–கவிஞர் காவிரிமைந்தன்.

 

makkalaippetra maharasi

கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களின் எழுத்தாக.. மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல்     தமிழகத்தின் மூலை     முடுக்குகளில் மட்டுமல்ல.. தமிழ்பேசும் உள்ளங்களில் எல்லாம் உச்சரிக்கப்பட்ட வரிகளாய்..      எளிமையாய்.. இனிமையாய்.. அமைதியாய்..  காதலைப் பரிமாறும் இருநெஞ்சங்கள் இதோ..
ka.mu.sheriffk.v.m.m.n.rajamm.n.nambiar
திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் விளைந்த இந்த கானம் பாடியவர்கள் பி.பி. சீனிவாஸ், உதிதா சரோஜினி, ஆகிய இரு குரல்கள்.. அதிகப்படங்களில் வில்லனாக தோன்றி நம் மனதில் இடம்பெற்ற எம்.என்.நம்பியார் அவர்கள் எம்.என்.ராஜம் அவர்களோடு இணைசேர்ந்து திரையில் தோன்றிடும் பாடல்!

கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட புதுமையாய் திரையில் தோன்றும் இவர்களின் ஜோடி.. வழங்கிய இப்பாடல் தொன்றுதொட்டு.. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அடிக்கடி இடம்பெறுவதற்கு காரணம் நேயர்விருப்பமன்றி வேறென்ன?

அன்பின்பால்பட்ட நெஞ்சங்களில் பிரிவு வந்துவிடக்கூடாது அல்லவா.. என்றாலும் இந்த சந்தேகம் அவ்வப்போது வந்து தலைநீட்டுவது வழக்கம்தானே?  எனவேதான்.. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்று பல்லவி அமைகிறது!  மாறாத அன்பால் மறுஜென்மம்கூட நாம் வாழ வேண்டும் என்று காதல் கொண்ட மனங்கள் பிரார்த்தனை செய்வது சகஜம்தானே!  கேளுங்கள் இனிமையான பாடல்.. நெஞ்சுக்கு இதமாக இனிய குரல்களில் மறுமுறை!!

 

 

http://youtu.be/BZMnkYU4oKc

காணொளி: http://youtu.be/BZMnkYU4oKc

திரைப்படம்:    மக்களை பெற்ற மகராசி ( 1957)
பாடலாசிரியர்:    கவி கா.மு.ஷெரீப்
இசை: கே. வி. மகாதேவன்
பாடகர்கள்:    பி.பி. ஸ்ரீநிவாஸ், சரோஜினி

பெண்:
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

ஆண்:
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

பெண்:
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ

ஆண்:
சொந்தம் எண்ணியே
வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
சொந்தம் எண்ணியே
வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா

பெண்:
பகையாலே காதலே அழியாது கண்ணா
பகையாலே காதலே அழியாது கண்ணா

ஆண்:
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே…..

பெண்:
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

ஆண்:
என் ஆவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண்ணேதம்மா

பெண்:
இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என் ஆசை கண்ணா நீ என் தெய்வமே

ஆண்:
அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்

பெண்:
பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே

ஆண்:
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா…

பெண்:
உண்மைக் காதல் மாறிப் போகுமா…

இருவரும்:
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *