “பேசும்படம்” அந்த காலத்தில் வீட்டில் அப்பா அம்மா, குழந்தைகள் இந்த புத்தகத்தைப் பார்க்கக்கூடாது என்றாலும், குழந்தைகள் பார்த்து படிக்க ஆசைப் படுவதும் இந்த பேசும் படம்தான்.

    சினிமா என்பது தியேட்டரில் மட்டுமே பார்க்க வாய்த்த காலத்தில் இந்த புத்தகம் சினிமா என்னும் மாய உலகின் தோற்றங்களை அதன் தேவதைகளை நமக்கு காட்டிய ஜன்னல். அதில் நடிகர்களின் நடிகைகளின் வண்ணப்படங்கள், சினிமா பற்றிய செய்திகள், பேட்டிகள், ஒரு படத்தின் வசனங்கள், புதிய படங்களைப் பற்றிய செய்திகள், ரிலீஸ் தேதி எல்லாம் வரும். படிப்பதற்கு ஒரு ஆர்வமும், மனதிற்கு ஒரு கிளர்ச்சியும் தரும்.

    அம்மாவுடன் தியேட்டரில் போய் சினிமா பார்ப்பது ஒன்றுதான் சாத்தியம். வானொலியில் சிலோன் நிலையம் சினிமா பாடல்களை ஒலிபரப்பும். நம் வானொலி ஞாயிறு தோறும் ஒரு சினிமாவின் ஒலிச்சித்திரம் ஒரு மணி நேரத்திற்கு ஒலி பரப்பும். ரேடியோ இருக்கும் வீடுகளில் கூட்டம் திரளும்.

    மாட்னி காட்சியில் தியேட்டரின் வாசல்களை திரைபோட்டு மூடி இருட்டில் படம் போடுவார்கள். கொஞ்சம் வளர்ந்து தனியாக சினிமா போகும் போது முன் உள்ள வெள்ளைத்திரையில் பின் சுவரின் ஓட்டைகளில் இருந்து வரும் ஒளிக்கற்றைதான் சினிமாவைக் கொண்டுவந்தது என்பது புரிந்தது.

    கொஞ்சம் தெரிந்த நண்பர்கள் ஆபரேட்டர் ரூம் பற்றியும், பிலிம் பற்றியும் லென்ஸ் பற்றியும் சொல்வார்கள். தியேட்டரில் வெட்டி எறிந்த பிலிம் எங்கள் கைகளில் கிடைக்கும். அதற்கும் எங்கள் வகுப்பு விஞ்ஞான பாடம் சினிமா புரொஜக்டரின் எப்படி சினிமா திரையில் விழும் என்பதை சொல்லிக் கொடுத்த்து.

    பயாஸ்கோப்புதிருவிழா சமயங்களில் பாரு பாரு பயாஸ்கோப் பார்த்தோம். ஒரு தாத்தா நம் கண்ணை அதில் பொருத்தச் சொல்லி கையால் வேகமாக சுற்ற திரையில் சின்னதாக சினிமா நகரும். அதன் பிறகு கடையில் விற்கும் சினிமா டப்பா விலைக்கு வாங்கியிருக்கிறோம். அதில் ஒரு கண் மூடி ஒரு கண் பதிய வைத்து மறுமுனையில் ஒரு ஃபிலிம் உயிர்கொண்டு எழும். சிவாஜி அல்லது எம்.ஜியார் நிற்பார். அந்த பிம்பம் அந்த பெட்டியின்  உட்புறச் சுவர்களிலும் தெரியும். ஒரு லென்ஸ் ஒரு விளக்கு பிலிம் இருந்தால் சினிமா காட்டலாம் என்ற ஆசை வந்தது. வீட்டில் சினிமா பார்க்கும் ஆசை வந்தது. அந்த கால கட்டத்தில் பின்னால் வரப்போகிற டெலிவிஷன் பற்றியோ அது நம் வீட்டு வரவேற்பறையில் 24 மணி நேரமும் சினிமாவை கொண்டு வந்து நம் மீது திணிக்கப் போகிறது என்றோ நினைத்துக் கூடப் பார்க்க இயலாத நேரம்.

