-மணிமுத்து

images

சிறகடித்த பறவைகளின்
சந்தோசத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல்
சோகச்சிலைகளாய்!
ஆங்காங்கே தெரிந்த தலைகள்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும்
ஆரம்பித்த இடமோ வெவ்வேறாய் – ஆனால்
சேர்ந்தது என்னவோ முதியோர் இல்லம் என்ற கடலில் !
நதியாக இருந்தவர்கள் கடலில் கலந்தபின் உபயோகமற்றவர்களாய்!

இது முன்னேறும் நாடு!
நாட்டை முன்னேற்ற நாங்கள் – கூடவே
எங்களையும் முன்னேற்றிக் கொண்டு – இல்லையென்றால்
எங்களை முன்னேறிக்கொண்டு வேறொருவன் – என்பது
பிள்ளைகளுக்கு ஒரு காரணமாய் !
இறுதியாய் நதி, கடலை அழைத்துச்
செல்வது – சுதந்திரமாய்
எங்கும்  சென்றுவரும் கம்பிகளால்
அடைக்கப்படாத முதியோர் காப்பகச் சிறைக்கு…!

வெளிநாட்டு வேலை – இவர்கள் பாசமுள்ளவர்கள்தான்!
ஆனால் சூழ்நிலை – விழுதுகளின்
கையாலாகாத்தனத்திற்கு ஒரு காரணமாய் – விதியைப் போல!
முன்னேறும் விழுதுகள் என்றாவது ஒரு நாள்
மீண்டும் – சந்திக்க நேரும் பயணம்!
அன்றைய விழுதுகளுக்குச் சுகமாய்த் தோன்றியவை
இன்று வேர்களாக மாறியபின்
சுவாசிப்பதற்கு மூச்சைக் கடன்வாங்கியபடி
கண்ணோரம் கரித்துக் கொண்டு
கண்ணீருடன் பிரார்த்தனை – கடவுளிடம்
வளரும் விழுதுகளுக்காக!
யாரும் சந்திக்க வேண்டாம் இந்தப் பயணம் என்று!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வேரை மறந்த விழுதுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *