Blog

  • பார்வை

    பத்மநாபபுரம் அரவிந்தன் images

    அதிகாலை எழுந்து
    குளிர் பனியில்
    நடுங்கி தெருவினில்
    போட்ட பூக்கோல அழகில்
    திளைத்து ஆசையுடன்
    அவனுக்கும் காட்ட எண்ணி
    தூங்குமவனை எழுப்பி
    கையோடு அழைத்து வர
    தூக்கம் போன சோகத்தில்
    கண் கசக்கி அவன் பார்த்தது
    கோலத்தின் மேல் வடித்து செல்லும்
    கழிவு நீர் நிறைந்த டேங்கர் லாரியை மட்டுமே..

    Share
  • அணு உலை எதிர்ப்பாளி ஞாநி ​ சங்கரன்​ பரப்பி வரும் தவறான கருத்துக்களுக்கு எனது பதில்

    சி. ஜெய பாரதன்
     

    கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம்


    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    முன்னுரை:  1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்கத்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு ஊரில் அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் மரித்து பலர் கதிரியக்கத்தால் நோயுற்ற போதும், 2011 மார்ச்சில் ஜப்பான் நிலநடுக்கச் சுனாமியால் நிறுத்தமான அணுமின் உலைகள் நான்கில் வெப்பத் தணிப்பின்றி சில எருக்கோல்கள் உருகி ஹைடிரஜன் வாயு சேர்ந்து, அணு உலை மேற்கட்டடத்தில் ரசயான வெடிப்புகள் நேர்ந்த போதினும், உலகநாடுகள் தாம் இயக்கி வரும் 430 மேற்பட்ட அணு உலைகளை நிரந்தரமாய் நிறுத்தம் செய்ய வில்லை.  மாறாகப் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டு, தமது அணு உலைகளை மீளாய்வு செய்து, அபாய வெப்பத் தணிப்பு முறைகளை மிகையாக்கிச் செம்மைப் படுத்தித் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

    இந்த நோக்கில் சிந்திக்க வேண்டியது தற்போது ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சுத்தம் செய்யப் பட்டு புத்துயிர் பெற்று எழுந்து முன்னை விடக் கட்டமைப்பு செய்யப்பட்டு முற்போக்கு நகராக மாறி விட்டன.  அதே போக்கில் புகுஷிமாவின் பழுதான நான்கு அணுமின் உலைகளும் சுத்தமாகப் பட்டு உருகிய எருக்கோல்கள் நீக்கப்பட்டு கவசத் தொட்டி களுக்குள் மூடப்பட்டு புதைக்கப்படத் தயாராகும்.  அணு உலைக் கலங்கள் சீர் செய்யப்பட்டு நீக்கப்படும்.  அந்த இடத்தில் புது டிசைன் அணு உலை கட்டப்படும்.  அதற்கு ஆகும் செலவு மிகையானால் புது அணு உலை அமைப்பு நிராகரிக்கப்படும்.  பழைய அணு உலைகள் நிரந்தரமாய் மூடப்படும்.

    இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கிவரும் 20 அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் யாருக்கும் ஆறாவது முளைத்ததாக நிரூபிக்கப்பட வில்லை.

     

    கல்பாக்க அணுமின் சக்தி பற்றி  ஞாநியின் தவறான கருத்துகள்

    எழுத்தாளர் ஞாநி கடந்த எட்டு ஆண்டுகளாக கல்பாக்க அணு உலைகள் மீது தவறாக எழுதி வருகிறார்.  அவர் எழுதிய ‘கான்சர் கல்பாக்கம்’ என்ற 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே ! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!  இந்திய அணுமின் உலைகளைக் கட்டி இயக்குவதும், கண்காணிப்பதும், பராமரிப்பதும் இந்திய அரசுக்குக் கீழிருக்கும் அணுசக்தித் துறையக /நியூகிளியர் பவர் கார்பொரேசன் (DAE, Dept of Atomic Energy / NPCIL Nuclear Power Corporation of India Ltd) ஆணையகங்கள்தான்.

    கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!  ஓரளவு கதிரடியால் புற்றுநோய் வரலாம் என்று உயிரியல் விஞ்ஞானம் கூறினும், கல்பாக்க அணு உலைக் கதிரடியால் ஆங்கு வாழ்வோர் புற்று நோய் வந்து சாகிறார் என்பது இதுவரை நிரூபிக்கப் பட வில்லை.

     

    ஞாநியின் 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் வந்த தவறான சில கருத்துக்கள்

    1. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!

    எனது விளக்கம்:

    செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்:  சோதனையின் போது அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா.

    விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!  கனநீர் இயல் யுரேனிய அணு உலைகளில் சக்தி அளிப்பவை மித வேக நியூட்ரான்கள்.  அணு குண்டுகளில் வெடிப்புச் சக்தியை உண்டாக்குவது அதிவேக நியூட்ரான்கள்.

    2. ஞாநியின் கருத்து:

    பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!

    எனது விளக்கம்:

    நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] மீது குண்டு போட்டுத் துளையிடுவது எளிதல்ல.  விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும்.  அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது!  கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா!

    விமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தால் அந்த வெடிப்பில் மடிபவர் கதிரியக்கக் கசிவில் காயப் படுபவரை விட அதிகமாய் இருக்கும்.

    3. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங் களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?

    எனது விளக்கம்:

    அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘[Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப் பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.

    4. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு!

    எனது விளக்கம்:

    அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்!  அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில்தான் இப்போது இயங்கி வருகிறது!

    மீண்டும் ‘கல்பாக்கம் ஞாநி ‘ [செப் 18, 2003] திண்ணைக் கட்டுரையில் அணுமின் நிலையங்கள் மீது புகார் செய்திருக்கிறார்.  ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை’ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

    1.  http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

    2.  http://www.npcil.nic.in/

    செப் 18, 2003 திண்ணைக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட் டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

    1.  ஞாநியின் கருத்து

    மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை.. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும்.

    எனது விளக்கம்

    http://www.npcil.nic.in/ இந்திய அணுமின் உலைகளின் இயக்கம் பற்றி இந்த வலைப்பகுதியில் உள்ளது

    2.  ஞாநியின் கருத்து

    வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்.

    எனது விளக்கம்.

    இந்தியப் பாதுகாப்புக்குத் தேவையானால் பயன்படுத்த ஓர் எச்சரிக்கை ஆயுதமாக அரசாங்கம் அணு ஆயுதங்களைக் கொலுப் பெட்டியில் வைத்துள்ளது.

    3.  ஞாநியின் கருத்து

    கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனது விளக்கம்

    இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது.  அதனால் யாரும் பாதிக்கப் படவில்லை.  கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை.  நேர்ந்த கனநீர்க் கசிவு விபத்துக்களில் நோயுற்றோர் யாருமில்லை.

    4.  ஞாநியின் கருத்து

    கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்].

    எனது விளக்கம்.

    கல்பாக்கம் அணுமின் உலைகள் பல இந்தியச் சாதனங்கள் புதியதாக உற்பத்தி செய்து இந்தியர் கட்டி இயங்குவது.  முன்னோடிச் சோதனை அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஆரம்பத்தில் நேர்வது ஒன்றும் பெரிதல்ல !

    இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன்காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.

    இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

    இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதி

    ​ ​

    களையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது. 

    அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.

    கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத் தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக் குரியவை.

    கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh

    கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh

    நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh

    ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh

    கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

     

    அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

    உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்

    ​ ​

    களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும். 

    தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்

    ​ ​

    சாலைகள், போக்கு வரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்!  ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை.  காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகள் ஏற்பட்டால் பாடம் கற்றுச் செம்மைப் படுத்திய விமானங்களில் பயணம் செய்ய முன்வருகிறார். 

    ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் 20 அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்!  அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் கல்பாக்கத்தில் யாருக்கும் ஆறாவது முளைத்த தாக எவரும் நிரூபிக்க வில்லை.

    நான் 45 ஆண்டுகளுக்கு மேல் இந்திய & கனடா அணுமின் உலைகளில் நேரடியாக வேலை செய்து அனுபவன் பெற்றவன்.  எனது இரண்டாவது புதல்வி கனடாவில் உள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்து வருகிறாள்.  அவளது கணவரும் அருகில் உள்ள டார்லிங்டன் என்னும் வேறோர் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  அவருக்குப் புதல்வர் இருவர்.  அணு உலையில் வேலை பார்த்து வந்த எங்களில் யாருக்கும் இதுவரை ஆறாவது விரல் முளைக்க வில்லை.  கதிரியக்கத்தால் புற்று நோயோ, மற்ற நோயோ எங்களைத் தாக்க வில்லை !  அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டு காலம் வசித்து, அங்குள்ள சூழ்வெளிக் காற்றைச் சுவாசித்து, நீரைக் குடித்து, உண்டு, உறங்கி, உறவாடி நலமுடன் வாழ்ந்து வருகிறோம்.  எங்களைப் போல் ஆயிரக் கணக்கான மாந்தர் இந்தியாவிலும், கனடாவிலும் அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டுகள் பாதுகாப்பாக ஆரோக்கியமாய் வசித்து வருகிறார்.
    ++++++++++++++

    தகவல்:
    1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA
    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA
    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    12.  கேன்சர் கல்பாக்கம்: (திண்ணையில் ஞாநியின் கட்டுரை) (4/19/03)

    இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:

    1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22, 2003]

    2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

    3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

    4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

    4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

    5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003]http://www.dae.gov.in/gc/gc2003.htm

    6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

    7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

    12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

    13. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

    14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

    [கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

    15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

    [செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ?]

    16. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India  (Nuclear Power Corporation of India) (March 12, 2012)

    17. http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India)

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 24, 2012

    ​ [Revised]​
    Share
  • காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் [4, 5, 6, Three Poems

     

    jay
    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

     

    காதல் நாற்பது (4)

    தனிமைக் கூக்குரல் !

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    உன்வசம் உள்ளது உன் பிறவிப்பணி !
    உனக்கு அழைப்பு வருகிறது
    சிற்சில செல்வ மாளிகை
    அரங்கத்திலே!
    உன்னதப் பாக்களை
    மிக்க நளினமாய்ப்
    பாடுவோனே !
    உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
    மென்மேலும் கேட்டு,
    நடன மாடுவோர் கால்கள்
    இடறி முறிந்து போய் விடும்!
    உன் உன்னத கைகளுக்குக்
    கீழ்மை யான, இந்த
    ஏழ்மை மாது இல்லத்தின்
    தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
    உனக்குத் தெரியாமலே
    உன்னிசைக் கீதங்கள்
    பூரணப்
    பொன் அலைகளாக
    என்னில் லத்தின் வாசல்
    முன்னே வருவது பற்றி
    என்ன நீ
    நினைக்கிறாய் ?
    ஏற்று அதைத்
    தாங்கி கொள்வாயா ?
    என் வீட்டுக் கூரைக் குள்ளே
    பறக்கின்றன,
    வௌவாலும் ஆந்தைகளும் !
    என் விட்டில் போன்ற
    கீச்சுக் குரல்
    உன் மகரயாழ் முன்னே
    எப்படிப் போட்டி இடும் ?
    மெதுவாக முணு முணுப்பேன்,
    மேலும்
    என்னை ஒதுக்கி விட்டு
    விலகுவது
    எதிரொலிக் கப்படுமா ?
    ஏகாந்தனாய்த்
    தனித்து நீ
    இனிதே பாட வேண்டி யிருந்தால்
    அழுதிடும் என் நெஞ்சுக்குள்
    எழுந்திடு மோர்
    அவலக் குரல் !
    ********************
    Poem -4

    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing
    Thou hast thy calling to some palace-floor,
    Most gracious singer of high poems! where
    The dancers will break footing, from the care
    Of watching up thy pregnant lips for more.
    And dost thou lift this house’s latch too poor
    For hand of thine? and canst thou think and bear
    To let thy music drop here unaware
    In folds of golden fulness at my door?
    Look up and see the casement broken in,
    The bats and owlets builders in the roof!
    My cricket chirps against thy mandolin.
    Hush, call no echo up in further proof
    Of desolation! there’s a voice within
    That weeps . . as thou must sing . . . alone, aloof.
    **********
    காதல் நாற்பது (5)
    காதற் கனலை மிதிக்காதே !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
    கனத்துப் போன என்னிதயத்தை
    மரணத் துயரில் தாங்கி
    நடமாடுகிறேன்!
    முன்னொரு காலத்தில் அவ்விதம்
    மரண மதச்சடங்கில்
    கிரேக்கப் பெண் எலெக்டிரா (*)
    தூக்கிப் போனாள்,
    இறந்த தந்தையின்
    எரிச்சாம்பற் கலசத்தை !
    உந்தன் கண்களுக்குள் உற்று நோக்கி
    உன்னிரு பாதங்கள் மீது,
    குப்புறத் தட்டினேன்
    எரிச் சாம்பலை!
    ஏறிட்டுப் பார் என்னை!
    எவ்விதக்
    கோரக் துயர்க் குவியல்
    எனக்குள்
    பதுங்கி யுள்ள தென!
    எரித்த கருஞ் சாம்பல் ஊடே
    செங்கதிர்ப் பொறிகள்
    மங்கலாய்
    எழுந்திடும் தெரியுமா ?
    என்மேல் உள்ள வெறுப்பில்
    உனது கால்கள் அக்கொடும்
    கனல் மீது மிதித்து,,
    முழுவதும்
    இருளாகி விட்டால்
    ஒரு வேளை
    அதுவும் எனக்கு நல்ல தாகலாம் !
    அப்படி யின்றி
    காற்றடித்து அணைக்கு மென
    என்னருகே நீ
    காத்திருந்தால்
    எரிச் சாம்பல் தூசி
    கிரீடமாய்ப் படியும் உன்
    சிரம் மீது !
    என்னினிய காதலனே !
    அவ்விதம் நீ
    கவசமிட்டுக் கொள்ள லாமா,
    தவிர்த் தென்னை ?
    தீக்கனல் பொறி எவையும்
    தோலுக்குக் கீழிருக்கும்
    உரோமத்தை
    கரித்துத்
    துண்டிக்க மாட்டா !
    தூரமாய் நில்,
    விலகிப் போ
    வெகு தொலைவில் !

    +++++++++++

    (*) Electra

    In Greek mythology (Trojan War) Electra was daughter of Agamemnon and Clytemnestra .

    Electra was absent from Mycenae when her father, King Agamemnon, returned from the Trojan War and was murdered by Aegisthus, Clytemnestra’s lover, and/or by Clytemnestra herself. Aegisthus and Clytemnestra also killed Cassandra, Agamemnon’s war prize, a prophet priestess of Troy. Eight years later Electra was brought from Athens with her brother, Orestes). According to Pindar, Orestes was saved by his old nurse or by Electra, and was taken to Phanote on Mount Parnassus, where King Strophius took charge of him. In his twentieth year, Orestes was ordered by the Delphic oracle.
    to return home and avenge his father’s death. According to Aeschylus, he met Electra before the tomb of Agamemnon, where both had gone to perform rites to the dead;

    ********************

    Poem -5

    Sonnets from the Potuguese

    By: Elizabeth Browing
    I lift my heavy heart up solemnly,
    As once Electra her sepulchral urn,
    And, looking in thine eyes, I overturn
    The ashes at thy feet. Behold and see
    What a great heap of grief lay hid in me,
    And how the red wild sparkles dimly burn
    Through the ashen greyness. If thy foot in scorn
    Could tread them out to darkness utterly,
    It might be well perhaps. But if instead
    Thou wait beside me for the wind to blow
    The grey dust up, . . . those laurels on thine head,
    O my Belovழூd, will not shield thee so,
    That none of all the fires shall scorch and shred
    The hair beneath. Stand farther off then! go.

    **********

     

    காதல் நாற்பது (6)
    தனித்த வாழ்வு வேண்டாம் !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    என்னை விட்டுத் தள்ளிப் போ !
    என்றாலும்
    உணர்வு வரும் எனக்கு
    உன் நிழலில் தான்
    நிற்க வேண்டும் என்று !
    என் முன்வாசலில் தனித்து நின்று
    ஏகாந்தியாய்
    இருக்க விருப்ப மில்லை!
    ஆணை இடுவேன்,
    ஆத்மா நற்பயன் அடைய !
    பரிதி வெளிச்சத்தில் பிறர்க்குக்
    கை அசைக்கப் போவதில்லை
    மௌனமாய் !
    என் உள்ளங்கை தன்னை
    உன்கரம் தொடுவதால் உண்டாகும்
    இன்ப உணர்வை
    இழந்திட மன மில்லை !
    உன் நெஞ்சு என்னிதய முடன்
    பின்னிக் கொண்டு
    இரட்டைத் துடிப்பு எழும் போது
    பரந்த புவித் துயர்கள்
    பிரிக்க முனையும்
    இருவரையும் !
    திராட்சையின் சுவைதனை ஒயின்
    பானமும் தருவது போல்
    காணும் என் கனவிலும்,
    புரியும் என் பணியிலும்
    உருவாய் இருப்பது நீயேதான் !
    கடவுள் மீது முறையிட்டுத்
    தொடரும் வழக்கில் அவர்
    காதில் விழுவது உன் பெயரே !
    கடவுள் எனை நோக்கின்
    காண்பது,
    கண்ணுக் குள்ளிருக்கும்,
    இருவரின்
    கண்ணீர்த் துளிகள் !
    ********************

    Poem -6

    Sonnets from the Potuguese

    By: Elizabeth Browing

    http://members.aol.com/ericblomqu/brownine.htm
    Go from me. Yet I feel that I shall stand
    Henceforward in thy shadow. Nevermore
    Alone upon the threshold of my door
    Of individual life, I shall command
    The uses of my soul, nor lift my hand
    Serenely in the sunshine as before,
    Without the sense of that which I forbore–
    Thy touch upon the palm. The widest land
    Doom takes to part us, leaves thy heart in mine
    With pulses that beat double. What I do
    And what I dream include thee, as the wine
    Must taste of its own grapes. And when I sue
    God for myself, He hears that name of thine,
    And sees within my eyes the tears of two.

    **********

     

    Share
  • திருமால் திருப்புகழ் (29)

    கிரேசி மோகன்

    vishnu-garuda-847x1024

    தனன தனதான தனன தனதான
    தனன தனதான தனன தனதான -தனதான….

    ————————————————————————————————————————
    “பிளிரும் கஜம்வாழ பறவை முதுகேறி mother_child_PH71_l
    ஒளிரும் சுடரேந்தி முதலை தலைசாய -விரைவோனே
    தளர இடையாடை திலக நுதல்கூன
    தலையின் மயில்பீலி சரிய படையோடு -மெதுவாக
    துயில இடையாயர் தளிகை அறைதாவி
    உறியில் தயிர்பாலை திருட வரும்போது -விரைவோனே
    குளிர குளமாடும் மகளிர் அணிசேலை
    உருவி கரைமேவி மருத மரமேறி -மெதுவாக
    அலறி ஒருநாளில் அழுத மகள்சோகம்
    விலக துணிசேர்க்க விரையும் மெதுவான -பெருமாளே
    —————————————————————————————–

     

     

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 9

    இவள் பாரதி

    கூடடையப் பறக்கும்

    பறவையின் வேகமொத்து

    பறக்கின்றனயென் கால்கள்

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த

    இப்பெருநகரத்தில்

     

    தாய்ப்பறவையை

    எதிர்நோக்கிக் காத்திருக்கும்

    குஞ்சுப்பறவையின்

    கண்களும் காதுகளும்

    படபடக்கின்றன

    நொடிக்கொருமுறை

    ——

    வாடிக்கிடந்த

    பூவொன்றையெடுத்து

    சிறுவாயில் வைத்து

    எச்சில்படுத்துகிறாள்

    அம்மாகுட்டி

     

    மழைத்துளிபட்டதென

    மணக்கத் துவங்குகிறது

    பூவிதழ்

    ——-

    ஒரே பாடலைத்

    திரும்பத் திரும்பப்

    பாடுகிறேன்..

    முகம்பார்த்து

    முலைப்பாலருந்தும் குழந்தைக்கு

     

    பாடலை நிறுத்துகிறேன்

    குடிப்பதை நிறுத்திவிட்டு

    உன்னிப்பாய் கவனிக்கிறாள்

     

    மீண்டும்

    அதே பாடலைப் பாடுகிறேன்

    பாலைக்குடிக்கிறது குழந்தை

    சிவந்த மென்கால்களை அசைத்துக்கொண்டே

    ——-

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    Subashini_Thirumalaiஇந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொல்லவேண்டும்தான். வித்தியாசத்துக்குக் காரணம் எழுத்தாளர் கோவை ஞானியின் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடும்போது –

    ”(கோவை ஞானி) தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது. முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா? என்ற அச்சம். ஆனால் படிக்கப் படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்” – என்று திருமதி சுபாஷிணி குறிப்பிட்டு பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றிய தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பொதுவாகவே மனிதர்கள் பல விதானங்களில் சிந்திக்கிறார்கள். இது உலக மாந்தர்களுக்குண்டான சிறப்பு. பல சிந்தனைகள் சித்தாந்தங்களாக மாறுகிறதுதான். அந்த சித்தாந்தங்களில் சில காலத்தின் கோலத்திற்கேற்ப மிக அதிக அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே சமயத்தில் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களால் அதற்கு மாறாக உள்ள இன்னொரு சித்தாந்தத்தை மனதாலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதான்.

    அதே சமயத்தில் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றினாலும் மாற்றார் கருத்தையும் நாம் படித்து அறிய வேண்டும். இதற்கு பொதுவாக மனது இடம் கொடுக்காது. மறுக்கும்.. சில சமயம் அலட்சியப்படுத்தும், சிலசமயம் பயப்படுத்தும் ஆனால் படித்தபின்னர், அதுவும் முடிந்தவரை பொறுமையாக ஒரு திறந்த மனதில் படிக்கப்படும்போது அந்த சித்தாந்தத்தில் உள்ள பல நல்ல கருத்துகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்தான். இப்படிப்பட்ட கருத்து நம் மனதுள் வந்தவுடன் நமக்குள் முதலில் தோன்றுவது மாற்று சித்தாந்தத்தில் உள்ள நல்ல கருத்துகளும் நல்ல மதிப்பும் உண்டாகும்., இதனால் நம் எண்ணங்களையும் செம்மையாக்கிக்கொள்ள உதவுகிறது. மாற்று சித்தாந்தங்களையும் மதிக்கத் தோன்றுகிறது. நம்முள் உள்ள ஒரு எதிர்மறையை நீக்கிக் கொள்ள சந்தர்ப்பமும் தருகின்றது.