    இந்த சமயத்தில்தான் பேசும் படம் தன் பங்கை செய்தது. பேசும் படம் படித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். நடிக நடிகைகளின் படங்கள், பேட்டிகள், வசனம் போக விளம்பர பக்கங்களில் தவறாது மூன்று விளம்பரங்கள் நம் கவனம் ஈர்க்கும். ஒன்று நீங்கள் யூகியுங்கள் பார்க்கலாம். சரி நானே சொல்கிறேன். வசிய மோதிரம். ஒரு கல் வைத்த மோதிரத்தின் படம் போட்டு  இந்த மோதிரம் அணிந்தால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் என்று இருக்கும். இரண்டாவது உங்கள் யூகம் சரிதான் துப்பாக்கி. திருடர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள தற்காப்புக்கு ரிவால்வர் உறையுடன். 50 குண்டுகள் இலவசம். லைசென்ஸ் தேவையில்லை.

    மூன்றாவது விளம்பரம் வீட்டில் இருந்த படியே சினிமா பார்க்கலாம். புரொஜக்டர் விற்பனை. நீங்க விபரங்களுக்கு எழுதினால் வி.பி.பி யில் அனுப்புகிறோம் என்று வரும். அந்த நாட்களில் அதை வாங்க நமக்கு காசும் இல்லை, இருந்தாலும் வீட்டில் சினிமா பார்க்கும் ஆசை யாரை விட்டது.

    பயாஸ்கோப்பு2அப்பொழுத்தான் எங்கள் குழுவிற்கு புரொஜக்டர் நாமே செய்தால் என்ன என்று ஆசை வந்தது. அதற்கான செயல் திட்டங்களில் இறங்கினோம். ஒரு புரொஜக்டரின் பாகங்கள் சினிமா எப்படி திரையில் விழுகிறது என்பதை அலசினோம்.

    அடுத்த ஞாயிறு எங்கள் வீட்டில் சினிமா காட்டுவதாக ஏற்பாடு. புதன் கிழமை மாலை பள்ளி விட்டு வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் துவங்கின. ஒரு அட்டைப் பெட்டியை வாங்கி அதன் எதிர் எதிர் பக்கங்களில் ஓட்டை போட்டு அதில் ஒரு பக்கம் லென்ஸ் மறுபக்கம் பிலிம் வைப்பதாக ஏற்பாடு. இந்த லென்சின் பின்னாலிருந்து டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினால் அது லென்ஸ் வழியாக பிலிமில் பட, படம் திரையில் விழும் என்று நம்பினோம். சேகர் சுந்தரம் டாக்கீஸிலிருந்து யாரையோ பார்த்து கொஞ்சம் பிலிம் வாங்கி வந்தான். நாங்கள் எங்கள் வீட்டு காமிரா ரூமைத் தியேட்டராக்குவதாக முடிவு செய்தோம்.

    அந்த நாட்களில் தெருவில் வீடுகள் ஒன்றுக்கொன்று அடுத்து அடுத்து இருக்கும். வாசலில் இருந்து உள்ளே போனால் தாழ்வாரம் கூடம் என்று இரண்டு அமைப்புக்கள். தாழ்வாரத்தின்  ஓரத்தில் முற்றம் பள்ளமாக இருக்கும். தாழ்வாரத்தின் வழியாக கொல்லைக்குப் போகலாம். கூடத்தில் வாசல் முனையில் ஒரு ரூம் இருக்கும். அதை காம்ரா ரூம் என்று சொல்வோம்.

    ரொம்ப நாளைக்குப் பிறகுதான் எனக்கு தெரிய வந்தது அது இந்தியில் ‘கம்ரா’ என்றால் ‘ரூம்’ என்று. நம்மவர்கள் கேட் – கதவு, லைன் – கரை என்பது போல் கம்ரா – ரூம் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. நான் காமிரா ரூம் இருட்டாக இருப்பதால் அந்த ரூமுக்கு காமிரா உள் என்று பெயர் என்று நினைத்தேன். அதன் ஒரு பக்கம் கதவும் இன்னுமொரு பக்கம் சின்ன ஜன்னலும் இருக்கும். கொஞ்சம் வெளிச்சம் குறைவாக இருக்கும்.

    எங்கள் வீட்டு ஜனத்தொகை அதிகம். நாங்கள் குழந்தைகள் ஆறு பேர், அம்மா, அப்பா, அத்தைப் பாட்டி. அப்பாவைப் பற்றியும் இங்கு உங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்பா வேலைக்குப் போவார். எங்களிடம் அன்பாக இருப்பார். ஆனால் கோபக்காரர். விஷமம் பண்ணினால் கையில் கிடைப்பதை எடுத்து அடித்துவிடுவார். முக்கியமாக அவர் தூங்கும் போது இடையூறு வந்தால் அடி சாத்திவிடுவார்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் சாப்பிட்டு கூடத்தில் படுத்து ஒரு நான்கு மணி நேரம் தூங்குவார். எங்களையும் அவர் பக்கத்தில் படுக்கச் சொல்வார் அவர் தூங்கும் வரை நாங்கள் கண்மூடி இருந்து அவர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நாங்கள் மெதுவாக கையை விலக்கிக்கொண்டு கொல்லைப்பக்கமோ வாசல் பக்கமோ வெய்யில் வீணாகாமல் அப்பாவுக்கு எங்கள் சத்தம் கேட்காமல் விளையாடச் சென்று விடுவோம். அப்பாவை எழுப்புவதற்கு முன் அம்மா எங்களைக் கூப்பிடுவாள். நாங்கள் சமத்துப் பிள்ளைகளாக அப்பாவுடன் டிபன் சாப்பிடக் காத்திருப்போம்.

    அம்மாவிடம் பர்மிஷன் கேட்டோம். என் பெரிய தங்கையை கூட்டு சேர்த்துக் கொண்டேன். அம்மா சில கண்டிஷன் போட்டாள். திங்ககிழமைப் பாடம் எல்லாம் சனிக்கிழமை செய்து முடிக்க வேண்டும் அதிக கூட்டம் சேர்க்கக் கூடாது. சத்தம் போடக்கூடாது. நாங்கள் எல்லா ஷரத்துக்கும் உடன் பட்டோம்.

    அப்பாவுக்கு சனிக்கிழமை அரைநாள் ஆபீஸ் ஆனால் வெயில் தாழ நாலு மணிக்கு வருவார். அதற்குள் முன்னேற்பாடுகள் செய்து விட நினைத்தோம். புரஜக்டர் செய்தோம். அதை காமிரா உள்ளிற்கு எடுத்து சென்று ஜன்னல் மூடி சுவரில் படம் தெரியும் தூரத்தில் வைத்துப் பார்த்தோம். டார்ச் வெளிச்சம் பரவ சுவர் அருகில் இருந்த்தால் படம் தெளிவாக சின்னதாக தெரிந்த்து. மற்றபடி வெளிச்சத்தினால் மங்கலாகத் தெரிந்தது.

    அப்பா வருவதற்குள் புரொஜ்க்டரை பத்தாயத்திற்கு இடையில் வைத்தோம். அப்பா வந்தார். நாங்கள் என்றுமில்லாதத் திருநாளாக வீட்டுப் பாடம் பண்ணிக்கொண்டிருந்தோம். அப்பாவுக்கு அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.

    அவர் மாலை கடைத் தெருவிற்குப் புறப்பட்டதும் எங்கள் குழு அவசர கூட்டம் கூட்டி நாளைய நிகழ்ச்சிகளை உறுதி செய்து திட்டமிட்டோம். மிகவும் வேண்டிய சிலரை மட்டுமே கூப்பிடுவதாக உறுதி செய்தோம். புரொஜக்டர் தயாரித்த மூன்று பேருக்கு மூன்று பேர் அனுமதி. லென்ஸ் கொடுத்த ராமன் ரெண்டு பேர், சேகருக்கு ஒரு ரண்டு டிக்கட். அப்பறம் எங்கள் கிளாஸில் படித்த கமலாவின் தம்பிக்கு, அவன் கிரிக்கெட் குருப்பில் எங்களைச் சேர்த்துக் கொண்டதாலும் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும் கமலாவின் தம்பி என்பதாலும் அவனுக்கு அனுமதி. வேண்டுமானால் கமலாவை அழைத்து வரலாம்.

    இதை கேட்டுக்கொண்டிருந்த என் தங்கை அப்ப என் ஃபிரண்ட் கோமதியும் வருவா என்றாள். அவள் உதவி இந்த திட்டத்தில் அப்பாவை சந்திக்க பெருமளவில் தேவை என்பதால் அவள் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    ஆக்கூடி ஒரு 15 பேர். ரூம் ரொம்ப சின்னது. அப்பா வருவதற்குள் கூட்டம் கலைக்கப்பட்டது. எல்லோரும் இரண்டு மணிக்கு வீட்டு வாசலில் வரவேண்டும், சிக்னல் கிடைத்தவுடன் உள்ளே வரலாம்.லேட்டாக வருபவர்களுக்கு இடம் இல்லை. இது கண்டிப்பான உத்திரவு.

    இரவு கனவில் சினிமா நன்றாக தெரிந்தது. காலை எழுந்தவுடன் எங்களுக்கு சுறுசுறுப்பு. அம்மா சொன்ன வேலையெல்லாம் செய்தோம். ஒழுங்காக சண்டை போடாமல் சாப்பிட்டோம். வெய்யில் கொளுத்தியது.

    அப்பா வழக்கப்படி படுக்க ஆயத்தம் பண்ணினார். எங்கள் போதாதகாலம் அவர் வழக்கமாக படுக்கும் இடத்தில் படுக்காமல் பத்தாயத்திற்கு அருகில் ரூமுக்கு போகும் வழியில் படுத்தார். வெய்யில் அதிகமாக இருப்பதால் அங்கே படுப்பதாக சொன்னார். நாங்கள் அம்மாவைப் பார்த்தோம். அம்மா பார்க்காதமாதிரி இருந்து விட்டாள்.

    கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து குறட்டை விட ஆரம்பித்தார். நாங்கள் சுறுசுறுப்பானோம். ஒரு குழு மெதுவாக வந்து புரொஜ்க்டரை ஜாக்கிரதையாக எடுத்து உள்ளே போய் எண்ணெய் போடாத கதவு சத்தம் போட மூடி ரெடிபண்ணினார்கள். நான் இரண்டு பேரை வாசலில் நிறுத்தினேன். அதற்குள் வந்து வெளியே சிக்னலுக்கு காத்திருந்தவர்களை என் தங்கை சைகையால் சத்தம் போடாமல் வரவும் அப்பா தூங்குகிறார் என்றும் அபிநயம் பிடித்தாள்.

