Blog

  • ஆலமரம் நிற்கிறது!

    -எம்.ஜெயராமசர்மாமெல்பேண்

    அழகான ஆலமரம்                                             banyan tree
    கிளைவிட்டு
    நின்றதங்கே
    விழுதெல்லாம்
    விட்டுஅது
    வேரோடி
    நின்றதங்கே

    ஆலமர நிழல்தேடி
    அனைவருமே
    வருவார்கள்
    வேலையில்லா
    நிற்போரும்
    விரும்பி
    வந்திருப்பார்கள்

    காலைமாலை என்றின்றி
    காளையரும்
    வருவார்கள்
    சேலையுடன்
    பெண்கள்வந்து
    சிரித்து
    விளையாடிடுவர்

    நாலுமணி ஆனவுடன்
    ஆளரவம்
    கூடிவிடும்
    ஓடிடுவார்
    ஆடிடுவார்
    உல்லாசம்
    கூடிவிடும்

    பந்து விளையாடிடுவர்
    சிந்து
    கவிபாடிடுவர்
    கெந்தி
    அடித்துநிற்பர்
    கிட்டிப்
    புள்ளும்ஆடிடுவர்

    பெரியவரும் வருவார்கள்
    சிறியவரும்
    வருவார்கள்
    பேசாமல்
    ஆலமரம்
    பெருமையுடன்
    வரவேற்கும்

     விழுது பற்றியாடிடுவர்
    மேல்மரத்தில்
    ஏறிடுவார்
    அழுங்குழந்தை
    ஆடுதற்கு
    அங்கூஞ்சல்
    கட்டிடுவார்

    சீட்டு விளையாடிடுவர்
    சிரித்து
    விளையாடிடுவர்
    ஆர்ப்பரித்துச்
    சிறுவரெலாம்
    அங்கங்கே
    ஓடிநிற்பர்

    வேர்க்கடலை கொறிப்பாரும்
    வெற்றிலையை
    மெல்வாரும்
    பாற்பொருளை
    உண்பாரும்
    பார்த்திடலாம்
    மரநிழலில்

    ஆயிரம் பேரமர
    ஆலமரம்
    நிழலைத்தரும்
    அனைவருமே
    இளைப்பாறி
    அகமகிழ்வு
    பெற்றிடுவர்

     சித்திரை பிறந்துவிட்டால்
    எத்தனையோ
    கொண்டாட்டம்
    நித்திரையே
    கொள்ளாது
    நீண்டகூத்து
    நடக்குமங்கே

    வடமோடி தென்மோடி
    வகைவகையாய்க்
    கூத்தங்கே
    பாய்விரித்துப்
    பார்த்தபடி
    பார்த்திடுவார்
    ஊரார்கள்

    தேனீர்க்கடையும் வரும்
    தித்திப்புக்கடையும்
    வரும்
    அப்பம்சுட்டு
    விற்கின்ற
    ஆச்சியும்
    வந்திடுவார்

    கடலையும் வறுப்பார்கள்
    கச்சானும்
    வறுப்பார்கள்
    கமகமக்கும்
    வாசனையால்
    களைகட்டும்
    ஆலையடி

    குடும்பமெலாம் ஒன்றாக
    குதூகலமாய்
    இருப்பார்கள்
    குழந்தைகளும்
    குறும்புசெய்து
    குதூகலத்தில்
    மிதப்பார்கள்

    அமைதியாய்ப் பார்த்துநிற்கும்
    அதையெல்லாம்
    ஆலமரம்
    ஆர்வந்து
    போனாலும்
    ஆலமரம்
    அகமகிழும்

    போரொன்று வந்ததனால்
    ஊரெல்லாம்
    ஓடிற்று
    யாருமே
    ஊரிலில்லை
    ஊரிப்போ
    உறங்குகிறது

    களைகட்டி நின்றவிடம்
    நிலையிழந்து
    நிற்கிறது
    ஆருமே
    வருவதில்லை
    ஆலமரம்
    நிற்கிறது

     ஆலமரம் மட்டுமிப்போ
    அப்படியே
    இருக்கிறது
    ஆலடியைப்
    பார்ப்பதற்கு
    அழுகைதான்
    வருகிறது

    மரம்மட்டும் பேசிவிடின்
    வக்கிரங்கள்
    தெரிந்துவிடும்
    மரமாக
    இருப்பதனால்
    வக்கிரங்கள்
    தொடர்கிறது

    ஆலமரம் அழுதுவிடின்
    ஆறாக
    ஆகிவிடும்
    அதுமரமாய்
    நிற்பதனால்
    நாமழுது
    நிற்கின்றோம்!

    Share
  • கேசவ் எண்ணம் – கிரேசி வண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “பசுபதி பாசம் பிணைப்பை விளக்கும்
    வசுகுல கண்ணன் வடிவில் -ஒசிபிசா
    COW -BOY கிருஷ்ணணில் கண்டேனே, ஸ்ரீகிருஷ்ண
    த்வைபா யனர்சொன்ன தேசு”….கிரேசி மோகன்….

    கிருஷ்ண த்வைபாயனர் -வியாசர்….தேசு-தேஜஸ்….

    Share
  • எனக்குள்….

     

    சு.ரவி

    C34A4ABF-599A-4D23-ADB6-D2FF3BCC2728

    உள்ளக் காட்டில் உலவும் விலங்கின்
    உறுமல் கேட்கிறது-கோபப்
    பொருமல் கேட்கிறது!

    அன்பால் வசியம் செய்தேன் அதனால்
    அடங்கி ஒடுங்கியது- பிறரை
    வணங்கி ஒதுங்கியது. – அந்த
    அன்பின் வலிமை அறியா மாந்தர்
    அதட்டி மிரட்டியதால் – விழியை
    உருட்டி வெருட்டியதால் – என் (உள்ளக்)

    அறிவுத் தீயை மூட்டி வளர்த்தேன்
    அஞ்சி நடுங்கியது – உள்ளே
    சென்று பதுங்கியது – எரியும்
    அறிவுத் தீயை அணைக்கும் மாந்தர்
    அறியாச் செய்கையினால் -அவர்தம்
    புரியாக் கொள்கையினால் – என் (உள்ளக்)

    தூங்கும் விலங்கைத் துணிப் பந்தாம் என
    எட்டி உதைப்பவரே – காலால்
    தட்டி மிதிப்பவரே – மிருகம்
    ஓங்கும் பழிவெறி விழிகளில் மின்னிட
    எழுமென்றறியீரோ – உமதுடல்
    விழுமென் றுணரீரோ! – இதோ என் ( உள்ளக்)

    Share
  • அல்லா அல்லா .. நீயில்லாத இடமே இல்லை..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    ரம்ஜான் வாழ்த்துகள்!!!

    ramzan

    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உயிருக்கு உயிராய்க் காணும்
    ஒரு வாசல் பள்ளிவாசல்

    கடவுள் அமைத்த மேடை இவ்வுலக வாழ்க்கை என ஒரு மதம் சொல்கிறது.  இறைவனின் படைப்பில்தான் எத்தனை எத்தனை உயிரினங்கள்..
    தோன்றியது.. ஆதாம் ஏவாளில் என இன்னொரு மதம் சொல்கிறது.. இன்னும் எத்தனை எத்தனை விதமான மதங்கள் இங்கே படைத்தவனை அடையாளம் காட்டி முன் மொழிந்தாலும் அனைவரும் வழிமொழிவது ஏக இறைவனைத்தான்!

    வாழ்க்கைக்கு நெறிவகுக்க.. மனித மனத்தைக் கட்டுக்குள் வைக்க.. சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதை நடைமுறையில் செயலாக்கம் செய்ய உருவாக்கப்பட் சம்பிரதாய சடங்குகளை சற்றே விடுத்து உற்றே நோக்கினால் அந்த உண்மை புலப்படும்!  அகக் கண்களில் ஆண்டவன் காட்சியளிப்பான்!  ‘கடவுள்’ என்கிற சொல்லின் பொருளே உள்ளத்தில் உள்ளவன் என்பதைக் குறித்திடவே.. பகுக்கப்பட்ட சொல்லிலும் படைத்தவனின் காட்சி!

    கவிஞர்களும் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து உணர்ந்து எடுத்தியம்பும் சிறப்பைப் பெற்றவர்களாய் திகழ்கிறார்கள்!  அவ்வரிசையில் கவிஞர் வாலியின் உள்ளம் அல்லாவை தரிசிக்கும் அழகைப் பாருங்கள்!  இசை அமைத்துப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ‘முகமது பின் துக்ளக்’ என்னும் திரைப்படத்திற்காக!!

    http://youtu.be/r5F0CfsMgBY
    காணொளி: -http://youtu.be/r5F0CfsMgBY

    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடல்: அல்லா அல்லா
    திரைப்படம்: முகம்மது பின் துக்ளக்
    பாடியவர்: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1971

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு
    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு
    மனம் வெளுக்க எது தான் உண்டு?
    நபியே உன் வேதம் உண்டு

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உயிருக்கு உயிராய்க் காணும்
    ஒரு வாசல் பள்ளிவாசல்

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகமே நீயே சொந்தம்

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

     

    தெய்வ சன்னிதானங்கள் – எங்கும் எப்போதும் புனிதமானவை!  பவித்ரமானவை!  அந்தச் சன்னிதியில் ஆண்டவன் அருள் எல்லோர்க்கும் நிச்சயம்! இது தெய்வ சத்தியம்!!
     

     

     

    படம் உதவிக்கு நன்றி: www.nagoredargha.com

    Share
  • அர்ச்சனை -1

    –சு.கோதண்டராமன்.

    ram_worship_god_shiva

    பரம் பொருளுக்கு உருவமில்லை, பெயரில்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படையும் அது தான். இறைவன் என்று ஆண்பால் பெயரால் சுட்டுகிறோம். ஆனால் அவன் ஆணும் பெண்ணும் அலியுமல்லாததோர் தாணு என்கிறார் தாயுமானவர்.  அது இருளன்று ஒளியன்று என நின்றதுவே என்கிறார் அருணகிரி.

    மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
    எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை
    இரவல்லை பகலல்லை யாவு மல்லை
    பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
    உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

    என்கிறார் திருநாவுக்கரசர். இப்படி எல்லா வகையிலும் இல்லை இல்லை என்று எதிர்மறையாகவே வர்ணிக்கப்படும் பொருளை துவக்க நிலைச் சாதகர்கள் எப்படி மனதில் இருத்த முடியும்? அதற்காகத் தான் இறைவனுக்குப் பல உருவங்களை உருவாக்கி வணங்குகிறோம்.

    ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

    என்று மணிவாசகர் கூறியபடி, பல பெயர்களால் அவனது தோற்றச் சிறப்பையும் அருஞ் செயல்களையும் போற்றிப் புகழ்ந்து பாடுவதும் இந்து சமயத்துக்கே உள்ள தனிச் சிறப்பு.

    இறைவனுக்குள்ள பல பெயர்களை நிரல் பட அமைத்து திருநாம மாலையாகத் தொடுப்பது ஒரு வகை. ஒவ்வொரு பெயருக்குப் பின்னரும் போற்றி அல்லது அது போன்ற ஒரு சொல்லை இணைத்துப் போற்றுவது மற்றொரு வகை. பின்னது மட்டுமே தற்போது அருச்சனை எனப்படுகிறது.  திருநாம மாலையிலும் அருச்சனையிலும் வரும் பெயர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
    1 இறைவனின் தோற்றச் சிறப்புகளைக் கூறும் பெயர்கள்
    2 பண்புச் சிறப்புகளைப் போற்றுபவை
    3 இறைவன் செய்த அருஞ்செயல்களை வியந்து பாராட்டுபவை
    4 இருப்பிடத்தை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்

    தாளி அறுகின் தாராய் போற்றி
    நீளொளி யாகிய நிருத்தா போற்றி
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி  
    இவை இறைவனின் தோற்றத்தை வருணிக்கின்றன.

    நித்தா போற்றி நிமலா போற்றி
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    இவை பரமனின் பண்புகளைப் போற்றுபவை.

    புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
    கருங்குரு விக்கன் றருளினை போற்றி  
    இவை ஈசனின் திருவிளையாடல்களை நம் நினைவுக்குக் கொணர்கின்றன.

    ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவை யாறா போற்றி
    அண்ணா மலையெம் அண்ணா போற்றி
    இவை தேவதேவன் உவந்து வாழும் திருத்தலங்களை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்.

    மேலே கண்டவை மணிவாசகரின் போற்றித் திருவகவலிலிருந்து எடுக்கப்பட்டவை. இது 154 திருநாமங்கள் கொண்ட ஒரு அற்புதமான அருச்சனை. இதில் தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற புகழ்பெற்ற வரிகள் வருகின்றன.

    அப்பரடிகளின் தேவாரத்தின் பெரும்பகுதி திருநாம மாலை தான். அவரது திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகத்திலும், கயிலை மலைப் போற்றித் திருத்தாண்டகத்திலும் இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் போற்றி என்ற சொல் இணைந்து வரும். இவை தவிர திருநாமங்களுடன் கண்டாய், காண், நீயே, போலும், கண்டேன் நானே என்ற சொல் இணைந்து வரும் பதிகங்கள் பல உண்டு. சில எடுத்துக் காட்டுகள் மட்டும் காண்போம்.

    தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
    காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்

    விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
    வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
    மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்

    ஓசை ஒலியெலா மானாய் நீயே
    உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
    வாச மலரெலா மானாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே

    மடந்தை பாகத்தர் போலும்
    மான்மறிக் கையர் போலும்
    குடந்தையிற் குழகர் போலுங்
    கொல்புலித் தோலர் போலும்

    அப்பரடிகளின் பிற பாடல்களும் சம்பந்தர், சுந்தரர் பாடல்களும் இது போன்ற போற்றிச் சொற்கள் இல்லாமல் திருப்பெயர் மாலையாக உள்ளன.
    எடுத்துக் காட்டாக சம்பந்தர் தேவாரத்தில் முதல் பாடலில்,
    தோடுடைய செவியன்
    விடையேறி
    தூவெண்மதிசூடி
    காடுடைய சுடலைப் பொடி பூசி
    உள்ளம் கவர் கள்வன்
    ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த, அருள் செய்தவன்
    பிரமாபுரம் மேவிய பெம்மான்
    என்று இறைவனின் சிறப்புப் பெயர்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழின் மிகப் பழமையான திருநாம மாலையை பரிபாடலில் பல இடங்களில் காணலாம். எடுத்துக்காட்டுக்கு ஒன்று-
    தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;  
    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

    நீண்ட தொடராக வரும் திருநாம மாலை ஒன்று திருமுருகாற்றுப்படையில் காணப்படுகிறது.
    நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை
    ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
    அறுவர் பயந்த ஆறமர் செல்வ,
    ஆல்கெழு கடவுள் புதல்வ, மால்வரை
    மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே,
    வெற்றி வேல் போர் கொற்றவை சிறுவ,
    இழையணி சிறப்பிற் பழையோள் குழவி,
    வானோர் வணங்கு வில் தானைத் தலைவ,
    மாலை மார்ப, நூலறி புலவ,
    செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள
    அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை,
    மங்கையர் கணவ, மைந்தரேறே,
    வேல் கெழு தடக்கைச் சால் பெரும் செல்வ,
    குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
    விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,
    பலர் புகழ் நன்மொழிப் புலவரேறே,
    அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக,
    நசையுநர்க்கு ஆர்த்தும் மிசை பேராள,
    வலந்தோர்க்களிக்கும் பொலம்பூட் சேஎய்,
    மண்டமர் கடந்த நின் வென்றாடகலத்து
    பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்,
    பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்,
    சூர் மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி,
    போர் மிகு பொருந, குரிசல்.

    படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

    Share
  • Chithi

    Bhuvaneshwar

    I was a little girl those days. We lived in a village near Nagarkovil, in the extreme south of Tamil Nadu. My father worked as a supervisor in the rice mill in Nagarkovil. He was a good man, but a rather strict father with stern features. I do not remember having seen him laugh or joke in the home, as far as I can remember. The slightest infraction in discipline invited application of the dreaded cane. He was a figure of authority, more respected and feared than loved.

    Mother stayed at home and took care of us. She was a house wife. She was a sweet woman and my favourite at that age. She would make my favourite coconut burfi during festivals and my birthday. Father’s income must have been meagre, for we hardly ever visited the thatched theatre to watch movies. Father must have been an austere man; he would use the same set of clothes and sandals till they were no longer fit to be used. Same rule applied to mother.

    She had a day full of domestic labour and I am sure she slept light, as I remember whenever I woke up in the night for water or to visit the bathroom, she would be up too. I always slept in her arms, and she would pat me to sleep. I knew no fears while she was around. I hardly ever remember her beating me, I doubt if she ever did.

    I went to the local government school. Leela was my best friend. She was 2 years older than I was and lived in one of the houses in our street. We used to play paandi and pallaankuzhi in the evenings and holidays. I always wished I had the long luscious shiny straight black hair like she did. I had curly hair and it was short. Every morning her mother would spend half an hour to oil her hair and plait it into a braid.

    I and Leela would go to the Isakki Amman temple every day, on our way home, from School. It was no big temple. Just a small shrine under a Banyan tree with an idol of Isakki Amman installed. On Fridays and Tuesdays a Poojaari with a big moustache and pot belly would come and do Poojas and give us lemon fruit as prasadham. We once made lemon juice from the fruits to drink, and got scolded by our parents.

    We had heard that Isakki was a girl like us a long time ago and that her father married another lady after the death of her mother. The second wife of her father – Chithi – was a cruel lady who beat Isakki for everything and did not feed her properly. One day, she saw Isakki giving water to a thirsty cowherd boy and talking to him. She made up a story that there was an affair between them and spread the same in the town. The whole town abused Isakki and the poor Isakki hung herself. From then on, she is believed to haunt the banyan tree and they built a temple for her. She was believed to be a powerful goddess and we all believed she would make us pass in the exams and protect us by preventing maths miss from beating us when we scored low.

    The unending labour at home and the rice-husk-ash from the husk-stove took its toll on my mother’s health. She fell ill and remained ill for 4 months. I do not know what father felt about it, but I could not see any grief in him. But he did not scold mother like before, when she could not do all the chores in time.

    My mother, towards the end of her life, was closer to me than ever. She would talk to me about my future and the dreams she had about me, many nights, as father was in office, doing over-time, to meet mother’s medical expenses. She wanted me to study well, and become a doctor so that I could help people.

    One night, she had severe coughs, and the cough syrup we had had little effect. Father was in office and I was afraid. I asked her if I should run and bring father so that we could go to hospital. She said that was of no use. She asked for some warm water and held me close to her bosom and asked me to study well and take care of my father. She said he was a very good man who loved both of us. She said the God she prayed to will be with me and protect me always, when she is not with me. I asked her if she was going anywhere. She looked into my eyes, kissed me and gave a wry smile… She said she was going to see her mother. She blessed me again and we slept. Her eyes were moist and I remember that expression on her face like today. I slept with my arms around her neck. She sung her favourite lullaby softly and patted me to sleep. I do not know when I dozed off.

    Next morning, she did not respond to my calls – she was no more. I had never seen father shed a tear, till that day. It did not matter to me then, the only person who loved me was carried away and burnt. All I had of my mother were her saree and her ashes in a little copper urn.

    Father’s mother – my grandmother came to live with us, after my mother’s death. A term later, my grandmother told me that I would have a new mother. A chithi. She told me that my father should not be alone, raising a young girl and that I must have a mother.

    Leela was more terrified of the prospect than was I. She chided me “You foolish girl, did you agree to your father’s marriage?” as if my permission was sought.

    I said “What do you think I should do?”…

    She did not answer my question but asked me to be careful – “I don’t know. But be prepared to get more beatings if your chithi comes. We know from movies and stories, how chithies are”.

    And to top it all, when we went to Isakki’s temple, she reminded me of Isakki’s history and how she died. Now I was terrified. Leela had to tell me a way out.

    She said “Atleast pray to Isakki that your chithi should not have Children”. And I prayed like that every day for 2 years.

    So, the wedding happened we had a good feast, and a well-dressed and decorated chithi came home, much against my muffled wishes.

    My initial resentment towards her was twofold – I could not brook anyone taking my mother’s place in the home, and I was also afraid that she will be cruel. It did not help that she did not make my favourite coconut burfis like my mother.

    My father was his usual self. One night when chithi had gone to visit her brother’s new baby, I saw him holding my mother’s photo on his chest when sleeping. I silently cried.

    But as I grew up, things changed. I could see a bit beyond the veil of my prejudices. Chithi was not what I expected. I did not know her age, but she must have been younger than my mother. I inferred that as I grew up, because many strangers we met used to ask if I was her younger sister.

    Chithi never beat me or scolded as I expected. This was a peculiar lady, to me. How could a chithi be good? I even thought if she had some silent evil plan! Three years rolled by. We got along well, but nothing special was there between us.

    One day, I broke the wall-lamp while pouring oil and my grandmother was livid – “You broke the 20 year old lamp! A girl child with such carelessness….” – My chithi intervened and prevented her from beating me.

    When I became a ‘big-girl’ in 9th standard, chithi prepared black ulundhu (urad dal) halwa and also my favourite coconut burfi. I started liking her when she presented a photo of my mother, newly framed, after the function. I thought I could be her friend. We began to be friendlier, gradually. It helped that Leela’s father got a transfer and they moved to Madurai.

    One day, when I was in 10th standard, my father saw me talking to my class mate Ravi, in the street corner. I was asking him to give me his maths notes, as he was very good at maths. Once I came home, Father gave me a tight slap and unleashed a long sermon about how good girls had to behave. Grandmother said if I studied any more, I would run away with a boy surely. Chithi intervened and bore their ire, arguing strongly for me and took my father to task for not trusting his own daughter. And the dust settled. I had started to like her. She taught me Trigonometry. I did not know she was good at Maths and had a BSc in maths!

    I passed 10th with distinction and a 100 in Maths, and I passed 12th with 3 200s – one each in Maths, Physics and Biology. Chithi was happy and proud. My father and chithi wanted me to join BSc maths like Chithi, but I wanted to do medicine. I told chithi what I had never told anyone – I wanted to do medicine because of what my mother had told me on her last day. She won the argument with father, speaking for me, and also made sure father agreed to let me stay in Hostel, in Nagarkovil.

    She was happy every year, as I came out with great marks. And when I had the degree, and thanked her for her support, she asked me to thank my mother for inspiring me.

    For the second time in my life, I had to see someone in my family on their last legs. My grandmother was on her death bed now. While I was about to enter the room as I returned from hospital, I heard grandmother speak, and I waited outside for some strange reason. She lamented to my father “The first one gave a girl and this one is barren. I could not see a grandson before I die”.

    My father could not control his outburst. Despite protests from chithi, he said “Amma, please….. do not be so heartless to call her barren. On the very day I married her, she told me ‘Your daughter is my daughter, I do not want a child myself’, you will not go to a good heaven if you call her a barren lady”……….

    And, the rest is history. We are the best of friends now. I went on to become a gynaecologist. I am married to another doctor, a neurosurgeon from Tuticorin. And my chithi with father visits me once a month. We have a great time together, on the beach and shopping together. Father is retired and gets his pension but I and my husband send money to father. Chithi wanted to do MSc in maths, and I supported her case to father. She finished her MSc in Maths recently and is doing her MPhil.

    Six years have passed by since that day my veil of prejudice and resentment died with my grandmother and my chithi placed in my heart’s pedestal alongside my mother.  I still visit the Isakki temple. I hold my daughter who bears my mother’s name. I pray to Isakki that I get another daughter, so I could name her after my chithi………. Of course, chithi just told me in the temple that she’d rather have a boy named after father! That’s my chithi for you!

    ——

    All characters in this story are fictional.

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 14

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 14

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 53Mukkonakkilikal - 54Mukkonakkilikal - 55Mukkonakkilikal - 56

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

     

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

     

    ***********************************************************************************************************************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    “கண்ணா நடிக்கிறாய் கண்மை கசங்கிட
    அன்னை அதட்ட அவசரமாய் ; -மன்னவா
    சிந்தியது போதும் சிரிப்பினில் ஆழ்த்துகிறேன்
    வந்துயெம் நாடகத்தை வாழ்த்து”….கிரேசி மோகன் ….

    crazy sunday
    One of the most beautiful verses in Srimad Bhagavatha. Watercolour.
    Krishna pretends to shiver out of fear, like a plantain in the wind on Yashoda’s reprimand. Rubs his eyes while crying, spreading the Kajal in his eyes. Not for nothing he is called the Natavara vapuh– the king of actors.

     

     

    Share
  • காதலே நான்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (5)

     

    காதலே நான்

                                                                                                                    {கேட்டு மகிழ}

    spells-for-love

    ஒய்யாரியே! உட்கார்!

    ஓரக்கிளையின் லாகவம் போலே.

     

    உன்னிடம் கொஞ்சம்

    சொல்லித்தான் ஆகவேண்டும்

    கொஞ்சமேனும்…

     

    நெஞ்சு முழுக்கக் காதலோடுதான், இந்தப்

    பஞ்ச பூதங்கள்

    கும்மி அடித்தபடி, இந்தக்

    குருட்டு உலகில், என்னை

    இறக்கி விட்டன.

     

    நாலு வயதிலேயே

    வாலிபனாய்த்தான் உணர்ந்தேன்

    எல்லாப் பெண்களுமே இளையவர்களாய்

    எனக்காகவே பிறந்தவர்களாகத்தான்

    தெரிந்தார்கள்.

     

    தொடவே முடியாமல்

    விடவே முடியாமல்

    தொடரும் பயணம்.

     

    இன்றைக்கு என்னத்தை

    இப்படி வியந்து பார்க்கிறாய்?

     

    இந்த நானூறு வயதிலும்

    இம்மியும் மாறவில்லை நான்.

     

    எனக்குப்

    பெண்கள் வேண்டும்

    அதைவிடவும் அவர்களுடைய

    கண்கள் வேண்டும்

    கண்களையே நினைவுபடுத்தும்

    மலர்கள் வேண்டும்

    மலர்களையே பரிகசிக்கும்

    மழலை வேண்டும்

    மழலையின் துவக்கமான

    மர்மம் வேண்டும்

    மர்மத்தைப் புகுந்து பார்க்கக்

    கவிதை வேண்டும்

    கவிதையைச் சிரஞ்சீவியாக்க

    கானம் வேண்டும்

    கானத்தில் தற்செயல் சந்திப்பாய்க்

    கடவுள் வேண்டும்

    கடவுளைக் கட்டித் தழுவக்

    காதல் வேண்டும்!!

     

    வேண்டுமளவு காதலுடன்தான்

    விளைந்திருக்கிறேனே!

    வேண்டுமளவு காதலென்ன

    காதலே வேண்டுமளவு

    காதலுடன்தானே, இங்கே

    காலெடுத்து வைத்திருக்கிறேன்!

     

    இன்னொன்றும் உனக்கு

    இப்போதே சொல்லிவிட வேண்டும்

     

    என்

    எல்லா உறவுகளுக்கும்

    பிரிவுகளுக்கும் பரிவுகளுக்கும்

    பதைப்புகளுக்கும் மதர்ப்புகளுக்கும்

    தெளிவுக்கும் குழப்பத்திற்கும்

    துளியாய் வரும் கண்ணீருக்கும்

     

    இந்தப்

    பொல்லாத காதல்தான் காரணம் என்றால்

    புரிந்துகொள்ள முடிகிறதா?

     

    காதல் உயிரென்றால்

    காமம்தான் உடம்பென்று

    வாதிட்டு என்னை

    வசக்க நினைத்தார்கள்

     

    நானும் இந்தப்

    பஞ்ச பூதங்களின் மேல், வழக்கு

    பதிவு செய்யலாமென்று

    பத்திரங்களைத் தயார் செய்தேன்..

     

    என்ன தவறு செய்ய இருந்தேன்

    பறத்தலைக் கால்கொடுத்துக் கெடுத்த

    பாழும் உலகம் எப்படி வாழ்க்கையைப்

    பந்தாடுகிறது பார்!

     

    இதோ கேள்!

    எனக்கு..

    காதலே வாகனம்

    காதலே வாசகம்

    காதலே வாழ்க்கை

     

    காதல்தான்,

    என்

    கண்ணெதிரே நானே இறந்து

    கனலில் எரிந்து,

    என்மேல்

    காதலுற்ற தேவதையின்

    கண்ணீர்த் துளிபட்டுச்

    சின்ன மலரயாய்ச்

    சிரிக்கும் மயானம்.

     

    சந்தனக் கரங்களுடன்

    சண்பகக் கண்களுடன்

    வந்தென் மார்பில் சுவாசித்தபடி

     

    இந்த தரிசனத்தைத்

    தந்ததே

    நீதான் என்பதை

    நினைத்துப் பார்ப்பாயா?

     

    இல்லை,

    எப்போதும்போல் காத்திருப்பாயா

    இன்னொரு கவிதைக்காக?

    இன்னமும் பெறாத முத்தத்திற்காக?

     

    Share
  • செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்

    Mangalyan -1

     

    ​[An update of India’s Mars Orbiter Mission]

     

     

    July 25, 2014​

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    1.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BEFMHOS2Em0

    2.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pZqPNNOvHAA

    3.  http://www.bbc.co.uk/news/world-24826253

    [Video of Launching India’s Mars Mission]

    4.  http://www.isro.org/mars/updates.aspx 

    [Mars Orbiter Status Update] 

    5.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx 

    [Pre-Launch Updates]

    [NASA’s Future Manned Missions to Mars]

     

    செந்நிறக் கோள் செல்லும் ஆசியப்

    பந்தயம் வலுக்கிறது !

    முந்திச் சென்றது ரஷ்யா, நாசா !

    பிந்திச் சென்றது ஈசா !

    இந்தியச் சுற்றுளவி செப்டம்பரில்

    உந்தி அடுத்தாண்டும்

    செந்நிறக் கோள் சுற்றும்

    சைனா, ஜப்பானுக்கு முன்பாக !

    சந்திரனில் முற்றுகை இட்டது முன்பு

    இந்திய மூவர்ணக் கொடி !

    யந்திரத் திறமை காட்டும் நுணுக்கப்

    பந்தயம் தான் !

    விந்தை புரிந்தது இந்தியா !

    இரண்டாம் சந்திராயன்

    நிலவில் இறக்கி வைக்கும்

    தளவுளவி  எதிர்பாராது

    தாமத மானது !

    நாசாவின் நவீனத் தளவுளவி இப்போது

    தடம் வைத்துச் சோதிக்கும்  !

    செவ்வாய் ஈர்ப்பு வலையில்

    சீராய் இறங்குவது

    பேரளவு சிரமமானது !  ஆயினும்

    வெற்றி கிட்டுவது

    எட்டும் சாதனை தான் !

    +++++++++++

     

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

     

    Mars Mission 2014

     

    செந்நிறக் கோளைச் சுற்ற நெருங்கும் இந்தியாவின் முதல் விண்ணுளவி

    2014 செப்டம்பர் 24 ஆம் தேதி இந்தியாவின் முதல் விண்சுற்றி [India’s Mars Orbiter] மங்கல்யான் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று  பெருத்த ஆர்வமுடன் எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற நவம்பர்  5, 2013 இல் இந்திய ஏவுகணைத் தளம் ஶ்ரீஹரிக் கோட்டாவி லிருந்து ஏவப் பட்ட PSLV  [Polar Satellite Launch Vehicle XL] பூத ஏவுகணையில் மங்கல்யான் விண்சுற்றி இணைப்பாகி இப்போது செவ்வாய்க் கோள் நோக்கிச்  சென்று கொண்டிருக்கிறது.  இதுவரை 80% பயண தூரத்தை எளிதாகக் கடந்து நல்ல உடல்நலமுடன் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்கிறது.   2014 ஜூன் 11 ஆம் தேதி 22 நியூட்டன் சிறிய உந்திகள் [22 Newton Thrusters] தூண்டப் பட்டு  இரண்டாவது பயணப் பாதைத் திருத்தம் சிறப்பாகச் செய்யப் பட்டது.  இன்னும் ஒருமுறை ஆகஸ்டில் இதுபோல் சிறிய ராக்கெட் உந்திகள் இயங்கிப் பயணப் பாதையைச் சீராக்கிக் கொள்ளும்.  திட்டமிட்டபடி சவாலான செந்நிறக் கோள் முதல் விண்சுற்று இந்தியாவுக்கு மகத்தானதோர்  ஆசிய வரலாற்று வெற்றியாகப் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.   இதுவரை செவ்வாய்க் கோளை வெற்றிகரமாகச் சுற்றிய விண்ணுளவிகள் / தளவுளவிகள் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா, ஐரோப்பியரின் ஈசா நிறுவனத்தைச் சேர்ந்தவை.

    இந்த செவ்வாய்க் கோள் பயணத் திட்டத்துக்கு நிதியொதுக்கு : 450 கோடி ரூபாய்.

    India's Mars Mission -1

     

    PSLV -XL Launch Rocket

    Mars Orbiter path

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    “ஏன் இந்தியா விண்வெளித் தேடல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது  என்று, கடந்த 50 ஆண்டுகளாக ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  இதற்கு நாங்கள் கூறும் பதில் இன்று, நாளை, எதிர்காலத்தில் இதுவாக இருக்கும் : ‘மனிதனின் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்  என்பதே அதற்கொரு காரணம்.’  தேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் மிகச் சொற்ப நிதிச் செலவில் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற ஒரு பெரும் புரட்சி எழுந்துள்ளது.   சைனாவோடு இந்தியா போட்டி இடுகிறது என்பது சரியல்ல.  வேறு யாருடனும் போட்டியிடப் போவதில்லை.  நாங்கள் எங்களுக்குள்தான்  பந்தயம் வைத்துக் கொள்கிறோம் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறேன்.  நாங்கள் மேன்மைப்பட வேண்டும்;  செம்மைப்பட வேண்டும்;  புதிய வினைப்பாடுகளை உருவாக்க வேண்டும். “

    டாக்டர் கே. ராதாகிருஷ்னன்  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

    Mars Earth Comparision

    செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய சுற்றுளவி மங்கல்யான் 

    2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, செந்நிறக் கோள் செவ்வாயை நோக்கிச் செல்லும் சுற்றுளவி மங்கல்யானை விண்வெளியில் ஏவி, அண்டவெளிச் சாதனையில் இந்தியா ஓர் புதிய மைல் கல்லை நாட்டியுள்ளது.  இந்த சுற்றுளவி 2013 நவம்பர் மாத இறுதி வரைப் [நவம்பர் 30 ஆம் தேதி] பன்முறைப் பூமியைச் சுற்றி, புவியீர்ப்பு சுழல் வீச்சில் [Gravitational Flyby Swing] தன் உந்து வேகத்தை விரைவாக்கி, பரிதி மையச் செவ்வாய் நோக்குச் சுழல்வீதியில் [நீள்வட்டச் சுழல்வீதி]  [Heliocentric Mars Transfer Orbit] நேராகச் செல்லும்.  இந்த 780 மில்லியன் கி. மீ.  [470 மில்லியன் மைல்] தூர நெடும் பயணத்துக்கு சுமார் 300 நாட்கள் ஆகும்.   சுற்றுளவி 2014 செப்டம்பர் 24 இல் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கப் பட்டு செந்நிறக் கோளைச் சுற்ற ஆரம்பிக்கும்.  மங்கல்யான் பணி  6 முதல் 10 மாதங்கள் நீடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  இந்தச் சுற்றுளவியைத் தூக்கிச் சென்ற இந்திய ராக்கெட் PSLV-XL .   அதுவும், சுற்றுளவியும் முழுக்க முழுக்க இந்தியச் சாதனங்களில் இந்தியரால் அமைக்கப் பட்டவை.  மங்கல்யான் 2014 செப்டம்பரில் செந்நிறக் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி, வெற்றி கரமாகச் சுற்ற ஆரம்பித்தால், அது ஓர் அசுர விண்வெளிச் சாதனையாகப் போற்றப் படும்.   அப்போது செவ்வாய்க் கோளைச் சுற்றிய நான்காவது தேசமாக இந்திய ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும்.  ஆசிய பேராற்றல் நாடுகளான ஜப்பான், சைனா ஆகிய இரண்டும் முயன்று, அவற்றின் சுற்றுளவிகள்  செந்நிறக் கோளைச் சுற்ற முடியாமல் தோல்வி அடைந்தன.   இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.

    மங்கல்யான் ஏவுத் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு :  454 கோடி ரூபாய் [US $ 69 million].  சுற்றுளவியின் விலை மதிப்பு மட்டும் அத்தொகையில் :  ரூபாய் 154 கோடி [[US $. 23 million].  இந்தப் பணி வெற்றி அடைய நேரடியாக உழைத்தவர் சுமார் : 2000 பேர்கள்.  மறைமுகமாக விண்வெளிப் பணி புரிந்தவர் : 16,000 பேர்கள்.

    Mars Program

     

    ராக்கெட் ஏவுவதற்கு ஆளுநராக மேற்பார்வை செய்தவர்: பி. குஞ்சி கிருஷ்ணன்;  சுற்றுளவி அனுப்ப ஆளுமை செய்த மேற்பார்வையாளர் : எஸ்.கே. சிவக்குமார்;   மங்கல்யான் பயண ஆளுநர் : மயிலசாமி அண்ணாத்துரை;  திட்ட ஆளுநர் :  எஸ். அருணன்.

    மங்கல்யான் சுற்றுளவியின் இப்போதைய [நவம்பர் 8, 2013] தகவல் :  பூமியை இரண்டாம் முறை வெற்றி கரமாகச் சுற்றி, சுற்றுளவியின் நீள்தூரம் [Apogee]  28,814 கி.மீ. லிருந்து 40, 186 கி.மீ. நீண்டுள்ளது.

    http://www.isro.org/mars/updates.aspx    [Mars Orbiter Status Update] 

    மங்கல்யான் சுற்றுளவியின் குறிக்கோள் என்ன ?

    1.  விண்வெளிப் பயணங்களுக்குத் துக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது;  விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது;  அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது.  விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.

    2.  செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது;  அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது;  அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.

    3.   செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது.   அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.

    4.  செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.

     

    Mangalyaan Orbit to Mars

     

    “இந்த ஆண்டு முடிவில் [2013 நவம்பர் 5] பரபரப்பூட்டும் அடுத்த விண்வெளிச் சவால் சாதனையாக, முதன் முறை இந்தியா செவ்வாய்க் கோளைச் சுற்றிவரத் துணிந்து செல்லப் போகிறது.   அதற்கு முன்பாக ஜூன் 2013 இல் இந்தியா தன் முதல் பயண வழிகாட்டி துணைக்கோள் [Navigational Satellite] ஒன்றை அனுப்பப் போகிறது.  பூமியைச் சுற்ற துணைக்கோள் ஒன்றை விண்வெளியில் பயணம் செய்ய இட்டுவர  சுமார் 2000 மேற்பட்ட நபர் கூட்டுழைக்கத் தேவைப்படுகிறார்.”

    டாக்டர் கே. ராதாகிருஷ்ணன்,  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

    “இந்தியா ஏழைகள் வாழும் ஒரு தேசம். அதே சமயத்தில் அது பொருளாதாரத் துறைகளில் முன்னேறி வரும் ஆசிய நாடு.  நடுத்தர ஊதியம் பெற்றுவரும் மக்கள் தேசம்.  அது G20 தேசங்களில் ஒன்று.  எங்கள் தேசம் பலர் கடுமையாய் உழைத்து வாழும் ஏழ்மைப் பூமியே.  ஆனால் பூகோளத்தில் ஆற்றல் பெற்று வரும் தேசம். நாங்கள் இரட்டைக் குறிக்கோள் உள்ள ஒற்றைத் தேசத்தவரே.  இரண்டையும் நாங்கள்  பூர்த்தி செய்ய வேண்டும்.  பூகோள அறிவைத் தேடி அளிப்பதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும்.  அதே சமயம் நாங்கள் மக்கள்  ஏழ்மையையும் நீக்க வேண்டும்.”

    நிஷா அகர்வால் [தலமை அதிகாரி, OXFAM in India]  

     

    jay

     

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர்  [நவம்பர் 13, 2008]

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

     

    Mars Mission Chief

     

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

    இந்தியாவின்  அடுத்த பரப்பரப்பான விண்வெளி ஆய்வுத் திட்டம் செவ்வாய்க் கோளை வட்டமிட்டு அறிவது.

    2013 ஆண்டு முடிவில் திட்டமிடப் பட்ட செவ்வாய்க் கோள் திட்டம் தாமதம் அடையாது என்று இந்திய விண்வெளி ஆய்வகத்தின் அதிபர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.  செவ்வாய்க் கோள் சுற்றுளவி [Mars Orbiter] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக் கோட்டாவில்  [PSLC – Polar Satellite Launch Vehicle, Satish Dhawan Space Centre] PSLC ராக்கெட்டில் ஏவப்பட்டும்.   2014 இல் விண்ணுளவும் சுற்றுளவி பயணப் பாதையில் ஒரு வால்மீன் போக்கு குறுக்கிட்டாலும், அதனால் பாதகம் ஏற்படாது என்று அவர் உறுதியாக நம்புகிறார்.  அந்த வால்மீன் 2013 A1 [Siding Spring] என்று குறிப்பிடப் படுகிறது.  வால்மீன் விண்ணுளவியோடு மோதும் வாய்ப்பு நிகழ்ச்சி 1 in 120,000 என்று கணக்கிடப் பட்டுள்ளது.  செவ்வாய்க் கோளிலிருந்து சுமார் 50,000 கி.மீ. [30,000 மைல்] தூரத்தில் வால்மீன் கடந்து செல்கிறது.   2013 நாணய மதிப்பீட்டில் 450 கோடி ரூபாய் நிதிச் செலவில் “மங்கல்யான்” [Mangalyaan] செந்நிறக் கோள் திட்டம் 2013 அக்டோபர்-நவம்பர்  மாத நடுவே துவங்கும் என்று தெரிகிறது.  சந்திரயான் திட்டம் நிலவைச் சார்ந்தது போல், மங்கல்யான் திட்டம் செவ்வாய்க் கோளைக் குறிவைப்பது.   திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நிலவுக்கு அப்பால் செய்யும் மனிதரற்ற துணைக்கோள் பயணப் பயிற்சி, மற்றும் செவ்வாய்த் தளத்தில் உயிரின மலர்ச்சி நேர்ந்ததா என்று அறிவதும், செவ்வாய்க் கோளில் ஏன் சூழ் மண்டலம் இல்லாது போனது என்றும் அறிவதே.  மேலும் செவ்வாய்க் கோள் எவ்விதம் நீர்வளம், கரியமில வாயுவை இழந்தது என்றும் அறிந்து கொள்வது முக்கிய ஆய்வுப் பணியாகும்.

     

    Fig 1G Indian Rockets

    மங்கல்யான் சுற்றுளவியின் எடை 30 பவுண்டு [14.5 கி.கிராம்].  அது மீதேன் உளவும் ஒரு கருவியைக் கொண்டு செல்லும்.  செவ்வாய்க் கோளில் மீதேன் உள்ளதா என்று அறியும்.  மீதேன் இருப்பு செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் உயிரின இம்மிகள் இருந்திருப்பதை உறுதிப் படுத்தும்.  2013 அக்டோபரில் ஏவப்படும் விண்ணுளவி, பூமியை விட்டு 2013 நவம்பர் 27 இல் நீங்கி 300 நாட்கள் [10 மாதம்] பயணம் செய்து செவ்வாய்க் கோளை நீள்வட்டத்தில் 300 மைல் நெருங்கிய தூரத்தில் [சிற்றாரம் : 500 கி.மீடர், நீளாரம் : 80,000 கி.மீ] சுற்ற ஆரம்பிக்கும்.     துணைக் கோளில் ஐந்து விதக் கருவிகள் அமைக்கப் பட்டு வேலை செய்யும். [ஒரு நிறக் காமிரா,  ஓர் உட்சிவப்பு வெப்பப் படமெடுப்பு ஏற்பாடு, [One Thermal Infrared Imaging System],  ஒரு லைமன் – ஆல்ஃபா ஒளிமானி,  [One Lyman-alpha Photometer], ஒரு வெளிக்கோள நடுத்துவக் கலவை அளவி  [One Exospheric Neutral Composition Analyser], ஒரு மீதேன் நுகர் உளவி  [One Methane Sensor].

    கடந்த சில ஆண்டுகளாக இந்தியா 35 வெளிநாட்டு துணைக் கோள்களை விண்வெளியில் ஏவி விட்டு  17.17 மில்லியன் டாலரும், 32.28 மில்லியன் ஈரோவும் [மொத்தம் : 58 மில்லியன் டாலர்] சம்பாத்தித்துள்ளது என்று பிரதம மந்திரியின் உள் நாட்டு அமைச்சர் வி. நாராயணசாமி சமீபத்தில்  அறிவித்துள்ளார்.

     

    Radar Tracking

    Mission Control ISRO

    செந்நிறக் கோளுக்குச் செல்வதில் உலக நாடுகள் பந்தயப் போட்டி

    2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில்  சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது.   20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல்  ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளது.   அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட,  துருவத் துணைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket)  ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங்கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது.  பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார்  90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார்.   சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது.   ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300  mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும்.   செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது. இந்திய விண்வெளி ஆய்வுத்துறை டாகர் விக்ரம் சாராபாய் தலைமையில் 1962 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது.   அந்தப் பொறி நிபுணர்கள் வெற்றிகரமாகச் செய்து புகழ் பெற்றது 2009 இல் நிலவைச் சுற்றிவர அனுப்பிய சந்திரயான் -1 விண்ணுளவி.  தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் தாமத மானது.

    Mars Orbiter

    Mars Orbiter Launch

    சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகி இப்போது  2014 ஆண்டுக்கு அப்பால்  தள்ளி வைக்கப் பட்டது.  2010 டிசம்பரில் இந்தியாவின் துணைக்கோள் ஏவும் ஏவுகணை ஒன்று பழுதாகி வங்காள விரிகுடாவில் வெடித்து வீழ்ந்தது.  இவை எல்லாம் அடுத்து 2013 இல் அனுப்பப் போகும் பேராசைச் செவ்வாய்க் கோள் குறிப்பணிக்கு ஆதரவு அளிப்பதாய்த் தெரியவில்லை.

    செவ்வாய்க் கோளுக்கு விண்ணுளவி அனுப்புவதில் ஏற்பட்ட தோல்விகள்

    இதுவரை பெற்ற அனுபவத்தில் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் திசைதிருப்பி விண்ணுளவியை  இறக்குவது, சிரமான இயக்கம்.  பலமுறை இடம் தடுமாறி, தருணம் கடந்து, வேகக் கட்டுப்பாடு முறிந்து விண்ணுளவிகள் பாதை தவறி நழுவிச் செல்வது பன்முறை நேர்ந்துள்ளது.  செவ்வாய்க் கோள் பயண வெற்றி 50/50 எதிர்பார்ப்பு வாய்ப்பு வழிகளே.   இம்முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா அடைந்த தோல்விகள் 1960 முதல் 2010 வரை (50 ஆண்டுகள்) மொத்தம் : 8.  இந்தியா இவற்றை எல்லாம் தெரிந்து தான் செந்நிறக்கோள் பயண முயற்சியில் துணிச்சலுடன் இறங்கி உள்ளது.

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.    இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.

     

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும். சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.

    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.   ஆணைச் சிமிழ்  தளவுளவி இறக்கியையும்,  வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.   இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இன்னும் முழுமையாய் கிடைக்க வில்லை.    அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

    Fig 1E Chandrayaan-1 Mission

     

    சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !

    2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியனைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக் கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

     

    Red Planet Mars

    இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) அடுத்த இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி ஏவிச் செல்வது தாமதமாகி வருகிறது.   அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

     

    Fig 5 Dr Abdul Kalam

    2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும். அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

     

    India’s Mars Orbiter Mission

    Mangalyaan 

    Mission type Mars  Orbiter
    Operator Indian Space Research Organization
    Website isro.org/mars/home.aspx
    Mission duration 300 days

    Spacecraft  Properties

    Bus I-1K
    Manufacturer ISAC
    Launch mass 1,350 kg (2,980 lb)
    Dry mass 500 kg (1,100 lb)
    Payload mass 15 kg (33 lb)
    Dimensions 1.5 metres (4 ft 11 in) cube
    Power 840 watts

    Start of mission

    Launch date 5 November 2013, 09:08 (2013-11-05UTC09:08Z) UTC
    Rocket PSLV-XL C25
    Launch site Satish Dhawan FLP
    Contractor ISRO

    Orbital parameters

    Reference system Areocentric
    Periareon 377 km (234 mi)
    Apoareon 80,000 km (50,000 mi)
    Inclination 17.864 degrees
    Epoch Planned

    Mars orbiter

    Orbital insertion 24 September 2014
    (Planned)

     

    The Mars Orbiter Mission (MOM), informally called Mangalyaan, (Mars-craft) is a Mars orbiter that was successfully launched into Earth orbit on 5 November 2013 by the Indian Space Research Organisation

    ++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits : The Hindu, ISRO, NASA, ESA & other Websites

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]

    1A Stars & Planets By : Duncan John [2006]

    1B. Astronomy Facts on File Dictionary (1986)

    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad

    3. Indian Space Program By: Subhajit Ghosh

    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]

    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]

    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]

    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]

    9. Indian Space Program By: Wikipedia

    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]

    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [

    [Message clipped]  View entire message

    A special documentary film on Mars Orbiter Mission

    Preview YouTube video Mars Orbiter Mission- 25th Mission of PSLV-C25

    Mars Orbiter Mission- 25th Mission of PSLV-C25
    Share
  • கைகள் குவிக்கும்

    கே. ரவி

     

    கைகள் குவிக்கும்

    பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

    DSC02611 sRI lANKAN ....SHORT SWORD ON GOD
    கைகள் குவிக்கும் போதெல்லாம் வடிவேல் – விழிக்
    கமலம் திறக்கும் போதெல்லாம் கதிர்வேல்
    நினைவுத் திரை விலகிப் புலனடங்கி
    ஒரு முனைப்பில் மனம் திளைக்கும் தவம் கூர்வேல்

    முளைத்த நிலவுப் புன்முறுவல் – ஆறு
    முகங்கள் ஞானத் தீப்பொறிகள்
    பனித்த சடையன் பக்கம் அமர்ந்து
    பாடம் சொன்ன செவ்விதழ்கள் – கரை
    மோதித் திரும்பும் கடலலைகள் – தினம்
    ஓதித் துவளும் ப்ரணவத்தில் –
    ஆடிக் களிக்கும் பாதங்கள் – நுரை
    யாகித் தெறிக்கும் சதங்கைகள்

    கந்தா கடம்பா கதிர்வேலா – எனக்
    கதறி அழுதால் வழிபிறக்கும்
    கருணை மனமே மயில்வாகனமாய்க்
    கண்டால் ஞான விழிதிறக்கும்
    குருவாய் நினைவில் வருவாய் முருகா
    எனவே இதயம் குரல்கொடுக்கும்
    குழந்தை வடிவம் குலுங்கிச் சிரிக்கும்
    வேலாயுதமே நிழல்கொடுக்கும் – சக்தி
    வேலாயுதமே நிழல்கொடுக்கும்.

    கே.ரவி

    Share
  • இயற்கை அன்னை!

    சு. ரவி

     

     

    வானமென்னும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம்
    தேனமுதைத் தேவரெல்லாம் பூட்டிவைக்கும் மாடம்
    அலைகள் எறியுமொரு
    கடலை அணையவரும்
    நிலவு இதனொளியில்
    உலவி உலவி மனச்
    சாந்திபெறச் சற்றினிது நான் நினைத்தபோது
    ஏந்திவந்தாள் எழிலதனை இயற்கைஎனும் மாது!

    AD8DF21D-65E8-47E1-8A06-25685358C1C1

    தென்றலிங்கு வந்து என்னைத் தொட்டுத் தொட்டுச் செல்லும்
    மென்மைசுகம் சேர்ந்தகதை மெல்ல வந்து சொல்லும்
    சலல சலலவென
    சலன உலகமிதில்
    அலையும் இதனொலியில்
    எனது மன மகிழ
    நானுலவி நல்லதமிழ் பாடிவரும் போது
    தான்வருவாள் தளிர் நடையில் இயற்கைஎனும் மாது!

    36DA191F-B8BF-423A-84FF-52AE27F61220

    நீலப்பட்டில் ஆடைகட்டி நீண்டிருக்கும் வானம்
    கோலப் போட்டு வைத்தாங்கே செய்திருக்கும் மோனம்
    கரிய பெரிய முகில்
    உரச உரச இடி
    சரிய வருமழையில்
    நனைய நனைய ஒரு
    மின்னல்வெட்டில் உள்ளம் தந்து நான் மறந்தேன் என்னை- அங்கே
    புன்னகைத்துப் புதுச் சிரிப்பு பூத்தாள் எங்கள் அன்னை!

    DDB517DC-692B-46BC-8FB4-F14E7A67399D (1)

    காட்டாற்று வெள்ளமெங்கும் கரை புரண்டு ஓடும்
    பாட்டாக என்மனத்தில் பரவசங்கள் சூழும்
    உடலில் உறையுமுயிர்
    அதனில் இயையும் இறை
    அடியை மனதிலெணி
    அருவி உருளுமொரு
    தன்னந்தனி வழியாக நான் நடந்தேன் என்னை
    இன்னருளால் காத்திடுவாள் இயற்கைஎனும் அன்னை!

    Share
  • இங்கே எப்படி நீ?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக – (4)

     இங்கே எப்படி நீ

                                                                                                                      ( கேட்டு மகிழ)

     

     

     

    இடிந்து கிடக்கிறது கோயில்download

    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

     

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே

    காரை பெயர்ந்து, ஒரு

    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்

    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து

    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி

    பொருத்தமற்ற இடத்தில்

    பூவும் அருவருப்பு

     

    இது மெளனமல்ல

    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்

    வாழ்வில்லாத நிசப்தம்

     

    அது சந்நிதியல்ல

    அது கடவுள் காலி செய்துவிட்ட,

    ஒரு

    மாறுதலையாவது தரும்

    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்

    ஆம்

    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்

    சித்திரிக்கப்படுகின்றன..

     

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்

    வெளவால்களின்

    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன

    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.

    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்

    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

     

    இங்கே..இங்கே!!

    எப்படி நீ? எதற்கு?

    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்

    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்

    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்

    எழுந்தருளியிருக்கிறாய்?.

     

    சொச்சமாய் இன்னும்

    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்

    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

     

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்

    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்

    ஒற்றைத் துளியின் உணர்வு

    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

     

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்

    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக

    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

     

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!

    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

     

    இல்லை, ஒருவேளை

    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்

    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்

    காதல் என்னும் பேதைமையைப்

    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?

    யாருக்கு?!

     

    முடிவில்லாத ஒரு முறிவு

    முயற்சியின்றிக் கிடக்கிறது

    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது

    எதையோ தூண்டுவதற்கு

    முதலொன்று வந்து

    முன்னே நிற்கிறது

     

    வெற்றிகாண முடியாத வெறுமையும்

    தோல்வியறியாத முழுமையும்

    எதிரெதிரே நிற்கின்றன

    என்ன நடக்கும் என்பது

    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்

    ஏறிவந்தாலாவது தெரியுமா?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    திவ்யப் பிரபந்தம் மாதிரி இது கேசவாழ்வாரின் திவ்ய BRUSH பந்தம்….அட்டகாசம்….கிரேசி மோகன் ….கேசவ் தொடரட்டும் உம் தூரிகைத் தவம்…ஒருநாள் கண்ணன் உம்வீட்டு காலிங் -பெல் அடிக்கப் போவது நிச்சயம் ….

    மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமிகள்
    —————————————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    “விண்ணார்வம் வேண்டேன், வியனுலகும் வேண்டேனே,
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….கிரேசி மோகன்

    Share
  • கர்ணனுக்காக ஒரு கேள்வி !

     

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

     karna

    பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு

    துரோணர்

     

    ஏகலைவனிடம்

    கட்டைவிரல்வாங்கிய

    காரியவாதி

     

    நிழலைவணங்கி

    நேர்மையாய் வளர்ந்த

    ஏகலைவனுக்குத்

    துரோகம்செய்த

    துரோகி

     

    வேடம்போடத்தெரியாத

    வேடனுக்கு

    துரோணர் குரு துரோகி

    துரோகி குரு

     

    அவரிடம் கற்ற

    அரசகுமாரர்களில்

    தனித்தும்

    தினித்துவத்தோடும்

    விளங்கினான் அர்ச்சுனன்

     

    கற்றதில் கவனமும்karna-life

    குரு பக்தியும்

    நிறைந்தவன் அர்ச்சுனன்

     

    குருவிடம் கற்ற

    வித்தைகளை அரங்கேற்றும்

    நிகழ்வு நடந்தது

    மன்னர்கள்

    மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் சான்றோர்கள்

    படைக்கல வல்லவர்கள் வல்லுநர்கள் மற்றும்பலர்

    முன்னிலையில்

    அரங்கேற்றினர் வித்தைகளை

     

    அனைவரும் வியக்க

    அர்ச்சுனன்

    வித்தைகள் காட்டினான்

    வில்லால்

     

    துரோகத்தின் வடிவம்

    துரியோதனன்

    அர்ச்சுனனின் ஆற்றலைக்கண்டு துடித்தான்

    பொறாமையால்

    பொங்கிவழிந்தான்

     

    அர்ச்சுனனைக் கண்டு

    திடீர்மின்னலாய்

    கர்ஜித்தான் கர்ணன்

     

    வில்லெடுத்து என்னோடு

    வித்தைகாட்டென்றான்

     

    சபையில் சலசலப்பு

    துரியோதனனுக்கு

    உள்ளத்தினுள்ளே

    கிளுகிளுப்பு

     

    கரடிபோல் கர்ணன்

    வந்தாய் எண்ணி

    முகவரி கேட்டார்கள்

     

     

    மக்கள் முன்னிலையில்

    திறன்காட்டவிடாமல்

    தகுதிகேட்டும்

    குலம்கேட்டும்

    குற்றவாளியாக்கினார்கள்

     

    சூரியனுக்குப் பிறந்தவனை

    சூதகனுக்குப்பிறந்தவனா?

    ஏளனம் செய்தார்கள்

     

    தேரோட்டி மகனா?p13

    எங்கள்முன் நிற்பது?

    எங்களைப் போருக்கு அழைப்பது?

    துள்ளிக்குதித்தார்கள்

    எள்ளிநகைத்தார்கள்

    கர்ணனை

    மனம்குமையவைத்தார்கள்

     

    குலம்கேட்ட கொடுமையால்

    கர்ணன்

    முகவரி சொல்லமுடியாமல்

    முகம்வாடிப்போனான்

     

    காலம்கருதி

    ஞானமிகுக் கேள்விக்கணைகளைக்

    கேட்டான் துரியோதனன்

     

    பிறப்பில் இல்லை பெருமை

    செய்யும் செயலில்தான்

    உள்ளது பெருமை என்றான்

     

    அங்கதேசத்து அரசகுமாரனாக்கி

    அறிவித்தான்

    அரவணைத்தான் துரியோதனன்

     

     

    பகலவன் மறைந்ததால்

    அரங்கேற்றம் முடிந்தது

     

    எனினும்

    கர்ணனுக்காக

    தாய்க்குப்பிறக்காத குருவும்

    தந்தைக்குப்பிறக்காத

    தந்தைமுனிலையில்

    பாண்டுக்குப்பிறக்காத

    பாண்டவர்களுமா?

    கர்ணனைக் குலம்கேட்பது? என

    ஒருகேள்வி கேட்டிருந்தால்

    என்னபதில் கிடைத்திருக்கும்?

     

    (தமிழ்ப்பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்,பேராசிரியர் தி.வேங்கடகிருஷ்ணயங்கார்,

    இலக்கியத்தென்றல் வ.ஜோதி எழுதிய ம்காபாரத உரைபடித்துக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சிந்தனையில் விளைந்த கவிதை. 20.05.2014)

    Share