    அப்படிப்பட்ட ஒரு கருத்தை நம்முன் நிறுத்தி வாசகர்களுக்கும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் கருத்துரையைப் பதிப்பித்த திருமதி சுபாஷிணி அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நல்வாழ்த்துகள். அவர் கட்டுரையை முழுதும் படிக்க இதோ அவரது இணைப்பு – http://www.vallamai.com/?p=42999

    கடைசி பாரா: பிச்சினிக்காடு இளங்கோ’வின் சொல்லும் சொல்லும் கவிதை.

    சொற்களெல்லாம்

    சிக்கிமுக்கிக் கற்கள்

    விருட்சமாய்

    விளையும் விதைகள்

    ஒவ்வொரு சொல்லும்

    வாமன வடிவம்

    ஒவ்வொரு சொல்லும்

    சுரங்கம்

    ஒவ்வொரு சொல்லும்

    ஒரு

    சூத்திரம்

    சூத்திரம் விரிந்தால்

    சூட்சுமம் விளங்கும்

    Share
  • “தாய்மொழி வழிக் கல்வியை உயர்த்திப் பிடியுங்கள்…..”

    தொகுப்பு: எஸ். வி. வேணுகோபாலன்

    முனைவர் ம. திருமலை,

    துணைவேந்தர்,

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    “கிராமத்தில் மாட்டுக் கொட்டகை போன்ற இடத்தில் நடத்தப்பட்டுவந்த  பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்த என்னை சோழவந்தான் உயர்நிலைப் பள்ளியில் கொண்டுவந்து போட்டார்கள். இங்கே சொல்லத் தக்க மதிப்பெண்கள் எதையும் நான் பெற்றிருக்கவில்லை. நான் தேற மாட்டேன் என்றார்கள். எனினும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டேன். முழுக்க முழுக்கத் தாய்மொழிவழியிலேயே கல்வி பயின்றவன். இப்போது உங்கள் முன் ஒரு பல்கலைக் கழகத் துணை வேந்தராக நிற்கிறேன்…..எனவே பெற்றோரைக் கேட்டுக் கொள்கிறேன்… மதிப்பெண்களை வைத்துக் குழந்தைகளை எடை போடாதீர்கள்… குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் நல்ல சாதனையாளர்களாக வர வாய்ப்பு உண்டு.

    “காலனி ஆதிக்கம் இருந்த நாட்களில், அர்பட்நாட் என்ற ஆங்கிலேயர் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகப் போனபோது, அவரது வங்கியில்  பணம் போட்டிருந்தவர்கள் பட்ட பாடுகளை மகாகவி பாரதி தமது கட்டுரையில் எழுதினார். நாமே ஒரு சுதேசி வங்கி தொடங்கினால் என்ன என்று அவர் விடுத்த வேண்டுகோளில் இருந்து பிறந்ததுதான் இந்தியன் வங்கி. பின்னர் அதே அர்பட்நாட்டின் கட்ட்டடத்தையும் வாங்கி அங்கேயே இந்த வங்கி இயங்கத் தொடங்கியது. அதன் ஊழியர்கள் எங்களுக்குச் சமூக அக்கறை உண்டு என்று கம்பீரமாக நடத்தும் இந்தத் தொழிற்சங்க சேவை போற்றுதலுக்குரியது. இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துதலுக்கு உரியவர்கள்.

    இங்கே தலைமை ஆசிரியை வாசித்த ஆண்டறிக்கையில், இந்தப் பள்ளியில்  பிரம்படி இல்லை. ரேங்க் கார்டு இல்லை என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேங்க் கார்டு கொடுத்ததும் இந்த அம்மாக்கள் உடனே அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு ஒப்பிடுவார்கள். இது எங்கே கொண்டுபோய் விடும் தெரியுமா? முதல் முறை அடிபட்ட  பிள்ளை, அடுத்த முறை  அப்பா கையெழுத்தை அவனே போட்டுக் கொண்டுபோய்விடுவான். பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உண்டு.  ஒரே வீட்டில் அண்ணனும், தம்பியும் இருப்பார்கள். ஒருவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கியிருப்பான். அவன் தனது ரேங்க் கார்டைப் பெற்றோரிடம் கொண்டு காட்டுவான். அடுத்தவன் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பான். அவனால் அப்படிக்காட்ட முடியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே இப்படிப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மிக்க் கவனமாகவும் திறமையாகவும் செயற்படவேண்டும். இருவரையும்  பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

    முனைவர் ம. திருமலை, துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
    முனைவர் ம. திருமலை,
    துணைவேந்தர்,
    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    ஒருமுறை நான் விமான நிலையத்தில் காத்திருந்தேன். எனக்குப் பின்புற வரிசையில் செப்புச் சிலை போல் ஒரு பெண் குழந்தை. மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் பெற்றோர் அந்தக் குழந்தையை அவள் சரியாகப் படிப்பதில்லை என்று யார் யாரோடோ ஒப்பிட்டவண்ணம் அத்தனை திட்டு திட்டிக் கொண்டிருந்தனர். என்னிடம் கொடுத்தால் அந்தக் குழந்தையை மடிமீது ஏந்திக் கொண்டாடி இருப்பேன். அவ்வளவு உயர்கல்வி படித்திருந்தும் அந்தப் பெற்றோர் இப்படி மூடத்தனமாகக் குழந்தையை நடத்தும் விதம் என்னை மிகவும் பாதித்தது.

    பெற்றோரே, உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் குழந்தைகள் எத்தனை மதிப்பெண்கள் வாங்குகின்றனர் என்பதை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். அவர்களிடம் காணும் திறன்களை ஊக்குவித்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களைப் பள்ளியில் பெற்ற  குழந்தைகள் சிலர் மேற்படிப்பில் சமாளிக்க முடியாமல் நொறுங்குவதைப் பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ மனிதர்கள் தங்களது பள்ளிக் கல்வியில் அதிகம் மதிப்பெண் பெறாதவர்கள் என்பதை அன்பு கூர்ந்து கவனியுங்கள்.

    பள்ளிக்கூடப் படிப்பில், எங்களுக்குக் கணக்குப் பாடம், கணக்கு ஆசிரியர்  என்றாலே வயிற்றைக் கலக்கும். ஆனால் அவர் வராத அன்றைக்கு, கருப்பையா வாத்தியார் என்பவரை அந்த பாட வேளையில் ஏதாவது சொல்லிக் கொடு என்று எங்கள் வகுப்புக்கு அனுப்பி வைப்பார்கள். அவர் படித்தவர் இல்லை. கைநாட்டு மனிதர்தான். ஆனால் அவர் வந்தால் அப்படி உற்சாகம் கொள்ளும் வகுப்பறை. பஞ்ச தந்திரக் கதைகளைச் சொல்வார். நல்ல சுவாரசியமாகக் கதை போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று விறுவிறுப்பான ஒரு கட்டத்தில் கதையை நிறுத்திவிட்டு,இடுப்பிலிருந்து மூக்குப்பொடிப் பட்டையை எடுத்து அதில் ஒரு சிட்டிகை எடுத்து நிதானமாகப் பொடியை உறிஞ்சுவதில் ஈடுபடுவார். நாங்களோ கதையின் அடுத்த கட்டம் என்ன என்று அறியத் துடிப்போம். இப்படியாக எங்களை வசீகரித்து, வாழ்க்கை குறித்த புரிதல்களையும் எங்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தவர் அவர். பள்ளிக் கல்வியைக் காட்டிலும் கருப்பையா கற்றுக் கொடுத்த நுட்பங்களே வாழ்க்கையில் சோதனைக் காலங்களில் – சவாலான தருணங்களில் பிரச்சினைகளைத் துணிவோடு சந்திக்கும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொடுத்திருக்கிறது.

    இன்றைக்கு இப்படியான சூழல் இல்லாததால், மாணவர்கள் எப்படித் திணறுகின்றனர் என்று பார்க்கிறோம். ஒரு கல்லூரி முதல்வரை மாணவர்கள் வழிமறித்துக் கொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை. இன்னொரு மாணவர் ஒரு பெண் ஆசிரியரையே குத்திக் கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளதைப் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான சூழல் இல்லை.

    கற்றலின் இனிமை பற்றிக் குறிப்பிட்டார்களே… மாணவர்-ஆசிரியர் உறவு இணக்கமாக இருக்க வேண்டும். தாய்மொழியைக் கேவலமாக நினைக்காதீர்கள்…உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீன மொழி.  ஆங்கிலம் அல்ல. ஆங்கில மோகம் கொண்டு அலைவது தேவையற்றது. மகாகவி பாரதியே,ஆங்கிலக் கல்வி பற்றி வருத்தமுற்றுத் தனது சுயசரிதையில், “செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது, தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது” என்று சொல்வார். இதனால் ஓர் எள்ளின் முனையளவு  நலமும் பெற முடியவில்லை என்றார். இதை எந்தக் கோயிலிலும் வந்து சத்தியம் செய்வேன் என்றும் சொன்னார். நானும் தமிழ் வழிக் கல்வி படித்துத்தான் இன்று துணைவேந்தராக உயர்ந்திருக்கிறேன். ஒன்றும் விளங்காமல் எல்லாம் போய்விடவில்லை. தமிழ் கற்றால் நல்ல நிலை ஏற்படும் என்பதற்கு வேறு ஒரு நிரூபணம் தேவையில்லை.

    இந்தப் பள்ளி தாய்மொழிவழிக் கல்வியைத் தொடர்ந்து நடத்துவது அருமையான விஷயம். 6சதவீதம் பேர் பேசும் ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம். நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து – அரசுப் பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்..

    இந்தப் பள்ளி மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..”

    (இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நடத்திவரும் ஐ பி இ ஏ பள்ளியில்  பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற 12ஆவது ஆண்டுவிழாவில் ஆற்றிய சிறப்புரையிலிருந்து…)

    நன்றி: வண்ணக்கதிர்

    Share
  • திருமால் திருப்புகழ் (28)

    கிரேசி மோகன்

    800px-Darasuram_lord_Shiva_and_Parvathi_on_Bull
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா-தனதான….

    ———————————————————————————————
    “எங்கு துச்சம் தூய்மையா குதோ 10006373_503143549790679_58366536_n
    எங்கு மிச்சம் பூர்ணமா குதோ
    எங்கு பிக்‌ஷை சேரஆ குதோ -பிரசாதம்;
    எங்கு சுத்தம் சோறுபோ டுதோ
    எங்கு பித்தம் ஆலவா யனார்
    நெஞ்சின் நச்சு பாகமா குதோ -அதனாலே
    எங்கு சித்தம் ஏகமா குதோ
    எங்கு சத்தம் கீதையா குதோ
    எங்கு பக்தி யோகமா குதோ -அதைநாட
    பொங்கு வெற்பு சோணைமீ திலே
    தங்கி சுத்த நானில்மூழ் கியே
    நின்ற நிட்டை ஞானநா யனார் -ரமணேசர்
    முங்கு புத்த வாவிவா சனாய்
    இங்கி ருக்க காளைவா கனார்
    பங்கு சக்தி சோதரா விடா -தருள்வாயே
    சங்கு சக்ர வாளும்கோ லுமாய்
    அம்பு விற்கை ஆளும்மா லனே
    பொன்பு விக்கு மாதுசே ரவே -புளிலேறி
    இங்கெ னக்கு யாவுமா கநீ,
    என்ப தைப்பு ஓயவே கமாய்
    மண்ப றித்த ஏனரூ பனே-வருவாயே
    வெஞ்சி றைக்குள் வாசுதே வனாய்
    வந்து தித்து வாழஆ யனாய்
    மண்கு தித்த நீலமே கமே -பெருமாளே”
    —————————————————————————————————————————–

    படத்திற்கு நன்றி

    http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Darasuram_lord_Shiva_and_Parvathi_on_Bull.JPG

    Share
  • மாற்றம் ஏற்படவேண்டும்!

    எம்.ஜெயராமசர்மா

    திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது. பைபிளும் வந்தது. பகவத்கீதையும் வந்தது. அந்த நாள் முதல் இந்த நாள்வரை ஆன்மீகத் தலைவர்களும், அறிஞர்களும் — மனித குலம், மண்ணில் நல்லவண்ணம் வாழ, எண்ணில்லாதவற்றை எல்லாம் – பாட்டாகவும், பயனாகவும் சொன்னார்கள். சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியபடி இருக்க — மற்றவர்களோ மனம்போனபோக்கிலே தாம் விரும்பியபடியே போய்க்கொண்டு இருப்பதையே இப்போது காணமுடிகின்றது.

    மனித வாழ்வில் மாற்றம் அதாவது நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் எல்லாம் வந்தார்கள்.அறிவுரைகளை எல்லாம் தந்தார்கள்.அவர்கள் எண்ணிய மாற்றம் ஏற்பட்டதா என்றால் அது – கேள்விக்குறியாகவே இன்று அமைந்து விட்டது எனலாம்.

    சமயம் என்றால் என்ன? மனிதனை புனிதனாக்குவது சமயம் என்றும், ஒழுக்க நெறியுடன் வாழப் பழக்குவது சமயம் என்றும், சமத்துவ மனப்பங்கை வளர்ப்பது சமயம் என்றும்,இறை உணர்வோடு அன்புமயமாக வாழவைப்பது சமயம் என்றும், சமயத்துக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

    ஆனால் சமயம் என்பது தன்னிலை இழந்து நிற்பதையே எங்கும் காணமுடிகிறது. சமயத்தை ” மதம் ” என்றும் அழைத்தனர். அதாவது மனிதனிடம் நான் என்னும் ஆணவமதம் பிடிக்காது அவனை நல்வழிப்படுத்தும் காரணத்தால் தான் மதம் என்று பெயரிட்டு அழைத்தனர். இந்தச் சொல் மிகப் பொருத்தமாக அமைந்து விட்டதென்றே சொல்லலாம்.ஆனால் அதனை எடுத்துக் கொண்டவர்களோ அர்த்தம் புரியாது, தமக்கேற்றபடி மாற்றிக்கொண்டு மதவெறியர்களாகவே மாறிநிற்பதைக் காண்கிறோம்.

    இந்த மதவெறியால் எத்தனை கலவரங்கள் ? எத்தனை உயிர்கள் மடிந்தன? எவ்வளவு சொத்துக்கள் அழிந்தன? எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் இல்லாது போயின? சாந்தி, சமாதானம், அனைத்தும் செல்லாக் காசுகளாகி நிற்கின்றன்!

    மதத்தின் பெயரால் நூறு ஆண்டுகள் உலகில் நடைபெற்ற சிலுவைப் போரை வரலாற்றிலிருந்து எடுத்துவிட முடியாது. எத்தனை கோரத்தனங்கள் அதனால் உலகில் ஏற்பட்டது என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளுவார்கள்.

    இதன் பின்பும் மதவெறி அடங்கியதா என்றால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது.உலகினெங்கோ ஒரு பகுதியில் இன்றும் மதத்தின் பெயரால் கோரங்கள் அரங்கேறிய படியேதான் இருக்கிறது.

    மதத்தோடு சண்டை நின்ற பாடில்லை.மொழிக்காகவும் பல இடங்களில் பல சண்டைகள். இதனாலும் பல கோரங்கள்.

    மதமும் ,மொழியும், கலவரங்களுக்கு வித்திட்டதென்ற வகையில்,  இனத்தாலும் பல கோரங்கள் நிகழ்ந்து விட்டன. இன்றும் நிகழ்ந்த வண்ணமே இருப்பதையும் காணமுடிகிறது.

    இவற்றை உற்று நோக்கும் பொழுது — இனமும், மதமும், மொழியும், தேவையா? என்கின்ற வினா எழுகிறதல்லவா? இவை மூன்றும் இல்லாவிட்டால் மனிதன் இந்த உலகில் வாழவே முடியாதவன் ஆகிவிடுவானா? இவை கட்டாயம் மனித வாழ்வுக்குத் தேவைதானா?

    சிக்கலானதும் சிந்திக்க வேண்டிய விடயமுமாக இருக்கிறதல்லவா? மதமும் பாதுகாக்கப் படவேண்டும். மொழியும் பாது காக்கப்பட வேண்டும். அதே வேளை இனமும் பாதுகாக்கப் படவேண்டும்.

    என்ன ஆச்சரியமாகப் படுகிறதா?ஆம்! இம் மூன்றும் இல்லை என்றால் மனித இனம் இருந்தென்ன இல்லா விட்டால் என்ன? இவை இல்லையேல் மனித இனம் விலங்கினத்தோடுதான் சேரும் கட்டாயம் வந்துவிடும்.

    புத்தர், ஜேசு, சங்கரர், பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி, இவர்களின் வருகையும், இவர்களின் உபதேச மொழிகளும் எங்கே? அவை என்னவாயின? நாம் அனைவரும் எம்முள்ளே கேட்க வேண்டிய கேள்வியாகும்!

    புத்தரின் போதிமரத்தின் அடியிலேயே அவரின் கொள்கைகள் புதைக்கப்படுகிறது. ஜேசு போதித்த நெறி நீத்துப் போவதைப் பார்க்கின்றோம்.காந்தியின் அஹிம்சை படும்பாடோ சொல்ல முடியாத நிலை! ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், எம்மத்தியிலா வாழ்ந்தார்கள்? என்று எண்ணும் நிலைதான் காணப்படுகிறது.

    கீதை , உபநிடதம், அதற்கான பல விளக்க உரைகள், வேதங்கள், மந்திரங்கள் , தத்துவ சாஸ்த்திரங்கள் இவை எல்லாம் இருக்கின்றனவா? என்ற சந்தேகமே ஏற்படுகிறது.அந்த அளவுக்கு விபரீதங்கள் நடப்பதை கண்கூடாக காண்கின்றோமல்லவா?

    ஆண்டவநின் சன்னிதானமான கோவில்களிலே சண்டைகள். அறிவினை ஊட்டும் கல்விக்கூடங்களில் எல்லாம் அறிவினைப் புறந்தள்ளி விட்டு விட்டு பணத்தை பிடிங்கி விடும் நிலையங்கள் ஆகிவிட்ட கொடுமை. உயிர் காக்கும் என்று எண்ணி நிற்கும் வைத்திய நிலையங்களோ உயிர் பற்றிய கரிசனையை விட்டு விட்டு காசை எவ்வளவு கறக்கலாம் என்று நிற்பதையும் காண்கின்றோம். அரசியல் பற்றி நினைக்கவே அருவருக்கிறது. ஊழல்களின் உறைவிடமாகி விட்டது. எங்கும் கலப்படம். எதைப் பார்த்தாலும் பயப்பட வேண்டிய நிலை.

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, வெளியில் செல்லவே அஞ்சும் நிலை. நாட்டில் இருகிறோமா? அல்லது அடர்ந்த காட்டில் கொடிய விலங்குகளின் மத்தியில் இருக்கிறோமா என்று எண்ணும் பயங்கரம்!

    இவை தேவைதானா? இதற்காகவா எமது முன்னோர் பலர் பல தியாகங்களைச் செய்தார்கள்? இதற்காகவா எமது வழிகாட்டிகளான் பெரியவர்கள் பல் அறிவுரைகளை விட்டுச்சென்றார்கள்?

    ” கற்றதனால் ஆய பயன்தான் என்ன? வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டாமா?

    குறளும், குரானும், பைபிளும் . பகவத்கீதையும் சொல்லியதை விட வேறு எதுவுமே எதையும் சொல்லிவிட முடியாது.

    அவற்றை எல்லாம் நாம் வைத்திருந்தும் — எம்மிடத்து நல்ல மாற்றம் ஏற்படாது இருப்பது எவ்வளவு மடமை என்பதை நாம் அனைவரும் கட்டாயம் உணரவேண்டும்.

    எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்று நல்லவற்றை  மனத்திருத்தி வாழ்வதுதான் வாழ்க்கை.

    அற்புதமான அமிர்தம் போன்ற இந்தப் பொக்கிஷங்களை நல்ல முறையில் பயன் படுத்தினால் நல்ல மாற்றம் ஏற்படும். வாழ்வும் வளம் பெறுவதோடு மண்ணில் நல்ல வண்ணமும் வாழலாம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 112 (17.03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    உறையூர் சென்று சேர்தல்

    சாப விமோசனம் தந்தபின்
    தவத்தில் சிறந்த கவுந்தியடிகளும்
    கோவலனும் கண்ணகியும்
    அச்சோலையை விட்டுப் புறப்பட்டனர்.

    முன்பு ஒரு முறை
    முறம் போன்ற காதையுடைய யானை ஒன்றைப்
    போரிட்டு வென்ற கோழியின் பெயரைத் தாங்கி,
    கோழியூர் எனவும் அழைக்கப்பட்ட
    உறையூருக்குள் சென்றனர்.

    கட்டுரை

    முடியுடை வேந்தர் மூவருள்
    வீரவளை அணிந்த பெரிய கைகளையுடைய
    சோழமரபில் பிறந்தவர்கள்,
    அறம், மறம், ஆற்றல் மற்றும்
    அவர் பழம் பெரும் புகாரின் பண்பு,
    இந்திரவிழாச் சிறப்பு, விண்ணவர் வரவு,
    குடிமக்களின் மாண்பு, உணவுப்பொருள் பெருக்கம்,
    தெய்வத்தை ஒத்த காவிரி நீரின் சிறப்பு,

    பொய்க்காத வானம், புனல் பொழியும் சிறப்பு,
    ஆடலரங்கின் அமைப்பு,
    தூக்கு, வரி, பதினோரு வகை ஆடல்கள்,
    திணைநிலை வரி, இணைநிலை வரி..இவற்றின் தன்மை
    இவை எல்லாம் பொருந்த அமைந்த யாழின் இயல்பு,
    அவற்றுள் சிறந்த பதினான்கு வகை
    இசைக்கோவையாகிய யாழின் சிறப்பு,
    இடைநிலைப் பாலைப்பண்ணின் சிறப்பு,
    அதன் வழித் தோன்றிய இசையின் ஆக்கம்,
    புகாரின் பொலிவு, ஒளியுடைப்பாணி

    மேலும் இங்கு சொல்லப்படாத
    இன்னும் பல சிறப்புகளுடன்
    ஒருமித்துப் பொருந்தி விளங்கும்
    புகார்க் காண்டம் முற்றிற்று.

    வெண்பா

    கடலை வேலியெனக் கொண்டமைந்ததும்
    இப்பூமிமகள் தன் நெஞ்சில் அணிந்த
    முத்துமாலை போன்றதுமான
    புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினம்…

    காலை நேரம் உதித்து ஒளிபரப்பும் சூரியன் போலவும்
    மாலை நேரம் உதித்து வளரும் இயல்புடைய திங்கள் போலவும்
    வாழ்வாங்கு வாழ்வதாக!

