ரமலான் வருக! வருகவே!!

-கவிஞர் காவிரிமைந்தன்

உலகமெலாம் செழிக்கவேண்டி
உள்ளமெலாம் ஒளியையேந்தி     ramalaa
வான்பிறையின் வழித்தடத்தில்
வயிற்றுப்பசி தான் உணர்ந்து
மாதம் ஒரு முப்பது நாள்
மாண்புடனே நோன்பிருந்து
தன்னுயிர்போல் மண்ணுயிர்களெனும்
தத்துவத்தைத் தான் அறிந்து
இறையருளின் கருணையினால்
ஈகைக்குணம் நிறையக்கண்டு
ஒருமித்தக் கருத்தாலே
ஒன்றிவாழும் அனைவருக்கும்
உள்ளம்நிறை வாழ்த்துக்களை
உரித்தாக்கும் திருநாள் ரமலான் வருக! வருகவே!!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *