Blog

  • கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு

    மு​னைவர் சி.​சேதுராமன்

    ஒரு காலத்தில் ​தோன்றி சிறப்புடன் விளங்கிய இலக்கியமானது ​ காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் ​பெரும்தாக்கத்​தை ஏற்படுத்தும். எல்லா இலக்கியங்களும் ​பெரும் தாக்கத்​தை ஏற்படுத்துவதில்​லை. ஒரு சில இலக்கியங்க​ளே இத்த​கைய தாக்கத்​தை ஏற்படுத்தும் இலக்கியங்களாக விளங்குகின்றன. அவ்வாறு தாக்கத்​தை ஏற்படுத்திய இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் முதன்​மையான இடத்தை வகிக்கின்றது.

    Puhar-KannagiInPandyaCourt

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்காப்பியம் ஏனைய காப்பிய நூல்கள் போன்று அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்காமல் கோவலன் – கண்ணகி என்ற குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டிலங்குகின்றது. இதனால், இச்சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்று கூறுவர். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு பொருந்துமாறு இயற்றப்பட்ட காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. காவிரி, வைகை, முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து, சாக்கைக் கூத்து உள்ளிட்ட கூத்துகளும், திருமால், சிவன், இந்திரன், முருகன் உள்ளிட்ட கடவுளர்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன.

    அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை குறித்த செய்திகள் இதில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிப்பிடுகின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூலும் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல்வரி, வேட்டுவவரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. முப்பது காதைகளைக் கொண்டது. இச்சிலப்பதிகாரம் பல்வேறு இலக்கியங்களில் பல நிலைகளில் செல்வாக்குப் பெற்றதாக விளங்குகின்றது. இலக்கியங்கள் மட்டுமல்லாது நாட்டுப்புற இலக்கியமான கதைப்பாடலிலும் இச்சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.

    கோவலன் க​தை – நூல் அறிமுகம்

    இது ​பெரிய எழுத்துக் ​கோவிலன் க​தை என்றும் ​கோவலன் க​தை என்றும் வழங்கப்படுகிறது. இக்​கோவிலன் க​தை​யைப் புகழேந்திப் புலவர் என்பர் எழுதியுள்ளார். இவ​ரைப் பற்றிய ​செய்திகள் கி​டைத்ததில், நள​வெண்பா​வை இயற்றிய புகழேந்திப் புலவரும் கோவலன் க​தை​யை எழுதிய புக​ழேந்திப் புலவரும் ஒருவரல்லர். நாட்டுப்புற மக்களி​டை​யே காணப்பட்ட ​கோவிலன் க​தை​யை அப்படி​யே மக்கள் விரும்பும் வண்ணம் ​இ​சையுடன் கூடிய கதைப்பாடலாகப் புக​​ழேந்திப் புலவர் இயற்றியுள்ளார்.

    புகழ்​பெற்ற புலவர் புக​ழேந்தியாரின் ​பெயரில் எழுதினால் அனைவரும் விரும்பி நூலி​னைப் பயில்வர் என்ற காரணத்தா​லோ அல்லது ​வேறு ஏ​தேனும் காரணத்தினா​லோ இந்நூலின் ஆசிரியர் தமது உண்​மையான ​பெயரி​னைக் குறிப்பிடாது புக​ழேந்திப் புலவரின் ​பெயரி​னைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இந்நூலில் எவ்விடத்திலும் இத​னை இயற்றிய புலவரின் ​பெயர் காணப்படாதது ​நோக்கத்தக்கது. நாட்டுப்புற உடுக்கடிக் க​தைப்பாடல் அ​மைப்பி​லே​யே இக்க​தை ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நூலி​னை பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் அவர்களால், மின்ட் ​போஸ்ட், ​சென்​னை – 1 என்ற முகவரியிலிருந்து ​வெளியிடப்பட்டுள்ளது. ​வெளியிடப்பட்ட ஆண்டு குறிக்கப்படவில்​லை. இந்நூலி​னை திருமகள் அச்சகத்தார், (சென்னை-1)  வாங்கி அதே ​போன்று 1980-ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளனர்.​ கோவலன் க​தை என்ற த​லைப்பில் சகுந்த​லை நிலையத்தார் மண்ணடி, ​சென்​னை-1 என்ற முகவரியிலிருந்து இரண்டாம் பதிப்பாக ஆகஸ்ட்-2007ஆம் ஆண்டு ​வெளியிட்டுள்ளனர்.

    கோவலன் க​தை நூல​மைப்பு

    ​கோவலன் க​தை நூலானது சிலப்பதிகார நூ​லைப் ​போன்று அமையவில்​லை. இதில் பதிகம் என்​ற பகுதி காணப்படவில்​லை. நாட்டுப்புறக் க​தைப் பாடலைப் ​போன்று,

    “முந்தி முந்தி விநாயக​னே முக்கணனார் தம் மக​னே

    ஐந்து கரத்​தோ​னே அருளு​மையாள் புத்திர​னே

    விக்கின விநாயக​னே ​வெண்​ணெயுண்​டோன் தன் மருகா

    முக்கணனார் ​பெற்​றெடுத்த மூஷிக வாக​ன​னே

    ​வெட்பா​லைக் குள்ளிருக்குஞ் சப்பாணிப் பி​ள்​​ளையா​ரே

    சப்பாணிப் பிள்​​ளையா​ரே ​பொற்பாதம் நான் மற​வேன்

    ​கோவலனார் தம் க​தை​யைக் குவலயத்தில் நான்பாட

    வின்னங்கள் வாராமல் விநாயக​னே முன்னடவாய்!

    என்று ​தொடங்கி சுப்பிரமணியர் துதி, ​சொக்கநாதர் துதி, திருமால் துதி, சரஸ்வதியம்மன் துதி ஆகிய கடவுளர்களின் துதியானது இடம்​பெற்றுள்ளது. அதன் பின்னர் புலவர் ​நேரடியாக​வே க​தை​யின் வரலாறு என்று க​தையைக் கூறத் ​தொடங்குகின்றார்.

         சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தாக அ​மையவில்​லை. மாறாக,

        “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

        கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்

        வங்கண் உலகுஅளித்த லான்.

     

        ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

         காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

        மேரு வலம்திரி தலான்.

     

         மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

         நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்

         மேநின்று தாஞ்சுரத்த லான்.

     

         பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

         வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு

         ஓங்கிப் பரந்துஒழுக லான்”

    என்று இயற்​கை வாழ்த்தாகத் ​தொடங்குகின்றது,

         மங்கல வாழ்த்துப் பாடலில் ​கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் க​தையானது ​​தொடங்குகின்றது. ஆனால் ​கோவிலன் கதையானது கண்ணகி, ​கோவலன், மாதவி, வசந்தமா​லை உள்ளி​டோரின் முற்பிறப்பு வரலாற்​றைக் கூறுவதிலிருந்து ​தொடங்குகிறது. சிலப்பதிகாரத்தில் ​கோவலன், கண்ணகி ஆகி​யோரின் முற்பிறப்பு வரலாறு மது​ரைக் காண்டத்தில் கட்டு​ரைகாதையில் கூறப்படுகின்றது.

        கோவிலன் க​தையானது  ​க​தையின் வரலாற்றில் ​தொடங்கி கண்ணகியம்மன் திரு​வொற்றியூருக்கு வருதல் வ​ரையில் நிறைவுறுகிறது. சிலம்பி​னைப் ​போன்று இக்க​தையில் கண்ணகி தெய்வமான பின்​பே கதைநி​றைவுறுவது குறிப்பிடத்தக்கது.

    ஊழ்வி​னை

    காலங் காலமாக மக்களி​டை​யே நிலவி வரும் விதிக் கொள்கையானது சிலப்பதிகாரத்தின் முக்கிய ​நோக்கங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஊழ்வினையானது ​தொடர்ந்து வந்து ஒருவ​ரைப் பற்றும். இதனை,

    “ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்”

    என்று சிலப்பதிகாரம் எடுத்து​ரைக்கின்றது. சிலம்பின் இவ்வூழ்வி​னைக் ​கொள்​கையானது அதன் பின்வந்த அ​னைத்து இலக்கியங்களிலும் ​பெருந்தாக்கத்​தை ஏற்படுத்தி அவ்விலக்கியங்களிலும் இடம்​பெற்றுள்ளது.

         ​கோவிலன் க​தைப் பாடலில் இவ்வூழ்க் ​கொள்​கையானது கதையின் ​தொடக்கத்தி​லே​யே இடம்​பெற்றுள்ளது. க​தையின் ஒவ்வொரு பகுதியிலும் இக்கொள்​கையானது ஆசிரியரால் வலியுறுத்தப்படுகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் ஒவ்​​வொரு நிகழ்ச்சியி​னைக் குறிப்பிடும்​போதும் இவ்வூழ்வி​னை​யை வலியுறுத்திக் கூறிக் ​கொண்​டே ​செல்வார் அது​போன்​றே புக​​ழேந்திப் புலவரும் இவ்வூழ்வி​னை​யை வலியுறுத்துகிறார்.

         மாதகி​யை நாட்டியமாட அ​ழைத்தல் ​வேண்டும் என்று வற்புறுத்துகிறான் ​கோவலன். மாதகி நாட்டியத்​தை ​வைக்கவில்​லை​யெனில் நான் இறந்து விடுவேன் என்று கூறுகின்றான். அத​னைக் கேட்ட அவனது தந்தை முத்துச் ​செட்டி,

         “அப்​போது முத்துச் ​செட்டி அழகு து​ரை மன்னவனும்

          எண்ணாது ​மெண்ணுகிறான் எண்ணி மனங்குன்றுகிறான்

          சாதகமும் ​பொய்க்காது த​லைவிதியுந் தப்பாது

          பன்னிரண்டு பிராயத்தில் ​பைங்​கொடி மாதகியாள்

          மாதகி யண்​டையிந்த மன்னவன் ​போவா​னென்று

          சாதகமும் உ​ரைத்தது சரியாக ஆச்சுதுகாண்” (​கோவிலன்க​தை, ப., 17)

    என்று நி​னைக்கின்றான். ஊழ்வி​னையின் வலி​மை​யை ​கோவலனின் தந்​தைவழி புலவர் எடுத்து​ரைக்கின்றார்.  காம​தேனு இட்ட சாபவிதியின்படி கோவலன் 16 வயதில் இறக்க ​வேண்டும் என்ற ஊழ்வினை விரட்ட ​கோவலன் கண்ணகியுடன் மது​ரை ​செல்கிறான்.

         கண்ணகியின் காற்சிலம்பு புலம்பிய​தைக் கண்ணகி ​கோவலனிடம் கூறி மது​ரைக்குப் ​போக ​வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால் கோவலன் அத​னைக் ​கேளாமல்,

         “​செத்தாலும் ​தென்மது​ரை சிலம்பு விற்றால் ​தென்மது​ரை

          அள்ள ​வேணுந் திருட ​வேணும் மணிமது​ரைச் சீ​மையி​லே

          என் சிலம்​பை விற்றா​லே ​யெனக்குப் ப​கைவரு​மோ?” (ப., 54)

    என்று ​கேட்டு மது​ரைக்குக் கண்ணகியுடன் ​செல்கின்றான். எவ்வாறு சிலம்பில் ஊழ்வி​னை உறுத்தூட்ட ​கோவலன் ​சென்றா​னோ அ​தே​போன்று இக்கோவிலன் க​தையிலும் ஊழ்வி​னை அவ​னை அ​த்துக் ​கொண்டு மது​ரைக்கு ஏகுகின்றது.

    பின்னால் நடக்கப் ​போவ​தை முன்ன​ரே கூறுதல்

    kan

         ​கோவலன் மது​ரையில் ​இறக்கப் ​போகின்றான் என்ப​தை இளங்​கோவடிகள் பல்​வேறுவிதமான நிகழ்வுகள் வழி எடுத்து​ரைப்பார். கண்ணகியின் கண்கள் துடிப்பது, கண்ணகி கனவு காண்பது, ​வை​யை ஆறானது ​கோவல​னையும் கண்ணகி​யையும் பார்த்து இருவருக்கும் துன்பம் ​நேரப் ​போவ​தைச் சகிக்க முடியாமல் தனது முகத்​தை பூக்களாலும் த​ழைகளாலும் மூடிக்​கொண்டு ​போவதாகவும், மதுரையின் மதில்ச் சுவரின் மீதிருந்த ​கொடிகள் கோவலனையும் கண்ணகி​யையும் பார்த்து மது​ரைக்கு வாராதீர்கள் என்று கூறுவ​தைப் ​போன்று காற்றில் அ​சைந்ததாகவும், கண்ணகி ​கோவலனுக்கு மாதரிவீட்டில் உணவு சமைத்துப் பரிமாறுவதற்காக ​மெழுகிய​போது கோவலனுக்கும் கண்ணகிக்கும் ​நேரப் ​போகும் துயரத்​தை உணர்ந்து மண்மகள் மயங்கிப் ​போய்விட்டதாகவும் அவளின் மயக்கத்​தைத் தெளிவிப்பவள் ​போன்று கண்ணகி நீர் ​தெளித்து ​மெழுகினாள் என்றும், ​கோப்​பெருந்​தேவியின் கனவும் என்று பல்​வேறு சம்பவங்கள் ​கோவலன் இறப்​பையும் கண்ணகியின் துன்பத்​தையும் முன்ன​ரே எடுத்துக் கூறுவதாக இளங்​கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் எடுத்து​ரைக்கப் ​பெற்றுள்ளது.

    இளங்​கோவடிகள் பின்பற்றிய இ​தே ​போன்று ​கோவலன் இறக்கப் ​போகிறான் என்ப​தை பலரின் வாயிலாகவும் எடுத்துக் கூறுகிறார். கண்ணகி சிலம்​பைக் கழற்ற மு​னையும்​போது அச்சிலம்பானது புலம்பி ​கோவலன் மது​ரையில் இறக்கப் ​போகிறான். என்று கூறுகிறது. அத​னை ஏற்காத ​கோவலன் மீறிச் செல்கிறான்.

    அவ்வாறு மது​ரை​யை ​நெருங்குகின்ற​போது ​​எதிரில் ​தென்பட்ட ஊர்க​ளைப் பற்றிக் ​கோவலன் கண்ணகிக்குக் கூறிக் ​கொண்​டே வருகின்றான். அப்​போது வழியில் இருந்த விநாயக​ரை வழிபட்டு, கோவலனார் எந்தவிதமான துன்பமும் இன்றி சிலம்பு விற்று வருவாரா? என்று ஆரூடம் ​கேட்கிறாள் கண்ணகி. முதலில் வாய்திறக்க மறுக்கும் விநாயகர் பின்னர்,

    “இந்தப் பயணம் எழில் மது​ரை ​போவாரானால்

    மாண்டு மடிந்திடுவார் வரப்​போறதில்​லை​ யென்றார்

    துரும்​பெடுத்து ​மேற்​போடுந் துன்மார்க்க மது​ரையது

    ​கொடி​யெடுத்து ​மேற்​போடுங் ​கொடிதான ​தென்மது​ரை

    இந்த மது​ரை தமக்கு இவர் ​போனால் ​பெண்ணர​சே

    திரும்பி வரப்​போவறதில்​லை ​தேன்​மொழி​யே உன்புருஷன்

    பாவி தட்டான் தாயாதி பாண்டிய​னோ பங்காளி

    மூத்த தமயனவன் தமுதற்ற​மையன் பிள்​ளை​யென்று

    ஒப்பாரி ​கொண்டு உறவு ​சொல்லித் தான​​ழைப்பான்

    வாத்திரயாரடித்ததனால் வனம் ​போனபிள்​ளை​யென்று

    ​செப்பிய​​ழைத்துச் சிலம்பு தன்​னைப் பறித்துக்

    கட்டினகட்​டோட கச்​சேரி ​கொண்டு ​போவான்

    நீதி​கேளாப் பாண்டியர்கள் நிற்கத் த​லை​வெட்டி ​வைப்பார்

    பழிகார மது​ரை ​தேடி பட்டணத்தார் ​போனா​​லே

    இறந்து மடிந்திடுவார் இனித்திரும்பப் ​போவதில்​லை

    பின்​னேவருங் காரியத்​தை முன்​னே நான் ​சொல்லிவிட்​டேன்

    என்று விநாயகர் எடுத்துக் கூறிய​தைக் கண்ணகி கூறினாள். ஆனால்      அத​னைக் ​கோவலன் ஏற்காது பிடிவாதமாக மது​ரை​யை நோக்கி நடந்தான்.

    அ​தே​போன்று மது​ரையில் சிலம்பி​னை விற்கும்​போது சிந்தாமணி என்ற தாசியானவள் ​கோவல​னைத் தடுத்து அவனுக்கு ​வேண்டிய செல்வத்​தைத் தருவதாகக் கூறி நீ உனது அரண்ம​னைக்குப் ​போ என்று கூறித் தடுக்கிறாள். அதற்குக் ​கோவலன்,

         “தாசியவள் நீ ​கொடுக்க தனவணிகன் வாங்கு​வே​னோ

          ஆர்​போட  ​வேணு​மோ அவர்கள​தைப் ​போர்க்க ​வேணும்

    அவளரண்ம​னை​யை விட்டு ஆணழகர் வாரா​ரே” (ப., 59) 

    என்று கூறிவிட்டு சிலம்பி​னை விற்க அரசவீதிக்கு வருகின்றான். அப்​போது அரசியானவள் அவ​னை அழைத்து அந்தச் சிலம்பி​னைக் கையில் எடுத்துப் பார்த்து,

    “தவமாய்த் தவமிருந்து ​தையல​ரைப் ​பெற்​றெடுத்​தேன்

    வரமாய் வரமிருந்து ​வை​கையி​லே ஒப்ப​டைத்​தேன்

    அன்று கண்​டேன் மக​ளை இன்று கண்​டேன் சிலம்​பை

    என்று அழுது புலம்புகிறாள் ஆரணங்கு ராசகன்னி

    ​கோவல​ரைத்தான் பார்த்து ​கொம்ப​னையா​ளேது ​சொல்வாள்

    பாம்​பெடுத்து ​மேற்​போடும் பழிகாரத் ​தென்மது​ரை

    இந்த மது​ரையி​லே இறந்து ​போகநாளாச்​சே

    ஆ​னையின் ​மேல் திரவியத்​தை அனுப்புகி​றேனும்ம​னைக்கு

    அத்​தை​யெடுத்து முந்தன் அரண்ம​னைக்குப் ​போய்ச் ​சேரும்” (ப., 72)

    என்று கூற அத​னையும் ஏற்காது ​கோவலன் சிலம்​பை விற்க மது​ரை வீதியில் சுற்றித் திரிகின்றான்.

    அப்​போது அவன் ​வேத ஆசிரியரின் பள்ளிக்கூடத்திற்கு வந்த கோவலனின் வருத்தத்​தைக் க​ளைந்து, அவனிடம்,

    “அழிகார மது​ரையி​லே பட்டணத்தா​ரேன் வந்தீர்

    ​கொடும்பாவி மது​ரையி​லே ​கோவல​ரே​யேன் வந்தீர்

    நிந்​தையிட்டுத் த​லைவாங்கும் நீதியில்லா மது​ரையிது

    அநீதமாய் மாய வந்தீர் ஆணழகர் ​கோவல​ரே

    காராம்பசு​வை விற்றுக் கட்டழக வுந்தனுக்கு

    கூத்தியார் கடன​டைக்கக் ​கொற்றவ​ரே நான்தா​ரேன்

    அத்​தை ​யெடுத்து உந்தன் அரண்ம​னைக்குப் ​போய்வாரும்” (ப.,73)

    என்று கூறவும் ​கோவலன் அத​னைப் ​​பொருட்படுத்தாது ​கோவலன் நடந்தான். இவ்வாறு பலரும் கோவலனைத் தடுக்க அவன் அவற்றை​​யெல்லாம் உதறிவிட்டுச் சிலம்பி​னை விற்க முனைகின்றான். இவற்றிற்​கெல்லாம் ஊழ்வி​னை​யை​யே சிலப்பதிகாரமும் ​கோவலன் க​தையும் பின்ணணியாகக் காட்டுகின்றன.

    அரசியல் பி​ழைத்தவ​ரை அறம் அழிக்கும்

    அரசியலில் தவறி​ழைத்​தோ​ரை அறக்கடவு​ளே தண்டிக்கும் என்ற கருத்தானது புகழேந்திப் புலவரின் கோவலன் க​தையில் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து​ரைக்கப்​பெற்றுள்ளது. சிலம்பின் செல்வாக்கினால் புக​ழேந்திப் புலவர் கண்ணகி​யே காளியாக உருமாறி, அழிப்பாதாகப் ப​டைத்துக் காட்டுகின்றார்.

    கண்ணகி பாண்டியர் அரச​வைக்குச் ​செல்வதாக இளங்​கேவடிகள் ப​டைத்துக் காட்டுவார். ஆனால் புகழேந்திப் புலவ​ரோ பாண்டியர்கள் கண்ணகி​யைத் ​தேடிவருமாறு ப​டைத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு வந்த பாண்டியர்க​ளைப் பார்த்து கண்ணகியானவள்,

    “அறிவு ​கெட்ட பாண்டிய​னே ஆளன் பழி​கொடடா

    புத்தி ​கெட்ட பாண்டிய​னே பழிக்குப் பழி​கொடடா

    விவரங்​கெட்ட பாண்டிய​னே ​வேந்தன் பழி​கொடடா

    என் கணவன் பழி​கொடடா கனிவு ​கெட்ட பாண்டிய​னே

    ஆள​னை ஏண்டா ​கொன்றாய் அறிவு ​கெட்ட பாண்டிய​னே”(ப., 102)

    என்று ​கேட்டவுடன் தங்களது தவறி​னை உணர்ந்து,

    “அறியாமல் ​கொன்று விட்​டோம் அரி​வை​யே என் ​செய்​வோம்

    ​தெரியாமற் ​கொன்று விட்​டோம் ​தேவி​யே ஏது ​செய்​வோம்

    முற்பழி பிற்பழி தானிப்பழி தாரு​மென்றாள்

    இப்படிக்குச் ​சொன்னாள் ஏந்தி​ழை நான் விட்டிடு​வேன்”(ப., 104)

    என்று கூறி பாண்டியர்கள் மன்றாட கண்ணகியாள் அவர்க​ளை வருமாறு கூறி அப்பாண்டியர்கள் ஆறாயிரம் ​பே​ரையும் அழித்தொழிக்கின்றாள் காளியாகிய கண்ணகியாள். அரசியல் பி​ழைத்​தோ​ரை கடவுளே மனிதவடிவில் வந்து அழிக்கும் என்று புகழேந்திப் படைத்துக் காட்டியிருப்பது சிலப்பதிகாரத்தின் செல்வாக்கி​னையும் அதன் தாக்கத்​தையும் காட்டுவதாக அ​மைந்திலங்குகின்றது.

    “அறிவ​ரை​போகிய ​பொறியறு ​நெஞ்சத்து இ​றைமு​றை பி​ழைத்​தோன் வாயி​லோ​யே!” என்றும் “தேரா மன்னா” என்றும் கண்ணகி கூறும் கடுமையான வார்த்​தைக​ளை​யே புக​ழேந்திப் புலவர் விரித்துப் பாடுகின்றார் என்பது ​நோக்கத்தக்கது.

    கண்ணகி – ​கோவலன் அறிமுகம்

    இளங்​கோவடிகள் கண்ணகி​யையும் ​கோவல​னையும்,

         “மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்

    ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,

    அவளுந்தான்,  

    போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்

    தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்

    மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்

    காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ

    “இருநிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அக​வையான்;

    அவனும்-தான்

    மண்​தேய்த்த புகழினான்; மதிமுக மடவார்தம்

    பண்​தேய்த்த ​மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்

    கண்​டேத்தும் ​செவ்​வேள் என்று இ​சை​போக்கிக் காதலால்

    ​கொண்​டேத்தும் கிழ​மையான்; ​கோவலன் என்பான் மன்​னோ”

                   (மங்கல.வா.பாடல்)

    என்று காப்பியத்தின் ​தொடக்கத்தி​லே​யே அறிமுகப்படுத்துகின்றார்.

    ஆனால் புக​ழேந்திப் புலவர் தனது க​தைப் பாடலில் ​கோவல​னை​,

         “அட்டாளுஞ் ​சொக்க​ரைப் ​போல் அழகு​டைய மன்னவனும்

          தேமல்வி​றையழகன் ​தெள்ளு மணிவாசகனார்

          உருமா​லைக் கட்டழகன் உத்தமனார் ​கோவலனும்

          அள்ளித் ​தெளித்தது​போல் அழகு சிறு ​தேமல்

          மாங்கா முடியழகன் மாதளம்பூ ​மேனியனாம்

          ​செக்கச் சிவந்தவன்காண் ​செங்கீ​ரைத் தண்டழகன்

          அட்டாளுஞ் ​சொக்க​ரைப்​போல் அழகு​டைய மன்னவன்தான்

          ​சோமன் கட்டி வீதிவந்தால் சுவாமி ​சொக்க​ரேச​ரென்பார்

          மண்​டை கட்டி வீதி வந்தால் மது​ரை வாழ் ​சொக்க​ரென்பார்

          ……………. …………………………….. ……………………………… ……………………………….. …………………………..

          இப்படிக்குக் ​கோவலனும் இருந்து வளர்நா​ளையி​லே”(ப., 10)

    என்று அறிமுகப்படுத்துகின்றார். கண்ணகி​யை,

         “காவிரிப்பூம் பட்டணத்தில் கண்ணியாள் மாதினுக்கு

          பன்னிரண்டு வயதாச்சு ​பைங்​கொடியாள் கண்ணகிக்கு

          நா​ளொரு ​மேனியாக நட்சத்திரம் ​போல் வளர்ந்தாள்

          ​பொழு​தொரு ​மேனியாக ​பொன்வண்டு ​​போல் வளர்ந்தாள்

          இப்படிக்குத்தான் வளர்ந்தாள் ஏந்தி​ழை கண்ணகியும்

          வளர்பி​றைச் சந்திரன் ​போல் மங்​கையரும் தான் வளர்ந்தாள்” (ப.,29)

    என்று வருணித்துக் கூறுகின்றார். கண்ணகி​யைக் காளியின் மறுவடிவாகக் ​கொண்​டே புலவர் ​கோவலன் கதை​யை நகர்த்துகின்றார். மாதகி ​கோவலனிடம் ​பொற்பதுமை செய்து தருமாறு கூறிய​போதும், பொற்பதுமை ​பேசவேண்டும் என்ற போதும், கோவலனிடம் இருந்து மாதகி அ​னைத்​தையும் பறித்துக் கொண்டு சிங்க முகக் ​கேணியில் தள்ளிய​​போதும் கோவலன் தனது ம​னைவி கண்ணகி​யை நி​னைத்து,

         “ஆவி​போகும் ​வே​ளையி​லே யா​ரை நி​னைக்கலுற்றார்

          பத்தாத பத்தினி​யே பழுதுபடாரத்தின​மே

          மா​லை பறி​போகுதடி மணவாளன் மாளுகி​றேன்

          தாலிபறி​போகுதடி த​லைவனிங்​கே மாளுகி​றேன்

          கூ​றை பறி​போகுதடி ​கொற்றவனார் மாளுகி​றேன்

          பத்தினியும் ​மெய்யானால் பக்கத்து​ணை வந்திடுவாய்

          கண்ணகியும் ​மெய்யானால் காக்க நீ வாருமென்றார்” (ப.,40)

    தன்​னைத் துன்பத்தில் இருந்து காக்க ​வேண்டும் என்று வருந்திக் கூறுகின்றான். ஒவ்​வொரு இடத்திலும் கண்ணகியா​லே​யே கோவலன் காப்பாற்றப்படுகின்றான். கண்ணகி காளியின் மறுவடிவமாக​வே ​கோவலன் க​தை முழுவதும் காட்டப்படுகிறாள்.

    இளங்​கோ கண்ணகி​யைக் காப்பியத்தின் இறுதியி​லே​யே தெய்வமாக்குகின்றார். ஆனால் புக​ழேந்திப் புலவ​ரோ கோவலன் கதையின் ​தொடக்கத்தில் இருந்தே காளி​தேவியாகவே காட்டுகின்றார். ​கோவலனுடன் காட்டுவழியில் ​செல்லும்​போது, அங்கு கண்ணகி தனித்திருந்த நி​லையில் துன்புறுத்த வந்த கள்வர்களைக் கண்ணகி கல்லாகப் ​போகுமாறு சாபம் கொடுக்கின்றாள். அதன்பின் அங்குவந்த ​கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவர்க​ளை மன்னித்து மீண்டும் உயிர்​கொடுக்கின்றாள்.

    அ​தே​போன்று ​கோவலன் இறந்துவிட்டதும் பாண்டியனிடம் நீதி கேட்க இளங்​கோ ப​டைத்த கண்ணகி அரச​வை ​செல்வாள். ஆனால் கண்ணகி கோட்டைவாயிலில் நின்று கொண்டு தன்​னைப் பார்க்க வருமாறு வாயில்க் காப்பவனிடம் கூற அதன்படி பாண்டியர்கள் கண்ணகி​யைப் பார்க்க வந்தனர். இவை புதுமையாகவும் வியப்பாகவும் இக்க​தையில் அமைந்துள்ளது.

    பத்தினியாள் மாதகி

    இளங்​கோவடிகள் மாதவி என்று காப்பியத்தில் குறிப்பிட்டு, கோவலனுக்காக வாழ்ந்தவளாக​வே காட்டுகின்றார். கோவலனிடத்தில் இருந்து எ​தையும் அபகரித்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடவில்​லை. அரங்​கேற்றக் கா​தையில்,

    “மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன

    மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து

    நகர நம்பியர் திரிதரு மறுகில்

    பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,

    மாமலர் நெடுங்கண் மாதவி மாலை   170

    கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு

    மணமனை புக்கு மாதவி தன்னொடு

    அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி

    விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.

    வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்” (அரங்​கேற்று)

    என்று மாதவியின் ம​னையில் ​கோவலன் தங்கி இருந்த​தைக் குறிப்பிடுகிறார். அ​தே​போன்று ​கோவலன் இறந்த பின்னர் அவனுக்கும் தனக்கும் பிறந்த மகளைக் கண்ணகி மகள் என்று கூறி அவ​ளை​ பெளத்த துறவியாக்குகின்றாள். அ​தே​போன்று மாதவியும் புத்தமதத்தில் ​சேர்ந்து துறவியாகிறாள்.

    ஆனால் புக​ழேந்திப் புலவர் தான் வாழ்ந்த காலத்திற்​கேற்ப மாதகியைப் ப​டைத்துக் காட்டுகிறார். பரத்தையர் குலத்தில் பிறந்தவர்கள் எவ்வா​றெல்லாம் நடந்து ​கொள்வர் என்ப​தை மாதகி​யை ​வைத்துச் சித்திரித்துக் காட்டுகிறார் புலவர். பத்து வயதில் கோவலனின் திருமணத்திற்கு ஆடவந்த மாதகி அவளுடன் கூடப் பிறந்த ​பொன்னுருவி மா​லை​யைக் கழற்றி எறிய அது ​கோவலனின் கழுத்தில் விழுந்தது.

    அத​னைக் ​கோவலனால் கழற்ற இயலவில்​லை. மாதகி தான் கொண்டு வந்திருந்த இளநீரில் ஊர​வைத்த களிப்பாக்கி​னை எடுத்துத் தாம்பூலத்துடன் ​மைதடவிக் ​கொடுக்க அத​னை வாங்கி உண்ட கோவலன் மாதகி​மேல் ​மையல் ​கொண்டு கண்ணகி​யைப் பிரிந்த அவளுடன் ​சென்றுவிடுகின்றான். மாதகி ​கேட்கக் கேட்க பொன்னையும் ​பொரு​ளையும் அள்ளி அள்ளிக் ​கொடுக்கின்றான் கோவலன்.

    கண்ணகி ஒ​லையி​னைப் பார்த்த ​கோவலன் மாதகியிடம் வி​டைகேட்க அவ​ளோ உன்​னைப் ​போன்று ஒரு பொற்பதுமை ​செய்து வைத்துவிட்டுப் ​போ என்று கூறுகின்றாள். அதன்படியே ​கோவலனும் ​செய்து வைக்க, அப்பதுமை பேசவேண்டும் என்று கூற கோவலன் கண்ணகி​யை நி​னைத்தவுடன் பதுமை பேசியது. கோவலன் கண்ணகியிடம் செல்லும்போது பொற்பதுமை ​பேசாது ​போக​வே மாதகி அவ​னை ஓ​லை​யெழுதி மறுபடி வரவ​ழைத்து சிங்கமுகக் கேணியில் நீர் எடுத்துத் தருமாறு ​கேட்கிறாள். ​கோவலனிடம் இருந்து அனைத்​தையும் பறித்துக் ​கொள்கிறாள். அவனு​டைய அழகையும் பறித்துக் கொள்கிறாள். ஏதுமற்ற கோவலனிடம் தன்னிடம் பணி​செய்யும் நட்டுவனாருக்கும், க​லைஞர்களுக்கும் பொன்தர​வேண்டும் என்று ​கேட்க அத​னைத் தருவதற்குத் தன்னிடம் ஏதுமில்​லை. எப்படியாவது தருகி​றேன். கண்ணகி​யைப் ​போய்ப் பார்க்க அனுமதிதா என்று ​கேட்ட ​கோவல​னை ஆற்றில் பிடித்துத் தள்ளுகிறாள் மாதகி.

         இவ்வாறு பல ​கொடு​மைக​ளைக் ​கோவலனுக்குச் ​செய்யும் கொடுமையான பரத்​தையாகக் ​கோவலன் கதையில் சித்திரிக்கப்படுகிறாள். இருப்பினும் ​கோவலன் இறந்தபின்னர் கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவனது சி​தையுடன் மாதகியும் இறந்து போவதற்குச் சம்மதம் ​தெரிவித்து,

    “நீ-என்ன சுகமறியவாய் என்றன் தமக்​கைய​ரே

    நான்கூட மாளுகி​றேன் நாயகனார் தம்முட​னே

    எங்களிருவ​ரையும் எடுத்துத் தகனஞ் ​செய்யும்” (ப.,108)

    என்று கூறிவிட்டு ​தனது மடியில் மலர்க​ளை ​வைத்துக் ​கொண்டு சிதை​யேறினாள். கண்ணகியாள் சிதைக்குத் தீ​வைத்தாள். அவர்களிருவ​ரையும் தீப்பற்றி எரித்தது. அவர்களது சாம்ப​லை எடுத்துக் காசியில் க​ரைப்பதற்காக கண்ணகி எடுத்த​போது மாதகியின் மடியில் கட்டியிருந்த மலர்கள் கருகாது அப்படி​யே இருக்கக் கண்டாள் கண்ணகி. அத​னைப் பார்த்த கண்ணகி,

          “பத்தினியாள் என்று ​சொல்லிப் பா​வைமனதில் எண்ணி” (ப., 109)

    வியந்து மனதிற்குள்​ளே​யே மாதகி​யைப் ​போற்றினாள். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறாத ஒன்றாகும்.

    புக​ழேந்தியாரின் புது​மைகள்

    பரத்​தை​மை ஒழுக்கத்​தின் ​கேடுக​ளை விளக்குவதற்காக​வே புகழேந்திப் புலவர் மாதகி​யைக் கொடுமை செய்பவளாகப் ப​டைத்துக் காட்டுகின்றார். மேலும் மாதகியின் தாய் வசந்தமா​லைதான் பல்வேறு கொடுமைகளை ​​​கோவலனுக்குச் ​செய்கின்றாள். மாதகியாகவே எந்த​வொரு ​தீங்கும் கோவலனுக்குச் செய்யவில்​லை. மாதகி தன்னு​டைய தா​யிடம் வந்து என்ன ​செய்ய ​வேண்டும் என்று ​கேட்ப​தை,

         “எல்லாம் பறித்துக் ​கொண்​டேன் இளங்​கொடி​யே தாயா​ரே

          திருப்பதி திம்ம​னைப் ​போல் நின்றாண்டி ​கோவலனும்

          அவ​னை இனி என்ன ​செய்கிறது ஏந்தி​ழை​யே தாயா​ரே

          சிங்கமுகக் ​கேணியி​லே ​​தேன்​மொழி​யே தள்ளு​மென்றாள்” (ப., 44)

    என்று புலவர் ப​டைத்துக் காட்டுகிறார்.

    பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற ​நேரிடும் என்பதை மாதகி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி புக​ழேந்தியார் தெளிவுறுத்துகிறார். இளங்கோவடிகள் குறிப்ப​தைப் ​போன்று மாதரி என்று ​​பெய​ரைக் குறிப்பிடாது ஆச்சி என்று புக​ழேந்தியார் குறிப்பிடுகின்றார். கண்ணகி​யை கவுந்தியடிகள் அ​டைக்கலப் பொருளாக மாதரியிடம் அடைக்கலப்படுத்தி, “தாயும் நீ​யே ஆகித் தாங்குக” என்று கூறியது ​போன்று ​கோவலன் கண்ணகி​யை ஆச்சி (ஆய்ச்சி என்ப​தே வழக்கில் ஆச்சி என்று மருவி வந்திருத்தல் வேண்டும்)யிடம்,

         “மது​ரைக்கு யான்​போய் வருமளவுந்தாயா​ரே

          ​பெற்ற பிள்​ளை​போலாகப் ​பேணி வளர்த்திடுவாய்

          கண்ணகி​யை உன் மகள்​போல் காத்து வளர்த்திடுவாய்

          பத்தினி​யை உன்மகள் ​போல் பார்த்​தே இருத்திடுவாய்

          உத்தமி​யை உன் மகள் ​போல் உகந்து நீ காத்திடுவாய்

          ஆய​னைக் காத்ததது​போல் ஆச்சி நீ காத்திடுவாய்

          மாய​னைக் காத்தது​போல் மாதா​வே காத்திடுவாய்

          நான் ​​தென்மது​ரைத் தா​னேகித் திருமபி வருமளவும்

    அ​டைக்கல​மென் ம​னைவி ஆச்சி​யே உன்னிடத்தில்” (ப.,64)

    என்று அ​டைக்கலப்படுத்திவிட்டுச் ​செல்கிறான்.

    மது​ரை ​செல்லும் ​கோவலனிடம் தனக்கு ஏ​தேனும் அ​டையாளம் செய்துவிட்டுப் ​போ என்று கண்ணகி கூறுவதும் ​கோவலன் மரப்​பெட்டி​யை ​வைத்து விளக்​கேற்றி மாம்பழம், மல்லி​கைப்பூ, தேங்காய், சந்தனம், நி​றை ​செம்பில் தண்ணீர் இவற்​றை​யெல்லாம் வைத்துவிட்டு, எனக்கு ஏதும் துன்பம் நேர்ந்தால் ​செம்பில் தண்ணீர் கு​றையும், மல்லி​கைப் பூவாடும் மாங்கனி அழுகிவிடும், சந்தனம் உலரும் ​தேங்காய் உ​டையும், விளக்கு அவியும்மரப்​பெட்டி உ​டையும் என்று அ​டையாளம் ​செய்துவிட்டுப் ​போகின்றான். இந்தப் பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறாத ஒன்றாகும்.

    அ​தே​போன்று கருடனின் முட்​டைக​ளையும் குஞ்சுக​ளையும் துன்புறுத்திய வஞ்சிப்பத்த​னையும் அவனது குடும்பத்​தையும் பழிவாங்க கருடன் அரசியின் காற்சிலம்பி​னை எடுத்துக் ​கொண்டு போய் பாம்புப் புற்றினுள் ​போட்டுவிட்டு அவனது குடும்பத்​தைப் பழிக்குப் பழி வாங்குகின்றது கருடன். வஞ்சிப்பத்தனின் ம​னைவி முத்துமா​லை, மகன்கள் சுந்தரலிங்கம் ​சோமலிங்கம் ஆகி​யோரின் பெயர்கள் ​கோவலன் க​தையில் மட்டு​மே இடம்​பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வஞ்சிப்பத்த​னைக் காப்பாற்ற அவனது மகன்கள் வேதவாத்தியாரிடம் இருந்த ​கோவல​னைக் கண்டு வந்து அவனிடமிருந்த சிலம்பி​னை அபகரிக்கத் திட்டந்தீட்டித் தருவதும், வஞ்சிப்பத்தன் காணாமல் ​போன தனது அண்ணன் மகன் என்று கூறி ​கோவல​னை அ​ழைத்து அவனுக்குச் ச​மையல் ​பொருட்கள்​கொடுத்து உணவு ச​மைத்து உண்ணுமாறு கொடுப்பதும், பின்னர் கோவலனிடம் உள்ள சிலம்பி​னை கீ​ழே ​வைத்துவிட்டு உண்ணுமாறு கூறுவதும் முத்துமா​லை உலக்​கையால் ​கோவல​னை அடித்துச் சிலம்பி​னைக் களவாடுவதும் ​கோவல​னை அரசனிடம் கட்டி இழுத்துச் ​சென்று நிறுத்துவதும் கோவல​னைக் கண்ட பாண்டியர்கள் அவனது காலில் விழுவதும் அத​னைக் கண்ட வஞ்சிப்பத்தன் கள்வனின் காலில் அரசர்கள் வீழ்ந்து வணங்கலாமா என்று கூறுவதுமாகிய நிகழ்ச்சிகள் சிலம்பில் இடம்​பெறாத நிகழ்ச்சிகளாக புக​ழேந்திப் புலவரால் ப​டைத்துக் காட்டப்படுகின்றன.

    அ​தே​போன்று ​பாண்டியனின் அ​மைச்சர்கள் குற்றத்​தை விசாரிக்க ​வேண்டும் என்று ​கோருவதும் கோவலன் பாம்புக் குடத்துக்குள் ​கைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும், கொப்பரையில் ​​கொதிக்கின்ற ​நெய்யி​லே ​கை​யைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும் மழுவி​னைக் காய்ச்சி அத​னை எடுக்குமாறு கூறுவதும் என்னு​டைய சிலம்புதான் என்று அத​னை ஏந்திக் கொண்டு ​சென்று சிவன் ​கோயிலுக்குச் ​சென்று அரச​வைக்கு வருவதும் யா​னை​யை ​வைத்துச் சத்தியம் ​செய்ய ​வைப்பதும், குழி​தோண்டி அத​னைச் சுற்றிவரச் செய்து பள்ளத்திற்குள் ​கோவல​னைத் தள்ளுவதும் ​கொல்லவந்த யா​னை மத்தகத்தில் ​கோவல​னைத் தூக்கி ​வைத்துக் ​கொண்டு கூத்தாடுவதும், பாண்டியர்கள் கோவலனைக் கொல்ல மழுவரசர்க்கு ஆ​ணையிடுவதும், பாணடிய மன்னரைப் பார்த்து கண்ணகியாள் உங்க​ளைப் பழி வாங்குவாள் மது​ரை​யை அழித்து மன்ன​னைக் ​கொன்று கண்டதுண்டமாக்குவாள் என்று கூறுவதும் புகழேந்தியார் ​கோவலன் க​தையில் இடம்​பெறும் புது​மைமிகுந்த நிகழ்ச்சிகளாகும்.

