Blog

  • புரட்சிக் கவி!

    – மேகலா இராமமூர்த்தி

     Bharathidasan Thamizvazhtu

     ’பில்கணீயம்’ என்ற வடமொழி நூலைத் தழுவித் தமிழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய காவியம் ‘புரட்சிக் கவி’. புரட்சிச் சிந்தனைகளும், பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் நிறைந்த இந்நூல் படிப்பதற்கு மிகவும் சுவையானது; ஆண்டான் அடிமையெனும் நடைமுறை ஒழியவேண்டும் என வலியுறுத்துவது.

    அவ்வினிய காவியத்தின் சுருக்கத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்…

    தன்மகள் அமுதவல்லி தமிழில் சிறந்த புலமையடைய வேண்டும்; கவி புனையும் ஆற்றல் பெறவேண்டும் என்று விரும்புகின்ற மன்னன் ஒருவன், ”அவள் தமிழிலக்கணம் கற்கத் தக்கதோர் புலவனைத் தேடுக!” என்று தன் அமைச்சனிடம் கூறுகின்றான்.

    அதுகேட்ட அமைச்சன், ”மிகச் சிறந்த தமிழ்ப் புலவனும் கவிஞனுமாகிய உதாரனே நம் அமுதவல்லிக்குத் தமிழ் கற்பிக்க ஏற்றவன்; ஆயினும் அவன் இளவயதும் அழகும் வாய்ந்தவன். அவனைக் கல்வி கற்பிக்க நியமிப்பதால் ஏதேனும் குறை வந்து சேராமல் இருக்கவேண்டுமே என்றுதான் யோசிக்கிறேன்” எனப் பதிலளிக்கிறான்.

    ”இதற்கு என்ன செய்வது?” என்று மன்னன் கவலையோடு வினவ, ”கண்டுபிடித்துவிட்டேன் உபாயம் ஒன்று!” என்று குதூகலித்தான் அமைச்சன்.

    ”என்ன….என்ன?” என்று மன்னன் பரபரக்க, தன் திட்டத்தை விவரிக்கிறான் அமைச்சன்….”அரசே! அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையே பெரிய திரை ஒன்றை இட்டுவிடுவோம். ஏனென்று இருவரும் காரணம் கேட்டால்…உதாரன் குருடன் என்று அமுதவல்லியிடமும், அமுதவல்லி பெருநோய் உடையவள்; அவளைப் பார்ப்பது ஆபத்து என்று உதாரனிடமும் சொல்லிவிடுவோம்…எப்படி என் யோசனை?” என்றான்.

    ”பிரமாதம்!” என்று பாராட்டினான் அரசன்.

    அவர்கள் திட்டப்படியே தமிழ் வகுப்பு ஆரம்பமாயிற்று. சில நாட்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் வகுப்புச் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆயினும், அரசனும் அமைச்சனும் சேர்ந்து நடத்திய கபட நாடகத்திற்கோர் முற்றுப்புள்ளி வைப்பதற்கென்றே ஓர் முழுமதி நாளும் வந்தது!

    வானிலே அழகை வாரி இறைத்தபடி உலா வந்துகொண்டிருந்த நிலாவைக் கண்டதும் கவிஞனான உதாரனுக்குக் கற்பனை வெள்ளம் மடைதிறந்தது. “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று உன் ஒளி முகத்தைக் காட்டுகின்றாயே! உன் கோலம் முழுவதையும் நீ காட்டிவிட்டால் உன்மீது காதல்பித்துக் கொண்டு அலையும் இவ்வுலகமே மடிந்துபோய்விடுமோ? நீ வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ? பாற்குடமோ? அமுத ஊற்றோ?” என்றெல்லாம் விரிகின்ற அவன் கற்பனைச் சிறகில் பொதுவுடைமைத் தத்துவங்களும் தீப்பொறியாய்ச் சிதறுகின்றன. ”எம் நாட்டு ஏழை மக்கள் நித்தமும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தும் அவர்தம் தரித்திரம் தீராமல் பசித்த வயிற்றோடு உண்ணச் சிறிது கூழ் தேடும்போது, ஒரு பானை நிறைய வெண்சோற்றைக் காணும்போது அடையும் இன்பத்தை உனைக் காணும்போது அல்லவோ பெறுகின்றனர்!!” என்கிறான் இந்தப் புதுமைச் சிந்தனையாளன்.

    மிகவும் புகழ்பெற்ற அவ்வழகிய பாடல்…

    நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
    நிலாவென்று காட்டுகின்றாய்  ஒளிமு கத்தைக்
    கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
    கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
    சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
    சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ!

    …………………………………………………………..

       நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
    தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
    சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
    கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!  

    இப்பாடலைத் திரையின் மறுபுறம் அமர்ந்திருந்த அமுதவல்லி கேட்டு வியப்பில் ஆழ்ந்தாள். “ஓர் குருடன் முழுமதியின் அழகை எங்ஙனம் காணமுடியும்? காணாமலே….இவ்வளவு அழகாய்க் கவிபுனைவதும் சாத்தியமா?” என்று ஐயுற்றுத் திரையை விலக்கினாள்.

    அங்கே வானை நோக்கிக் கொண்டிருந்த வாலிபனைக் கண்டாள். வானை நோக்கிக் கொண்டிருந்த கவிஞனும் இப்போது தன் முகத்தைத் திருப்பி அருகிலிருந்த மானை நோக்கினான். ”அடடா! வானில் இதுவரை பவனி வந்த நிலா எப்போது இந்த அவனி வந்தது?” என்று ஐயுற்று மீண்டும் அந்தப் பெண்ணிலவைப் பார்த்தான். அவன் குருடனில்லை என்பதை அவள் கண்டாள்; அவள் பெருநோயாளி இல்லை என்பதை அவனும் உணர்ந்தான். இவையெல்லாம் தாங்கள் ஒருவரை ஒருவர் காணக்கூடாது என்பதற்காகப் பின்னப்பட்டச் சூழ்ச்சி வலையே என்பதை உணர்ந்தனர் இருவரும். பின்பு அங்கே தமிழ்ப் பாடம் முடிவுற்றுக் காதல் பாடம் தொடங்கிற்று என்பதை நான் நவிலவும் வேண்டுமோ?

    தன் மகளுக்கும் கவிஞனுக்கும் இடையே மலர்ந்திருந்த காதலைச் சிறிது நாட்களிலேயே அறிந்தான் மன்னன். “அரசனிடம் கைகட்டிச் சேவகம் செய்யும் ஒரு சாதாரணக் கவிஞன் அவன் மகளைக் காதலிப்பதா?” என வெகுண்டான். “கவிஞனைச் சிரச்சேதம் செய்யுங்கள்!” என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

    இக்கொடுஞ்செய்தியைக் கேட்டு நிலைகுலைந்த அமுதவல்லி அதைத் தடுப்பதற்காக உதாரன் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஓடிவந்தாள். இதனால் மன்னனின் சீற்றம் மேலும் அதிகரித்தது. ”இவளை இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள்!” எனக் கட்டளையிட்டான். அதுகேட்ட அமுதவல்லி, ”என் ஆருயிர்க் காதலன் இறந்துபட்டபின் நான் மட்டும் உயிர் வாழ்வேனோ? என்னுயிர் ஒன்றும் எனக்கு வெல்லமன்று!” என்று வீரத்தோடு செப்ப, கோபத்தில் சிவந்தன மன்னனின் விழிகள்.  ”இவளையும் அந்தக் கவிஞனுடனே சேர்த்துக் கொலை செய்யுங்கள்!” என்றான் வெறியோடு!

    உதாரனையும், அமுதவல்லியையும் அரசன் கொல்லப்போகும் செய்தி அறிந்து ஊரே அந்தக் கொலைக்களத்திற்கு அருகில் திரண்டிருந்தது. கடைசியாகச் சிலவார்த்தைகள் பேசும் வாய்ப்பினைப் பெற்றிருந்த உதாரனின் வீர உரை உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பினைப் பேசும் அற்புத உரை எனில் சற்றும் மிகையில்லை…

    கனல் கக்கும் அவன் பேச்சிலிருந்து ஒரு பகுதி…

    ”பேரன்புகொண்ட பெரியோரே, தாய்மாரே! இளஞ்சிங்கங்களே!

    காடுகொன்று நாடாக்கி, நிலந்திருத்திப் பாழ்நிலம் புதுக்கி அழகு நகராக்கியது யார்?

    வாய்க்காலையும், வயல்களையும் வகைப்படுத்தி உழவுத்தொழில் செய்து உலக மக்களுக்கு உண்டி கொடுக்க உழைக்கும் தோள்கள் எவரின் தோள்கள்?

    கல்லையும் மலையையும் பிளந்து சுரங்கங்களை வெட்டிப் பல்வேறு கருவிகளையும் செய்துதரும் கைகள் யாருடைய கைகள்?

    பொன்னையும் மணியையும் முத்தையும் எடுப்பதற்காக அடக்கிய மூச்சு எவருடைய மூச்சு?

    ”உழைக்கும் வர்க்கங்காள்! நீங்கள் எலிபோன்று பதுங்கிக் கிடப்பதால் அல்லவோ நாம் ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலிவேஷம் போடுகின்றான்! உங்களைப் புல் என மதிக்கின்றான்! நீங்கள் என்னைக் காக்க வேண்டாம்! இதோ என்னைக் காதலித்த குற்றத்துக்காக என்னோடு உயிர்விடப் போகும் அரசன் மகளை…அமுதனைய அமுதவல்லியைக் காப்பீர்!” என இடிபோல் முழங்கினான்.”

    இதோ பாவேந்தரின் வைர வரிகள்…

    பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
    பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!
    நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்
    நிறைந்துபெருங் காடாக்க, பெருவிலங்கு
    நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
    நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
    போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
    புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி!


    சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
    தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
    நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
    நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


    கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
    கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
    பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
    போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?

    அவனுடைய வீரமொழிகளால், மக்களின் ஆவேசமும், விடுதலை உணர்ச்சியும் விழிப்புற்றன. வீறு கொண்டு எழுந்த மக்கள் கொலைஞர்கள் கையில் இருந்த கொலைக்கருவிகளைப் பிடுங்கி எறிந்தனர். உதாரனையும் அமுதவல்லியையும் விடுவித்தனர். மன்னனிடமிருந்து முடியாட்சி பறிக்கப்பட்டது; நானிலத்தோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நாட்டின் செல்வங்கள் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. வீழ்ந்தது மன்னராட்சி! மலர்ந்தது சமதர்ம மக்களாட்சி!

    இதுவே புரட்சிக் கவியெனும் காவியம் நமக்குத் தரும் செய்தி! இத்தகைய அற்புதமான புரட்சிக் கவியைப் படைத்த புரட்சிக் கவிஞரைத் தொழிலாளர் தின நன்னாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்!

    Share
  • இன்னொரு புரட்சி

     

    மு.கோபி சரபோஜி

    img4831ng6

    மேதைகளின்
    வழிகாட்டல்களில்
    உழைப்பாளர்களாய்
    ஒன்றுபட்டோம்.

    முதலாளித்துவத்தின்
    முகமூடிகளை – நம்
    தோள் வலிமை கொண்டு
    கிழித்தெறிந்தோம்.

    கண்ணீர் சிந்தியே
    பழக்கப்பட்ட நாம்
    செந்நீர் சிந்தி
    ஜெயித்துக் காட்டினோம்.

    வியர்வையின்
    விளைச்சலை
    நாடுதோறும்
    நட்டு வைத்தோம்.

    எல்லைகள் கடந்து
    எதிரிகள் மறந்து
    மே தினமாய் – நம்மை
    அடையாளமிட்டுக் கொண்டோம்.

    அன்று
    வீரியமாய் நின்ற அடையாள தினமோ
    இன்று
    வெறும் விடுமுறை தினமாகிப் போனது

    விடுமுறையும்
    வாழ்த்தும் போதுமென
    வீரிய வித்துக்களை

    அழுகச்செய்து விட்டோம்.
    நடந்தவை உணர்ந்து
    நடப்பவை அறிந்து
    இனி ஒரு
    புரட்சிக்குத் தயாராவோம் – அது
    இன்னொரு
    மே தினமாய் இல்லாமல் – நம்மை
    மேம்படுத்தும் தினமாய் இருக்கட்டும்.
    ————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (71)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ் (வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    —————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பீலி மயில்கொண்டை, பீதாம் பரஆடை
    காலிகள் மேய்க்கும் கழியுற்றான் -போலிருந்தும்
    எண்ணுதலுக்(கு) எட்டானை, கண்ணுதலான் மைத்துனனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    சொர்ணமாய் வீசிடும் சூரிய னால்காலம்
    நிர்ணயம் ஆகிடும், நீகும்ப -கர்ணனாய்
    திண்ணமாய்த் தூங்காமல் தூங்கி சுகம்காண
    கண்ணனை நெஞ்சே கருது….

    படுத்த(து) அரவணைமேல், பாண்டவர்க்காய் அன்று
    தொடுத்தது பாரதத் தொல்போர் -கொடுத்தது
    எண்ணிலா செல்வத்தை ஏழை குசேலனுக்கு
    கண்ணனை நெஞ்சே கருது….

    ஓதநீர் வண்ணத்தை ,யாதவ சின்னத்தை
    ஓதுமறை நான்குமுரை உன்னதத்தை -பேதமற
    என்னவென்று சொல்ல எழுத்துக்(கு) அகப்படாத
    கண்ணனை நெஞ்சே கருது….

    எண்திசையை ஏழ்கடலை விண்முகடை விஸ்வத்தை
    கண்ணசைவில் பக்தரைக் காத்திட -முன்னசையும்
    அன்னத்தன் வீற்ற அரவிந்த நாபியோன்
    கண்ணனை நெஞ்சே கருது!!

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_09_01_archive.html

     

    Share
  • யாழ் இழந்த பாணன்

    பத்மநாபபுரம் அரவிந்தன் –

     

    பாணனொருவன் புலம்பியபடி
    வந்து கொண்டிருந்தான்
    வழக்கமாய் அவன் கையில் வைத்திருக்கும்
    யாழை இழந்த புலம்பலது
    தன் மூதாதையர்களின் விரல் வருடிய
    இசையுருகிய, உயிர் கலந்த
    யாழதென்று புலம்பினான்
    ” கண்ணயர்ந்த நேரத்தில்
    என் கையில் இருந்து பறித்தனர்
    எதிர்க்கும் திராணியற்ற என்னைக்
    கூட்டமாய்த் தாக்கினர்
    பறிப்பதற்கு வேறேதுமற்ற என்னிடம்
    யாழைப் பறித்தனர்
    இசைக்கத் தெரியாத அவர்களின் விரல்களில்
    யாழ் அபசுரம் எழுப்பிய கோபத்தில்
    யாழின் நரம்புகளை அறுத்தனர் பதிலாக
    அவர்களென் உயிரைப் பறித்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பேன்
    யாழற்ற இப்பாணன் இருந்துதான் இனியென்ன?
    அறுந்து தொங்கிய யாழின் நரம்புகள்
    உயிரிசையிழந்து வெறும் கம்பிகளாயின”,

    புலம்பியழுதப் பாணனை சுற்றிலும் கூட்டம் கூடியது
    ‘மீட்டுக் கொடுங்களென் அறுபட்ட யாழை
    நான் மீண்டும் இணைக்கிறேன் புதிய நரம்புகளை
    மீண்டும் இசைக்கிறேன் புதிய பாடல்களை’
    கெஞ்சும் குரலில் பாணன் கேட்க
    கூடிய கூட்டம் தலை திருப்பி
    தமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்பதாய்
    வெறுமனே பாணனின் புலம்பலை ரசித்தது
    இவர்களிடம் முறையிட்டும் கதறியும்
    ஆவது ஏதுமில்லையென உணர்ந்த பாணன்
    நடக்கத் துவங்கினான் மனதுள் யாழினை சுமந்தபடி
    பழக்கப் படாத ஏதொவொரு திசையினை நோக்கி..

     

     

    Share
  • காதல் நாற்பது [4]

     

    காதல் நாற்பது [4]

    எலிஸபெத் பிரௌனிங்

     

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    jay
    உன்வசம் உள்ளதுன் பிறவிப்பணி !
    உனக்கு அழைப்பு வரும்
    சிற்சில செல்வ மாளிகை
    அரங்கத்திலே!
    உன்னதப் பாக்களை
    மிக்க நளினமாய்ப்
    பாடுவோனே !
    உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
    மென்மேலும் கேட்டு,
    நடன மாடுவோர் கால்கள்
    இடறி முறிந்து போய் விடும்!
    உன் உன்னதக் கைகளால்
    கீழ்மை யான, இந்த
    ஏழ்மை மாது இல்லத்தின்
    தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
    உனக்குத் தெரியாமலே
    உன்னிசைக் கீதங்கள்
    பூரணப்
    பொன் அலைகளாக
    என் இல்லத்தின் வாசல் முன்
    வருவது பற்றி
    நீ என்ன
    நினைக்கிறாய் ?
    ஏற்று அதைத்
    தாங்கி கொள்வாயா ?
    என் வீட்டுக் கூரைக் குள்ளே
    பறக்கின்றன,
    வௌவாலும் ஆந்தைகளும் !
    விட்டில் போன்ற
    என் கீச்சுக் குரல்
    உன் மகர யாழ் முன்னே
    எப்படிப் போட்டி இடும் ?
    மெதுவாக முணு முணுப்பேன்,
    மேலும்
    என்னை ஒதுக்கி விட்டு
    விலகுவது
    எதிரொலிக் கப்படுமா ?
    ஏகாந்தனாய்த்
    தனித்து நீ
    இனிதே பாட நேர்ந்தால்
    அழுதிடும் என் நெஞ்சுக்குள்
    எழுந்திடு மோர்
    அவலக் குரல் !

