Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ …

    — கவிஞர் காவிரிமைந்தன். 

     

    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது இசையில் எப்போதும் ஒரு மயக்கம் பெறலாம். வசந்த மாளிகை முதலான வெற்றிப் படங்களும் சங்கராபரணம் போன்ற சங்கீதத் திரைப்படங்களும் அவருக்கே உரித்தானவை. அவர்தம் இசையில் உருவாகிய பாடல்களில் கர்நாடக சங்கீதம் கலந்திருப்பது இசை ரசிகர்களுக்கு நிச்சயம் பரிச்சயம். மன்னவன் வந்தானடி திரைப்பாடல் திருவருட்செல்வரில்கூட ‘கல்யாணி ராகத்தில் உருவானது’ என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்வர்.

    இப்போது நாம் காணவிருக்கும் திரைப்படப்பாடல் “முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ…” பால்குடம் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு வரிவடிவம் தந்தவர் கவிஞர் வாலி ஆவார். இசைவடிவம் தந்தவர் கே.வி.மகாதேவன் ஆவார். முழுமையான உற்சாகத்தில் பாடியிருக்கிறார் பி.சுசீலா.

    ஆணுக்குப் பெண் எப்படி துணையிருக்க முடியும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு நல்ல உதாரணம். குறிப்பாக கணவனின் இன்ப துன்பங்களில் சரிநிகர் பங்கேற்க துணைவரும் மனைவி, அன்பைப் பொழிந்து ஆதரவாய் இருந்து உபசரிப்பதில்தானே ஒரு ஆடவனின் உலகம் அடங்கிவிடுகிறது. குழப்பத்திலிருக்கும் ஆடவனை ஆதரவு மொழிபேசி அன்பின் வலைவீசி இன்பபுரி நோக்கி அழைத்துச் செல்லும் மனைவியை எப்படி ஒரு பாடலில் இப்படி பதிவு செய்து காட்ட முடியும். பாருங்கள்… கவிஞர் வாலியின் கவித்திறம்!!

    இரவின் மடியில் இப்பாடல் இதயங்களுக்கு கிடைக்கும் இன்பத்தாலாட்டு! உறவின்பிடியில் உள்ளங்கள் இணைந்தெழுதும் ஓரின்பக் காவியம்! எத்தனை முறை கேட்டாலும் இன்பமாகவே இருக்கும் அமுதமழை! மெய்மறந்து கேட்டு இன்புறவேண்டுமென்றால் தனிமையில் இப்பாடலை ஒலிக்கவிட்டு அந்த இசையின்பத்தில் மூழ்குங்கள், வாழ்க்கையின் இன்பம் வந்துவிடும்!

    முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
    அது கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ

    பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை நான்.
    உன் கண்ணிரடில் குடியிருக்கும் வண்ணப் பறவை நான்

    அன்பின் ஸ்பரிசத்திலே ஆராதனை நடத்தும் இன்பக்காட்சிகள் இப்பாடலைக் கேட்கும்போதே மனத்திரையில் தோன்றுவது தவிர்க்க முடியாதது. ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்கிற பாலும் பழமும் திரைப்பாடலில் கண்ணதாசன் கடைசிவரியில் சொல்வதுபோல, அடைக்கலமானேன் முடிவினிலே… அதைப்போலவே, ‘என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன்’ என்கிற வார்த்தைகளோடு நிறைவு செய்திருக்கிறார் வாலி!

    முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ அது
    கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ
    முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ

    பனிமலரும் முள்நடுவே மலர்ந்ததில்லையோ அதைப்
    பூங்காற்றும் ஆசை கொண்டு கலந்ததில்லையோ
    பனிமலரும் முள்நடுவே மலர்ந்ததில்லையோ அதைப்
    பூங்காற்றும் ஆசை கொண்டு கலந்ததில்லையோ
    (முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ)

    பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை நான் உன்
    கண்ணிரண்டில் குடியிருக்கும் வண்ணப்பறவை நான்
    பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை நான் உன்
    கண்ணிரண்டில் குடியிருக்கும் வண்ணப்பறவை நான்
    பொன்னகையும் புன்னகையும் பெண்மை கொண்டது
    நான் கொண்டதெல்லாம் திருமகனே நீ கொடுத்தது
    (முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ)

    மாலையிட்ட நேரம் தொட்டு மனைவியாகினேன் உன்னை
    மடியில் வைத்து கொஞ்சும்போது அன்னையாகினேன்
    சேவை செய்யும் வேளையிலே தாதியிகினேன் என்றும்
    இரவிலே தனிமையிலே துணைவியாகினேன்
    (முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ)

    காணொளி: https://youtu.be/ySOa67zaIWw

     

    Share
  • மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

    கவிஞர் காவிரிமைந்தன்

    ams

    ஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்தி வந்த கலைமகளும்
    எம்.எஸ்.வி. எனும் மகனை இத்தரணிக்குத் தந்ததனால்
    எங்களைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி. என்பதுவும்..
    இனியதொரு தமிழ்ச் சொல்லே..

    உலகில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள்.. இருப்பினும் amas
    ஒரு மாபெரும் கவிஞனுக்கு சிலை அமைத்த பெருமை
    எங்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களையே சாரும்.

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் – பம்மல் – 1993 முதல் இன்று அதிகாலை வரை
    எங்கள் அமைப்போடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடிய அன்பிற்கினியவர்..
    கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவிட முழுமையாய் தன்னை அர்ப்பணித்தவர்..

    பணிவு என்பதற்கு இலக்கணம் வகுத்து சங்கீதத்துடன் எனக்கு கொஞ்சம் இங்கிதமும் தெரியும்
    என்று பழகும் அனைவரையும் பண்போடு அரவணைத்து பாசம் பொழிந்து உபசரித்து
    உள்ளம் திறந்து உரையாடி மகிழ்ந்த அந்த குழந்தைக்கு வயது 87ஆம்…

    மண்ணிலே வந்து மக்கள் மனம் விரும்பும் இசையை தன் வாழ்நாள் எல்லாம் வழங்கி
    நம் நெஞ்சில் நிறைந்த அற்புத கானங்கள் பலவற்றிற்கும் ஜீவன் தந்து..
    இசையால் நம்மை ஆளும் மன்னர் இவராகி.. இன்று இம் மண்ணைவிட்டுப் பிரிந்தாரே..
    எங்கள் எம்.எஸ்.வி. பக்தி.. தாய் பற்று.. உழைப்பு, எனப் பல உயர் குணங்கள்
    ஒன்றெனத் திகழ்ந்த எம்.எஸ்.வி. கிருஷ்ண கானம் முதல் கேட்கும் கானங்கள்
    பெரும்பாலும் உம் பெயர் சொல்லுமே.. உலகம் உள்ளவரை காற்றில் தவழ்ந்திருக்கும்
    உன் பாட்டு மண்டலத்தில் இவ்வுலகம் கேட்டு மகிழ்ந்து துயில் கொள்ளுமே

    வாழ் நாளெல்லாம் கவியரசர் மீது அளவிலாப் பற்று வைத்து .. ams1
    இன்று அவர் இருக்கும் இடம்தேடிச் செல்கிறீரே..
    தமிழ்த் திரையின் ராஜ சிம்மாசனம் உமதென்பது
    காலம் எழுதி வைத்திருக்கும் கணக்கு..

    எங்கள் பிறவியில் உம்மோடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடினோம் என்பது
    நீங்கள் எமக்களித்த பெரும் பேறு.. உயிருள்ளவரை நன்றியுடன் உங்கள் புகழ் சொல்லுவோம்..

    கண்ணீருடன்….

     

     

     

    Share
  • மழை வருவது மயிலுக்கு தெரியும்

    கவிஞர் காவிரி மைந்தன்

    ரிஷிமூலம் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்! எஸ்.ஜானகி குரலில்.. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில்! திரையில் தோன்றுகிறார் கே.ஆர்.விஜயா..

    akv1வண்ணத்தில் தோன்றும் இந்தப் பெண்ணின் நிலை என்ன என்பதை தன் எண்ணத்தில் தோன்றிய வார்த்தைகளிட்டு கவியரசர் காட்டுகின்றார். தாயின் தவிப்பு.. தன் மகனைக் காணத் துடிக்கும் பரபரப்பு.. நடந்த கதையெல்லாம் நான்கே வரிகளில்.. அவளின் இன்றைய மனநிலை.. அதையும் படப்பிடிப்பு நடத்துகின்றார் கவிதையிலே! யாரிடமாவது அந்த மகிழ்ச்சியைக் கொட்டித் தீர்த்துவிட எண்ணும் தாயுள்ளம்.. தக்கதோர் வழியாக பாடல் ஒன்று பாடுகிறது! தேவைக்கேற்ற இசை அங்கே கரம்கோர்க்கிறது! தனது பாவங்களை..நளினங்களை எல்லாம் வரிகள் வலிமைப்படுத்தித் தருவதைப்போல் பாட்டு பயணம் போகின்றது!

    அம்மா என்றழைக்கும் பிள்ளை வரும்வரைதானே கணவன் கண்ணுக்கு முழுதாகத் தெரிகிறான்.. தன் வயிற்றில் கருவாகி.. உருவாகி.. உதிரத்தோடு கலந்த உறவாய் மகனோ மகளோ வந்துவிட்டால் அங்கே நாயகி தாயாகிவிடுகிறாள். தாயின் மனப்பான்மை, தனக்கென ஒரு உலகம் இனி இல்லையென தன் பிள்ளையே உலகமாய் விரிகிறாள்! அவள் கனவு.. நனவு எல்லாம் அவன்தான் என்றான பின்.. அவளுக்கான உலகம் எப்படியிருக்கும்? பட்டுத் தெறிக்கும் முத்துக்கள் போல வார்த்தைகள் வந்துவிழ அதைத் தொட்டு அளக்கும் இசையோ நம்மை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது!

    உள்ளத்தின் உணர்வுகளை எல்லாம் ஸ்வரங்களோடு மீட்டெடுத்து தருகின்ற கலைஞர்களாய் இசைஞானியும் கண்ணதாசனும் கைகுலுக்குகிறார்கள். மட்டில்லா மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரள.. தாயின் இதழ்கள் நடத்தும் உச்சரிப்பில் பாசமழை பொழிகிறதே! இந்த பூமி இன்னும் நனைகிறதே!

    https://www.youtube.com/watch?v=gSZQtUZ51xw

    மழை வருவது மயிலுக்கு தெரியும்akav
    மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

    மழை வருவது மயிலுக்கு தெரியும்
    மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
    இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
    மகனே கதிரவனாம் வரும் இரவினில்
    அவனே புது நிலவாம்

    மழை வருவது மயிலுக்கு தெரியும்
    மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

    அவள் கலகல கலவென இருந்தவள் தான்
    மிக படபட படவென பொரிந்தவள் தான்

    அவள் கலகல கலவென இருந்தவள் தான்
    மிக படபட படவென பொரிந்தவள் தான்
    அவள் சரி என நினைத்தது
    தவறென முடிந்தது கலகத்திலே
    அவள் மிக மிக பழையவள் உலகத்திலே
    இன்று மிக மிக புதியவள் குணத்தினிலே
    இது கலியுகமோ இல்லை புது யுகமோ
    இவள் இதயத்திலே… ஆ… ஆ…
    லலா லலா லலா லலா

    மழை வருவது மயிலுக்கு தெரியும்
    மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
    இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
    மகனே கதிரவனாம் வரும் இரவினில்
    அவனே புது நிலவாம்

    மழை வருவது மயிலுக்கு தெரியும்
    மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

    அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள்
    இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள்
    அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள்
    இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள்
    ஒரு மகனுக்கு தாயென
    உலகத்தில் யாருக்கு தெரிகின்றது
    அவள் மனதுக்குள் ரகசியம் இருக்கிறது
    அது கனவிலும் நினவிலும் தவிக்கின்ற்து
    அவன் மறந்துவிட்டான் இவள் மறக்கவில்லை
    கதை நடக்கின்றது… ஆ… ஆ…
    லலா லலா லலா லலா
    மழை வருவது மயிலுக்கு தெரியும்
    மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
    இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
    மகனே கதிரவனாம் வரும் இரவினில்
    அவனே புது நிலவாம்
    மழை வருவது மயிலுக்கு தெரியும்
    மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
    லல லலலல லலலல லலலா
    லல லலலல லலலல லலலா

    Share
  • நீ என்னென்ன சொன்னாலும் கவிதை …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

    பாடல் தோன்றிய கதை:
    ennenna2ஆற்காடு முதலி தெரு, தி.நகரில் மக்கள் திலகம் இல்லத்திலிருந்து புறப்படுகையில் புலவர் புலமைப்பித்தன் வந்து சேர்கிறார். தமிழைத் தன் உயிராய் நேசித்த தலைவன் அல்லவா? உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், , நா.காமராசன் என கவிஞர் பெருமக்களைக் கவர்ந்திழுந்த கதாநாயகன் அல்லவா? புலவரைக் கண்டதும் புளகாங்கிதம் அடைகிறார்! நல விசாரிப்புகள் தொடர்கின்றன.

    அடுத்து புலவரை நோக்கி, நான் மதிய உணவிற்கு இங்குதான் வருகிறேன். நீங்கள் இங்கு தங்கியிருந்து ஒரு இனிய பல்லவியை எழுதி வையுங்கள்! அந்தப் பல்லவி என்னை அசத்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துப் புறப்படுகிறார்.

    புலவர் கையில் ஏடெடுத்து, எழுதும் கோலெடுத்து, கற்பனை வானில் உலா வருகிறார். பொன்மனச்செம்மலின் புகழ்மணம் பற்றி புதிதாய் என்ன சொல்ல? அவரின் புற அழகை வர்ணிக்கவா? அக அழகை எண்ணிப்பூரிக்கவா? என்ன எழுதலாம் என்று எண்ணத்தேரோட்டம் நடத்துகிறார். தமிழன்னையின் இனிய முகவரி அது! என்னென்ன சொன்னாலும் கவிதைதானே!! கிடைத்துவிட்டது பல்லவி!!

    நீ என்னென்ன சொன்னாலும் …

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை … இனிமை… இளமை…

    புரட்சித்தலைவர் மதிய உணவிற்கு இல்லம் திரும்புகிறார். வாசலிலே நின்று வரவேற்ற புலவரை, எங்கே பல்லவி என்று கேட்க, ஏடெடுத்து தான் எழுதி வைத்ததைக் காட்ட, உச்சிமுகந்து மெச்சிப்புகழ்ந்த பல்லவியாய் அது ஆனது!

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை

    பல்லவியைத் தொடர்ந்து சரணங்களை மதிய உணவிற்குப் பின் எழுதிவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூற, புலவரோ, தலைவா எந்த ஒரு புலவனும் பசித்திருக்கும்போது சிந்தனைப் பிரவாகமெடுக்கும்! நீங்கள் குளித்துவிட்டு உணவு மேசைக்கு வரும் முன்னர் எழுதிவிடுகிறேன் என்றார்!
    அவ்வண்ணமே பாடல் முழுமை அடைகிறது!

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை ( நீ )

    சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து
    என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
    முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
    முத்துச் சரமென குறுநகை புரிந்து ( நீ )

    பொன்னில் அழகிய மனதினை வரைந்து
    பொங்கும் தமிழினி ல்கவிதைகள் புனைந்து
    பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
    கங்கை நதியென உறவினில் கலந்து
    உறவினில் கலந்து… ( நீ )

    வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
    வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
    உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
    இந்த உலகினை ஒருகணம் மறந்து
    ஒருகணம் மறந்து… ( நீ )

    சுகமான தமிழல்லவா? சுந்தர மொழியல்லவா? தன் நெஞ்சில் நிறைந்து அன்பில் ஆளும் தலைவனுக்காக இசையமைப்பாளர் அருகில் இல்லாமல், தயாரிப்பாளர் அருகில் இல்லாமல், இயக்குனர் கூட அருகில் இல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் தமிழே அருவியாய் பொழிந்த மழை! இது “நேற்று இன்று நாளைக்காக!!” ஆம்… மூன்று காலத்திற்கும் பொருந்தும் கவிதையை, காதல் கீதத்தை மெல்லிசை மன்னரின் கூட்டணியில் பாடும் குயில்களாக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாட இதோ …

    காணொளி: https://youtu.be/AKVgl3X95ow

    https://youtu.be/AKVgl3X95ow

    Share
  • உலகமெங்கும் ஒரே மொழி …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    உலகமெங்கும் ஒரே மொழி …

    உலகமெங்கும் ஒரே மொழிகாலவெள்ளத்தில் கரைந்துபோகாதது காதல் ஒன்றுதான்! உள்ளங்கள் பேசுவதற்காகவே உலகில் தோன்றிய மொழி! இந்த மொழியை எந்த மனிதனும் பேசாமல் இல்லை! அப்படிப் பேசமறந்தவன் மனிதனுமில்லை! ஜீவராசிகளில் மனிதனால் மட்டுமே வழிவழியாக மொழியப்படுவதுடன், கவிதைகளாய், காவியங்களாய், கலை வடிவங்களாய் பதிவுகள் செய்யப்பட்டுவரும் உன்னத மொழி காதல்!

    அன்பின் மறுவடிவம் காதல் என்பதை அறுதியிட்டுச் சொல்வதற்கு ஆதாம் ஏவாள் முதல் இன்றுவரை காதலர்கள் படையெடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அங்கு இங்கு என்று பேதம் இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கிற காதலை உலகமெங்கும் காண முடிகிறதல்லவா?

    இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் இனிமைதவழும் தென்றல்காற்று இதயத்தில் பரவிநிற்கும்! எளியதமிழில் கவிதைமுழங்கும் காதலின் ஊர்வலம்!

    கவியரசரின் கைவண்ணத்தில் ஒவ்வொரு வரியிலும் உன்னதம் தென்படுகிறது! மகத்தான சக்தியாய் விளங்கும் காதலின் மாண்புகள் புரிகிறது! அள்ளி எடுத்த பின்னும் இன்னும் அமுதசுரபியாய் விளங்குவது காதல் என்கிற சுகவரியில் கொஞ்சம் மூழ்கலாமே!

    நாடோடி திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மீட்டிய இசையில், கண்ணதாசன் கவிதைமழையில், கானக்குயில்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய கீதம்! காதலுக்கு இது ஒரு வேதம்!!

    உலகமெங்கும் ஒரே மொழி
    உள்ளம் பேசும் காதல் மொழி
    ஓசையின்றிப் பேசும் மொழி
    உருவமில்லா தேவன் மொழி
    (உலகம்)

    பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
    பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
    இரவு ஒன்று பருவங்கள் வேறு
    இன்பம் ஒன்று உருவங்கள் வேறு

    கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
    காதல் வேகம் காற்றிலும் இல்லை
    உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
    ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
    (உலகம்)

    ஒன்றே வானம் ஒன்றே நிலவு
    ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
    காதல் பேசி கவிதையில் ஆடி
    கலைகள் தேடி கலந்தவர் கோடி

    கோடி மனிதர் தேடிய பின்னும்
    குறைவில்லாமல் வளர்வது காதல்
    நாடு விட்டு நாடு சென்றாலும்
    தேடிச் சென்று சேர்வது காதல்
    தேடிச் சென்று சேர்வது காதல்
    (உலகம்)

    காணொளி: https://youtu.be/O2j_0yaXZkM

     

    https://youtu.be/O2j_0yaXZkM

     

    Share
  • அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

    akav1

    திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் வரிகள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.. வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டும் விளக்காக அமைய முடியும் என்பதற்கு சான்று பகரும் பாடல்களை கவிஞர் பெருமக்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோர் வழங்கியிருக்கிறார்கள்.

    சமுதாய அவள்கள், சீர்கேடுகளைச் சாடுவதும் அவற்றை சீர் செய்ய மொழியைப் பயன்படுத்துவதும் இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றானது. அவ்வாறு அமையும்போது செம்மை மொழிவளத்தால் இசைக் கோர்வையுடன் கை கோர்க்கும் வார்த்தைச் சரங்களை கொட்டிமுழக்கும் கொள்கைப் பான் பாடுகிறார்கள்.

    குறிப்பாக மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகனுக்காக இப்பாடல்கள் அமைந்துவிடும்போது புதிய பொலிவுடன் புரட்சியின் முழக்கங்கள் புறப்பட்டு வருகின்றன. ஆம். இதோ.. இந்தப் பாடல் தலைவன் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்தளித்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைப்பில் ஏழிசை வேந்தர் டி எம்.சௌந்தரராஜன் பாடியதாகும்.

    அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

    ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும் avali
    கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
    கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
    தீபத்தை ஏற்றி வைத்தான்
    ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
    பொருந்தாத பழக்கமெல்லாம்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்

    ……………………………..
    பாடல்: அறிவுக்கு வேலை கொடு
    திரைப்படம்: தலைவன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: வாலி
    இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
    ஆண்டு: 1970

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
    மூடப் பழக்கத்தை விட்டு விடு
    காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
    நம்மால் நாடும் மாற வேண்டும்

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

    ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
    கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
    கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
    தீபத்தை ஏற்றி வைத்தான்
    ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
    கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
    கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
    தீபத்தை ஏற்றி வைத்தான்
    ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
    பொருந்தாத பழக்கமெல்லாம்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

    மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
    மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
    தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
    தானறிய மறந்திருப்பார்
    மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
    மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
    தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
    தானறிய மறந்திருப்பார்

    பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
    பட்டது போல் திரும்பி வரும்
    பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
    பட்டது போல் திரும்பி வரும் இந்த்த்
    தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
    தீங்கு செய்யும் எண்ணம் வருமோ? இந்த்த்
    தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
    தீங்கு செய்யும் எண்ணம் வருமோ?

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
    ஆஹாஹஹ ஹா

    https://www.youtube.com/watch?v=alcegBOWi3I

    ஐந்து அறிவு வரை யுள்ள ஜீவன்களைத் தாண்டி ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தானே .. எது நல்லது.. எது கெட்டது எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற பகுத்துணர்வு மனித குலத்திற்கான மாபெரும் வரப்பிரசாதம். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்னும் குறளின் குரலும் கேட்கிறதல்லவா?

    வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் அறிவு வெளிச்சத்தில் மட்டுமே ஆராயப் பட முடியும். மட்டிலா நம் அறிவுச் சுரங்கத்தை எத்தனை சதவிகிதம் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற கேள்விக்கான விடையில் தனி மனித வாழ்வின் வெற்றிக்கான ரகசியம் அடங்கியிருக்கிறது.

    Share
  • முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்

    முத்துச் சிப்பி மெல்ல மெல்ல‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்றான் வள்ளுவன். மண்ணில் பிறந்த உயிர்கள் யாவும் ஒன்றையொன்று சார்ந்துவாழும் உன்னதம் ஜீவனில் தொடங்கியது. மானிடர்களே இந்த சொந்தமும் பந்தமும் மகத்துவமானது. ஈருயிர் இணைந்து ஓருயிர் தோற்றுவிக்க ஜனனக் கணக்கில் பூமிக்கு ஒரு வரவு! ஈன்றவள் நெஞ்சம் பெரிதுவக்க ‘தாய்’ என்று அவளும் மனதில் ஆர்ப்பரிக்க அந்த ஆனந்த வைபவத்தை அணுவணுவாய் ரசிப்பதிலே பெண்மை பெறும் சுகம் கோடியென்பேன்! பிஞ்சு மழலை முகம் பார்த்து அவள் சொல்லரும்பும் வேளையிலே என்ன என்ன வார்த்தை வரும்? கண்ணே கனியே முத்தே அமுதே என்று அல்லும் பகலும் தன் பிள்ளையே உலகம் என்றன்றோ மாறிவிடுவாள்?

    தன்னுறக்கம் மறந்து தன்னுயிராய் நினைந்து அன்னையவள் பாடும் பாடல் பிள்ளைக்கனி அமுதே! மழலையின் சின்னச் சின்ன சிணுங்கல்களும் சிங்கார அசைவுகளும் தாய் அவளுக்கு மட்டுமே தனித்துவமாய் புரியும்! அந்த இன்பபுரி நோக்கி இதயம் ஓடிவர, வண்ணக் குழந்தையது வளர்பிறைபோல் நிதம் வளர, தவழ்வதும் தாவி வருவதும் நின்று நடப்பதும் தாயவள் காணும் திருவிழாக்களே!

    ராமு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளை வழங்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை முழங்க, இன்னிசைப் பூங்குயில் பி.சுசீலாவின் குரலில் இழைந்து வரும் பாட்டு!

    திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில் வல்லமை பெற்ற கவிஞர்கள் பலரை நாம் கண்டிருக்கிறோம். கண்டு கொண்டிருக்கிறோம்! என்றாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்களது முத்திரை தனித்துவம் கதையை உள்வாங்கி அந்தப் பாத்திரங்களைப் பிரதி பிம்பம் எடுத்துக் காட்டும் கவிஞரை எவர்தான் இன்று வரை விஞ்சியிருக்கிறார் சொல்லுங்கள்?

    தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
    தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்

    கதையின் போக்கில் பிள்ளையின் அன்னை ஒரு கோர விபத்தில் மரணமடைகிறாள். அதைப் பார்த்த சிறுவன் அதிர்ச்சியில் பேசும் தன்மை இழக்கிறான். பட்டாளத்தில் இருந்து திரும்பும் தந்தை குழந்தையின் எதிர்கால வாழ்வுக்காக, அவன் மீண்டும் பேசும் சக்தி பெற வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழ்கிறான் என்று நகர்கிறது கதை. இவர்களின் வாழ்விலே இன்னொருத்தி நுழைகிறாள். கனிந்த மனம் காதல் மனமாகிறது! தாயென்று ஆகும் முன்னரே அப் பிள்ளையின் தாயாகவே மாறிவிடுகிறாள் சொற்களில் அந்தக் கதையின் சூத்திரங்களைப் பொருத்தி அற்புதமாகப் பாடல் யாத்துத் தந்துவிடுகிறார் பாருங்கள்.

    பெற்றவள் உள்ளம் போல் பெரிதும் உவக்க, மற்றவள் ஒருத்தி அப்பதவிக்கு வர மன்றாடுகிறாள். தாயாய் தானும் மாறும் முன்னே தாய்மையின் தரிசனம் காட்டுகின்றாள். தத்தி நடக்கும் முத்துச் செல்வத்தை தங்கத் தேரில் உலவ வைக்கிறாள்! பிள்ளைத் தமிழின் பேரின்பத்தை சொல்லிச் சொல்லி இன்பம் துய்க்கிறாள்!

    பெண்ணின் மனது என்ன சொல்லும் என்பதை உணர்ந்த கண்ணதாசன் என்று சொல்லலாமா? இல்லை … இல்லை… உணர்த்திய கண்ணதாசன் வார்த்தைச் சரங்களைத் தொடுக்கிறார்!

    ரசிக்கத் தெரிந்த எந்த மனமும் இந்தப் பாடலைக் கேட்டு மயங்கத் தவறியதில்லை!

