Blog

  • மீனாம்பா பாட்டி போயிட்டா…

    -ஒரு அரிசோனன்

    “மீனாம்பா பாட்டி காலம் ஆகிவிட்டது. அவ போய்ச் சேந்துட்டா. நீ ஒரு முழுக்குப் போட்டுடு.” என்ற என் அம்மாவின் கார்டைப் பார்த்ததும் என் கண்கள் பனித்தன. மேலே எழுதிய எழுத்துக்கள் தெரியாமல் மறைந்தன. மீனாம்பா பாட்டிதான் எவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவள்! உறவுக்குச் செய்து செய்தே ஓய்ந்து உருக்குலைந்து போனவள் அவள்! என் தொண்டை அடைத்தது. என் நினைவு பின்னோக்கிச் சென்றது…

    எனக்கு நினைவு தெரிந்து பார்த்ததில் இருந்து, கடைசித் தடவை பார்த்துவிட்டு வந்ததுவரை மீனாம்பா பாட்டி மாறவே இல்லை. அதே மழித்த மொட்டைத் தலை, உடம்பைச் சுற்றிய அழுக்கேறிய, ஆனால், தண்ணீரில் நனைத்துத் துவைத்துக் கட்டிய பழுப்பேறிய வெள்ளைப் புடவை. பறக்கப் பறக்கப் பார்க்கும் பார்வை. நடக்கும்போது இங்குமங்குமாக உதறும் கைகள். இருபது ஆண்டுகளாக மாறாத வடிவம்…

    “கண்ணா, இதுதான் என் அக்கா. உன் பெரியபாட்டி. நமஸ்காரம் பண்ணிக்கோ.” என்று என் தாய்வழிப்பாட்டி ஆறு வயதில் மீனாம்பா பாட்டியை அறிமுகப் படுத்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அவர்களை வணங்கி எழுந்ததும் என் கண்ணில் பட்டது அவர்களுடைய மழித்த தலைதான்.

    meenapatti1முதன்முதலாக ஒரு அந்தணக் கைம்பெண்ணைப் பார்க்கிறேன் நான். அவர்கள் கைம்பெண் என்று அறியும் அறிவு கூட எனக்கு இல்லை. எனக்குள் தோன்றியது இதுதான். ஏன் இவர்கள் மொட்டை அடித்து இருக்கிறார்கள்?

    “பெரியபாட்டி, நீ எந்த கோவில்லே மொட்டை போட்டே? என்ன வேண்டுதல்?” என்று கேட்டதும், என் பாட்டி, “பெரியவாளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது!” என்று கண்டித்ததும் நினைவுக்கு வருகிறது.

    “ஒரு அல்பாயுசுல போன பாவிக்காகத்தான்..” என்று மீனாம்பா பாட்டி அலுத்துக்கொண்டதும் என் காதில் ஒலிக்கிறது.

    “அல்பாயுசுல போன பாவி யாரு?” என்று நான் குழந்தைத்தனமாகக் கேட்டததற்கு, “என் ஆம்படையான் பாவிதான். நான் பெரியவள் ஆகறதுக்குள்ளையே குளத்துலே விழுந்து போய்ச் சேந்துட்டான். என் மஞ்சள் குங்குமம், தலை மயிர் எல்லாத்தையும் எடுத்துண்டு, மொட்டச்சியா விட்டுட்டுப் போயிட்டான்.” என்று மீனாம்பா பாட்டி வரட்டுச் சிரிப்புடன் கூறியதும், என் பாட்டி, “அக்கா. ஒரு சின்னக் குழந்தை கிட்ட என்னத்தைதான் சொல்றதுன்னு இல்லையா?” என்று கடிந்துகொண்டதும் கேட்கிறது.

    அப்பொழுது அதற்குப் பொருள் எனக்குப் புரியவில்லை. புரியும் வயது வந்தவுடன் நான் திடுக்கிட்டுப் போனேன். அறியா வயதில் திருமணம். ஒரே ஆண்டில் குளத்தில் நீந்திக்குளிக்கச் சென்ற கணவன் மூழ்கி இறந்துபோனான். பருவம் வந்ததும், சுமங்கலிகளை அழைத்து, மஞ்சள் நீராட்டி, பட்டுப் புத்தாடை உடுத்தச் செய்து சீராட்டவில்லை. மகிழ்ச்சியாகச் சிரித்து, பாட்டுப் பாடி, நல்வாழ்த்துக்கூறி, வாழ்த்திப் புகழவில்லை.

    மாறாக, நாவிதரை வீட்டுக்கு அழைத்து, தலைமயிரை மழிக்கச் செய்து, அமங்கலிகளைக் கொண்டு, வெள்ளை ஆடை உடுத்திவிட்டு, ஓவென்று அழுதார்கள். “பாவி மகளே, இப்படி ஆய் விட்டியே! இனி யாராத்தில் இடிசொறு திங்கப்போறியோ!” என்று சுமங்கலியான அவளது அம்மா கதறினார்களாம்.

    தன் மகளை விதவைக்கோலத்தில் பார்த்து நெஞ்சு உடைந்த என் பாட்டியின் அப்பா ஒரே ஆண்டில் போய்ச் சேர்ந்தாராம். தாயும் மகளும் ஒரே மாதிரி மழித்த தலையுடனும், வெள்ளை உடையுடனும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பார்களாம்.

    கைம்பெண்களான தாயும், மகளும், என் பாட்டியின் அண்ணா வீட்டில் காலத்தைக் கழிப்பார்களாம்.

    எந்த உறவினர் வீட்டில் நல்ல நாள்களில் என்ன வேலை என்றாலும், தாயும் மகளும் சேர்ந்து செல்வார்களாம். வேலையைச் செய்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருப்பார்களாம்.

    என் தாத்தா வாங்கிய ஒரு வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு வேலை செய்வதற்காக வந்தபோதுதான் மீனாம்பா பாட்டியை முதன்முதலாகப் பார்த்தேன்.

    மங்குமங்கென்று வேலை பார்த்த மீனாம்பா பாட்டியிடம் ஒரு கெட்ட குணம்meenapatti2 உண்டு. மடி விழுப்பு ரொம்பப் பார்ப்பாள். என் பாட்டி, பிரம்மச்சாரிக்கு விழுப்புக் கிடையாது என்று எப்போதோ சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே மீனாம்பா பாட்டியைத் தொடுவேன்.

    “பழிகாரா, ஏண்டா விழுப்போட என்மேல விழறே! என் மடி போச்சேடா!” என்று கத்துவாள். அதுகூட எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

    “பெரியபாட்டி! உன் மடி உன்கிட்டதான் இருக்கு. அது எங்கேயும் போகலை.” என்று சீண்டுவேன்.

    என்னை அடிக்கவென்று ஒரு சின்னக் குச்சியை வைத்திருப்பாள். அதை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன். குச்சியைத் தேடுவாள்.

    “என்ன பெரியபாட்டி தேடறே?” என்று கேட்டால், “முதுகைச் சொறிஞ்சுக்க ஒரு குச்சி வச்சிருந்தேன். அதக் காணம். “ என்று இழுப்பாள்.

    “இதுதானா அது?” என்று ஒன்றும் தெரியாதவன் போல அந்தக் குச்சியை எடுத்துக் காட்டுவேன்.

    “ஆமாம். கொடு.” என்பாள்.

    “வெவ்வெவ்வே! என்னை அடிக்கத்தானே வச்சிருக்கே! தரமாட்டேன். வேணும்னா உன் கையாலே அடி.” என்று கிண்டல் செய்வேன் – மடி, விழுப்பு பார்க்கும் மீனாம்பா பாட்டி என்மேல் கை வைக்கமாட்டாள் என்ற தைரியம்.

    “அநியாய சாமர்த்தியம்டா நோக்கு. என் ராஜாவாச்சே! நெஜமாவே முதுகை அரிக்கறதுடா. கொடுத்துடுடா கண்ணா!” என்று தாஜா செய்வாள்.

    “நான் வேணும்னா சொறிஞ்சு விடறேன். பாட்டிக்கும் நான்தான் சொறிஞ்சு விடுவேன்.” என்று மிஞ்சுவேன்.

    “பரவாயில்லே. நான் ஸ்நானம் பண்ணத்தான் போறேன். சொறிஞ்சுவிடு.” என்று முதுகைக் காட்டுவாள்.

    “பெரியபாட்டி, ஏன் நீ ரவிக்கையே போடறதில்லை?” என்று என் சந்தேகத்தை மெல்ல அவளிடம் கேட்டேன்.

    “சின்ன வயசிலேயே என் தலையைச் செரைச்சாச்சு. ரவிக்கை ஒண்ணுதான் பாக்கி. இனிமே என் அழகிலே மயங்கி, எந்த ராஜகுமாரன் வரப்போறான்!” என்று வரட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்ப்பாள்.

    “பெரியபாட்டி, நீ சின்ன வயசிலே எப்படி இருப்பே? அழகா இருப்பியா? எல்லோர் போட்டோவும் இருக்கே, உன் போட்டோ மட்டும் எங்கேயும் காணோமே?” என்று கேட்டேன்.

    “ஆமா, ஆமா, இனிமே என்னைப் போட்டோ எடுத்து, பெண்பாக்கக் கொடுத்தனுப்பணுமா? மொட்டச்சிக்கு அழகு ஒண்ணுதான் கொறையாக்கும்?” என்று அலுத்துக் கொள்வாள். எனக்கு மீனாம்பா பாட்டி ஏன் எப்படிப் பேசுகிறாள் என்றே புரியாது.

    என் பாட்டியிடம் கேட்டால், “உனக்கு வாய் ரொம்பப் பெருகிப் போச்சு. பெரியவாகிட்ட என்ன பேசறதுன்னே தெரியலை.” என்று என்னையே திட்டுவாள்.

    நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரில் இருந்த என் மாமாத்தாத்தா, அதாவது மீனாம்பா பாட்டியின் தம்பியின் வீட்டுக்கு ஒரு தடவை விசெஷத்திற்காகச் சென்றிருந்தேன்.

    பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றபோது என் மாமாத்தாத்தா இரைந்துகொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

    “இப்படியா ஈரம் சொட்டச் சொட்டத் துணியை உணத்தறது? நீ ஒரு தரித்திரம் வந்து சேர்ந்தது போறாதா? இன்னும் வேற வரணுமா?” என்று மீனாம்பா பாட்டியை வைது கொண்டிருந்தார்.

    “வயசாச்சுடா. கையிலே தெம்பு இல்லே. நன்னா இறுக்கிப் பிழியா முடியலேடா. எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா? இல்லே நாட்டுப்பொண்ணுதான் இருக்காளா, கொஞ்சம் பிழிஞ்சு உணத்துடின்னு சொல்லறதுக்கு. கட்டை வேகறவரைக்கும் நானேதானே செய்துக்கணும்.” மீனாம்பா பாட்டியின் குரல் தழுதழுப்பது எனக்குக் கேட்டது. அது என் மனதையே அறுத்தது.

    “வாடா கண்ணா! எப்படா வந்தே? ஆத்துலே அம்மா, அப்பா, பாட்டி தாத்தா எல்லோரும் சௌக்யமா?” என்று என் மாமாத்தாத்தா கேட்டதற்கு பதிலே சொல்லாமல், கூடத்தில் ஈரம் சொட்டச் சொட்டத் தொங்கிக் கொண்டிருந்த மீனாம்பா பாட்டியின் வெள்ளைப் புடவையை எடுத்து, புழக்கடையில் நன்றாகப் பிழிந்து விட்டு கொடியில் உலர்த்தினேன். என் பையைத் திறந்து, என் துண்டை எடுத்து, கீழே சிந்தியிருந்த தண்ணீரைத் துடைத்தேன்.

    “இப்படி அதிகப்பிரங்கம் பண்ணி, அவ மனசை என் கெடுக்கறே! பாப்பா (என் அம்மா) உனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து, கெடுத்துத் தொலைச்சுட்டா!” என்று அலுத்துக் கொண்டார், என் மாமாத்தாத்தா. முரடன் என்று எனக்குப் பெயர் இருந்ததால் மேலே ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டார்.

    யாரோ கேவும் குரல் கேட்டது. சென்று பார்த்தால் மூலையில் அமர்ந்துகொண்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் மீனாம்பா பாட்டி.

    என்னைக்கண்டதும் புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழ முயற்சித்தாள்.

    “வேண்டாம் பெரியபாட்டி. மாமாத்தாத்தாவுக்கு ஏதோ கோபம். அதை உன்மேல காட்டிட்டா. நீ ஏன் அதுக்கு அழறே?” என்று சமாதானம் சொன்னேன்.

    “இல்லேடா கண்ணா. சாமி என் தம்பிதானே. அவன் திட்டினா எனக்கு காச்சா தொங்கப்போறது? அது இல்லேடா?” என்று விம்மினாள்.

    “பின்னே!”

    “எனக்குப் பிள்ளை இல்லையே. அவன் இருந்திருந்தா இப்படி இடிசோறு திங்கவேண்டி இருக்காதேன்னு நிறைய தடவை நெனப்பேன். சாமி கத்தினபோது நீ ஒண்ணுமே பேசாம, என் பொடவையப் பிழிஞ்சு ஒணத்தினியே, எனக்கு மனசு நெறஞ்சு போச்சுடா. அதுதான் தன்னையும் அறியாம அழுகை வந்துடுத்து. பிள்ளை இல்லேன்னு இனி மனசு வருத்தப்பட மாட்டேண்டா. பகவானாப் பாத்து நான் பிள்ளையா குட்டியான்னபோது, உன்னை அனுப்பிவச்சு என் மனசுல இருந்த அந்தக் கொறையை நீக்கினானே, அதுவே போறும். நீ தீர்க்காயுசா இருப்பே.” கையை என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தாள்.

    அன்று மாலை நான் நான்கு பார் சோப்புகளைத் துண்டம் செய்து, அவளிடம் கொடுத்தபோது, “ஏன்?” என்பதுபோல என்னைப் பார்த்தாள்.

    “பெரியபாட்டி. உன் புடவைலே அழுக்கு ஒட்டிண்டு இல்லே. அழுக்குலேதான் உன் புடவை ஒட்டிண்டு இருக்கு.   அதுக்குத்தான் இந்த சோப்புக் கட்டிங்க. வெறுன்ன தண்ணீல நனைச்சு நனைச்சு ஒணத்தவேண்டாம். சோப்புப் போட்டே துவை.”

    மீனாம்பா பாட்டி ஒன்றுமே பேசவில்லை. நன்றியுடன் சோப்புக் கட்டிகளை வாங்கி வைத்துக்கொண்டாள்.

