வள்ளுவ மாலை
-சுரேஜமீ
வாழ்(வு)நீட்டின் யாதுபயன் மெய்யது கண்டிலார்
சூழ்கேடும் கொண்டு விதியென்பர் – சூத்திரம்
வள்ளுவம் ஏகிட்டுச் செல்பாதை மாற்றிட
ஊழும் தொலையும் பார்!
செவிச்சுவை சொல்கேளார் கண்ணெழில் காட்சியிலார்
இன்சொல் பகர்மறுத்தார் தோள்கொடு சொந்தமிலார்
காற்றின் மணமேகார் ஆறறிவை வென்றிடப்
போற்றின் திருக்குறள் மேல்!
இலக்கில்லா வாழ்வும் துடுப்பிலா ஓடமும்
வீழுமொரு நாளே அதன்முன்னே – வள்ளுவம்
வந்திட்டால் நிச்சயம் பெற்றிடலாம் போமுயிர்
மருந்தாம் காக்கும் குறள்!
தந்தைதாய்ச் சேர்ந்தார் வணங்கிச் செய்செயல்
யாவும் பிறழ்நெறியில் போகா – திருக்குறள்
கொண்டு வகுக்கும் பண்போடு வாழ்ந்தால்
மானுடம் போற்றும் தலை!
புலன்வழிச் செல்மாந்த ரென்றும் நிலைகொள்ளார்
தீவினைசூழ் துன்பம் மிகக்கொண்டு – ஆழ்நிலை
சென்றுணர்வார் வாழ்வின் வசந்தம் ஏகிட
வள்ளுவம் சாற்றும் வழி!