    திரைப்படம்: ராமு
    இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
    இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
    பாடியவர்: பி.சுசீலா
    நடிப்பு: கே.ஆர்.விஜயா, ஜெமினிகணேசன், மாஸ்டர் ராஜ்குமார்

    முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
    முத்தம் ஒன்று சத்தம் இன்றிப் பிறந்து வரும்
    அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
    தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)

    தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
    தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்
    சென்ற உலகம் இன்று திரும்பும்
    தேடி எடுத்தால் கோடி மலரும்!
    அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
    தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)

    மூவருக்கும் சின்னச் சின்ன வீடு – அதில்
    மூன்றுதமிழ் வந்ததென்று பாடு
    அன்பு மொழியும் இன்ப இசையும்
    தங்க மழையும் பொங்கி வழியும்
    அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
    தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)

    காணொளி: https://youtu.be/vb07dtn23mg

    https://youtu.be/vb07dtn23mg

    Share
  • ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாங் கொடுக்கணும்

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    ஓடி ஓடி உழைக்கணும் …

    odi odi uzhaikanum2‘நல்ல நேரம்’ திரைப்படத்திற்காக நாயகன் பாடும் பாடல்! காட்டுவிலங்காம் யானைகள் வைத்து தேவர் எடுத்த படம்! உழைப்பின் மேன்மையை உயர்த்திக்காட்டும் புலவரின் கைவண்ணம்! எழுத்தில் எழுந்துநிற்கும் உயர்ந்த கோபுரம்! வாழ்க்கைப் பாடத்தை வரிகளில் காட்டியிருக்கும் அற்புதக் கவிதை!

    உழைப்பின் பெருமை என்னவென்று உலகறியும்! உழவன் முதல் கவிஞன் வரை உழைப்பு ஒன்றுதான் மனித முன்னேற்றத்திற்கு முதல்படி! இவ்வுலகில் பிறந்த எந்த மனிதனும் உழைப்பதில் பின்வாங்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், உழைக்க மறுப்பவனுக்கு உண்ணுவதற்கு உரிமை கிடையாது என்றே இலக்கணம் வகுக்கலாம். அதுவும் தனக்காக வாழ்வதைவிட பிறருக்காக வாழ்வதிலேதான் அர்த்தமிருக்கிறது! ஆனந்தமிருக்கிறது! இந்த தத்துவ தரிசனத்தைத் திரைப்பாடலில் கொண்டுவரும் சாமர்த்தியம் புலவர் புலமைப்பித்தன் போன்ற பிதாமகர்களுக்கே கைகூடும்!

    இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும்போதெல்லாம் என் மகனை முன் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். பாடல்களை முணுமுணுப்பது வழக்கம்! என் மகன் விவேகானந்தன் சுமார் 6 வயது இருக்கும்போது முதலில் உரக்கப்பாடிய வரிகள் இவைதான்…

    வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு

    நான் கூட கேட்டேன். என்ன விவேக், பல்லவியெல்லாம் விட்டுவிட்டு சரணத்தில் உள்ள வரிகளைப் பாடுகிறாயே என்று! அப்பா, அதில் கருத்து இருக்கிறது என்றான். அவன் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு வருவான். வெற்றி மேல் வெற்றி பெறுவான் என்று உணர்ந்தேன். தற்போது பொறியியல் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதோடு, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பூரண ஆசிகளால் குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவருகிறான்.

    உலகம் முழுமைக்கும் உரிய பாடலிது! அறநெறி போற்றி ஆயிரம் செய்யுள்களைவிட இந்த ஒரு திரைப்பாடல் அதைவிட மக்கள் மனதில் எளிதாகச் சென்று சேரத்தக்கது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    1234 … அப்… அப்…

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
    ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

    வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
    ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
    அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு
    இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
    ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

    சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
    சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
    இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
    கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
    இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
    அத்தனையும் சொல்லிப்போடு

    வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
    நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
    நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும் – நாட்டுக்குப்
    படிப்பினைத் தந்தாகணும்.

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
    ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

     

    காணொளி: https://www.youtube.com/watch?v=yiOVK2taBno

     

    Share
  • அயோத்தி அரண்மனை பஞ்சணையில் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    V. Dakshinamurti

     

    Jeevanadi..இசையெனும் இன்பநதியில் இதயம் மூழ்கிவிட்டால் மனம் இன்பலஹரியில் மோகனம் பாடும்! பாண்டித்துவம் பெற்ற விற்பன்னர்கள் மட்டுமே அனுபவித்துவந்த இசையை, பாமரனும் அனுபவிக்கும்வண்ணம் வழி வகை செய்தது திரையிசையால் மட்டுமே சாத்தியமானது. தமிழ்த் திரையிசை இதுநாள் வரை எத்தனையோ ஜாம்பவான்களைக் கண்டிருக்கிறது! அவர்கள் ஒவ்வொருவரின் பாணியும் தனித்துவம் மிக்கதென்பதும் மறுக்க முடியாதது.

    இந்தச் சரித்திரத்தில் இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி ஏனைய இசையமைப்பாளர்களால் போற்றிப் புகழ்ந்து வணங்கி மகிழும் ‘மகா’ மனிதர். தமிழ்த்திரையில் இவர் இசை அமைத்த படங்கள் குறைவு என்றாலும் எல்லோரின் இதயங்களிலும் ரீங்காரமிடும் இன்னிசைப் பதிவுகள் இவருடையதாகும்.

    அப்படி ஒரு சுகானுபவத்தை இவரின் ஒவ்வொரு பாடலும் தட்டாமல் தந்து விடும். கர்நாடக சங்கீதத்தின் வாயிலாக கவிதை சொல்லும் யுக்தியிது என்று கூட நான் நினைப்பதுண்டு.

    காவியக் கவிஞர் வாலி அவர்களின் விரல்களில் வழிந்த வார்த்தை நதியில் அயோத்தி அரண்மனைப் பஞ்சணை … இதோ அலங்கரிக்கப்படுகிறது. சுகராக ஜீவிதம் பேர் விரும்புவர்கள் இப்பாடலைக் கேட்டு மகிழலாம்.

    அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
    அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
    வராத சுகம் இன்று வந்ததென
    மடியினில் கிடந்தாள் வைதேகி
    [ அயோத்தி அரண்மனை ]

    சீதையை ராமன் பாராட்டினான்
    சீதா ராமனைத் தாலாட்டினாள்
    திரும்பவும் காலம் வென்றதென
    தேன் எனும் குரலில் சீராட்டினாள்
    [ அயோத்தி அரண்மனை ]

    கல்லில் நடந்த ராமனுக்கு
    கால்கட்டு போட்டாள் வைதேகி
    கண்ணில் கலந்த ராமனுக்கு
    கால்கட்டு போட்டாள் வைதேகி
    ஒரு நாள் ராமனை உறங்க வைக்க
    பலநாள் ஜானகி தவமிருந்தாள்
    ரகுபதி ராகவன் துயில் கொண்டான்
    ரசனையை ஜானகி பயில்கின்றாள்

    அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
    அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
    வராத சுகம் இன்று வந்ததென
    மடியினில் கிடந்தாள் வைதேகி

    அற்புத வரிகளோடு கவியாட்சி நடக்க, இசையங்கே முடிசூட்டு விழா நடத்திவிடுகிறது. பி.சுசீலாவின் தெய்வீகக் குரலில் தேன் வந்து விழுகிறது. தென்றல் ஒன்று நடந்து வருவதைப் போன்ற சுகம் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம்.

    ஜீவநாடி திரைப்படத்தில் நம் ஜீவன் தொடும் வி.தக்ஷிணாமூர்த்தி இசையில் வாலி அவர்களின் வரிகள் நம்மை அயோத்திக்கு அழைத்துச் செல்கின்றதல்லவா?

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    பட: ஜீவநாடி ( 1970 )
    இசை: வி. தக்க்ஷிணாமூர்த்தி
    பாடல்: வாலி
    குரல்: பி. சுசீலா
    காணொளி: https://youtu.be/dRd14z6MOTo

    https://youtu.be/dRd14z6MOTo

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    Share
  • கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் – சிறப்புப் பதிவு

    கவிஞர் காவிரிமைந்தன்.

    ‘கண்ணதாசன்’ – இந்த ஒற்றைச் சொல்லுக்குள் எத்தனைப் புதையல்கள்? எத்தனைப் பொக்கிஷங்கள்? கடந்த நூற்றாண்டில், கால வெள்ளம் கரைத்துவிட முடியாத அளவு, தமிழ் பேசத் தெரிந்த மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் பெயர் ‘ கண்ணதாசன்.’

    பாரதி, பாரதிதாசன் காலங்களுக்கு பின் வந்த கவிஞர்கள் வரிசையில், மக்கள் மனதில் இடம்பெற்ற கவிஞரின் சிறப்புகள் ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம்…
    நாம் வாழ்கின்ற நூற்றாண்டில் நம் கண்முன்னே வாழ்ந்து…
    அன்பன் கண்ணதாசன் என்று அழகுக் கையொப்பமிட்டு…
    கவிஞர் கண்ணதாசன் என்று திரையுலகில் கோலோச்சி…
    கவியரசு கண்ணதாசன் என்று தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டு…
    கோடான கோடி தமிழ் நெஞ்சங்களில் இனிக்கின்ற பெயர் கண்ணதாசன்…
    கொஞ்சும் தமிழ் மகளுக்குக் கொலுசு கட்டி சந்தக்கவி பல்லாயிரம் படைத்தவர் கண்ணதாசன்!

    கவியரசரின் பாடல் வரிகள் என்பது..

    kannadasan2* வெறும் கதைக்காக மட்டும் எழுதப்பட்டவை அல்ல…
    * கதாநாயக, நாயகியர் பாத்திரப் படைப்புக்காக மட்டுமல்ல…
    * இசை வடிவிற்கு வார்த்தைகள் வழங்கிய விழா மட்டுமல்ல, மாறாக என்றைக்கும் மாறாத வாழ்க்கைத் தத்துவங்களாக…
    * மனித குலம் என்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்க வரிகளாய், வார்த்தைகளாய்…
    * உறவுக்கும் பிரிவுக்கும் தக்கதோர் பாலமாய் …
    * உணர்வின் வடிகாலாய்…
    * பண்பாட்டிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் மிகச் சிறந்த உதாரணமாய்…
    * பழமொழிகள் முதலாக மரபில் வரும் அத்தனை முத்துக்களையும் கோர்த்தெடுத்த மலர்ச்சரமாய்…
    * வாழ்த்துகள் என்றால்.. வகை.. வகையாய்.. சூடிக் கொடுத்த பாங்கு..
    * பக்தி என்றால் இசைந்து… கனிந்து உருகிடும் உள்ளம்…
    * அனுபவ முத்திரைகள் கொட்டிக்கிடக்கும் அதிசயச் சுரங்கமாய்…
    * வேதங்கள், உபநிடதங்கள் முதலான பல்வேறு புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் என்பனவற்றின் சாரங்களை எத்தனை எளிமையாக்கி…
    * வார்த்தை வரிகளாய் வடித்து வைத்த வள்ளல்… கண்ணதாசன்… கண்ணதாசன்…

    கவியரசர் தம் பாடல்களில் உள்ள சுகம் – தனி ராகம் – எளிய சொற்களை மட்டுமே கையாண்டு அவர் எட்டியிருக்கும் உயரம் விழியிமைகளை விரிய வைக்கும். வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த கண்ணதாசனிடம் தமிழ் எப்படி இப்படி கொட்டிக்கவிழ்த்த தமிழமுத சுரபியாய் அமைந்தது என்று வியக்காத பண்டிதரில்லை!

    கவிதை, நயம், பொருள், சொல்லழகு என்று இலக்கணம் பயின்ற தமிழ்ப் புலவர்களுக்கும் வசப்படாத கற்பனை வளம் கொடிகட்டிப் பறந்தது கவிஞரிடம்! எழுதப்படிக்கத் தெரியாத எவரும்கூட கண்ணதாசனின் பாடல் அமுதம் கேட்டபின் தமிழின் இனிமையில் மூழ்கினர் என்பதே அந்த வெற்றித்திருமகன் வெள்ளித்திரையில் படைத்த வரலாறு. அப்பாடல்கள் காலத்தை வென்றவை என்பதற்கு இதுவே சாட்சி!

    மனித குலத்திற்குத் தேவைப்படும் கருத்து முத்துக்களை – தமிழ்த்திரைப் பாடல் என்னும் ஊடகத்தின் வாயிலாக கோடான கோடி மக்களுக்கு ஆறுதலும், அறிவுரையும், தேறுதலும் தருகின்ற கண்ணதாசனை தரிசித்தேன்… இன்றும் தரிசிக்கிறேன்… என்றும் தரிசிப்பேன்!

    கண்ணதாசன் – என்னைப் பொறுத்தவரை ஒரு மந்திரச்சொல் போல மகத்துவம் நிறைந்தது. இனிக்கும் தமிழை இதயம் வழிய வழிய தந்த வள்ளல். எளிய நடையில் பாமரனது நாவிலும் பைந்தமிழ் பரவச் செய்தவன். திரைப்பாடல் மூலமாக தெள்ளத் தெளிவாக மானுட வாழ்வின் சுக துக்கங்களைப் பதிவு செய்தவன். அனுபவ முத்திரையோடு அழகு தமிழும் ஆடிவரும் பேரழகை இசையின் வடிவோடு பெற்றிட்ட நாம் பேறு பெற்றவர்கள்… இதைவிடப் பேரின்பம் ஏது?

     

    Share
  • இறைவன் இருக்கின்றானா ?

    கவிஞர் காவிரிமைந்தன்.

    அவன் பித்தனாஇறைவன் இருக்கின்றானா?

    ‘பூனை ஒன்று குறுக்கே போனது! சகுணம் சரியில்லை என்றார்கள்!
    ஆமாம் என்றான் ஆஸ்திகன்!
    யாருக்கு என்றான் நாத்திகன்? பூனைக்கா??

    ஆஸ்திகத்தின் எல்லைகளையும் நாத்திகத்தின் எல்லைகளையும் கண்ணதாசன் தொட்டுத்திரும்பிய காரணத்தால் இரண்டைப்பற்றியுமே இவரின் சொல்லாட்சி தனித்துவமே!! நாத்திக மேடைகளில் பேசுவதற்கு தேவையான செய்திகளை அறிய கம்பராமாயணத்தைப் படித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கம்பரசம் தந்ததுண்டு! கண்ணதாசன் இலக்கியக் களம்புகுந்த காரணமும் அதுதான் என்றாலும், கம்பனிடம் சரணடைந்தார் என்றே சொல்லலாம்! கட்டுக்கடங்காத கற்பனைத்திறன் வளர்க்க, சொல்லாட்சி, எல்லாம் கற்க கம்பராமாயணம் போதும் என்றார்! பன்னிரெண்டாயிரம் செய்யுள்களை மனனம் செய்து பாருங்கள் நீங்களும் கவிஞர் ஆகிவிடுவீர்கள் என்றும் உரைத்தார்.

    அவன் பித்தனா? என்கிற திரைப்படத்தில் ஒரு பாடல்! இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான். அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? திரு.ஆர். பார்த்தசாரதி அவர்களின் இசையமைப்பில் கவியரசு கண்ணதாசன் வரிகள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன், நடிகை விஜயகுமாரியின் நடிப்பில் வினா விடை வகையாக, டி.எம்.எஸ்., பி.சுசீலா குரல்களில் பொங்கிவரும் உணர்ச்சி வெள்ளம்!

    இந்தப் பாடலின் தொடக்க வரிகளிலே ஒரு சூட்சுமத்தைக் கையாண்டுள்ளார் கண்ணதாசன் என்கிறார் கவிஞர் பிறைசூடன் அவர்கள்.

    நான் ஆஸ்திகனானேன் அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

    என்ன சொல் விளையாட்டா? இல்லை, தோழர்களே. ஆஸ்திகனுக்கு அகப்படாத இறைவனை நாஸ்திகன் சந்தித்த ரகசியத்தை அதைவிட ரகசியமாய் பதிவு செய்திருக்கிறார். ஆம்!!! இறைவன் பயப்படவில்லையாம்!

    இருந்தால் இருந்த இடம், இல்லையேல் மறந்துவிடும்…
    ஒரு நாள் இருந்த மனம் மறுநாள் இருப்பதில்லை …
    குடிசையில் ஓர் நினைவு, கோபுரத்தில் ஓர் நினைவு …

    என்றும் குறிப்பிட்டு,
    மனிதனை மறந்துவிட்டு வாழ்பவன் இறைவனில்லை …என்கிற வரியோடு நிறைவு செய்யப்பட்டுள்ள பாடல்!

    பாட்டிலே ஒன்று பட்டிமன்றத் தலைப்பாக பல்லவியில் தொடுத்து, இரண்டு அணிகளிலுமே எதிர்த்து நின்று வாதிட்டு இறுதியில் தீர்ப்பும் சொல்லியிருக்கும் கவியரசே! யாருக்கு வரும் இந்தக் கலை?

    இறைவன் இருக்கின்றானா?
    இறைவன் இருக்கின்றானா?
    மனிதன் கேட்கிறான் – அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?
    எங்கே வாழ்கிறான்?
    நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

    மனிதன் இருக்கின்றானா?
    மனிதன் இருக்கின்றானா?
    இறைவன் கேட்கிறான் – அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
    எங்கே வாழ்கிறான்?
    நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
    இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

    கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
    ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
    குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
    கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது
    மனிதன் இருக்கின்றானா?

    பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
    உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
    நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
    வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
    இறைவன் இருக்கின்றானா?

    ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
    பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
    இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
    இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
    மனிதன் இருக்கின்றானா?

    சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
    சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
    வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
    மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
    இறைவன் இருக்கின்றானா?

    மனிதன் இருக்கின்றானா?

    இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் – அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?

     

    காணொளி: https://www.youtube.com/watch?v=WXKbXcbGjyQ

    https://www.youtube.com/watch?v=WXKbXcbGjyQ

     

    Share
  • ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    aatamaa3கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் இது.

    வெற்றிச் சித்திரமான இப்படத்தில் இந்தக் காட்சி வில்லன்கள் இருவரின் கூடலை கொண்டாட்டம் போட காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா. களிநடனம் புரிய மங்கையாக ரம்யா கிருஷ்ணன். இசையும் பாடலும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட, திரையிலும் வரவேற்பு மிக அதிகமாகவே இருந்தது.

    ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெள்ளித்திரை கண்ட வெற்றி சித்திரம். பிரம்மண்டாமான பொருட்செலவில் அடர்ந்த காடுகளின் இடையே, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். காதால் கேட்ட கதைதான், செய்தித் தாள்களில் வாசித்தகதைதான் என்றாலும் தக்க பாத்திரங்களை பொருத்தி அக்கதையை முழுமையாக நம் கண்களுக்கு விருந்தாக்கி படைக்கப்பட்ட இப்படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதும், இப்படத்திற்குப் பிறகு அவர் கேப்டன் என்றே அழைக்கப்படுவதும் கூடுதல் தகவல்களாகும்.

    மறைந்த பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் இனிமையும், புதுமையும், நிறைய துள்ளலும், ஆட்டமும் முழுவதும் நிரம்ப அசத்தலான நடனம்புரிந்த ரம்யா கிருஷ்ணனைப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சியில் நடனமாடும் மங்கையின் குறி வில்லனை நோக்கித்தான், அந்த வகையில் இந்தப்பாடல் நம்மைக் கவர்ந்த ஒன்று என்பது நிச்சயம்.

     

    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    வெகு நாளாக உன்னைத்தான்
    எண்ணித்தான் கன்னி நான்
    ஆடுறேன் வலை போடுறேன்
    பாடுறேன் பதில் தேடுறேன்

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)

    ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
    ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
    யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
    அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
    ராக்கோழி சத்தம் கேட்குது – என் ராசாவே…
    பூ வாசம் வட்டம் போடுது
    வீராப்பு கண்ணில் பட்டது – நீ என்னை தேட
    மாராப்பு மெல்ல தொட்டது
    பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
    புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)

    யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
    நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
    நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
    நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
    கண்ணாலே கட்டி வைக்கவா – அட மாமா என்
    கையாலே பொட்டு வைக்கவா
    பூ பந்தல் போட சொல்லவா – அட மேளங்கள்
    தாளங்கள் சொல்லி தட்டவா
    பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
    போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    படம்: கேப்டன் பிரபாகரன்
    வரிகள்: பிறைசூடன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: ஸ்வர்ணலதா

    காணொளி: https://www.youtube.com/watch?v=vsTbNwqEDb0

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

     

    Share
  • ரமலான் வருக! வருகவே!!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    உலகமெலாம் செழிக்கவேண்டி
    உள்ளமெலாம் ஒளியையேந்தி     ramalaa
    வான்பிறையின் வழித்தடத்தில்
    வயிற்றுப்பசி தான் உணர்ந்து
    மாதம் ஒரு முப்பது நாள்
    மாண்புடனே நோன்பிருந்து
    தன்னுயிர்போல் மண்ணுயிர்களெனும்
    தத்துவத்தைத் தான் அறிந்து
    இறையருளின் கருணையினால்
    ஈகைக்குணம் நிறையக்கண்டு
    ஒருமித்தக் கருத்தாலே
    ஒன்றிவாழும் அனைவருக்கும்
    உள்ளம்நிறை வாழ்த்துக்களை
    உரித்தாக்கும் திருநாள் ரமலான் வருக! வருகவே!!

     

    Share
  • தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

    —  கவிஞர் காவிரிமைந்தன்.

     

    தங்கத் தோணியிலேதங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது.

    எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே உண்டு. அவ்வரிசையில் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். திரைப்படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள், அனைத்தும் முத்துப் பாடல்கள் எனலாம். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகிய கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இன்றும் மின்னுகின்றன. இப்பாடல்கள் பதிவான பின் எம்.ஜி.ஆர். அவர்கள் மெல்லிசை மன்னரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மெச்சிப் புகழ்ந்தாராம்.

    அப்பாடல்களில் ஒன்று இதோ, கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் தமிழ் வார்த்தை விளையாட்டு நடக்கிறது பாருங்கள்.

    மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
    கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
    மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
    இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ 

    பத்மஸ்ரீ கே.ஜி.யேசுதாஸ் பி. சுசீலா குரல்களில் இழைந்து வரும் இசைத் தென்றல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அபூர்வ ராகம் இது. காட்சியமைப்பும் காண வெகு கச்சிதமாய் மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் மற்றுமொரு மாணிக்க மகுடம். கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இளமை நந்தவனம் நர்த்தனமிடுகிறது, அதற்கு மெல்லிசை மன்னரின் இசை கவரி வீசி விடுகிறது! வாழ்க்கையின் அன்றாடப் பரபரப்பிலிருந்து சற்று விலகி இளைப்பாற இப்பாடல் அழைக்கிறது…

    தங்கத் தோணியிலே
    தவழும் பெண்ணழகே
    நீ கனவுக் கன்னிகையோ
    இல்லை காதல் தேவதையோ
    தங்கத் தோணியிலே
    தவழும் பெண்ணழகே
    நீ கனவுக் கன்னிகையோ
    இல்லை காதல் தேவதையோ

    வண்ணப் பாவை
    கன்னித் தேனை
    கன்னம் என்னும்கிண்ணம்
    கொண்டு உண்ணச் சொன்னாளோ
    தங்கத் தோணியிலே
    தவழும் பொன்னழகே
    நான் கனவில் வந்தவளோ
    உன் மனதில் நின்றவளோ

    மின்னல் கோலம் கண்ணில்
    போட யார் சொன்னதோ

    கோலம் போடும் நீலக் கண்ணில்
    யார் நின்றதோ

    மென்மை கொஞ்சும் பெண்மை
    என்ன பாடல் பெறாததோ

    இன்னும் கொஞ்சம் சொல்லச்சொல்ல
    காதல் உண்டானதோ
    (தங்கத் தோணியிலே)

    அல்லி பூவைக் கிள்ளிப்
    பார்க்க நாள் என்னவோ

    கிள்ளும்போதே கன்னிப்
    போகும் பூ அல்லவோ

    அஞ்சும் கெஞ்சும் ஆசை
    நெஞ்சம் நாணம் விடாததோ

    அச்சம் வெட்கம் விட்டுப்
    போனால் தானே வராததோ
    (தங்கத் தோணியிலே)

    காணொளி: https://www.youtube.com/watch?v=I-qRFUpdqME

     

    Share
  • பால்மனம் பூமனம் பாவை மனம் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    பால் மனம் பூ மணம்பால்மனம் பூமனம் பாவை மனம்…

    திரைப்பாடல் ஒன்றில்கூட மனம் லயித்துவிடுகிறதே, ஏன்… சொல்லுங்கள். அதுவும் பல்லவியிலேயே நம்மைக் கட்டியிழுக்கும் கவிஞர்களின் சாமார்த்தியம். இசையிலே சுண்டியிழுக்கும் இசையமைப்பாளர்களின் கற்பனா சக்தி. பாடக பாடகியரின் இனிமைதவழும் குரல்களில் அந்தக் கவிதை நதி இசையோடு பயணித்து வருகின்ற அழகில் நாம் சொக்கித்தான் போகிறோம்!

    இதோ இந்தப் பாடல்…

    கதை என்ன என்பது முக்கியமல்லாமல், யார் நடித்தார் என்கிற கேள்வி எழாமல், கேட்க வைக்கிற ரகம்! ஆம், பல்லவியில் உள்ள சுகம் ஏதோ ஒரு பல்லக்கில் நம்மை அமர வைக்கிறது! அந்தப் பல்லக்கின் ஆடல்போல் இசையும் அமைந்துவிட, பூங்காற்று இதமாக வருடிக்கொடுக்கிற பல்லவிகள்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா இணைந்தளித்துள்ள தேவகானமா இது! தேன்மழை பொழிகிறமாதிரி, கண்ணன் ராதை காதல் லீலைகளின் அழைப்பிதழ் அச்சிடப்பட்டதுபோல் வாசகங்கள் வரிகளாய் அமைய வழிகிறது இனியதொரு கானம்!

    பிருந்தாவனத்தில் தொடங்கி, பள்ளியறை தொடர்ந்து, சரசக்கலையை உரசிக்காட்டும் உன்னத வரிகள்! விரசமின்றி பொங்கிவழியும் காதல் அமுதம்!! நல்லிசையால் நம் இதயங்களை மீட்டியெடுக்கிறார் இசையமைப்பாளர் வி.குமார்!

     

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    பாடல்: பால் மனம் பூ மனம் பாவை மனம்
    திரைப் படம்:ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    இசை: வி.குமார்
    பாடியவர்கள்: பீ.சுசீலா – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    காணொளி: https://www.youtube.com/watch?v=mcEr9r7qzF4

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    பெண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
    கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

    ஆண்:
    கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
    கண்ணன் விளையாட
    கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
    கண்ணன் விளையாட
    காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்சவா

    ஆண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    கண்ணே எனக்கது பிருந்தாவனம்

    ஆண்:
    வாடை தான் பட்டாடை இழுக்கும்
    செவ்வாழைப் பூ என் கண்ணைப் பறிக்கும்

    பெண்:
    கிள்ளித் கிள்ளிப் பறிக்கின்ற கைகள் என்னவோ
    கண் பட்டு கை தொட்டு கன்னிப் போகாதோ

    ஆண்:
    பூ முத்தம் வேண்டும் கன்னம்
    புண் படும் என்றா எண்ணும்

    பெண்:
    எல்லாம் இன்று தந்தால்
    நாளை மிச்சம் வேண்டுமே

    ஆண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    கண்ணே எனக்கது பிருந்தாவனம்

    பெண்:
    கால் முதல் என் கூந்தல் வரையில்
    உன் காவியம் சொல் பள்ளியறையில்

    ஆண்:
    சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
    அம்மமா கேட்டுப்பார் அந்திப் பொழுதை

    பெண்:
    ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்று
    ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்று

    ஆண்:
    ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே

    பெண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்

    ஆண்:
    கண்ணே எனக்கது பிருந்தாவனம்

    https://www.youtube.com/watch?v=mcEr9r7qzF4

    Share