    நானும் வேறூரில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இதற்குள் மீனாம்பா பாட்டியை பத்துப் பன்னிரண்டு தடவை பார்த்திருப்பேன். சில சமயம் சோப்பு வாங்கித்தா, தலைவலித் தைலம் வாங்கித்தா என்று கேட்பாள். வாங்கிக் கொடுப்பேன்.

    ஒருதடவை விடுமுறையில் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

    “மாமா குடும்பத்துடன் மெட்ராஸ் போய்ட்டா!” என்றாள் என் அம்மா.

    “என்ன விஷயமாம்?”

    “எவ்வளவு நாள்தான் உழைச்சுக்கொட்ட முடியும்? வயசாயிடுத்து இல்லையா? மெட்ராஸ்ல இருக்கற மூத்த பிள்ளை கூப்பிட்டான். அதுதான் போயிட்டா!”

    “பெரிய பாட்டியையும் மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிட்டாரா?”

    “நன்னாயிருக்கே, நீ சொல்றது! கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை. மொசைக் தரைன்னு தெரியாம ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா. அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப் படுமா? அதுதான்…” இழுத்தாள் அம்மா.

    புருவங்களை உயர்த்தினேன்.

    “என்னடா அப்படிப் பாக்கறே?”

    “மீனாம்பா பாட்டி எங்கேதான் இருக்கா?”

    “அதுதான் வயசானவாளுக்கு, பிள்ளை குட்டி இல்லாதவாளுக்கு மாசம் முப்பது ரூபா கவர்மின்ட்டுலே கொடுக்கறாளாமே, அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டுத்தான் மாமா போயிருக்கா. பக்கத்துக் கிராமத்திலே, உன் சின்னப்பாட்டி இருக்காளே, அங்கேதான் இருக்கா.”

    “சின்னப்பாட்டியா மீனாம்பா பாட்டியை வச்சுண்டு இருக்கா?”

    “இல்லேடா. மீனாம்பா பாட்டி தனியாத்தான் இருக்கா.”

    “எப்படிம்மா இது? உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் உங்க எல்லோருக்கும்தானே உழைச்சுக்கொட்டினா! இப்ப ஒங்க யாராலையும் அவளைப் பார்த்துக்க முடியலையா?” பொருமினேன் நான்.

    “உனக்கு ஒண்ணும் தெரியாது. தெம்பு இருக்கவரைக்கும் மாமா குடும்பத்துக்குத்தான் உழைச்சா. அவரே அவளை விட்டுட்டுப் போயிட்டா. நமக்கு உழைச்சானு சொல்றியே. நாம சும்மாவா விட்டோம்? அப்பப்ப ஏதாவது வாங்கித்தானே கொடுத்தோம்!”

    “கூலி கொடுத்தோம்னு சொல்றியாம்மா?”

    “ஒனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு. இனிமே ஒன்னோட என்னால பேசமுடியாது.” என்று போய்விட்டாள் அம்மா.

    ஏதோ ஒன்று உந்தவே, நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீனாம்பா பாட்டி இருக்கும் கிராமத்திற்குச் சென்றேன். என் வயதுள்ள, என் ஒன்றுவிட்ட மாமா ராஜுதான் எட்டடிக் குச்சான ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.

    “பெரிம்மா, பெரிம்மா!” என்று சொல்லிக்கொண்டே ஆடும் கதவைத் திறந்தான்.

    “ஆரு வந்திருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டவாறே, தரையில், ஒரு பலகையைத் தலைக்கு வைத்திருந்த மீனாம்பா பாட்டி கையை ஊன்றிக்கொண்டு எழுந்திருந்தாள்.

    “நான்தான் பெரியபாட்டி, கண்ணன் வந்திருக்கேன்..” என்று உரத்த குரலில் சொன்னேன்.

    கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்த மீனாம்பா பாட்டி இனம் கண்டுகொண்டாள்.

    “வாடாப்பா, கண்ணா, வா.” என்று அன்புடன் சொன்ன அவள் பொங்கிப்பொங்கி அழுதாள்.

    “பாத்தியாடா என் நெலமைய? அநாதப் பொணமா இருக்கேண்டா. உடம்புலே தெம்பு இருந்தபோது என் ஒழைப்பு எல்லோருக்கும் தேவையா இருந்துது. மீனா, வாடீம்மா, நீ இல்லாம ஆத்திலே ஒரு விசேஷம் நடக்க முடியுமா அப்படீம்பா. இப்போ – நான்தான் சக்கையாப் போயிட்டேனே. அதுதான் தூக்கிப் போட்டுட்டா.”

    நான் என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்துவேன்?

    “பெரியபாட்டி, நீ கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. நான் படிச்சு முடிச்சதும் உடனே வேலையைப் பார்த்துப்பேன். நான் உன்னைக் கொண்டு என்னோட வச்சுக்கறேன். நான் சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கறேன். என் பொண்டாட்டி உன்னை நன்னாப் பார்த்துப்பா.” உணர்ச்சி வேகத்தில் என்னிடமிருந்து வார்த்தைகள் பெருக்கெடுத்தன.

    “இது போதும்டா, கண்ணா. நீ நல்ல குணவதியான பொண்ணைக் கல்யாணம் செஞ்சுண்டு நூறு வருஷம் நன்னா இருப்பே. ஒன் பொண்டாட்டி தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிண்டு நூறு வருஷம் சுமங்கலியா இருப்பா. ஒன் புள்ளை, குட்டிகளெல்லாம் ஒன்னை நன்னாப் பாத்துக்குவா.

    “எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா. இந்தக் கட்டை கண்ணை மூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன். இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா. எம் மனசு நெறஞ்சு போச்சுடா. எப்ப பகவன் கூப்படறானோ அப்பா நிம்மதியா போய்ச் சேருவேன். என்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள்.

    “கண்ணா, என்னால பிழிஞ்சு ஒணத்தவே முடியலடா. இப்ப நார்ப்பட்டுன்னு ஒண்ணு செய்யறாளாமேடா. அதைப் பிழியவே வேண்டாமாண்டா. வெறுன்ன நனைச்சுப்போட்டாலே ஒணந்து போகுமாமே. எனக்கு ரெண்டு நார்ப்பட்டுப் பொடவை வாங்கித் தறியாடா?”

    “கட்டாயம், பெரிய பாட்டி. கட்டாயம். நான் ஊருக்குப் போயி வாங்கி அனுப்பறேன்.”

    என் கையில் இருந்த ஐம்பது ரூபாயை அவளிடம் கொடுத்து, என் மாமன் ராஜுவிடம் அவளுக்கு உதவி செய்யுமாறு சொல்லிவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

    முதல் வேலையாக இரண்டு வெள்ளை நார்ப்பட்டுப் புடவைகளை வாங்கி என் அம்மாவிடம் கொடுத்து, மீனாம்பா பாட்டியிடம் சேர்த்துவிடச் சொல்லிவிட்டுக் கல்லூரி செல்ல ரயில் ஏறினேன்.

    அதுதான் நான் மீனாம்பா பாட்டியைக் கடைசியாகப் பார்த்தது. இரண்டு மாதங்கள்கூட ஆகி இருக்காது.

    கண்கள் உலர்ந்து, என் அம்மா மேலே எழுதியிருந்த வரிகள் தெளிவாகின.

    “நீ கொடுத்துவிட்டுப் போன நார்ப்பட்டுப் புடவைகளை சார்த்தித்தான், மீனாம்பா பாட்டியைத் தகனம் செய்தார்கள்.”

    Share
  • திருவள்ளுவர்

    -நாகினி

    குறள் வெண்பாவில்
    மருள் நீக்கிடும்                                                         thiruvalluvar
    அருள் பாக்களை
    முப்பாலில் இலக்கியச்சுவை
    குன்றா நயமோடு வழங்கியோன்…!

    கல்வி கேள்விகளில்
    கருத்தாய்ச் சிறந்து
    கண்ணியமுடன் அரசு
    கடமை ஆற்றும் பண்பைக்
    கல்லில் எழுத்தெனப் பதித்தோன்…!

    களவு கற்பு எனத்
    திருமணவாழ்வுக்கு முன் பின்
    காதல் உணர்வைத்
    தரமான சொற்கோ(ர்)வையால்
    களங்கமற்ற பாமாலையாக்கிக்
    கபடறியா உண்மைக் காதலைத்
    தரணிக்கு உணர்த்தியோன்…!

    பாரில் மனிதம் நிலைக்க,
    பகுத்தறிவு மனிதர் நற்பண்புகளைப்
    பாங்குடன் கடைப்பிடிக்கவே
    பக்குவமாய் நல்நெறிகளைப்
    பசுமரத்தாணியென அறைந்தோன் …!

    அறம்பொருள்இன்பம் எனும் முப்பாலை
    133 அதிகாரம் என வகுத்து
    ஒவ்வொன்றிலும் 10 பாக்கள் கூட்டி
    1330 குறட்பாக்களாகப் பெருக்கெடுத்து
    உலகோர் மனதில் குடிகொண்டுள்ள
    பெருந்தகை திருவள்ளுவர் பதம் நினைந்து
    நாளும் திருக்குறள் படித்து
    நலமாய் வாழ்வில் உயர்ந்திடு தம்பி…!!

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 23

    சு.கோதண்டராமன்.

    அச்வின்கள்

    Ashvin-Twins

    அச்வின்கள் எனப்படுவோர் இருவர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயரோ தனித் தன்மையோ கிடையாது. ஒரு பறவையின் இரு இறக்கைகள் போல இருப்பவர்கள் என்று சொல்லப்படும் அவர்கள், எப்பொழுதும் சேர்த்தே பேசப்படுகிறார்கள். இவர்கள் வேறு வேறு வகையில் பிறந்தவர்கள் என்கிறது ரிக் (5.73.4). பிறந்தது வேறு வேறு வகையானாலும் செயல் திறமையினால் ஒன்றானவர்கள் என அறியலாம்.

    இவர்கள் யார்? நிருக்தக்காரர் கூறுவது போல  விண்ணும் மண்ணுமா, இரவும் பகலுமா, சூரிய சந்திரர்களா, இதிஹாஸக் காரர்கள் கூறுவது போல, இரண்டு நேர்மையான இளவரசர்களா, சாயணர் சொல்வது போல இந்திரன் அக்னியா – ரிக் மந்திரங்களிலிருந்து இதை அறிய முடியவில்லை.

    இவர்களுக்கு நாஸத்யா என்ற பெயரும் உண்டு. இதற்கு ந அஸத்யா என்று பிரித்து பொய்யில்லாதவர்கள் என்று ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது. நாஸத்ய என்பது நாஸிகா ப்ரபவ- (மூக்கில் தோன்றியவர்கள்), அதாவது மூச்சுக் காற்று என்ற கருத்தும் உண்டு (8.5.23க்கு சாயணர் உரை).

    அஹர்விதா (பகலை அறிந்தவர்கள்) என்று போற்றப்படும் இவர்களுடைய தேரில் சூர்யா (சூரியனின் மகள்) விரும்பி ஏறுகிறாள் என்றும், இவர்கள் உஷஸுடனும் சூர்யனுடனும் சேர்ந்து வருபவர்கள் என்றும் கூறப்படுவதால் இவர்கள் ஒளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது அறியப்படுகிறது.  இவர்களது செயல் திறமைகளைப் பார்த்தால் இதிகாசக்காரர்கள் சொல்வது போல, பரோபகார சிந்தையுள்ள, திறமையுள்ள இரு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.

    மற்ற தேவர்களைப் போல அச்வின்களும் நரா (மனிதர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். அச்வின்களுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனிதருடன் பழமையான தோழமை கொண்டவர்கள் என்றும் மனிதருடன் பொதுவான மூதாதையர் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மனிதராக இருந்து  தங்கள் அருஞ் செயல்களால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (4.44.2).

    அச்வின்களின் சாதனைகள் பல. அவர்களால் உதவப்பட்டோரின் பட்டியல் நீளமானது, இது ஆங்காங்குப் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தேவருக்கும் உதவி பெற்றோர் பட்டியல் இவ்வளவு விரிவாகக் கொடுக்கப்படவில்லை.

    Guru_Bhakat_Upamanyuமீட்பு – ரேபன் மற்றும் வந்தனன் ஆகியோரைக் கிணற்றிலிருந்து மீட்டனர். அத்ரி என்பவரைக் குகையிலிருந்து மீட்டனர், அவரது உடல் வெப்பத்தைக் குறைத்தனர். புஜ்யு என்பவரைக் கடலிலிருந்து மீட்டனர். விச்வகனுக்குக் காணாமல் போன மகன் விஷ்ணாபுவை மீட்டுக் கொடுத்தனர். வர்த்திக என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து மீட்டனர். ஜாஹுஷன் என்பவர் எதிரிகளிடம் சிக்கியபோது அவரைக் கடத்திக் கொண்டு வந்து மீட்டனர். ஆழத்தில் மூழ்க இருந்த அந்தகனைக் காப்பாற்றினர். த்ரிசோகன் என்பவரின் களவு போன மாடுகளை மீட்டுத் தந்தனர். குதிரையை இழந்த ப்ருதிக்கு அதை மீட்டுக் கொடுத்தனர்.

    பொறியியல்– தாகத்தால் வருந்திய கோதமருக்குக் கிணறு ஒன்றைச் சீரமைத்துக் கொடுத்தனர். சரன் என்பவருடைய கிணற்றில் நீர் மட்டம் உயரச் செய்தனர்.  வணிகன் தீர்க்கச்ரவஸுக்கு இனிய நீர் கிடைக்கச் செய்தனர். வறண்ட ஆற்றில் மீண்டும் நீர் பெருகச் செய்தனர். சுசந்தி என்பவருக்கும் அத்ரிக்கும் வீடு அமைத்துக் கொடுத்தனர்.

    மருத்துவம்– இவர்கள் சிறந்த மருத்துவர்கள். தண்ணீரிலும், செடிகளிலும், மரங்களிலும் உள்ள மருந்துகளை அறிந்து வைத்திருக்கிறார்கள், கர்ப்பத்தைத் தாங்குகிறார்கள் என்கிறது வேதம். கண்வருக்குக் கண் பார்வை தந்தனர். தந்தையால் கண் குருடாக்கப்பட்ட ரிஜ்ராச்வன் என்பவருக்குக் கண் பார்வை தந்தனர். ச்யாவன் என்பவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டார். இவர்கள் அவரை மீண்டும் நல்ல நிலைமைக்குக்  கொண்டு வந்தனர். கால் வெட்டுப்பட்ட விச்பலா என்ற பெண்ணுக்கு இரும்புக்கால் அமைத்துக் கொடுத்தனர்,  காலில்லாத பராவ்ரஜனை நடக்க வைத்தனர். ச்யவனரின் பழைய தோலைக் கவசம் போல் கழற்றிவிட்டுப் புதிய தோல் வளரச்செய்து, மீண்டும் இளமையாக்கினர். ருதுஸ்துபருக்கு சத்துணவு தந்தனர். மிகுதியாகக் குடித்த வம்ரனை அவனது நோயிலிருந்து மீட்டனர். தத்யங் என்பவருக்குக் குதிரைத் தலை அமைத்துக் கொடுத்து அவரிடமிருந்து த்வஷ்டாவின் வித்தையைக் கற்றனர்.

    வத்ரிமதியின் கணவனுக்கு வைத்தியம் செய்து பிள்ளை பாக்கியம் ஏற்படுத்திக் கொடுத்தனர், ச்யாவன் என்பவருக்கு நோயை நீக்கி மனைவி கிடைக்கச் செய்தனர். கோஷா என்பவள் வயதாகியும், நோயின் காரணமாகத் திருமணம் ஆகாமல் தந்தை வீட்டில் இருந்த போது அவளது நோயை நீக்கி திருமணம் நடக்கச் செய்தனர். மனைவியை அடைந்த கலி என்பவர் இளமையாக்கப்பட்டு ஆயுள் நீட்டிக்கப்பட்டார்.

    அச்வின்களின் மருத்துவம் மனிதர்க்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் பயன்பட்டது. ஷயு என்பவரின் மரத்துப் போன பசு மீண்டும் பால் கொடுக்க வைத்தனர். தேனீக்கள் இனிய தேன் தரச் செய்தனர்,  இவை இவர்களது மருத்துவ சாதனைகள்.

    பிற உதவிகள்– விமதன் என்பவர் புருமித்ரனின் மகளை மணந்து கொள்ள உதவினர். பேது என்பவருக்கு வெள்ளைக் குதிரை ஒன்றைத் தந்து அவர் வெற்றி பெற உதவினர். கக்ஷிவான் என்பவருக்காகத் தங்களது குதிரைக் குளம்பிலிருந்து 100 ஜாடி மது பெருகச் செய்தனர். வசன் என்பவர் தினமும் நிறைய செல்வம் பெற வழி செய்தனர். ஸுதாஸன், திவோதாஸன் என்போருக்கு செல்வ உதவி செய்தனர்.

    போர்– சர்யாதன், புருகுத்ஸர், க்ருசானு, பத்தர்வா ஆகியோருக்குப் போர்க்களத்தில் வெற்றி பெற உதவினர்.

    அத்ரிகு, பக்தன், பப்ரு, உபஸ்துத, கர்க்கந்து, குத்ஸர், ச்ருதர்யன், மேதாதிதி, வசன், தசவ்ரஜன், சிஞ்ஜாரன்,   துர்வீதி, தபீதி, த்வஸந்தி,  ப்ரியமேத, பரத்வாஜன், ப்ருச்னிகு, மந்தாதா, வய்யன், ச்யூமரச்மி என்போரும் இவர்களிடமிருந்து உதவி பெற்றவர்களில் அடங்குவர். இவை எத்தகைய உதவிகள் என்பது குறிப்பிடப்படவில்லை.

    குதிரை இல்லாத தேர் ஓட்டினர். சூரியனை வலம்வந்தனர். பஞ்சம், நோய் இவற்றை நீக்கினர். மனுவுக்கு உணவு தந்தனர் (விவசாய முறையைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறார் சாயணர்). கிணறு தோண்டினர், மகிழ்ச்சி தருபவர் என்ற பொருளில் மயோபூ, சம்பு என அழைக்கப்படுகிறார்கள். மாத்வீ (இனிமையானவர்கள்), புரணா (போஷிப்பவர்கள்), ஸுப்ரணீதி (நல்ல வழி காட்டுபவர்கள்) என்ற சிறப்புகளும் இவர்களுக்கு உண்டு.

    பிரார்த்தனை செய்தால் இவர்கள் உதவிக்கு வருவார்கள். மனோ வேகத்தில் வருகிறார்கள் (மனோஜுவா). வேதம் இவர்களை விட இவர்களது ரதத்தைத்தான் வெகுவாகப் புகழ்கிறது. அது க்ருதவர்த்தனி (நீர் வழியிலும் போகக்கூடியது), ஹிரண்யவர்த்தனீ (ஒளியுள்ள பாதையை உடையது), மூன்று தூண், மூன்று சக்கரம் கொண்டது, முக்கோண வடிவம் உடையது. எளிதில் இயங்குவது. மனத்தினால் பூட்டப்படும் குதிரைகளைக் கொண்டது (மனோயுஜாச்வாஸா). இது ரிபுக்களால் உருவாக்கப்பட்டது.

    மழையும் வலிமையும் ஒளியும் இவர்களது செல்வமாகக் கூறப்படுகிறது. அதை ஒட்டி இவர்களுக்கு வழங்கும் சிறப்புப் பெயர்கள்- வ்ருஷண்வஸு, வாஜினீவஸு, ஸூர்யாவஸு.

    மற்ற தேவர்களுடன் இவர்களது உறவு சிறப்பாகப் போற்றப்படுகிறது. இந்திரனோடு சவாரி செய்பவர்கள், வாயுவுடன் வாசம் செய்பவர்கள், ரிபுக்களுடனும் ஆதித்யர்களுடனும் மகிழ்பவர்கள், விஷ்ணுவுடன் பயணம் செய்பவர் என்று கூறப்படுகிறது. உஷாவுக்கு முன் வருபவர்கள் என்றும் சூரியனைத் தன் தேரில் சுமந்து வருபவர்கள் என்றும் கூறப்படுகிறார்கள்.

    தேவர்கள் தனி்த்தனியாகப் போற்றப்பட்டாலும் ரிஷிகளின் ஒரு மன நிலையில் இந்த வேறுபாடு மறைந்து போகிறது. அதன்படி அச்வின்களும் மருத்துகளைப் போல ருத்ரனின் மக்களாகக் கூறப்படுகிறார்கள்.

    மற்ற தேவர்களைப் போல இவர்களும் ருதத்தை அனுசரிப்பவர்கள், ருதத்தைக் காப்பவர்கள். உஷஸைப் போல, இந்திரனைப் போல அச்வினின் குதிரைகளும் ருதத்தால் பூட்டப்பட்டவை. இவர்களும் வ்ருத்ரஹந்தமா (விருத்திரனைக் கொல்வதில் சிற்தவர்கள்).

    எல்லா வேள்விகளிலும் அச்வின்களுக்குச் சிறப்பிடம் உண்டு. இவர்கள் காலையில் பிழிந்து எடுக்கப்படும் ஸோம பானத்திற்கு உரியவர்களாகக் கூறப்-படுகிறார்கள். வேறு எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4)  என்பது மற்ற தேவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு. அச்வின்கள் தாஸர்களின் உணவை அனுபவிக்கிறார்கள் (8.5.31) என்பதால் இவர்கள் எல்லோருக்கும் இனியவர்கள் என்பது தெரிகிறது.

    படம் உதவி: http://totreat.blogspot.com/2012/10/ashvins-ayurveda-flying-doctor-family.html

    Share
  • காற்று வாங்கப் போனேன் – (42)

    கே. ரவி

    இதுவரை மெளனமாக இருந்த புத்தி சிகாமணி கேட்கிறான்: “நீ என்ன சொன்னாலும் சரிப்பா, ஆனா நான் இல்லாம, அதாவது புத்தியைப் பயன்படுத்தாம, ஒரு கவிதை எழுதவே முடியாதுப்பா”.

    ஒப்புக் கொள்கிறேன் சிகாமணி. ஆனால் ஒரு கவிதை, வடிவம் பெறுவதற்குத்தான் உன் உதவி தேவை. அதை மறுப்பதற்கில்லை. அது ஜனிப்பதற்கு உன் உதவி தேவையில்லை.

    “என்னப்பா குழப்புகிறாய்! விளக்கமாகச் சொல்லுப்பா”, சிகாமணி கேட்கிறான்.

    சொல்கிறேன். நான் கேட்டு நீ கதை சொன்னது போக, இப்போது நீ கேட்டு நான் கதை சொல்வது போலாகிவிட்டதே! நல்ல வேடிக்கையப்பா!

    இனம்தெரியாத ஏதோ ஓர் ஈர்ப்பினால் உந்தப்பட்டு, மிக உயரத்திற்கு அல்லது ஆழத்திற்கு மனம் சிறகடித்துப் பறக்கும் போது, அது சில அனுபவக் களங்களைச் சந்திக்க நேர்கிறது. அந்தக் களங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; அல்லது, வெறும் எண்ண எழுச்சிகளாகவோ, சலனங்களாகவோ இருக்கலாம்; அல்லது, நேரில் பார்த்திராத ஒரு காட்சியாக இருக்கலாம். எந்தக் களத்துக்கு ஏற்றவாறு அந்த மனத்தின் அப்போதைய அதிர்வுகள் உள்ளனவோ, அந்தக் களம் அந்த மனத்தைத் தன்வயப் படுத்திக் கொள்கிறது. அது சில கணங்களுக்கு மட்டுமே. அந்தக் களத்தின் அதிர்வுகளும், அந்த மனத்தின் அதிர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே அலைவரிசையில் சங்கமிக்கும் போது எழும் புதிய சலனங்களை மொழியாக்கம் செய்யும் திறம் அந்த மனம் சார்ந்த அறிவுக்கு இருந்தால் அந்தச் சலனங்கள் ஒரு கவிதையாக வெளிப்படலாம். அல்லது, அச்சலனங்களை வேறு விதமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அந்த மனத்துக்கு இருந்தால், அச்சலனங்கள் ஓர் ஓவியமாகவோ, சிற்பமாகவோ, சங்கீதமாகவோ, வேறு கலைவடிவிலோ உருவம் பெறலாம். அந்தச் சலனங்கள் ஜனிப்பதில் அறிவின் பங்கு அதிகம் இல்லை. எந்த அனுபவக் களம் அந்த மனத்தை அந்தக் கணத்தில் வரவேற்றுத் தன்வயப் படுத்திக் கொள்கிறது என்பது வேண்டுமானால் ஓரளவு அந்த மனம்சார்ந்த அறிவைப் பொறுத்து அமையலாம். ஆனால், அந்தச் சங்கமத்தில் ஜனிக்கும் சலனங்களுக்கு அதற்கு மேல் அறிவு பொறுப்பாக முடியாது. அச்சலனங்கள் உருவம் பெற்று வெளிப்பட நிச்சயம் அறிவின் துணை வேண்டும். அப்படித் துணை செய்யும் போது அறிவு தன் அதிகப் பிரசங்கித்தனத்தை அடக்கிக் கொண்டு அந்தச் சலனங்களை அப்படியே பிரதிபலிக்கும் வடிவம் இழைப்பதில் மட்டும் உதவினால், அந்தப் படைப்பில் அந்த அனுபவக் களம் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். அப்படியின்றி, அறிவு தன் மேல்பூச்சுகளை அந்த வடிவத்தில் அதிகம் இழைக்கத் தலைப்பட்டால், அந்தப் படைப்பு, ரசிகர்களின் அறிவு நிலையைக் கடந்து ஆழத்துக்குச் செல்ல முடியாமல் தடுமாற நேரிடும். அப்படிப்பட்ட படைப்பு, காலம் வென்று நிற்கும் படைப்பாக உருவாக முடியாது. ஏனென்றால், ரசிகரின் அறிவு நிலையைக் கடந்து, அவர்களுடைய அந்தரங்கத்தை ஊடுருவிச் சென்று, அவர்களுக்குள் தான் ஜனித்த அனுபவக் களத்தை மீண்டும் உருவாக்கி அவர்களை அந்தக் களத்துக்குக் கடத்திச் செல்லும் ஆற்றல் அத்தகைய படைப்புக்கு இருக்காது.

    நான் இளங்கலை (பி.ஏ.) வகுப்பில் பயிலும் போது, எங்களுக்கு இந்திய மெய்யியல் பாடம் நடத்திய பேராசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அதற்கு மூலம் எதுவென்று நினைவில்லை. ஓர் ஊரின் எல்லையில் ஒரு யோகி தவம் செய்து கொண்டு வாழ்ந்திருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரிடம் மிகுந்த மரியாதை இருந்தது. எல்லாரும் அந்த வழியே செல்ல நேரிடும் போது அவரை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், ஓர் இளம் பெண் அவ்வழியே போகும் போது அவரை வணங்கினாள். திடீரென்று, அவர் அந்தப் பெண்ணிடம் வலிந்து உடலுறவு கொள்ள முயற்சி செய்தார். அந்தப் பெண் திமிறிக் கொண்டு விடுபட்டு ஓடிப்போய் நடந்ததை ஊர்மக்களிடம் சொல்லவும், அவர்கள் திரண்டு வந்து அந்த யோகியைத் தாக்க முற்பட்டனர். ஊர் பெரியவர் ஒருவர் அவர்களை அடக்கி விட்டு, “ஏன் சாமி இப்படிச் செஞ்சீங்க?” என்று கேட்டதும், சில மாதங்கள் கழித்து வந்தால் பதில் சொல்வதாகச் சொல்லி அந்த யோகி அவர்களை அனுப்பி வைத்தார். சில மாதங்கள் கழித்து ஊர் மக்கள் மீண்டும் அவரிடம் சென்று கேட்டதும், அவர்களை அருகில் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று ஒரு கழுதை சில மணித்துளிகளுக்குமுன் ஈன்ற கன்றைக் காட்டி, “இந்த ஜீவன் உடல்பெறத் துடித்துக் கொண்டிருந்ததைச் சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த போது, அதற்கு மனிதப் பிறவி கொடுக்கலாமே என்று நினைத்து நான் எடுத்த முயற்சிதான் அது. ஆனால் இறைவனின் சித்தம் அந்த ஜீவன் கழுதையாகப் பிறக்க வேண்டும் என்று இருக்கும் போது அதை மாற்ற நான் யார்?” என்று சொன்னாராம். இந்தக் கதை முக்கியமில்லை. இதில் வரும் யோகியின் சமாதானம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா என்ற விவாதத்திலும் நான் ஈடுபடப் போவதில்லை. ஆனால், கவிதையின் ஜனன ரகசியத்தை ஓரளவு புரிந்து கொள்ள இக்கதை சற்றே உதவக் கூடும் என்பதால் அதை இங்கே சொன்னேன். இந்தத் தொடரே என் கவிதையின் வரலாறுதானே!

    கவிதை எப்படி ஜனிக்கிறது என்பதை விளக்க நான் ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்? நல்ல கவிதைகளைப் பகிர்ந்து கொண்டாலே போதுமே!

    மழை, காற்று, வானம், மின்னல் என்று பாடவந்த பாரதி எப்படி ஓர் அனுபவக் களத்திற்கு உந்தப்பட்டு, அங்கே ஒரு கவிதையின் ஜனனத்துக்குக் கருவியாகி, அந்தக் கவிதையின் மூலம், காலகாலத்துக்கும் தன் வாசகர்களை அதே அனுபவக் களத்துக்குக் கடத்திக் கொண்டிருக்கும்படி அந்தக் களத்தை நிரந்தரமாக்கி விட்டான் என்பதைப் பார்ப்போம்:

    மழைபொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்images

    வானிருண்டு கரும்புயல் கூடியே

    இழையும் மின்னல் சரேலெனப் பாயவும்

    ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

    உழையெலாம் இடையின்றி இவ்வானநீர்

    ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

    மழையும் காற்றும் பராசக்தி செய்கைகாண்

    வாழ்க தாயென்று பாடுமென் வாணியே

    வான் இருண்டு போவதும், புயல் கருப்பாக இருப்பதும் கட்புலனுக்கு. ஈரப்பதத்தோடு வீசும் வாடைக் காற்றோ நாசிப்புலனுக்கு. காற்று வீசும் ஆரவாரமோ செவிப்புலனுக்கு. வானத்திலிருந்து பொழியும் மழை நீரோ உற்றறியும் தீண்டல் புலனுக்கு. இப்படியாகத் தான் பார்த்த ஒரு காட்சிக்கு கண், காது, மூக்கெல்லாம் வைத்துப் பாடுகிறான் பாரதி. கண், மூக்கு, காது, மெய் என்று நாலு புலன்களுக்கு விருந்து தந்தவன், மிக முக்கியமாக விருந்துச் சுவைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நாவை மட்டும் விட்டு விட்டானோ? இல்லை. ‘வாழ்க தாய்’ என்பதே நாவுக்கு விருந்து என்று முடிக்கிறான். எப்படி ஒரு சிறு பொறியைப் பெரு நெருப்பாக்கி ஐந்து புலன்களுக்கும் விருந்து படைக்கிறான் பாருங்கள், கேளுங்கள், நுகருங்கள், தீண்டுங்கள், சுவைத்து அருந்துங்கள்!

    உழையெலாம் இடையின்றிப் பொழியும் வான நீரை, “இவ் வான நீர்” என்று சொல்லி, நம்மை அந்த அனுபவக் களத்துக்குள்ளேயே நிற்கச் செய்துவிடுகிறானே! ‘வாழ்க தாய்’ என்ற குரல் எங்கே இருந்து வருகிறது? அது “என் வாணியின் குரல்” என்கிறான். ஆங்கிலத்தில் ‘மை ம்யூஸ்’ (my muse) என்பார்களே, அதைத்தான் அவன் சொல்கிறான். அந்த அனுபவக் களம் அவனுடைய அகத்தின் ஆழத்தில் இருப்பதைத்தான் அவன் சுட்டிக் காட்டுகிறான். ‘இவ்வான நீர்’ என்ற சொற்றொடரிலுள்ள ‘இவ்’ என்ற சொல்லும், ‘என் வாணி’ என்பதில் உள்ள ‘என்’ என்ற சொல்லுமே இந்தக் கவிதையின் உயிர்ச் சொற்கள். இந்தக் கவிதையின் அனுபவக் களத்துக்கு வாசகனைக் கடத்திச் செல்லும் மந்திரச் சொற்கள். கவிஞன், தனக்குள் வாசகனை வரவேற்று, அழைத்துச் சென்று, அங்கே மழை பொழியும் ஓர் அனுபவக் களத்தில் அவனை நிற்கச் செய்து, அவனை மழையில் நனைய வைத்து, அவனுடைய ஐந்து புலன்களுக்கும் விருந்து படைத்து, அவனைத் திக்குமுக்காட வைக்கும் ஓர் உயர்ந்த கவிதை இது.

    சமஸ்க்ருதத்தில் ‘ப்ரதீபா சக்தி’ என்று குறிப்பிடுவதைத்தான் நான் விளக்க முற்பட்டேன். மொழிவடிவம் பெறுவதற்கு முன்பே கவிதை ஜனித்து விடுகிறது. அது உயிருள்ளது. மொழி அதற்கு உடல் மட்டுமே வழங்குகிறது. உடலும் மிகவும் முக்கியம்தான். அந்த உடலாகிய மொழிவடிவம் ஏற்க உதவும் மகத்தான பணியைச் செய்யும் புத்தி சிகாமணியைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவன் முந்திரிக் கொட்டைபோல் ப்ரதீபா சக்திக்குள் அத்து மீறிப் பிரவேசித்து விடக் கூடாது. அங்கே அவனுக்கு வேலையில்லை. அது மனோன்மணியின் ஆட்சித்தளம்; ஆண் வாடையற்ற அல்லி அரசாங்கம்!

    ப்ரதீபா சக்தி என்ற திறன்வாய்க்கப் பெற்றவர்களே மஹாகவிகள். அவர்கள் தீர்க்கதரிசிகள். வரப்போவதை முன்கூட்டியே ஞான திருஷ்டியில் கண்டு சொல்லக் கூடியவர்கள். இப்படித்தான் நான் நினைத்திருந்தேன். பாரதியே அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் தோன்றினான். அவன் சொன்ன படியே நடந்த செய்திகள் எத்தனை! நூறாண்டுகளுக்கு முன் அவன் பாடிய போது, “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று நாம் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லையே! சந்தி தெருப்பெருக்குதல் ஒரு சாத்திரமாக, விஞ்ஞானமாக வளரும் என்று நினைத்தோமா? அணுக்களுக்கு ஆங்கிலத்தில் ‘ஸ்பின்’ எனப்படும் சுழற்சி உண்டு என்பது 1925-ஆம் ஆண்டு கெளட்ஸ்மிட் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி சொல்லும்வரை நமக்குத் தெரியாத போது, பாரதிக்கு மட்டும் எந்த இயல்நூலார் அது பற்றிச் சொல்லி, அவனைப் பாஞ்சாலி சபதக் காவியத்தில், “இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென இயல்நூலார் இயம்பக் கேட்டோம்” என்று பாட வைத்தனர்? “இடையின்றி” என்ற சொல்லின் கனபரிமாணங்களை முழுதும் விளக்க இது இடமில்லை. வியப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். அப்பப்பா, இது என்ன தீர்க்க தரிசனம்! என் வியப்புக்குச் சரியான விடை தந்தவர் ஒரு பெரிய மஹான். அந்த விடையைப் பற்றிச் சொல்வதற்கு முன், அவரோடு எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தைச் சொல்ல வேண்டும்.

    அந்த மஹானும், என் தாத்தா, அதாவது, என் தந்தையின் தந்தை, ம்ருத்யுஞ்ஜய தீக்ஷிதரும் கரூரில் ஒருசாலை மாணாக்கர்களாம். அதாவது, ஒரே பள்ளியில் படித்த பால்ய நண்பர்கள். என் தாத்தாவுக்குத் திருமணம் ஆன பிறகு அவர் இல்லத்தில் என் பாட்டி பாலசுந்தராம்பாள் பரிமாற, என் தாத்தாவோடு அந்த மஹான் பலமுறை உணவருந்திய செய்தியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். என் தாத்தா நான் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே, என் தந்தை பள்ளிச் சிறுவனாக இருந்த போதே இறந்து விட்டார்.

    எனக்கு வயது 7 அல்லது 8 இருக்கும், 1960-61 என்று நினைக்கிறேன். என் வீட்டுக்கு அருகில் உள்ள மண்டபத்திற்கு அந்த மஹான் விஜயம் செய்திருந்தார். அவரைப் பார்க்க என் பாட்டி என்னை அழைத்துச் சென்றிருந்தார். அவர் அந்த மண்டபத்தின் மேடையில் வீற்றிருந்தார். மேடையிலிருந்து வெகு தொலைவில் இருந்த ஒரு தூண் மறைவில் பாட்டி அமர்ந்து கொண்டு ஒரு வாழைப்பழத் தட்டை என்னிடம் தந்து, போய் அதை அந்த மாஹனிடம் தந்து ம்ருத்யுஞ்ஜய தீக்ஷிதரின் பேரன் என்று சொல்லி வணங்கி வரச்சொன்னாள். அவர் இருந்த மேடைக்கும், நாங்கள் இருந்த தூணுக்கும் நடுவில் ஐந்நூறுக்கு மேற்பட்டவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். அவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு எப்படியோ மேடையில் ஏறி அவரிடம் தட்டை வைத்து விட்டு வணங்கினேன். நான் இன்னார் பேரன் என்று சொல்ல வாயெடுத்தேன். அவரை அருகில் கண்ட மலைப்பில் வார்த்தை வரவில்லை. நான் எதுவும் சொல்வதற்கு முன்பே, அவர் முந்திக் கொண்டு, “ம்ருத்யுஞ்ஜயன் பேரனா?” என்று கேட்டு விட்டு, நான் கொடுத்த வாழைப்பழச் சீப்பிலிருந்தே ஒரு பழத்தை எடுத்து எனக்குத் தந்து ஆசி வழங்கி அனுப்பியதும், வியர்த்து, விறுவிறுத்துப் போனேன். அவர் சொன்னதைப் பாட்டியிடம் வந்து சொல்லி வியந்ததும், பாட்டி “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று சொன்ன போதுதான் அந்தச் சொல்லை நான் முதலில் கேள்விப்பட்டேன். அன்று மயிலை, சமஸ்க்ருதக் கல்லூரியில் சந்தித்த காஞ்சி மஹாபெரியவர்தான் கவிஞர்களின் ப்ரதீபா சக்தி பற்றியும், தீர்க்க தரிசனம் பற்றியும் எனக்கு ஒரு தெளிவு ஏற்படுத்தினார்.

    காஞ்சி மஹாபெரியவரின், ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலை நான் பிறகு படிக்க நேர்ந்தது. அதில் அந்த மஹானின் கருத்து நேர்மையும், நடைத் தெளிவும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அவர் சொல்லியிருந்த சில கருத்துகளில் அப்படியே உடன்பட என் சிற்றறிவு தயங்கினாலும், அதன் பல செய்திகள் என்னை மிகவும் பாதித்ததை நான் மறுப்பதற்கில்லை. அதன் நான்காம் பாகத்தில், அவர் ஒரு செய்தி சொல்கிறார். காளிதாசனிடம் தனக்கு ஒரு சரமகவி பாடுமாறு போஜராஜன் கேட்டுக் கொண்டும், கட்டளையிட்டும், காளிதாசன் மறுத்து விடுவதற்கு நிறைய காரணங்களை அவர் அதில் சொல்கிறார். அப்படிப் பாடினால் நிஜமாகவே போஜன் உயிர் பிரிந்துவிடும் என்று காளிதாசனுக்குத் தெரியும் என்பதும் ஒரு காரணம் என்று சொல்கிறார். அந்தக் கருத்துச் சூழலில் மஹாபெரியவர் எழுதுகிறார்:

    இன்னொரு காரணத்தாலும் அவன் கல்பனையாகச் சரமகவி பாட முடியாமலிருந்தது. ரிஷிகளைப் பற்றி பவபூதி “உத்தரராம சரித”த்தில் ஸ்ரீ ராம சந்த்ர மூர்த்தியின் வாயிலாக ஒரு உண்மையைச் சொல்கிறார். “ஏனைய மக்கள் என்ன நடக்கிறதோ அதைச் சொல்வார்கள். ரிஷிகளோ என்ன சொல்கிறார்களோ அது நடந்துவிடுகிறது. ஒரு விஷயத்தை மற்றவர்கள் வார்த்தையாகச் சொல்கிறார்களென்றால், ரிஷிகளைப் பொறுத்தமட்டிலே அவர்கள் சொல்கிற வார்த்தையை விஷயம் ஓடிப்போய்ப் பிடித்துக்கொண்டு நிஜமாகிவிடுகிறது – வாசம் அர்த்தோ (அ) நுதாவதி” என்று ராமர் வஸிஷ்டரைக் குறித்துச் சொல்வதாக பவபூதி ஒரு General truth -ஐ (பொது உண்மையை) ச் சொல்கிறார்.

    ரிஷியும், தெய்வாநுக்ரஹம் பெற்ற அருட்கவியும் ஒன்று என்பதற்கேற்ப, அம்பாளின் பரிபூர்ண க்ருபையைப் பெற்றிருந்த காளிதாஸனின் வாக்குக்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தது. அதாவது அவன் வாக்கால் என்ன கவிதை வந்தாலும் அது நிஜமாகிவிடும். அவன் கல்பனையாகச் சொல்வதே ஸத்யமாகிவிடும்.

    asrபாரதி தீர்க்கதரிசி, அவன் பின்னால் வரப்போவதைத் தன் ஞானக் கண்ணால் முன்கூட்டியே கண்டுரைத்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை காஞ்சிப் பெரியவரின் கட்டுரை மாற்றி விட்டது. பாரதி போன்ற மஹாகவிகள் கண்டு சொன்னார்கள் என்பதை விட, அவர்களுடைய உள்ளத்தில் உண்மையொளி இருந்ததால் அவர்களுடைய வாக்கினிலும் ஒளியுண்டாகியது; அவர்கள் சொன்னதெல்லாம் அப்படியே பலித்தது, நிகழ்ந்தது என்று எனக்குப் புரிய வைத்தவர் மஹாபெரியவர்.

    ஒரு மாஹாகவியை மஹரிஷிகளுக்கு ஈடாகக் கருதினார் மஹாபெரியவர். ஆம், உயிருள்ள கவிதைகளைப்asr1 படைப்பதால், மஹாகவிகள் கடவுளுக்கே நிகரானவர்கள். இதை எழுதும் போதே எனக்கு ஒருவர் நினைவுக்கு வருகிறார். மிகப்பெரிய கவிதை ரசிகராகவும், அதே சமயத்தில் குழந்தைகளுக்காக எழுதுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டும் வாழ்ந்த அமரர் பூவண்ணனைத்தான் குறிப்பிடுகிறேன். முன்பின் அவரை எனக்கு அறிமுகம் இல்லாத போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவியரங்கத்தில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. சென்னை, மைய நூலக வளாகத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பேசிய போது, என்னைப் பற்றிக் குறிப்பிட்டு என் கவிதை ஒன்றை, மனப்பாடமாகச் சொல்லிக் காட்டியதும் நான் மிகவும் வியப்படைந்தேன், மகிழ்ச்சியும் அடைந்தேன். அவர் சொன்ன என் கவிதை இதுதான்:

    தீப்பிழம்பைக் கையில் அள்ளிச் சாறெடுக்கும் போது

    தேன்வடிந்த தென்று சொல்லித் துள்ளுபவன் யாரு

    தேன்வடிந்த துளிகளிலே பூவாசம் வைத்துத்

    தென்றலிலே தூவியிசை கொள்ளுபவன் யாரு

    கனவென்ற தேர்கொண்டவன் – ஒரு

    கவிஞனெனப் பேர்கொண்டவன்

    பெருவியப்பை ஒருசொல்லின் கூர்முனையில் வைத்துப்

    பேரொளியை அதற்குள்ளே போட்டடைத்து வைத்து

    மறுசொல்லுக் கிடையிலொரு மெளனத்தை வைத்து

    மந்திரமாய்ச் சொல்லுகிற மானிடனும் யாரு

    கடவுளையே நேர்கண்டவன் -ஒரு

    கவிஞனெனப் பேர்கொண்டவன்

    சொல்வதொரு பாதியவன் சொல்வதில்லை மீதி

    சொல்லியதே சொல்லாத தையுணர்த்தும் நீதி

    வெல்லுவதும் இன்பமதில் தோற்பதுவும் இன்பம்

    வேற்றுமை யிலாதவனை ஏற்பதுவும் இன்பம்

    காலத்தின் சீர்கொண்டவன் -ஒரு

    கவிஞனெனப் பேர்கொண்டவன்

    கடவுளையே நேர்காண்பது சாத்தியமா? இதற்கு விடை தேடித்தானே நரேந்திரன் பித்துப்பிடித்து அலைந்தான்.

    (தொடரும்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(123)

    சக்தி சக்திதாசன்.

    scotlandஅன்பினியவர்களே !

    மற்றொரு வாரமடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    இவ்வாரம் இம்மடலை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.

    அட என்ன இது? எதைப் பற்றிய கருத்தாடல் இது என்று எண்ணுகிறீர்களா?

    செப்டெம்பர் மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து நாடு தனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்து இருக்கும்.

    அதன் முடிவு என்னவாயிருக்கும் என்பதை அறியாமலே தான் நான் இந்த மடலை வரைகிறேன்.

    ஸ்காட்லாந்து நாடு ஐக்கிய இராச்சியத்தினின்றும் நீங்கி தனியான நாடாக இயங்க வேண்டும் என்று ஒரு பகுதியினரும், இல்லை ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதே ஸ்காட்லாந்து நாட்டிற்கு மிகவும் உகந்தது என்று மற்றொரு பகுதியினரும் பலகாலமாக வாதாடி வந்தனர்.

    2010ம் ஆண்டு தேர்தலில் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமருமான டேவிட் கமரன் அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் ஸ்காட்லாந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஸ்காட்லாந்து நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான திகதியையும் குறித்துக் கொடுத்தார்.

    Scotland1ஸ்காட்லாந்து நாட்டின் மாநில அரசான ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தமது நீண்டகால அபிலாஷையான ஸ்காட்லாந்து நாட்டின் பிரிவினையை நனவாக்கிக் கொள்லும் முயற்சியில் அதற்கான பிரசாரத்தில் இறங்கினார்கள்.

    அதேநேரம் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும், இப்பிரிவினை ஐக்கிய இராச்சியத்தின் எஞ்சிய பகுதிகளுக்கோ அன்றி ஸ்காட்லாந்து நாட்டிற்கோ பயன் தரப்போவதில்ல்லை எனும் நிலைப்பாட்டில் இப்பிரிவினையை எதிர்த்தார்கள்.

    அவர்களின் சார்பில் பிரச்சாரத்தை முன்னை நாள் லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தவரும், ஸ்காட்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான அலிஸ்டர் டார்லிங் முன்னெடுத்தார்.

    அவருக்கு உதவியாக முன்னைய லேபர் அரசாங்கப் பிரதமராகவிருந்த கோர்டன் பிரவுன் அவர்கள் செயற்பட்டார்.

    கடந்த இருவாரங்களுக்கு முன்னால் மட்டும் இப்பிரிவினை வாதத்திற்கு எதிராகவே ஸ்காட்லாந்து மக்களின் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்றே பொதுவான கருத்துக் கணிப்பாக இருந்தது.

    ஆனால் இவ்வாக்கெடுப்பின் திகதி நெருங்க நெருங்க பிரசாரம் தீவிரமடைந்தது. இரண்டு பிரிவினர்களின் தலைவர்களுக்கு மத்தியில் தொலைக்காட்சியில் பகிரங்க விவாதங்கள் நடைபெற்றன.

    இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் இவ்வாக்கெடுப்பின் முக்கியத்துவம் துலங்கத் தொடங்கியது.

    என்னே ஆச்சரியம் பிரசாரம் தொடங்கிய காலம் முதல் இப்பிரிவினைக்கெதிராகவே மக்கள் தீர்ப்பு இருக்கும் எனும் நிலை மாறி பிரிவினையை ஆதரிப்போர் விகிதாசாரம் முதல்முறையாக உயர்ந்தது.

    scotland3தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல பிரதமர் டேவிட் கமரன், துணைப்பிரதமர் நிக் கிளேஹ், எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட் என மூன்று முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாக ஸ்காட்லாந்து நாட்டிற்கு படையெடுத்தார்கள்.

    மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார்கள். பிரிவினை என்பது இலேசான விடயம் அல்ல அதன் பக்க விளைவுகளும், பின்விளைவுகளும் ஸ்காட்லாந்து நாட்டினருக்கும், எஞ்சிய ஐக்கிய இராச்சியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்பதைப் பறைசாற்றினார்கள்.

    ஐக்கிய இராச்சியத்தின் முன்னனி வியாபார ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் இப்பிரிவினை இடம்பெற்றால் தமது வியாபார ஸ்தலங்களின் ஸ்காட்லாந்து நடவடிக்கைகளை ஐக்கிய இராச்சியப் பகுதிகளுக்கு மாற்ற வேண்டி வரும் என்றும் மறைமுகமாக அது ஸ்காட்லாந்து மக்களின் வேலைகளைப் பறிக்கும் என்றும் எச்சரித்தார்கள்.

    இங்கிலாந்து நாட்டின் அரச வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்து நிறுவனத்தின் முகாமையாளர் இப்பிரிவினையால் ஸ்காட்லாந்து நாட்டின் நிதிநிலைமைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

    விளைவாக கருத்துக் கணிப்புகள் இப்பிரிவினைக்கு எதிரானவர்களின் வெற்றியை நோக்கித் திசை திரும்பியுள்ளது.

    பிரிவினைப் பிரசாரத்தை முன்னெடுக்கும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சரோ… சே! இதெல்லாம் வெறும் பூச்சாண்டி! இப்பிரிவினைக்கெதிரானவர்களின் தூண்டுதல்களினால் இத்தகைய பயமுறுத்தல்கள் மக்களின் நோக்கத்தைத் திசைதிருப்ப விடுக்கப்படுகின்றன என்கிறார்.

    இம்மடலை நான் வரைந்து கொண்டிருக்கும் இன்றுதான் பிரச்சாரத்திற்குரிய கடைசிநாள். நாளை பொது வாக்கெடுப்பு.

    இதிலிருந்து எமக்கு உறுதியாகத் தெரிவது என்னவென்றால் , இவ்வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்படத்தான் போகிறது.

    எப்படி என்கிறீர்களா ?

    scotland2ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரித்து அம்மக்கள் வாக்களித்தால் அம்மாற்றம் ஸ்காட்லாந்து மட்டுமல்ல ஏனைய ஐக்கிய இராச்சிய பகுதிகளையும் மிகவும் பாதிக்கும்.

    ஐக்கிய இராச்சியத்தின் தேசியக்கொடி மாற்றப்பட வேண்டும்.

    இப்பிரிவினைய எதிர்த்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து அங்கம் வகிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் தீர்மானித்தால் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் படி ஸ்காட்லாந்து நாட்டு மாநில அரசுக்கான அதிகாரப்பரவலாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட் வேண்டும்.

    இதை நடைமுறுத்த வேண்டுமானல் ஏனைய மாநில அரசுகளான “வேல்ஸ்”, “வட அயர்லாந்து” ஆகிய மாநில அரசுகளின் அதிகாரங்களும் இதற்கு இணையாக பரவலாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் “இங்கிலாந்து” எனும் மாநில அரசு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

    இவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானல் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சாசனம் மாற்றி எழுதப்பட வேண்டும்.

    சில வாரங்களுக்கு முன்னால் பிரபல ஊடகவியலாளர் அண்ட்ரூ நீல் அவர்களினால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இவ்வாக்கெடுப்பின் முடிவினால் ஏற்படும் பாதிப்புகள் விரிவாக விளக்கப்பட்டது.

    ஸ்காட்லாந்து மக்கள் பிரிந்து போனால் போகட்டும் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம் என்று இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஏனைய ஐக்கிய இராச்சியப் பகுதி மக்கள் அனைவரும் அவதானமாக பார்க்க வேண்டிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சி இது.

    இதன் பாதிப்புகளின் ஆழம் நாமனைவரும் இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதவாறு அமைந்துள்ளது.

    இதைப்பற்றி விரிவாக மற்றொரு மடலில் பார்ப்போம்.

    எது எப்படியாயினும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னூறு ஆண்டுகால அரசியல் வரலாறு, அதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவது நிச்சயமாகிறது.

    சரி ஸ்காட்லாந்து மக்கள் தமது விதியை நிர்ணயிக்க வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது, அதனால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்லவே ஏனைய ஐக்கிய இராச்சிய மக்களுமல்லவா ?

    அப்படியாயின் அவர்களின் எண்ணப்பிரதிபலிப்புகளை நிர்ணயிக்க அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இல்லையா ?

    அர்த்தமிகுந்த கேள்வி காலம் விடை பகருமா?

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • அவனிடம்…

    -செண்பக ஜெகதீசன்

     

    படைத்தவனைவிட,images (1)
    பக்கத்திலிருக்கும் மனிதன்மீது
    அதிக அன்பு செலுத்துபவனின்
    பக்கத்தில் அமர்ந்துகொள்கிறான்,
    அவன் நாட்குறிப்பின்
    முதல் பக்கத்தில்
    முத்துமுத்தாய்க் கையெழுத்திடுகிறான்,
    இறைவன்…!

     

     

     

     

     

    Share
  • இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மியின் காற்றினிலே வரும் கீதம்

    காவிரிமைந்தன்.

     

    mss

     

    இசையின்  மொழியை முற்றிலும் அறிந்த குயில் எம்.எஸ். சுப்புலஷ்மி …
    மீரா திரைப்படத்தில் வரும் இந்த கானம் காற்றினிலே வரும் கீதம்…
    இயற்றியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி..  எத்தனையோ பாடல்கள் நம் காதில் விழுந்தாலும் எத்தனையோ கானங்கள் நம் நெஞ்சம் நுழைந்தாலும் … இந்த கானம் தருகிற அமைதியும் ஆனந்தமும் அலாதியானது.
    எந்த அலம்பலும் இல்லாமல் அன்பின் மொழியாக …  நந்தவனத்திற்குள் வருகின்ற தென்றல் போலே கேட்போரை நிம்மதியின் சன்னதிக்கு அழைத்துசெல்கிறார்.

    கண்ணனை எண்ணி மனம் உருகி.. உச்சநிலையில் உள்ளம் தொடுகிற பணியை இந்தப் பாடல் எந்த ஆர்பாட்டமுமின்றி செய்துவிடுகிறது.
    கர்நாடக சங்கீதத்தில் முதல் நிலையில் விளங்கிய இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி  பாடிய ஒரு சில திரைப்பாடல்களில்  இதுவும் ஒன்று.
    எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசையில் இழைந்தோடிவரும் இன்ப கானம்!
    மனம் ஒருமிக்க இந்தப் பாடலில் மயங்கலாம்…
    இறை அருள் பெற்ற இசையரசியின் குரல் கேட்டு இன்புறலாம் …

    http://www.youtube.com/watch?v=Fg1XYA0atg8
    காணொளி: http://www.youtube.com/watch?v=Fg1XYA0atg8

    ……………………………………………………..
    படம்: மீரா (1945)
    பாடல்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
    இசை: எஸ். வி. வெங்கட்ராமன்
    குரல்:  எம்.எஸ். சுப்புலஷ்மி
    ……………………………………………………..

    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே…
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
    கல்லும் கனியும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்

    பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
    பண்ணொளி பொங்கிடும் கீதம்
    காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
    மதுரமோகன கீதம்
    நெஞ்சினிலே
    நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
    நினைவழிக்கும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்

    சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
    மனங் குவிந்திடவும்
    வானவெளிதனில் தாரா கணங்கள்
    தயங்கி நின்றிடவும்
    ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
    வேய்ங்குழல் பொழி கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்

    நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
    உலாவிடும் நதியில்
    நீல நிறத்து பாலகன் ஒருவன்
    குழல் ஊதி நின்றான்
    காலமெல்லாம்
    காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
    உருகுமோ என் உள்ளம்
    காற்றினிலே வரும் கீதம்..
    காற்றினிலே வரும் கீதம்..
    காற்றினிலே..

    KlakiS.V. VenkatramanmssMeera_music

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    “பூவைக் குமிடத்தில் பொன்வைப்போன் வள்ளலென்றால்,
    பூவைக்கும் பாதத்தில் பிள்ளையை -நீவைத்தாய்;
    கர்ண மகாப்பிரபு கேசவ் கலக்கும்நீ
    வர்ண மகாப்பிரபு வே”…..கிரேசி மோகன் ….

    “எதிர்காத்(து) இருப்பவர்க்கு ஏமாற்றம் தந்து
    எதிர்காத்தாய் வீசும் எவர்க்கோ -மதில்மேலே
    பூனைக்கீ டாமிரெண்டும்; பிள்ளை அழைத்தாலோ
    தூணைப் பிளந்துதெய்வம் தொப்….

    குழந்தை தெய்வமும் கேசவ் கொண்டாடும் தெய்வமும்….
    நம் நலம் பேணும் தாயும் சேயும் நலம் ….

    “ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்திட
    கானில் பிறந்தமணி கண்டனே ,-ஞானமே,
    தாய்மோ கினியவள் தாளில் பசித்திராய்
    போய்வன் புலிப்பால் பருகு”….கிரேசி மோகன் ….

    ஓணம் -அரி , திருவாதிரை -அரன்
    கானில் -காட்டில்….

    Share
  • கடவுளும் கவிஞனும்

     
    அன்புடையீர்!

    வணக்கம்.