    ********************

    Poem -4

    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing
    Thou hast thy calling to some palace-floor,
    Most gracious singer of high poems! where
    The dancers will break footing, from the care
    Of watching up thy pregnant lips for more.
    And dost thou lift this house’s latch too poor
    For hand of thine? and canst thou think and bear
    To let thy music drop here unaware
    In folds of golden fullness at my door?
    Look up and see the casement broken in,
    The bats and owlets builders in the roof!
    My cricket chirps against thy mandolin.
    Hush, call no echo up in further proof
    Of desolation! there’s a voice within
    That weeps . . as thou must sing . . . alone, aloof.
    **********

    Share
  • பாவார்த்த இராமாயணம்

    விசாலம்

    வால்மீகி இராமயணைத்தை பின் பற்றி ஆனால் அதில் தனது சொந்தக்கற்பனைகளையும் சேர்த்து மிகவும் அழகாக மராட்டி மொழியில் ‘பாவார்த்த இராமாயணம்’ என்னும் காவியத்தைப்படைத்தவர் அருள்கவி ஏகநாதர்.மராட்டி மொழியில் பலர் பல இராமயணங்களை எழுதியிருக்கின்றனர்.ஆனால் எல்லாவற்றையும் விட இது மிகப்பழமையான ஒன்று.அவர் பிறந்த இடம் பிரதிஷ்டானம் என்ற சிறு கிராமம்.

    anumar
    சிறு வயதிலிருந்தே தன் தந்தையை இழந்த காரணத்தினால் தன் தாத்தா வீட்டில் வளர்ந்தவர் ஏகநாதர்.அப்போதிலிருந்தே சம்ஸ்கிருத மொழியைக்கற்று அதில் தேர்ச்சியும் பெற்றார். தவிர மராட்டி ஹிந்தி மொழிகளிலும் வல்லமை பெற்று பல கவிதைகளையும் இயற்றினார்.இவர் ‘ருக்மிணி சுயம்வரம்’ எழுதியதிலிருந்து சில ஜன்மாஷ்டமியின் போது பாடப்படுகிறது ஏகநாதரின் காலம் 1958லிருந்து 1609 வரை .கோதாவரி கரையில் அலைகளோடு பேசி அதன் அழகை ரசித்து அப்படியே கற்பனை உலகுக்குப்போய்விடுவார். இவருடைய காவியங்களில் அடுக்கு மொழிகள். அணி அணியான சொற்கள் மிருதங்க லயம் போல் நடைப்போடும் .அவருடைய கற்பனைக்கு இராமயணைத்திலிருந்து ஒரு உதாரணம்.இராமயணத்தில் ஸ்ரீ அனுமான் ராமதூதனாக இலங்கைக்குச்செல்கிறார். ஆனால் ஏக நாதர் ஹனுமான் மட்டும் அனுப்பினது அல்லாமல் அங்கதனையும் இராவணனுக்கு முன்னால் நிறுத்துகிறார். அங்கதன் பேசுகிறான்

    “என் பெயர் அங்கதன் நான் ஸ்ரீ ராம தூதனாக வந்திருக்கிறேன்.”

    “என்னடா பேசுகிறாய்?நீயும் ஒரு தூதனா? முதலில் ஒரு குரங்கு வந்தாயிற்று.இப்போது இரண்டாவது குரங்கா?”

    “அட இராவணா! உன் அவையில் நான் தூதனாக வந்திருக்கிறேன்.யாவரும் என்னை வரவேற்க மறந்து பயத்தினால் சுருண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஹனுமான் இங்கு வந்த நாளிலிருந்தே உங்கள் வாய் பேச நா எழவில்லை .ஶ்ரீராமருடைய வீரம் உனக்கு தெரியுமா? அவருக்கும் ,சுக்கிரீவனுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான் உனக்கு தெரியுமா? “

    கண்கள் சிவந்து நெருப்பு ஜ்வாலையைக்கக்கும் இராவணன் இடிப்போல் முழங்குகிறான்,

    “ராமனும் லட்சுமணனும் எங்களுக்கு முக்கிய உணவு .உங்களைப்போல குரங்குகள் அதற்கு ஊறுகாய் போல் .எங்கள் கும்பகர்ணன் ஒரே பிடியில் உங்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிடுவான்,”

    “அங்கதன் உடல் துடிக்கிறது. அவனது வீரத்தோள் போருக்கு துடிக்கிறது. ஆனாலும் தன்னை அடக்கிக்கொண்டு

    “டேய் மூர்க்கா இராவணா. உடனே சீதா தேவியைக் கொடுக்காவிட்டால் உனக்கு மரணம் தான் . இராமர் சொல்லியனுப்பிய தூதும் இதுதான்.
    அடே ராவணா!உன் மூஞ்சியை ஒரே குத்தில் தரையில் வீழ்த்த என் கை துடிக்கிறது.ஆனால் அப்படி செய்ய இயலவில்லை ஏனென்றால் உன் தலைகள் பரமேஸ்வரனுக்கு அர்ப்பணமானவை .சிவ சொத்தல்லவா அது! சிவ சொத்தை அழிக்க என் கை கூசுகிறது “

    ஆஹா என்ன அருமையான கற்பனை இது. இராவணன் சிறந்த சிவ பக்தன் என்பதையும் இதில் ஏகநாதர் சொல்லிவிடுகிறார்.
    இராவணனுக்கு இதைக்கேட்க மனம் ஏதோ செய்தது. ” யாரங்கே இந்த அங்கதன் என்ற குரங்கை பிடித்து அடையுங்கள்”
    ஆயிரக்கணக்கான அரக்கர்களுக்கு விளையாட்டு காட்டியபடியே அங்கதன் மரத்துக்கு மரம் தாவி எல்லோரையும் அழைக்கிறான்.
    இத்துடன் ஏகநாதரின் கற்பனை நிற்கவில்லை.இராவணனை ஏதாவது செய்துவிட்டே வரவேண்டும் என்ற தோன்ற அங்கதனால் இராவணனைக் காலால் உதைக்க வைக்கிறார். பின் அங்கதன் இராவணனின் கிரீடத்தைப் பறித்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து பறந்து போகிறான்.அவன் அப்படிப்போகும் போது அவனையுமறியாமல் அவனோடு வேறு ஒரு பொருளும் ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது.

    இப்போது அங்கதன் ஸ்ரீ ராமனுக்கு முன்னால் .

    “அங்கதா இது என்ன உன்னுடன் கொண்டு வந்திருக்கிறாய் .இது அநீதி ஆயிற்றே?” என்று கேட்டார் ராமர்.
    அப்போதுதான் அங்கதன் தன் தலையில் ஏதோ ஒட்டிக்கொண்டு வந்திருப்பதைப் பார்க்கிறான்.அது இராவணனுடைய சபா மண்டபத்தின் கோபுரம் .
    பரிதாபமாக ராமரைப் பார்த்தான் .
    “அங்கதா விபீஷனனுக்கு நாம் அளித்த ராஜ்ஜியத்திலிருந்து ஒரு துரும்பையும் எடுத்து வரக்கூடாது. இது எப்படி நடந்தது?”

    ” சுவாமி இது எனக்கும் தெரியாமல் ஏற்பட்ட பிழை .தயவு செய்து பிழை பொறுத்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்”என்றபடி அவர் காலில் விழ அவரும் “அங்கதா இதை உடனே திருப்பி வைத்து விட்டுவா” என்றார்.

    அங்கதனும் அங்கனமே செய்து பின் தான் கொண்டு வந்த கிரீடத்தை ராமனுடைய பாதத்தில் சமர்ப்பிக்கிறான் .ராமனும் மிகவும் மகிழ்ச்சியுடன் விபீஷணனை அழைத்து அந்த முகுடத்தை அவரது தலையில் சூட்டுகிறார்.

    இதே போல் சில சம்பவங்களில் தன் கற்பனைகளையும் சேர்த்து எழுதியிருக்கும் ஏகநாதரின் பாவர்த்த இராமயணம் மராட்டியர்களால் விரும்பி படிக்கப்படும் ஒரு காவியம் ஆகும் .

    Share
  • நான் உன்னை அழைக்கவில்லை

    கவிஞர் காவிரி மைந்தன்

    நான் உன்னை அழைக்கவில்லை…- கவியரசு கண்ணதாசன்

     

    அன்பின் சங்கமம் – ஆண், பெண் இருவரது உறவில் அடிப்படையானது. தன்னை நேசிக்கும் நெஞ்சமது என்கிறபோது, தாமாக ஊற்றெடுக்கும் கங்கையாகிறது! ஊண், உறக்கம் யாவும் மறந்து உறவை நினைக்கிறது! ஏன்? எதற்கு?? என்கிற கேள்விகள் எழுகின்றன! படபடக்கும் நெஞ்சத்தோடு பார்வை தேடி அலைகிறது! துடிதுடிக்கும் இதயத்தில் தூவானம் போடுகிறது! அவனுக்கு அவளென்பதும் – அவளுக்கு அவனென்பதும் ஆனந்தப் புதையலாகிறது! இந்த நிலை தொடர்கிறதா? பிரிவு வந்து சேர்கிறதா? பாதிப் பாதியென இருவருமே பரிதவிக்கும் நிலைதானே பிரிவு வரும் வேளைதன்னில்.. அழுவது கூட ஆனந்த சுகமென்றே அடிமனம் நினைக்கும்!

    காரணம் தெரியாமல் கதறும் நிலைதன்னில்.. கதாநாயகன் பாடுகிறான்! கதையின் ஓட்டத்தில் கதாநாயகி.. அவனைப் பிரிகின்றான்! எங்கிருந்தோ வந்தால் என்கிற திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் மகோன்னத நடிப்பில் – பிரிவுக்கு ஆயிரம் பொருள் சொல்லும் முக பாவனைகளுடன் .. புலம்பலின் வெளிப்பாடுகளுக்கு வார்த்தைகள் வழங்கிய கவியரசு கண்னதாசன்!

    தத்தளிக்கும் மனதின் தவிப்புகள் இதுவா? இதயத்தின் வழியை உணர்த்தி நிற்கும் வரிகளா? கண்களிரண்டும் கலங்கித் ததும்பும்! சொல்லும் வார்த்தையில் துயரம் வழியும்! உயிரூட்டியிருக்கிறார்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உணர்வூட்டியிருக்கிறார் டி.எம்.சௌந்தரராஜன்..

    திரைப்பாடலில் பாவங்கள் காட்டி நடிக்க.. ஒரு நடிகர் திலகமும்.. பாடி கொடுக்க ஒரு டி.எம்.எஸ்ஸும் மெட்டமைக்க ஒரு எம்.எஸ்.வியும் .. பாடல் வடித்துத் தர .. ஒரு கண்ணதாசனும் – தேவன் தந்த வரங்களா?

    இதைப் போன்ற பாடல்கள் எத்தனை தந்தாலும் ரசிப்பதற்கு கோடான கோடி இதயங்களும் – பிரிவு என்கிற கடலில் தள்ளப்படும் ஒவ்வொரு உள்ளத்திலும் அலை மோதும் பாடலிது!

    ஒருமுறை டி.எம்.எஸ். அவர்களை சந்திக்கச் சென்றிருந்தபோது.. எனக்காக இந்தப் பாடலை பாட முடியுமா என்று கேட்டேன். எந்த இசைக் கருவிகளும் பக்கம் இல்லாமல் பாவம் மாறாமல் பாடிய அந்த மேதையை நன்றியுடன் இன்றும் நினைக்கிறேன்.

    நான் உன்னை அழைக்கவில்லை.. என் உயிரை அழைக்கிறேன்!hqdefault

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
    அம்மா………… விவரம் புரியாதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
    இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
    இரக்கம் பிறக்காதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

    பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
    பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
    வரிகள் : கண்ணதாசன்
    இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
    திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

    நான் உன்னை அழைக்கவில்லை – Naan Unnai Alaikavillai – Engirundho Vandhaal – MS Viswanathan – YouTube
    Share
  • ஒரே பாட்டு

     

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
    அரவணைப்பில்லை
    என்பது பல்லவி
    அலட்சியம் அனுபல்லவி
    கையில்பணமிருந்தால்
    கவலையில்லை என்பது சரணம்

    இப்போது
    எல்லா இடத்திலும்
    இதுதான் ஒலிபரப்பாகிறது

    சகிப்புத்தன்மை
    சற்றுமில்லா மனசு
    வற்றிய குளமாய்
    ஈரமின்றி

    மனதில் ஏந்தி
    மனம்கரைய பழகுவது
    அத்திபூத்தாலும்
    ஆகாது

    ஆலமரமெனினும்
    காலம் கடந்தால்
    விழுதுகள் இல்லையேல்
    விழுந்துவிட வேண்டியதுதான்

    விழுதுகள் இருந்தும்
    விழுந்தால்
    பழிதான் மிஞ்சும்

    பழுதான விழுதுகளால்
    பயன் எப்படிக்கிட்டும்

    யாரும் யாருக்காகவும்
    விட்டுக்கொடுக்காது
    வாழும் காலத்தில் வாழ்கிறோம்

    அரவணைப்பு என்பது
    இயல்பாய் இருந்துவிட்டால்
    கிடைத்துவிட்டால்
    அதுதான் பிறவிப்பயன்

    இல்லையேல் அதுதான்
    எல்லோரும் சொல்லும்
    விதிப்பயன்

    அரவனைப்பு
    இயல்பாய்க் கிடைப்பதற்கு
    என்னவழி?

    வளர்க்கிறபோது தவறவிட்டால்
    வளர்ந்தபின்
    வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான்

    அரவணைப்பு என்றும்
    இருவழிப்பாதை

    யாரும் நம்மை
    சுமையாகக் கருதாமல்
    யாருக்கும் நாம்
    சுமையாக இல்லாமல்
    வாழமுடியுமென்றால் வாழலாம்

    இதுதான் இப்போது
    ஒவ்வொரு
    முதுமை உள்ளத்திலும்
    முதியோர் வாழும் இல்லத்திலும்
    ஒலிபரப்பாகிறது

    காலன் இதையெல்லாம்
    கவனத்தில் கொண்டால்
    பெற்றோர் சுமையும்
    பிள்ளைகள் பழியும்
    இல்லாதுபோகுமோர்
    காலம் கிட்டும்

    காலனே
    கைகொடு
    காப்பாற்று

    Share
  • திருமால் திருப்புகழ் (70)

     

    கிரேசி மோகன்

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

     

    ”கண்ணனை  நெஞ்சே கருது’’
    ——————————————–

    Tribhang Krishna - Keshav
    Tribhang Krishna – Keshav

    கடவுள் மடியில் கிடக்கும் வரையில்,
    அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே,
    பன்னகத்தில் யோகம் பயிலும் பரம்பொருளாம்,
    கன்ணனை நெஞ்சே கருது….

    சிந்தை வெளிகடந்து, மந்தை வெளிபுகுந்து,
    கந்தல் உடையணிந்து, கன்றுகளைத் – தந்தையாய்,
    அன்னையாய்க் காத்து, அறுகம் அளித்திடும்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கும்பிடுதல் கர்மம், குதூகலம் கோவிந்தன்,
    தென்படுதல் ஆத்ம தரிசனம், – பண்படுஇவ்,
    வண்ணமந்த, வாரிதி வண்ணனுடன் வாழ்ந்திடக்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    உன்னை அறிதல் உனக்கெதற்கு, உள்ளிருக்கும்
    பொன்னுக்(கு) அணிகலப் போர்வையே, – தொன்னையில்,
    வெண்ணெய் இருக்க, விழுதுநெய்க்(கு) ஏங்குவதேன்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கழல்தொழுது கைகூப்பி கும்பிட்டு, செய்யும்
    தொழிலுறங்கும் தென்னரங்க தேவன் – சுழல்திகிரி,
    மின்னனைய நந்தகி, வெண்ணிற சங்குற்ற,
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….

    ———————————————————————————————————–

    படத்திற்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html

    Share
  • சோறு பித்தம். கஞ்சி காமாலை !