    அ​தே​போன்று கண்ணகி ​கோவல​ன் இறந்தவுடன் தன்​னைத் தடை​செய்த ஆச்சி​யரின் வீடுக​ளை எரிப்பதும் பின்னர் ஆச்சி வேண்ட மீண்டும் அவற்​றை மறுபடி உண்டாக்கிக் கொடுத்ததும், கோவலன் இறந்து கிடந்த இடத்​தை மாடுகள் ​மேய்க்கும் சிறுவர்க்கு உணவுசமைத்துக் ​கொடுத்துக் ​கேட்டுக் கண்ணகி அ​டைந்து கோவலனை மீண்டும் உயிர்ப்பித்து அவனிடம் நடந்தவற்​றை அறிந்து அவன் தான் ​கொ​லை​செய்யப் பட்ட விதத்​தையும் அதற்குக் காரணம் யார் யார் என்ப​தையும் எடுத்துக் கூறி தன்னுடன் மாதகி​யையும் இணைத்துவிட​வேண்டும் என்று கூற அது​கேட்ட கண்ணகி அவ​னை மீண்டும் கொன்றுவிடுகிறாள். பின்னர் பாண்டிய மன்னர்க​ளைக் கொன்றுவிட்டு வஞ்சிப்பத்த​னையும் அவனது ம​னைவி​யையும் கொல்கிறாள். வஞ்சிப்பத்தனது மகன்க​ளை,

    “வா​வென்று ​சொல்லி​யே ​மைந்தர்க​ளைத் தான​ழைத்து

    எழுத்தாணி ​கொண்டு ஏந்தி​ழையாள் குத்தியவள்

    சிறுகுடலும் ​பெருகுடலுஞ் ​சேர்த்து​மே தான்பிடுங்கி

    அகாசமாக​வேதான் அந்தரத்தில் விட்​டெறிந்தாள்

    காலா​லே தான் கவ்விக் ​கொண்டு கடு​கென​வே ​போச்சுதுகாண் 

                                                                    (ப., 88)

    என்று ​கொல்வதும் அவர்களது குடல்க​ளைக் கருடன் கவ்விக் கொண்டு ​செல்வதும், ​கோவலன் மாதகி அஸ்தி​யைக் க​ரைக்க காசிக்குச் ​செல்வதும் சிவபெருமான் அவள் வருமிடத்தில் பல கோவில்க​ளை எழுப்பி அவளுக்குக் காசி​யைக் காட்டி கங்​கையில் கரைக்கச் ​சொல்வதும் கண்ணகி அஸ்தி​யைக் கரைக்க அது பூக்களாக மாறி மிதந்தது. பின்னர் திரு​வொற்றியூருக்கு வந்த கண்ணகி தாகமெடுப்பதாகக் கூற கிணற்றில் இறங்கித் தண்ணீர் குடி என்று சிவனார் கூற அவளும் கிணற்றில் இறங்கித் தண்ணீர் அருந்த அப்படி​யே பெரிய கல்​லை எடுத்து அத​னைச் சிவனார் மூடிவிட பலஇடங்களிலும் கண்ணகி தோன்ற சிவனார் அவற்​​றைக் கல்​வைத்து மூடிவிட கண்ணகியின் ​கோபந் தீர்க்க அவள் ​கேட்ட பலினைக் ​கொடுக்க​வே அவள் வட்டப்புரியம்மனாக மாறி பலி வேண்டாம் எரு​மைக்கடா பலிதந்தால் இன்பமாக நான் ​கொள்​வேன் என்று கூறிவிடுகிறாள்.

    புக​ழேந்திப் புலவர் அதன் பின்னர் இக்க​தை​யைப் படித்தவர்கள் அ​டையக் கூடிய பய​னை,

    “வட்டபுரியம்மன் க​தை வ​கையுட​னே ​வையகத்தில்

    கற்றவர்கள் ​கேட்டவர்கள் கலியுகத்தில் ​சொன்னவர்ள்

    ஆல்​போல் த​ழைத்து அறுகு​போல் ​வே​ரோடி

    மூங்கில் ​போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்

    வாழி வாழி​யென்று ​சொல்லி வரமளித்தார் ஈஸ்வரனார்” (ப.,91)

    என்று சிவ​பெருமா​னே கூறுவதாக எடுத்து​ரைக்கின்றார். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறும் வரந்தருகா​தையில்,

    “​செல்லும் ​தேஎத்துக்கு உறுது​ணை ​தேடுமின்;

    மல்லன்மாஞாலத்து வாழ்வீர் இங்​னெ” (சிலம்.,வரந்தரு., 210-202)

    மறு​மை உலகத்திற்குச் ​​செல்லும் உற்ற து​ணையாகிய அறத்தி​னை​யே எப்​போதும்​தேடுங்கள் வளமிக்க இப்​பேருலகில் வாழ்கின்றவ​ரே! அதற்காவன இவ்வுலகி​லே​யே இயற்றினீராக வாழ்ந்து உயர்வீராக!” என்று எடுத்து​ரைப்பதுடன் ஒத்திருப்பது ​நோக்கத்தக்கது. புக​ழேந்திப் புலவர் ​சைவசமயத்த​தைச் சார்ந்தவர் என்பதும் இக்​கோவலன் கதை முழுவதும் சிவ​பெருமானுக்கு முதன்​மைதருவதாகவும் அமைந்துள்ளது. இதற்கு மாறாக சிலப்பதிகாரம் அனைத்துச் சமயங்கள் பற்றியும் எடுத்து​ரைத்து சமண சமயக் கொள்கைகளை ஆங்காங்கு எடுத்து​ரைத்துப் ​போவதும் ​வேறுபட்டதாக அ​மைகின்றது.

    சிலம்பின் ​செல்வாக்கால் பிற்காலத்தில் எழுந்த இந்த கதைப்பாடல் பனுவலானது பல்​வேறு வ​கையிலும் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் கதையிலிருந்து பல இடங்களில் மாறுபட்டு காலத்திற்கு ஏற்றாற்​போன்று புக​ழேந்திப் புலவரால் ​கோவலன் க​தை பு​னையப்பட்டு கற்றாருக்கு இன்பமளிப்பதாக உள்ளது.

    மு​னைவர் சி.​சேதுராமன்,

    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,

    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,

    புதுக்​கோட்​டை.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 43

    சு. கோதண்டராமன்.

    யக்ஞமும் ருதமும்

    PhotosVallalar9

     

    யக்ஞம் என்ற சொல் முதலில், தீ மூட்டிச் செய்யப்படும் வழிபாட்டை மட்டும் குறித்தது; பின்னர், நமக்கு இதற்கு முன் உதவி செய்த, அல்லது இனிமேல் உதவி செய்யக்கூடிய மேலோரிடம் காட்டப்படும் நன்றியையும் வணக்கத்தையும் குறிப்பதாக வளர்ந்தது என்று பார்த்தோம். இதன் பொருள் மேலும் வளர்ந்தது.

    மேலோரிடம் உதவி கோரி வணங்குகிறோம். தன்னைச் சரணடைந்தோருக்கு உதவி செய்ய வேண்டுவது மேலோரின் கடமை ஆகிறது. எனவே யக்ஞம் என்பது மேலோரைப் போற்றல் மட்டுமல்ல, கீழோரைக் காத்தலும் யக்ஞம் என்பதன் பொருள் ஆயிற்று.

    ருதத்தின் பல பண்புகளில் சார்ந்தோரிடம் பரிவு காட்டுவதும் ஒன்று என்று பார்த்தோம். அப்பொழுது பரிவு காட்டப்பட்டவர்களின் கடமை உதவி செய்தோரிடம் நன்றியுடனும் வணக்கத்துடனும் இருத்தல் என்று ஆகிறது. எனவே ருதம் என்பது கீழோரைக் காத்தலும் மேலோரைப் போற்றலும் என்று ஆகிறது.

    இவ்வாறு பொருள் விரிவடைந்த நிலையில் யக்ஞத்துக்கும் ருதத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது. எனவே ருதம் என்ற சொல்லுக்குச் சாயணர் பெரும்பாலான இடங்களில் யக்ஞம் என்றே பொருள் கூறுகிறார். ருதத்தின் செயல் வடிவம் தான் யக்ஞம்.

    உதவி செய்வோருக்கு வணக்கம் செலுத்துவது மட்டும் யக்ஞம் அல்ல, நம்மைச் சார்ந்தோருக்கு உதவி செய்வதும் யக்ஞமே என்பதன் அடிப்படையில் தான் பிற்கால ரிஷிகள் நாம் தினசரி செய்ய வேண்டிய கடமையாகப் பஞ்ச மஹா யக்ஞம் என்ற ஐந்து வகை யக்ஞங்களை ஏற்படுத்தினார்கள். அவற்றில் தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம் என்பவை மேலோருக்குச் செய்யப்படும் வணக்கம் ஆகும். நம்மை அண்டி வாழும் பசு முதலான பிராணிகளைக் காப்பாற்றுவது பூத யக்ஞம். அதிதிகளுக்கு உணவளித்தல் ந்ருயக்ஞம். சமூகத்தில் குழந்தைகள், முதியவர்கள், ஏழைகள் முதலான நம்மைச் சார்ந்து வாழும் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை வேதம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. யக்ஞத்தை பஞ்சயாம (ஐந்து வழிகள் உடையது) என வர்ணித்திருப்பது இதைத்தான் குறிப்பதாக இருக்க வேண்டும்.

    இந்த விரிந்த பொருளில் யக்ஞம் செய்வதுதான் வாழ்வாங்கு வாழும் முறையாகும். தஸ்யுக்கள் யக்ஞம் செய்வதில்லை. அவ்வாறு யக்ஞம் செய்யாதவர்களை மித்ரனும் வருணனும் அழிக்கிறார்கள். (10.52.4, 10.124.1)

    யக்ஞம் செய்வோரின் குலம் பெருக வேண்டும் என்றும் யக்ஞம் செய்யாதவரின் எண்ணிக்கை வர வரக் குறைய வேண்டும் என்றும் ஒரு மந்திரம் வேண்டுகிறது. (7.61.4)

    யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.

    யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.
    யக்ஞம் என்பது உலகத்தின் நாபி, மையப்புள்ளி ஆகும். (8.13.29)
    அது மனிதர்களை ரிஷி நிலைக்கு உயர்த்தும். (10.130.6)
    அது இந்திரனின் நட்பைப் பெற்றுத் தரும். (10.62.1)
    அது இந்திரனை வலுப்படுத்துகிறது.(6.34.4)
    அது மனதைத் தூண்டுகிறது. (8.92.21)
    தந்தை மகனுக்குச் செய்வது போல, உறவினர் மற்றொரு உறவினருக்குச் செய்வது போல, நண்பன் தன் நண்பனுக்குச் செய்வதைப் போல அக்னி யக்ஞம் செய்கிறார் என்று கூறுகிறது வேதம். (1.26.3)

    இதிலிருந்து யக்ஞம் என்பது அன்புடன் செய்யப்பட வேண்டிய உதவி என்பது தெரிகிறது.

    Picture Source: https://www.auro-ma-ramalingam.org/BiographicalPaintings_vallalar.php

    Share
  • நாராயண தீர்த்தர் ஆராதனை

    தஞ்சை வெ. கோபாலன்                    

    தஞ்சாவூரை அடுத்த கண்டியூரிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் அமைந்துள்ள சிற்றூர் திருப்பூந்துருத்தி. இங்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நாராயண தீர்த்தர் ஆராதனை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இசை நிகழ்ச்சிகளும், உபன்யாசங்களும், வேத பாராயணங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா 26ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்று ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆராதனை விழா குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆராதனை நடைபெறும் காலங்களில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் சமாதியில் அபிஷேக அலங்கார அர்ச்சனை முதலானவைகள் சிறப்பாக நடைபெறும். யார் இந்த நாராயண தீர்த்தர்?

    ஆந்திர நாட்டில் பிறந்து அங்கு அருந்தவங்கள் புரிந்து ஆயர்குலக் கோமான் ஸ்ரீகண்ண பிரானின் லீலைகளால் கவரப்பட்டு, பக்தி வெள்ளத்தில் திளைத்து அங்கிருந்து புறப்பட்டு தேசாந்தரம் வந்து தமிழ்நாட்டில் வரகூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் வந்து தங்கி, அங்கு கோயில் கொண்டுள்ள வெங்கடேச பெருமாளின் அருளால் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி எனும் அற்புதமான இசை வடிவத்தை உருவாக்கித் தந்து, அத்துடன் சாண்டில்ய பக்தி ஸூத்ர வியாக்யானம், ஹரி பக்தி ஸுதார்ணவம், பாரிஜாதபஹரணம் போன்ற பல நூல்களை இயற்றியவர் இவர். நீண்ட நாட்கள் வரகூரில் தங்கிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிலகாலம் வாழ்ந்தபின் அங்கேயே ஜீவசமாதி அடைந்தவர் நாராயண தீர்த்தர்.

    narayana-theerthar-2இவருடைய இயற்பெயர் தள்ளவஜுல கோவிந்த சாஸ்த்ருலு என்பது. 1650ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1745இல் ஜீவசமாதியடைந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கருகில் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு நிச்சயமாக கணிக்கப்படவில்லை யென்றாலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக பண்டிதர்கள் இவர் பிறந்த வருஷத்தை 1650 என்று கணித்திருக்கிறார்கள். 1745இல் இவர் ஜீவசமாதி அடைந்த போது 95 ஆண்டுகள் வயதாகியிருக்க வேண்டும். மிக இளம் வயதிலேயே இசையை நன்கு பயின்றதோடு, புராணங்களிலும் ஆர்வம் கொண்டு படித்திருக்கிறார். வடமொழி இலக்கியங்களில் தீவிரமாகப் பயிற்ச்சி பெற்று அவற்றில் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் இவருக்கு துறவறத்தில் பற்று மிகுந்து தன் வாழ்வை சமயம் சார்ந்த பணிகளுக்கென்று அர்ப்பணித்துக் கொண்டார்.