    புகார்க் காண்டம் முற்றிற்று.
    அடுத்து வருவது  மதுரைக் காண்டம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  245 – 271

    Share
  • குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

    ராஜலக்ஷ்மி பரமசிவம்

    “என் பிரென்ட்  நாளை சர்க்கஸ் போகிறாள். நீ எப்பொழுது என்னை அழைத்துப் போகிறாய்? “

    “எனக்கு அந்த பொம்மை வேணும்.”

    நீங்கள்  யூகித்தது சரியே.  இது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின்  சிறிய ஆசைகள்.

    எத்தனை அழகான சந்தோஷமான   உலகம் இந்தக் குழந்தைகளுடையது. பேராசைகள் அற்ற, கள்ளம் கபடமில்லாத, பொறாமைகள் இல்லாத உலகம் அவர்களுடையது.

    அவர்களுடைய ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான். நாம் அதையெல்லாம் நிறைவேற்றி  வைக்கிறோமா என்பது கேள்விக்குறியே . ஆசைகள் நிறைவேற்றுவதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.அவர்களைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்று தோன்ற வைக்கிறது இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் எல்லாம்.

    ஆசிரியரே, தன மாணவியிடம், தவறாக நடந்து கொள்வது,  சில சமயங்களில்,  அப்பாவே தன பெண்ணிடம்  முறை தவறி நடப்பது , என்று அவ்வப்பொழுது கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது  என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை  மறுக்க முடியாது.பெரும்பாலும்  பெண் குழந்தைகள் தான் இதில் பலியாகிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆண் குழந்தைகளும் இப்படி பாதிக்கப் படுவதுண்டு. அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும்  பாதிக்கப் படுகிறார்கள்.

    இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் இந்த சமுதாயத்தை திருத்த முடியுமா? எல்லோருக்கும் நம்மால் பாடம் எடுக்க முடியுமா என்ன? அதெல்லாம் நடவாதக்  காரியம் தான்.ஆனால் நம் வீட்டுக் குழந்தைகளைக்  காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு எது நல்லது என்பதை எவ்வளவுக்கெவ்வளவு  ஜாக்கிரதையாக தேர்வு  செய்கிறோமோ ,அதைவிடவும் அதி ஜாக்கிரதையாக  அவர்களுக்கு எது கெடுதல் விளைவிக்கக் டியது என்பதை ஆய்ந்தறிந்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது  மிக மிக  அவசியம்.

    அந்தக் காலத்தில், பெண்பிள்ளைகளும், ஆண்களும் தனித்தனியாக  படித்து வந்தகாலம். இப்பொழுது காலம் மாறி விட்டது எனலாம்.ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது  என்பது காலத்தின் கட்டாயம்.  பல சமயங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களை தாக்க வரும் மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை நாம் தானே அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியது என்று சொல்லலாம். அதே சமயத்தில், ஆசிரியர்களின் பங்கும்  முக்கியமானதே! இருவரும், ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை நிறுத்திவிட்டு   தங்கள் கடமையை சரிவர  செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.

    இதென்ன பிரமாதம் என்று தோன்றலாம்.”  குட் டச் ”  “பேட்  டச் ” என்று சொல்லிக் கொடுத்து விட்டால் ஆச்சு. அது எவ்வளவு கடினம் என்பது பல பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும்.

    அந்தக் கால்த்தில்,  நம் பாட்டிகள் சொல்வதுண்டு,  சொந்த சகோதரனேயானாலும்  பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன்  சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.

    ஆனால் அதையெல்லாம்  எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.

    பெற்றோர்களும்  இப்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கிற பெயரில்  அவர்களை  பலவித ஆபத்துகளில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது. தன தோழியின்  வீட்டிற்குப்  போய் விளையாடிவிட்டு அங்கேயே  தோழியுடன்  இரவைக் கழித்து விட்டு வரும்(Sleep Over), ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணை , தோழியின் தந்தையே  சீரழித்து கர்ப்பமாக்கி விட்டது நினைவிற்கு வந்து வேதனைப் படுத்துகிறது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை என்று பெரு  மூச்சு விடலாம் . ஆனால்  அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்காது. இந்த sleep over மேற்கத்தியக் கலாசாரம் நம் நாட்டிலும் இப்போது   புகுந்து விட்டது என்பது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  குழந்தைகள் பேசுவதிலிருந்துத் தெரிய வருகிறது. எதைத்தான் மேலை நாட்டிலிருந்து காப்பியடிப்பது என்கிற விவஸ்தை வேண்டாமா? இதைப் பெற்றோர்கள் முளையிலேயே கிள்ளி  எரிந்து விட்டால் நலம்.

    “good touch, bad touch   ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதில் இருக்கும்  சங்கடங்கள்  ஏராளம் . குழந்தைகள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி மாளாது. ஆனாலும் நாசுக்காக சொல்லித் தான் தீர வேண்டும்.

    பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  உதவுவதற்காக  உங்களுடன் ஒரு காணொளியைப் பகிர்கிறேன். இதைத் தைரியமாக குழந்தைகளுக்கு  போட்டுக் காட்டலாம். எந்த சங்கடமான  காட்சிகளும்  இல்லாதப் படம். குழந்தைகள், அவர்களின் பெற்றோர்   ஆகியோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.

    Child Line India வெளியிட்டுள்ள  காணொளி இது.

    உங்கள் நண்பர்களுடனும், உறவுனர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    link  www.youtube.com/watch?v=4xQCauzPzY4

    காணொளி  நன்றி: Child Line Foundation India.

    Share
  • வார ராசி பலன் 17.0314-23.03.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் இந்த வாரம் அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர் கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விட லாம். பணியில் இருப்பவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் இல்லாமல் இருக்கு மாறு பார்த்துக் கொண்டால் அலுவலக உறவுகள் சீராகத் திகழும். வியாபாரி கள் செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால்,வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்கள் எந்த சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம்.
    ரிஷபம்: பணியில் இருப்பவர்கள் தங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி பிறர் நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு போக விடாமல் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால்,புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும். பெண்கள் இந்த வாரம் கட்டட பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.கலைஞர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல் பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். சுய தொழில் புரிபவர்கள்
    பண விஷயங்களில் அவசரமான போக்கைக் கடைபிடிக்க வேண்டாம்.
    மிதுனம்: . பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். அலுவலக ரீதியில் பதவிக்கேற்றவாறு பொறுப்பு கூடும். இந்த வாரம் மாணவர்கள் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்க ளுக்கு உறவுகளுக்கு உதவி மகிழும் வாய்ப்பு கிட்டும். நினைத்த காரியம் கைகூட, பேச்சு வார்த்தைகளில் இனிமையின் சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் நினைவில் வைப்பது நல்லது. சுயதொழில் புரிபவர் க கள் ஆரோக்கியத்தை நன்கு பாராமரித்து வருவது அவசியம். கலைஞர்கள் தொழில் ரீதியாக போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கடகம்: மறைமுகப்போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது.
    .
    சிம்மம்: கலைஞர்களுக்கு மனதிற்கு பிடித்த ஆபரண வகைகளை வாங்கி மகிழும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டால், நன்மைகள் பல உண்டு. இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப் பாக பணிபுரிதாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகள் வந்து போகும். வியாபாரிகள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமல்,இருந்தாலே பாதி கவலை குறைந்து விடும். கலைஞர்களுக்கு உங்கள் கலைத் திறமைக்குக்குரிய கௌரவம் கிடைத்தாலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம்.
    கன்னி: கலைஞர்கள் தாழ்வு மனப் பான்மைக்கு இடம் தராமல் செயல்பட்டால்,ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர்விட ஆரம்பிக்கும். வியாபாரி களுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். சுயதொழில் புரிபவர் கள் சரக்குத் தட்டுப்பாடு இல்லாதவண்ணம் பார்த்துக் கொண்டால், வாடிக்கையாளர்களின் தேவை எளிதில் நிறைவேறும். இந்த வாரம் விரும்பத்தகாத விஷயங்களால் பொது வாழ்வில் இருப்பவர் களின் மன அமைதி குறையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியரிடம் வீண் வாக்குவாதம், சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அவசியம்.
    துலாம்: பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளா மல் அளவாகப் பழகிவருவது நல்லது.. காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் மாண வர்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். கலைஞர்கள் இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வியாபாரிகள் ஆரோக்கியமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்
    .
    விருச்சிகம்: கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் .சுறுசுறுப்புடன் திகழலாம் போட்டிகள்மூலம் உங்கள் திறமை வெளிப்படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகளின் தீவிரம் குறையும். இந்த வாரம் பொருளாதார சிரமங்கள் குறைவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் . முதியவர்கள் சிறு உடல் உபாதைகளால், கள் அவதிப்பட நேரிடும். .சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர்.
    தனுசு: வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல்பட்டால், லாபத்தின் வரவில் குறைவிராது. ம ாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். கணக்கு வழக்கு துறைகளில் உள்ளவர்கள், சில சங்கடங்களை சமாளிக்க சந்திக்க நேர்ந்தாலும், தன் திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் எவரையும் எடுத்தெறிந்து பேசாமலிருந்தால், மன அமைதி கெடாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை சற்று ஆறப் போடுங்கள். வீண் சிரமம் குறையும்.
    மகரம்: இந்த வாரம் மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு வியாபாரிகள் கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம் . பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம்.. வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் . ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும்.
    கும்பம்: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருந்தால் பொருளாதார இழப்புக்களைத் தவிர்த்து விடலாம். சோம்பலின்றி சுறுசுறுப்பாக பாடுபடும் கலைஞர்களை புகழ், அந்தஸ்து பதவி அனைத்தும் தேடிவரும். வியாபாரிகள் .எதிர்பர்த்த இடங்களிலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சிலசமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றபெண்கள் கடுமையாக உழைக்க நேரிடும்.
    மீனம்: பெண்கள் முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாக செயலாற்றி வந்தால், உறவுகள் உங்கள் அருகிலேயே இருக்கும் . இந்த வாரம் வியா பா ரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும்.. மாணவர்கள்,கல்வித் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாய் அமையும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த விஷ்யங்களில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள் ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வாருங்கள், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும்.

    Share
  • நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா – கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ஏ.சி.திருலோகச்சந்தர்.. ஏவிஎம்…

    கவிஞர் காவிரி மைந்தன்

    தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது.

    தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது. சங்க காலப் புலவர்களும் சளைக்காமல் இதுபற்றிப் பாடிக் குவித்துள்ளார்கள். அகவியல் சார்ந்த காதலில் உறவது தருவது இனிமையென்றால் பிரிவது தருவது கொடுமையன்றோ?

    விதவிதமாக விளக்கங்கள், புதுவிதமான கற்பனைகள், கவிஞர்களுக்கு கைகொடுத்துக் கொண்டேதான் வருகிறது. இதற்கான வரவேற்பும் பொது மக்களிடம் என்றுமே குறைவதில்லை. அண்மையில் கவிஞர் யுகபாரதி அவர்களுடன் ஏற்பட்ட சத்திப்பின்போது.. கவிதை.. இலக்கியம் பற்றி உரையாடியபோது.. அவர் குறிப்பிட்ட சேதியில்தான் எத்தனை உண்மைகள் உறைந்திருந்தன தெரியுமா?

    ஆம்.. இதுவரை.. உலகின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற இலக்கியங்கள் எவை தெரியுமா? Romance or Pathos அதாவது.. காதலின்பம் அல்லது சோகம் இவை தழுவி எழுதப்படாத எந்த ஒரு படைப்பும் அல்லது நூலும் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை என்றார்.

    பால் போலவே வான் மீதிலே
    யார் காணவே நீ காய்கிறாய்

    நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

    வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
    எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
    கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
    பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

    சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
    சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
    மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
    மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

    படம்: உயர்ந்த மனிதன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: வாலி
    பாடியவர்: பி.சுசீலா

    பாடலைப் பாடிய திருமதி.பி.சுசீலாவிற்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாடல். காதலில் பிரிவும் கூட துன்பமான இன்பமானது என்பதைச் சொல்லும் பாடல். மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த உயர்ந்த மனிதன் பாடல் இது!

    Share
  • இது என் கண்ணீரே

    ராதா விஸ்வநாதன்images

    அன்று
    உன் முன் கோபம்
    என்னைக் கொன்று விட்டது
    உயிர் போகும் முன்
    கொடுத்தேன் தானமாய்
    என் கண்களை
    இன்று
    என் புகைப் படம் முன்
    கண்ணீர் விடுவது …
    நீ அல்ல
    அன்று
    நான் கொடுத்த
    என் கண்களே
    கண்ணீர் விடுகிறது  எனக்காக
    அனுப்புனர்
    நந்திதா

    http://sahzu.wordpress.com/2013/12/22/a-good-cry/ 

    Share
  • திருமால் திருப்புகழ் (27)

      கிரேசி மோகன் images (4)


    ’’என் குலதெய்வம் திருவிண் நகர் உப்பிலி அப்பன் திருப்புகழ்’’….
    ———————————————————————————————————

    தனதந்தன தத்தன தத்ததன தனதந்தன தத்தன தத்ததன
    தனதந்தன தத்தன தத்ததன -தனதான….
    ——————————————————————————————————————–
    “மனமுய்ந்துப ரத்தினில் சித்தமென உறவைந்துயெ ழுத்தவன் வெற்பருணைp66
    குடிவந்ததி ருட்சுழி சுத்தமன -ரமணேசர்
    புகல்கின்றஅ வித்தையை பற்றிவளர் புலனைந்தைய டக்கிவுயர் நிச்சலன
    சுகமங்கள நிட்டையில் நிற்கவருள் -புரிவாயே

    சினம்பொங்கநு தற்கனல் ருத்திரனை மதனம்பும யக்கிட விட்டகணம்
    ஒருசம்பவ புத்திரன் ,முத்தமிழின் -முதலாளி
    குடம்வந்தஅ கத்தியன் சத்குருவின், குறமங்கையும் அத்தியும் பத்தினிகள்
    எனசெந்தில்க டற்க்கரை நிர்பயனின் -முறைமாம

    பனைமஞ்சனை இட்டழ மக்கள்மனை பறைசங்கொலி சத்தம தற்க்கிடையில்
    பிணிமுந்திட தெற்க்கெமன் தொட்டிடுமுன் -வருவாயே
    மணலுண்டக ணத்திலி டைச்சிதொழ விசுவந்தனை சொப்பிதழ் சிற்றறையில்
    முனிபுங்கவர் மட்டிலும் எட்டியதை -அருள்வோயே

    கனகம்பொழி பத்தினி பக்கமுற இணைதன்நிக ரற்றிட இத்தரையில்
    திருவிண்நகர் உப்பிலி அப்பனென -திருநாமம்
    திகழ்சங்குசு டர்ச்சுழல் சக்கிரமும் சரணம்புகு பக்தரின் பக்கமென
    அபயம்தரு நிச்சய நட்புடைய -பெருமாளே

     

     

    Share