    இன்னம்பூரான்

    பால பருவத்தில் சோற்றுக்கு பஞ்சமில்லை. கஞ்சி காய்ச்சல் வந்தால் தான்.

    innam
    யான் வாழ்ந்த சமுதாயத்தின் வரவு செலவு, இன்றைய இளைய தலைமுறையின் நோக்கில், வரவு நாலணா;செலவு பதினாலணா. ‘வரவு எட்டணா;செலவு பத்தணா.’ என்ற மாயை மேல்தட்டு மக்களால் எமக்கு நிர்ணயிக்கப்பட்டது. எட்டுக்கும் பத்துக்கும் நடுவில் ஒரு ஸ்பார்க். அவ்ளோ தான். நாலுக்கும் பதினாலாக்கும் நடுவில் இருப்பதோ மின்வெட்டு; ஆனாலும், சமாராதனைகளும், ததியாராதனைகளும் அடிக்கடி பசிப்பிணியை தணிக்கும். சுழற்சி முறையில் எல்லாரும் செய்வதால், அநாவசிய தாக்ஷிண்ய பிரச்னை இல்லை. அடுத்தாத்து சுந்தரேஸ்வரய்யர் வக்கீல் மாமா அடிக்கடி சமாராதனை அன்னதானம் அளிப்பார். ஃபேஸ்புக் மாதிரி நான் அவரது உண்மை பெயரை கூறுவதின் காரணம், ஜானகிராமன் போன்ற அவருடைய குடும்பத்தினர் பார்த்து மகிழ்வார்களோ என்ற நப்பாசை.

    அரியக்குடியில் பகல்பத்து, ராப்பத்து உத்ஸவங்களுக்காக, அங்கே டேரா போட்டு, விமரிசையாக திருவேங்கடத்தானுக்கு பக்திமாலை சூட்டும் என் தாத்தாவின் உத்தரவுப்படி கோட்டையடுப்பு அணைக்கப்படமாட்டாது. தினந்தோறும் ததியாராதனை தான். ‘ததியாராதனை’ என்பது ‘சமாராதனைக்கு’ வைணவ பரிபாஷை; ‘ததியாரதனை’ க்கு ஸ்மார்த்தாள் பரிபாஷை ‘சமாராதனை’. ‘விருந்தோம்புதல்’ தனித்தமிழ். நாங்கள் மூன்றுக்கும் தயார்.

    பேராரூணி தாத்தா முதல், வருகை புரியும் பெரியவர்கள், ‘அம்மா! ஒரு சொம்புலெ வென்னீர் தீர்த்தம் கொண்டு வா’ என்று கனிவுடன் கேட்பார்கள். வெள்ளிச்சொம்பில் தான் அந்த உபசரணை என்பது எழுதப்படாத விதி. கோயிலில் தாயாருக்கு புடவை சாத்திறா என்று எல்லா பொண்டுகளும் கோயிலுக்கு போன சமயம் பார்த்து, பன்னிரண்டு திருமண் காப்பு துலங்க, சேப்பு பட்டு சால்வை தூக்கி அடிக்க, தோடுடைய செவியன் மாதிரி, ஏழு கல் பெல்ஜியம் ப்ளூ ஜாகர் டயமண்ட் கடுக்கன்கள் டால் அடிக்க, ஒரு வைணவ சான்றோன் வந்து ( அவர் ஆண்டவன் ஆசிரமத்தில் பெரிய புள்ளியாம், அட்வகேட்டாம்.) ‘பயலே! ஒரு சொம்புலெ வென்னீர் தீர்த்தம் கொண்டு வா.’ என்றார். அவர் கேட்டவிதம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், தாத்தாவின் நற்பெயரை கெடுக்க மனமில்லை. திருமப்பள்ளிக்கு (அதான் திருமடப்பள்ளி -சோற்றுக்கடை) விரைந்தேன். அப்பாத்துரையிடம், சீக்கிரம் ஒரு வெள்ளிச்சொம்பிலெ வென்னீர் கொடு.’ என்றேன். நான் போட்டுக்கொண்டு போய் கொடுக்கிறேன். நீ உன் வேலையை பாரு.’ என்று அதட்டினான். பல வருஷங்களுக்கு பிறகு தான் அப்பாத்துரை அம்மாவுக்கு அத்தை மூலம் பரிசம் போட்டவர் என்று அறிந்தேன். அதனால் ‘அதட்டினார்’. போறாத காலம் பால் பொங்க ஆரம்பித்தது. அவருடைய கவனம் சிதறியது. நானும் விரைந்து ஒரு வெள்ளிச்சொம்பு கொதி நீரை, ராஜாஜி மாதிரி, ஒரு துண்டால் அரவணைத்து எடுத்துச்சென்றேன். ‘ப்ளூ ஜாகர்’ ஒரு விழுங்கில் வீழ்ந்தார். அலறினார். கொப்பளித்தார். விழுந்து புரண்டார். கன்னாபின்னா என்று வைதார். அவருக்கு தெரியாது, நான் இரெகுநாத தாத்தாச்சாரியாரின் பேரன் என்று. என்னை அடிக்க அவர் ஓங்கின கை, நட்டாற்று குதிரையை போல, அந்தரத்தில் நின்றது. ஏனென்றால், என் தாத்தா ரெளத்ராபிஷேகராக, அவரை சொல்லால் தாக்கினார்.அப்பாத்துரைக்கு நல்ல டோஸ் கிடைத்தது. ப்ரைவேட்டாக, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் முன் அவர் சொன்னார், ‘மண்டுப்பயலே! வென்னீர் என்றால் கும்போணம் டிக்ரீ காப்பி. அது பரிபாஷை. காப்பின்னு கேட்டா அபசாரம். நீயெல்லாம் என்ன படிச்சு உருப்படுவையோ!’ என்று. ‘நீ படிக்காதவன்’ என்று சொல்லிவிட்டு, கோயிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு தேசாந்திரிகளுக்கு, தாத்தா உபயமாக, கொடுக்கப்படும் தடிமன் தோசை வாங்கிக்கொள்ள போய்விட்டேன். அப்போது வயது 5/6/7. மலரும் நினைவுகள்.

    35 வருடங்களுக்கு பிறகு ரயில்வே உத்தியோகம். தனி சொகுசு வண்டி. ஒரு ஸ்டேஷனில் யதேச்சையாக பார்த்த அப்பாத்துரை வந்து சில மணி நேரம் அரட்டை அடித்தபோது, வென்னீர் கதையை வஸந்தாவிடம் போட்டுக்கொடுத்து விட்டு ‘சிவனே’ (ஐ மீன்: ‘கோவிந்தா’) என்று போய்விட்டார். எங்கேயே ஆரம்பிச்சு எங்கேயோ போகிறேன். சுக்கானை திருப்பியாச்சு.

    வக்கீல் மாமா சமாராதனையில் ஒரு ஸெளகர்யம். நாங்களே வாலண்டியர் என்பதால், போகச்சே வரச்சே… . தவிர, லட்டு, அப்பளம், தொன்னை பாயசம் எல்லாம் டபிள் டோஸ் பரிமாறப்படும், அண்ணன் தம்பி உபயமாக. அதில் முதல் செட்டு சாப்பிட; செகண்ட் செட், அனுமதிக்கப்படாத ஆருயிர் நண்பன் அப்துலுடன், குளக்கரையில். சிலசமயங்களில் ஜமா கூட சேரும்.

    கமிங்க் டு தெ பாயிண்ட்: சோற்றை போடமாட்டார்கள். அவசரம். வெள்ளி முறத்தால் தள்ளுவார்கள். மிச்சம் வச்சா கஷ்டம். ஏன்னா, சமாராதனை விதிப்படி எச்சில் இலைகளை வக்கீலாத்து மாமி (அவள் தான் எடுக்கணும்.) எடுப்பதற்கு முன்னால், வக்கீல் மாமா, கரம் குவித்து, விருந்தினர்களை தொழுது (பொதுவாக), இலைகள் மீது விழுந்து புரண்டு அங்கப்பிரதக்ஷிணம் செய்வார். பிறகு ஸ்நானம் செய்து விட்டு, பூஜை செய்வார். அதனால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது ஒரு பண்பு. புடைத்த வவுறு. வயத்து வலி. பித்தம். மதியம் நாலு மணி சுமார் ஜுரம் அடிக்கும் லேசா என்று பாட்டி டயக்னைஸ் செய்து, ராத்திரி கஞ்சித்தண்ணி உபவாசம். கண்ட கண்ட தண்ணியா. அப்பெல்லாம் இந்த ஃபில்டர், கில்டர் எல்லாம் கிடையாது. கஞ்சியோ? தண்ணீரோ, கண் மஞ்சளா இருக்கே, குழந்தைக்கு என்பாள் பாட்டி. டயக்னாசிஸ்: காமாலை. மறு நாள் ஆஞ்சனேய சர்மா வந்து, மந்திரித்து, ஊசியால் காமாலையை தண்ணீரில் இறக்குவார். அடடா! வைகாசி பிறக்கப்போறது. அடுத்த சமாராதனை வர்ரதே.

    பழமொழி உபயம்: அடுத்தாத்து சிவகாமி மாமி.

    சித்திரத்துக்கு நன்றி: https://hainalama.files.wordpress.com/2013/01/the-asthma-symptom.jpg?w=500

    Share
  • திருமால் திருப்புகழ் (69)

     

    கிரேசி மோகன்
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–

    Dancing to the rhythm of churning, Krishna, who churned the ocean for Amrita, asks for a handful of butter.  Navaneeta Natyam- acrylic on canvas. Keshav
    Dancing to the rhythm of churning, Krishna, who churned the ocean for Amrita, asks for a handful of butter. Navaneeta Natyam- acrylic on canvas. Keshav

    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    —————————————————–

    chocoKrishna blue keshav
    chocoKrishna blue keshav

    நானாக நம்முள்ளே, ஆணாகப் பெண்ணாகத்,
    தானாகத் தோன்றிடும் தத்துவத்தை, – மீனாக,
    எண்ணற்ற வண்ணமாய், மண்காக்க வந்தவனை,
    கண்ணனை நெஞ்சே கருது….

    ஆனந்த சாகரம், ஆத்ம தரிசனம்,
    நானந்த பொய்கையில் நீந்திட – வானம்தன்,
    வண்ணனை, அன்று வரையேந்தி நின்றவனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    அலுப்பினில் ஆழ்ந்து, சலிப்பினில் சோர்ந்து,
    இலுப்பை மலரை இனிப்பென்(று), -உலுக்குகிறாய்.
    மண்ணினை சர்க்கரையாய் மாற்றவல்ல மாதவனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    எதையோ நினைந்து அதையே முனைந்து
    பதையாய்ப் பதைத்தது போதும் – கதையாக
    மன்னனுக்கு முன்னம்  முனிசுகர் போதித்த
    கண்ணனை நெஞ்சே கருது….

    குவித்த திரவியம், கொண்டதோர் சுற்றம்,
    தவித்த நிலையில்போம் தூரம் – பவித்திர
    எண்ணமுற்ற மெய்யடியார் ஏகாந்த சேர்க்கைக்கு
    கண்ணனை நெஞ்சே கருது!!

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 28 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்

    **************************************************************************************

    pichinikkadu elango

    வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ (https://www.facebook.com/pichinikkadu.elango.9) அவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தத் தமிழகக் கவிஞர் வல்லமை இதழ் வாசகர்களுக்கு மிகவும் பழக்கமானவர், இன்றுடன் இரண்டு ஆண்டுகளாக (April 27, 2012 இல் இவரது முதல் வல்லமை பதிவு) வல்லமையின் வாசகர்களை தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வரும் திரு. பிச்சினிக்காடு இளங்கோ ஒரு வேளாண்மைப்பட்டதாரி. இவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிக்காட்டில் பிறந்தவர். திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையம், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழம், சிங்கப்பூர் MDIS (Management development Institute of Singapore) என்கிற கல்வி நிறுவனம் எனப்பல நிறுவனங்களும் இவர்  பணியால் சிறப்புற்றிருக்கிறது. சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியரான இவரது கவிதைகள் தமிழகத்தின் குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

    கவிஞனாகிறேன்  என்ற கவிதையில் தான் எப்படிப்பட்ட கவிஞன் என்று தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.

    இதை இதை
    எழுதவேண்டுமென்று
    எண்ணியதில்லை
    எண்ணுவதுமில்லை

    அது அது
    வந்து நச்சரிப்பதால்தான்
    எனது எழுதுகோல்
    உச்சரிக்கிறது …..

    இதுவரை இவரது பத்து கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் நெடுங் கவிதைகளையும் எழுதுவதுண்டு. இவரது முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்” படித்து விட்டு மறைந்த டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் “உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார். இவாரத்தில் வல்லமை இதழில் வெளிவந்த இவரது கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்ற கவிதையும் ஒருவகையில் நெடுங்கவிதையே.

    இவருக்கு ஒரு நூலைப் படிப்பது, பேருந்துப் பயணத்தில் ஒரு நிகழ்வைப் பார்ப்பது என அனைத்துமே கவிதைகளை எழுதத் தூண்டுகோலாக அமைந்து விட்டிருக்கிறது. அக்குறிப்புகளையும் இணைத்து கவிதைகளுடன் வழங்கியுள்ளார்.

    இம்முறை இராஜாஜியின் மகாபாரதம் படித்த பிறகு கர்ணன் மேல் கொண்டிருந்த இவரது எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. நாம் அனைவரும் நட்பிற்கு இலக்கணமாகக்  கர்ணனைப் புகழ்வோம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தனது தம்பிகளையும் எதிர்த்தவன் எனப் பாராட்டுவோம். ஆனால் இவரோ கர்ணன் பெரிய வள்ளலாகத்தான் இருக்கட்டுமே அதனால் என்ன? அவன் நியாயவான் அல்ல … என்று தனது வாதத்தை முன் வைக்கிறார்.

    துவைத வனத்தில் சித்திரசேனனிடம் துரியோதனன் சிக்கிய பொழுது கர்ணன் உதவாமல் தப்பி ஓடினான். தனக்கு நாடு தந்து அவமானம் துடைத்து அழகு பார்த்த துரியோதனனை தவிக்க விட்டவன் கர்ணன். அவன் நியாயத்தின் பக்கம் நின்றதே இல்லை. கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு நடந்த கொடுமையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் விகர்ணன்தான். கர்ணன் துச்சாதனனுக்கு துகிலுரிக்கச் சொல்லி தூபம் போட்டவன். பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய விகர்ணனைக் கண்டித்தவன் கர்ணன்.  இந்தக் காரணத்தால் இக்கவிஞர் கர்ணனை மன்னிக்கத் தயாராக இல்லை.

    கௌரவர்களில் நூற்றில் ஒருவனாக இருந்தாலும் பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்திற்கு உடன்படாத விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்று தனது எண்ணத்தைக்  கவிதை மூலம் வடித்துள்ளார். இது போன்ற வேறு விதக் கோணம் கொண்ட விவாதம் இவரது கவிதையை சிறப்புறச் செய்கிறது.

    அக்கவிதையின் சுருக்கமான சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
    [முழுக் கவிதையின் சுட்டி: http://www.vallamai.com/?p=44441]

    எல்லாரும்
    எல்லா இடத்திலும்
    கர்ணனையே வியக்கிறார்கள்
    நான் வேறுபடுகிறேன்

    உலகத்தோடு
    நான்
    ஒத்துப்போக விரும்பவில்லை
    எல்லாரையும்போல
    ஓபோட
    விரும்பவில்லை

    கொடை
    கொடுக்கும் இடத்திலும்
    குலம்கேட்ட இடத்திலும்
    நான்
    கர்ணன்பக்கம்தான்

    திறன்காட்டவிடாமல்
    குலம்கேட்டது கொடுமைதான்
    அதற்குமேல்
    அவன்மேல்
    மரியாதையில்லை
    நான்
    அவன்பக்கமில்லை

    செஞ்சோற்றுக்கடன்
    தீர்த்ததிலும் பெருமையில்லை

    பாண்டவர் கெளரவர்
    மற்றும் வேடிக்கை
    பார்ப்பவர்
    நிறைந்த அவையில்
    பாஞ்சாலிக்காக
    யார்பேசினார்கள் நேர்மையாய்?

    பெண்ணெனப்
    பார்த்தவர் அதிகம்
    பெண்ணென்று
    பரிவுகாட்டியவர் யார்?

    சுதந்தரம் இழந்தவன்
    என்னை இழக்க
    என் சுதந்தரத்தை இழக்க
    என்ன உரிமையுண்டு?

    பாஞ்சாலி கேள்விக்கு
    அவை ஆண்மையற்று
    அன்று ஆமைபோல் இருந்தது

    பாஞ்சாலி பேசுவது
    சரியென்று குரல்கொடுத்த
    விகர்ணனைக்
    கண்டித்த கர்ணனைக்
    கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
    ஏற்புடையதல்ல எனக்கு

    விகர்ணன்
    அவையில் சின்னவன்
    பெண்ணுக்காய்ப்பேசிய
    பெரியவன் அவன்தான்

    துச்சாதனனைத்
    துகிலுரியத் தூண்டியதே
    கர்வக்காரன் கர்ணன்தான்

    இனி எப்போதும்
    நான் விகர்ணன் பக்கம்

    இராமயணம் என்றால்
    நான்
    கும்பகர்ணன் பக்கம்

    காரணம்
    விகர்ணன்
    நியாத்தின் பக்கம்

    அவன்
    கெளரவர்களுக்கு
    கெளரவம் தந்தவன்

    அவன்
    நூற்றில் ஒருவனல்ல
    ஆயிரத்தில் ஒருவன்

    சிறப்பு மிக்க கவிதை ஒன்றை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ வழங்கிய திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • முதியோர் காதல்!

    -மேகலா இராமமூர்த்தி

    elder

    பாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவருவது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் ரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

    குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதலே!’

    மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமான அளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!

    மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட (குடும்ப விளக்கின் தலைமைப் பாத்திரங்களான) தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.

    தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…

    ”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்…

    ”மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
    மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
    எம்தக்க கடன்மு டித்தோம்
    இனிதாக வாழு கின்றோம்
    முந்துறச் சுற்றத் தார்க்கும்
    செய்வன முழுதும் செய்தோம்
    இந்தநாள் வரைக்கும் வாய்மை
    இம்மியும் மறந்த தில்லை

    இந்நாட்டின் நலனுக்காக
    நல்லறம் இயற்றி வந்தோம்
    எந்நாளும் பிறர்க்குத் தீமை
    எங்களால் நடந்த தில்லை.
    சின்னதோர் நன்று செய்தார்
    திறம்மறந் தறியோம் என்றே
    இன்னிசை பாடும் அன்னார்
    இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.” 

    இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் அருமை மனைவியைப் பார்க்கிறார். அழகு கொலுவிருந்த அவளுடைய முந்தைய இளமைத் தோற்றமும், உடல் தளர்ந்த இப்போதைய முதிய தோற்றமும் அவருடைய மனக் கண்ணிலே மாறி மாறி வந்துபோகின்றன.

    காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ…என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போலல்லவா அந்த எழில்முகம் உருமாறிவிட்டது?!” எனப் பெருமூச்செறிகிறார்!

    “மேனி அழகு குலைந்துபோய்விட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கின்றது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் அந்த மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!

    நெஞ்சை நெகிழச் செய்யும் அந்தப் பாடல்….

    புதுமலர் அல்ல; காய்ந்த
    புற்கட்டே அவள் உடம்பு!
    சதிராடும் நடையாள் அல்லள்
    தள்ளாடி விழும்மூ தாட்டி!
    மதியல்ல முகம் அவட்கு
    வறள்நிலம் குழிகள் கண்கள்
    எதுஎனக் கின்பம் நல்கும்?
    ’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!

     எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது!

    உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தானே! கவிஞர் வைரமுத்து சொல்வதுபோல் ’உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல்’ மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!

    ’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.

    அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’யை இளையோர், தம்முடனே ஒன்றாக இணைந்து வசித்துவந்த, பெற்றோரிடமும் ஏனைய பெரியோரிடமும் நேரடியாகக் கற்ற அனுபவமே! இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!

    ’Nuclear Family’ என்று சொல்லப்படுகின்ற தனிக்குடும்ப அமைப்புமுறை கோலோச்சத் தொடங்கிவிட்ட இன்றைய சூழலில் முதிய தம்பதியர் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!

    வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கதுதானே?

    Share
  • இன்னுமா இன துவேஷம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி ஆப்பிரிக்கர்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கூடிவந்து அடிமைகளாக்கி ஆடு, மாடுகள் போல் நடத்தி அவர்கள் உழைப்பை உறிஞ்சி நாட்டை வளப்படுத்தியதெல்லாம் ரொம்ப, ரொம்பப் பழங்கதை என்று நினைத்திருந்தோம்.  இப்போது இன்னும் சில அமெரிக்கர்களுக்கு ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் மேல் வன்மம் இருக்கும் போலும் என்று நினைப்பதற்கு ஏதுவாக அவர்களைப் பற்றி ஒரு பெரிய கால்நடைப் பண்ணையின் அதிபர் கூறியிருக்கிறார்.  இவர் யார் என்று நினைக்கிறீர்கள்?  அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தன் ஐநூறு கால்நடைகளை மேயவிட்டுக்கொண்டிருக்கிறார்.  அதைத்தட்டிக் கேட்ட அரசு ஊழியர்களோடு சண்டை போட்டு வருகிறார்.

    பதினான்கு குழந்தைகளுக்குத் தந்தையான இந்தப் பண்ணை அதிபர் நெவாடாவில் ஒரு பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரர்.  நெவாடா மாநிலத்தில் உள்ள மொத்த பண்ணைகளின் எண்ணிக்கை 3000. இவற்றின் பரப்பளவு 63,00,000 ஏக்கர்கள்.  ஒவ்வொன்றின் சராசரி அளவு 2100 ஏக்கர்கள்.  இவருடைய மூதாதையர்கள் 1870-களில் இந்தப் பண்ணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.  இத்தனை பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரர் தன்னுடைய பண்ணை மாடுகளை அரசுக்குச் சொந்தமான இடத்தில் மேயவிட்டிருக்கிறார்.  அரசு நிலத்தில் உள்ள, அழிந்துவரும் காட்டு ஆமைகளைக் காப்பாற்றுவதற்காக கால்நடைகள் மேயும் நிலத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறு அரசு நில மேலாண்மைத் துறை இவரைக் கேட்டுக்கொண்டபோது அரசு நிலத்தை கால்நடைகள் மேய்ச்சலுக்காக உபயோகிப்பதற்காக அரசுக்குச் செலுத்திவந்த பணத்தை நிறுத்திவிட்டார்.  இப்போது இவர் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை பத்து லட்சம் டாலர்கள்.

    அரசுத் துறை அதிகாரிகள் இவர் பண்ணைக்கு வந்தபோது இவருடைய ஆதரவாளர்கள் பலர் துப்பாக்கிகளோடு இவருக்கு ஆதரவு தர வந்திருந்தனர்.  அரசு அதிகாரிகள் எதற்கு வீண் வம்பு என்று திரும்பிச் சென்றுவிட்டார்கள்.  அரசு ஆணை மூலமும் நீதிமன்றங்கள் மூலமும் இந்தப் பண்ணைக்காரரை வழிக்குக் கொண்டுவர முடிவுசெய்தனர்.

    இந்தப் பண்ணைக்காரருக்கு ஆயிரக் கணக்கில் ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.  இவர்கள் எல்லோருக்கும் மத்திய அரசு தங்கள் உரிமைகளில் அதிகமாகத் தலையிடுவதாக குறை உண்டு.  இப்போது நில மேலாண்மைத் துறை இந்தப் பண்ணையாரிடம் வரம்புக்கு மேல் நடந்துகொள்வதாக நினைத்து இவருக்கு ஆதரவு தருகின்றனர்.  பல மாநிலங்களிலிருந்து பலர் இவருக்கு ஆதரவு தர வந்திருக்கிறார்கள்.

    இவர் வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி எப்படி மத்திய அரசு வரம்பு மீறி மக்களிடம் நடந்துகொள்கிறது என்று கூறி வருகிறாராம்.  அந்தக் கட்டத்தில் அமெரிக்கக் கருப்பர்களுக்கு மத்திய அரசு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்ததன் மூலம் அவர்களுடைய வாழ்வு அப்படி ஒன்றும் மேம்பாடு அடைந்திருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.  அவர்களை நீக்ரோ என்ற பெயரிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.  இப்போது கருப்பர்களை இப்படி யாரும் நீக்ரோ என்று அழைப்பதில்லை.  அவர்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்குச் செய்வதற்கு ஏதாவது வேலை இருந்ததாம்.  பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளவில்லையாம்.  அவர்களுடைய இளைஞர்கள் சிறைக்குப் போகவில்லையாம்.  இப்போது கருப்பர்களில் நிறைய இளைஞர்கள் குற்றம் புரிந்துவிட்டு சிறையில் இருக்கிறார்களாம்.  இந்தக் குடும்பங்கள் அரசின் நலத்திட்டங்களின் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்களாம்.  இப்படிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.