    இசைக் கலையில் தேர்ந்தவராக மட்டுமல்லாமல் நடனக் கலையிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய சங்கீத படைப்புக்களில் 34க்கும் மேற்பட்ட ராகங்களைக் கையாண்டிருக்கிறார். தாள வகைகளிலும் இவர் திரிபுட, ஆதி, ரூபகம், சாபு, ஜம்ப, மத்ய, விளம்ப, ஏக, அட தாளங்களைக் கையாண்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் நாட்டியத்தில் பயன்படுத்தி ஆடும் வகையில் இயற்றப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இவர் இயற்றிய நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை. இவைகளில் சில காசி இந்து சர்வகலாசாலையில் கிடைக்கின்றன. பாரிஜாதபஹரணம் எனும் நூல் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கிடைக்கிறது.

    ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில் அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது. தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி. ஜெயதேவரின் அஷ்டபதி இவருக்கு உந்துதலாக இருந்திருக்கலாம்.

    இவர் வாழ்ந்த ஊரைச் சுற்றியுள்ள நடுக்காவேரி, வரகூர், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் ஆற்றங்கரை தோப்புகளும், துறவுகளும் இவருடைய கவிதா சக்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். இவர் இப்படி இசையும், இறை பக்தியுமாக இருந்த நிலையில் இவருக்குத் தீராத வயிற்று நோய் வந்து துன்பப்படுத்தியது. தன் நோய் தீர ஏழுமலையான் அருள் நாடி அங்கு செல்ல உடலில் வலிமை தர வேண்டி இறைவனிடம் முறையிடலானார். அப்போது எழுந்த ஒரு தெய்வீக ஒலி இவர் கண்களுக்குத் தென்படும் ஒரு பன்றியைப் பின் தொடர்ந்து, அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்லப் பணித்தது. அப்படி அவர் கண்ணில் பட்ட ஒரு பன்றியை இவர் பின் தொடர அது பூபதிராஜபுரம் எனும் ஊரைச் சென்றடைந்தது. அந்த ஊர்தான் இப்போது வரகூர் எனப்படும் தலம். இவரைப் பற்றி அறிந்திருந்த வரகூர் மக்கள் இவர் தங்கள் ஊருக்கு வருவதையறிந்து மகிழ்ச்சியடைந்தனர். இவருடைய வரவுக்குப் பின் அவ்வூர் மக்கள் இவரது வழிகாட்டுதலோடு அங்கு வெங்கடேசப் பெருமானுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவித்தார். பின்னர் இவர் குடமுருட்டி ஆற்றின் கரையில் தன் வாழ்வைக் கழிக்கத் தொடங்கினார்.

    Share
  • வேரை மறந்த விழுதுகள்!

    -மணிமுத்து

    images

    சிறகடித்த பறவைகளின்
    சந்தோசத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல்
    சோகச்சிலைகளாய்!
    ஆங்காங்கே தெரிந்த தலைகள்
    ஒவ்வொருவருடைய வாழ்க்கையும்
    ஆரம்பித்த இடமோ வெவ்வேறாய் – ஆனால்
    சேர்ந்தது என்னவோ முதியோர் இல்லம் என்ற கடலில் !
    நதியாக இருந்தவர்கள் கடலில் கலந்தபின் உபயோகமற்றவர்களாய்!

    இது முன்னேறும் நாடு!
    நாட்டை முன்னேற்ற நாங்கள் – கூடவே
    எங்களையும் முன்னேற்றிக் கொண்டு – இல்லையென்றால்
    எங்களை முன்னேறிக்கொண்டு வேறொருவன் – என்பது
    பிள்ளைகளுக்கு ஒரு காரணமாய் !
    இறுதியாய் நதி, கடலை அழைத்துச்
    செல்வது – சுதந்திரமாய்
    எங்கும்  சென்றுவரும் கம்பிகளால்
    அடைக்கப்படாத முதியோர் காப்பகச் சிறைக்கு…!

    வெளிநாட்டு வேலை – இவர்கள் பாசமுள்ளவர்கள்தான்!
    ஆனால் சூழ்நிலை – விழுதுகளின்
    கையாலாகாத்தனத்திற்கு ஒரு காரணமாய் – விதியைப் போல!
    முன்னேறும் விழுதுகள் என்றாவது ஒரு நாள்
    மீண்டும் – சந்திக்க நேரும் பயணம்!
    அன்றைய விழுதுகளுக்குச் சுகமாய்த் தோன்றியவை
    இன்று வேர்களாக மாறியபின்
    சுவாசிப்பதற்கு மூச்சைக் கடன்வாங்கியபடி
    கண்ணோரம் கரித்துக் கொண்டு
    கண்ணீருடன் பிரார்த்தனை – கடவுளிடம்
    வளரும் விழுதுகளுக்காக!
    யாரும் சந்திக்க வேண்டாம் இந்தப் பயணம் என்று!

     

    Share
  • பணம் பந்தியிலே …

    கவிஞர் காவிரிமைந்தன். 

    panam panthiyilae

    உறவுகள் ஆயிரம் இருந்தபோதும் இன்பம் சூழ்கின்ற நேரத்தில்மட்டுமே பந்தம் கொள்வதும்… துன்பம் தொடர்கின்ற நிலையில் நம்மைவிட்டு விலகிச்செல்வதும் தொன்றுதொட்ட தொடர்கதைதான்! அன்பு பாசம் எல்லாம் வேடிக்கை வார்த்தைகளா … அவைகளுக்கு அர்த்தங்கள் கிடையாதா என்று நாம் தவிக்கிற நிலை அப்போது ஏற்படும்! இனம்புரியாத சூழலில் பணம்தானே இத்தனைக்கும் காரணம் என்றறியும்போது.. காதில் கேட்ட இந்தப் பாடல் அத்தனைக்கும் அர்த்தங்கள் சொன்னது!

    1961ல் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கலாம்… ஆனால் மனிதர்களுக்கு இதுபோன்ற நிரந்தரப்பாடல்களை வழங்கிய கவிஞர்களும்…. இசையமைத்த மேதைகளும்… பாடிய கலைஞர்களும் மனதில் இடம்பெற்றவர்களாகவே உலா வருகிறார்கள்.

    கவிஞர் கா.மு.ஷெரீப் … தமிழ்த்திரையில் தனது பதிவுகளால் ராஜமுத்திரையிட்டிருந்தாலும் அதிக எண்ணிக்கையைத் தொட முடியாதுபோனது நமக்குத்தான் இழப்பேதவிர அவருக்கு அல்ல. எத்தனை எதார்த்த வார்த்தைகளை எடுத்தாண்டிருக்கும் திறத்தவர்…ஒவ்வொரு வார்த்தையிலும் ஓராயிரம் பொருளிருக்கும் வண்ணம் உள்ளம் தொடுகின்றார். அதற்கேற்ற இசையினை திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் தருகின்றார். இருவரின் படைப்புகளில் உள்ள ஜீவனை உணர்ந்து தன் குரலால் மெருகேற்றிவிடுகிறார் கலைமாமணி சீர்காழி கோவிந்தராஜன்.

    ஏழ்மையில் வாழும் ஒருவன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களில் பணம் பிரதானம் வகிக்கும் வரையில் இப்பாடல் பரிதவிப்பிற்குத் தலைமை தாங்கட்டும்!!

    http://www.youtube.com/watch?v=u8fMZ9APBJs

    காணொளி: http://www.youtube.com/watch?v=u8fMZ9APBJs

     

    திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)
    இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

    Ka.Mu.Sheriff (1)ke.vi.em.சீர்காழி கோவிந்தராஜன்Panam Panthiyile

    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
    பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
    பிழைக்கும் மனிதனில்லே
    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
    பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
    பிழைக்கும் மனிதனில்லே

    ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே – அவனை
    உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
    என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
    என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்
    எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
    [பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]

    ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் – பணம்
    அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
    ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
    ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை – இதை
    எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
    [பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]

    உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்
    உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு – நாளும்
    முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
    [பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]

     

     

    Share
  • 2015 பெப்புரவரியில் தமிழரை மீண்டும் ஏமாற்றிய சிங்கள அரசு

    am

    நான்கு தமிழருக்குச் சிங்களப் படைவீரர் என்ற விகிதாசாரம். ஈழத் தமிழர் தாயகத்தின் அவல நிலை இது. தமிழர் நிலத்தில் ஒவ்வொரு 5 கிமீ. தூரத்திலும் ஒரு படை முகாம்.

    am1
    ஈழத் தமிழர் தாயகத்தில் பூநகரி, விடத்தல் தீவு, ஓமந்தை ஆகிய வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் சோதனைச் சாவடிகள். தமிழர் தம் தாயகத்தில் பயணிக்க இச் சோதனைச் சாவடிகளில் அடையாள அட்டை காட்டிப் பதிவு செய்யவேண்டும்.

    காலையும் மாலையும் தெருவோரங்களில் சைக்கிள்களில் துப்பாக்கி தாங்கிய படை வீரர் ஒருவர் பின் ஒருவராக ரோந்து செல்வர். இரவிலும் இந்த ரோந்துப் பணி தொடரும். வடக்கே காங்கேயன்துறையில் இருந்து 400 கிமீ. தெற்கே உகந்தை முருகன் கோயில் வரை, 180 கிமீ. மேற்கே மறிச்சுக்கட்டி வரை இந்த ரோந்துப் பணி.

    am2

    ஈழத்தமிழர் தாயகமெங்கும் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிங்களப் படை. 2009 மே 19இல் விடுதலைப் புலிகள் ஒருதலைப் படசமாகத் தம் ஆயுதங்களை மௌனித்தபின்னர் இன்று வரை தமிழர் தரப்பிலிருந்து அரசியல் வன்முறை நிகழ்வு ஒன்று கூட நடைபெறவில்லை என்பது உலகறிந்த உண்மை. இந்த நல்ல அமைதிச் சூழ்நிலையைக் கெடுக்கும் பின்வரும் ஆணையைக் கொழும்பு அரசு பிறப்பித்துள்ளமை கண்டிக்கத்தக்கது.

    02.02.2015இல் இலங்கை அரசு வெளியிட்ட அரசிதழில் (வர்த்தமானி) ஈழத்தமிழர் தாயகத்தில் நிலைகொண்ட ஒவ்வொரு படைவீரனும் தன்னுடைய படைசார் பணிக்கு அப்பால், குடிசார் பணியில் அதுவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார்.

    am4

    ஈழத் தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களப் படை வெளியேறவேண்டும் அதுவரை அப்படை முகாம்களுள் முடங்கவேண்டும் என்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளைப் புறந்தள்ளியது மட்டுமல்லாமல், கொடுங்கோலாட்சி நோக்குடன் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் ஆணையை, குடிசார் பணிகளைப் படைகளும் மேற்கொள்ள, காவல்துறையின் கடமைகளைப் படைவீரரும் செய்யலாம் என்ற குடியரசுத் தலைவரின் 02.02.2015 நாளிட்ட ஆணை, புதிய ஆட்சியில் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது.

    தமிழர் வாக்குகளை மைத்திரிபால சிரிசேன பெற்றதால் மகிந்த இராசபட்ச தோற்றார். தமிழர் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றவர் தமிழர் முதுகில் குற்றியுள்ளார். தமிழரை ஏமாற்றியுள்ளார்.

    காலாதிகாலமாக, தமிழர் ஒத்துழைப்புடன் ஆட்சிக்கு வருவதும் பின் தமிழர் முதுகில் குற்றுவதும் சிங்கள ஆட்சியாளர் வழமை. ஐக்கிய தேசியக் கட்சியாயெனில், இடது சாரிகள் கூட்டணியாயயெனின், அல்லது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த சுதந்திரக் கட்சி ஆட்சியாயினென் 1948க்குப்பின் இவ்வாறே தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

    1919இல் சிங்களவருடன் இணங்கி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் வாழலாம் எனக் கருதிய இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர் பொன்னம்பலம் அருணாசலம் (மைத்திரிபால சிரிசேன ஆட்சியில் அருணாசலத்தின் பூட்டன் சுவாமிநாதன் அமைச்சர்) தொடக்கம் 2015 தேர்தலில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற முழக்கத்துடன் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளித்த இரா. சம்பந்தன் வரை தொடர்ச்சியாகச் சிங்கள ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர்.

    இந்த ஏமாற்றங்களே தமிழரைப் போராட்ட விளிம்புக்குத் தள்ளின. மீண்டும் போரட்டத்தைத் தமிழர் நாடுமுன் இந்தியா தலையிடவேண்டும். 1987 இலங்கை இந்திய உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் தார்மீகக் கடமை இந்தியாவுக்கு உண்டு. அதுவே தமிழருக்கு ஆறுதலளிக்கும் முதற்படி. வடக்குக் கிழக்கும் இணைந்த தமிழர் மரபுவழித் தாயகம், அதிகாரப் பகிர்வுக்கான அரசியமைப்பின் 13ஆவது திருத்தம், 2009இல் இந்தியாவுக்கும் ஐநாவுக்கும் இராசபட்ச வழங்கிய 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு, இவற்றை நடைமுறைப் படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவது இந்திய அரசின் இன்றைய கடன்.

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் (04.02.2015)

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    சுட்டும் விழி

    திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பலவிதமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியது. எத்தனையோ கனவுகள், கற்பனைகள், பருவம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் என்று மண நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்

    இந்தியப் பெண்கள் பொதுவாகவே தங்கள் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்ற அனைத்தையும் தங்கள் மதம் சார்ந்தே கடைபிடிக்கிறார்கள். தங்கள் அன்றாட கடமைகள் அனைத்தையும் தங்கள் மதச் சடங்குகளைப் போலவே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவர்கள். சென்ற தலைமுறையின் பெண்கள் கூட, வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு, அமைதியாக பூசை, வழிபாடுகள், துளசிச் செடியை வலம் வருதல், ஓரளவிற்குப் படித்தவர்கள் என்றால் வீட்டுக் கணக்குகள், கணவனுக்குச் சின்ன உதவிகள் செய்வது போன்றவற்றில் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பழமைவாதத்தில் பாங்காக குடும்பத்திற்கு அடங்கிய மருமகளாக, குழந்தைகளின் பாசமிகு தாயாக, நல்ல கடவுள் பக்தையாக இப்படி ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையில் சுகம் கண்டவர்கள். ஆனால் உலகம் முழுவதும் இன்று கால மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்ற தலைமுறையில் வாழ்ந்த நம் பெற்றோர் அனுபவித்த ஒரு அமைதியான வாழ்க்கை இன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்களிடம் பெரிய சொத்து வசதிகளோ, அதிக செல்வமோ இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கை அன்று இல்லை. இன்றுபோல் பொருளாதார பற்றாக்குறையும், சிக்கலும் அதனால் மனநிம்மதி கெட்டு, உடல் நலக் குறைவும் ஏற்படும் அவல நிலை அன்று இல்லை. உள்ளதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றிருந்தார்கள் அவர்கள். நாகரீகம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் உணவு முறைகள், வாழும் முறைகள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விதவிதமான புதிய நோய்களையும் இலவச இணைப்புகளாக்கியுள்ளன. இதில் மிக முக்கியமானது ஆண்களைப் பாதிக்கும் ஆண்மைக் குறைவு. சுரப்பிகளின் குறைபாடு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்றைய பெரும்பாலான விவாகரத்திற்கான காரணம் ஆண்மைக் குறைவு என்று கூறப்படுகின்றன. சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்றான இந்த மணமுறிவு இன்று குறிப்பிடும் அளவிற்கு கனிசமாக அதிகரித்துள்ளது.

    images (5)

    வணிகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற, பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த அழகான இளம் பெண் அவள். இப்படித்தான் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் கண்ணிற்கு இலட்சணமான, நன்கு படித்து, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் நல்ல பணியில் உள்ள மணமகன் கிடைத்த பெருமையில் காத்திருக்கிறாள். ஊரே அதிசயிக்கும்படி விமரிசையாக திருமணமும் நடந்து, மற்ற சடங்கு, சம்பிரதாயங்களும் குறைவில்லாமல் முறைப்படி நடந்து, புகுந்த வீடு நோக்கி அடியெடுத்து வைத்த மணமகளுக்கு அடி மேல் அடி விழுந்து அறுபது நாட்களில் மீண்டும் பிறந்த வீட்டிற்கே திரும்பிவிட்டாள். புதுப்பெண்ணின் முகத்தில் இருக்க வேண்டிய பூரிப்பு ஏதும் இல்லாமல் மாறாக, சோகமாக இருக்கும் மகளின் நிலையைக் கண்டு சந்தேகம் கொண்டு துருவித் துருவி ஆராய்ந்ததில், பேரிடியாக கிடைத்த தகவல் மணமகனுக்கு ஆண்மை குறைபாடு என்பதுதான். அடுத்த அதிர்ச்சி இத்தனைப் பெரிய குறைபாடு உள்ளவன் தங்கள் மகன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதை மறைத்து திருமணம் முடித்துள்ளார்கள். என்ன நடந்தாலும் பெண் வெளியில் சொல்ல மாட்டாள் என்ற குருட்டு தைரியத்தில் இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர். இதைவிட அநியாயம் இந்த விசயம் பெண் வீட்டாருக்குத் தெரிந்த பின்பும், “அதனாலென்ன, உங்கள் மகள் இனி எங்கள் மகளாக இருந்துவிட்டுப் போகட்டும், விசயம் வெளியில் தெரிந்தால் நம் இரு குடும்பத்திற்கும் அவமானமாகிவிடும்” என்று சொல்லியதுதான். எத்தனை சுயநலமிக்கக் கூட்டம் இது என்பதை நிரூபித்துள்ளது. பின்னாட்களில் குழந்தை இல்லை என்று யாராவது கேட்டால் அப்பெண் மலடி என்று காரணம் சொல்லி தப்பிக்கவும் தயங்கமாட்டார்கள் இவர்கள். இப்படி ஒரு பெண்ணை பலிகெடாவாக்கிவிட்டு எதுவுமே நடவாதது போல வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று அவர்கள் போட்ட திட்டம் நிறைவேறாது போனாலும், இன்று அந்தப் பெண்ணின் நிலையும் மிகவும் பரிதாபமாக உள்ளது.

    சோதிடப் பொருத்தம், கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, வெளித்தோற்றம், குடும்பப் பாரம்பரியம் என்று அனைத்தையும் பார்த்தவர்கள் மணமகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தும் பார்க்கவில்லை. ‘சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில் மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதும் அதிகரித்து வருகிறது’ – இதுதான் இன்றைய நிலையாக உள்ளது. திருமணத்திற்கு முன்பு கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டால் அது பல திருமண முறிவுகளுக்கான தீர்வாக அமையக்கூடும். பிரச்சனை வந்த பின்பு அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறிபோய்விடும் என்பதற்காக வாய் மூடி மௌனம் காப்பதால் தவறிழைத்தவர்களை காப்பாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

    பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மணமகன்களின் ஆண்மையின்மை ஒரு காரணமாக சொல்லப்படுவதால் திருமணத்திற்கு ஆண்மை பரிசோதனை அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருதுவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்தியாவில் 40 சதவீதம் ஆண்களுக்கு முழு அளவிலான ஆண்மை குறைவும், 60 சதவீதம் ஆண்களுக்கு ஒரளவிற்கு ஆண்மை குறைவும் (partial impotance) இருப்பதாக இந்திய செக்ஸாலஜி மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

    ‘திருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள், அந்த வழக்குத் தொடர்பாக மட்டுமல்லாமல், வழக்குமன்றத்துக்குத் தொடர்ந்து வரும் இதே போன்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து பயன்தரத்தக்க கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.’ – கட்டுரையை முழுமையாக வாசிக்க ; திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஹரிச் சுவடி
    —————-

    crazy

    அந்தரி அண்ணா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….

    Share
  • அம்பத்தூரில் இயல் இசை நாடக விழா

    சித்திரை சிங்கர்

    asi

    asith

    asi1அம்பத்தூர் கந்தர்வகான சபா தனது 25வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த 26.01.2015 முதல் 01.02.2015 வரை சிறப்பாகக் கொண்டாடி அம்பத்தூர் நகர மக்களை மகிழ்ச்சிக் கடலில் நீந்த வைத்தது. இந்த கொண்டாட்டத்தை “இயல் இசை நாடக” விழாவாக அம்பத்தூர் ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது. முதல் 5 நாட்கள் இசை நிகழ்ச்சியாகவும் நிறைவு இரண்டு நாட்கள் அம்பத்தூர் நகர மக்களை மகிழ்விக்க இரண்டு நகைச்சுவை நாடகங்கள் இனிமையாக நடை பெற்றது. “கிரேஸி மோகன்” நாடகக் குழுவினரின் “சாக்லேட் கிருஷ்ணா” மற்றும் “மீசை ஆனாலும் மனைவி” இரண்டு நாடகங்களும் அம்பத்தூர் நகர மக்களை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு சிரிப்பு அலையில் நீந்தச் செய்தது அனைவரும் கண்கண்ட உண்மை. சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருந்த அம்பத்தூர் நகரம் சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் போன்ற ஆன்மீக / வியாபர நகரங்களுக்கு இணையாக .

    asi2

    சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருந்த அம்பத்தூர் நகரம் இப்போது சென்னை மாநகராட்சியுடன் இணைந்தது முதல் அனைவரும் விரும்பும் நகரமாக மாறி வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் இன்னும் அம்பத்தூர் நகருக்கு பெருமை சேர்க்கறது என்பது மகிழ்ச்சியான செய்தி. இத்தகு பெருமை சேர்க்கும் விதமாக அம்பத்தூர் கந்தர்வகான சபாவை சிறப்பாக செயல்பட துணையாக சபாவின் தலைவர் வள்ளல் ஜே.பி.திருநாவுக்கரசு அவர்களும் செயலாளர் DR.கே.சேஷாத்திரிநாதன் அவர்களும் இணை செயலாளர் தபேலா சுந்தர் மற்றும் பொருளாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களும் உறுதுணையாக இருந்து சாபாவை வளர்த்து வருகிறார்கள் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை. இவர்களனைவரையும் விட இந்த சபாவின் முழு வளர்ச்சிக்கு உறுதுணையாக, அம்பத்தூர் நகர முக்கிய பிரமுகர்களும், உள்ளூர் பத்திரிகைகளும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் ஆதரவு தருவது இச்சாபாவிற்கு “கந்தர்வகான சபா” என்று பெயர் சூட்டிய “காஞ்சி பெரியவாளி”ன் ஆசிர்வாதமும் துணை நிற்கிறது என்பதையும் மறக்க – மறுக்க முடியவில்லை.

    asi

    இந்த இயல் இசை நாடக விழாவில் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தைக் காண வல்லமை இதழின் ஆசிரியர் திருமதி.பவள சங்கரி அவர்கள் கிரேஸி மோகன் அவர்களின் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சிக்குரியதே.

    BY சித்திரை சிங்கர்,
    அம்பத்தூர்
    கைபேசி இலக்கம்
    9789778442
    03.02.2015

    Share
  • ‘நான் -யார்’ ரமண வழி வெண்பாவாக்கம்….

    கிரேசி மோகன்
    ‘நான் -யார்’ ரமண வழி வெண்பாவாக்கம்….
    ————————————————————————–

    images

    வாழும் உயிர்கள் விரும்புவது ஆனந்தம்,
    சூழுமா னந்தமுன் சொரூபமே, -பாழும்
    மனமில்லா தூக்கத்தில் மாசற்ற இன்பம்,
    வினவு ‘நான் யார்’தான் வழி…

    தூல உடலோடு துய்த்திடும் ஐம்புலன்கள்,
    கோலமதைக் காக்குமைம் காவலர்கள், -காலதேச
    சேதி உணர்வற்ற ஜீவனும்நீ அல்ல
    நேதிநேதி செய்தமீதி நீ….

    களவுமனம் நீங்கும் களைப்புற்று, கூட்டுக்
    களவாணி புத்தி குலையும், -உலகம்
    பழுதில் படர்ந்திடும் பாம்பென்(று) அறிவாய்;
    கழுதைக்கு கற்பூரம் காட்டு….

    மந்திர வாதிமனம் மந்திமனம், எண்ணத்தை
    உன்திறனாய்க் காட்டும் உலுத்தனவன், -தந்திரமாய்
    எண்ணத்தைப் போக்கடித்து ஏதுமனம் என்றுணர்ந்து
    பின்னத்தைப் பூரணத்தில் பார்…

    எண்ணியதால் வந்ததே ஏழுலகும், தூக்கத்தில்images (1)
    கண்ணிமைகள் மூட ககனமில்லை, -நின்னயர்வு
    சொப்பனத்தில் தோன்றிடும், ஜாக்ரத்தில் ஊன்றிடும்
    இப்புவிக்கு இல்லை இருப்பு….

    வீட்டுச் சிலந்தி வலையுமிழ்ந்து தன்னுள்ளே
    மீட்டுக்கொள் ளல்போல் மனச்சிலந்தி, -காட்டிய
    உலகை கபந்தனாய் உண்டு மறைத்து
    கலகம் புரியும் கனவு….

    தானாயும் தூங்காது, தள்ளிப் படுக்காது,
    போ!நாயே என்றாலும் போகாது, -ஆணாய்,
    அழகாய், அருவருப்பாய் அத்வைதம் போக்கிப்
    பழகும்நான் யாரென்று பார்….

    மூலம் இதயத்தில், நிர்மூலம் உதயத்தில்,
    வேலையோ செப்பிடு வித்தையாம், -தோலை
    உபாசிக்கும் ‘நானை’ , உதாசீனம் செய்ய
    சபாபதிக்(கு) ஈடாய் சமம்….

    எந்திரமாய் ‘நான்நான்’ எனவுள் ஜபித்தாலும்
    மந்திரத்தில் மாங்காய் முளைத்தலாய், -பொந்திதய
    மூலத்தில் போய்மனம் முங்கி மறைந்திடும்:
    தாளத்தை மாற்றத் தவம்……கிரேசி மோகன்….

    Share
  • குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்! (பாகம்-2)

    மீனாட்சி பாலகணேஷ்

    அன்புத் தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள் வலுக்கின்றன! உலகமே அவன் காலடியில் பணிந்து கிடக்கும் நாயகனை அவனுடைய காதல் மனையாள் இகழ்ச்சியாகப் பேசி ஏசுகின்றாள்! அவனும் சளைக்காமல் ஏதேதோ சமாதானங்களைக் கூறிய வண்ணம் இருக்கிறான்.

    (வெளிப்படையாகத் தெரிவது இச்செய்தி! ஆழ்ந்து நோக்கினால், அவனை இகழ்வது போல, இரு பொருள் படப் புகழ்ந்து உயர்த்திப் பேசி, மகிழ்ந்து தன் மனத்தினுள் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள் இந்தக் குழல்வாய் மொழியாள் எனத் தான் தெரிகின்றது! அவளுடைய காதல் தலைவனும் சளைக்காமல் மறுமொழியாகத் தன் பங்கிற்குத் தானும் அவ்வண்ணமே உரைக்கின்றான்!)

    ரசிக்கத் தகுந்த விதத்தில் புலவர் பிரான் புனைந்துள்ள கவிதை நயத்தைத் தொடர்ந்து பார்க்கலாமே!

    “பெருமை நிறைந்த இந்தத் திரிகூட மலையில் இருக்கும் பெண்ணமுதே! இதைக் கேட்டுக் கொள்!  உங்கள் அண்ணனான கண்ணன் வரகினைத் தின்று பின்பு தன் வாயால் அதை எடுத்த கதை உனக்குத் தெரியாதோ? ‘வரகு தின்று வாயால் எடுத்த கதை,’ என்பது ஒரு சொல் வழக்கு. வீணான ஒரு செயலைச் செய்துவிட்டு பின்பு துன்பப் படுதலை விளக்குகிறது. உதாரணமாக, ராகி, சோளம், போன்ற பயிர் வகைகளை அவற்றின் கதிர்களிலிருந்து உதிர்த்துப் பச்சையாகவே உண்ணலாம். அவற்றில் பால் உள்ளதால் மென்று சுவைத்து விழுங்கலாம். வரகு மட்டும் வறண்ட தானியமாதலால், அவ்வாறு விழுங்கினால் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இந்தப் பழமொழியைக் கவிஞர் சமத்காரமாகக் கையாளுகின்றார் எனத் தெரிகின்றது.

    ‘உந்தன் அண்ணனான கண்ணன், முதலிலே பிறந்தவன், உலகை விழுங்கிப் பின் தன் வாயாலே அதை எடுத்து அன்னை யசோதைக்குக் காட்டிய பண்டைக் கதை,’ எனப் பொருள் கொள்ள வேண்டும்! முதல்வர் +அ+ கு- (அந்த உலகு).