    நான் அப்பாவின் வெள்ளை வேஷ்டியை ஸ்க்ரீனாக கட்டினேன். கூடத்தில் கோணி கட்டி இருட்டாக்கினேன். அம்மாவை வரச்சொல்லி சைகை காட்டினேன். அவளும் உள்ளே வந்தாள். உள்ளே ஹவுஸ் ஃபுல். கூட்டம் நிரம்பி வழிந்தது. இருட்டில் யாருக்கு பக்கத்தில் யார் என்று தெரியவில்லை. டார்ச் வெளிச்சம் போதவில்லை. பிறகு நாங்கள் பல்பு எடுத்து கனைக்ஷன் கொடுத்து அதை வைக்க வெளிச்சம் ரூம் முழுவதும் பரவியது. அதை மறைக்க ஒரு ஸ்டூல் திருப்பி போட்டு அதில் அம்மாவின் கருப்பு புடவையைப் போர்த்தி நடுவில் பல்பு வைத்து திரையில் முதல் படம் தெரிந்தது. எங்கள் கனவு பலித்த்து. எல்லோரும் சந்தோஷத்தில் கத்த, நான் கிடைத்த தொடையைக்கிள்ளி ‘ஷ்’ என்றேன்.

    அந்த சமயத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்த்து. என் தங்கையின் ஃபிரண்டு கோமதியும் அவள் குண்டு தம்பியும் லேட்டாக வர அவர்கள் வரும் சத்தம் கேட்டு என் தங்கை ரூம் வாசலில் வந்து “மெதுவா” என்று சொன்னாள். அவர்கள் லேட்டாக வந்ததால் சினிமா போய்விடுமே என்று பரபரப்பாக வர, வெளியில் வெளிச்சத்தில் வந்தவர்களுக்கு உள்ளே இருட்டில் கண்தெரியாமல் போக, குண்டுதம்பி அப்பாவின் காலை எட்டிவிட, அப்பா தூக்கத்தில் அதை நகர்த்த அந்த இடத்தில் மகாபலி மீது வாமனர் கால் வைத்தமாதிரி வைத்து அழுத்தி விட்டு எதிர்பார்க்காமல் எதையோ மிதித்ததில் பயந்து “ஆ” என்று கத்த, அப்பா தூக்கத்தில் எழுந்தார்.

    இவர்களைக் காப்பாற்ற என் தங்கை அவர் முன் நிற்க அவர் எழுந்ததும் ஒன்றும் புரியாமல் என் தங்கையைப் பார்த்து சத்தம் போட்டு விசிறியை எடுத்தார். நிலைமையின் தீவிரம் அறிந்து அவள் தீ பிடித்த வீட்டில் தப்பித்து ஓடுவது போல் கொல்லைப் பக்கம்  ஓடினாள். அப்பா கோபத்தில் அவளைப் பிடிக்க அவள் பின் ஓடினார். இருட்டு, தூக்கக் கலக்கம், இடுப்பில் இருந்த வேஷ்டி நழுவ அதை ஒரு கையால் பிடித்த படி ஒரு கையில் விசிறியுடன் ஓடினார்.

    இந்த சமயத்தில் இவ்வளவு கஷ்டத்திற்கு நடுவிலும் எனக்கு அப்பா ஓடுவதைப் பார்த்து சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அம்மா பின்னால் போனாள். என் தங்கை மாரிசன் போல் வேகமாக ஓடி எங்களைக் காப்பாற்ற கிணற்றங்கரை வரை போய்விட்டாள். அப்பா அவளை அடிக்கும் சத்தமும் அவள் அம்மா என்று அலறும் சத்தமும் கேட்டது.

    இன்னும் விபரீதம் நடப்பதற்குள் தியேட்டரில் இருப்பவர்களை ஓடச் சொன்னேன். அவர்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று போலீஸ் தடியடிக்குப் பயந்து ஓடும் கூட்டம் போல் அந்த சின்ன வாசல் வழியாக இருட்டில் ஓட, பத்தாயத்தின் கால் தடுக்கியவர்கள், நிலைப்படியில் இடறி விழுந்தவர்கள், உயரமானவர்கள் நிலைப்படியில் முன் தலை மோத, எவனோ ஒருத்தன் போகிற போக்கில் அப்பா குடிக்க வைத்திருந்த தண்ணீர் சொம்பை உருட்டி விட கூடம் முழுவதும் தண்ணீர்.

    பின்னங்கால் பிடரியில் பட ஓட்டமாய் ஓடி, மாயமாய் மறைந்தனர். வீட்டு ஜனத்தொகை விளைவுகளுக்கு பயந்து நின்றது. நான் என் தங்கையை காப்பாற்றத் தீர்மானித்து, ஓடிப் போய் அப்பா முன் சரண்டரானேன். அப்பா என் பக்கம் திரும்பி விளாசினார். அம்மா சமாதானம் பண்ண அப்பா தூக்கம் தெளிய, தடியடி நின்றது. உள்ளே வந்து நிதானமானவுடன் “என்னடா சத்தம் தூங்கறேன்னு தெரியாது” என்று சொல்லி நாங்கள் விசும்புவது பார்த்து இரக்கப்பட்டு தண்ணீர் இல்லாத இடத்தில் வேறு பாய் போட்டு பக்கத்தில் படுக்க வைத்தார். பயத்தில் நாங்கள் தூங்கிப் போனோம்.

    ஒரு மணி ஆயிருக்கும். நானும் தங்கையும் எழுந்து ஒருவொருக்கொருவர் பார்த்துவிட்டு அப்பா எங்கே என்று பார்த்தோம். அப்பா தூக்கம் கலைந்து முகம் கழுவி வந்திருந்தார். அம்மா பூரி மசால் பண்ணி, “வாங்கோ சாப்பிடுங்கோ. இப்படியா கண்ணு மண்ணு தெரியாம அடிப்பா. பாவம் பயந்துடுத்துகள்” என்றாள்

    அப்பா தன் தவறை உணர்ந்து “தூக்கம் கலக்கம் ஒண்னும் தெரியல. என்ன சினிமா விளையாட்டு விளையாடினானா. பாவம் நான் கூட சின்ன வயசில அப்பா தூங்கிண்டிருந்தபோது இப்படி ஏதோ ஒரு விளையாட்டு விளையாடி அவர் தூக்கம் கெட்டு அடிச்சார். எல்லாம் சகஜம். விடு, எழுப்பு… பாவம் அதுகளுக்கு பூரி பிடிக்கும்” என்றார்.

    அம்மா எழுப்புவதற்காகக் காத்திருந்தோம். அப்பா பக்கம் திரும்பவில்லை. “என்னடா இதெல்லாம்” என்று அப்பா பொய்க்கோபம் காட்டினார். நாங்களும் பொய்யாக பயந்து கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு சாப்பிட்டோம்.

    அதற்குப் பிறகு அப்பா தூங்கும் போது மட்டுமில்லை எப்போதுமே இந்த சினிமா விளையாட்டை விளையாடவில்லை. அந்த ஞாயிறு மத்தியானம் என்னால் மறக்க முடியாது.

    இப்போது என் பிள்ளைகள் வந்து விட்டார்கள். நான் ஞாயிற்றுக் கிழமைகளில்  அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் படுத்து தூங்குகிறேன். அவர்களும் ரூம் கதவை சாத்திவிட்டு, சத்தம் காதைப் பிளக்க மேட்சும் சினிமாவும் பார்க்கிறார்கள். இப்போது நினைத்தாலும் எனக்கு அந்த நாள் ஞாபகம் வரும். உங்களுக்கு?

     
     
     
     
     
     
     
     

    படம் உதவிக்கு நன்றி:
    http://pudhiavan.blogspot.com/2012_02_01_archive.html
    http://vrnspv.wordpress.com/page/4/
    http://www.mayyam.com/

    Share
  • ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    makkalaippetra maharasi

    கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களின் எழுத்தாக.. மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல்     தமிழகத்தின் மூலை     முடுக்குகளில் மட்டுமல்ல.. தமிழ்பேசும் உள்ளங்களில் எல்லாம் உச்சரிக்கப்பட்ட வரிகளாய்..      எளிமையாய்.. இனிமையாய்.. அமைதியாய்..  காதலைப் பரிமாறும் இருநெஞ்சங்கள் இதோ..
    ka.mu.sheriffk.v.m.m.n.rajamm.n.nambiar
    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் விளைந்த இந்த கானம் பாடியவர்கள் பி.பி. சீனிவாஸ், உதிதா சரோஜினி, ஆகிய இரு குரல்கள்.. அதிகப்படங்களில் வில்லனாக தோன்றி நம் மனதில் இடம்பெற்ற எம்.என்.நம்பியார் அவர்கள் எம்.என்.ராஜம் அவர்களோடு இணைசேர்ந்து திரையில் தோன்றிடும் பாடல்!

    கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட புதுமையாய் திரையில் தோன்றும் இவர்களின் ஜோடி.. வழங்கிய இப்பாடல் தொன்றுதொட்டு.. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அடிக்கடி இடம்பெறுவதற்கு காரணம் நேயர்விருப்பமன்றி வேறென்ன?

    அன்பின்பால்பட்ட நெஞ்சங்களில் பிரிவு வந்துவிடக்கூடாது அல்லவா.. என்றாலும் இந்த சந்தேகம் அவ்வப்போது வந்து தலைநீட்டுவது வழக்கம்தானே?  எனவேதான்.. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்று பல்லவி அமைகிறது!  மாறாத அன்பால் மறுஜென்மம்கூட நாம் வாழ வேண்டும் என்று காதல் கொண்ட மனங்கள் பிரார்த்தனை செய்வது சகஜம்தானே!  கேளுங்கள் இனிமையான பாடல்.. நெஞ்சுக்கு இதமாக இனிய குரல்களில் மறுமுறை!!

     

     

    http://youtu.be/BZMnkYU4oKc

    காணொளி: http://youtu.be/BZMnkYU4oKc

    திரைப்படம்:    மக்களை பெற்ற மகராசி ( 1957)
    பாடலாசிரியர்:    கவி கா.மு.ஷெரீப்
    இசை: கே. வி. மகாதேவன்
    பாடகர்கள்:    பி.பி. ஸ்ரீநிவாஸ், சரோஜினி

    பெண்:
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
    உண்மைக் காதல் மாறிப் போகுமா
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
    உண்மைக் காதல் மாறிப் போகுமா
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

    ஆண்:
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
    உண்மைக் காதல் மாறிப் போகுமா
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
    உண்மைக் காதல் மாறிப் போகுமா
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

    பெண்:
    முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
    இந்நாளிலே காதல் மண்ணாவதோ
    முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
    இந்நாளிலே காதல் மண்ணாவதோ

    ஆண்:
    சொந்தம் எண்ணியே
    வாழ்வில் கொண்டோம் காதலே
    என்னாசை தங்கமே நேசம் மாறுமா
    சொந்தம் எண்ணியே
    வாழ்வில் கொண்டோம் காதலே
    என்னாசை தங்கமே நேசம் மாறுமா

    பெண்:
    பகையாலே காதலே அழியாது கண்ணா
    பகையாலே காதலே அழியாது கண்ணா

    ஆண்:
    பண்போடு நாமே இன்பம் காணுவோம்
    நாளுமே பாரிலே…..

    பெண்:
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
    உண்மைக் காதல் மாறிப் போகுமா
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

    ஆண்:
    என் ஆவியே கண்ணே உன் போலவே
    மண் மீதிலே வேறு பெண்ணேதம்மா

    பெண்:
    இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
    என் ஆசை கண்ணா நீ என் தெய்வமே

    ஆண்:
    அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்

    பெண்:
    பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே

    ஆண்:
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா…

    பெண்:
    உண்மைக் காதல் மாறிப் போகுமா…

    இருவரும்:
    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா…

    Share