    நேற்று மாலை (15.09.2014) நான் நிகழ்த்திய ”கடவுளும் கவிஞனும்” என்னும் சொற்பொழிவின் ஒளிப்பதிவை நீங்கள் இங்கே காணலாம்:

    http://www.kalakendra.com/shopping/isaikkavi-ramanan-kadavulum-kavignanum-free-streaming-p-3612.html

    பதிவுகளைச் செய்துவரும் Swathi Soft Solutions நிறுவனத்திற்கும், தொடர்ந்து உழைத்துவரும் நண்பர் திரு. ரஞ்சித் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை!

    பவள சங்கரி

    தலையங்கம்

     உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து.  குறள் 1032

    பொருள்
    உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். 

    இயற்கைச் சீற்றங்கள், நீராதாரம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் இயல்பானது. இதற்காக அரசாங்கமும் உடனடியாக கடன்களையோ, வட்டியையோ ரத்து செய்தோ அல்லது இலவசமாக உரங்களை அளித்தும், மானிய விலையில் விதைகளை அளித்தும் விவசாயத்தைப் பாதுகாக்க ஆவண செய்ய முற்படுகின்றனர்.விளைச்சல், அறுவடை, அதனால் வரக்கூடிய இலாபம், இவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு தங்களுடைய தொழிலை நடத்துவது என்பது ஏனைய தயாரிப்பாளர்கள் போன்று விவசாயம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், விவசாயம் என்பது மற்ற தொழில்களைப் போன்றது அல்ல. இது நம் வாழ்வாதாரம். அதனாலேயே மற்ற அனைத்துத் தொழில்களைக்காட்டிலும் விவசாயம் உன்னதமானது என்று தெய்வப் புலவர்களும் அறுதியிட்டு கூறிச்சென்றுள்ளனர். அந்த உன்னத நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் அவரவர் கைகளில்தான் உள்ளது.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சமுதாய அக்கறையின்றி, அதிக இலாபம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விளைச்சல் பார்ப்பது வருத்தத்திற்குரிய விசயம். உதாரணமாக, தக்காளிப் பழத்திற்கு எடை கூடவேண்டும் என்று சில யுக்திகளை கையாளுகின்றனர். தண்ணீர் தாகத்திற்காக சாப்பிடக்கூடிய கோசாப் பழத்திற்கு (தர்பூசணி) சாராயம் ஊற்றி விளைவிப்பதாகக் கூறுகின்றனர். நம்முடைய முக்கிய உணவுப் பொருளான நெல்லை விளைவிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தியும், தேவையறியாமலே அவ்வப்போது உயிர்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுதெல்லாம், முதல் நாள் தயாரித்த சாதத்தை பழைய சாதமாக அடுத்த நாள் சாப்பிடும் சுகம், பெரும்பாலான வகை அரிசியில், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பினும் கிடைப்பதில்லை. பொதுவாக பழைய சாதமென்றால் தேவாமிர்தமாக இருந்த நிலை மாறிவிட்டது.

    அநேகமாக, இந்த பத்தாண்டுகளில்தான், முன்பு பயன்படுத்திய பசுந்தளை இயற்கை உரம் மற்றும் மறு சுழற்சி விவசாய முறைகள் போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் விவசாயப்பெருமக்களின் பொருளாதார நிலை வேண்டுமானால் உயரலாம். ஆனால் இதை உண்ணும் மக்களின் நிலை பற்றி சிந்திப்பார் இல்லை. தற்போது கிடைத்துள்ள சில புள்ளி விவரங்களின் படி இது போன்ற வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு தகவல் வாழையடி, வாழையாக நம் சந்ததிகள் தளைப்பதற்கான வாய்ப்பே அற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருகின்றன என்பதும் வல்லுநர்களின் கவலையாக உள்ளது. சக்கரை நோய்களின் தலையிடமாகவும், நம் இந்தியா, உலக அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமாராக ஏழு கோடி மக்கள் சக்கரை வியாதி பாதிக்கப்பட்டவர்களாகவும், 14 கோடி மக்கள் சக்கரை நோய் வருவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருவாரியான வழக்குகள் ஆண்மை குறைபாடு உள்ள காரணத்தினால் விவாகரத்து நாடி நீதி மன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கைகள் வெளியிடுகின்றன. விலை பொருட்கள் அனைத்தும் விலைக்காக மட்டுமல்லாமல் மக்கள் நோய் நொடியின்றி வாழும் வகையில் விவசாய உத்திகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. நன்கு ஆய்வு செய்து தேவையென்றால் மட்டுமே பூச்சுக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும்.

    சமீபத்தில் ஈரோடு அருகில், சித்தோடு எனும் இடத்தில், நாட்டுச் சக்கரை, வெல்லச் சந்தையில் நடந்த நிகழ்வு இது. வெல்ல உருண்டைகள் வெளிர் மஞ்சளில் இருந்தால் நல்ல விலை கிடைக்கும் என்பதால், ஏதோ இரசாயணப் பொருட்களைப் பயன்படுத்தி பழுப்பு நிறத்தை நீக்கிவிட முயன்றிருக்கின்றனர். இதனை அறிந்த, கொள்முதல் பண்ணுவதற்காக வந்திருந்த அனைவரும் 15 டன் பொருட்களையும் வாங்க மறுத்துவிட்டனர். இது அடிக்கடி தொடரும் நிலையாகவே உள்ளது. அதேபோல் ஆலைக் கரும்பின் எடை கூடுவதற்காக பயன்படுத்தும் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

    இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, நம் அரசு ஆய்வகங்களின் மூலமாக ஆய்வு செய்து, அதன் பின் விளைவுகளை கணக்கில்கொண்டு எந்த விதமான உரங்களை, எவ்வளவு அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதற்கான அறிக்கைகளை வெளியிட்டால். விவசாய பெருமக்களுக்கும் பேருதவியாக இருக்கலாம். அறியாமையால் செய்யப்படும் தவறுகளும் திருத்தம் பெறலாம். நம் வருங்காலச் சந்ததியினர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்ற உத்திரவாதமும் இருக்கும் என்பதே நிதர்சனம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    நெட்டிப் பிள்ளையார்

    crazy

    “லேசிகனாய் ஆனான்பார் லம்போ தரந்தனது
    மூஷிக வாகனர்க்காய்; முத்தமிழ் -தேசிகன்
    “வித்யா ததாதி வினயம்” உணர்த்துதிங்கு
    சித்யானைக் குட்டி சிறுத்து”….கிரேசி மோகன் ….

    வினயம் வித்தைக்கு அடையாளம்….
    சித்தானைக் குட்டி -சித் + யானைக் குட்டி….

    Share
  • அப்பாவின் அரிவாள்மனை

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    அரிவாள்மனை மனம் நிறைந்து போயிருக்கிற தருணம்.  இந்தப் பதிவை நானாகத் துவக்க வில்லை. அதுவாகத் துவங்கிக் கொண்டது. போனவாரம் என் தங்கைகளும் ஒரு தங்கையின் மகளும் வந்திருந்தனர். அப்போது என் தங்கை மகள் கத்திரிக்காய் காரக்குழம்பையும், மெல்லிதாக நறுக்கிச் செய்த முட்டைகோஸ் கறியையும் விரும்பிச் சாப்பிட்டாள்.

    இரவு வீட்டுக்குப் போய் தன் அம்மாவிடம் (என் தங்கையிடம்) “மாமா வீட்டில் கோஸ் கறி அம்மா சான்ஸே இல்லை அப்படி ஒரு ஃபைன் கட்டிங்” என்றாளாம். அவள் எனக்கு ஃபோன் பண்ணி இதைத் தெரிவித்தாள்.

    நான் தொலைபேசியில் அவளுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். “உன் அம்மா மூலம் நீ அனுப்பிய பாராட்டை என் விளியேமனைக்கு சேர்ப்பித்துவிட்டேன்” என்று.

    அதற்கு அவள் பதில் செய்தியாக “your viliyeymane has created more expectations” என்று செய்தி அனுப்பினாள். விளியேமனை என்றால் அரிவாள் மனை. அப்பாவின் நினைவு மேலோங்கியது. அப்பாவின் ஒவ்வொரு செயலும் எனக்குப் பாடமாக இருப்பவை. அப்பா ஒரு பிரம்மா, விஷ்ணு, சிவன்(ருத்ரன்). படைக்கும் போது அவர் பிரம்மா, எங்களை வளர்த்து காப்பாற்றிய விஷ்ணு. எங்களிடம் மட்டும் அவர் காட்டும் அநியாயக் கோபத்தில் ருத்ரன்.

    கத்தி, சாப்பர் எல்லாம் வந்துவிட்டாலும் எனக்கு இன்றும் என் அரிவாள் மனைதான். அது அப்பா எனக்கு விட்டுச் சென்ற வித்தை. கோவையில் என் மகன் வீட்டிற்கு சென்றபோது காய்கறி நறுக்க உட்கார்ந்தேன். உருளைக் கிழங்கு நறுக்க வேணும். நான் நறுக்கத்துவங்கிய போது அவன் கட்டரைக் கொண்டு வந்து அப்பா இதுல வைச்சு ஒரு ப்ர்ஸ் பண்ணு என்று பண்ணிக் காட்டினான். எல்லாம் ஒன்று போல கீழே இறங்கியது. எளிதில் முடிந்து விடும் என்றான்.

    எனக்கு அதில் விருப்ப மில்லை. எல்லாம் ஒன்றாக இருப்பதில் ஸ்வாரஸ்யம் இல்லை. உருளையின் வடிவம்  பொருத்து விரல்கள் செய்யும் வித்தையில் அரிவாள் மனையில் கீழ் விழும் துண்டுகள் காட்டும் ஜாலம் தனிதான்.

    அப்பா சமையல் கலையில் வல்லவர். வங்கிப்பணியில் இருந்தாலும் அவர் விரும்பிச் செய்வது சமையல். எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் அம்மா அரிவாள் மனையைத் தொட்ட நாட்கள் மிகச் சொற்பம். அப்பா தன் கடைமைகளைத் தவறாமல் செய்வார். அதில் ஒரு நிதானம் அழகு மிளிரும்.

    காய்கறி மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வருவார். அம்மா குளிக்கப் போகுமுன் அன்றைய சமையலை அறிவித்து விடுவார். அதில் ஒரு நல்ல சுழற்சி இருக்கும். எங்கள் கன்னட குடும்பங்களில் சாம்பார், பிட்லை மோர்க்குழம்பு, ஹூலிபல்ய என்ற பருப்பு வகை தவிர்த்து கொச்சு, கொட்டு கூட்டு, ரஸவாங்கி, காயரஸா, மெந்துலி, பர்த்தா, அரத ஹூலி என்ற புளிக்குழம்புகளின் அணிவரிசை உண்டு.

    சாம்பாரில் மூன்றுவகை, பிட்லை ஒன்று, மோர்க்குழம்பு இரண்டு வகை. பருப்பு போட்டு சாம்பார் என்றால் கொட்டு ரஸம். சாம்பாருக்கு காரக்கறி, குழம்புக்கு தேங்காய் கறி…இப்படி.

    மார்க்கெட் போகும்போது என்னையும் அழைத்துப் போவார். அலுக்காத வகையில் காய்கறி வாங்குவார். விருந்தினர் வருகையின் அளவையும் தேவையையும் மனதில் கொண்டு வாங்குவார். சில சமயம் வீட்டுத் தோட்டத்து காய்களை கலந்து கொள்வார்.

    வந்தவுடன் தாழ்வாரத்தில் வந்து அமர்வார் அம்மா அரிவாள் மனையும் பாத்திரங்கள் தட்டுக்களை முன் வைப்பார். அப்பா நறுக்கத் துவங்குவார். அவர் செய் நேர்த்தி காண கொடுத்து வைக்க வேண்டும். தோல் உரிக்கும்போது அவர் கைக்கும் அரிவாள் மனைக்கும் ஒரு சங்கேத மொழி உருவாகும். பழுதில்லாமல் தோல் மட்டும் உரிந்து விழும்.

    அதன் பிறகு சாம்பாருக்கு வடிவம் பெறும். பூசனிக்காய் சாம்பார் என்றால் அச்சு வெல்லம் போல் நறுக்கி வைப்பார். கூட்டு என்றால் க்யூபிக் போல இருக்கும். பாத்திரத்தைப் பார்த்தால் சீராக இருக்கும். பரங்கிக்காய் ஹிலிபல்யம் என்றால் மாங்காய் பத்தை பீச்சில் விற்குமே அப்படி பல் பல்லாய் வடிவம் பெறும். கத்திரிக்காய் சாம்பாருக்கு நீட்டு வாக்கில் நீரில் மிதக்கும். பொரியலுக்கு கட்டம் கட்டமாக நீரில் மிதக்கும். பிட்லைக்கு காய்கள் தட்டில் சீர் போல் வைத்திருப்பார். கொத்தவரங்காய் மூன்றாய் கிள்ளி ஒரு மூலையில் இடம்பிடிக்கும். சௌசௌ செவ்வகமாய் இருக்கும். கருணைக் கிழங்கு வட்டமாக நறுக்கப்படும். கத்திரிக்காய் நடுவில் நறுக்காமல் இருக்கும். பாகற்காய் விதை நீங்கி வளையங்களாய் ஒரு ஓரம் அலங்கரிக்கும். பிட்லைக்கு காம்பினேஷன் கோஸ் கறி. அந்த கோஸ் பெரிய கோளமாக வருவது அப்பாவின் கை பட்டு கத்தரித்து விழும்போது தேங்காய் பூ போல இருக்கும்.

    சேனைக்கிழங்கு கறி மோர்க்குழம்பிற்கு, அது ஒரு பேசினில் பரத்தப்பட்டிருக்கும். பாகற்காய் குழம்பிற்கு என்றால் நீட்டு வாக்கில் முதலையை கூறு போட்டாற் போல் இருக்கும். அதன் நடுவே இரண்டோ மூன்றோ பச்சை மிளகாய் மூக்கு கீறி இணைந்திருக்கும். பரங்கியின் குடல் பிரித்து விதை நீக்கி துகையலுக்கு நறுக்கி வைப்பார்.

    வெண்டைக்காய் குழம்புக்கு நீட்டமாகவும், கறிக்கு திட்டமாகவும், பச்சடிக்கு ஸ்லைசாகவும் உரு மாறும். பேசிக்கொண்டே நறுக்குவார். குப்பைகளை அவ்வப்போது அகற்றி வைப்பார்.

    வாழைக்காயை நறுக்கும்போது தோல் எடுத்து நீரில் மிதக்க விடுவார். வறுவலுக் கென்றால் இரண்டாக நறுக்கி குறுக்கு வெட்டில் ஒரு அளவு வரை போய் நிறுத்தி விடுவார். வறுவல் கட்டையில் தேய்த்தால் அளவு கச்சிதமாக இருக்கும்.

    காரக்கறிக்கு மறுபடியும் சதுரமாகும். சேப்பங்கிழங்கை கோணியின் மீது தேய்த்து அதன் தோல் உரிப்பார். வறுவலுக்கு அது உருமாறும். முருங்கை காயின் நீளம் அவர் கைகளில் அளவெடுக்கும். முனை போக முழுவதும் ஒரே அளவாக தட்டில் விழும். முள்ளங்கி தோல் சீவி வட்டமாக ஒரு சீராக தட்டில் விழும். வெங்காயம் தோல் உரித்து தட்டில் ஒரு பகுதியில் இருக்கும்.

    அவர் நறுக்கி வைத்ததைப் பார்க்கும் போதே அன்று என்ன சமையல் என்று பார்ப்பவர்களுக்குத் தெரிந்து விடும். கீரை நறுக்கும் போது அவர் கையில் அகப்படும் கீரைக் கத்தை அரிவாள்மனையில் ஒரு பக்கம் பொருத்தி இன்னொரு கையால் அதை நறுக்குவார். கீரை அப்படியே பொடிசாக விழும். அதை தண்ணீரில் மிதக்க விட்டு பச்சைமிளகாய் நடுவில் போடுவார்.

    வீட்டில் விழுந்த வாழை மரத்தை வெட்டி அதன் பட்டையைப் பிரித்து அதை பக்குவமாக சீவி அதற்கு மட்டும் கத்தி. ஒரு பட்டையை இரண்டாக ப் பிரித்து இரண்டையும் தேங்காய் விளக்குமாற்று குச்சியால் தைத்து இலையாக போடுவார். அதில் தயிர் சாதம் சாப்பிட்டால் அவ்வளவு ருசி போங்கள்.

    வாழைத்தண்டை தோல் சீவி அதனை வட்டவடிவாக நறுக்கி அதனை நெடுக்கில் சீவி தண்ணீரில் போடுவார் . அது குழம்பிலும் மோர்க்கூட்டிலும் குழைந்து போகும்.

    ஏகாதசி அன்று மறுநாள் துவாதசிக்காக அகத்திக்கீரை கட்டு வாங்கி இலை உதிர்த்து பழுப்பு நீக்கி நறுக்கி வைப்பார். வாழைத்தண்டின் வெட்டப்பட்ட சக்கரங்களில் நாங்கள் விளக்கமாற்று குச்சியைச் சொருகி தேர் பண்ணுவோம். வெண்டைக்காய் தலையைச் சுவரில் ஒட்டுவோம். அகத்திக்கீரை களைந்த குச்சிகளை ஒன்றாக்கி வாழை நாரில் கட்டி விளக்குமாறாக்குவோம்.

    பரங்கி விதைகளைப் பொறுக்கி கழுவி வெய்யிலில் உலர்த்தி தோல் பிரித்துத் தின்போம். வாழைப்பூவின் தலைப்பகுதியை அதன் துவர்ப்பினை அனுபவிக்க பச்சையாக தின்பது ஒரு தனி சுகம்.

    குப்பையையா வாரி முறத்தில் வைத்து கொல்லையில் மாட்டுதொட்டியில் கழுநீருக்கு நடுவில் போட்டால் வாணவில்லின் வர்ணஜாலமாய் பச்சை மஞ்சள் எல்லாம் இருக்கும்.

    அப்பா அந்த அரிவாள் மனையை நேசத்தோடு பாது காப்பார். ஆறு மாதம் ஒரு முறை அதற்கு வாசலில் வருபவனிடம் சானை பிடிப்பார்.  சாணை பிடிக்கும் போது காலால் அவன் சக்கரத்தைச் சுழற்றி சுழலும் சாணக்கல்லில் இந்த அரிவாள் மனையின் முனைகளை பக்க வாட்டில் தொடும்போது தீப்பொறி பறக்கும். பூசணிக்காய் அரிந்தால் கூர் அதிகமாகும் என்று அப்பா சொல்வார்.

    எனக்குத் தெரிந்து இரண்டு முறை அரிவாள் மனை தலை கழண்டு விட்டது. விழுவதற்கு முன் கொஞ்சநாள் அந்த பகுதி சூரன் தலை போல் ஆடும். அப்பறம் ஒரு நாள் வீழும்.

    புது அரிவாள் மனை புழக்கத்திற்கு வரும். முதலில் கொஞ்சம் விரலைப் பதம் பார்க்கும். அப்பா விரலை தலைமேல் பிடித்துக் கொண்டு வலியில் அவர் முகம் கோணலாகும். பார்க்கப் பாவமாக இருக்கும். ஒருநாள் அம்மாவே காய் நறுக்குவாள். அப்பாவின் நேர்த்தி அதில் இருக்காது.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பா தன் அரியாசனத்தில் அமர்ந்து விடுவார். புது அரிவாள் மனையுடன் தோழமை கொண்டு விடுவார். இன்று நான் அரிவாள் மனையுடன் தோழமை கொண்டுள்ளேன். என் வாரிசு கத்திக்கும் கட்டருக்கும் மாறிவிட்டது. எனக்குப் பிறகு “விளியேமனை” எங்கள் வீட்டிலிருந்து மெல்ல விடைபெறும். அது வரை அதனை போற்றிப் பாதுகாப்பேன்.

    சமையல்காரர்கள் உபயோகிக்கும் அரிவாள் மனை, கத்தி, கரண்டி எல்லாம் அளவில் பெரியதாக இருக்கும். வீட்டு அரிவாள்மனை திட்டமாக இருக்கும்.

    அரிவாள் மனைமுன் அமரும்போது அப்பா என் மனம் முழுக்க வியாபித்திருப்பார். பெற்றவரை எப்படி வணங்கினால் என்ன. நான் தொழிலால் வணங்குகிறேன்.

    உங்கள் வீட்டில் அரிவாள்மனை இருந்தால் ஒரு முறை அதன் முன் அமர்ந்து அந்த ஆனந்த்தை அனுபவியுங்களேன்.

    படம் உதவி: Aruvamanai (Photo credit: Technofreak)
    http://thesoulbistro.wordpress.com/2013/07/11/ruminations-of-an-octogenarian/

    Share
  • காதல் நாற்பது (20)

    உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு

    jay1

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    நேசனே! என்னரும் நேசனே!
    நினைத்துப் பார்க்கும் போது,
    ஓராண்டுக்கு முன்பு நான்
    பனித் தளத்தில்
    தனித்தமர்ந்த சமயத்தில் நீ
    இத்தரணி மீது இருந்தாய், ஆயினும்
    எத்தடமும் காணேன்!
    அமைதி மூழ்கிக் கிடந்தது!

    உந்தன் குரல் செவியில் விழும் நேரம்
    வந்திட வில்லை,
    என் தொடர்புச் சம்பந் தங்களை
    எண்ணிப் பார்த்தேன்,
    ஒவ்வோர் சங்கிலிக் கோப்பாக!

    உன்கரம் புரியப் போகும்
    எவ்வித உடைப்பும்
    முறிக்காது
    அந்தப் பிணைப்பை!
    ஏனென்று வாழ்விலே ஆச்சரியம்
    எழுவதும் விந்தைதான்!
    இரவோ, பகலோ எதுவாயினும்
    உன் உரையோ,
    அல்லது உன்னரும் பணியோ
    புல்லரிப் பளிப்ப தில்லை
    உனக்கு!

    ஏதோ உனக்குள்ள முன்னறிவால்
    வெள்ளைப் பூ மலர்வதைக் கண்டாய்!
    நாத்திகர் மந்த புத்திக் காரர்!
    ஊகிக்க முடியாது
    அவரால்
    ஊனக்கண் காணா கடவுளின்
    இருப்பை !

    ********************

    Poem -20

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Beloved, my Beloved, when I think
    That thou wast in the world a year ago,
    What time I sat alone here in the snow
    And saw no footprint, heard the silence sink
    No moment at thy voice, but, link by link,
    Went counting all my chains as if that so
    They never could fall off at any blow
    Struck by thy possible hand,–why, thus I drink
    Of life’s great cup of wonder! Wonderful,
    Never to feel thee thrill the day or night
    With personal act or speech,–nor ever cull
    Some prescience of thee with the blossoms white
    Thou sawest growing! Atheists are as dull,
    Who cannot guess God’s presence out of sight.

    *********

    Share
  • கிருஷ்ண பக்ஷ லீவு

    — விசாலம்.

     

    pitru-tarpanam

    பித்ரு லோகத்தில்  பல பித்ருக்கள் மிக  ஆவலுடன் தங்கள் தலைவர் வரும் நேரத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

    “என்ன  நம்ம யமராஜரை இன்னும் காணுமே” என்று ஒருவர் கேட்க, “அவரா, அவர்தான் காலன் ஆயிற்றே. நேரத்தை மிகச் சரியாக … ஒரு நொடி கூட அங்கும் இங்கும் போகாதபடி அல்லவா  தன் கடமைகளைச்  செய்வார்” என்று வேறு ஒருவர் பதிலளிக்க, அவர் பதில் அளித்து முடியுமுன்னே கருத்த நிறத்துடன் வாட்டசாட்டமாக
    யமதர்மராஜன் நுழைந்தார்.

    அவர் நுழைந்தவுடன் பவ்யமாக எல்லா பித்ருக்களும் வணங்கினர் .

    “பித்ருக்களே சூரியன் கன்யா ராசிக்கு வந்துவிட்டது. இன்னும் சில நொடிகளில் கிருஷ்ணபக்ஷமும் தொடங்கப்போகிறது. உங்கள் லீவு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம். ஒரு பதினைந்து நாட்கள் பூலோகத்திற்குச்  சென்று உங்கள் சந்ததிகளைப் பார்த்து மகிழ்ந்து  அவர்களுக்கு ஆசிகள் வழங்கி விட்டு வாருங்கள். அவர்களும் உங்களுக்கு தகுந்த மரியாதை செய்து உணவும் படைப்பார்கள்.  உங்கள் யாவருக்கும் என் நல் வாழ்த்துகள்”  என்று கம்பீரமாக அமர்ந்தபடி வாழ்த்தினார்.

    புதிதாக வந்த பித்ரு ஒருவர்  தன் நண்பர்களிடம் “அன்பர்களே நான் இப்போது தான் முதல் தடவையாக பூலோகம் போகிறேன். என் பையன்கள் இருவர். ஒருவன் அமெரிக்காவில் இருக்கிறான். இன்னொருவன்  சென்னையில் இருக்கிறான். நான் எங்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் ” என்றார்.

    அதற்குள் இன்னொரு பித்ரு “ஆமாம் நான் என்ன செய்ய? எனக்கு குழந்தைகள் இல்லை. எனக்கு யார் மரியாதை செலுத்தி சாப்பாடு போடப்போகிறார்கள். மூத்தவரே நீங்கள் இதைப்பற்றி விளக்குங்களேன்” என்றார்.

    நன்கு அனுபவப்பட்ட பித்ரு  பேச ஆரம்பித்தார்.

    “கவலைப்படாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் ஒரு நாள் ‘காருண்யக பித்ரு’  என்று  வரும். அந்த நாளில் உங்களுக்கு பிடித்த ஒருவர் உங்களுக்கென்று இதை செய்யலாம். உங்கள் நண்பர் கூட இதில் பங்கு பெறலாம். அதனால் குழந்தைகள் இல்லையே என்று வருத்தம் அடையாதீர். தவிர நம்மைப்போல் இருப்பவர்கள் எங்கும் ஒரு நொடியில் போக முடியும். ஆகையால் அமெரிக்காவுக்கும் போகலாம். சென்னைக்கும் போகலாம். செய்பவர்களின் சிரத்தையைப்பொருத்து தான் பலன் கிடைக்கும். இந்த பதினைந்து நாட்களில் சதுர்தசி  திதியன்று  துர்மரணம் அல்லது விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  மட்டும் திதி செய்வார்கள்.. அமாவாசையன்று விதவையோ அல்லது பிரம்மசாரியோ இந்த சம்ஸ்காரத்தை செய்வார்கள்.”

    “நம்முடன் வேறு யாரோ வருவது போல் தெரிகிறதே?”

    “ஆமாம், நம்முடன் விஸ்வதேவர்களும் வருவார்கள். அவர்களும் நடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். சரி இப்போது   நாம் பிரியலாம் அவரவர்கள் போக வேண்டிய இடத்திற்குப் போய் வரலாம். நவராத்திரி அமாவாசையின் போது இந்த இடத்தில் சந்திக்கலாம் . சரி தானே?”

    “ரொம்ப நன்றி. நாம் வந்து சேர்ந்த பின்  நடந்தவற்றை தெரிந்துக்கொள்ளலாம். இப்போது  கிளம்பலாமா?”

    காட்சி 1:

    ஒரு பித்ரு தான் வரவேண்டிய   இடத்திற்கு வந்து வாசலில் நிற்கிறார். உள்ளே தம்பதிகள் பேசும் சத்தம் கேட்டது .

    “ஏன்னா..  எங்கே கிளம்பறேள்? இன்னிக்கு லீவுக்கு   சொல்லலையா?  ஹிரண்ய சிராத்தம் செய்யணும்னு சொன்னேனே?”

    “ஆமாம் நீ சொன்னே ! எனக்கு அர்ஜண்ட்டா ஒரு மீட்டிங் வந்துடுத்து. அதை அட்டெண்டு செய்யலைனா ரொம்ப லாஸ் ஆயிடும் . நீயே வாத்தியார் வந்தா வாழைக்காய் , அரிசி கொடுத்துடு. தெரிஞ்சுதா?”

    “அப்படி கொடுத்தா  பலனில்லைனா. நீங்க கொஞ்சம் லேட்டா போங்களேன்”

    “மேலுக்கு மேலே பேசாதே சொன்னத்த செய்”

    பித்ரு இதைக்கேட்டப்பின் அங்கே நிற்கவில்லை. மேலே நடையைக் கட்டினார் .

    காட்சி 2:

    இன்னொரு பித்ரு தான் போகும் வீட்டைக்கண்டு பிடித்து அங்கு உள்ளே நுழைந்து பார்க்க, அங்கே  மாம்பலத்தில் இருக்கும்  அவரது  மூத்த பையன் வாத்தியார் சொல்லும் மந்திரங்களைச்சொல்ல,  அவன் கூட  அவனது   தம்பியும் அமர்ந்து சொல்ல  பார்க்கவே மிக அழகாக இருந்தது. அந்தப்பித்ருவுக்கு ரொம்ப திருப்தி. தனது இரு மக்களும் மிக அழகாக  அமர்ந்து  சொல்வதைப்  பார்க்கவே   அவர்களுது சிரத்தை தெரிந்தது.  “ஆஹா, இந்தக்காலத்தில் இரு மருமகள்களும் அழகாக மடிசார் புடவையில் நிற்கிறார்களே. தவிர பாத்திரங்களும் எவர்சில்வர் எல்லாமல் வெள்ளியாக இருக்கின்றதே.  சாஸ்திரம் நன்றாக படிச்சிருப்பார் போலிருக்கு. நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் , எனக்கு ரொம்ப திருப்தி ” என்று சொல்லியபடி நகர்ந்தார்.

    காட்சி 3:

    வேறொரு பித்ரு தன் குழந்தைகளைப்பார்க்க  மிக ஆசையாக அவரது இடம் போய் நின்றார். அவரது பேரன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க பேத்தி  டிவி பார்த்தபடி இருந்தாள். எங்கே  வேறு ஒருவரையும் காணோம். இன்னிக்கு என்னோட திதி ஆயிற்றே! என்றவர் நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த வீட்டுப் பணிப்பெண் வந்தாள்.

    “என்ன அம்மாவைக்காணோம்  எங்கிட்டு போயிருக்காங்க  லதா?”

    “பொன்னம்மா எங்க அம்மாவும் அப்பாவும் பிளைண்ட் ஸ்கூலுக்குப்போயிருக்கா.”

    “அது என்னாத்துக்கு அங்கிட்டு போயிருக்காங்க. எங்கிட்ட ஒன்னும் சொல்லலை”

    “அவங்க திடீரென்னு நினைச்சு அங்க போயிருக்கா, இன்னிக்கி தாத்தாவோட திதியாம். அதுக்கு பிராம்மணாள் கூப்பிடறதுக்கு பதிலா அன்னதானம் செஞ்சுடலாம்ன்னு யோசிச்சாங்க அதான் அங்கே போயிருக்காங்க.”

    “அது என்ன புள்ள!   ஐயர் வீட்ல திதி  செய்யாம எப்படி விட்டுடறாங்க? ஐயோ, எனக்கென்ன இத பத்தி. இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். எனக்கு எதுக்கு இந்த வம்பு.”

    “அட போ பொன்னம்மா, இத்தன தூரம் பேசிட்டு இப்ப என்ன வம்புன்னு ஏன் சொல்றே? சரி சரி போய் உன் ஜோலியைப் பாரு”

    இத்தனையும் கேட்டு நின்ற பித்ரு “சரி ஏதோ நல்லது பண்றான் பிள்ளை. சினிமா பீச்சுன்னு சுத்தாம ஏதோ அன்னதானமாவது பண்றானே! ஆனாலும் அது என் பசிக்கு வராது. ஹிரண்ய சிரார்த்தம் செய்தால்தான்  அந்தப்பொருள் எனக்கு வரும். அதுதான் என்னைச்சேர சரியான பாஸ்வேர்டு. பரவாயில்லை, என் பசி இருக்கட்டும்  அவனுக்கு புண்ணியம் சேருமே அது போதும் எனக்கு. குழந்தைகள் எல்லாம் என் ஆசிகளோட நன்னா வாழட்டும்,”    என்றபடி அங்கிருந்து நடையைக் கட்டுகிறார்.

    காட்சி 4:

    இந்த சீனில் நடப்பது என்ன?  வாசலில் வந்து நிற்கிறார் ஒரு பித்ரு.

    மருமகள் கத்துகிறாள் “வாட் அ ஸில்லி திங்க் ?  எப்பவோ செத்து போனவர்  இப்ப வந்து நாம  கொடுக்கறதை வாங்கிண்டு  பிளஸ் பண்ணுவாராம், எனக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லை. ஸ்டுப்பிட் திங். நான் ஆபீஸ் போகப்போறேன். “

    “அடி சுசீ, இன்னிக்கி ஒரு நாள் கோவாப்ரேட் செய்ய மாட்டாயா? இப்படி பேண்டும்  ஷர்ட்டும் போட்டுண்டு கிளம்பறே.”

    ” எஸ்  வாட்ஸ்  ராங் இன்  திஸ்? என் ஆபீஸ்ல எனக்கு   என்ன மாதிரி போஸ்ட்ன்னு உனக்கு தெரியாதா? நீ எப்படியோ இன்னிக்கி  மேனேஜ் பண்ணிக்க. யூ டூ வாட்டெவர்  யூ லைக்  ஐ வோன்ட் இன்டர்பியர், அண்டர்ஸ்டுட் ?”

    “சரி  என்ன குக் செய்திருக்கே ?”

    “வெங்காயம் போட்டு மஸாலா தோஸா? வெஜ் பர்கர் …தென்..     நூடுல்ஸ்”

    கணவானான முரளி பரிதாபமாக அவளைப்பார்க்க,  அவள் கதவை டபார் என்று சாத்தியபடி வெளியேறுகிறாள் .

    காட்சி  5:

    இதையெல்லாம் பார்த்த பித்ரு அங்கிருந்து கிளம்பி வரும் போது அவரது அண்ணாவைப் பார்த்தார். அண்ணா  அடையார் பக்கம் போய்க்கொண்டிருக்க தம்பி பித்ருவும் அவருடன் சேர்ந்துக்கொண்டார். இருவரும்  அடையார் வீட்டில் நுழைந்தனர். அங்கு  வயதான சுமங்கலி அமர்ந்து ஒரு அமெரிக்கப்பெண்மணிக்கு மஹாளயம் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்.விவரித்த விதம் பார்த்தாலே அவர் பெரிய புரபஸர் போல் தெரிந்தது. அந்தப்பெண்மணியும் லில்லி என்ற தன்  பெயரை லீலா என்று ஆக்கிக்கொண்டிருந்தாள்.  அவளது முடி பொன் நிறமாக இருக்க அதைக்கொண்டைப்போட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடலுக்கு நீலப்புடவை  அவள் சோபையை இன்னும் கூட்டியது. அவளது கணவன் சியாம்   நியூ ஜெர்ஸியிலிருந்து சிரார்த்தம் செய்ய தன் புது அமெரிக்க மனைவியுடன் வந்திருந்தான். அவனும் பஞ்சகச்ச வேஷ்டியுடன் வாத்தியாரை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனது மனைவி லீலா மிகவும் சிரத்தையாக எல்லாவற்றுக்கும் விளக்கம் கேட்டபடி அன்றைய காரியங்களில் கைக்கொடுத்தாள். வீட்டில் எல்லோரும் படித்தவர்கள் ஆனதால் அங்கு ஆங்கிலம் மொழி நிலவினாலும் நடைமுறையெல்லாம் தமிழ் நாட்டு பண்பாட்டைப்பின் பற்றியதாகவே இருந்தன. வாத்தியார் வந்தார். காரியம் செய்து வைக்கும்போது வேறு யாராவது பெயர் இதில் சேர்க்க வேண்டுமா என்று கேட்க “ஆமாம் என் சித்தப்பாவும் இறந்து விட்டார். அவர் பெயரும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.  இதையெல்லாம் பார்த்தபடி  அண்ணா பித்ரு தம்பியை பெருமையாகப்பார்த்தார். தம்பிக்கும்  தன் அண்ணண்  குடும்பம் மூலம்  தனது பெயருக்கும் ஒரு மரியாதை இருப்பதைக்கண்டுக்கொண்டார்.

    காட்சி 6

    “ஏண்டா ராமு.. உன் அப்பாவுக்கு மஹாளய தர்ப்பணம்   பண்ணியாச்சா?’

    “நேத்திக்கி தான் பண்ணினேன்.”

    “பின்ன என்ன உம்ம்ன்னு  சோகமா உட்க்கார்ந்திருக்கே”

    “பின்ன  என்ன மாமா. என் அண்ணா தம்பி எல்லோரும் வெளியூரிலே  நன்னா சம்பாதிச்சிண்டிருக்கா. நான் மட்டும் என் அப்பாவோட சேர்ந்து அப்பாவோட ஆசைக்கு மந்திரம் சொல்ல கத்துண்டேன். அவ்வளவுதான்  அதே என் வாழ்க்கை ஆயிடுத்து. என் அப்பா எனக்கு ஒரு கல்யாணம் கூட பண்ணி வைக்கலை. என்னவோ ஜாதகத்ல தோஷமாம்.  அவர் ஒரு சுயநலவாதி. அவரால் தனியா வைதீகம் செய்ய முடில, அதனாலே என்னை உபயோகிச்சுண்டார். அவரும் போய்ச்  சேர்ந்தார்  ஐந்து வருஷம் ஆயிடுத்து. இப்போ ஆயிடுத்து எனக்கும் 45 வயசு. ஒரு வருஷத்து மூணு தெவசம் செய்யறேன். இதே போல செஞ்சு செஞ்சு எனக்கே இப்போ ஒன்றும் பிடிக்கலை.”

    “நல்லதுதானே ராமு. எத்தனை பேரை நீ கரை சேர்க்கறே. உனக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும்டா.”

    “மாமா நான் இப்போ ஒண்ணு தீர்மானம் செஞ்சுட்டேன். நான் சன்யாசம் வாங்கிக்கலாம்ன்னு … அப்போ எனக்கு இது மாதிரி ஒன்றும் செய்யவேண்டாமே!”

    மாமா பரிதாபமாக அவனைப்பார்த்தார். இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த  பித்ரு ரூபத்தில் இருந்த ராமுவின் அப்பா அங்கிருந்து வருத்தமாக வெளியேறினார் .

    பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. பல பல அனுபவங்களுடன்  எல்லா பித்ருக்களும் வந்த இடத்திற்கே கிளம்பினர் எல்லோருடைய அனுபவத்திலும் கலி முற்றுகிறது என்ற உண்மை மட்டும் தெரிந்தது.

    ***

    மேலே குறிப்பிட்ட   சம்ஸ்கார நிகழ்சிகள்  யாவும் நான் பார்த்த உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை.  இவற்றையெல்லாம் பார்க்க  ஹிந்து  சம்ஸ்காரம் தேவையா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் அதை சரியாக புரியவைக்க ஒருவருமில்லையோ என்ற ஐயப்பாடு உண்டாகிறது. அதைப்புரிந்துக்கொண்டால் எல்லாம் ஒழுங்காக நடக்கலாம் .   பல பெரியவர்கள் கருத்தின் படி நம் வருங்கால சந்ததிகள்   அவர்களது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை  செய்ய வளமாக வாழ்ந்து  நன்றாக இருப்பார்கள்  என்று தெரிய வருகிறது. அதனால் இந்த சம்ஸ்காரத்தை செய்ய ஏன் தயங்க வேண்டும்?  இதற்கென்று அதிக சிலவுமில்லை. இரண்டு வாழைக்காய். கொஞ்சம் அரிசி, பருப்ப , வெற்றிலை பாக்கு, கொஞ்சம் தக்ஷிணை… அவ்வளவுதான். ஒரு  முப்பது நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிடும். டிவி முன்னாடி பல மணி நேரங்கள்  கழிக்கிறோம். இதற்கென்று கொஞ்சம் சமயம் அர்ப்பிக்கலாமே .

    படம் உதவிக்கு நன்றி:  http://www.maalaimalar.com/2014/05/09151209/pitru-tarpanam-to–provide-eka.html

    Share
  • அரவணைக்க வருவாரா?

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    aug7

     

     

     

     

     

     

     

    காஞ்சியிலே பிறந்த அண்ணா
    கண்ணியத்தைக் காத்தமையால்
    வாஞ்சையுடன் அவரைமக்கள்
    மனத்தினிலே இருத்திவிட்டார்!

    வாமன உருவுடையார்
    மனங்களை வெற்றிகண்டார்
    தூய்மையாய் ஆட்சிசெய்ய
    துணிவுடன் அண்ணாவந்தார்!

    இன்பத் தமிழுடனே
    இங்கிதமாய் ஆங்கிலத்தைப்
    பங்கமின்றிப் பேசிப்
    பலபேரும் மெச்சநின்றார்!

    சங்கத் தமிழறிவார்
    சபையறிந்தும் பேசவல்லார்
    எங்கும் அவர்முழக்கம்
    ஈடின்றி ஒலித்ததுவே!

    எதிரிகளைக் கூடஅவர்
    இன்முகமாய்ப் பார்த்தாரே
    சதிகாரக் கும்பலையும்
    தலைவணங்க வைத்தாரே!

    நட்புக்கு இலக்கணமாய்
    நம்அண்ணா இருந்தாரே
    நாடெல்லாம்  அவர்புகழை
    நாளுமே சொல்லுதிப்போ!

    மதிநுட்பம் மிக்கஅவர்
    மன்னிக்கும் இயல்புடையார்
    நதியாகி நின்றுஅவர்
    நாட்டு வளமானாரே!

    பொதுவாகப் பேசிடினும்
    பொடிவைத்துப் பேசிடுவார்
    நிதிபோல இருந்ததனால்
    நெஞ்சமெலாம் நிறைந்துவிட்டார்!

    தென்னாட்டின் ’பெர்னாட்ஷா’
    என்றழைத்தார் அண்ணாவை
    சீர்திருத்தக் கருத்தையெலாம்
    சினமின்றிச் சொல்லிநின்றார்!

    மற்றவரின் மனமுடைய
    வக்கிரமாய்ச் சொல்லாது
    தேனோடு மருந்தாகச்
    சிந்தனையை ஊட்டினரே!

    வெற்றிலைக் காவியொடு
    வீசிஎறி சால்வையுடன்
    வித்தகர் சபைதனிலே
    விபரமாய்ப் பேசினரே!

    எத்திக்கு வினாவரினும்
    எதற்குமே அஞ்சாது
    ஏற்றபதில் கொடுத்தாரே
    எமதருமை அண்ணாவும்!

    எதிர்க்கட்சி சொன்னாலும்
    ஏற்றுநிற்கும் பண்பாளர்
    எதையுமே தனக்காக
    எடுத்தொதுக்கி வைக்கவில்லை!

    மாடிமனை சேர்க்கவில்லை
    வங்கியிலும் வைக்கவில்லை
    தேடித்தேடி வாசித்தார்
    திறனுடய நூல்களையே!

    பண்புநிறை அரசியலைப்
    பலருக்கும் காட்டிநின்றார்
    தன்புகழைப் பாடாது
    தரமுடனே அவர்நின்றார்

    அன்புகொண்டு அரவணைத்தார்
    ஆரையுமே நோகடியார்
    துன்பமெலாம் பட்டிடினும்
    துடிப்புடனே செயற்பட்டார்!

    அண்ணாவின் அடியொற்றி
    ஆரையுமே காணவில்லை!!!
    அவர்பெயரைச் சொன்னபடி
    ஆட்டமெலாம் போடுகிறார்

    அண்ணாவின் கால்பதிந்த
    அருமைத் தமிழ்நாடே
    அண்ணாவைப் போலொருவர்
    அரவணைக்க வருவாரா?

    Share