    ‘அவன் காலில் போடுகின்ற சிலம்பைக் கையில் போட்டான்; கையில் அணியும் வளையை வாய்மேல் இட்டான்’; இது பித்தன் செய்யும் செயலாகத் தெரிகிறது.  ஆனால் இதன் உட்பொருள் வேறு! ‘பண்டொரு காலத்தில் அவன் மலையைக் கையில் ஏந்தினான்- கோவர்த்தனகிரியைக் கையில் குடையாக ஏந்தினான்! சிலம்பு= மலை எனவும் ஒரு பொருள் உண்டு. வளை என்றால் கைவளை எனவும், சங்கு எனவும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். ஆகவே, கையிலணியும் வளையை- சங்கினை ( பாஞ்சசன்னியம் என்னும் சங்கினை) வாய்மேல் வைத்து ஊதினான்,’ என்றார்.

    அடுத்து, “பெண்ணொருத்திக்காய் ஒருத்தி புடவை கிழித்தான் அவனே பித்தனாமே,” என்கிறான் குற்றாலநாதன். இதுவும் ஒரு புராணக் கதையை உள்ளடக்கியது! இரணியாக்கன் எனும் அசுரன் பூமாதேவியைக் கவர்ந்து சென்று கடலின் அடியில் ஒளித்து வைத்திருந்தான். திருமால் வராக அவதாரம் எடுத்துக் அக்கடலுள் சென்று அவளை (பூமாதேவியை- உலகை) மீட்டு வந்தான். கடலைப் புலவர் நிலமடந்தையின் ஆடையாகக் கூறினார். பூமாதேவிக்காக நிலமடந்தையின் புடவையைக் கிழித்தான் என்பது கவிதை சொல்லும் நயம். ஆனால் இங்கு அது ‘புதுப்புடவை வாங்கித்தர வக்கில்லாதவன் வேறொருத்தியின் புடவையைக் கிழித்துத் தந்தான்’ எனக் குற்றாலநாதன் கூறுவது பழிப்புரையாகும்.

    அண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே கேட்டியுங்க ளண்ண னான

    கண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ டுத்தபண்டைக் கதைகே ளாயோ

    மண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை வாய்மே லிட்டான்

    பெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே பித்த னாமே (10)

    இப்போது தான் வாக்குவாதம் இக்காலத்து மொழியில் ‘சூடு’ பிடிக்கின்றது! குழல்வாய்மொழியாள் கணவரை நீர் நன்றி மறந்தவர் என ஏசுகின்றாள்!

    நீர் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை! பொருள் தொக்கி நிற்கிறது! “(நீர்) பித்தன் என்று தெரிந்த பின்னும், அதனைப் பொருட்படுத்தாமல் என் அண்ணன் உமக்கு (என்னை) பெண்ணைக் கொடுத்தான்; என் கூடப் பிறந்தவன் ஆகையால் எனது திருமணத்தில் ‘பெண் சீர்’ என அத்தனை சீரும் கொடுத்தான்; உமக்குக் கையில் அம்பாகவும் இருந்தான். ( சிவபிரான் திரிபுரம் எரித்த போது திருமால் அம்பாக இருந்தான்). அப்படிப்பட்ட அந்த மைத்துனனை ஒரு நாளும் பாராட்டாமல், எங்கள் அண்ணன் உமக்குச் செய்த நன்றி அத்தனையும் மறந்து விட்டீரே! சத்தி பீடத்தில் உறைபவரே, இது தாம் உமது வழக்கமோ? சங்கை தானோ?” எனப் பழித்துரைக்கிறாள். (சங்கை- வழக்கம்).

    பித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தா னவனோடு பிறந்த வாசிக்

    கித்தனைபெண் சீருமிட்டாங் கையம்பா வுமக்கிருந்தா னெந்த நாளும்

    மைத்துனனைப் பாராட்டி யெங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே

    சத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி நீர்மறந்த சங்கை தானே. (11)

    Kutralanatharகுற்றாலநாதன் இப்போது விட்டானா? தன் பங்கிற்கு அவனும் கூறுகிறான்! “மங்கையே! குழல்வாய்மொழியே! உங்கள் அண்ணன் சங்கைக் கையிலெடுத்துக் கொண்டு திரிந்தான். நாம் தான் அவன் மீது இரக்கம் கொண்டு ஒரு சக்கராயுதத்தை அவனுக்குக் கொடுத்தோம். அதாவது, ‘வீணர்கள் கூட்டத்தொடு வெட்டியாகத் திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான் தான் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன்,’ என்பது போலக் கூறுகிறான் குற்றாலநாதன். “சங்கம் எடுத்தே திரிந்தான்; சக்கராயுதம் கொடுத்தோம்,” என்கிறான். கையில் ஏந்திய சங்கு வெறும் ஓசையைத் தான் கிளப்பும்; அப்படிப்பட்ட வெற்றொலி எழுப்பும் சங்கை வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான் தான் பகைவரை வெல்லும் பேராற்றல் கொண்ட சக்கராயுதத்தைக் கொடுத்தேன் என்று பெருமை பேசுகிறான் என்கிறார்.

    அவன் வெறி (மயக்கம் (அ) பைத்தியம்) கொண்டநரசிம்மமாய் உருவெடுத்த போது வெளிப்பட்ட பெரும் சினத்தைத் தீர்த்து வைத்தோம் (இரண்யகசிபுவை வதைத்து பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்ம வடிவு கொண்டது கூறப்படுகிறது); இலக்குமியைப் பார்த்துத் திருமணமும் செய்து வைத்தோம். (பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வந்த இலக்குமியைத் திருமால் மணந்து கொண்டது கூறப்படுகிறது). இதெல்லாம் மறந்து விட்டனையோ? உங்கள் அண்ணன் நாம் செய்த இவற்றையெல்லாம் மறந்து போனதால்- செய்த நன்றி மறந்ததால் எங்கெல்லாமோ சென்று பாலைத் திருடி அதனால் உடலில் எங்கெல்லாமோ அடியும் படுவதற்காயிற்றே,” என்கிறான்.

    சங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு தங்கொடுத்தோம் தலைநாட் கொண்ட

    சிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய்

    மங்கைகுழல் வாய்மொழியே யுங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே

    எங்கெல்லாம் பால்திருடி யெங்கெல்லா மடிபடவு மேது வாச்சே. (12)

    அவளது அண்ணனைத் தொடர்ந்து  பழிக்கிறான் காதல் கணவன்; அவ்வளவில் அம்மையின் சினம் இன்னுமே மிகுகிறது!! “திரிகூடமலைக்கு இறைவரே! சொன்ன பேச்சை மறந்தீரோ! இவ்வளவு ஏச்சும் பேச்சும் வந்து தலையில் விழுந்தது எங்கள் அண்ணனுக்கா, உமக்கா எனச் சிறிது சிந்தித்துப் பாரும். எங்கள் அண்ணன் கண்ணன்  இடைச்சியர் காய்ச்சி வைத்திருந்த பாலைத் திருடிக் குடித்தான்; நான் ஒத்துக் கொள்கிறேன்; நீங்களோ எனில் என்ன செய்தீராம்? வேடன் கொடுத்த எச்சில் மாமிசத்தை உண்டீர் ( கண்ணப்பர் வாயில் அதுக்கிக் கொண்டு வந்து அர்ப்பணித்த மாமிசத்தை ஏற்றுக் கொண்டீர்).

    “எங்கள் அண்ணனாவது ஆய்ச்சியர் கையால் தான் அடி பட்டான். அதுவும் கருணையினால் தான் அவ்வாறு அடிபட்டான்! நீரோ  பேடியின் கையால் அல்லவோ அடி பட்டீர்!  மறந்து போயிற்றோ?” எனக் கேட்கிறாள். (பேடு; பேடி- அர்ச்சுனன்). இங்கு மகாபாரத நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறாள் நம் காவியத் தலைவி.

    பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது அர்ச்சுனன் பிருஹன்னளை எனும் பெயர் கொண்ட பேடியாக (திருநங்கையாக) இருந்தான்; அவன் பாசுபதாஸ்திரம் பெற வேண்டித் தவமிருந்த போது சிவபிரான் கிராதனாக (வேடுவனாக) வேடம் தரித்து வந்து அர்ச்சுனனுடன் வாது செய்தான் (கிரதார்ஜுனீயம்). அப்போது அர்ச்சுனன் கையால் சிவபெருமான் அடிபட்டான். இதைத்தான் ‘நீரும் தான் பேடி கையால் அடிபட்டீர்,’ என ஏளனமாகக் கூறுகிறாள்.

    வாய்ச்சதிரி கூடமலைக் கிறையவரே சொன்னமொழி மறக்க வேண்டா

    ஏச்சுவந்து சுமந்ததெங்க ளண்ணற்கோ வுமக்கோவென் றெண்ணிப் பாரீர்

    காய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில் நீர்கலந்தீர் கருணை யாமா

    லாய்ச்சியர்கை யாலடிபட்ட டானையநீர் பேடிகையா லடிபட் டீரே. (13)

    இப்போது இந்த சொற்போர் கேட்போருக்கு மிக்க சுவையடையதாகிறது. இறைவனும் இறைவியுமாகிய தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதாகக் கற்பனை செய்து, சிவன், திருமால் ஆகியோரின் திருவிளையாடல்களை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் திரிகூட ராசப்பக் கவிராயர்.

    குற்றாலநாதன் குழல்மொழியாளிடம் கூறுகிறான்:: “இவ்வாறு அடிபடுவது, ஆய்ச்சியர்கள் கறந்து  வைத்த பாலைக் களவாடிக் குடிப்பது என இருந்தவனும் அரசனாக ஆசைப்பட்டான்! எப்படித் தெரியுமா? முடித்தலையில்  ஒரு மணி முடியுமின்றிப் புரந்தான்! (தலையில் ஒரு முடியுமின்றிப் புரந்தான் எனவும் கொள்ளலாம். அதாவது மாபலி பால் மூன்று அடி மண் கேட்டுத் தானம் பெற்ற போது பிரம்மசாரியாக, மொட்டைத் தலையனாக நாட்டை இரந்து தானமாகப் பெற்றானே ஒழிய அரசனாகவா பெற்றான்?) அவன் பழகியதெல்லாம் பால் கலயங்களுடனும் பசுக்கூட்டங்களுடனும் தானே!

    இவன்  இடைக் குலத்தில் பிறந்தவனோ, எது (யாதவ குலம் அல்லது எந்தக் குலம் என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்) குலத்தில் பிறந்தவனோ? அரச குலத்தில் பிறக்கவில்லை! எந்தக் குலத்தவன் என யாரறிவார்?” (ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்பது போல, ஆசை இருக்கு அரசனாக; ஆனால் அதிர்ஷ்டமிருக்கு ஆநிரை மேய்க்க!)

    யாதவ வம்ச திலகன், யது குல திலகன் எனத் திருமாலை வருணிப்பர். இங்கு இவன் செய்கைகள் முன்பின்னாக, ஏறுமாறாக இருப்பதால் இவன் எக்குலத்தவனோ என ஐயப்படுவது போல இவ்வாறு கேட்கிறான் குற்றாலநாதன்.

    அடிப்பதுவு மாய்ச்சியர்பால் குடிப்பதுவு மிசைந்தானு மரச னாக

    முடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா னுமுனது முன்வந் தானும்

    படிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங் குழல்மொழிப்பூம் பாவை கேளாய்

    இடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற் பிறந்தானோ இவன் கண்டாயே. (14)

    மிகுந்த சினம் இப்போது பொங்கி வெடிக்கிறது குழல்வாய் மொழியாளிடம்! கூறுவாள்: “பார்த்துக் கொண்டுள்ள போதே, வேறு கன்னியருக்காக என்னைப் பிரிந்து சென்ற செருக்கோ உமக்கு? இல்லை, அவர்களுடன் கூடி மகிழ்ந்து குலாவியதால் வந்த செருக்கோ? அதனால் தான் எங்கள் அண்ணனின் குலத்தைப் பற்றிக் குற்றம் சொல்ல வந்து விட்டீர்கள் போலுள்ளது. முற்காலத்தில் இருந்த உமது பழமையான குலத்தைப் பற்றி நான் கூறலாகுமோ ஐயா? பரமரே! நீர் என் அண்ணன் குலத்தைச் சேர்ந்த என்னை தாரமாகக் கொண்ட பின்னரும் இவ்வாறு அந்தக் குலத்தைப் பற்றிப் பழித்துப் பேசுவது நியாயமா? அந்தப் பழி உமது மனையாளான எனக்கும் ஆகாதோ? குற்றாலக் கூத்தனாரே!” என்கிறாள்.

    குற்றாலம் சிவபிரானின் ஐந்து நடனசபைகளில் ஒன்றான சித்திரசபையாகும். ஆகவே அவரைக் கூத்தனாரே என விளிக்கிறாள்! மேலும், சிவபிரான் ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் பழம் பொருள். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் அவனல்லவோ? அதைத்தான் மறைமுகமாக, “உமது பழமையான குலத்தைப் பற்றி என்னாலுமே கூற இயலுமோ?” என்கிறாள். எவ்வளவு அழகான தூற்றுமறைத் துதியாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. படிக்கப் படிக்க நெஞ்சம் களி கொள்கின்றதே!

    கண்டிருந்தும் கன்னியர்க்கா வெனைப்பிரிந்த மதந்தானோ கலவித் தேற

    லுண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன் குலத்தில்மறு வுரைத்தீ ரையா

    பண்டிருந்த வுமதுகுலம் நான்சொன்னாற் பழுதாமோ பரம ரேநீர்

    கொண்டிருந்தும் குலம்பேசல் ஞாயமோ குற்றாலக் கூத்த னாரே. (15)

    இவ்வாறு குழல்மொழியாள் கூறியதும் பரமனான குற்றாலநாதன் உள்ளம் அவள் பால் உருகிக் குழைந்து விடுகிறது.

    “பூக்கள் நிறைந்த குற்றாலத் திரிகூட மலையின் சிகரத்தில் (என்னோடு கூடி) வாழும் பசுமையான கிளி போன்றவளே! நான் கூத்து நடத்திய (நடனமாடிய) பதத்தினைக் கண்டு தரிசனம் செய்ய ஏங்கி இருந்தனர் முனிவர்கள். அவர்களுடன் இந்திரன் முதலான தேவர்களும் காத்திருந்தனர். இவர்களுக்குக் கொலுவிருந்து காட்சி கொடுத்து மகிழ்விப்பதற்காகத்தான் உன்னைப் பிரிந்து நீயறியாமல் (கரந்து) சென்றோம் யாம். நீ என்னவென்றால் ஊடல் கொண்டு இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் எனக்கு எதிராக உரைத்தால் நான் என்ன செய்வேன்?” என்று தழைந்து வந்து குழைந்து கேட்கிறான்!

    கூத்திருந்த பதம்பெறவே கொதித்திருந்த முனிவர்கட் கொலுச்சே விக்கக்

    காத்திருந்த தேவர்களுங் காட்சிபெற வேண்டியுனைக் கரந்து போனோம்

    பூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த பசுங்கிளியே புலவிக் காக

    வேத்திருந்த வார்த்தையெல்லா மெதிர்த்திருந்து நீயுரைத்தா லென்செய் வோமே. (16)

    இதனைக் கேட்டபின் அவளும் வாளாவிருப்பாளா? குழல்வாய் மொழியாளின் மனமும் இப்போது பாகாய்க் கரைந்து பனியாய் உருகி விடுகிறது. “என் மீதும் பக்தி இல்லாத தேவர்களும் உண்டோ கூறுவீர்! (இதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்; உம்மைக் காணக் காத்திருந்த தேவர்கள் அனைவருக்கும் உமது சரிபாதியாகிய என்மீது பக்தி இல்லாமல் போகுமோ? ஆகவே நீவிர் எம்மையும் கூட அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என ஒரு பொருள்; மற்றது தேவரீர் என்மீது அன்பு (பற்று) வைத்திருந்தீர் ஆயின் என்னையும் தாங்களே உடன் அழைத்துச் சென்றிருக்கலாமே என்பது). என்னைப் பிரிந்து தனியாக வீதியில் போவது நீதியாகுமா தென் திசைத் திரிகூட மலையில் உறையும் செல்வரே!

    என் மேலும் தான் தவறுண்டு. அது என்ன தெரியுமா? உம் மீது முன்பே கொண்ட காதல்  எனும் குற்றம் உண்டு. (அதனால் தான் இவ்வாறு கடும் சொற்களைப் பேசி விட்டேன்). உமது சொற்களுக்கு எல்லாம் எதிர்ச் சொற்கள் கூறி விட்டேன் என்பதால் என்மேலும் குற்றம் உண்டு தான். கூறியதனைத்தும் நான் தானே! இதனால் என் தமையன் மேல் குற்றம் உண்டோ? (இல்லை என்பதாகும்). உம் முன்பு தலை வணங்கி நிற்கிறேன்,” என்கிறாள்.

    என்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ எனைப்பிரிந்து வீதி போகத்

    தென்மேவு திரிகூடச் செல்வரே நீதியுண்டோ தேவரீர் மேல்

    முன்மேவுங் குற்றமுண்டு திருவாக்குக் கெதிர்வாக்கு மொழிந்த தாலே

    தன்மேலும் குற்றமுண்டு தமையனார் மேலுமுண்டோ தாழ்த்தி தானே. (17)

    இப்போது குற்றாலநாதனின் மனம் முற்றும் குழல்வாய்மொழியாள் பால் அன்பால் கனிந்து உருகிவிடுகின்றது. அவன் கூறுகிறான்: “குழல்மொழியே; பூவின் சாயலைக் கொண்ட மாதே!” எனக் கனிவாக அவளை அழைக்கிறான்; “அண்ணனென்றும் தங்கை என்றும் நான் உங்கள் இருவரையும் பிரித்து வேறுபடுத்திப் பார்த்ததில்லை; உமையவளே! உன் தமையன் உனக்கு மிக்க அருமையானவன்; அப்படியானால், எனக்கும் அவன் அருமையானவன் ஆகின்றான் அல்லவோ? நீ என்னைப் பற்றிக் குறைகள் கூறினாய்; ஆகவே நானும் அவனைப் பற்றி நையாண்டியாக (கேலிப் பேச்சாக) சில வார்த்தைகள் சொன்னேன். வானவர்கள் என் பதம் காண வேண்டி வந்ததால் நானும் செல்லும்படி நேர்ந்தது; அதனால் தானே இத்தனை வாக்கு வாதங்கள் நிகழ்ந்து விட்டன். இதைப் பொறுத்துக் கொள் அம்மா, இமயமலையில் வாழும் பெண்மணியே!” என மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கிறான் நமது காவியத் தலைவன் குற்றாலநாதன்.

    தமையனென்று தங்கையென்று வேற்றுமையென் குழன்மொழிப்பூஞ் சாயல் மாதே

    உமையவளே தமையனுனக் கருமையென்றா னமக்குமவ னருமை யாமே

    நமையுமோரிங் குறையுரைத்தாய் நாமவனைச் சரசமாக நவின்றோம் கண்டாய்

    இமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும் பொறுத்தருள்வாய் இமய மாதே. (18)

    இப்போது குழல்வாய் மொழியாளுமே பெரிதும் நாணம் கொள்கிறாள். ‘அவசரப்பட்டு என்னென்ன பேச்சுக்கள் பேசி விட்டோம் நாம்,’ எனக் காதல் கணவனிடம் மன்னிப்பும் கேட்கிறாள்.

    “ஒப்பற்ற தேவரான நீவிர் ஆடியது திருக்கூத்தாயிற்று. (குற்றாலநாதன் சித்திரசபைக் கூத்தன் என்பது பொருள்; இவ்வாறு என்னை ஊட வைத்து வேடிக்கை பார்த்தது நீர் ஆடிய திருக் கூத்து (விளையாட்டும்) ஆயிற்று எனவும் இன்னொரு பொருள்). வலிமை மிக்கவர் (கொடியவர்கள்; அரக்கர்கள்) தவறுகள் செய்தால் நீங்கள் அதனைப் பொறுத்து செமிக்க (மன்னிக்க) மாட்டீர்கள்! ஆனால் கரிய ஆலகால நஞ்சினை விழுங்கி சீரணம் செய்து விடுவீரே நீர்” (சிவபிரான் ஆலகால விடத்தை உண்டு செரித்ததைப் பெருமையாகக் கூறுகிறாள் குழல்வாய்மொழியாள்).

    பிறகு அவனிடம் இன்னும் வேண்டுகிறாள்: “நீங்கள் எனக்குக் கொடுக்கும் படி (படி- செலவினை ஈடுசெய்யத் தரும் பணம்- பஞ்சப்படி, அகவிலைப் படி என்பது போல) போதாது. (இருநாழிப் படி நெல்லைக் கொடுத்து முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றக் கூறினீர்கள்;) எனக்கு அது போதாது பெருமானே! பொன்னும் பூணும் அணிகளும் கிடைக்கும் உபாயத்தைக் கூறினால் எனக்கும் பெருமையாக இருக்குமே,” என்கிறாள்.

    “நீர் குற்றால ஈசுவரர்; ஐசுவரியம் உடையவன் ஈசுவரன். உம்முடைய ஐசுவரியத்தை மறைத்து வைத்திருக்கும் வஞ்சகத்தை என்னிடம் சொன்னால் அது உமது பெருமையைச் சொன்னதாகாது அல்லவோ?” எனவும் கேட்கிறாள்.

    மாதேவர் நீரொருவ ராடினது கூத்தாச்சு வலியோர் செய்தால்

    தீதேதுஞ் செமியாதீர் குற்றால நஞ்சையுண்டு செமிப்பீ ரையா

    போதாது நீரளக்கு மிருநாழிப் படியெனக்குப் பொன்னும் பூணுஞ்

    சூதான வகைமுழுதுஞ் சொன்னாலென் னாற்பெருமை சொல்ல லாமோ. (19)

    கடைசியாக எல்லா ஊடல்களும் வந்து முடிவது இங்குதானே (வேண்டுவது ஒரு பரிசு- அது புடவையோ, நகையோ, ஏதோ ஒன்று) என எண்ணினாரோ என்னவோ புலவர். அண்ணல் குற்றாலநாதன் கூற்றாகக் கூறுகிறார்: “சொர்ணமலை உனக்குச் சொந்தமாயிற்று;(சிவபிரான் திரிபுரம் எரித்த போது பொன்மலை அம்மையின் கையில் வில்லாகத் தங்கியது. அதனால் தன்னதாயிற்று). வெள்ளிமலையும் ( இமயமலையும்) உனக்கே சொந்தமாயிற்று; இனி வேறு ஒரு பொருளும் சொந்தமாக வேண்டுமோ? பெண்களுடைய பேதைமைக் குணம் (அறிவற்ற செயல்)  இது போல் உண்டோ? (‘எப்போதுமே இவ்வாறு தான்’ என எதிர்மறையாக உணர்த்தினார்) எண்ணுவதற்கு அரிய பயிர்கள் விளையும் நிலங்களையும், நல்ல நகரங்களையும் நவநிதியையும் ஆராய்ந்து உனக்கே சொந்தம் என்று நான் அளிக்கிறேன், கொஞ்சு மொழி பேசும் குழல்வாய்மொழியாளே! உனக்கே தந்தேன்; இதற்கான பட்டயத்தையும் தந்தேன் பார்!” என்று அருளுகிறான் குற்றாலத்து ஐயன்.

    சொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு வெள்ளிமலை சொந்த மாயிச்

    சின்னமொரு பொருளுமுண்டோ பெண்கட்பே தமைக்குணந்தா னிதுபோ லுண்டோ

    உன்னரிய விளைநிலமு நன்னகர நவநிதியு முனக்கே யென்று

    பன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம் பட்டயமும் பாலித் தோமே. (20)

    தலைவன் தணிவித்தால் ஊடல் எளிதில் தீர்ந்து விடும் பண்பு தலைவியினுடையது ! குழல்வாய் மொழியாள் இப்பண்பைப் பெற்றவள். ஊடுவதற்கு ஒரு காரணமும் உண்மையில் இல்லையாயினும் தலைவி பொய்யான ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஊடுதல் பின் ஊடல் தீர்தல் ஆகியன பெண்மைக்குரிய பேதைமைக் குணம் என்கிறார்.

    எவ்வாறாயின் என்ன? நமக்கு ஒரு அழகான சொல் நயம், பொருள் நயம் செறிந்த சிறு இலக்கிய நூல் படித்துச் சுவைக்கக் கிட்டியதல்லவா?

    (திருக்குற்றால ஊடல் முற்றிற்று)

    Share
  • பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    dharmam enge

     

    தர்மம் எங்கே? திரைப்படத்திற்காக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாடிய பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் களவியல் கவிதையிது! இலக்கியம் காதல் கவிதை என்கிற வகையில் பொருத்தமாய் வந்துவிழும் வார்த்தைமலர்களைக் கொய்து இளமனங்களின் ஈடிலா சந்தோஷத்தை எழுத்தில்வடித்த பாடலிது!

    இலைமறைகாயாய் இருக்கிற வரையில் இன்பத்தின் எல்லைகள் விரியும்! சொல்லில் அதை சொல்ல வருகின்ற வேளை கவிஞரின் கற்பனைத்திறன் இசைக்கு வழங்கிய சொற்சித்திரமிது! பட்டுமெத்தையில் பஞ்சணையும் பாவையிடம் தன் தேவைகளைக் கொட்டி அளக்கும் கோலமும் அங்கே பெண்மை எல்லை தாண்டாமல் இன்பத்துப்பாலை அருந்தச் சொல்கிற அழகும் கண்ணதாசன் கவிதைக்கே வரும்!!

    சிவாஜிகணேசன் ஜெ.ஜெயலலிதா இணைந்து நடித்திருக்கும் இந்தக் காட்சியில் இயக்குனரின் கற்பனையும் ஒருசேர காட்சியமைப்பு கவர்ந்திழுக்கும்! பாவங்கள் காட்டும் குரல் டி.எம்.செளந்திரராஜனுக்கு கைவந்த கலையாகிடும்போது.. உடன் இணைந்து பாடுகிற பி.சுசீலா .. பல்லவியைத் தழுவிநிற்கும் சரணம்போல் தன் குரலால் ஈர்க்கிறார்!

    ஆயிரமாயிரம் பாடல்கள் இந்த வகையில் திரையிசையில் மிதந்துகிடந்தாலும் நம் உள்ளம் தொடும் பாடல்களில் ஒன்றாய் இதோ.. ஆசையின் அலைகள் ஓடிவரும் அழகில் நாம் கொள்ளைபோவது நிச்சயம்!!

    பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே..

    http://youtu.be/ki0S3FbeKcQ

    காணொளி: http://youtu.be/ki0S3FbeKcQ

     

    படம்: தர்மம் எங்கே?
    பாடல்: கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா

    msv-and-kannadasantms ps

    பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன்
    பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே!
    அள்ளியிறைக்க வந்த கள்ள நகையே.. உன்
    அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே!

    முத்துக்களை சிந்திச் சிந்தி புன்னகை என்றாய்!
    மூடிவைத்த தேன்குடத்தை அங்கங்கள் என்றாய்!
    பத்துத்தரம் தொட்டுத் தொட்டு பாவணை செய்தாய்!
    பங்குகொள்ளுமுன் என்னை சோதனை செய்தாய்!

    தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
    தென்றலுக்குப் பாதையின்றி என்னைத் தழுவு!
    உள்ளமட்டும் இன்பமெல்லாம் அள்ளிவழங்கு!
    உச்சிமுதல் பாதம்வரை உந்தன் விருந்து!!

    Share
  • நமது அண்ணா!

    -மேகலா இராமமூர்த்தி

    anna

     

     

     

     

     

     

     

     

     

    உருவமது சிறிதாக இருந்த போதும்
      உள்ளத்தால் உயர்ந்தவர்தான் நமது அண்ணா!
    அருவியாய்க் கொட்டுகின்ற அவரின் பேச்சு
      அருந்திமகிழ்ந் திடத்திகட்டா அமுத ஊற்று!

    கருவமே சிறிதுமில்லா எளிமை யோடுக்
      கருமமே கண்ணாகக் கொண்ட வாழ்வு!
    அரசியல் துறையினிலே இருந்தும் கூட
      அவ்வியம் அறியாத குழந்தை அண்ணா!

    அன்பாய்த் தான் வளர்த்த திமுகவின்
      அவல நிலையை இன்று கண்டிருந்தால்
    ’என்ன கொடுமையிது!’ என்றே ஏங்கி
      இடிந்து போயிருப்பார் இதயம் சோர்ந்து!

    ஏழையின் சிரிப்பினிலே இறையைக் கண்ட
      ஏந்தலாய்த் திகழ்ந்தவர்நம் அன்பு அண்ணா!
    தாழையின் மலர்போலே மணத்தைச் சிந்தி
      என்றுமே நிலைத்திருப்பார் அமர ராக!

    Share