    2016-இல் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்புள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனெட்டர் ரேண்ட் பால் இவருடைய மத்திய அரசின் தலையீடு பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருக்கிறார்.  இவர் மத்திய அரசின் தலையீடு பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.  குடிமக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு மிகக் குறைந்த அளவே இருக்க வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவர் ரேண்ட் பால்.  ஆனால் நல்ல வேளையாக கருப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது இப்போது இருப்பதை விட நன்றாக இருந்தார்கள் என்ற பண்ணைக்காரரின் கருத்தை ஒப்புக்கொள்ளாதது மட்டுமின்றி தான் அதை தீவிரமாக மறுப்பதாகக் கூறியிருக்கிறார்.  இந்தப் பண்ணையாரைப் பற்றி அடிக்கடி செய்தி வெளியிடும் ஃபாக்ஸ் செய்தி நிறுவனமும் பண்ணையார் சொன்னது தங்களுக்கு ஒப்பவில்லை என்று கூறியிருக்கிறது.  குடியரசுக் கட்சியின் தலைமையகமும் பண்ணைக்காரர் சொன்னது நூறு சதவிகிதம் தவறு, கருப்பர்களைப் புண்படுத்தக் கூடியது என்று கூறியிருக்கிறது.  செனட்டில் பெரும்பான்மை கட்சித் தலைவரான ரீட் இவரையும் இவரது ஆதரவாளர்களையும் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்று வர்ணித்திருக்கிறார்.

    இத்தனை பேர் இவரை விமர்சித்தும் கண்டித்தும் இருக்கும் நிலையிலும் இவருக்கு எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை.  கருப்பர்கள் பற்றிச் சொன்னதை திரும்பக் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவில் பேச்சுரிமை இந்த அளவிற்குஇருக்கிறது.

    இந்தப் பண்ணைக்காரரிடம் முன்பொரு முறை மோத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான ஒரு அரசு அதிகாரி, இப்போது அரசு அதிகாரிகள் இந்தப் பண்ணைக்காரர் விஷயத்தில் பின்வாங்கியதைக் கண்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.  “இந்தப் பண்ணைக்காரர் தனக்கு நாட்டுப்பற்று உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்.  அமெரிக்காவை நேசிப்பவர் என்கிறார்.  ஆனால் அதே சமயம் மத்திய அரசின் சட்டங்களை மதிக்க மாட்டேன் என்கிறார்.  இவரை இப்படியே விட்டுவிட்டால் இவரைப் பார்த்து மற்றவர்களும் ‘அவர் சட்டத்தை மதிக்காதபோது நாங்கள் மட்டும் ஏன்  மதிக்க வேண்டும்’ என்று கேட்க மாட்டார்களா?” என்கிறார்.

    சில வாரங்களுக்கு முன்னால் வெள்ளை இன உயர்வுவாதிகள் (White supremacists) கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வெள்ளையன் யூதர்களின் முதியோர் இல்லத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று அப்பாவிகள் – யூதரல்லதோர் – கொல்லப்பட்டனர்.  கருப்பர்களின் மேலும் இவனுக்கு வெறுப்பு அதிகம்.

    அமெரிக்காவில் ஒரு இனத்தையோ அல்லது ஒரு மதத்தினரையோ குறிவைத்துத் தாக்குவதை வெறிப்பினால் விளையும் குற்றம் (hate crimes)  என்கிறார்கள்.  2000-ஆம் ஆண்டில் 936-ஆக இருந்த இம்மாதிரியான குற்றங்கள் இப்போது 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறதாம்.  ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு கருப்பர்களுக்கு எதிரான இம்மாதிரியான குற்றங்கள் கூடியிருக்கின்றனவாம்.  வெள்ளை இனம்தான் உயர்ந்தது, அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்தான் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்கள் பலர் அமெரிக்காவில் இன்னும் இருக்கிறார்கள்.  சமீப காலத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்களை விட்டுவிடுங்கள்.  முன்னூறு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்துவரும், அதில் பாதி நாட்கள் அடிமைகளாக வாழ்ந்த, அதன் பிறகும் வெள்ளையர்களோடு சம குடிமையுரிமைகள் இல்லாமல் வாழ்ந்த, இந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பான்மை வகித்த கருப்பர்களைப் பற்றி அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தபோது இப்போது இருப்பதை விட சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்வதற்கு எப்படிப்பட்ட அரக்க குணம் வேண்டும்.  உலக நாடுகளிலேயே பல விதங்களில் சிறந்து விளங்கும் அமெரிக்காவுக்கு இது பெரிய வெட்கக்கேடு.

    Share
  • என்னுயிர்த்தோழனே..!

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

     

    உதிரத்தை வியர்வையாய்
    மொழிபெயர்க்கத்தெரிந்தவனே

    வியர்வையை நதியாக்கி
    நாளும் குளிப்பவனே

    என்னுயிர்த்தோழனே
    உன் வியர்வைத்துளி
    ஒவ்வொன்றும் ரூபாயல்ல
    வெள்ளி…வெள்ளி

    அள்ளி ச்சேர்க்க
    வந்ததை மறந்து
    வெள்ளித்திரைமுன்
    விரயம் செய்வதா?

    வெள்ளி
    சலுகையில் கிடைத்ததல்ல
    உன்னையே நீ
    கசக்கிப்பிழிந்ததில் விளைந்தது

    அடகுவைத்த
    நிலம், நகை,

    கட்டிமுடிக்காத
    சகோதிரியின் திருமணக்கடன்

    பாதியிலேயே நிற்கும்
    கட்டத்தொடங்கிய வீடு

    அப்படியே இருக்கையில்
    எப்படித்தோழா?
    இப்படி
    வேலைக்கு விடுப்புப்போட்டு
    வீணாகவந்து நின்றாய்!

     

     

     

     

    உழைத்துக்களைத்து
    இரவில்
    தொலைபேசியில் தொலைத்து
    தொலைந்து
    கண்டெடுக்கும் வாழ்க்கையை
    கண்டபடி வீணடிப்பதா?

    புதிதாய்ப் பிறந்த
    குழந்தைக்கும் மனைவிக்கும்
    நகையும் உடையும்
    அனுப்புவது எப்போது?

    அங்கேதான் நாம்
    அரிதாரங்களையெல்லாம்
    அவதாரமாய் எண்ணி
    மீட்கப்படாத
    அகதிகளாக இருக்கிறோம்

    அரசியலால்
    அவமானங்களோடு
    அன்றாடம் வாழ்கிறோம்

    இங்கேயும் வந்து
    கேள்விக்குறியாவதா?

    தாய்மொழி வாழும்
    இதுதான் நம்
    தாய் நாடு

    உன் உழைப்புக்கும்
    உயர்வுக்கும்
    கைகொடுத்துதவும்
    இன்னொரு வீடு

    உழைப்பவரெல்லாம்
    ஒன்றெனக் கருதும்
    இந்நாட்டில்
    உழைப்பை விடுத்து
    உடலையும் கெடுத்து
    திரையரங்குமுன்திரள்வது
    சரியா?

     

    பெற்றதிலிருந்து
    எதையும்பெறாத பெற்றோருக்கு
    தரவேண்டியதை மறந்து
    தடம்புரள்வது சரியா?

    பகலில்
    வியர்வையில் குளிக்கிறாய்
    இரவில்
    குளிர்நீரில் குளிக்கிறாய்
    ஆடைமாற்றிக்
    களைப்பைத்தொலைக்கிறாய்

    நீ
    நிலைதடுமாறுவதும்
    நிலைகுலைவதும்
    நியாத்திற்கு எதிரானது

    உனக்கும்
    உன்குடும்பத்திற்கும்
    துரோகமானது

    உன் அபிமான
    அவதார புருசர்களெல்லாம்
    நடிப்பிலும்கூட
    ‘டூப்’ வைத்து
    நடிப்பவர்கள்

    இப்பொழுது திரைப்படத்தில்
    நடிப்பும் இல்லை
    நடிகர்களும் இல்லை

    இருப்பவர்களெல்லாம்
    உடலை நெளிப்பவர்கள்
    பாட்டுக்கு
    உடற்பயிற்சி செய்பவர்கள்

    இவர்களை நம்பி
    ஏன் தம்பி
    ஏமாந்துபோகிறாய்?

    எதிர்காலமில்லாத
    இவர்களிடமா உன்
    எதிர்காலம் இருப்பது?
    நீ செய்வது
    பொழுதுபோக்கா?
    இல்லை
    பொல்லாப்போக்கு

    உனக்கிருப்பது
    கலைமனமா?
    இல்லை
    கவர்ச்சி மனம்

    விலைபோவதை விடு
    நிலைபெற முடிவெடு
    நீடித்த புகழ்பெறு

    (திரையரங்குமுன் கலாட்டா செய்திகேட்டு எழுதிய கவிதை)

    Share