மு.கோபி சரபோஜி

img4831ng6

மேதைகளின்
வழிகாட்டல்களில்
உழைப்பாளர்களாய்
ஒன்றுபட்டோம்.

முதலாளித்துவத்தின்
முகமூடிகளை – நம்
தோள் வலிமை கொண்டு
கிழித்தெறிந்தோம்.

கண்ணீர் சிந்தியே
பழக்கப்பட்ட நாம்
செந்நீர் சிந்தி
ஜெயித்துக் காட்டினோம்.

வியர்வையின்
விளைச்சலை
நாடுதோறும்
நட்டு வைத்தோம்.

எல்லைகள் கடந்து
எதிரிகள் மறந்து
மே தினமாய் – நம்மை
அடையாளமிட்டுக் கொண்டோம்.

அன்று
வீரியமாய் நின்ற அடையாள தினமோ
இன்று
வெறும் விடுமுறை தினமாகிப் போனது

விடுமுறையும்
வாழ்த்தும் போதுமென
வீரிய வித்துக்களை

அழுகச்செய்து விட்டோம்.
நடந்தவை உணர்ந்து
நடப்பவை அறிந்து
இனி ஒரு
புரட்சிக்குத் தயாராவோம் – அது
இன்னொரு
மே தினமாய் இல்லாமல் – நம்மை
மேம்படுத்தும் தினமாய் இருக்கட்டும்.
————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *